Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Published By: VISHNU 23 JUL, 2023 | 06:10 PM சுவிசிலிருந்து சண் தவராசா புவியின் வெப்­ப­நிலை அண்மைக் கால­மாக அதி­க­ரித்துச் செல்­வது தொடர்­பான செய்­தி­க­ளையும் ஆய்­வு­க­ளையும் அடிக்­கடி ஊட­கங்­களில் பார்க்க முடி­கின்­றது. இவ்­வாறு உலகின் வெப்­ப­நிலை தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்துச் செல்­வதால் ஏற்­படக் கூடிய பார­தூ­ர­மான விளை­வுகள், பாதிப்­புகள் என்­பவை தொடர்­பான எச்­ச­ரிக்­கை­க­ளையும் அவற்­றிலே அவ­தா­னிக்க முடி­கின்­றது. ஒரு சாமா­னிய மனி­த­னாக இந்தச் செய்­திகள் எமக்குக் கவலை தரு­வ­தாக உள்ள போதிலும் இந்த நிலையை மாற்ற எம்மால் எதுவும் செய்ய முடி­யாத கையறு நிலை­யி­லேயே நாம் இருக்­கிறோம் என்ற யதார்த்தம் நெஞ்சை…

  2. Published By: SETHU 25 JUL, 2023 | 05:03 PM சீனாவின் வெளிவிவகார அமைச்சர் சின் காங், அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான சீனத் தூதுவராக 2 வருடங்க்ள பணியாற்றிய சின் காங், கடந்த டிசெம்பர் மாதம் சீன வெளியுறவு அமைச்சராக பதவியேற்றார். இவர் கடந்த கடந்த ஜூன் 25-ம் திகதி இலங்கை, ரஷ்யா மற்றும் வியட்நாம் நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு பல வாரங்களாக அவர் பொதுவெளிக்கு வரவில்லை. அண்மையில் இந்தோனேசியாவில் ஆசியாவின் நடந்த வெளியுறவு அமைச்சர்களின் சர்வதேச கூட்டம் போன்ற முக்கிய அரசு நிகழ்வுகளில் கின் காங் கலந்து கொள்ளவில்லை. இதனால், அவரது நிலை குறித்து பல்வேறு கேள்…

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொசோவோவில் செர்பிய ராணுவப் படைகளிடமிருந்து தப்பித்த அகதிகள் 1999-ல் அல்பேனியா வந்தனர். 25 ஜூலை 2023, 03:26 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தை விட இறுதியில் அதிக யூதர்களைக் கொண்ட வெகு சில ஐரோப்பிய நாடுகளில் ஒன்று அல்பேனியா. ஜெர்மனி, ஆஸ்த்ரியா போன்ற நாடுகளிலிருந்து நாஜி ஆட்சியின் துன்புறுத்தல்களிலிருந்து தப்பித்து ஓடி வந்த ஆயிரக்கணக்கான அகதிகளை, அல்பேனியர்கள் - பெரும்பாலும் இஸ்லாமியர்கள் - தங்கள் இல்லங்களுக்கு வரவேற்று பாதுகாப்பு அளித்தனர். ஏற்கெனவே 1938ல், போருக்கு ஓராண்டு முன்பே, அல்பேனி…

  4. Published By: RAJEEBAN 24 JUL, 2023 | 06:23 AM இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம். மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டை நினைவுகூர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாற்பது வருடங்களுக்கு முன்னர் இலங்கையெங்கும் தமிழர்களுக்கு எதிராக கொடுரமான கொலைகள் புரியப்பட்டன. இவற்றில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்து பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்தார்கள், இடம்பெயர்ந்த…

  5. உலக வானிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்காவிலிருந்து சீனா வரை கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பல நாடுகளில் உணவு உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, தனது உள்நாட்டில் அரிசி விலையேற்றத்தை தவிர்க்க, அனேக வகை அரிசி ரகங்களுக்கு ஏற்றுமதி தடை விதித்திருக்கிறது. போர் காரணமாக, உக்ரைன் துறைமுகங்களிலிருந்து கோதுமை, சோளம் உட்பட தானிய ஏற்றுமதிக்கு அனுமதியளிக்கும் ‘கருங்கடல் ஒப்பந்தம்’ எனும் உடன்படிக்கையிலிருந்து ரஷ்யா வெளியேறியது. எல் நினோ எனப்படும் பருவகால வானிலை மாற்றங்கள் கடுமையாகியிருக்கிறது. இது இன்னும் தீவிரமடையலாம் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகிறார்கள். இது ஒரு புறமிரு…

  6. பட மூலாதாரம்,BRANDY MORIN படக்குறிப்பு, இப்போது 22 வயதான கேம்ப்ரியா ஹாரிஸ் 18 வயதில் தாயானார். 23 ஜூலை 2023, 16:02 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஏழு மாதங்களுக்குப் பிறகு, கேம்ப்ரியா ஹாரிஸ் தனது தாயிடம் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், அவரை ஒரு சீரியல் கில்லர் கொன்றதை அறிந்தார். அது மட்டுமல்ல. அவரது உடல் கனடாவில் அவர் வசித்துவந்த நகரமான வின்னிபெக்கில் உள்ள ஒரு குப்பைக் கிடங்கில் வீசப்பட்டது. இப்போது அங்கே டன் கணக்கில் குப்பை குவிந்துள்ளது. கேம்ப்ரியா ஹாரிஸின் தாய் மட்டும் இந்த கொலையில் பாதிக்கப்பட்டவர் எனக் கருத முடியாது. அந்த தொடர் கொலையாளி மேலும் மூன்ற…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் 21 ஜூலை 2023 அது 16 ஜூலை 1945 அன்றைய அதிகாலை நேரம். ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் உலகை புரட்டிப் போடும் ஒரு கணத்திற்காக பாதுகாப்பான பதுங்கு குழி ஒன்றுக்குள் காத்திருந்தார். சுமார் 10 கிலோ மீட்டர் (6 மைல்) தொலைவில், நியூ மெக்சிகோவில் உள்ள ஜோர்னாடா டெல் மியூர்டோ பாலைவனத்தின் வெளிர் மணலில் "டிரினிட்டி" என்ற ரகசிய பெயரில் உலகின் முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. ஓப்பன்ஹெய்மர் மிகுந்த களைப்புடன் இருந்ததைப் போல் தோன்றியது. அவர் எப்போதும் மெலிந்தவராகத்தான் இருந்தார். ஆனால் அணுகுண்டை வடிவமைத்து உருவாக்கிய "மன்ஹாட்டன் இன்ஜினியர் டிஸ்ட்ரிக்ட்" இன…

  8. பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, அரிசி வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கும் இந்தியர்கள் கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி செய்தியாளர் 22 ஜூலை 2023, 10:13 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அரிசியின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, அரிசி வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் மத்திய அரசு கடந்த ஜூலை 20ஆம் தேத…

  9. அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமனம் அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படை தளபதி Michael M. Gilday வின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய தளபதியாக Lisa Franchetti வை அமெரிக்கா ஜனாதிபதி Joe Biden நியமித்துள்ளார். குறித்த நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில் அமெரிக்க இராணுவ தளபதியாக பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை Lisa Franchetti பெறுவார் என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை அமெரிக்காவின் 32 ஆவது கடற்படைத் தளபதியாக Michael M. Gilday 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22 ஆம் திகதி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது…

  10. அமெரிக்காவில் மூளையை தின்னும் அரிய வகை நோயான அமீபா நோய் பரவி வருகிறது. நெல்லேரியா பெளலேரி என்ற தொற்று மூலம் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் நேரடியாக மூளையில் உள்ள திசுக்கள் மற்றும் நரம்புகனை நேரடியாக தாக்கும். இதனால் உயிர் இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்து உள்ளனர். ஏரி, குளம், போன்றவற்றில் வாழும் அமீபா மூலம் இந்த நோய் பரவும். அசுத்தமான தண்ணீரில் குளிக்கும் போது மூக்கு வழியாக அமீபா உடலுக்குள் சென்று விடும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வாந்தி, தூக்கமின்மை, கடுமையான தலைவலி, சுவையில் மாற்றம், கழுத்து வலி, மாறுபட்ட மனநிலை போன்றவை ஏற்படும். இந்த நோயால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட நிவேடா என்ற பகுதியை சேர்ந்த உட்ரோ டர்…

  11. வட கொரியா மீண்டும் தென்கொரியா மீது ஏவுகணைத் தாக்குதல் வட கொரியா மீண்டும் தென்கொரியா மீது ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென்கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது. உள்ளுர் நேரப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு குறித்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. தென்கொரிய துறைமுகத்தில் அணு ஆயுதம் கொண்ட அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஏவுகணை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை வடகொரியா தலைநகரான Pyongyang பகுதியில் இருந்து மற்றுமொரு ஏவுகணையொன்றும் ஏவப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1341045

  12. புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இனி இங்கு இடமில்லை: வெளியான அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு இனிமேல் நியூயோர்க்கில் இடமில்லை என அந்நகரத்தின் மேயர் எரிக் ஆடம்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “நியூயோர்க் நகரம் நிரம்பிவிட்டது. புலம்பெயர்ந்த மக்களுக்கு இனி இங்கு இடமில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சுமார் 90,000 பேர் நியூயோர்க்கிற்கு வந்துள்ளனர். இனியும் வந்தால் அவர்கள் தங்குவதற்கு இடமில்லை. இதனை நான் முன்னரே பதிவு செய்திருந்தேன். ஆனால்,இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது இங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை நேரடி சாட்சியாக பார்க்கிறோம். நியூயோர்க்கில் வீட்டுக…

  13. ஹிஜாப் அணியாத நடிகைக்கு இரண்டு ஆண்டுகள் சிறை ஈரானில் ஹிஜாப் அணியாமல் திரைப்படவிழாவொன்றில் கலந்துகொண்டிருந்த பிரபல நடிகையான அஃப்சானே பயேகனுக்கு (Afsaneh Bayegan ) 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஈரானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டு நிலையில், 61 வயதான அஃப்சானே பயேகன் குறித்த விழாவுக்கு, குல்லா அணிந்தவாறு சென்றிருந்ததோடு இது குறித்த புகைப்படங்களையும் இணையத்தில் பதிவேற்றியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஹிஜாப் அணியாத குற்றத்திற்காக பொலிஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், நீதி…

  14. சுவீடன் தூதரகம் தீக்கிரை; தூதர் வெளியேற்றம்: அதிகரிக்கும் பதற்றம் ஈரானின் தலைநகரான பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகமானது நேற்று அதிகாலை 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. சுவீடனில் அண்மையில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு எதிராக இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுவீடனில் கடந்த மாதம் 28ஆம் திகதி சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மையப் பகுதியில் உள்ள மசூதி அருகில், 37 வயதான ஈராக்கிய அகதி ஒருவர் குர்ஆன் நூலை கிழித்து எறிந்ததுடன், அவற்றைத் தீயிட்டும் கொளுத்தினார். இச்சம்பவமான…

  15. Published By: RAJEEBAN 20 JUL, 2023 | 06:02 AM நியுசிலாந்தின் ஆக்லாந்து நகரில் மகளிர் பீபா உலககிண்ணப்போட்டிகள் ஆரம்பமாவதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஆறுபேர் காயமடைந்துள்ளனர் – தாக்குதலை மேற்கொண்ட நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கட்டுமானப்பணி இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலை பயங்கரவாத சம்பவமாக கருதவில்லை என பிரதமர் கிறிஸ்ஹிப்ஹின்ஸ் தெரிவித்துள்ளார். பொலிஸார் மேலதிக ஆபத்துக்களை கட்டுப்படுத்தி விட்டனர் குயின்வீதி சம்பவத்தின…

  16. உக்ரைன் தானிய ஏற்றுமதி துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதல்! Jul 20, 2023 08:00AM IST ஷேர் செய்ய : ‘ரஷ்யாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியைத் தொடர முடியும்’ என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ள நிலையில் உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான ஒடேசா மீது இரண்டாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்ய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது. உலகின் பல நாடுகளுக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உட்பட பல அத்தியாவசியமான உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில், இந்த போர் காரணமாக தானிய ஏற்றுமதி நின்று மிகப் பெரிய உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் ஏற்பட்டது. …

  17. 19 JUL, 2023 | 12:42 PM குயின்லாந்தில் இடம்பெற்றுள்ள பல வாகனங்கள் தொடர்புபட்ட விபத்தொன்று இடம்பெறறுள்ள அதேவேளை அமெரிக்காவின் டாங்கிகளை கொண்டு சென்றுகொண்டிருந்த வாகனமும் இந்த விபத்தில் சிக்குண்டுள்ளது. பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் அமெரிக்காவின் ஏபிரகாம் டாங்கிகளை ஏற்றிச்சென்ற டிரக்கும் சிக்குண்டுள்ளது என்பதை அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களம் உறுதி செய்துள்ளது. எட்டு வாகனங்களுக்கு மேல் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய காவல்துறையினர் நாங்கள் அந்த பகுதிக்கு சென்றவேளை மூன்று வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தன மூன்று வாகனங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன எனவும் காவல…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அன்டாய்நெட் ராட்ஃபோர்ட் & சைமன் ஃப்ரேசர் பதவி, பிபிசி நியூஸ் 19 ஜூலை 2023, 08:07 GMT புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் தென்கொரியாவில் இருந்து பாதுகாப்புமிக்க எல்லையை கடந்து வடகொரியாவுக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரரை வடகொரியா பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீரர், இரு நாடுகளையும் பிரிக்கும் பகுதியில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நிர்வகித்து வரும் பாதுகாப்பு மண்டலத்திற்கு (DMZ) ஏற்கெனவே திட்டம் போட்டு பயணம் செய்திருக்கிறார். அங்கிருந்து அவர் எல்லை தாண்டி வட கொரியாவுக்குச் சென்றதாகத் தெரியவருகிறது. …

  19. Published By: RAJEEBAN 19 JUL, 2023 | 12:13 PM ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளும்போது அவரை கைதுசெய்வது யுத்தபிரகடனம் செய்வதற்கு சமமான விடயம் என தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில்ரமபோச இதனை தெரிவித்துள்ளார். தனது நாட்டு ஜனாதிபதி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளும்போது அவரை கைதுசெய்வது யுத்தப் பிரகடனம் செய்வதற்கு சமமானது என ரஸ்யா தெளிவாக தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்தமாதம் ஜொகனாஸ்பேர்க்கில் இடம்பெறும் பிரிக்ஸ் மாநாட்டிற்கு புட்டின் அழைக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு எதிராக சர்வதேச குற்றவிய…

  20. பட மூலாதாரம்,ALEF கட்டுரை தகவல் எழுதியவர், அட்ரியன் பெர்னார்ட் பதவி, பிபிசி 18 ஜூலை 2023, 05:26 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் நம்மில் பலரும் பறக்கும் கார்களைப் பற்றிக் கற்பனை செய்திருப்போம். அறிவியல் புனைகதைகளிலும் ஆக்ஷன் படங்களிலும் அவற்றைப் பார்த்திருப்போம். அவை சாத்தியப்படுவதற்கான காலம் நெருங்கி வந்திருக்கிறது. ஆனால் அவை முழுதும் சாத்தியப்பட பல பெரிய சவால்கள் எதிர்கொள்ளப்பட வேண்டியுள்ளன. கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதியன்று, அமரிக்காவின் ஃபெடரல் விமானப் போகுவரத்து நிர்வாகம் (Federal Aviation Administration - FAA) அலெஃப் எரோனாடிக்ஸ் என்ற…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மான் ஜூனியர் பதவி, பிபிசி நியூஸ், வாஷிங்டன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தட்டச்சு செய்யும் போது நேரிட்ட சிறிய பிழையால் அமெரிக்க ராணுவத்தின் பல லட்சம் இ-மெயில்கள் ரஷ்யாவின் கூட்டாளியான மாலிக்கு சென்றுள்ளன. அமெரிக்க ராணுவத்தின் டொமைன் '.mil' ஆகும். அதுவே, மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியின் இணையதள டொமைன் '.ml' ஆகும். இதனை குறிப்பிடுவதில் நேரிட்ட சிறு பிழையே, ஆண்டுக்கணக்கான அமெரிக்க ராணுவத் தகவல்கள் மாலிக்குச் செல்ல காரணமாக இருந்துள்ளது. அவற்றில் சில இமெயில்கள் பாஸ்வேர்ட், மருத்துவ ஆவணங்கள் போன்ற மிகவும் முக்கியமான …

  22. Published By: SETHU 18 JUL, 2023 | 03:02 PM ரஷ்யாவில் அரச ஊழியர்கள் உத்தியோகபூர்வ தேவைகளுக்காக அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு நிறுவனங்கள், உளவு பார்க்கும் நடவடிக்கைகளுக்கு இச்சாதனங்களைப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சமே இதற்கான காரணம். அமெரிக்காவின் அப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், மெக் முதலான தொலைபேசிகள், கணினிகள் பாதுகாப்பற்றவை என ரஷ்யாவின் சமஷ்டி பாதுகாப்புச் சேவை (எவ்எஸ்பி) தெரிவித்துள்ளது. இந்நிலையில் அரச ஊழயர்கள் உத்தியோகபூர்வ தேவைகளுக்காக அப்பிள் சாதனங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள…

  23. அம்பலமாகிய காதல் விவகாரம்: சபாநாயகர், பெண் எம்.பி. இராஜினாமா தமது முறையற்ற காதல் விவகாரம் அம்பலமானதால் சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகரும் பெண் எம்.பி ஒருவரும் பதவியை இராஜினாமா செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகர் டான் சுவான் ஜின் மற்றும் செங்லி ஹுய் என்ற எம்.பியுமே இவ்வாறு தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர் லீ சியென் லூங் “மக்கள் செயல் கட்சியின் உயர்ந்த தகுதி மற்றும் தனிப்பட்ட நடத்தையை பேணுவதற்காக சபாநாயகர் மற்றும் எம்.பி.யின் இராஜினாமா ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் தகாத உறவில் இருந்தனர். அதை கடந்த பெப்ரவரி மாதம் நிறுத்த சொன்ன பிறகும் அது…

  24. Published By: RAJEEBAN 18 JUL, 2023 | 06:00 AM உக்ரைனுடனான தானிய விநியோக உடன்படிக்கையிலிருந்து ரஸ்யா வெளியேறியுள்ளதை தொடர்ந்து சர்வதே உணவு விநியோகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. உக்ரைனின் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதித்த உடன்படிக்கையிலிருந்து மிக முக்கியமான உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக ரஸ்யா அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து சர்வதேச அளவில் உணவுவிநியோகம் மீண்டும் பாதிக்கப்படலாம் என்ற அச்சநிலை உருவாகியுள்ளது. துருக்கியினதும் ஐக்கியநாடுகளினதும் முயற்சி காரணமாக கடந்த வருடம் ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்த உடன்படிக்கை நேற்று நள்ளிரவுடன் காலாவதியாக உள்ள நிலையில் அந்த உடன்படி…

  25. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதிலிருந்து புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக மிரட்டி வருகிறார். ஆனால் பெலாரஸ் நாட்டுக்கு அவற்றை அனுப்பிவைத்தது முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட ஒரு உறுதியான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த அணு ஆயுதங்கள் யுக்ரேன் நாட்டு எல்லைக்கு அருகில் உள்ள பெலாரஸில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அங்கு இருந்து போலந்து மற்றும் லிதுவேனியா போன்ற நேட்டோ நாடுகளையும் குறிவைக்க முடியும். இத்துடன், 500 கிலோ மீட்டர் தூரம் வரை அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தக் கூடிய ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களும் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், ரஷ்யாவின் இந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.