Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மலைப் பனியோடு மனதின் பனியும் உருக வான் நோக்கிக் கை பரப்பி சூரியன் கை வீணையாய் இசைக்கின்றாள். இது புலம் பெயர்ந்த பின்னாடி அவள் கோடைதொறும் நிகழ்த்துகின்ற கூத்துத்தான். பொன்னி நதி பண்டைப் பழசானாலும் மாரிப் புதுவெள்ளத்தில் கன்னிதானே. வாழிய தோழி வளர்க உன் பாடல் என்றேன். வாடா என் சூரியத் தோழனே வந்தென்னை அள்ளி அணைத்திடடா. கந்தல் வெண்பனிப் போர்வை வீசி வானவிற் சேலைகட்டி என்போல் குதூகலமாய் சூழும் துருவத்து மலை சிகரங்களே. கண் இறங்கும் பாதை எல்லாம் வண்ணக் கம்பளமாய் விரிகின்ற பள்ளத்தாக்கே. சாரல் பாறைகளிடையே துளிர்க்கின்ற திராட்சைகளே. போதை தருகின்ற புது வசந்தத் தேன் காற்றே. என்தேச விடியலின் பல்லியத்தை என்னுடைய சன்னலைத் தேடி இசைக்…

    • 4 replies
    • 1.3k views
  2. Started by சபேசன்,

    என்ன செய்ய??!! பூக்களை தருவதற்காய் நான் வந்து கொண்டிருக்கிறேன் மாட்டுவண்டி ஒன்றிலே கரடு முரடான பாதையிலே மெது மெதுவாய் வந்து கொண்டிருக்கிறேன் கண்ணைப் பறிக்கும் வண்ணம் கொண்ட சொகுசுக் காரிலே எனக்குப் போட்டியாக அவர்களும் வருகிறார்கள் வாண வேடிக்கைகள் முழங்க சுவரெல்லாம் செய்திகள் சொல்ல ஆடம்பரமாய் அவர்கள் வருகிறார்கள் நான் தருவதற்கு பூக்களை கொண்டு வருகிறேன் அவர்கள் விற்பதற்கு மலத்தைக் கொண்டு வருகிறார்கள் மக்கள் எல்லோரும் காரை நோக்கியே கட்டுக்கடங்காமல் ஓடி வருகிறார்கள் ஓடி வந்து தங்கத் தாம்பாளத்தில் வைத்து அவர்கள் கொடுத்ததை சந்தோசமாய் வாங்கிச் செல்கிறார்கள் என்னையும் பூக்களையும் சீண்டுவார்தான் யாரு…

  3. மதமதை மதமதை நீயிழிப்பாய் மடமையில் இன்றதை நீ செய்வாய் ஒன்றதை ஒன்றதை நீ மறந்தாய் உன்னிலை மீதிலே நீ உமிழ்ந்தாய்... அறிவுரை அறிவுரையென விரித்தாய்- அந்த அறிவினையதிலே நீ வீழ்ந்தாய் ஊழ்வினை ஊழ்வினை உள்கணக்க வேறென்ன வேறென்ன நீயுரைப்பாய்... இரும்பது மீதிலே ரயிலோடும் இல்லென இல்லென நீயுரைத்தால் உன்னிலை உன்னிலை என்னவென்போம் ஊழ்வினையதுவே மேலே என்போம்... பார்வையிழந்தவர் குருடராவார்- நீ பார்வையுள்ள குருடனானாய் எத்திசை எத்திசை பார்த்திடினும் எல்லாம் உனக்கு இருளதுவே... மெய்யது பொருளது என்னதுவோ மெய்யென நீயானால் சொல்லிடுவாய் வேரது இல்லா மரமேயென்றால்- நீ வேறு கண்டத்து பிறவியாவாய்...

  4. Started by yaal_ahaththiyan,

    நீ என்னைக் காதலிக்கவில்லை என்ற சொல்லை எறிந்தால் பதிலுக்கு உனக்கு மட்டும் கவிதைகளை தந்து கொண்டே இருக்கும் மரம் நான் * நான் மழைக்கு பள்ளிக்கூடம் ஒதுங்காததில் கவலைப்பட்டது என்றால் அது உனக்கு கவிதை எழுத துடித்த போது மட்டும்தான் * நல்ல வேளை நான் கவிதை எழுத முயற்சிக்கவில்லை அப்படி எழுதியிருந்தால் உன்னை விட அழகான கவிதையை என்னால் எழுதியிருக்க முடியாது * நீ கட்டி அணைத்தால் தூங்காது தலையணை நான் கட்டிப்பிடித்தால் தூங்காது பேனா * உன்னைப் பார்த்து யார் யாரெல்லாம் பொறாமைப் படுகிறார்களோ தயவு செய்து அவர்களைப் பார்த்து நீ கோவித்து விடாதே அவர்கள்தான் என் கவிதை…

    • 2 replies
    • 991 views
  5. Started by yaal_ahaththiyan,

    இதுவரை நான் எந்தக் கவிதையையும் சுட்டதில்லை உன் பெயரைத் தவிர * என் கற்பனைகள்தான் அதிகமாய் வாசகர்களுக்கு காட்டிக் கொடுக்கிறது உன்னை நான் கவிதையாய் காதலிப்பதை * உன் சேலை நழுவுவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது விழுந்து விடுவேனோ என்று * நீ எனை காதலிக்கிறாய் என்பதை கேக்க காத்திருக்கவில்லை நீ என்னை காதலிக்கவில்லை என்பதையாவது கேக்கத்தான் காத்திருக்கிறேன் * நீ எது கேட்டாலும் சொல்வேன் உன் அழகுகளில் எந்த அழகு பிடிக்கும் என்று கேட்டால் மட்டும் சொல்லமாட்டேன் சொன்னால்... உன் எல்லா அழகுகளின் கோவத்துக்கும் ஆளாகிவிடுவேன் காதல்பித்தன் -யாழ்_அகத்தியன்

  6. Started by yaal_ahaththiyan,

    காதலித்தால் இதயங்கள் இடம் மாறுமாமே வா இதயங்களை மாற்றிவிட்டு காதலித்து பார்ப்போம் * நான் வார்த்தை தேடி அலைந்தபோது வந்து கிடைத்த கவிதை நீ * பயந்து பயந்துதான் உன்னை என் அம்மாவுக்கு அறிமுகப்படுத்தினேன் அவா உன்னை ஆலாத்தி எடுத்து வரவேற்பா என்று தெரியாமல் * வறண்ட பூமியை விட நீ வைத்திருக்கும் குடைதான் மழைக்காக தவிக்கிறது * உலகம் அழியும் நாளில் நான் உயிரோடிருந்தால் தற்கொலையாளியாய் உன் மேல் பாய்ந்துதான் என்னை அளித்துக் கொள்வேன் -யாழ்_அகத்தியன்

  7. மண்ணும் விண்ணும் மட்டுமல்ல மனசும் பூச்சூடிய ஒரு இரவின் பாடல். அதை எப்படி ஆரம்பிப்பது ? யார் எடுத்துத் தந்த அடியிலிருந்து ? இல்லை எடுத்துச் செல்லுங்கள் உங்கள் அதீத கற்பனைகளை. மதுவும் விந்தும் ஊறிய சொற்க்களை. கனவு வரை மண் தோய அவள் இட்ட அடிகளில் உள்ளதே கவிதை. அவள் பி.ஏ முடிக்கவில்லை என்றார்கள். அவள் காட்டில் என்றார்கள் மேலும் அவள் ஒரு கெரிலா போராளி என்றார்கள். நானோ அவளை கொழும்பு நகரத் தெருவில் பார்த்தேன். நான் உறைந்தது அச்சத்திலா ஆச்சரியத்திலா அல்லது அவள் மீதான மதிப்பினிலா. கோப்பிக் கடை மேசையுள் மறைத்தேன் நடுங்கும் என் கால்களை. அவள் அதே அமைதி ததும்பும் முகமும் குருத்துச் சிரிப்புமாய் முகவரி கேட்காதீர்கள் என்றாள். …

    • 12 replies
    • 2.4k views
  8. Started by பூமகள்,

    பேரலையோடு பரள் பேசும் புதுக்கவிதை சங்கமச் சத்தம்... பூ அவிழ பூக்காம்பு கேட்டு மயங்கும் மரகத வனப்புச் சத்தம்.. இளவெயில் பட்டு இலையூஞ்சல் ஆடும் குயில் பாட்டு குழையும் சத்தம்... மூங்கில் காட்டில் முட்டும் காற்று முத்தம் தந்து முனகும் சத்தம்.. மெல்விரல் படின் இலை மூடும் தொட்டாச்சிணுங்கி நாணிச் சிணுங்கும் வெட்கச் சத்தம்... காதல் மொழி பேசும் அழகு பேடைக்கிளி இரண்டும் கொஞ்சும் சத்தம்... நள்ளிரவு நிலாநேரம் நீரின் மேலே தவளை தாவும் தளுக் சத்தம்... வண்டு வரும் பூச்செண்டு அறியும் ரம்மிய கமக ரீங்காரச் சத்தம்... கேட்கா சத்தம் கேட்கும் நித்தம் கேள்விக் குறியாய் வாழ்க்கை மட்டும்.. வாழச் …

    • 12 replies
    • 2.2k views
  9. Started by poet,

    காலப் பாலை நடுவினிலே வினோதங்கள் வற்றி உயிர்ப் பம்பரம் ஓய்கையிலே வாழும் கனவாக என் முன்னே வளரும் சிறு நதியே. உன் தோழமையின் பெருக்கில் துயர்கள் கரையுதடி வாழத் துடிக்குதடி கண்ணம்மா என் வார்த்தைகள் காவியமாய் கூதிர் இருட் போர்வை உதறி குவலயம் கண் விழிக்க போதியோடு இலை உதிர்த்த இருப்பும் புன்னகைத்தே துளிர்க்க மனிதருக்கிடையே நாணற்றுச் சூரியன் மண்ணைப் புணருகின்றான். மூதி எழுந்திடென்றாய் கண்ணம்மா மூச்சால் உயிர் மூட்டி. கடைசித் துளியும் நக்கி காலி மதுக் கிண்ணம் உடைத்து என் வாழ்வின் ஆட்டம் முடிந்ததென்றேன். நீ கள்நதியாக நின்றாய். உயிர்த்தும் புத்துயிர்த்தும் இந்த உலகம் தொடர்வதெல்லாம் உன் பொற்கரம் பற்றியன்றோ . மாண்டவர் மீள்வதெல்லாம் ப…

    • 5 replies
    • 1.5k views
  10. ஒரு கதை கேள் தோழி. ஒரு வசந்தம் மட்டுமே வாழ்கிற ரோமியோக்களின் கதை கேள். காகிதப் பூக்களின் நகரத்தில் காதலில் கசிந்து தேனுக்கு அலைந்தது பட்டாம் பூச்சி. என் இனிய பட்டாம் பூச்சியே சுவர்க் காடுகளுள் தேடாதே. நான் வனத்தின் சிரிப்பு வழுக்குப் பாறைகளில் கண்சிமிட்டும் வானவில் குஞ்செனப் பாடியது பிஞ்சுக்கு ஏங்கிய காட்டுப் பூ. ராணித் தேனீக்களே எட்டாத கோபுரப் பாறைகளில் இருந்து கம கமவென இறங்கியது அதன் நூலேணி. வாசனையில் தொற்றிவந்த வண்ணத்துப் பூச்சியிடம் இனிவரும் வசந்தங்களிலும் தேனுக்கு வா என்றது பூ. காதல் பூவே வசந்தங்கள்தோறும் ஊட்டுவேன் உனக்கு மகரந்தம் என்கிற பட்டாம் பூச்சியின் எதிர்ப்பாட்டில் உலகம் தழைத்தது. நிலைப்ப தொன்றில்லா வாழ்…

    • 3 replies
    • 1.2k views
  11. Started by yaal_ahaththiyan,

    உன்னை எழுதுவதைவிட உன்னை வாசிப்பதில்தான் அதிக ஆர்வம் எனக்கு * உனக்காய் கவி எழுத கற்பனைக் குதிரையை தட்டிவிட்டேன் அது உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு தூங்கிவிட்டது * என் கண்கள் காட்டிக் கொடுத்ததில் துரோகமில்லாத ஒன்று என்றால் அது உன்னைக் காட்டிக் கொடுத்தது மட்டும்தான் * நீ குளிக்கையில் தண்ணீரோடு நானும் குளிக்கிறேன் * உன்னைக் கவிதையாய் வெளியிட விரும்பி இன்றுவரை உன் கண்களை பற்றித்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன் -யாழ்_அகத்தியன்

    • 2 replies
    • 936 views
  12. கழிவறையில் ஓவியம் தீட்டுவதில் அலாதி சுகமெனக்கு. மனதிற்கு உகந்தவளை சுவற்றில் தீட்டுவதும் மனதார இகழ்ந்தவர்களை சொல்லத்தகா திட்டுவதும் இங்கேதான்.. சில புகழ்பெற்ற ஓவியங்கள் வரையக்கற்றுக் கொண்டதும் இங்கேதான். இங்கே சுழிப்பவர்கள் அங்கே இளிப்பார்கள். கழிவறைக் கதவைத் திறந்து வெளியே செல்லுகையில் ஆழ்ந்த திருப்தி எனக்கு. இன்னும் நால்வர் அதைக் காணக்கூடுமல்லவா?

  13. மின்னலிடை தேடி பெண்களிடை நாடி பொருத்தமதின்றி பொறுமையிழந்தேன்..! (எதிர்பார்த்து.. சந்தித்த..முதலாவது பெருத்த ஏமாற்றம்) பிறை நுதல் தேடி வீதி வழி ஓடி கண்டதில்லை வானத்து மூன்றாம் பிறை..! (கிரமமான இயற்கை நிகழ்வைக் கூட ரசிக்க நேரமில்லாத தேடலின் தொடர்ச்சி) காந்தளது தேடி கரங்களது நாடி களைத்தேன் ஓவியமாய் காணும் வரை..! ( காந்தளைக் (அழகான மலர். அருகிய மலர்) காண வேண்டும் என்ற ஆசை.. ஓவியத்தில் நிறைவடைகிறது) கொவ்வையிதழ் தேடி கோதையிதழ் நாடி கேவலம் கண்டேன் மைப் பூச்சு..! (கொவ்வை தெரியும்.. கொவ்வை இதழ்.. தெரியாமல்.. தேடல் செய்து ஏமாற்றமடைதல்.. போலியை செயற்கையைக் கொண்டு.. மெரு கூட்டிய பெண்கள் வாழும் உலகு என்பது அர்த்தப்படுகிறது..!) பருவமும் …

  14. உன் மெளனம் கூட ஆசைப்படுகிறது நீ பேசுவதைப் பார்த்து கவிதையாக வேண்டுமென்று * பூச் செடிக்கு பக்கத்தில் வைத்து உன்னை படம் எடுத்ததில் உன்னைப் பறித்த பூவின் புன்னகை தெரிகிறது * இரவு வந்தால் போதும் கவிதை நேரத்துக்காய் காத்துக் கிடக்கிறேன் வானொலிக்கு பக்கத்தில் அல்ல என் கைபேசிக்கு பக்கத்தில் * உனக்கு பிடித்த எல்லாம் எனக்குப் பிடிக்கும் உனக்கு பிடித்த கவிஞர்களைத் தவிர * வாசல் அழகுக்காய் கோலம் போடுகிறாய் நீ கோலம் போடும் வரைதான் அழகாக தெரிகிறது வாசல் -யாழ்_அகத்தியன்

    • 3 replies
    • 1.2k views
  15. Started by yaal_ahaththiyan,

    மறக்க முடியாத உன் முதல் முத்தம் வேண்டாம் நான் இறக்க வேண்டும் கடைசி முத்தம் கொடு * நீ தூங்குவதே இல்லையா என் தூக்கங்களில் கனவாய் வருகிறாயே * எல்லாரும் கவிதைக்குள் கருத்தைதான் தேடுவார்கள் நீ மட்டும் உன்னைத் தேடுவாய் * நீ வாங்கிக் கொடுத்த செருப்போடுதான் இன்றும் நடக்கிறேன் கைகளில் சுமந்தபடி * என் கவிதைகளை எப்படி படிக்க வருகிறாய் என்பதை கற்றுக்கொடு நீ குளிப்பதை எப்படி எட்டிப் பார்ப்பது என்பதை கற்றுக் கொள்கிறேன் -யாழ்_அகத்தியன்

  16. Started by yaal_ahaththiyan,

    இதுவரை கணக்குகளை மட்டும் விளங்கபடுத்த என் கையோடு கூடிய பேனா முதல் முறை உனக்கு கவி எழுத என் கையோடு கூட்டியதில் வந்த கழித்தல்கள் இவை தயவு செய்து சிரித்துவிடாதே கலைந்து கிடக்கும் என் எழுத்துக்கள் இன்னும் கலைந்துவிடும் பல கோடி கவிதைகளை கண்டபின்னும் பசியாறவில்லை இன்னும் காதலுக்கு எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு கவி சிலையின் கையில் கொடுக்கப்பட்ட பேனாபோல் அசையாமல் மிதக்கிறேன் கற்பனைக்கடலில் எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு கவி எண்ணில் விட்டதில்லை எழுத்துக்களில் விடுவதுண்டு பிழை எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு கவி உனக்காய் கவி எழுத விடிய விடிய யோசித்ததில் இரவுகளின் நீளத்தை என்னால் இப்படித்தான் அளக்க முடிந்தது ந…

  17. ஒரு பிரகடனத்தின் எதிர்வினை - சஹானா எங்களுடைய புன்னகையை சந்தேகிக்கும் எல்லோருக்கும் சொல்கிறோம்……. எங்கள் கடல் அழகாயிருந்தது எங்கள் நதியிடம் சங்கீதமிருந்தது எங்கள் பறவைகளிடம் கூட விடுதலையின் பாடல் இருந்தது….. எங்கள் நிலத்தில்தான் எங்கள் வேர்கள் இருந்தன… நாங்கள் நாங்கள் மட்டும்தான் இருந்தோம் எம்மூரில்… அவர்கள் எங்கள் கடலைத் தின்றார்கள்… அவர்கள்தான் எங்கள் நதியின் குரல்வளையை நசித்தார்கள்… அவர்கள்தான் எங்கள் பறவைகளை வேட்டையாடினார்கள்…….. எங்கள் நிலங்களைவிட்டு எம்மைத் துரத்தினார்கள் அவர்கள்தான் எங்கள் குழந்தைகளின் புன்னகைகளை தெருவில் போட்டு நசித்தார்கள்….. நாங்கள் என்ன சொல்வது நீங்களே தீர்மானித்து …

    • 3 replies
    • 1.3k views
  18. உன்னை நினைக்க மறந்த இரவொன்றில் நிலவின் துணை கொண்டு எழுதிய கவிதை இது தயவு செய்து வாசித்துவிடாதே உன் கண்ணீரை ஏந்தினால் என் கவிதை இறந்துவிடும் காலங்கள் கரைந்தாலும் கரை சேராத நதியாய் தேங்கியபடியே கிடக்கிறது என் காதல் உன்னால் காதல் எனும் வானத்தில் நாமிருவரும் பறந்து திரிந்த காலங்களை எண்ணியபடியே சிறகுகள் இன்றி தனிமரமாய் இன்று நான் என் காதல் உன்னை மட்டும் காதலிக்க கற்றுத்தரவில்லை உன்னைத் தவிர யாரையும் காதலிக்க கூடாது என்பதையும்தான் கற்றுத்தந்தது உன் இரவுகளின் தாலாட்டு எது என்பதை நானறியேன் ஆனால் என் ஒவ்வொரு விடியலின் ஓசையும் என் கவிக்குழந்தையின் அழுகுரல்தான் உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை நீ என்னோடு இருந்தபோது ஒவ்வொர…

  19. இலக்கிய உலகில் நாயை அடிப்படையாக வைத்து பலர் கவிதை எழுதியிருக்கிறார்கள். இந்த நாய்க் கவிதைகள் பல சர்ச்சைகளுக்கும் ஆளாகி இருக்கின்றன. ஞானக் கூத்தன் எழுதிய ஒரு நாய்க் கவிதை அடிதடிவரை கொண்டு போய் விட்டது. ஈழத்தில் என்னுடைய ஊரில் இருந்த ஒரு நாய் பற்றி நானும் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள் நாய்க் கவிதை அது ஒரு அழகிய கிராமம் அங்கே மனிதர்களோடு ஒரு நாயும் இருந்தது நன்றியுள்ளவை என்ற அடைமொழிக்குள் தன்னையும் அடைத்துக்கொண்ட அந்த நாய் ஒரு விசர் நாய் என்பது பின்புதான் புரிந்தது அந்த நாய் வருவோரையும் கடித்தது போவோரையும் கடித்தது - உணவு தருவோரையும் கடித்தது ஊர்மக்கள் பொறுப்பானவர்களிடம் முறையிட்டார்கள் பொறுப…

  20. Started by vanni mainthan,

    ஓடிடுவீர்..... மூவொரு நாளத முடிந்ததுவே மூடர்கள் பகுப்பு முடியலயே இதுபோலும் இதுபோலும் இவரறிவு....? இவரா உரைத்தனர் பகுத்தறிவு....?? இடியப்ப சிக்கலை கலைவாரோ இன்றதை இவரத குலைப்பாரோ...?? மதியுகியத மதியியுரையோ இவரது சிந்தையின் மதியிதுவோ...??? சேற்றில் விழுந்த வெண்ணாடை சேறாகி வராமல் என் செய்யும்...? காழ்புணர்வு தாங்கிய நெஞ்சில் கடுப்பது பொங்காமல் என் செய்யும்... எடு புத்தி மீதினில் இவர் சென்றால் எங்கனும் தானே போய் முடிவார்.... நடக்கட்டும் நடக்கட்டும் நடக்கட்டமே- நானிலம் உம்மை உமிழட்டுமே அதுவரை நீரும் ஆடிடவீர் அட்டம் கலைந்ததம் ஓடிடுவீர்....! எழுத்து பிழைகளை திருத்தி படிக்கவும்...

  21. எழுத்துப் பிழையின்றி எழுத நினைக்கும் காதல் எழுத்துப் பிழையின்றி வாசிக்க நினைக்கும் நட்பு * என் நண்பனை அறிமுகப்படுத்தினேன் சந்தோசப்பட்டனர் என் நண்பியை அறிமுகபடுத்தினேன் சந்தேகபட்டனர் * காதலி கொடுத்த பூ வாடிப்போனது நண்பி கொடுத்த பூ வாடவில்லை அதுதான் நட்பு * காயப்படுத்திய கரம் நட்பென்றாலும் அதே கரத்தையே தேடும் குணப்படுத்த நட்பு -யாழ்_அகத்தியன்

  22. Started by vanni mainthan,

    வருவாயா... ஈழ மண்ணின் குரலதுவும் போனது போனது தானா தமிழிழமின்று குருதியிலே தோய்வது..தோய்வது..முறைதானா...? மதியுரை மந்திரி மன்னவனே உனையிழந்தின்று தேசமே யழுகிறதே-நீ கூடியே வாழ்ந்த குருவியெல்லாம் கூடிட உன்னையே தேடுறதே... கடலம் அலையும் அலைகிறதே கடலினுள் அவையும் அழுகிறதே வெகுமதி உன்னை இழந்ததினால்- அந்த வெண்ணிலா கூட தேய்கிறதே... ஈழ மண்ணின் குரலதுவும் போனத போனது தானா தமிழிழமின்று குருதியிலே தோய்வது தோய்வது முறைதானா... நோயுடல் உன்னை வாட்டியதோ தமிழீழ விடுதலை புட்டியதோ போற்றியே வாழ்ந்த உலகமெல்லாம்- இன்று போதனை மறந்து வாழ்கிறதே... அண்ணனே அண்ணனே வருவாயா அகிலத்தில் மீண்டும் பிறப்பாயா வீழ்ந்தே நொருங்கிய வெண்புறாவை மீண்டும…

  23. Started by vanni mainthan,

    குற்றம் ஏர்.... ஊருக்கு உண்மைகள் உரைப்பேன்- எனக்கறிந்த உண்மைகள் அத்தனை உரைப்பேன் பாருக்கெல்லாம் முதலாகுமென்ற பாரதியை வார்த்தையை உரைப்போம்... தாளப்பறந்த விமானம் தள்ளாடி விழ்வது முறையே கண்ணேதிர் முன்னே நின்ற கட்டிடம் காண பிழையே... உச்ச கதிரோன் தானெனவே உசந்ததாய் நினைத்தத பிழைதானே மதியதை மதியதை மறந்தாரே- இன்று மனிதமதையெ இழந்தாரே.... கூடு கட்டிய குருவிகளின் கூடது உடைத்தத பிழைதானே மாட மாளிகையில் தானெனவே மனிதா நினைத்தத பிழைதானே.... நீதிநெறியதை மறந்தாரே- இன்று நீதிகெட்டின்று விழந்தாரே தூக்கிட யாரின்று வருவாரோ...? துன்பத்தில் தவிப்பது முறைதானே... இகழ்வதும் புகழ்வதும் முறைதானே- தொடர் இகழ்வது இகழ்வது பிழைதானே மனிதன் போட…

  24. Started by Manivasahan,

    யாழ் களக் கவிஞர்களுக்கு வணக்கம். வாரமொரு தலைப்பிலே கவிவடிக்க வாருங்கள் என்று அழைக்கிறேன். இது குறித்த தலைப்பில் கவி வடிக்கும் திறனை வளர்ப்பதற்கும் ஒரே விடயத்தை பல கோணத்திலும் அணுகும் அழகை ரசிக்கவும் உதவும் என்று நினைக்கிறேன். இந்தப் பகுதியில் இணைக்கப்படும் கவிதைகளில் சிறந்தவை வேறு வெகுசனத் தொடர்பு ஊடகங்கள் வாயிலாக வெளிவரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வகையில் முதல் தலைப்பாய் அவனியிலே நாம்சிறக்க அனுதினமும் கனவு காணும் அன்னையின் பெருமையைக் கவியாக்குவோமா? இத்தலைப்பிலே ஏற்கனவே நீங்கள் எழுதியிருந்த கவிதைகளையும் இணைக்கலாம். 10 - 09 - 2007 வரை இந்தத் தலைப்பிலான கவிதைகளை இங்கே இணைப்போம். எங்கே கவிதைகளை எதிர்பார்க்கிறேன்

  25. Started by yaal_ahaththiyan,

    உன் பார்வையில் பார்த்துக் கொண்டேன் என் கண் காட்சியை * உன்னை சுற்றியதில் சேலைக்கு கிடைத்தது அழகான தேவதை * தேடிப் பார்க்க தொடங்கினேன் எனக்குள் இருக்கும் உன்னைக் கொண்டு உனக்குள் இருக்கும் என்னை * உன்னை பார்த்த களைப்பில் ஓய்வெடுக்க விரும்புகிறது கண்கள் உழைக்க விரும்புகிறது உதடுகள் * முத்தத்தை முடித்து வைக்க பிரம்மன் வைத்தான் உன் உதட்டில் ஒரு மச்சம் -யாழ்_அகத்தியன்

    • 2 replies
    • 856 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.