Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நட்புக்கு இலக்கணம் நான் கண்டு கொண்டேன்.. பொல்லாதார்..யார் பொய்யரையார் யார்-இனம் கண்டு கொண்டேன்.. சிலர் மாசற்ற நட்பென்பார் காசென்றால் விற்றிடுவார் சிலர் காசுக்காய் நட்புறுவார் செல்வம் போக சென்றிடுவார் உள்ளத்தூய்மையில்லா மனதறிந்த ஊமையாய் இருக்கிறேன்.. பொய் பொய்யாய் உரைப்பார்..மற்றவரின் புத்திஎடை குறைப்பார்.. சிரிப்பாய் இருந்தாலும்.. சிந்திக்க வைத்துவிடுவார்.. நட்பாய் பழகு நம்பிப் பழகாதே.. அன்பாய் பழகு ஆதரவாய் நினைக்காதே.. தோள் கொடுக்கும் தோழமை தொலைந்த தேசத்தில்..முதுகில் வாள் ஏறும்வரை கைகட்டி நிற்காதே..

  2. உடைந்த நிலாக்கள் பாகம் 3 - பா. விஜய் எழுதிய கவிதை தொகுப்பை தொடராய் தருகின்றேன் படித்து மகிழுங்கள்) ரோமா புரியின் காதல் தேவதை....தொடர் 1 இந்த புமியின் வரலாற்றில் இருக்கும் நெருப்பும். முதுகில் இருக்கும் நிலச்சரிவுகளும் தோளில் இருக்கும் மலைகளும்... கைய்யில் இருக்கும் மலர்களும்... யாருடைய வாழ்க்கையாவது கதையாய் - பாடலாய்க் காற்றிடம் சொல்லி கொண்டேதான் இருக்கும். ஓர் இலையின் நுனியில் பனி சருக்கி விழும் நேரத்திற்க்குள் முடிந்து போன சரித்திரங்களும் உண்டு. விண்கற்களின் வயதை போலக் காலம் கடந்து வாழும் வாழ்விலும் உண்டு ! ஓர் உலக பேரழகியின் உயிரோட்டமான உணர்சி குவியல் இது ! ""கிளியோ பாட்ரா "" சொன்னால் உதடுகளை …

  3. வேருக்கு வீறுதரும் விழுதுகளே! விழித்தெழுக!! தேசத்தின் திசையெங்கும் தீ மூண்டு எரிகிறதே! மனிதத்தின் உயிர்ப்பெல்லாம் மண்மூடிக் கிடக்கிறதே! இனவாதம் தினவெடுத்து இரத்தம் கேட்டு அலைகிறதே! ஆதிக்க அசுர பலம் ஆன்ம…..பலம் ஒடுக்க விளைகிறதே! வேருக்கு வீறுதர விழுதுகளே! விழித்தெழுக!! கந்தகம் குதறும் கார்காலப் பொழுதினிலே… காரணம் பல கூறி கண் வளர்தல் ஆகாது. ஊர், உறவு கூர் முனையில் உருக்குலையும் நிலை போதும், உழு ஒடுக்கும் உலகமுகம் உடைத்தெறிந்து வாரும்! வேட்டுக்கள் மாள்வளித்தால் விதியென்று நோவது ஏன்? வீணே வெளிப்புலத்தில் விலகி நின்று வாடுவதேன்? நேர் கொண்டு போர் நின்று நிமிர்வெய்தும் நேரமிது! கார்மேகம் கலைத்தெறியக் கரம் கொட…

  4. பொதுநூலகப் புதுநூலகம் (அன்றொருநாள் ஐபிசித் தமிழுக்காய் எழுதியது) நல்லளவையூரான் நானுரைக்கும் கவிபார்த்து சொல்லிற்படு குறை களைந்தே ஆய்ந்து நறும் வித்தகரே வியம்பிடுவீர் வாஞ்சையுடன் ஏற்றிடுவேன் இத்தினம் சித்தமாய் இயம்புகின்ற அடியேனும் துன்பமாய்க் கலந்தழியும் நெஞ்சகன் ஆகி மின்தளம் வழியே விரும்பிடு யாழ்நகர் நூலகக் கருவினைச் சார்ந்தே பொதுநூலகத்தில் புதுநூலகமாம் என்ற கருக் கொண்டே மதிதனில் இருத்தி மாண்புறு தமிழால் பெருமை கொண்டு சோர்வகற்றி வரைக்கின்றேனீங்கு!! தங்கு யாழ்நகர் தருநல் வரமென யாங்கொரு காலத் தோங்கிய தாகி மேருவில் மேலுறு பயனதாய் மிளிர்ந்து பெருமைசேர் அறிவுநூல் பலவுடன் வெண்மையாய் பாவலர் முதலாய் பைந்தமி ழறிவோர் த…

  5. ஏய் கிபிரே.... உச்சமேறி வந்து உருட்டி விட்டோடுகிறாய் அச்சமில்லை யெனின் அடி வாரம் வந்து பாரேன்... கந்தக தீயினிலே கருகி நீ விழுவாய் - உன் சாம்பல் எடுத்து சடங்குகள் செய்வார்.... முகிலை கிழித்து வந்து மூச்சை அடக்கி போறாய் - நீ வல்லவன் தானென்றால் தாழ பறந்து வாவேன்.... ஜயாயிரம் அடிமேலேறி ஜயா நீ பறந்து போறாய் அச்சத்தில் நீ இருக்கு அதில் வேறு செருக்குனக்கு.... ஏறி வந்தேன் எறிந்து விட்டோடுகிறாய்? இத்தனை அச்சமா இம்ரான் படையணிக்கு...? -வன்னி மைந்தன் -

  6. Started by வர்ணன்,

    ஆவி ஈந்தவர் முகத்தில் ... ஈ மொய்க்கும்..! ஆசுவாசமாய்.... இருக்கையின் இருபுறம் இரு கை ..விரித்துக்கொண்டே சொல்கிறாய் - புலி முடிந்ததென்றே! தளங்களை வென்றவர்... வென்றதெல்லாம் தளங்களா? எமக்காய் தலங்கள்! நாவில் ஈரமென்று .. யாரோ சொன்னார்... மெய்யில்லை நண்பா நண்பா! உனக்கு................. அதன் சுவையரும்புகளில்.. நஞ்சின் கசிவு! சாணம் மேல் ஈயாய் கிட...! உரம் அது என்று தெரிந்தும்.. ஈரத்தை உறிஞ்சு.... மண்ணில் புதைக்கும் நாள் வந்தால்.... எழுந்து பறப்பாய்..!! இருப்பதை ஏளனம் செய்தாலும்... ஆலமரத்தை உன்னால் தனித்து.... ஆண்டியாக்க முடியுமா? வேர்களுக்கும் - விழுதுகளுக்கும் எதிரி ஆவாய்!

  7. யுத்த காலத்தில் களத்தில் இருப்பவர்களுக்குதான் களநிலைமை தெரியும். யுத்த களத்தில் சில நேரங்களில் பின்னடைவு ஏற்படுவது இயல்பு, இக்காலங்களில் நம்மவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், ஆதரவும்தான் நம்மவர்கள் வெற்றிகளை விரைந்தெடுக்க உதவும். இது நேரங்களில் சில மூதேவிகள் நம்மவர்களிடத்தில் பயத்தையும், சோர்வையும் ஏற்படுத்த முனையகூடும், அப்படி முயலும் சில மூதேவிகளை இங்கும் நாம் கான்கிறோம். அவர்களின் வெற்றுக்கூச்சல்களை புறந்தள்ளி புத்தி புகட்டுங்கள். தமிழர்களின் பொற்காலமாக கருதப்படும் பிற்கால சோழர்களின் வெற்றிக்கு வித்திட்ட வரலாற்று நிகழ்வை இது சமயம் குறிப்பிடுகிறேன் பழையாறைச் சோழ மன்னர்களில் விஜயாலய சோழர் என்பவர் இணையில்லா வீரப்புகழ் பெற்றவர். இவர் பற்பல யுத்த களங்க…

  8. முன்பு பின்பு இப்போ இனிமேல் முன்பு அடித்தபோது வாங்கினோம் பாதுகாப்புத்தேடி ஓடினோம் பின்பு அடித்தபோதும் வாங்கினோம் திருப்பி அடித்தபோது நீ ஓடக்கண்டோம். இப்போ அடிக்கிறாய் அடிக்கடி அடிக்கிறய் தாங்கிக்கொண்டோம் அதனால் பலவீனரா? இனிமேல் அடிக்க நினைத்தாயோ! முடியாமற்போகும். அப்போதிருப்பாய் நீ பலவீனனாய்.

  9. ''கண்ணீரை துடைத்து விடு..'' வெள்ளைத் தேரேறி வெளியுலகு போனவனே- உன்னை கள்ளத் தேரேறி வந்து கயவன் உனை கொன்றானே... வெலிகந்தையில் வைத்துன்னை வெறியர்கள் கொன்றாரே நினைத்து பார்க்கையிலே நெஞ்சு கொதிக்குதய்யா... உன்னை இழந்தின்று தமிழினம் தவிக்குதய்யா- உந்தன் கல்லறை இன்று கண்ணீரால் நனையுதய்யா... விலை போனதொன்று வீம்புகள் செய்கையிலே தப்பிப் போய் தலைவனடி தமிழீழம் காத்தாயே... ஜநா முந்தலிலே ஜயா நீ உரைத்தாயே அண்ணன் உள்ளவரை அஞ்சாதே தமிழ் என்றாயே... ஒட்டு படையதற்க்கு ஓல வாழ்வளித்தாயே மட்டு நகர் நின்று மரண அடி கொடுத்தாயே... பல் குழல் பேச்சாலே- அவர் பரப்புரை அழித்தாயே அனுகுண்டாகி நீ அகிலத்தில் திகழ்ந்தாயே... ஈழமத…

  10. Started by cawthaman,

    திறக்கப்பட்ட கதவுகளின் வழியே... கடந்துசெல்லும் காலங்களின் ஊடாகதிறக்கப்பட்ட கதவுகள் மூடப்பட்டும்மூடப்பட்ட கதவுகள் மறுபடி திறக்கப்பட்டும்சிலவேளைகளில

  11. ''அதுவரை எம்தேசம் உனக்காய் அழுதிடட்டும்'' தேசத்தின் தாய் மகளே தெரு நாய்கள் உன் உடலை கடித்து குதறி உன் உயிரை காவு எடுத்ததுவோ...? சுதந்திரத்தின் வீரர்களாம் சுடுகாட்டு நரிகள் - உன்னுடலை கண்ட துண்டமாய் வெட்டி காட்டுக்குள் எறிந்ததுவோ.... என்ன நீ நினைத்து என் பாடு நீ பட்டாய்.. யாரறிவார் இன்றம்மா யான் அழுகிறேன் உனக்காய்... தொண்டுகள் செய்திடவே தொண்டனாகி நீ வந்தாய்- இன்று காம குண்டர்களால்- உன்னுயிர் காவு போனதுவே.... நினைத்து பார்க்கையிலே நெஞ்சு வெடிக்குதம்மா கைகள் துப்பாக்கி காவிடவே துடிக்குதம்மா... உன்னை வெட்டி கொன்றவரை சுட்டு தள்ளிடவே சுடு கலனை தேடுதம்மா... சிரித்த மலருன்னை சிதை;தானே சிந்துயனே தானுண்டு…

  12. Started by வர்ணன்,

    தலையணையினடி- சர்ப்பம்! எலிகள்......... கீரிகளை பற்றி ....... கிண்டலாம்..! தமாசு! இனத்தோடு இனம் சேருமாம்(? ) எழுதி சென்றவனை ... இழுத்து வந்து குரல்வளை... நெரித்து கொன்றால்தானென்ன? காக்கைகூட தன்னினம் அழிந்தால் அழுமே....! ஈசல் கூட தன் இனத்தோடுதான் சேர்ந்து பறக்குமே! நடந்ததா....? இனமாம்- சேருமாம்............ வாய் கிழிய சொன்ன ஞானியே... வந்துபார்..ஈழ தமிழரிடை... நீ செத்தே போனாய்!! நடக்கிறது..... உன் வரிகளுக்கு வாய்க்கரிசி! சந்தோசமாய் மெல்லு!! உளறி தள்ளினாய்....... தருகிறார் பரிசு...... தாங்கி கொள்!!

  13. அலாரச்'சேவலின் அலறல் கேட்டு அல[ரு]றும் எனது பொழுதுகள். 'ஷவர்'ச்சாரலின் தூரலில் நனைகையில் கரைந்து போகும் கனவுகள் திண்று போட்ட உறக்கத்தின் எச்சங்கள். நேற்றய இரவும்..... அலுப்புடன் சலித்துக்கொண்டே களட்டி எறிந்த இலட்சியச்சட்டைகளை மாட்டிக்கொண்டே காலையின் சாலையில் கலந்து போகிறேன். இதோ.... …

  14. ''ஒழிந்து விடு...'' தேர்தல் வந்ததுமே தெருவிறங்கி குரைத்தவரே ''மாலை போட்டு வந்தன்று மேடையேறி குலைத்தவனே... மானம் உள்ளாய் நீ என்றால் உன் நாக்குகளை வெட்டியெறி...'' ஓட்டெடுத்து சீற்ரெடுத்து ஒய்யார அமர்ந்து விட்டு மரணம் வருகுதென்றா மண்ணை விட்டு நீ போனாய்..? ( கனடா) திருந்தினாய் நீயென்று திருத்தி நாம் படித்தோம்- பாவி கையுட்டு மாறியதாலோ- நீ கை மாறி போனாய்....? கோழையே நீயா கொள்கை கொண்டாய்...? மக்களை காத்திடவா மன்றேறி நீ வந்தாய்...?? நினைத்தாலே சிரிப்பு ஆனாலும் வெட்கம் - நீ இருந்தாலே கேடு இன்று நீ ஒழிந்து விடு... - வன்னி மைந்தன் -

  15. பொறிசிந்தும் வெங்கனல் போல் ஆர்த்தெழுந்து நெறிகொண்ட தமிழினத்தை முரட்டரசு மோதிடவே வேறில்லை வழியென்று வேங்கையெனத் துணிந்தாங்கே வேலைப் பணிந்தாலே வெற்றி நிட்சயம் போல் காலந் தனையுணர்ந்து கதிரவன் போலெம் தலைவன் எண்ணத்தை நனவாக்க எடுத்த நல் விடுதலையை பொய்யூற்றி எங்கணுமே புதைத்துரைக்கும் பாவியரும் நெய்யூற்றிப் பற்றவைக்கும் நெடுவரக்க ராஜாங்கம் உற்றெழுந்து பாரெங்கும் பகையாக்கும் எண்ணத்தை பித்தக் கணக்கென்று பேர்தெறிந்தார் தம்பியுமே சேரமான் கணைக்கா லிரும்பொறை போல செந்தமிழீழப் பெயருடன் செங்கோ லேந்திட தமிழரின் ஒற்றுமை அத்திப்பூ ஆகாமல் வரலாற்றில் அடிமையென்று வாய்பிளக்கக் கூறாமல் செருமுனையில் சிறுத்தை யெல்லாம் சீறிப்பாய்ந்துமங்கே மூக்கின் மேல் விரலைவை…

  16. போய்விடு! அடேய் கருணா துரோகியே! தமிழீழத்தை விட்டு விரைவில் ஓடிவிடு! கருணையின் பொருள் தெரியாத உனக்கு யாரடா கருணா என்று பெயர் வைத்தது? சொறி நாயயென நானுனை நாமமிடுவேன்! மனிதனுக்கே மனிதாபிமானம்! மனுதர்மம்! உனைப் போன்ற மிருகங்களிற்கு சட்டத்தில் கிடைப்பது சாட்டையடிகளே! பாரினில் நீயொரு படு பாதகனென்று ஹியூமன்ரைட்ஸ் வோட்சும் சொல்லுது! இனியும் உனக்கேனிந்த கேணல்பட்டம்? "கோணல் சொறிநாய்" நீயென்றறிந்திடு! நேற்றுவரை வாய்மூடிப்பால் குடித்தநீயுன் அன்னைக்கே எதிராகவா மார்தட்டுகிறாய்? இரத்தவாந்தி நீ எடுக்குமுன்னர் இலங்கையைவிட்டு வேறிடம் ஓடிடு! பற்றைக்குள் கக்கூசு இருந்த உன்னை பிளேனில் ஏற்றி பேச்சுக்கு அனுப்பிட ஒற்றர் கூட்டத்து பிச…

  17. காதலர்க்கு ஓர் தினம் காதலோ தினந்தினம் கனிவான செந்தமிழால் காதலர் தினந்தன்னை கவியாலே கனிய வைக்க களமமைத்துத் தந்த மொழிமேலே பற்றுவைத்து மின்னிணைய வசமாக்கி அழியாத செந்தமிழை அனைத்துலகம் அறிவதற்கு யாழிணையப் பெயர் தாங்கி மிளிர வைத்த எம்முறவே காதலர்க்கு ஓர் தினம் காதலோ தினமென்று விதவிதமாய் கவிதொடுப்போர் வரிசையிலே நானுமிங்கே மின்னிணைய தொடர்பாலே மனத்தெழுந்த பாமாலை கன்னித்தமிழ் கொண்டு சாற்றுகிறேன் காணீரோ! ஆணினமும் பெண்ணினமும் அன்பாலே அருகிணைந்து பேணிநிற்கும் புதுவுறவே காதலின் பிறப்பாகி கண்களைத் தூதுவிட்டு துணையின்பக் கூடமைத்து திண்மை நிலையினராய் உயர்புலத்து வாழ்வமைத்து ஏமக் கிழத்தியவள் மென்மையுறு இதயத்தில் தூமலரின் பண்பாகி ஞ…

    • 5 replies
    • 1.3k views
  18. அப்பாவி சுந்தரேசன் அழகிய லாவண்யா... டாக்டர் சுந்தர்..அசைவம் கலக்காத அப்பாவி.. வல்லினம் பேசாத நல்லவன்.. இனிமையின் இருப்பிடம்.. எளிமையின் வாழ்விடம்.. வயது திருமணத்தை செய்க என கோவிலில. பெண் பார்ப்பு ரம்யமான சூழல்.. தேவதையாய்.. லாவண்யா.. கூரை சரசரக்க.. கூந்தலெல்லாம் பூச்சூடி வண்ணமையிட்டு வட்டமெனப்பொட்டுவைத்து முகம் பார்க்காமல் சிரித்தபோது நாணமென எண்ணிக்கொண்டான்.. தேன்குரலில் எப்படி இருக்கிறீர்கள் கேட்டபோதே முடிவு செய்தான் இவள்தான் என் மனைவியென்று.. இவன் தலையாட்டலுக்காகவே காத்திருந்த பெற்றோர் கட்டி வைத்தார்..அக் கன்னிப்பெண்ணை ? முதலிரவே இவனுக்கு நினைத்தமை போல் அமையவில்லை.. பாலுடன் வருவாளெனப் பார்த்திருந்தான்-அவள் செல…

  19. ''சுவிஸ் மாப்பிள்ளை....'' கட்டை பாவாடையுடன் ரெட்டை பின்னலும் ஒட்டுப் பொட்டும்வைத்து ஒய்யாரமாய் சைக்கிளில் உல்லாசமாய் திரிந்தேன்! சனியன் போல வந்தான் ஒருவன் அவன்தன் கல்யாணதரகன் சுவிஸ் மாப்ப்pள்ளையாம் சுவீற்றான பெண் என்றால் பொன் ஒன்றும் வேண்டாமாம்! வாயை பிளந்து கொண்டு வீட்டிலும் சம்மதம் சொல்ல நடந்தது கலியாணம் தெருவெல்லாம் ஊhர் கோலம்! ஆசை கனவுகளில் சுவிசில் கால் பதித்தேன் வெளிநாட்டு மாப்பிள்ளை குடித்து விடடு; நடுறோட்டில்கிடக்கின்றான்! சுற்றியது தலை மட்டுமல்ல வருடமும் தான் கையிலும் காசின்றி மனதிலும் திடமின்றி செல்லவும் வழியின்றி கண்ணீரில் தவிக்கின்றேன்! கண்ணீரில் கரைந்தது கண்மை மட்டுமல்ல என் இளமையும் தான…

  20. நீ நாட்டை ஆழலாமோ...??? குருதி நீரினிலே குளியல் செய்கின்ற மடையன் மகிந்தாவிற்க்கு மக்களாட்சியேன்...??? சினை கொண்ட சமரசத்தை சிதைக்க நினைக்கின்ற வெறி பிடித்த மடையனுக்கு வெள்ளை மாளிகையேன்...??? பிண பூவால் மாலைகட்டி தினம்தோறும் போடுமவன் நாட்டதிபனாகி நாடதனை ஆழலாமோ....??? சுதந்திரத்தை பறித்தின்று சுடுகாட்டில் புதை;துவிட்டு மக்களை பிடித்தின்று மயாணத்திற்கனுப்புகின்ற மாபாவியிவன் நாடதனை ஆழலாமோ...?? ஒளி கொடுத்த உதயத்தை சிறையிலே அடைத்து விட்டு விடியலை பேசுகின்ற வீணாண மனிதனிவன் நாட்டதிபரென்று நாடேறியாழலாமோ...??? - வன்னி மைந்தன் -

  21. அடைந்து சுதந்திரம் இன்றுடன் இலங்காவுக்கு வயது ஐம்பத்து ஒன்பது ஆகிறது! ஐயா பெரியோரே பாரினிற் சிறந்த படு பாதகர் தேசம் இலங்காவென்பதை நீர் யாவரும் அறிவீர்! முந்தைநாள் ஜே.ஆர் நேற்று சந்திரிகா இன்று மகிந்தன் கோவணத் துண்டை கொடியில் காயப் போடுகின்றார்! கண்டுகளிப்பதற்கு சிங்களக் குண்டர்கூட்டம் தறுதலை நகர் கொழும்பில் கூடுகிறது! கடனில் வாங்கிய விமானங்களின் வேடிக்கை பழுதடைந்த கவசவாகனங்களின் அணிவகுப்பு வீதித்தடைகள் அங்கவடையாளச் சோதனைகள் விமரிசையாக நடக்கிறது இலங்காவின் பிறந்ததினம்! நீளத்தாடியுடன் வீணைமீட்கும் சுவாமியார் ஒருபுறம் ஓலைவிசிறிலால் உடம்புசொறியும் பிக்கு மறுபுறம் குடுவடிக்கும் குண்டர்படை கொலைவெறியுடன் அணிவகுக்க கொடுங்கோல் மன்னன் மகிந்தன்…

  22. புலத்து இளைஞனின் புலம்பல் புரிந்திட முடியாப் புதிராம் எந்தனை புரிந்திட மறுக்கும் உறவுகள் சொல்கிறார் வெந்த என் மனதிலே வேலினைப் பாய்ச்சியே விடுப்பினை அறிந்திடும் விருப்பிலே துடிக்கிறார் கற்பனை ஆயிரம் காண்கிற வயசிலே களிப்புடன் வாழ்ந்திட வழியுள நாட்டிலே இல்லற வாழ்வினை தேடிடாக் காரணம் இயம்பிடச் சொல்லியே தினம்தினம் குடைகிறார் ஆண்டுகள் போகுதாம் ஆயினும் எந்தனை அண்டவே இல்லையாம் திருமண ஆசைகள் கிழவனாய்ப் போனபின் அண்டிடார் பெண்களாம் கிண்டலாய்ச் சொல்கிறார் கோபமும் கொள்கிறார் காதலில் தோல்வியோ கன்னிமேல் வெறுப்போ களவியல் வாழ்க்கையில் நாட்டமோ கேட்கிறார் வாழ்ந்திடும் நாட்டின் மக்களைப் போலவே வாழ்ந்திட மனதில் எண்ணமோ என்கிறார் பேரனைக் கொஞ்சிடும…

    • 8 replies
    • 1.8k views
  23. மாவீரர் புகழ் பாடுவோம்! மண்ணோடு மண்ணாக மாதங்கள் பல வருடங்கள் புழு பூச்சிகளுடன் புனிதர்கள் எமக்காய் தவம் செய்தார்களே பதுங்குகுழிகளினுள்! படுத்திருந்தோம்நாம் மாளிகைகளில்! மறப்போமா? வீடுகளில் வயிறுமுட்ட விழுங்கிவிட்டு நாங்கள் கிரிக்கெட் ஆட்டத்தில் லயித்திருந்த நேரம் நேராகக் கொடியவன் குகைநோக்கிச் சென்று ஈழவேள்வியில் ஆகுதியானாரே! அவரை மறப்போமா? ரியூசனுக்கு போகவேணும்! 4ஏ எடுத்துப்பின் அவுஸ்திரேலியாவில் படிப்பதற்கு ஸ்கொலர்சிப் கிடைக்கவேணும்! நாங்கள் கண்டவண்ணக் கனவுகள்தான் எத்தனை! ஆனால் இவர்கள்? இயக்கத்தில் சேரவேண்டும்! பெரியாலாய் வந்தங்கு ஆமிக்காம்பொன்றை தான்நடத்திப் பிடிக்கவேண்டும்! அதில்வீர…

    • 3 replies
    • 1.2k views
  24. Started by இலக்கியன்,

    கண்கள் இருந்தும் குருடனாக.............. காது இருந்தும் செவிடனாக.......... கால்கள் இருந்தும் முடவனாக............. தலை இருந்தும் முண்டமாக........... உயிர் இருந்தும் ஜடமாக................ ஏனெனில்? ..... ஒரு அகதி http://elakkiyan.blogspot.com/2007_01_22_archive.html

  25. ஆதவனாய் அவதரித்த மாதவ அவதாரங்கள் பிரபஞ்சம் ஆளும் பிரபாவின் பிள்ளைகள் தாயின் அன்புதனை தலைவரில் கண்டவர்கள் சூரியனாய் ஒளிதந்து உரிமைக்கு உயிர்தந்து கார்த்திகை விளக்கான களம்கண்ட வேங்கைகள் வாழும் வயதினிலே வாழ்வை எமக்காக வழங்கிய வள்ளல்கள் பூமிக்கு மழைதரும் வானம் போல தம்மையே தாய் நிலத்துக்கு விதையாகத் தந்தவர்கள் மண்ணுலகில் தமிழ்வாழ விண்ணுலகை நிறைத்தவர்கள் தம் சுவாசம் தனை ஈந்து ஈழத்தாயை உயிர்ப்பித்த ஈழத்தின் விடி வெள்ளி கார்த்திகை மைந்தர்கள் http://www.thayakaparavaikal.com/kavithaigal.php

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.