Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தண்டட்டி – திரைப்பட விமர்சனம் அச்சு அசலான கிராமத்து மனிதர்களையும் அவர்கள் வாழ்வியலையும் அப்படியே காட்சிப்படுத்தும் வகையில் அவ்வப்போது சில படங்கள் வரும். அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் தண்டட்டி. தண்டட்டி என்பது பெண்கள் காதில் அணியக்கூடிய காதணி வகைகளுள்‌ ஒன்று. இது தங்கம் அல்லது வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஒரு கனமான அணிகலன்.தென் தமிழ்நாட்டிலுள்ள பெண்களிடையே இந்தக் காதணி அணியும் வழக்கம் இருந்தது. தற்போது இந்த அணிகலன்கள் அணியப்படுவதில்லை எனினும் வயதான சிலர் இன்னும் இதை அணிந்து கொண்டிருக்கின்றனர். இதை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பாப்படம் அல்லது பாம்படம் என்று அழைக்கின்றனர். இந்தக் காதணி அணிவதற்க…

  2. Published By: NANTHINI 21 JUL, 2023 | 05:16 PM கலையுலகின் ஈடு செய்ய முடியாத ஒரு மாபெரும் கற்பகத்தரு, தமிழ் சினிமா சிம்மாசனத்தில் வேறு யாரும் அமர முடியா வேந்தராக வீற்றிருந்த திரைமுடி சூடிய 'திரைச்சக்கரவரத்தி', வெள்ளித்திரையில் நவரசங்களை நவநூறுகளாக அள்ளி வழங்கிய நவரச நாயகன், கலைமகளின் மூத்த கலைமகன், உலகின் தவநடிகபூபதி, சிரம் தாங்கிய சிகை முதல் பாத நகம் வரை உடலின் அனைத்து பாகங்களுக்கும் உணர்ச்சியூட்டி நடிக்கச் செய்த பெரும் ஆற்றல் கொண்ட நடிப்பின் 'யுகபுருஷர்', 'தாதா சாஹெப் பால்கே' நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 22வது நினைவுதினம் இன்று! (21/07) 60 ஆண்டுகால நடிகர் என்ற முறையில் நாடகம் மற்றும் தமிழ் திரையுலகுக்கு தொண்டாற்றி, பல க…

  3. 2898ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும்? அறிவியல் புனை கதை திரைப்படமான ‘கல்கி 2898’ (புராஜெக்ட் கே)யின் முதல் டீசர் வெளியாகியுள்ளது. குறித்த திரைப்படம் 2898ல் பூமியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ‘புராஜெக்ட் கே’ வைஜெயந்தி மூவிஸின் தலைப்பின் கீழ் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இந்திய மதிப்பில் ரூ.600 கோடி செலவில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டகுபதி, தீபிகா படுகோனே, கமல்ஹாசன், அமிதாப்பச்சன், பசுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல்பார்வை பதாகையை படக் குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந…

  4. பட மூலாதாரம்,KV MANI படக்குறிப்பு, பாரதி ராஜாவுக்கு முதல் வாய்ப்பு 1977 ஆம் ஆண்டு '16 வயதினிலே ' திரைப்படம் மூலம் கிட்டியது கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் "இயக்குனர் இமயம்" எனப் புகழப்படும் பாரதிராஜா இன்று தனது 82-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பல கிராமப் பின்னணியில் அமைந்த கதைகளை இயக்கி, மாபெரும் வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல், தனது 80 வயதில் ”மாடர்ன் லவ்” என்ற வெப் சீரிஸ…

  5. இந்திய பிரதமர், நடிகர் மாதவனுடன் பிரான்ஸ் ஜனாதிபதி செல்பி Published By: Digital Desk 3 17 Jul, 2023 | 10:29 AM இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நடிகர் மாதவனுடன் பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான் எடுத்துக் கொண்ட ‘செல்பி’ வைரலாகி வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 13, 14 ஆம் திகதிகளில் பிரான்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். 14 ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற அந்த நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக மோடி பங்கேற்றார். அதனை தொடர்ந்து, அன்றிரவு பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் பிரான்ஸ் …

    • 1 reply
    • 387 views
  6. எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு சமரசத்துடன் வாழும் ஒருவனின் வாழ்க்கையை எங்கிருந்தோ கேட்கும் ‘அசரீரீ ஒலி’ மாற்றியமைத்து மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்க வைத்தால் அதுவே ‘மாவீரன்’ ஒன்லைன். கார்ட்டூனிஸ்ட்டான சத்யா (சிவகார்த்திகேயன்) தனது அம்மா, தங்கையுடன் குடிசைப்பகுதியில் வாழ்ந்து வருகிறார். திடீரென ஒருநாள் அரசு சார்பில் அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறச் சொல்லி அறிவிப்பு வருகிறது. மேலும், அம்மக்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக கூறி, அடுக்குமாடி குடியிருப்புக்கு இடமாற்றம் செய்கிறார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பு தரமற்று மோசமான நிலையில் இருப்பதை எதிர்த்து முறையிடும் தன் தாயிடம் ‘அட்ஜஸ்ட் பண்ணி வாழ கத்துக்கோம்மா’ என சமரசம் செய்கிறார் பயந்த சுபாவம் கொண்ட சத்யா…

  7. அதிகாரத்தின் ருசியை பரம்பரையாக ருசிக்கத் துடிப்பவனுக்கும், அதிகாரம் தனக்கான உரிமை என்பதை மறந்தவனுக்கும் (மழுங்கடிக்கப்பட்டு) இடையேயான போராட்டமே 'மாமன்னன்'. சேலம் மாவட்டத்தில் ஆளும் கட்சியின் சார்பில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருக்கிறார் மாமன்னன் (வடிவேலு). அவரின் மகன் வீரன் அலைஸ் அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்). அடிமுறை ஆசானாக இருக்கும் வீரன், சிறுவயதில் தான் சந்தித்த சாதிய அடக்குமுறையில் தந்தையின் செயல் பிடித்துப் போகாமல் அவருடன் பேசாமல் இருக்கிறார். மாமன்னன் இருக்கும் அதே கட்சியின் மாவட்டச் செயலாளராக தந்தையின் வழித்தோன்றலில் ரத்னவேல் (ஃபஹத் ஃபாசில்) செயல்படுகிறார். கம்யூனிஸ்ட் தோழர் லீலா (கீர்த்தி சுரேஷ்) அதிவீரன் இடத்தில் நடத்தும் இலவச கோச்சிங் சென்டரை ரத்னவேலின் …

  8. பட மூலாதாரம்,SIXTH SENSE PUBLICATIONS கட்டுரை தகவல் எழுதியவர்,விக்ரம் ரவிசங்கர் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நான்கு முழ வேட்டியும், மேல்சட்டை அணியா வெற்று உடம்புமாக, அரைகுறை ஆங்கிலத்தோடும், அடித்து வீசும் வார்த்தைகளோடும் எத்தனையோ நடிகர்களையும் கையாண்டவர். மருதமலை முருகன், எம்.ஜி.ஆர், விலங்குகள் - இவை மூன்றும்தான் திரையுலகில் அவரது முதலீடு. யாரும் எளிதில் நெருங்கிப் பழகிட முடியாத எம்.ஜி.ஆர்., விடாமல் இறுதிவரை பாராட்டிய ஆச்சர்யத்துக்குரிய நட்புக்குச் சொந்தக்காரர் சாண்டோ சின்னப்பா தேவர். முகம் காட்ட முடியாத சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி, தயாரிப்பாளராக உயர்ந்…

  9. பட மூலாதாரம்,@ACTORVIJAY கட்டுரை தகவல் எழுதியவர்,காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி,பிபிசி தமிழுக்காக 22 ஜூன் 2023, 04:24 GMT “இவர் ஹீரோ மெட்டீரியலே இல்லை, வெறும் ஜூனியர் ஆர்டிஸ்ட் கேட்டகிரி” என விமர்சிக்கப்பட்ட ஒருவரின் திரைப்படங்கள் இன்று வெளியாகும்போது, வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் சகிதமாக திரையரங்குகளுக்குச் சென்று, திரையரங்குகளைத் திருவிழா கூடமாக மாற்றிவிடுகிறார்கள். நடிக்கவே தெரியவில்லை என்ற ஆரம்ப கால விமர்சனங்களை புறந்தள்ளி இன்று நடனம், நகைச்சுவை, ரொமான்ஸ், ஆக்‌ஷன் என அனைத்திலும் கில்லியாக இருக்கும் நடிகர் விஜயின் 49வது பிறந்த நாள் இன்று. இயக்குநர் எ…

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி,பிபிசி தமிழுக்காக 17 ஜூன் 2023 கலையின் நவீன வடிவமான சினிமாவில், ஒரே கனத்தில் அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்தி, அவர்களுக்கு மிக நெருக்கத்தில் உணரச்செய்யும் கதாபாத்திரங்களின் பட்டியலில் கண்டிப்பாக அப்பா கதாபாத்திரத்திற்கு தான் முதலிடம். அப்பா என்பவர் என்றைக்கும் சுவாரசியமான புத்தகம் தானே. சிலர் படித்து பாடம் பெறுகிறார்கள். இன்னும் சிலரோ படிக்கத் தவறி அவரை இழந்த பின்பு இன்னும் படித்திருக்கலாம், வாழ்க்கை முழுதும் நினைத்துப் பார்க்க இன்னும் சில படிப்பினைகளை அப்புத்தகத்திலிருந்து கற்றுத் தெரிந்திருக்கலாம் என வ…

  11. இணையத்தில் நேற்று ‘ஹலோ மீரா’ திரைப்படம் பார்த்தேன். தெலுங்குப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். படத்தின் பெயருக்கு ஏற்ப படம் முழுதும் தொலைபேசி உரையாடல்கள்தான். இது இயக்குனருக்கு ஒரு பரீட்சார்த்தமான முயற்சி. ஆனால் அதை கையாண்ட விதமும் கதையை நகர்த்தும் நேர்த்தியும் நன்றாக இருந்தது. திருமணத்துக்காக தனது சொந்த ஊருக்கு வரும் பெண் எதிர்கொள்ளும் பிரச்சனையை கதை சொல்கிறது. Gargeyi Yellapragada அந்தப் பெண்ணாக நடித்திருக்கிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் அவர் மட்டும்தான் நடித்திருக்கிறார். திரையில் அவர் ஒருவரே இருக்கிறார். தாய்,தந்தை,சகோதரன், நண்பர்கள்,எதிர்காலக் கணவன், கடந்தகால காதலன், பொலீஸ் அதிகாரி என பலர் இருந்தும் அவர்கள் திரையில் இல்லை. மாறாக அ…

    • 1 reply
    • 502 views
  12. திருச்சியில் பெண்களை குறிவைத்து ஒரே ஃபார்மெட்டில் தொடர் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. எந்தவித தடயமும் கிடைக்காததால் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளூர் காவல் துறை திணறுகிறது. இதனால், இந்த வழக்கு கிரைம் பிரான்ச் எஸ்.பி.லோகநாதனிடம் (சரத்குமார்) ஒப்படைக்கப்படுகிறது. அவரிடம் புதிதாக டிஎஸ்பியாக பணி நியமனம் பெற்ற பிரகாஷ் (அசோக் செல்வன்) பயிற்சிக்காக இணைகிறார். சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருவரும் விசாரணையை தொடங்குகின்றனர். இறுதியில், கொடூரக் கொலைகளை அரங்கேற்றும் சீரியல் கில்லர் யார்? எதற்காக அவர் இப்படியான கொலைகளை செய்கிறார்? பின்புலம் என்ன? - இதையெல்லாம் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் படம்தான் ‘போர் தொழில்’. முறையான…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 ஜூன் 2023, 05:16 GMT புதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர் "தனது ரசிகர்களுக்காக தனி இசை உலகத்தை படைத்தவர் இளையராஜா" என்கிறார் அவரது தீவிர ரசிகர் ஒருவர். 80களில் அவரது பாடலுக்கு உருகியவர்கள் இதை அப்படியே ஏற்கக்கூடும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்து, 5 தேசிய விருதுகள், குடிமை மரியாதைகள், கணக்கில்லா ஃபிலிம் ஃபேர் விருதுகள், சர்வேதச விருதுகள் என வாங்கி குவித்து அனைத்து தமிழ் மக்களுக்க…

  14. பட மூலாதாரம்,ACTOR VIJAY கட்டுரை தகவல் எழுதியவர்,பொன்மனச்செல்வன் பதவி,பிபிசி தமிழுக்காக 31 மே 2023 நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் இப்போது, அப்போது எனும் பேச்சுகள் கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் உட்கட்டமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், அவற்றின் செயல்பாடுகள் தற்போது வெளிப்படையாக நடக்கின்றன. விஜய் உடனான சந்திப்புகள், தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தல், அன்னதானம் வழங்குதல் என அடிக்கடி செய்திகளில் இடம்பிடிக்கும் நடவடிக்கைகளும் வாடிக்கையாகி இருக்கின்றன. இதனால், வழக்கம் போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் அரசியலுக்கு வருவ…

  15. கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது adminMay 28, 2023 இந்த ஆண்டு நடைபெற்ற International Indian Film Academy Awards விருது விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட்டது. விக்ரம் படத்தின் காட்சிகளை திரையிட்டு நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பொலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தொகுத்து வழங்கினார். களத்தூர் கண்ணம்மாவில் இருந்து விக்ரம் வரை ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களையும் தரமான படங்களையும் கொடுத்து தமிழ் சினிமாவையும் இந்திய சினிமாவையும் உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு கொண்டு சென்ற உலகநாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருதினை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்…

  16. பட மூலாதாரம்,S KUMARESAN 26 மே 2023, 05:32 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் குடும்பப் பின்னணியில்லை, திரையுலகில் லாபி செய்வதற்கு வலுவான துணையில்லை, கதாநாயகியும் இல்லை. ஆனாலும் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து ஒரு நடிகை 1000 திரைப்படங்களைக் கடந்தார். 50 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்தார் என்றால் அது மனோரமா மட்டுமே. இன்று அவருடைய 86வது பிறந்த தினம். தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் 1937ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி பிறந்தவர் நடிகை மனோரமா. அவரது இயற்பெயர் கோபிசாந்தா. அவருடைய குடும்பம் மன்னார்குடியில் இருந்து காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தது…

  17. நான் திரைத்துறையை சாராமல் வெளியே இருந்து திரைக்கதைக்கு தமிழில் உள்ள இடமென்ன என்று பார்க்கையில் பெரும்பாலான படங்கள் தோல்வியடையவோ பார்வையாளர்களின் மனதைத் தொடாமல் போக காரணம் திரைக்கதையில் உள்ள அடிப்படையான பிழையே என்று தோன்றுகிறது. இதையே வேறு சில நண்பர்களும் கூறி இருக்கிறார்கள். ஆனால் நானும் வெகு சிலருமே இப்படி நம்புகிறோம் என நினைக்கிறேன். ஏனென்றால் வெகுஜன ஊடகங்களில் பலரும் அப்படி நினைப்பதில்லை. அண்மையில் ராஜூ முருகனின் “லாலாகுண்டா பொம்மைகள்” பார்த்தேன். அது தழுவி உருவாக்கப்பட்ட கதைதான் என்றாலும், தேய்வழக்கான கதையே என்றாலும் அதில் ஒரு நேர்த்தி இருந்தது - கதைக்குள் ஒரு வளர்ச்சி இருந்தது, பாத்திரங்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட இயல்பு, உடல்மொழி, ஒரு துவக்கம் முடிவு இருந்தது, கதை…

  18. யாதும் ஊரே யாவரும் கேளிர்: திரை விமர்சனம். இலங்கைத் தமிழரான புனிதன் (விஜய் சேதுபதி), லண்டனில் நடக்கும் இசைப் போட்டியில் பங்கேற்கும் முயற்சியில் இருக்கிறார். கொடைக்கானலில் இருக்கும் தேவாலயத்துக்கு வரும் அவர், தன் இசையால் அங்கிருப்பவர்களைக் கவர்கிறார். அங்குள்ள இசைக்குழுவைச் சேர்ந்த மெடில்டா, புனிதனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். இதற்கிடையே கேரட் தோட்டத்தில் வேலைபார்க்கும் இலங்கை அகதியான கனகவள்ளி (கனிகா)யின் தம்பி கிருபாநிதி என்று தன்னைச் சொல்லிக் கொண்டு அவளைத் தேடுகிறான். அந்தப் பகுதி போலீஸ் அதிகாரி (மகிழ் திருமேனி) தன் தந்தையைக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்ட கிருபாநிதியைத் தேடிப் பிடித்து கொல்ல முயல்கிறார். புனிதன் யார்? அவனுக்கும் கிருபாநிதிக்கும் என்ன தொடர்பு? லண்டன்…

  19. படக்குறிப்பு, சரத்பாபு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் கடந்த 50 வருடங்களாக நடித்து வந்த மூத்த நடிகர் சரத் பாபு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்பட உலகில் அவர் 200க்கும் மேற்பட்ட படங்களை நடித்துள்ளார். ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த பல வாரங்களாக சரத் பாபு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் முழுவதும் செப்சிஸ் மற்றும் பல உறுப்புகள் செயலிழந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்சிஸ் என்பது நோயாளியின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் உடல் சேதமடையும் போது பாக்டீரியா அல்லது வைரஸ் த…

  20. விமர்சனம்: பிச்சைக்காரன் 2 KaviMay 20, 2023 16:18PM ஷேர் செய்ய : பேமிலி ஆடியன்ஸை திருப்திப்படுத்துமா? குறிப்பிட்ட சில பெயர்களை, உச்சரிப்பினை டைட்டிலாக வைக்கத் தயங்கும் வழக்கம் இன்றும் திரைப்பட உலகில் நிலவுகிறது. அப்படியிருக்க சைத்தான், எமன், பிச்சைக்காரன் என்பது போன்ற டைட்டில்களை தொடர்ந்து தந்து வருபவர் விஜய் ஆண்டனி. சசி இயக்கத்தில் அவர் நடித்த ‘பிச்சைக்காரன்’ படமும் அவ்வகையில் உருவானதே! சென்டிமெண்டும் ஆக்‌ஷனும் கனகச்சிதமான கலவையில் அமைந்த அப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ‘டப்’ செய்யப்பட்டு பெரிய வெற்றியைப் பெற்றது. அது போன்றதொரு வெற்றியை மீண்டும் சுவைக்க வேண்டுமென்ற ஆசையில், ‘பிச்சைக்காரன் 2’ என்ற டைட்டிலை வைத்துக்கொண்டு விஜய…

  21. உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியாகி இன்று 50 ஆண்டுகள் முடிந்து 51 -ஆவது ஆண்டு தொடங்குகிறது. அரை நூற்றாண்டு காலம். வாகனத்தில் செல்லும்போது வேகமாக நம்மைக் கடந்து செல்லும் காட்சிகளாய், காலப் பயணத்தில் இந்த 50 ஆண்டுகளில் நம்மைக் கடந்து சென்ற காட்சிகள்தான் எத்தனை? அமைதியாய், அதிர்ச்சியாய், ஆயாசமாய், அதிசயமாய், ஆரவாரமாய் கடந்துபோன நிகழ்வுகள்தான் எத்தனை, எத்தனை? காலங்கள் மாறலாம். காட்சிகள் மாறலாம். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வாலிபன் என்றுமே வாலிபன்தான். உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக 1970-ம் ஆண்டு கீழ்திசை நாடுகளுக்கு மக்கள் திலகம் பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூரில் அங்கு வசிக்கும் தமிழர்கள் அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தனர். திரைப்படத்தில் 'சிக…

  22. பட மூலாதாரம்,TWIITER/SUDIPTOSENTLM ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அடா சர்மா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியில் உருவாகி வெளியாகியிருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலர் வெளியானபோதே, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அரசுக்கு எதிரான வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் வகுப்புவாத திரைப்படம் போல் தெரிகிறது என தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அதேபோல், இந்தப் படத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலரில் பல்வேறு உ…

  23. இயக்குநரும் நடிகருமான மனோபாலா காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பாதிப்புக்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனோபாலா. 1982-ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகம் ஆனார். ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் திரைப்படம் அவரது இயக்கத்தில் வெளியானது. பெரிய வெற்றியைப் பெற்ற சதுரங்க வேட்டை திரைப்படத்தை மனோபாலா தயாரித்தார். குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மனோபாலா பங்கேற்றிருக்கிறார். அவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். …

  24. பட மூலாதாரம்,@ARRAHMAN 3 மணி நேரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் புனே இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே நிறுத்தப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஏப்ரல் 30-ம் தேதி புனேவின் ராஜ்பகதூர் மில்ஸ் எனும் இடத்தில் 'AR Rahman Concert for Feeding Smiles' இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ₹ 999 முதல் ₹ 50,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்றிருந்தனர். இரவு 7.30 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் தன் இசையமைப்பில் உருவாகி பெரும் வெற்றியடைந்த பாடல்களை பாடினார். இதனால், ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் பெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.