Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கைது செய்யப்பட்ட தாயின் சரணடைந்த குழந்தை நந்திக்கடலில் விழுந்திருந்தன நிறைய முகங்கள் சயனட் குப்பிகளில் குழந்தைகள் பால் குடித்தனர். தாய்மார்கள் துவக்குகளை வைத்திருந்தபடி குழந்தைகளை சுமந்து சென்றனர். முள்ளி வாய்க்காலின் கிடங்குகள் எல்லாம் மூடுண்டு விடுகிறது. கிடங்குகளிலிருந்து எழும்பி வருகின்றனர் பிணங்களும் அதன் குழந்தைகளும். கடல் வீழ்ந்துவிட மணல் பெயர்ந்து கடலில் அள்ளுண்டு செல்லுகிறது. முள்ளுக் கம்பிகள் வரவேற்கின்றன ஒற்றை தேச முகங்களை அணிந்தபடி. விடுவிக்கப்பட்ட பகுதி மரணத்தின் குளிர் அறைகளாக மாறிவிட சித்திரவதையின் பாடல்களில் இரவு அதிர்ந்துகொண்டேயிருக்கிறது. பெருநிலம் மயானமாக மாற அகதிமுகாம்கள் நெருங்குகி…

    • 0 replies
    • 640 views
  2. மீண்டும் மீண்டும் உருவேற்றி மீளவும் நினைவில் பெருந்தீ மூட்டி சொல்லவும் மெல்லவும் முடியாமல் உள்ளத்தில் அனல்கின்ற சிறுபொறியை அணையாமல் காப்பது நம் கடனே அடையாளம் அத்தனையும் தொலைத்து அடுத்தவனின் கருச் சுமந்து கிடக்கிறாள் எங்கள் அன்னைத் தமிழீழ பூமி உள்ளத்தில் சுழன்றாடும் சிறு நெருப்பை உருவேற்றி கடத்துவோம் நாளை உலகுக்கு இனம் ஒன்று அழிந்ததன் அடையாளம் இல்லாமல் செ…

    • 9 replies
    • 1.8k views
  3. மௌனித்த வெளியில் நின்று முனகும் குரல் - வெற்றி துஷ்யந்தன் அச்சப் பிராந்திய இரவுகளோடு நகர்ந்த நரக நாள்களின் நினைவுகளால் சூழ்ந்து கிடக்கின்றது இந்த காற்று மண்டலம். யாரெனத் தெரியா உடலங்களின் மீது பாதங்களை பதிந்து பாதைகளை தேடிய -எங்கள் ஆற்றாமைகளும் இயலாமைகளும் அரங்கேற்றம் கண்ட பெருவெளியில் எல்லாவற்றையும் தொலைத்தோம். உருப்பெற முடியா உணர்வுகள் அனைத்தையும் அடக்கி கொண்டு உள்ளுக்குள்ளே புதைத்து வெடித்தோம். விதைகளின் கனாக்களை விழிகளில் சுமந்தபடி விடுதலை பற்றிய சொல்லாடலின் பெரும் அர்த்த புஷ்டியை உணர்துகொண்டோம். ஒரு இனத்தின் பெரும் கனவின் சாத்தியம் பற்றியும், ஒரு இனத்தின் தனித்த தேசத்தின் வல்லமை பொருந்திய சுய வாழ்வுரி…

  4. கவிதை: அகல் விளக்கு சேரன் கடவுளர்க்கு நிழல் உண்டா? இருந்தாலும் யார் கண்டார்? எம் நெருப்புக்கும் கண்ணீருக்கும் இல்லை. சுக்கிலத்தாலும் குருதியாலும் வெற்றியை எழுதியவர்க்குப் பதிலாக நாம் அனுப்பும் கணை எதுவெனத் தேடிக் காட்டுக்குள் போக முடியாது. காடும் எரிகிறது. ஒற்றைக்காலில் தவம் செய்ய முடியாது இருப்பதே ஒரு கால் உருவற்ற கவிதையின் உயிரை தேடாதே தீ பெருகும் என்றாள் பெருகுவது எல்லாம் நன்மைக்கே எனத் தொடர்ந்து நடந்தேன் கடலோரம் வழி விடா நீர் வழி தரும் மொழி குருதிப்பணம் திரட்டி பொய்யில் நினைவேந்தல் செய்தால் கண்ணீர் நிறையாது மழை பெய்து தீபத்தை இருளாக்கும் அலைகளிலா ஒலியில் ஓலம் எழுந்து புலம்பெயர் உலகின் காற…

  5. சேகர் அண்ணாவின் (தமிழ்சூரியன்) பகீரதப்பிரயர்த்தன முயற்சியால் அவரது இசையிலும் எனது குரலிலும் வரிகளிலும் காட்சிப்படுத்தலிலும் வெளிவந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வலுச்சேர்க்கும் முகமான பதிவு. முள்ளிவாய்க்கால் பேராவலம்முடிவில்லா ஓர் அவலம்பன் நாட்டுப்படை புகுந்துபல்லாயிரம் உயிர் தின்றுசொல்லாத கதை கோடிசுமந்து கிடக்கும் மண்ணதுவில்லாண்ட இனம் ஒன்றுவீறுகொண்டு போர் கண்டுவிடுதலைக்காய் வேள்வியொன்றைவிருப்புடனே நடத்தியதையைகண் காணச் சகிக்காதகாடையர்கள் கூட்டிணைவில்இனம் ஒன்று அழிந்ததுவேஈரல் குலை அறுந்ததுபோல் தவித்தோமேபல தேசம் வாழ்ந்தோம்பார் எங்கும வீதி வழி குவிந்தோம்பலனேதும் கிடைக்காமல்பரிதவித்து பைத்தியமானோம்இனப்படுகொலை ஒன்றைஇரக்கமின்றி சத்தமின்றி அரங்கேறிஇந்தியப் பெருங்கடலும…

    • 2 replies
    • 1.3k views
  6. ஆண்டுகள் ஏழு கடந்தும்.. சுவடுகளாய் கட்டிய சேலைகளும் காவிய பொம்மைகளும் சீன அமிலத்தில் கரைந்து போன எலும்புக்கூடுகளுக்கு மாற்றீடாய்..! இலட்சியம் சுமந்த மறவர் பின் விடுதலைக் கனவோடு பாதம் பதித்த நம்பிக்கைகள்... எதிரியின் உயிர்ப்பிச்சைக்காய் ஏங்கியே ஒதுங்கிய அந்த மணற்றரையில் உப்பில் கலந்து உடல் கரைவார் என்று யார் நினைத்தார்..! கந்தகக் குண்டுகளோடு பொஸ்பரஸ் அதுஇதென்று ஆவர்த்தன அட்டவணையில் அடங்கியவை எல்லாம் கொட்டி உலகம் எல்லாம் ஒன்றாய்க் கூடி ஓர் இனத்தின் தலைவிதியை தலையறுத்து சன்னங்களால் சன்னதம் ஆடிய பூமி அது..! இலைகள் உதிரலாம் கி…

  7. அன்னையர் தினம்..! அகிலத்தின் அன்னையர்களுக்கு…, இது ஒரு தினம் ! என் தேசத்து அன்னையருக்கு.., இது ஒரு செய்தி! எம்மை ஈன்றவளை ஒரு நிமிடம், நினைத்துப் பார்க்கையில்…! இதயத்தின் ஆழத்தில் …, எங்கோ ஒரு மூலையில், இலேசாக வலிக்கின்றது! அப்பா என்னும் ஆண் சிங்கம், பிடரி சிலிர்க்கும் போதெல்லாம்.., அடங்கிப் போன அம்மா! பிரசவங்களின் போதெல்லாம்,, மரணத்தைத் தரிசித்து…, மீண்டு வருகின்ற அம்மா! ஆண் என்றாலும். பெண் என்றாலும், ஆண்டவன் தானே தருகின்றான் என்று, ஆறுதல் கொள்ளும் அம்மா! அவளுக்கென ஆஸ்பத்திரியும் இல்லை, ஆறுதல் சொல்லத் தாதிகள் இல்ல…

    • 12 replies
    • 5.8k views
  8. நீ பிரிந்தபோது ... உறைந்துபோன ... இதயம் - நீ தந்துவிட்டு போன ... நினைவுகளால் .... மீண்டும் துடிக்கிறது ....!!! & காதல் எஸ் எம் எஸ் கே இனியவன் LOVE SMS

  9. இந்த வார ஆனந்தவிகடனில் (11.5.16) வெளியாகியுள்ள எனது கவிதை "முடிவற்ற பாதையின் முடிவில் இருக்கும் வீடு!", யாழ் களத் தோழர்களுடன்பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! முடிவற்ற பாதையின் முடிவிலிருக்கும் வீடு! போய்க்கொண்டே இருந்தோம் வெகுதூரம் “எங்கே எங்கே?” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் அஸ்மிதா. ஒரு திருப்பத்தில் சூரியனில் முடியும் ஒரு பாதைக்கு மாறியதும், “ஹைய்யா! நாம சூரியனின் வீட்டுக்குத்தானே போகிறோம்?” கண்டுபிடித்த மகிழ்ச்சியில் துள்ளினாள் அஸ்மி. முடிவற்ற பாதையின் முடிவிலிருந்த சூரியனின் வீட்டுக்கு …

  10. குழந்தைகள் அலையபூமியில் வெளிச்சம் அணைந்த பொழுது ஒரு யுகத்தின் தாய் இறந்திருந்தாள்பூமி பேரதிர்ச்சியில் நடுங்கியதுதாய்மாருக்காய் அழுதழுது கண்ணீர் விடும்குழந்தைகள் வாழும் யுகத்தில் கனத்தன வீடுகள்குழந்தைகளுக்காய் அழுதழுது கண்ணீர் விடும் தாய்மார்கள் வாழும் யுகத்தில் கனமடைகிறது பூமி தாய் கட்டிய சுவர்களில் கனவின் காட்சிகள் நெளிந்தன நிலம் மெழுகும் தாயின் விரல்களில் சிக்காத புதல்வர்களின் பதச்சுவடுகள் தொலை தூரத்தில் தவித்தன அடுப்பில் பொங்கியது துயரம் இலட்சம் குழந்தைகள்தாய்மாரை இழக்க இலட்சம் தாய்மார் குழந்தைகளை இழந்தனர் தாய்மார்கள் குழந்தைகளாகி அழும் யுகத்தை சபித்தது யார்? ஏங்கும் விழிகளை துடிக்கும் வார்த்தைகளை கண்ணீர் படிந்த முக…

    • 0 replies
    • 743 views
  11. நெஞ்சம் எங்கும்நினைவாலே நிலைத்தவள்நித்தம் என் நினைப்பினில்நீர்க்கமற நிறைந்தவள்உடல் முழுதும் தழுவிஉவகை தருபவள்உதடுகளின் இடை புகுந்துஉல்லாசமாய் நுழைந்தவள்நாசி வழி புகுந்துநாபிக் கமலத்தை நிறைப்பவள்துள்ளி ஓடும் குருதியிலும்தீர்க்கமாய் நிறைந்தவள்அள்ளி ஆசையோடு முத்தமிடும்அழகுச் செவ்வண்ண மேனியாள்நிகரில்லா அவள் வனப்பின்நினைவுகளைச் சுமக்கிறேன்நித்தமும் அவள் மடி துயிலவேதகிக்கிறேன் தவிக்கிறேன்நாடிச் சென்று அவள் மேனி தழுவநாதியற்று நிற்கிறேன்...#ஈழத்துப்பித்தன்06.05.2016 http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post.html

    • 0 replies
    • 1.7k views
  12. சித்திரையில் கதிரோன் சிரித்திடுவான் நாளும் என எண் திசையும் விழி வைத்து எதிர் நோக்கிக் காத்திருந்தால் பெண்ணவள் நாளும் விழி உடைத்து பெய்திடும் கண்ணீர் போல் மூக்கை சிந்தி வான மகள் முகம் கறுத்துக் கிடக்கிறாள் புவி பூப்பெய்தும் காலமதில் - பனி பூத்து சொரியுது இங்கு காலம் தப்பி காலம் மாறி காலாகாலமா இருந்த கால நிலை மாறுவது காலத்தின் கோலமன்றோ... #ஈழத்துப்பித்தன் 26.04.2016

    • 3 replies
    • 746 views
  13. உன்னிடம் இல்லாதபோதும் நட்பு,சொந்தஞ் சொல்லி வருபவருக்கு கேட்பதைக் கொடுத்து உறவைக் காத்துவிடு. உனது „கடன் பட்ட நெஞ்சு“ கலங்கிக் கரையும்போது உன்னை விட்டகன்ற தடங்களின் பின்னே வெறித்துப் பார்ப்பதைத்தவிர உன்னால் என்ன செய்ய முடியும்? இருபது ஆண்டுக்கு முன் தங்கையின் „பட்டப்படிப்பு வெற்றிக்கு“ (ப்) பரிசு அளிக்க கவிஞ நண்பனுக்கு நீ கடன் கொடுத்தாய், சில ஆயிரம்டொச்சு மார்க்கோடு அவனது கவிதை முகமும் கலைந்துபோச்சு! வேலையிழப்பு நஷ்ட ஈட்டுப் பணத்தைக் கண்டபோது கை நீட்டியவர்களை நீ மறக்கவில்லை! நீட்டிய கையை நிறைத்தே உனது அந்த 24000 யூரோவும் கரைந்து காணாமற் போச்சு! அண்ணனுக்குத் தம்பிக்கு,மாமாவுக்கு மச்சாளுக்கென… இப்போ, உனக்குக் கடன் தந்த …

    • 0 replies
    • 991 views
  14. எல்லாமே மூன்று எழுத்து எல்லா இடத்திலும் பின்பற்று … எல்லோர் இடத்திலும் செலுத்து … நீயும் ஞானியாவாய் …. அன்பு ….!!! ####### உறவுகளிடம் சிக்கி தவிக்கும்…. உதறிவிட்டால் வாழ்க்கை வெறுக்கும்… இதுவும் ஒரு அழியாத கல்லறைதான் … பாசம் …..!!! ####### உள்ளவன் இல்லாதவனுக்கும் …. இருப்பவன் அனைவருக்கும் …. வற்றாத ஊற்றாய் கொடுக்கணும் … கருணை ….!!! ######## இல்லாதவன் இருப்பதுபோல் … இருப்பவன் பிரபல்யத்துக்காகவும் மாறி மாறி போடுவது …. வேசம் …..!!! ######### சந்தித்தால் வேதனையை தரும் சந்திக்காமல் சாதித்தவர்கள் இல்லை …

  15. கடற் குழந்தை - தீபச்செல்வன்:- பேரலையை தின்று பெருங்கரையில் துயில்கிறது உறங்க ஓரிடமற்ற கடற் குழந்தை செய்வதறியாது திகைத்துப்போயின பொம்மைகள் பறந்தலைந்தன அவன் ஊதிய பலூன்கள் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் கவிழ்ந்து மிதக்கிறது அவன் செய்த காகிதப் படகு அவனருகில் வாடிக்கிடந்தன மீன்களும் கணவாய்களும் யாருமற்று அநாதரவாக கிடப்பனுக்காய் தலை குனிந்தன இறால்களும் நண்டுகளும் பெருங்காற்றே நீயா அவனின் படகை கவிழ்த்தாய்? …

  16. சாளரத்தில் மோதி விழுகின்ற மழைத்துளிகள்-அட யார் இங்கு தடை போட்டது தூக்கப் பொழுதுகளில் தலை கோதும் என் தாயின் கரங்களுக்கு.

    • 0 replies
    • 1.6k views
  17. ஒரு .... தலை காதலர்களே .... காதலில் தோற்றவர்களே .... கவலையே வேண்டாம் .... காதல் கவிதையை .... ரசியுங்கள் .... காதல் நிச்சயம் .... வெற்றிபெறும் .... கவிதை காதலின் தூதுவன் ....!!! & கவிதை காதலின் தூதுவன் காதலருக்கான சிறப்பு கவிதை கவிப்புயல் இனியவன்

  18. அவன் ..... இல்லாவிட்டால் .... நான் இல்லை ... நான் இல்லாவிட்டால் .... அவனுமில்லை .... நாங்கள் இரட்டை .... பிறவிகள் இல்லை .... அப்போ நாங்கள் .... யார் ...................? & & & & & விடை ; உடலும் உயிரும் ...!!! ^ சிறுவர்களுக்கான கவிதை கவிப்புயல் இனியவன்

  19. இந்த காதல் மழை 50 துளிகளாய் விழப்போகிறது ஒவ்வொரும் தனிரகம் நீ சூரிய உதய நேரம் .... பிறந்திருக்கிறாய் .... உன்னை காணும் .... போதெலாம் சூரியனை .... கண்ட தாமரைபோல் .... என் .... இதயத்துக்குள்ளும் .... மலர்வு ஏற்படுகிறது ....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 01

  20. அருவி ஊற்றெனஅழுது வடித்தவள்அடங்கிக் கிடக்கிறாள்பொருமி வெடித்திடபுழுங்கித் தவிக்கிறாள்தழுவித் தகித்தவள்தயங்கி நிற்கிறாள்ஒற்றைநாள்ஒருதலைப்பட்சயுத்த நிறுத்தமாம்சத்தம் இன்றிசலனம் இன்றிஇப்போதான்சற்று சிரித்துச்சிவக்கிறாள்சிவக்கிறாள்சிரிக்கிறாள் இவளெனசிந்தை தெளிந்துசிரிக்க முடியவில்லைஒருதலைப்பட்சஒருநாள்யுத்த நிறுத்தம் தானாம்யுத்தம் எப்பவும்சத்தத்தோடு வெடிக்கலாம்பாதிப்பு முன்னதை விடபலமாயும் இருக்கலாம்யுத்த நிறுத்தம்காலவரையற்றுநீடிக்கவும் படலாம்எதற்கும் தயாராய்த்தான்இருப்பை நிலை நிறுத்தஎடுத்தடி வைக்கிறேன்...#ஈழத்துப்பித்தன்19.04.2016 http://inuvaijurmayuran.blogspot.ch/2016/04/blog-post_19.html

    • 7 replies
    • 1k views
  21. Started by Karan T.,

    எரியும் விளக்கே அணையாமல் நீ இரு என் தோழி உறங்குகின்றாள் துணையாக நீ இரு சுத்தும் மணியே சத்தங்கள் போடாதே தூக்கத்தில் எழுந்துவிட்டால் என் உள்ளம் தாங்காதே கைகளை பிடித்து உள்ளத்தை நீ அணைத்தாய் தோள்மீது தலைசாய்த்து உன் சுமையை இறக்கிவைத்தாய் உன் உதட்டின் வெப்பத்தில் என் கன்னம் உருகிபோக மெய்மறந்து நான் நின்றேன் இன்னும் இறுக்கி அணைத்தாயே உன் கண்ணின் நீர்துளி கைகளிலே ஏந்திவைத்தோன் உன் கையில் என் இதயம் பத்திரமா சொல் தோழி உயிரை பகிர்ந்தாய் உறவை பகிர்ந்தாய் காலம் முழுதும் என்னோடு துணையாக வரவேண்டும் எரியும் விளக்கே அணையாமல் நீ இரு என் தோழி உறங்குகின்றாள் துணையாக நீ இரு சுத்தும் மணியே சத்தங்கள் போடாதே தூக்கத்தில் எழுந்…

    • 1 reply
    • 984 views
  22. இந்த வார குங்குமம் இதழில் (25.4.16) வெளியாகியுள்ள எனது குறுங்கவிதை "சொல்", யாழ்களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! சொல் ஆயிரம் இருந்தாலும் நான் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது என்கிறார்கள். நமக்குள்ளே இருப்பது ஆயிரம் இல்லை ஒன்றுதான், அதை வேறெப்படிச் சொல்வது?

  23. நீ சொன்ன ஒரு வார்த்தை.... ஆயிரம் கஸல் கவிதையை ... தோற்றிவிட்டது ....!!! சுதந்திர பறவைகளை ... திறந்த சிறைச்சாலைக்குள் .... அடைத்துவிடும் .... காதல் ......!!! இதயங்களை .... இணைக்கும் .... சங்கிலி -காதல் ... துருப்பிடிக்காமல் .... பார்த்துக்கொள் .....!!! முள் மேல் பூ அழகானது ..... என் இதயத்தில் பூத்த .... முள் பூ நீ ................!!!! நீ காதலோடு...... விளையாட வில்லை .... என் மரணத்தோடு ..... விளையாடுகிறாய் ......!!! ^ இது எனது 1000 கஸல் இத்தனை காலமும் ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் உளமான நன்றி ^ அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன் ^ " முள்ளில் மலரும் பூக்கள் " க…

    • 1 reply
    • 651 views
  24. யாழ் இணையத்தின் சமூக, இலக்கியப் பணி, தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணி போற்றுதலுக்குரியது. யாழ் இணையம் மேன்மேலும் வளர்க!

    • 2 replies
    • 706 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.