கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
மனதை நெகிழ வைப்பதுதான் கவிதை என்றால் அவளின் சந்தோசங்கள்தான் எனது கவிதை... மனதை உருக்குவதுதான் கவிதை என்றால் அவளின் சோகங்கள்தான் எனது கவிதை... மனதுக்கு ஆறுதல் தருவதுதான் கவிதை என்றால் அவளின் பேச்சுதான் எனது கவிதை... மனதை லேசாக்குவதுதான் கவிதை என்றால் அவளின் சுவாசம்தான் எனது கவிதை... மனதை தொடுவதுதான் கவிதை என்றால் அவளின் முத்தம்தான் எனது கவிதை... மனதுக்கு பிடித்ததுதான் கவிதை என்றால் அவள்தான் எனது கவிதை...
-
- 11 replies
- 1.5k views
-
-
பொய்மையும் கயமையும் கொட்டமடிக்கும் வேளையில் வாய்மையும் நீதியும் நடைபயிலவேண்டும் நாணிக் குறுகி நிற்கும் என் இனம் வீறு நடைபோடவேண்டும் அடிமைச் சங்கிலியை உடைத்த தமிழச்சிகள் தரணியில் வாழவேண்டும் கறையான் புற்றில் குடியிருக்கும் பாம்புகள் குளறியோடவேண்டும் தகரக் கொட்டகை வாழ்வு உக்கியே போகவேண்டும் உழுத்த எம்வாழ்வு உயரவே வேண்டும் எங்கள் நண்டுக்குணம் மாறி திமிறித் திரண்டால் நடக்கும் இவை நடக்குமா ??????????
-
- 25 replies
- 2.5k views
-
-
அலங்கரித்த தலைமுடியலில் ஆயிரம் கவிதைகள் நெகிழ்கிறது கண்டேன் அந்த கருவிழிகள் இடது பக்கமாக திரும்பி ... என் இதயத்தை குத்திய பொழுது.... கமல மேனியில் கள்ளச் சரிரிப்பு கொண்ட அதன் இதழ்கள் சுவைக்க அழைக்குது உன் இமைகள் என்னை தண்டிக்க காத்திருக்கிறது அம்பு போல் (எதிர்ப்பு) சிவந்த மேனியில் பொண்ணும் மங்கிப்போகிறது... கைவிரல்கள் நளினமாக பற்றிய இடம் யாவும் சிலையாய் போகிறது மெய்சிலிர்த்து கல்லும் சிதறுகிறது குமுதச் சிரிப்பில் கவர்ந்த கள்ளி குங்குமமும் நிறம் குறைவோ உன் இதழ் அழகிற்கு... பஞ்சு மேனி பவளப்பாறை என் இதயத்தை உடைத்து உன் அழகை சேகரிக்கிறது.... விலை மதிப்பில்லாமல் உயர்கிறது உன் அழகு என் இதயத்தில்... …
-
- 2 replies
- 718 views
-
-
வழக்கமாக எழும் நேரத்திலேயே இன்றும் எழுந்து விட்டேன்...! விழிக்கும் போதே கடவுளிடம் பிராத்தனை செய்து கொண்டேன் நேற்று நடந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழாதிருக்க... இன்னும் கொஞ்சம்நேரம் தூங்கி இருக்கலாம் என கெஞ்சுகிறது அந்த கீழிமைகள்... நேற்றைய தினங்களின் பிடிக்காமல் போன முன் அனுபவங்களால் மனதுக்குள் சொல்லிக் கொண்டேன் இன்றாவது ஒழுங்காக இரு என்று... இருந்தும்., தேவதை ஒருத்தியின் உதாசீனப் பார்வையிலும், கசக்கி, பிழிந்து வெளியேத் தள்ளி பின்பு வழக்கம் போல புறப்பட்ட பேருந்து பயணத்திலும் .. டேய்.. வீட்ல, சொல்லிட்டு வந்துட்டியா என சபித்துவிட்டுப் போன ஆட்டோக்காரனிடமும்... அலுவலகம் சென்று மறதியால் செய்த பிழை…
-
- 2 replies
- 1.3k views
-
-
உனை சுமப்பதையிட்டு கொண்ட பெருமிதத்தால்... உன் குதிரை கூட எனை நோக்கி... கடைக்கண்ணால்.... ஒரு நக்கல் பார்வை வீசிவிட்டு செல்கிறது....
-
- 4 replies
- 1.1k views
-
-
மனிதம் மறந்த தேசத்தில் மன வக்கிரம் கொண்டவனின் கண்களில் பட்ட குழந்தைகள் குதறி சாகடிக்க படுகின்றன மனிதம் மறந்த தேசத்தில் அவன் வீட்டு ஜன்னலுக்கு அழகான திரைச்சீலை அகதியின் குழந்தை அம்மணமாய் புழுதியில்
-
- 10 replies
- 1.3k views
-
-
கையில்லதவனும் கால் இல்லாதவனும் கண் இல்லாதவனும் சாதிக்கிறான் எல்லாம் இருப்பவன் காதல் தோல்வி என்ற பெயரை சொல்லி சாகிறான் சாவதற்க்கு ஒரு நொடி யோசித்தால் போதும் சாதிப்பதற்க்கு பல நொடி யோசிக்க வேண்டும் நீ சாகப்பிறக்கவில்லை சாதிக்க பிறந்திருக்கிறாய் சாதித்து காட்டு...
-
- 2 replies
- 1.2k views
-
-
உன்னைக் காட்டிலும் ரோஜா செடி பரவாயில்லை , நீ என்னை மறந்த போதிலும் எனக்காக தினம் தினம் மலர்தூவிக்கொண்டிருக்கிறது அந்த அன்பு ரோஜாச்செடி...
-
- 0 replies
- 676 views
-
-
நான்கு விழிகள் காணும் வலி காதல்.... நான்கு விழிகள் காணும் வழி வாழ்க்கை...
-
- 0 replies
- 455 views
-
-
-
உள்ளாடையும் கிழிந்து அந்தரங்கம் காட்டுகிறாள் கோயில் பிச்சைக்காரி.. அவளையும் தாண்டிச்செல்கிறார்கள் சாமிக்கு பட்டுச் சேலை சாத்த... http://www.ilankathir.com/?p=2593
-
- 18 replies
- 1.8k views
-
-
சட்டெனத் தூறிய மழைத்துளியில், முற்றாக நனைந்து போனேன்...! சாயம் போனவன் போலாகி... - காயமாகி, அம்மணமாய் அழுது நின்றேன்! வழமையாய்... நான் பேசினால், பத்து ஊருக்கு பவ்வியமாய்க் கேட்கும்...! ஆனால், பேச இயலாத ஒருவனாய்... - அகதியாய், எங்கேயோ தொலைந்து போனேன் ..! என் தாயின் முகம் மலர... மாற்று நாமம் சூடிக்கொண்டேன்! பல முகமூடி போர்த்திக்கொண்டேன்...! - ஆனால், உண்மையான என் முகம் தொலைத்து நின்றேன்! நெருப்பாய் இரு... எரிக்காதே! கனலாய் இரு ...கருக்காதே! கருத்தாய் இரு.... வருத்தாதே!!! - இறுதியில், அர்த்தமற்ற பிழையாய் ... நின்றேன் ! என் மானங்காக்க.... அழகாய் உடுத்திக்கொண்டேன்! என் பெண்டிர் விருப்பம்போல்.... வாங்கிக் கொட…
-
- 5 replies
- 1.3k views
-
-
கட்டியவனோ காலமாகி விட்டான் ! பெற்றவனோ கைகழுவி விட்டான் ! இருக்கின்ற காலங்கள் எதுவரையோ ? அது வரையும் உழைத்தே உண்ணுவேன் ! முதுமை என் சுருக்கங்களுக்கு மட்டுமே ! .......................................................... எனக்கில்லை! வாழும்வரை தன்னம்பிக்கையோடு .... (எங்கேயோ பார்த்ததில் மனதை ...)
-
- 10 replies
- 1.7k views
-
-
முன்பெல்லாம் இருள்பூத்த நிசப்தத்தில் _அவை இயங்குதல் வழக்காதலால் ஆங்காங்கே எச்சங்களாய் ................! வேரோடுதல் போல ஓடிக்கொண்டிருக்கும்_ அப்பப்ப தன்னிலை மறந்து சிலகணம் வாய்கால் நீரோடுதல் போல வெளிவரும் ... பூசாப்பொருள் இதுவென்று பேசாதநாளில்லை உற்றவர் காசா பணமா தருமிதுவென்று ௬சாமல் முன்னின்று குறிவைத்தனர் . வளைதல் நெளிதல் வசப்படல் கொண்டதில்லை . உயர்ந்தவனை கொண்டாடியதுமில்லை கீழிருந்தவனை துண்டாடியதுமில்லை _ஆதலால் மாவிலை தோரணங்கண்டதுமில்லை. முகவரியில்லாத முகத்திற்கு சுகவரிகளை பரிசளித்த போதிலும் தகவிலா நிலைகளை வகைப்படுத்திய போதிலும் மிகைப்பட்டுக்கொண்டதுமில்லை இதமான இறந்தகால நினைவுடன் சூனியவாதமொன்றை கடக்க முனைகையில் , …
-
- 6 replies
- 1k views
-
-
அம்மா ஆயிரம் உறவு எம்மைத் தேடியே வந்தாலும் அம்மா உன்போல் அன்பான உறவெமக்கு அகிலத்தில் இனி வருமா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா - உன் பரிவிற்கா? பாசத்திற்கா? நட்பிற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா. நல்லதொரு மனையாளாய் நானிலத்தில் வாழ்ந்ததற்கா? பெற்றவர்கள்தான் உவக்க பெருமையுடன் வாழ்ந்ததற்கா? உற்ற உம் உறவுகளை உயர்வுடனே சுமந்ததற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா எம் உயர்வுக்காய் உனை உருக்கி ஓடியோடி உழைத்ததற்கா? - நாம் உடைந்துபோன நேரங்களில் உறுதுணையாய் நின்றதற்கா? எம் திறமைகள் அனைத்திற்கும் திறவு கோலாய் இருந்ததற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா. கருத்தாய் கல்விக்கண் ஊட்டியே வளர்த்ததற்கா? கடமையே உயர்வென்று கண்ணியத்தை போதி…
-
- 9 replies
- 1.9k views
-
-
இக்கவிதையை எழுதியவன் ஏற்கனவே காலமள்ளிய கனவுகளும் நீழும் நினைவுகளும்... என்றொரு கதை மூலம் யாழுக்கு அறிமுகமான வசந்தன். அவனது இன்னொரு பதிவு இது யாழ் வாசகர்களுக்காக தருகிறேன். காலமள்ளிய கனவுகளும் நீழும் நினைவுகளும்... கதையைப் படிக்க இவ்விணைப்பில் அழுத்துங்கள் கனவுகள் வளர்ப்போம்.... வசந்தன் இப்பொழுதெல்லாம் பெயர் தெரியாத தெருக்களில் அகதியாய் மண்வாசனையைத் தேடும்போது தான் உயிர் கனக்கிறது. மரணத்தின் திசைநோக்கி – அன்று நடந்தவர்களுடன் நானும் கூட நடந்தேன்..... அது மிக மிக அருகில் என்னை வரவேற்றுக் காத்திருந்தது. ஆயினும் எல்லாவற்றிலிருந்தும் நொடிப்பொளுதில் தப்பியதாக ஒரு உணர்வு. பனியில் நனைந்து உடைகள் கனப்பதுபோல மனதும் ஈரமா…
-
- 3 replies
- 699 views
-
-
உயிர் போகும் தருணம் நெருங்குகையிலும் உன் வரவுக்காய் காத்திருக்கிறேன். நீ மட்டும் வரவில்லை இறுதிவரை.... கழுகுகள் தான் வட்டமிடுகின்றன - என் பிணம் தின்னும் பேராசையில்.....
-
- 34 replies
- 2.1k views
-
-
-
நெருப்பாற்றில் நெகிழ்ந்துருகி நெட்டுயிர்க்கும் கணமதில் கறுப்பாடாய் கலந்துகலக்கிய பொறுப்பானவரே.......................... நிறுத்திய ஒரு பயணத்தால்_ எம் குருதிகுடித்தவன் கோரப்பற்களை மறைத்தீரே ............. காத்திருந்து கருவறுக்கவா தேர்ந்தெடுத்து அனுப்பினோம் , கொன்றொழித்து , எம்மண்தின்றழித்து, நின்றபகை நிறம்பிரிகையில் உரமாய் கரங்கொடுக்க உணர்வெழுந்தால் உன் குருதியும் தகுதியற்றதே ,! அவலகுரல்களின் எதிரொலிகளிலும் , அங்கமிழந்தலையும்_ ஒரு தலைமுறையின் கண்ணீரிலும் , எங்கென்றே தெரியாதுபோன உறவுகளின் உணர்வுகளிலும் , எஞ்சிப்போன எம் எலும்புகளின் வீச்சத்திலும் , இருந்தெழுந்த வாக்கேயிந்த வாழ்வுதந்தது இருப்பிற்காய…
-
- 3 replies
- 1.1k views
-
-
தீ... கவிதை - இளங்கவி உனக்கு தமிழனில் என்ன பகை சொல்.... பலகாலமாய் எங்களை ஓட ஓட விரட்டுகிறாயே...... சிங்களனைப் போல உனக்கும் எங்கள் இரத்தம் தான் பிடிக்குமா... அன்றி அவனுக்கு நீ அடிமையா..... தொட்டந் தொட்டமாய் கட்டங் கட்டமாய் எங்களைக் காவுகொண்டும் அடங்கலையா உன் பசி...... கருஞ்சாம்பல் புகையாகி காவியம் படைத்தவர் உன்னை வென்றவர்..... அவர் கதையை உன்னில் அட க்க எனக்கு விருப்பில்லை...... காரணம் அவர்கள் உனக்கு அஞ்சாதவர்..... ஆனால் நீ எரித்த அப்பாவி உயிர்களுக்கு நீ தானே பொறுப்பு..... முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டி நீ எரித்த எம் மூச்சுக்களுக்கு நீ தானே பொறுப்பு.... அழக்கூட நேரமின்றி அந்த இடத்…
-
- 5 replies
- 2.6k views
-
-
ஒரு நொடி அவள் சிரித்துப் பேசினால் நூறு நொடி என் ஆயுள் நீள்கிறது. ஒரு துளி கண்ணீர் சிந்தினால் நூறுநாள் என் ஆயுள் குறைகிறது...
-
- 13 replies
- 1.6k views
-
-
அடிக்கடி நீ இமைசிமிட்டுவதால் என் விழிகள் வலிக்கிறது விம்பம் தெரியாத கண்ணாடியில் உன் உருவம் ஓடி மறைகிறது ஒரு நொடி உன்னைப் பாராவிட்டால் மறுநொடியே என்னுள் ஆயிரம் கனவுகள் படர்கிறது...
-
- 0 replies
- 591 views
-
-
அடித்த மணியோசையும், தபால்காரரும்.... கொடுத்த சந்தோசம், தற்காலிக ஆறுதலாய்... வாசித்து முடிக்கும் வரைக்கும்தான்! அதன்பின்னர்தான்.... தபால்காரரின் புன்னகைகூட, உண்மையான புரிதலென்று புரிந்தது! என் மகனே! அன்றொருநாள் எனக்கென நீயனுப்பிய காசு... இன்னமும் மிச்சமிருக்கு ராசா...!!! என் பேரப்பிள்ளைகளுக்கு... என்ன வேணும் சொல்லு ராசா? வாங்கி அனுப்புறன்... என்னெண்டாலும்!!! எத்தனை நாளைக்கு நானிருப்பேன்... எனக்கே தெரியாது! ஆனால் உன் அக்கா தங்கச்சி பிள்ளைகள் ... அவங்களின் வாரிசுகள், எல்லாமே இங்குதான் சீவிப்பார்கள்... சிந்தியுங்கள்! "தாய்" எனும் நிலையிலிருந்து ... தாய் மண்ணிலிருந்து... என் இறுதி வார்த்தைகள்!!! உன் அப்பா கட்டிய.... எங்கள் வீட்டை வித்துப்போட…
-
- 14 replies
- 1.5k views
-
-
மறதி ஒரு தூக்கமாத்திரை அது எங்கெங்கும் இலவசமாக வழங்கப்படுகிறது அது நமக்கு நடந்தவை எதுவும் நமக்கு நடந்தவை அல்ல என்று நம்ப வைக்கிறது துரோகத்திற்கும் அவமானத்திற்கும் நம்மைப் பழக்கப்படுத்துகிறது நினைவுகள் இனி படிக்கப்பதற்கான கதைகளே என அது நம்பத் தொடங்குகிறது … பிறகு அவை இன்னும் ஒரு முறை எதிர்காலம் என்ற நம்பிக்கையைத் தருகின்றன -மனிஷபுத்திரன் http://www.ilankathir.com/?p=4695
-
- 2 replies
- 1.6k views
-
-
தாயாகி.... தந்தையாகி...! இந்த ரோஜாப்பூ மலர்ந்ததைக்கண்டு சிரித்த முதல் தோட்டக்காரன் நீ! பெண்ணாய் நானும் பிறந்திடவே முகம் சுழித்த பேதையர்க்கு மத்தியிலே பூரிப்புடன் எனைத் தூக்கி முதன்முதலில் கொஞ்சியதும் நீதான்! அம்மாவின் அங்கலாய்ப்பும் இதுவேதான்...! பல்லு முளைத்து சிரிக்கையிலே தலையில் பயறு கொட்டி வாழ்த்தியதும் நீயே தான்! தத்தித் தாவி உருண்டு விழுந்து நடக்க முயலுகையில்... முன்னாடி வந்து நின்று என் விரல் பிடித்து நடை பழக்கியதும்நீ தான்! உன் தோளே என் அரியணையாய்..... எனை அதில் சுமந்துகொண்டு உலகை சுற்றிக் காட்டியதும் நீ... பயத்தோடு என் விரல்கள் உன் தலை மு…
-
- 2 replies
- 1.3k views
-