கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
"பக்கத்து வீட்டுப் பைங்கிளி" "பக்கத்து வீட்டுப் பைங்கிளி கோடியில் நிற்குது வெக்கத்தை விட்டு அது ஆடிப் பாடுது தூக்கத்தை கலைத்து எனக்கு துடிப்பை தருகுது ஏக்கத்தைக் கூட்டி மனதை நொடியில் வாட்டுது" "மேகத்தைக் கூட்டி மழை தானாய் கொட்டுது தேகத்தைக் நனைத்து கிளி கானா பாடுது ராகத்தை வீசி என்னை மீனாய் பிடிக்குது மோகத்தைக் கொட்டி அது மானாய் மறையுது" "ஆற்றம் கரையில் பைங்கிளி அன்னநடை போடுது நூற்றுக்கு மேல் அன்னம் பின்னால் தொடருது காற்று வேகத்தில் தாவணி மின்னலாய் மறையுது முற்றும் துறந்த முனியும் தன்னை மறக்குது" "வயல் வெளியில் பைங்கிளி துள்ளி திரியுது கயல் விழியில் கவர்ச்சியை அள்ளி எறியுத…
-
- 0 replies
- 83 views
-
-
-
- 0 replies
- 424 views
-
-
வேர்முடிச்சுக்களில் ஒளிந்துகொண்டவனை தின்றுவிட தயாராகிறது பெரும் பூதமொன்று.. முதலில் ஒற்றைத்துளியாகத்தான் விழுந்தது. வெப்பத்தாலோ காற்றாலோ ஆவியாகிவிடாமல் அடையாளமாகிப் பூத்துக் கிடந்த அந்த முதல் துளி வெறுமையை உடைத்து அலங்கரித்துக்கொண்டது தன்னை.. பின்னொரு பொழுதில் நீண்ட பாலைநிலங்கடந்த வெப்பத்தோடு இறங்கத்தொடங்கியது நிலைகொள்ளாமல் இறகுகளை களைந்துவிட்டு அடைக்கலமாக அடம்பிடிக்க ஆரம்பித்து சிதைவுகளால் ஊடுருவி வேர்களால் பினைக்கத்தொடங்கியது. மேகத்திலிருந்து இறந்துபோன நட்சத்திரங்களின் ஆசைகளுடன் பூதங்கள் இறங்கத்தொடங்கின.. ஒளிந்து கொண்டேன் வேர் முடிச்சுக்களில்,
-
- 0 replies
- 450 views
-
-
படித்ததில் பிடித்தது Invictus Out of the night that covers me, Black as the pit from pole to pole, I thank whatever gods may be For my unconquerable soul. In the fell clutch of circumstance I have not winced nor cried aloud. Under the bludgeonings of chance My head is bloody, but unbowed. Beyond this place of wrath and tears Looms but the Horror of the shade, And yet the menace of the years Finds and shall find me unafraid. It matters not how strait the gate, How charged with punishments the scroll, I am the master of my fate: I am the captain of my soul. கவிதை William Ernest Henley எனும் ஆங்கிலக் கவிஞரால் 187…
-
- 0 replies
- 578 views
-
-
"புரியாத புதிர் அவள் ??" "நிலா ஒளியில் காய்ந்து கனா கடலில் மிதந்து நலமா என கேட்டு நங்கை இவள் வந்தாள்!" "பலா பழம் சுவைத்து கானா பாட்டு பாடி சுகமா என கேட்டு சுந்தரி இவள் வந்தாள்!" "நெருங்கி வந்து இருந்தாள் நெஞ்சம் குளிர கதைத்தாள் குறும்பாய் சில செய்தாள் மறுத்தால் முறைச்சு பார்த்தாள்!" "சுருங்கி சிணுங்கி குழைவாள் கொஞ்சம் விலத்தி இருப்பாள் வெறுப்பாய் நான் பார்த்தாள் நறுக்காய் அவள் சிரிப்பாள்!" "மனம் திறந்து பேசுவாள் கள்ளம் கபடம் இல்லை சொல்ல எதோ வருவாள் நாணி கோணி போயிடுவாள்!" "சினம் கொண்டு முறைப்பாள் உள்ளம் அவளுக்கு கொதிக்கும் கொல்ல அவளுக்கு தோன்றும் கூனிக் குறுகிக் போயிடுவாள்!" "சந்த…
-
- 0 replies
- 344 views
-
-
ஈழத்தமிழன் நீரால் பிரிந்தாயோ தமிழா நிலத்தால் பிரிந்தாயோ தமிழா இயற்கை பிரித்ததோ தமிழா தமிழ் மொழியால் ஒன்றுபட்டோம் - தமிழா வாழ்கை நெறி கண்டவனும் தமிழன் உயர்வு வாழ்வுநெறி சொன்னவனும் தமிழன் உலக நீதி கண்டவனும் தமிழன் உலகம் முழுவதும் வாழ்பவனும் தமிழன் வான்புகழ் கண்ட வள்ளுவனும் தமிழன் மானம் உயிரெனக் கொண்டவனும் தமிழன் கொஞ்சும் தமிழ் கண்ணீர் சிந்துதே குளிர்ந்த ப10மி குருதியில் நனையுதே இதைக் கண்டு எம்கண்கள் குளம் ஆகுதே எட்டுத் திக்கும் மகிழ்ந்து தமிழ் வாழுமா? ஈழத்தமிழனின் சோகக்கதைதான் தீருமா? இருளை விலக்கித் தமிழ் ஈழம் தளைக்குமா? உண்மையென்றும் சாவது இல்லை தமிழா! உன் உரிமைக்கு நீதி கிடைக்கும் தமிழா! J.டானியல் (யாழ்ப்பாணம்) கி…
-
- 0 replies
- 907 views
-
-
வள்ளுவன் காதல் 8 அடுப்படியில் நிற்கின்றாள் அரம்பை போல்வாள் ஆசுகவி வாசுகியாள் பின்னே வந்தான் இடுப்பையணைத்தவள் பிடரி தனை நெருங்கி இதழ் பதித்தான் சிலிர்த்தவளோ என்ன நீங்கள்? திடுக்கிட்டுப் போய்விட்டேன் தள்ளிப் போங்கள் தீக்கொழுந்து சுட்டுவிடும் என்று சொல்லி வெடுக்கென்று விலகிவிட முயன்றாள் ஆனால் விட்டுவிடாதவளையவன் பற்றிக்கொண்டான். கிட்டநின்றால் உன்னுடலின் தண்மையென்னைக் கிறங்க வைக்கும் விலகாதே என்னைவிட்டு எட்ட நின்றால் தான் எனக்குத் தீ போல் காய்வாய் என்னுயிரே என்றவளை முத்தமிட்டு கட்டியணைத்துத் தன்றன் பாசமெல்லாம் காட்டியவள் சிலிர்த்திடவே செந்நாப்போதன் கொட்டுகிறான் அன்பையெலாம் குளிர்ந்தாள் அங்கோர் குறள் பிறந்ததனை இங்கு குறித்தேன் காணீர்: …
-
- 0 replies
- 979 views
-
-
சிறகொடிந்த பறவையின் சுதந்திரம் இல்லாத வாழ்க்கை!!! இதயங்கள் கனத்திருந்தாலும் இதழளவில் புன்னகைப்பதால் தானோ எங்களுக்கு மென்பொறியாளர் என்று பெயர்!!! அரை அடி இடைவெளியில் ஆறுபேர் அமர்ந்திருந்தாலும் அந்நியப்பட்டவர்கள் போல் திசைக்கொருவறாக திரும்பியிருப்போம்!!! விருப்பங்களுக்கேற்ற நீராகாரம் விருந்தோம்பல் புரிய பணியாளர்கள்! விடிய விடிய வேலை விடிந்தபொழுதில் வீடுசேர்க்க வாகனம்! அழையாவிருந்தாளியாய் ஆன்ஸைட் கால்கள்! இன்னல்ப்படுத்தும் ஈமெயில்கள்! இவ்வாறாக இயந்திரத்தனமாக சுழலும் எங்கள் நாட்கள்! உள்ளத்தில் குடியிருக்கும் உறவுகளுக்குக்கூட தொலைப்பேசியில் தான் நலம்விசாரனை! மணநாளுக்குக்குட மின்னஞ்சலில் வாழ்த்து பரிமாற்றிக்கொள்வர் மனைவியும் கணவ…
-
- 0 replies
- 773 views
-
-
உன் வலிகளின் பெறுமதி அறிவேன் கண்ணே! சிறகெனச் சொல்லி சிலுவை தந்து சுமக்கச் சொல்வர்! முத்துநகை சிதறிவிழ முள்முடி சூடி அழகு பார்ப்பர்! கருணையுடன் கைகளில் ஆணிகள் கடாவிக் களிப்புறுவர்! எட்டி நின்று எட்டி தந்து குடிக்கச் சொல்வர்! ஏனெனில் கடவுளின் மகள் நீ! என் அன்புச் சகோதரி யாயிக்காக 01 sep 2014
-
- 0 replies
- 747 views
-
-
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்... பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் ... படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்... அறிந்து பாரென இறைவன் பணித்தான்! அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் .... அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன் .... பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் .... மணந்து பாரென இறைவன் பணித்தான்! பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் ..... பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! முதுமை என்பது யாதெனக் கேட்டேன் ... முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! வறுமை என்பது என்னெனக் கேட்டேன் .... வாடிப் பாரென இறைவன் பணித்தான்! இறப்பின் பின்னது ஏதென…
-
- 0 replies
- 608 views
-
-
ஒற்றை வார்த்தை வேலை முடித்து மாலை வேளையில் சாலை நெரிசலில் சிக்கித் தவித்து விரையும் வண்டியில் வீடு விரைந்து இருட்டும் பொழுதிலே கட்டியணைத்து நெஞ்சில் புதைத்து முத்தம் கொடுத்து ஆரத் தழுவி உச்சி மோர்ந்து உள்ளம் குளிர என் செல்லக் குழந்தை சொல்லி அழைக்கும் "அம்மா" என்ற ஒற்றை வார்த்தையில் அத்தனை களைப்பும் அமுங்கிப் போகும்
-
- 0 replies
- 590 views
-
-
அம்மாவுக்காய் சில வரிகள் ----------------------------------- அம்மா, சும்மா எல்லோரும் காணும் கடவுள், என் அம்மா, மனித உருவில் நான் கண்ட தெய்வம், என்னை சுமந்தபோது-அவள் கருவறை நிறைந்திருந்தது, வறுமையால்-அவள் வயிறுமட்டும் வெறுமை, ஒற்றை வயிற்ரை நிரப்ப முடியாதவள், பெற்ற என் வயிற்ரை போராடினாள், பற்றைக்குள் செத்த மரங்களின் குச்சிகளை-தன் வலிமைக்கேட்ப ஒடித்துக்கொண்டு உச்சி வெய்யிலில்-அவள் பாதணியில்லா பாதங்களை பதித்து வந்து-என் பசி போக்கினாள், சில நேரம்-அவள் விற்காத விறகுகளை விலையேதும் பேசாமல் அரைப்படி அரிசிக்காய் போட்டுவிட்டு, அறைவயிரேனும் எனக்கு நிரப்பி விட்டால். நிரந்தரமாய் தன் வயிற்ரை காயவிட்டு. அம்மாவின் கண்…
-
- 0 replies
- 436 views
-
-
உலகம் வியந்த உன்னதத் தலைவன் உதித்தநாள். உலகம் வியந்த உன்னதத் தலைவன் உதித்தநாள்,, ஈழத்தின் மண் உயிர் நிலை பெற்றநாள். மேதகு தலைவனின் பிறந்தநாள் போற்றுவோம் வீரியம் புகழ்பட ஆண்டுகள் நீண்டிடும் ஈன்றவள் பார்வதி பாதம் பணிகிறோம்- திரை மீண்டிடும் நாள்வரும் மாயைகள் விலகிடும். தோன்றிய இடரெலாம் தூசாய் மறைந்திடும் 61 வது ஆண்டுகள் தொடர்ந்திடும். தலைவனின் பிறப்பது உலகத்தின் அதிசயம் சத்தியம் உண்மையில் அவர் ஒரு மெல்லினம் நிறமதில் கறந்தபால் போன்றதோர் மனதிடை நிமிர்ந்தவர் சினங்கொள்ள வைத்தது சிங்களம். தமிழனின் சிறுமையை கண்டவர் பொங்கினார் தம்பியாய் சிரிப்பினில் நெஞ்சினில் தங்கினார். தமிழனின் உதிரத்தில் உணர்வின வி…
-
- 0 replies
- 850 views
-
-
என் தேசத்து உறவுகளே நாசமாகி கொண்டிருக்கும் -ஒரு நகரத்தின் குரல் இது இப்போ பேரம் பேசப் படுவது - அங்கே உயிர்களும் உடல்களும் நாடு விட்டு நாடு வந்து கூடு இழந்தவர் நாம் -பெரும் பாடு பட்டு நாம் வளர்த்த -நல் தேசியத்தில் பிறந்தவர் நாம் காடு வெட்டி களனி ஆக்கி -நெற் சுடு அடித்து வாழ்ந்தவர் நாம் -இப்போ அநாதியற்று இப்புமியிலே அனாதைகளாகி விட்டோம் - நம் தேசம் ஒன்றின் விடிவிக்காய் பாசங்களை தொலைத்தவர் நாம் கூடு இழந்த குருவிகள் போல் - இத் தெரு கோடியிலே கதறுகிறோம் காப்பரும் ஒபாமாவும் என்ன மகிந்கவின் கைப் பொம்மைகளா...? சிங்களவன் மகிந்கனுக்கு சின்ன வீடா எங்கள் மண் அடிக்கடி அங்கு வந்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு வாயிருந்தும் கண்ணிருந்தும் -…
-
- 0 replies
- 761 views
-
-
கிட்டு உன் பெயர் சொன்னபோதே சட்டென வாயெடுத்து மாமா என்று சொல்லும்-உன் இறப்பின் பின் பிறப்பெடுத்த மழலைகளும். நீ மரணித்துப்போன மனித பிறப்பல்ல, மண்டியிடாத மனிதராய் விடுதலை வாழ்வை வாழ கற்றுக்கொடுத்த வரலாற்று பிறவி, வரலாறுகளை வாரி வாரி கற்றுக்கொண்டாய்-உன் வாழ்வை எமக்கு வரலாறாய் வழி காட்டிவிட்டாய். எங்கள் விடுதலை போருக்கு நீ ஒற்றை பனைமரம். காற்றை கிழித்த சன்னங்கள் சொல்லும்-உன் களங்களின் வீரத்தை, கழுத்தில் தொங்கிய புகைப்பட கருவி சொல்லும்-உன் கலைகளின் காவியத்தை, போரியல் மரபுகளுள் போராடிய போர்மகனே எதிரி சொல்வான்-உன் அன்பான அரவணைப்பை, கிட்டண்ணா கிட்டண்ணா என்று சொல்லி கட்டப்பொம்மனையே மறந்து போனோம், மண்ட…
-
- 0 replies
- 369 views
-
-
டோங்குவும்... டெங்குவும்..! [size=1] அதென்ன டோங்கு [/size][size=1] அதென்ன டெங்கு [/size] [size=1] எல்லாம் அப்படித்தான் [/size][size=1] போக போக [/size][size=1] சரியாகி விடும்[/size] [size=1] வசன கவிதைகள் [/size][size=1] கவிதைகளாக [/size][size=1] மாற வில்லையா.? [/size] [size=1] அதைப் போன்றது [/size][size=1] தான் இதுவும். [/size] [size=1] ரூ நாற்பது [/size][size=1] ஆயிரம் அல்ல[/size] [size=1] அதற்கு மேல் [/size][size=1] இருந்தால் [/size][size=1] உனக்கு டெங்கு [/size] [size=1] ரூ நூறோ [/size][size=1] வெறும் ஆயிரமோ இருந்தால் [/size][size=1] உனக்கு டோங்கு தான் [/size] [size=1] என்று சொல்கிறார்கள் [/size][size=1] அரசு ஆய்வ…
-
- 0 replies
- 511 views
-
-
கருகும் பிணங்களிலே புத்தக் கடவுளே உந்தன் கரிய நிறம் தோன்றுதையே யுத்தக் கடவுளே பட்ட மரங்களிலே புத்தக் கடவுளே உந்தன் பச்சை நிறம் தோன்றுதையே யுத்தக் கடவுளே விதவையின் புடவையிலே புத்தக் கடவுளே உந்தன் வெள்ளை நிறம் தோன்றுதையே யுத்தக் கடவுளே சிந்தும் குருதியிலே புத்தக் கடவுளே உந்தன் சிவப்பு நிறம் தோன்றுதையே யுத்தக் கடவுளே குண்டின் வலியினிலே புத்தக் கடவுளே உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதையே யுத்தக் கடவுளே கதறும் ஒலியினிலே புத்தக் கடவுளே உந்தன் கீதம் இசைக்குதையே யுத்தக் கடவுளே அலறும் ஒலியினிலே புத்தக் கடவுளே உந்தன் அகிம்சை வழி தெரியுதையே யுத்தக் கடவுளே http://gkanthan.wordpress.com/index/budha
-
- 0 replies
- 886 views
-
-
-
குறிப்பு இப்பாடலின் முதல் நான்கு வரிகளும் ஓர் கிறீஸ்தவ துதிப் பாடலிலிருந்து எடுக்கப்பட்டவை. உன் நாமம் சொல்லச் சொல்ல என்னுள்ளம் மகிழுமையா என் வாழ்வில் மெல்ல மெல்ல பேரின்பம் பெருகுமையா - உன் மாணிக்கத் தேரோடு காணிக்கை தந்தாலும் உனக்கது ஈடாகுமா? உலகமே வந்தாலும் உணர்வுகள் நின்றாலும் உனக்கது ஈடாகுமா (2) -உன் நாாம்.. தமிழ் மானம் தமிழ் வீரம் தமிழனுக்குத் தமிழீழம் என்றது நீதானையா தரணியிலே தமிழீழம் தலை நிமிர்ந்த வரலாறும் படைத்தது நீதானையா (2) தரை வழியாய் க்டல் வழியாய் வான் வழியாய் படை நடத்தி சரித் திரம் படைத்தாயையா தாரணியின் வரை படத்தில் தமிழீழ வரை படைத்தை நிலைக்க நீ வைத்தாயையா -உன் நாமம்... நீ கொண்ட மெளனத்தால் நித்திலமே இன்றெம்மை எள்ளி நகை யாடு தையா …
-
- 0 replies
- 669 views
-
-
[size=4]கடவுளுக்கு தான் என்னை பிடிக்கவில்லையென தினமும் கண்ணீர் துளிகளை தருகிறார் அந்த மரணத்திற்கு கூட என்னை பிடிக்காமல் போய் விட்டது இன்றுவரை என்னை தேடி வரவில்லை...[/size]
-
- 0 replies
- 497 views
-
-
[size=4]செங்கொடி சுமந்த செல்வங்கள் _இவர்கள் [/size] சங்கத்தமிழ் காத்த செம்மல்கள் [size=1][size=4]வெங்களம் புகுந்த வேங்கைகள் _இவர்கள் வீரத்தமிழின் மங்கள கீதங்கள்[/size][/size] தேகம் கரைத்த தெய்வங்கள் _எங்கள் [size=1][size=4]தேசம் சுமந்த விழுதுகள் யாகம் நடத்திய அக்கினிபிஞ்சுகள் _எங்கும் யாதுமாகி நிறைந்த தென்றல்கள்[/size][/size] முத்தமிழ் காத்த மூலவர்கள்_எம் [size=1][size=4]மூச்சாகி நிலைத்த காவலர்கள் [/size] [size=4]நித்திலம் எங்கும்ஒளிரும் தாரகைகள்_எம் [/size] [size=4]நினைவுகளில் வாழும் ஓவியங்கள். [/size][/size] மலர்சொரிந்து மணியோலித்து விழிகலங்கி [size=1][size=4]முகம்துடைத்து அகல் ஏற்றுவோம்[/size] [size=4]தளர்வகற்றி தடையுடைக்குமொர…
-
- 0 replies
- 419 views
-
-
சலாம் குலாமும் சமுதாயச் சீர்த்திருத்தமும் பின்ன சுரேஷும் (பகடி) - இலவசக் கொத்தனார் - உரைநடைகளின் போதாமைகளைத் தாண்டி நம் அகத்தினைத் தொட்டு, தட்டி எழுப்பி, எழுச்சிகளைக் கொந்தளிக்க வைத்து, நம் பிரக்ஞைகளை உலுக்குவதுதான் நல்ல கவிதை என்றால் சுரேஷின் கவிதைகள் நல்ல கவிதைகள். நல்ல கவிதைகள் படிக்க முடியாத கரடுமுரடு மொழியில்தான் இருக்க வேண்டும் என்ற மேற்தட்டு மனப்பான்மையை சுக்குநூறாக தகர்தெறிந்து உழைக்கும் வர்க்கத்தினரின் உன்னதமான எளிய பாசாங்கற்ற பகடுகளேதுமில்லாத மொழியிலும் கூட நல்ல கவிதையைத் தர முடியும் என்பதற்கான சான்று சுரேஷின் கவிதைகள். மனித உணர்வுகளின் பிரதிபலிப்பு என்று வந்த பின்னர் விமர்சனப்பிரதிகளில் கவிதையியல். கோட்பாடு எல்லாம் இரண்டாம் மூன்றாம் பட்சமாகிவிடுகிற…
-
- 0 replies
- 664 views
-
-
காதலர்களாக சுற்றித் திரிந்த வேளையில் முதல் முதலாக ஒரு முத்தம் கொடுத்த பொழுது, அவள் சொன்னால் சீ அசிங்கம் என்று.... கழுத்தில் தாலி கட்டி புது தம்பதிகளாக இருந்த பொழுது யாரும் பார்க்காமல் ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது அவள் சொன்னால் எப்ப பார்த்தாலும் இது தானா என்றால்... இரண்டு குழந்தைகள் பெற்ற பின் அடுப்பு வீட்டில் யாரும் கவனிக்காத போது அவள் கழுத்துக்குக் கீழ் ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது அவள் சொன்னால் என்ன இது குழந்தைகள வச்சிக்கிட்டு என்றால்... சில காலத்திற்கு பிறகு கன்னத்தில் சுருக்கு விழுந்து பழைய நினைவுகலுடன் ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது அவள் சொன்னால் வயசு ஆயிறுச்சு இன்னும் அதே நெனப்புதா என்றால் அவள்... …
-
- 0 replies
- 1k views
-
-
பாரதிதாசன் சிந்திய பாடல் ஆலய உரிமை கண்ணிகள். எவ்வுயிரும் பரன் சந்ததி யாமென் றிசைந்திடும் சாத்திரங்கள் - எனில் அவ்விதம் நோக்க அவிந்தனவோ நம் அழகிய நேத்திரங்கள்? திவ்விய அன்பிற் செகத்தையெல்லாம் ஒன்று சேர்த்திடலாகும் அன்றோ? - எனில் அவ்வகை அன்பினிற் கொஞ்சம் இருந்திடில் அத்தனை பேரும் ஒன்றே? ஏக பரம்பொருள் என்பதை நோக்க எல்லாரும்உடன் பிறப்பே - ஒரு பாகத்தார் தீண்டப்படாதவர் என்பதி லேஉள்ளதோ சிறப்பே? "தேகம்சுமை நமைச் சேர்ந்ததில்லை" என்று செப்பிடும் தேசத்திலே - பெரும் போகம் சுமந்துடற் பேதம்கொண்டோம், மதி போயிற்று நீசத்திலே. என்னை அழைக்கின்ற கோயிலின் சாமி எனக் கிழிவாய்த் தெரியும் - சாதி தன்னை விலக்கிடுமோ இதை யோசிப்பீர் சமூக…
-
- 0 replies
- 987 views
-
-
[size=5]" நீ ஒரு பொய்க்காரி "[/size] கரி நாக்கா எனக்கு...? கண்ணாடியில்தான் பார்க்கவேண்டும்! அதனால்தானோ என்னவோ... முதன்முதலாய் உனக்கெழுதிய கவிதையின் பெயரும் அதுவாய்த்தான் இருந்தது! ‘ஏனடி இப்படிச் செய்தாய்?’ என கேட்கத்துடிக்கிற என் எண்ணத்தை... கொஞ்சம் அடக்கி வைத்திருக்கின்றேன்! உன் மனதைத்தொட்டு... பின் உன்னைத்தொட்ட என் ஸ்பரிஷங்களின் உணர்வுகள் அடங்குமுன்னே, என் ஒட்டுமொத்த உணர்வுகளையும் வலிகளில் ஒருமிக்க வைத்ததேனடி? நான் வாழ்ந்த உலகத்தின்... ஒரேயொரு தேவதையாய் நீ இருந்தாய்! என் அதிஅன்புக்குரியவளாய்... நீதான் இருந்தாய்! இன்று எங்கிருக்கிறாயடி என் தேவதையே?? காதலின் குணமே இதுதானா? - இல்லை காதலிப்பவர் மனம் இதுதானா?? என…
-
- 0 replies
- 641 views
-