Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நேற்றிருந்த வாழ்வகற்றி புதியதோர் ஒளியைத் தேடி விரைந்து மாணவனாக தமிழீழ மண்ணில் விடுதலை வேண்டி உயர்ந்த கரங்களால் உலகின் புருவங்கள் விரிந்தன !!!

  2. காலம் எழுதியின் கவனப்பிழை தேடற்கவியின் உழல்வை இதயக்குழி உள்வாங்க உயிர்ப்பின் மூச்சு ஓசோன் ஓட்டையாக… காலம் எழுதியின் கவனப்பிழை கருப்பைச் சுவர்களில் விசமுட்களாய்… தரித்த குளவியின் பாதி உடல் சீழ்கட்டிப் போய் சிகிலமாக… பிணவாடை, கொள்ளை கோமாரி ஐயோ…. பச்சை உடம்புக்காரி படுக்கையிலே…. காலம் எழுதியை அழைத்து வருவீர். வனையும் சூட்சுமத்தை வசீகரித்து கால் செருப்பாக்கி கொப்பளிக்கும் கானல் வெளியில் கிடந்துழலும் மனிதர்களின் வேதனையை உணர்த்த வேண்டும். பாழும் உலகிடையே வாழக் கேட்டு வெட்கங்கெட்டுக் கிடக்கும் ஆறாம் அறிவு தேவையற்றதாகத் தீர்மானிக்கப்பட்டாயிற்று. த்தூ….. மண்ணாங்கட்டிகளே! குந்தியிருந்து மணிக்கணக்காப் பேசுக. எங…

  3. Started by SUNDHAL,

    இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்பதால் வரமாட்டார் என்கிறார்கள் இல்லை என்பதற்கான ஆதாரம் இல்லை என்பதால் வருவார் என்கிறோம் எதுவானாலும் சரி அந்த வார்த்தையை சொனால் தான் எம்மினத்திற்கு உயிரோட்டமும் எதிர் இனத்திற்கு வயிரோட்டமும் ஏற்ப்ப்படுமானால் உரக்க சொல்வோம் வருவார் Fb

  4. அழகிய வன்னிக்காடு அழிந்து விடவில்லை அதன் விதைகளை சுமந்து திசை எங்கும் பறக்கின்றன பறவைகள் முள்ளிவாய்க்கால் வற்றி விடவில்லை மேகமாய் வானத்தில் நிறைந்திருக்கின்றன முல்லை பூக்கும் உட்சி தளைக்கும் யாழின் இசை உலகம் கேட்கும் காந்தள் வாசம் காற்று மணக்கு புலிக்கொடி ஏந்தி திசைகள் நடக்கும் !!! (முகநூல்)

  5. நிலம்கீறி வெளிவரும் முளையங்களாய் புலன்கீறி விழுமென் வார்த்தைகள் _என்றுமே யாதொன்றினதும் கைதிகள் அல்ல, ஒப்புக்காகவும் ஒப்பனைக்காகவும் அலங்கரித்துக்கொண்டவை என்றோ, கற்பனைகள், சுமந்த கனவுகள் என்றோ, தேவதைகளின் ஆசீர்வாதங்கள் என்றோ, சட்டமிடவும் இயலவில்லை. சில இரவுகளில் நிகழுமிந்த ஒளிப்பகுப்பில்_என் அந்தரங்க நிர்வாணத்தை ரசிக்கமுடிகிறது. அந்த கணங்களில், அம்மணமாய் கிடக்குமென் மனவெளியில் தேவதைகளின் கொலுசுகள் ஒசைலயமிடுகின்றன. ஆழ்ந்த பெருமூச்சுக்களை வெளியேற்றும்_இந்த பிரசவிப்பின் பின்னான வெற்றிடத்தில் குடியேறும் ஆத்மதிருப்தியின் வாசம் அலாதியானது. அமைதியானது. இதுவெல்லாம் எனக்கானது. நீ என் இடத்தில் இருந்தால் உனக்கானது. இப்படி…

  6. அக்காங்களா ! அண்ணனுங்களா ! இது என்னோட ரெண்ணாவது கவிதைங்க . உங்க மாற்றரில நான் கவிதை பாடுறது றைட்டானு எனக்கு கொன்பியூஸ்சுங்க . பட் என்னோட மெசேஜ் எப்பிடீன்னு , கவிதை களத்தில இருக்கிற என்னைய விட பெரீய ஆளுங்க எல்லாம் காமன்ற் தந்தீங்கன்னா , நான் என்னைய கறெக்ட் பண்ண ஹெல்ப்பா இருக்குங்க :) . ஓக்கேயா ? சொப்னா ஜூட்டடி :lol: :D . முறங்கொண்டே புலியை விரட்டிய தமிழிச்சி வயற்றில் பிந்தவர்களே அழலாமா??? துடையுங்கள் உங்கள் விழிநீரை ....... யார் சொன்னார்கள் நான் இறந்தேன் என்று?? துடைத்திடுவீர் உங்கள் விழிநீரை ........... காற்றோடு காற்றாய் நான் கலந்தாலும், உங்கள் நாடிநரம்பெல்லாம் பாடுகின்றேன் போர்பரணி.... என்றுமே எமக்கில்லை தலைக்குனிவு, மனப்பால் இருத்திடுவீ…

  7. மாவீரர் தினம் 2012 எதிரி புலத்தில் களத்தில் மாணவர்கள் நேற்று அழித்தோம் இன்று உருவாக்கினோம் ஆண்கள் மேல் தடை பெண்கள் விளக்கால் உடை கைப்புலிகளை அழித்து உணர்வுப்புலிகளை உசுப்பித்து உலகத்திற்கும் சிங்களத்திற்கும் வெல்ல முடியாது தமிழன் விடுதலை உணர்வை !!!!!!!

    • 0 replies
    • 317 views
  8. "அந்த பிள்ளையைத் தெரியுமாடா? " நண்பனிடம் கேட்டேன் "நந்தினியைத்தானே சொல்கிறாய்? பாவப்பட்ட குடும்பமடா ஒரு அண்ணன் வீரச்சாவு அக்கா போராளியாய் போய் இறுதி யுத்தத்தோடே இல்லாமல் போய் விட்டாள் இவள் மட்டும் தான்டா மிச்சமாயிருந்தாள் தகப்பனைக்கூட இந்தியாமி தனங்கிளப்பில் வைத்து சுட்டுட்டான் இவளையும் நாய்கள் விடவில்லையே" ஈரவிழிகளோடு சொல்லி முடித்தான் நண்பன் இவளுக்கு ஏதோ நடந்திருக்கிறது இல்லையென்றால் ஏனந்த பிஞ்சு தன்னையே கருக்கிக் கொண்டிருக்கும் நண்பனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் நாலு வீடு தள்ளித்தானே இருக்கிறான் "என்னடா நடந்தது அவளுக்கு?" "எதையடா சொல்வது? எப்படியடா சொல்வது? எங்கட தெருவின் செல்லப்பிள்ளை அவள் அழகாய் இருப்பாள் என்ட மூத்த…

    • 2 replies
    • 430 views
  9. இன்று என் பெயரைத் தமிழில் Google பண்ணிப் பார்த்த போது கிடைத்த என் பழைய கவிதை இது. 23 ஆம் வயதில் 1998 January இல் எழுதி பிரசுரமான கவிதை. விசுவாசமற்ற காதலன்:

  10. மானத்தை தேட ஒரு வெளிச்சம் என்னும் ஒளிர்கின்றது நீயும் மனுசன் என்று கூறி உயிர் எரியும் வாசம் வீசுகின்றது பெருக்கெடுத்து ஓடும் குருதியின் மேல் மிதந்து வரும் தீபங்கள் தலை குனிந்து மண்டியிட்டு கூனிக் குறுகியவர்களின் தோழ்களை எப்போதும் தொடும் ஒரு நேச நெருப்பு எல்லாம் இழந்த பின்பும் பயம் சூழ அடிமைத்தனம் வந்த பின்பும் எட்ட இருந்து ஏவல் செய்யும் என்போன்றவர்களும் தூய ஒளியின் முன் குற்றவாளியாய் நிற்கின்றோம் நாங்கள் தவறுடன் தான் பிறக்கின்றோம் தவறை நியாயப்படுத்துவோம் தவிர எப்போதும் திருந்தியதில்லை திருத்தம் பெற்ற ஒளிகள் திசை காட்டி நிற்கின்றது எதிரி கருமேகமாய் கவிழ்ந்து எங்கள் நிலத்தை மறைத்தான் எங்கள் துரோகங்கள் புயலாய் வ…

  11. சோல்ஜர் @ சொறிநாய் சொறிநாயைப் பிடித்து “சோல்ஜர்” எனப் பெயர் வைத்து கறியோடு சோறும் வெறியேற அபினும் குழைத்துண்ணக் கொடுத்து வடக்கே போ என்றான் வேட்டைக்கு காவாலி சோல்ஜர் கடைசித் தெருதாண்டி முக்கி முணகி மோப்பம் பிடித்தபடி கால்தூக்கி எல்லை வரைகின்றான் என் வீட்டுச் சுவரில் அடித்து விரட்ட ஆளில்லா வீடொன்றில் நாநீட்ட தாகம் தணித்தவளின் கைநக்கி கோரைப்பல் தெரியச் சிரித்தான் வேட்டை நாயில்லா வீடொன்றாய்ப் பார்த்து கோழி இரண்டையும் -தென்னங் குலை நான்கையும் தேசியச் சொத்தாக்கினான் சிதறுண்ட கால்கொண்ட சிறுபுலியின் கதவுடைத்து பெண்மையை அரசுடைமையாக்கினான் காலம் பொறுமையாய் காத்திருக்கிறது காலம் வருவதற்காய் http://www.eelavayal.com/2012/12/blog-post.html

  12. சொல்லக்கூடிய வார்த்தைகளுக்குள் என் சோகம் எழுதப்படவில்லை எழுதியதெல்லாம் உன்னைப்பற்றி என்பதால் அழுகைகூட ஆனந்தமாகிறது...! வாசிக்கும் வாய்க்கும் வழிகாட்டும் விழிக்கும் விளங்கவில்லை வாசிக்கும் உன் மடல் முட்களாய் மூளையை கிழிப்பது ...! விழித் தெறிப்புக்குள் தலைகீழாய் விதி எழுதும் சாட்சியத்தில் நானும் கைதியாய் நடிக்கக் கற்றேன் தப்பிக்க முடியவில்லை...! தாகம் அற்ற நிலத்தில் தவறிவிழும் மழைத்துளிபோல் வெயிலுக்கும் வேகாமல் போனது தினம் உதிரும் கண்ணீர் துளிகள் ...! வாழ்வும் ,சாவும் வாழ்க்கைச் சலனங்களில் உயிர் குடிக்கும் உத்தரவாதங்களுக்குள் இன்னும் உயிர் வாழ்கிறது தேடல் திரும்பிப் பார்த்தாவது திருப்பிவிடு உன்னி…

  13. ஈழப் பண்ணையில் கந்தன் என்ற கமக்காரன் கட்டி வளர்த்த காளை மாடுகள்.. பண்பட்டு மண் பண்படுத்தி மக்களுக்காய் உழைத்தன ஓர் காலம். இன்றோ.. கட்டறுத்து சொந்த நிலங்கள் மேயும் கட்டாக்காலிகளாய்..! வளர்த்தவரையே மூர்க்கம் கொண்டு முட்டி மோதி சாகடிக்கும் நிலையும் காணீர். விசமிகளும் கரடிகளும் விசயத்தோடு பழி தீர்க்கும் படலம் தொடர்பில்.. எதிரிகளின் கைப்பாவைகளாய் மூர்க்கம் கூட்ட கட்டாக்காலிகளிடம் சாராய வெறியூட்டும் நிலையும் காணீர்..! எச்சரிக்கை..! எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

  14. ஈழத் தமிழர்களின் அவலத்தை பற்றிய சிங்களக் கவிதைகள். தற்பொழுது ஐரோப்பிய நாடொன்றில் அகதியாக புலம்பெயர்ந்து வாழும் சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தன எழுதியவை. "தமிழர்கள் ஒடுக்கப்படும் பொழுது சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை", என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்தக் கவிதைகளை சமர்ப்பிக்கிறேன். துவாரகா உந்துல, சந்திரமண்டலமெனத் தலை சாய்த்திருந்த சிறையில் ... தண்ணீர் மென்மையானதா நொந்ததா மனவெளி சுரங்கங்களில் கலகத்தின் அழிவுண்டான இரவொன்றில் தமிழ்ச் சகோதரியைப் பற்றி எதற்காக கலவரம்? கனவுகளின் முன்னணிக்கு உண்மையாகவே வெடி பட்ட நாளில் கண்ணீர் வரிசையிட்டதோ வழி நீளவும் பிக்குவின் காவியுடையைப் போல காத்திருந்த செங்கொடி யாருடைய குருதியால் சிவந்ததென்பது ம…

  15. Started by வல்வையூரான்,

    பசித்ததால் திருடி புசித்தான் நஞ்சை வறுமை.

  16. பாவி இவனை மறுபடியும் பிறக்க வைக்காதே செய்த பாவமெல்லாம் தீரும் முன்னே இறக்க வைக்காதே பாவத்திற்கு கூலிதன்னை நிறுத்தி வைக்காதே இவனைப்போல் பாவிகளை இனியேனும் படைத்து வைக்காதே வஞ்சகனின் உடலெல்லாம் வாதம் வர வேண்டாமோ வாய் நிறைந்த பொய்யனுக்கு மூலம் வர வேண்டாமோ கால் அழுகி கை அழுகி காடு செல்ல வேண்டாமோ காதகனைக் கண்டு மக்கள் காறித்துப்ப வேண்டாமோ கோடி வகை நோய் கொடய்யா சாகும் வரை அழ விடய்யா இப்பிறவி முடிவதற்குள் இவன் கணக்கை முடித்திடய்யா உச்சி மரக்கிளையில் நின்று உயிர் வேரை அறுத்தவன் இவன் பச்சை இளங்கொளுந்தைக்கிள்ளி பாழ் நெருப்பில் எறிந்தவன் இவன் பாவி இவனை மறுபடியும் பிறக்க வைக்காதே ! முகநூல்

  17. அகழிகள் சுற்றிப் படர்ந்த கோட்டையின் மதில்களுக்கப்பால் சிம்மாசனத்தில் நீ! மானுட நேயமேதும் சுவாசத்தில் கலக்காமலிருக்க நரமாமிசம் தின்னும் முதலைகளை மிதக்கவிட்டிருகிறாய் எச்சரிக்கை முயற்சியாக... நானாய் இறங்கி மீனாய் மாறி நானாகவே கரையேறுகிறேன் நாக்கில் சொட்டும் நீரோடு பின் தொடருமவற்றின் பசி தீருமுன் வாயிலைத் திறந்துவிடு வாழ்க்கை என்பதன் அர்த்ததைக் கற்பித்துவிட்டு இரையாகிப் போகிறேன் என்றேனுமொரு நாள் தெளிவுற்ற நீ உப்பரிகையில் என்னை நினைத்து கண்ணீர் சிந்தலாம் வந்தேறிய நோக்கத்தை வரலாற்றில் வரவு வைத்துவிட்டு கூட்டுக்குள் உடல் சுருக்கிக் கொள்ளும் என் கவிதை! http://kayalsm.blogspot.fr/2012/11/blog-post_30.html

  18. [size=5]ஒரு கோப்பை தேநீர்... [/size] மண்புழுவினும் அதிகமாக மண்ணில் நாங்கள் உழன்றதால் எங்கள் சதைப் பிண்டங்கள் நீங்கள் வளர்க்கும் தேயிலைக்கு உரமானது. செழித்து வளர்ந்ததால் சந்தோசமாயிருந்தீர்கள்... அட்டை உறிஞ்சியது போக மிச்சமுள்ள எங்கள் குருதியேறி செம்மண் இன்னும் சிவப்பானது. மண்ணின் நிறமும் அதனால் தேயிலையின் தரமும் சேர்ந்து உயர்ந்ததையெண்ணி கர்வமடைந்தீர்கள்... உடல்சோர்வு நீங்க நீங்கள் பருகும் தேநீர் எங்கள் வியர்வையில் குளித்து வளர்ந்ததால் கொஞ்சம் உவர்ப்பாயிருந்தது. பருகுவது எங்கள் குருதியில் வளர்ந்த வியர்வையாதலால் புதுசுவையென இன்னும் இன்னும் அதிகம் பருகுனீர்கள்... அப்படியே உங்கள் பதிவேட்டில் எங்கள் எல்லோரது ப…

  19. [size=3]அவன் கொடுத்த ரோஜாவை திருப்பி எறிந்ததால்[/size] [size=3]ரோஜாக்கொத்துக்கள் அவன்காலடியில்[/size] [size=3]கல்லறையில் அவன்.[/size]

  20. [size=5]கார்த்திகை நாயகரே கைதொழுகின்றோம்[/size] கோரங்கள் கண்டு கொதித்து விடுதலைக் கொள்கைக்காகவே துடித்து வீட்டினை உறவினை மறந்து விடுதலை மண்காக்க விரைந்து நேரிய எம் தலைவன் பாதையில் நிமிர்ந்து களமாடி விழி தமூடி மண்மாதா மடிமீது துயில்கொள்ளும் கார்த்திகை நாயகரே – உமை கண்ணிலொற்றுகின்றோம் கைதொழுகின்றோம் - தூய தீபம் ஏற்றியே வணங்குகின்றோம்… கார்த்திகை மாதமது எம்மூரில் கனத்த மழை பொழியும் நீர் நிரம்பி நிலமெல்லாம் மெதுமையாய்த் தானிருக்கும்… பூச்சொரியும் மரங்களெல்லாம் புன்னகைத்துக் காத்திருக்கும் காற்று வந்து காதோரம் மாவீரரர் கதைபேசும்… ஆர்ப்பரிக்கும் அலைவந்து நுரை நுரையாய் தானிரைக்கும் நேற்றிருந்த வீரர் நினைவு தனைச்சுமந்து …

  21. [size=5] எனது நண்பனைப் பற்றி [/size] [size=5] எமது மண்னிலே அதிகம் பேசுகின்றனர். [/size] [size=5] எப்படி அவன் சென்றான்… [/size] [size=5] துப்பாக்கி வேட்டுக்கள் [/size] [size=5] அவன் மார்பையும் முகத்தையும் நொறுக்கின [/size] [size=5] தயவு செய்து மேலும் விபரணம்வேண் டாம். [/size] [size=5] நான் அவனது காயங்களைப் பார்த்தேன் [/size] [size=5] அதன் பரிமாணங்களைப் பார்த்தேன் [/size] [size=5] நான் நமது ஏனைய குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன் [/size] [size=5] குழந்தையை இடுப்பில் ஏந்திய [/size] [size=5] ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன் [/size] [size=5] அன்புள்ள நண்பனே! [/size] [size=5] அவன் எப்போது வருவான் என்று கேட்காதே [/size] [si…

  22. ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ???????? என்இனமும் என்மண்ணும் சிறக்க களமாடிய தவக்கொழுந்துகளுக்கு வடை றோலின் பெயரில் வணக்க விழாவாவாம் கூதல் குடிகொண்ட புலம்பெயர் மண்ணில் புலன் பெயர்ந்தவர்களால் புலம்பெயர்க்கப்பட்ட அந்நியம் தொட்டு அருவருப்படைந்த கார்த்திகைப்பூக்கள் தலைநிமிர்ந்து சிரிக்கவில்லை உங்களை வணங்குகின்றோம் என்றபெயரில் களியாட்டா விழா கொதிக்க கொதிக்க கொத்துறொட்டியும் மொறுமொறுப்பாய் றோல்சும் கல்லா கட்டும் உணவ(ன்வணக்)க விழாவில் இவைகளைப் பாராது ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ?? என்மண்ணில் உயிருடன் உலாவும் கார்த்திகைப்பூ பெற்ற பெயர் வேசி......... அவள் வாழ்வும் அவள் பிள்ளைகளும் நடுறோட்டில் .......... சிங்களத்தின் கொட்ட…

  23. [size=5]மண்டியிடாத வீரம் !![/size] [size=1] [size=4]நேற்று மாவீரர் நாள் [/size][/size][size=1] [size=4]உலகெங்கும் நாம் நினைவில் கொண்டோம் [/size][/size][size=1] [size=4]மாவீரர்கள் தியாகத்தை சுதந்திரமாக [/size][/size] [size=1] [size=4]நீங்கள் இன்னும் முடியாத தாகத்திற்குள் [/size][/size] [size=1] [size=4]தமிழீழமெல்லாம் அரக்கர்கள் இன்று[/size][/size][size=1] [size=4]ஒரு பெண் மானபங்கப்பட்டால் துடித்திடுவார்கள் [/size][/size][size=1] [size=4]எம் கவிஞர்கள் [/size][/size] [size=1] [size=4]நீங்கள் இன்னும் முடியாத தாகத்திற்குள் [/size][/size] [size=1] [size=4]அப்பெண்ணே முன்னாள் போராளி என்றால் [/size][/size][size=1] [size=4]கேட்டிடுவார்கள் கணக்குகளை …

    • 24 replies
    • 2k views
  24. [size=5]மீண்டும் அ.கி.ம்.சை.[/size] [size=1][size=4]அன்று எடுத்தோம் அகிம்சை [/size][/size] [size=1][size=4]முடியவில்லை அந்த இம்சைகள் [/size][/size] [size=1][size=4]இன்றும் [/size][/size] [size=1][size=4]"கடவுள் தான் துணை" என்றான் [/size][/size] [size=1][size=4]அன்றைய தலைவன் தந்தை செல்வா [/size][/size] [size=1][size=4]ஒரு காந்தி ![/size][/size] [size=1][size=4]நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்று[/size] [size=4]எதிரி தான் முடிவு செய்கிறான் [/size] [size=4]அரச பயங்கரவாதம் [/size] [size=4]ஆயுதம் தரித்தான் தமிழன் முப்படையுடன் [/size] [size=4]தமிழன்னையை காத்தான் இறுதிவரை [/size] [size=4]தலைநிமிர்ந்தோம் [/size] [size=4]கைமாறும் வெற்…

  25. விளக்கெரியும் பொழுது எப்பாடலுமற்று யாரும் வாய்திறக்கா நள்ளிரவுகளின் காலத்தில் இருண்ட தேசத்தில் ... சூரியனுக்காய் காத்திருக்க சிதை மண்ணிலிருந்து கற்கள் முளைக்க கைகளால் மூட முடியாத மழை இடியோடு பெய்கிறது. வீழும் பொழுது அழுது மீளும் பொழுது தொழுது கனவுகள் முட்டும் கல்லறைகள் பெருகிய தேசத்தில் தாய்மார்களின் அடி வயிறுகளில் கார்த்திகைப் பூக்கள் மலர்கின்றன. வீட்டு மூலையில் விளக்கெரியும் கார்த்திகை மாலைப் பொழுதில் விளக்குகளை தூக்கி வந்து மழையில் நீர் சொட்டும் தென்னங் கீற்றுக்களில் ஒளிரும் உங்கள் முகங்கள் கண்போம். மூட முடியா மழை கொல்ல முடியா மரங்களில் பெய்ய அழியா முகங்கள் மனங்களில் தெரியும் அணைக்க முடியா விளக்குகள் தேசத்தை ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.