உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26621 topics in this forum
-
http://www.dinamalar.com/pothunewsdetail.a...ow3&ncat=IN
-
- 1 reply
- 1.4k views
-
-
http://www.dinamalar.com/Sambavamnewsdetai...ow3&ncat=IN
-
- 5 replies
- 2k views
-
-
காத்மாண்டு: கடந்த 239 ஆண்டுகளாக நிலவி வந்த மன்னராட்சி நேபாளத்தில் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நேற்று முதல் நேபாளம் குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. இமயமலைத் தொடரில் அமைந்துள்ள குட்டி நாடான நேபாளம், உலகின் ஒரே இந்து நாடாக அறியப்பட்டது. மன்னராட்சி நடந்து வந்த நேபாளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் போராட்டம் வெடித்தது. மாவோயிஸ்ட்டுகள் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தின் விளைவாக அங்கு ஜனநாயகம் மலர்ந்தது. ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட மாவோயிஸ்ட்டுகள் தேர்தலில் பங்கேற்றனர். ஆட்சியையும் பிடித்துள்ளனர். நேற்று நேபாள நாடாளுமன்றத்தின் (தேசிய அரசியல் நிர்ணய சபை) முதல் கூட்டம் நடந்தது. எம்.பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தில் மன்னராட்சியை முடி…
-
- 0 replies
- 1.4k views
-
-
மத்திய கிழக்கில் அணுஆயுதப் பரம்பல் மற்றும் உலகில் அணு ஆயுதப்பரம்பலைத் இராணுவ ரீதியில் எல்லாம் தலையிட்டு அமெரிக்கா தடுப்பதாக உலகுக்குப் போக்குக் காட்டிக் கொண்டு.. இஸ்ரேலின் அணு ஆயுத இருப்பு வளர்வதை அனுமதித்திருப்பதை.. அமெரிக்க முன்னாள் அதிபரும் சிறீலங்காவை ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பு அங்கத்துவத்தில் இருந்து விலக்க குரல் கொடுத்தவருமான ஜிம்மி காட்டர் சுட்டிக்காட்டியுள்ளார்..! இஸ்ரேல் உலகுக்கு அறிவிக்காமலே 150 அணுகுண்டுகள் வரை வைத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ள காட்டர்.. இஸ்ரேல் பலஸ்தீனர்களை நடத்தி வரும் விதமே.. இந்தப் பூமியில் மிக மோசமாக மனித உரிமை மீறல் குற்றம் என்றும் சாடியுள்ளார். உலகின் மிக மோசமான மனித உரிமைக் குற்றங்களில் ஒன்றாக சுமார் 1.6 மில்லியன் பலஸ…
-
- 1 reply
- 933 views
-
-
லண்டன்: டைட்டானிக் கப்பலைக் கண்டுபிடிக்கப் போவதாக கூறிக் கொண்டு, கடலில் மூழ்கி விட்ட தங்களது அணு சக்திக் கப்பலை அமெரிக்கா தேடிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 1912ம் ஆண்டு கடலில் மூழ்கிய கப்பல் டைட்டானிக். இதில் 1500 பேர் பலியானார்கள். டைட்டானிக் கப்பலைத் தேட அவ்வப்போது கடல் பயணங்கள் நடந்துள்ளன. ஆனால் டைட்டானிக் கப்பலைத் தேடுவதாக கூறி விட்டு, கடலில் மூழ்கி விட்ட தங்களது இரு கப்பல்களை அமெரிக்கா தேடிய கதை வெளியாகியுள்ளது. 1985ல் இந்த டூப் மிஷனை மேற்கொண்டது அமெரிக்கா. பாப் பல்லார்ட் என்பவர்தான் இந்த மிஷனுக்குத் தலைமை தாங்கினார். சமீபத்தில் இவர் தான் மேற்கொண்ட டைட்டானிக் மிஷனின் பின்னணியை புட்டுப் புட்டு வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் …
-
- 0 replies
- 810 views
-
-
சென்னை: திமுகவும் அதிமுகவும் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் எனக்கு ஏன் இவ்வளவு கூட்டம் கூடப் போகிறது, இளைஞர்கள் ஏன் என்னைத் தேடி ஏன் வரப் போகிறார்கள் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார். சென்னையில் திருமண நிகழ்ச்சியொன்றில் அவர் பேசுகையில், திருமண வீட்டிற்கு செல்லும்போது சில விஷயங்களை பேசியாக வேண்டும். ஏனென்றால் இப்போது ஆளுகின்ற, ஆண்ட கட்சிகளெல்லாம் இது போன்ற நிகழ்ச்சிகளிலே பேசி தங்களது கட்சியை வளர்த்துள்ளனர். இங்கே என்னை வரவேற்று வழி நெடுக வைக்கப்பட்டுள்ள பேனர்கள், அலங்கார வளைவுகள் தே.மு.தி.க. தொண்டனின் உழைப்பு. அவனுடைய வியர்வையை பணமாக்கி என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறார
-
- 7 replies
- 2.1k views
-
-
ஹரி பொட்டர் படத்தில் நடித்த இளம் நடிகர் Rob Knox குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். லண்டன் Kentல் உள்ள பார் ஒன்றிற்கு வெளியே நேற்று காலை (24.05.08) ஏற்பட்ட தகராறில் அவர் குத்தப்பட்டார். மற்றும் மூவர் பலமான குத்துக்காயங்களுக்கு ஆளானார்கள். Harry Potter film actor stabbed to death Lee Glendinning and agencies guardian.co.uk, Saturday May 24 2008 A teenager was stabbed to death in a fight outside a bar in Kent following an altercation in which three other men suffered serious stab wounds early today. Rob Knox, an 18-year-old who acted in Harry Potter and the Half-Blood Prince, was fatally wounded outside the Metro Bar in Sidcup, …
-
- 4 replies
- 1.9k views
-
-
பெங்களூர்: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 224 இடங்களில் பாஜகவுக்கு 112 இடங்களும், காங்கிரசுக்கு 77 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 28 இடங்களும் பிற கட்சிகளுக்கு 8 இடங்களும் கிடைத்துள்ளன. ஆட்சியமைக்க 113 இடங்களே தேவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில்.. கலைக்கப்பட்ட சட்டசபையில் பாஜகவுக்கு 79 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு 65 எம்எல்ஏக்களும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 58 எம்எல்ஏக்களும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 5 எம்எல்ஏக்களும் இருந்தனர் என்பது நினைவுகூறத்தக்கது. இதன் மூலம் மதசார்பற்ற ஜனதா தளத்துக்குத் தான் பெருத்த அடி விழுந்துள்ளது. அந்தக் கட்சி இழந்த இடங்களை பாஜக அள்ளியுள்ளது. …
-
- 1 reply
- 813 views
-
-
மே 25,2008,00:00 IST தி.மு.க.,வில் இருந்து பல தலைவர்கள் வெளியேறிய போதும், வெளியேற்றப்பட்ட போதும் அந்த கட்சி நிலைகுலையாமல் இன்று வரை நின்று வருகிறது. எம்.ஜி.ஆருக்கு பின் தி.மு.க.,வில் இருந்து வைகோ வெளியேறி தனிக்கட்சி கண்டபோது ஒன்பது மாவட்டச் செயலர்கள், ஒன்றிய செயலர்கள் என பெரும்படையே அவருக்கு பக்கபலமாய் இருந்தது. ஆனால், நாளைடைவில் ம.தி.மு.க.,வில் இருந்து முக்கியத் தலைகள் "தாய்' கழகத்தில் இணைந்த நிலையில், இப்போது வைகோ, கண்ணப்பன் உள்ளிட்ட சில தலைகள் மட்டுமே ம.தி. மு.க.,வின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மைதீன் கான், செல்வராஜ், மத்திய அமைச்சர் வேங்கடபதி உள்ளிட்டவர்களில் துவங்கி, மதுரை பொன். முத்துராமலிங்கம், எ…
-
- 0 replies
- 939 views
-
-
கிருஷ்ணகுமார் என்ற 22 வயது இளைஞர் Orkut இணையதளத்தில் சோனியா காந்தியைப்பற்றி அசிங்கமாகவும், தாழ்த்தியும் கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அவர் குர்கானில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி செய்பவர். அதனை கண்ட பூனா காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் அவரது IP கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இணைய சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்கு இதனை விட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வேறு இல்லை. Crime Branch arrests Gurgaon IT pro for posting obscene remarks about Sonia Gandhi Google's Social Networking website Orkut. com is again in the news as Crime branch has arrested an…
-
- 7 replies
- 2.1k views
-
-
எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்!'' _ சினிமா நகைச்சுவைக் காட்சியன்றில் எய்ட்ஸ் விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் விவேக், இப்படி சிரிப்பைச் சிந்த விடுவார். அந்த வசனம், ஒரு சினிமா நடிகைக்கு மிகச் சரியாகப் பொருந்தி விட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்பு மொய்க்கக் கிடந்த அவரை, யாரும் சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அப்படியே ஆறுநாட்கள் அனாதையாகக் கிடந்தார் அந்த நடிகை. எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்த அந்த நடிகை நிஷா என்கிற நூருன்னிசா. 'இளமை இதோ இதோ', 'முயலுக்கு மூனுகால்,' 'மானாமதுரை மல்லி', 'எனக்காகக் காத்திரு' போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை நிஷா தான் அந்த பெண். தகவல் அறிந்த க…
-
- 6 replies
- 4k views
-
-
பாஸ்க் பிரிவினைவாதக் குழுவின் சிரேஷ்ட தளபதி லொபேஸ் பேனா கைது [24 - May - 2008] பாஸ்க் பிரிவினைவாத அமைப்பின் சிரேஷ்ட தளபதி உட்பட்ட நால்வர் பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியிலுள்ள போர்டேயுக்ஸ் நகரில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக 820 இற்கும் மேற்பட்ட கொலைகளைப் புரிந்துள்ளாரென ஜேவியர் லொபேஸ் பெனா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இக்குழுவினர் கடந்த 2006 இல் யுத்தநிறுத்தத்தை அறிவித்திருந்தாலும் கடந்த வருட ஜூன் மாதத்துடன் அது காலாவதியாகிவிட்டது. லொபேஸ் பெனாவின் கைதை வரவேற்றுள்ள ஸ்பைன் உள்விவகார அமைச்சர் …
-
- 0 replies
- 752 views
-
-
அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது `எப்படி வாழ்ந்த குடும்பம்' என்று ஒரு நிமிடம் உடம்பை உலுக்கிப் போட்டது. சென்னை சூளைமேட்டில், தெருக் கோடியில் ஒரு பழைய வீட்டின் மாடியில் ஒதுக்குப்புறமாக இருக்கும் போர்ஷனில்தான் தமிழ்த்திரை மற்றும் இசையுலகின் ஏகபோக சக்கரவர்த்தியாக ஒரு காலத்தில் ராஜாங்கம் நடத்திய எம்.கே. தியாகராஜ பாகவதரின் மனைவி, வாழ்க்கை யோடு போராடிக் கொண்டிருக்கிறார்! ஒரே ஒரு சிறிய ரூம், இரண்டாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் கெரசின் ஸ்டவ் அடுப்பும் சில பாத்திரங்களும் இறைந்து கிடக்கின்றன. தடுப்புக்குப் பின்னே பழைய கட்டிலில் சுயநினைவின்றி முனகிக் கொண்டே பரிதாபமாக படுத்திருக்கிறார் பாகவதரின் மனைவி ராஜம்மாள். அவருக்கு அருகே சுவரோரமாக குட்டையான அழுக்கு ஸ்டீல் பீ…
-
- 2 replies
- 9.9k views
-
-
ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களுடன் ஆஸ்திரேலிய நடிகை தானியா சயீட்டா, செக்ஸ் வைத்துக் கொண்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய டிவி ஸ்டன்ட் ஷோவான ஹூ டேர்ஸ் வின்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தானியா சயீட்டா. இந்தியில் வெளியான மிஸ்டர் பிளாக், மிஸ்டர் ஒயிட் ஆகிய படங்களிலும் சயீட்டா நடித்துள்ளார். இதனால் அவரை பாலிவுட் நடிகை என்றே ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் எழுதுகின்றன. இதுதவிர பே வாட்ச் தொடரிலும் தலை காட்டியுள்ளார். இங்கிலாந்து டிவி நாடகமான மிஷன் இம்பிளாசிபிள் தொடரிலும் நடித்துள்ளார். சயீட்டா தற்போது பெரும் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலை நாட்டுவதற்காக சென்றுள்ள ஆஸ்திரேல…
-
- 2 replies
- 2.6k views
-
-
பிரிட்டனில் தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கைதுசெய்யப்பட்ட, அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் 4 பேரை பிரிட்டனின் ஓல்ட் பெய்லி நீதிமன்றம் வெள்ளியன்று பிணையில் விடுவித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் வாண்ட்ஸ்வொர்த் சிறையிலிருந்தபடியே, வீடியோ தொடர்பு மூலம் நீதிமன்ற விசாரணைகளை அவதானித்தார்கள். அவர்களில் ஒருவரான அருணாசலம் கிருஷாந்தக்குமார் என்ற சாந்தன் மீது, விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவு திரட்ட கூட்டங்களை ஒழுங்கு செய்தார் என்று ஏற்கனவே வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்புப் பிரிவின் தலைவர் சாந்தன் என்று வர்ணித்து, ஆயுதங்கள் மற்றும் குண்டு தயாரித்தல் ஆகியவற்றுக்கு வேண்டிய பயங்கரவாத த…
-
- 0 replies
- 810 views
-
-
உலகையே நடுங்க வைத்த சர்வாதிகாரி ஹிட்லரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஜேர்மனியின் சர்வாதிகாரியாக 1934இல் இருந்து 1945 வரை ஆட்சி புரிந்த ஹிட்லர் நடத்திய அழிவுகள் எண்ணில் அடங்காதவை. ஹிட்லர் உருவாக்கிய இரண்டாம் உலக யுத்தத்தில் ஐரோப்பாவில் மட்டும் 39 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ஹிட்லரின் நாசிப் படைகள் செய்த படுகொலைகள் மனிதகுலத்தை இன்று வரை நடுங்கச் செய்பவை. எக் குற்றமும் செய்யாத 6 மில்லயனுக்கும் அதிகமான யூத மக்கள் ஹிட்லரின் படைகளால் கொல்லப்பட்டார்கள். யூதர்களை கொல்வதற்கு என்றே உருவாக்கப்பட்ட பிரத்தியேக முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட யூத மக்கள் அங்கு பல விதமான சித்திரவதைகளின் ஊடாக கொல்லப்பட்டார்கள். சுட்டும், விச வாயு செலுத்தியும் கொல்லப்பட்ட யூத…
-
- 1 reply
- 1.1k views
-
-
லண்டன்: லண்டனில் உள்ள மிகப் பெரிய மாளிகையை 117 மில்லியன் பவுன்டுகளுக்கு இந்திய கோடீஸ்வரர் லக்ஷ்மி நிவாஸ் மிட்டலின் மகன் ஆதித்யா மிட்டல் வாங்கியுள்ளார். உலகிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்படும் கட்டடம் என்ற பெருமை இதன் மூலம் இந்த மாளிகைக்குக் கிடைத்துள்ளது. பாலஸ்கிரீன் பகுதியில் இந்தி பிரமாண்டமான மாளிகை உள்ளது. இதற்கு அருகில் உள்ள கென்சிங்டன் பாலஸ் கார்டன்ஸ் பகுதியில்தான் ஆதித்யா மிட்டலின் தந்தை லக்ஷ்மி மிட்டலின் பிரமாண்ட வீடு உள்ளது. 32 வயதாகும் ஆதித்யா மிட்டல், தனது தந்தையின் வீட்டுக்கு அருகிலேயே மிகப் பெரிய வீடாக பாரத்து வந்தபோதுதான் இந்த பாலஸ் க்ரீன்ஸ் வீடு கிடைத்தது. கென்சிங்டன் பகுதியில் தற்போது லக்ஷ்மி மிட்டல் வசித்து வரும் வீட்டை 2004ம் ஆண்டு பார்முல…
-
- 0 replies
- 710 views
-
-
[23 - May - 2008] [Font Size - A - A - A] மாலைதீவில் சொசம்வில்லா பகுதியில் வீடு ஒன்றில் விபசாரத்தொழிலில் ஈடுபட்டிருந்த இலங்கையர் உட்பட பத்துப் பேரை மாலை தீவு பொலிஸார் திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளனர். அயலவர்கள் தெரிவித்த தகவலையடுத்து பொலிஸார் இந்த வீட்டைக் கண்காணித்த பின்னர் வீட்டின் ஐந்து அறைகளின் கதவுகளை உடைத்துக் கொண்டு உட்புகுந்த போது சந்தேக நபர்கள் கூரையின் மீது ஏறித்தப்பிக்க முயன்றனர். ஆனால் பொலிஸார் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இவர்கள் கைவிலங்கிடப்பட்டு பொலிஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதை அந்த வீட்டுக்கு வெளியே நின்று பலர் பார்த்தனர். விருந்தினர் விடுதி என்ற பெயரில் இந்த வீட்டில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக விபசாரத்தொழில் இட…
-
- 0 replies
- 932 views
-
-
சென்னை: இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை ஆசன வாயில் வைத்துக் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து வந்த விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த 2 பேரை அதிகாரிகள் அழைத்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் தொண்டியைச் சேர்ந்த இஸ்மாயில் ஆரி (30), திருவாடானையைச் சேர்ந்த நிஜாமுதீன் (28) என்பது தெரியவந்தது. இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்ததது. இதையடுத்து, அவர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இருவரும் ஆசனவாயில் தலா 3 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக…
-
- 12 replies
- 2.5k views
-
-
கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள். தமிழ்நாட்டின் காவிரி டெல்டாப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக் கப்பட்ட சிந்து சமவெளி நாகரிக குறியீடுகளைப்போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இந்த முதுமக்கள் தாழிகளின் தொல்லியல் முக்கியத்துவம் குறித்தும், இதற்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் இருக்கும் ஒற்றுமைகள் குறித்தும், இந்த ஆய்வை மேற்கொண்ட தொல்லியல் துறையின் நிபுணர் குழுவில் ஒருவரான அகழாய…
-
- 0 replies
- 720 views
-
-
ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் மியன்மார் சென்றடைந்தார் 22.05.2008 / நிருபர் எல்லாளன் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் சூறாவளியால் பாதிக்கப்பட்டிருக்கும் மியன்மாருக்கு விஜயம் செய்துள்ளார். சூறாவளியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு முழு அளவிலான உதவிகளை முன்னெடுப்பதற்கு மியன்மார் இணங்கிய நிலையிலேயே பான்கீமூன் அங்கு சென்றுள்ளார். 1964ஆம் ஆண்டின் பின்னர் மியன்மாருக்கு முதன்முதலாகச் செல்லும் ஐக்கிய நாடுகள் தலைவர் பான்கீமூனே என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று வியாழக்கிழமை மியன்மார் சென்றடைந்த ஐ.நா. செயலாளர் நாயகம், சூறாவளியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இராவாடி கழிமுகத்துக்கும் செல்லவுள்ளார். வெளிநாட்டு உதவிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு …
-
- 0 replies
- 508 views
-
-
ஊட்டி: கொடநாட்டில் முகாமிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நேற்று படுகர் சமூகத்தினரின் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். பின்னர் படுகர் இனப் பெண்களுடன் ேசர்ந்து அவர்களது பாரம்பரிய நடனத்தை ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கொடநாடு எஸ்டேட்டில் ஏப்ரல் 9ம் தேதி முதல் கோடை விடுமுறையைக் கழித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கொடநாடு அருகே உள்ள ஹாலமலை என்ற இடத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதர் கோவிலில் படுகர் இனத்தவர் கூடி வழிபட்டனர். இந்த விழாவில் ஜெயலலிதாவும் கலந்து கொண்டார். இதற்காக அவர் காரில் வந்தபோது படுகர் இனத்தவர், தங்களது பாரம்பரிய முறைப்படி ஜெயலலிதாவை வரவேற்றனர். அவருக்கு தங்களது பாரம்பரிய உடையையும் கொடுத்து அணிந்து கொள்ளுமாறு…
-
- 7 replies
- 2.6k views
-
-
லக்னோ : உ.பி., மாநிலத்தில், லெஸ்பியன் உறவு வைத்திருந்த பெண்களை பிரிக்க நடந்த முயற்சியில், கணவரை கூலிப்படை மூலம் கொலை செய்தார், பிரிவை தாங்க முடியாத நர்ஸ். உ.பி., மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள ஹைவாட்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுமன் (24); நர்சாக வேலை பார்க்கிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன் அலிகாரில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் படித்த போது, அதே கிராமத்தை சேர்ந்த அனிதா என்பவரும் சுமனுடன் படித்தார். இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர்.இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்பட்டனர். லெஸ்பியன்களாக கூடித்திரிந்தனர். மொரதாபாத்தில் உள்ள ஒரு கோவிலில், 2006ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், பெற்றோரின் சம்மதத்தைப் பெறவில்லை. இதற்கு பின், குடும்பத்தாரின் நிர்பந்தத…
-
- 4 replies
- 3.6k views
-
-
செங்கோட்டை: திருமணமாகி தாயைவிட்டு தனிக்குடித்தனம் செல்ல மனமில்லாமல் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து இறந்தார். செங்கோட்டை அருகேயுள்ள காலாங்கரை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன் மகன் மாரியப்பன். டீக்கடை தொழிலாளி. இவரது தாய் திருமலை. மாரியப்பனுக்கும் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த காளீஸ்வரி என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு மாரியப்பனை தனிக்குடித்தனம் போகுமாறு திருமலை கூறினார். ஆனால் அதற்கு மாரியப்பன் ஒப்புக்கொள்ளவில்லை. தனது தாயை விட்டுப் பிரிய மனமில்லாமல் வருத்தத்தில் இருந்தார். ஆனால் தனிக்குடித்தனம் பற்றி தொடர்ந்து திருமலை வலியுறுத்தியதால் மனமுடைந்த மாரியப்பன் நேற்று விஷம் குடித்தார். ஆபத்த…
-
- 2 replies
- 2k views
-
-
சாராய சாவு 53 ஆக உயர்வு . Monday, 19 May, 2008 12:46 PM . பெங்களூர்/ஓசூர்,மே 19: கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் விஷச்சாராயம் குறித்து இறந்தவர் களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் 22 பேரும், கோலார் மாவட்டத்தில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. . கள்ளச்சாராயத்தை காய்ச்சியவர்கள், விற்றவர்கள் என இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர். கர்நாடகத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் 13 பேர் இறந்துள்ளதை அடுத்து மொத்தம் 53 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கோலார்…
-
- 2 replies
- 1.1k views
-