வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
புறக்கணிக்கப்பட்ட நாயகன் - செங்கதிர் யார் உதவியும் இன்றி, நாமே புதிதாக ஒரு விஷயத்தைக் கண்டுபிடிப்பது, அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும் ஒன்று. எத்தனையோ முறை பார்த்திருந்தும், நீண்ட நாள் போதிய கவனம் தராதிருந்து, மிகத் தாமதமாகத் தான் நாகேஷ் என்னும் கலைஞனைக் கண்டுணர்ந்தேன். பாடல்களுக்காக “திருவிளையாடல்” படத்தைத் திரும்ப பார்த்த போது, 20 நிமிடங்களுக்குள் “தருமி”பாத்திரத்தில் நாகேஷின் அபாரமான நடிப்பே எனது மறு கண்டுபிடிப்புக்குக் காரணம். இத்தனை வருடங்கள் கழித்தும், அப்படத்தில் நாகேஷின் நடிப்பும், பாடல்களும் மட்டுமே இன்னும் பழைய தாகிப் போகாமல் புத்துணர்ச்சியுடன் உயிர்ப் போடு இருக்கிறது. படத்தின் மீதி பகுதிகளை காலத்தின் ஈவிரக்கமற்ற வாய் ஜீரணித்து விட்டது. தாராபுரத்தில் கன…
-
- 0 replies
- 536 views
-
-
தமிழ் திரையிசை வானில் துருவநட்சத்திரங்களாக வலம்வரும் இசைஞானி இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இணைந்து பாடல் ஒன்றை உருவாக்க இருக்கின்றனர். இந்தப் பாடலானது படத்திற்காக இல்லை, இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக. இந்தத் தகவலை தென்னிந்திய சினிமா வர்த்தக சபையின் தலைவரான சி கல்யாண் தெரிவித்துள்ளார்.இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக இப்பாடல் இடம்பெற இருக்கிறதாம். இதனை இசைஞானி இளையராஜாவும், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்து இசையமைத்து உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என அவர்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளனர் விழா அமைப்பாளர்கள். See more at: http://vuin.com/news/tamil/ilaiyaraaja-and-ar-rahman-joins-for-a-special-single
-
- 0 replies
- 356 views
-
-
பாலிவுட்டில் விரைவில் ரிலீசாகவிருக்கும் 'ராமய்யா வஸ்தாவய்யா' ஹிந்திப்படத்தை இயக்கியிருப்வர் பிரபுதேவ. இது தெரிந்த செய்திதான்! ஆனால் தெரியாத செய்தி.. இந்தபடத்தின் படப்பிடிப்பில் நடனக்காட்சி படமாக்கப்பட்டபோது பிரபுதேவாவுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் ஏற்பட்ட லடாய்! சில நடன அசைவுகள் ஸ்ருதிஹாசனுக்கு வராத நிலையில் பிரபுதேவ கடுமயான வார்த்தைகளை பிரயோகித்ததாகவும், நீங்கள் சொல்லித் தந்தது நடன அசைவுகளே அல்ல என்று ஸ்ருதிஹாசன் சொன்னதாகவும் பரபரத்துக் கிடந்தது! தற்போது ஸ்ருதி மீதான இந்தக் கோபத்தை வெளிகாட்ட ஸ்ருதிஹாசன் போலவே தோற்றம் கொணட் ஒரு மாடலை அறிமுகப்படுத்த முடிவு செய்து ஒப்பந்தமும் செய்து விட்டாராம் பிரபுதேவா! See more at: http://vuin.com/news/tamil/prabhudeva-introducing-shruti-haas…
-
- 0 replies
- 509 views
-
-
கவிஞர் வாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டதட்ட நாற்பது நாட்களாகிவிட்டது. இதில் சுமார் முப்பது நாட்களுக்கு மேலாக அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். கடந்த ஜுன் 7 ந் தேதி குமுதம் இதழில் வாலி எழுதி வெளிவந்த 'அழகிய சிங்கர்' இலக்கிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் அவர். சுமார் ஐந்து மணி நேரம் அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து அமர்ந்திருந்தார். மறுநாளே டைரக்டர் வசந்த பாலனின் 'தெருக்கூத்து' படத்திற்காக அவர் பணியாற்றும்படி ஆனது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கூடத்திற்கு வரவழைக்கப்பட்ட அவர் சுமார் ஏழு மணி நேரம் அங்கு அமர்ந்து படம் குறித்தும், எடுக்கப்பட்ட விதம் குறித்தும் பேசியபடியே பாடல் ஒன்றை எழுதிக் கொடுத்தாராம். அன்றிரவே அவருக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது…
-
- 3 replies
- 525 views
-
-
புலம்பெயர் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்: துப்பாக்கியும் கணையாழியும் கருணா வின்சென்ற் அறுபதுகளின் பிற்பகுதி. இலங்கையின் கரையோரக் கிராமம் ஒன்றில் ‘ஆழிக்கரையின் அன்புக் காணிக்கை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. திரைப்படத்தில் அனாதை இளைஞன் சங்கராகவும், சி.ஐ.டி. சிவராமாகவும் எம்.எல். ஜெயகாந்த் நடித்துக்கொண்டிருக்கிறார். கிராமத்தை ஆட்டிப்படைக்கும் பணக்காரர் ராஜப்பன் இரகசியமாகக் கடத்தல் தொழிலும் செய்கிறான். ராஜப்பனால் கொல்லப்பட்ட சங்கர், சிவராமாகத் திரும்பி வந்து கிராமத்தையும் காதலி மஞ்சுளாவையும் மீட்கிறான். இந்தத் திரைப்படத்துக்கு அப்போது தோன்றியிருந்த ‘இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின்’ உதவி கிடைக்கவில்லை. பத்து ஆண்டுகளாகத் தயாரிப…
-
- 0 replies
- 590 views
-
-
Nikesha Patel (மேலும் படங்களுக்கு படத்தை அல்லது பெயரை அழுத்தவும் ) Sanya Anaika
-
- 4 replies
- 718 views
-
-
மறைந்த நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த்பாபுவிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி எம்.பி.சாந்தி, குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை குடும்பநல கோர்ட்டில் எம்.பி.சாந்தி (வயது 50) தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: நான் ஈக்காட்டுத்தாங்கல் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் வசிக்கிறேன். எனது கணவர் ஜெரால்ட் ஆனந்தபாபு, நடிகர் பீட்டர் நாகேஷின் மகன். எங்களுக்கு 8.12.85 அன்று கிறிஸ்துவ முறைப்படி விஜயசேஷ மகாலில் திருமணம் நடந்தது. எங்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். திருமணமாகி 3 மாதங்கள்தான் நான் சந்தோஷமாக இருந்தேன். கணவரின் உண்மையான செயல்பாடுகளை அறிந்த பிறகு எனது சந்தோஷம் பறிபோனது. என்னுடன் அவர் இதயப்பூர்வமாக வாழ்ந்ததில்லை. ஆனந்த்பாபுவி…
-
- 0 replies
- 2.6k views
-
-
சில தினங்களுக்கு முன் “தெலுங்கு திரையுலகம்தான் என் வீடு!” என்று பேசிய ‘பாலிவுட் இயக்குனர்’ பிரபுதேவா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழ்த் திரையுலகில் நடனம் ஆடத் தெரிந்த நடிகர்கள் யார் யார் எனக் கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். உங்கள் பார்வையில் சிறப்பாக நடனமாடும் நடிகர்கள் யார் யார் ? என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், “சிரஞ்சீவி, ஹிரித்திக், ஷாகித், ரன்பீர், ராம் சரண், அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி. நடிகைகளில் மாதுரி தீட்சித், ஸ்ரீதேவி, பிரியங்கா சோப்ரா, சோனாக்ஷி சின்ஹா” என பதிலளித்துள்ளார். See more at: http://vuin.com/news/tamil/vijay-skipped-by-prabhudeva
-
- 0 replies
- 425 views
-
-
பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயனின் பாடல் (வீடியோ இணைப்பு) [ Monday, 15 July 2013, 06:02.55 AM GMT +05:30 ] வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடியுள்ள பாடல் யூடியூப்பில் செம ஹிட் அடித்துள்ளது. பெண்கள், குழந்தைகள், இதயநோய் உள்ளவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க என்று எச்சரிக்கையோடு பின்னணி பாட ஆரம்பித்துள்ளார் நடிகரும், புதிய பாடகருமான சிவகார்த்திக்கேயன். "ஊரைக் காக்க உண்டான சங்கம்... உயிரைக் கொடுக்க உருவான சங்கம் இல்லை...இது இல்லை.... நாங்க எல்லோரும் விளையாட்டுப் பிள்ளை"..... இதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக சிவகார்த்திக்கேயன் பாடியுள்ள பாடல். யூடியூப்பில் இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.…
-
- 1 reply
- 784 views
-
-
கதாபாத்திரமாகவே மாறிவிடும் நடிகர்களில் நந்தா ஒரு முதல்தர நடிகர். கோவை மாவட்டத்தில் உள்ள செண்டரம்பாளையம் என்ற ஊரைச்சேர்ந்த பச்சைத் தமிழர். புன்னகைப்பூவே' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆன நந்தா, மௌனம் பேசியதே, கோடம்பாக்கம், உற்சாகம், ஈரம், ஆனந்தபுரத்து வீடு, வேலூர் மாவட்டம், வந்தான் வென்றான், திருப்பங்கள் என தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். எத்தனை படங்களில் நடித்தாலும் ஈழத்துயரத்தை நேரடியகப்பேசிய ஆணிவேர்’ என்ற படத்தில் நடித்ததற்காக மிகவும் பெருமை கொள்பவர் நந்தார். அந்தப்படத்தில் நடிப்பதற்காக கிளிநொச்சி சென்று வந்த ஒரே தமிழநாயகன் அவர்தான்! அந்தப் படத்தில் நடித்தது பற்றி கேட்டபோது “ ரொம்பவும் மனம் கஷ்டமாக இருந்தது, அந்தப்படம் வன்னி மற்றும் கிளிநொச்சியில் தான் படமாக்கப்ப…
-
- 0 replies
- 421 views
-
-
லிங்குசாமி மீது சீமான் புகார்.. சூர்யா டென்ஷன்! இயக்குனரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி மீது நடிகரும், இயக்குனருமான சீமான் இயக்குனர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார்… நடிகர் சூர்யா கடும் டென்ஷன் ஆனார். ஏன்..? இந்த கேள்விக்கு விடை தெரிவிதற்கு முன்பு ஒரு சின்ன பிளாஷ்பேக்… நடிகர் சூர்யா நடிக்க கவுதம்மேனன் இயக்கி வந்த ‘துருவ நட்சத்திரம்’ படம் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது. ‘துருவ நட்சத்திரம்’ பட கதையில் திருப்தி இல்லாததால் கதையை மாற்றச் சொல்லி சூர்யா கண்டீஷன் போட்டதால் படப்பிடிப்பு நின்று போனது. அந்த சூழலில், ‘திருப்பதி பிரதர்ஸ்’ சார்பில் ஒரு கதை சொல்லி சூர்யாவிடம் ஓகே வாங்கியிருந்தார் இயக்குனர் லிங்குசாமி. லிங்கு சொன்ன கதை பிடித்திர…
-
- 0 replies
- 737 views
-
-
இலங்கையில் இனப்பிரச்சினை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட 'பியம்பனா மாலுவோ' (பறக்கும் மீன்கள்) என்ற திரைப்படத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் இருப்பதனால் அத்திரைப்பிடத்திற்கு தடைவிதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த திரைப்படத்தை தயாரித்தவருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை சஞ்ஜீவ புஷ்பகுமாரவே தயாரித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்படவிருந்த நிலையிலேயே தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படமானது பொதுமக்களுக்கு காண்பிப்பதற்கு உ…
-
- 1 reply
- 427 views
-
-
கரப்பான்பூச்சியைப் பார்த்தால் ஓவென்று அலறிக் கொண்டு ஓடும் அனுஷ்கா. சென்னை: அனுஷ்காவுக்கு கரப்பான்பூச்சி என்றாலே அலர்ஜியாம். படங்களில் ஹீரோயின் கரப்பான்பூச்சியைப் பார்த்து பயப்படுவதும், நம் ஹீரோக்கள் உடனே அதை வீரத்துடன் பிடித்து தூக்கி வீசுவதும் சாதாரணம். படத்தை பார்க்கும் ரசிகர்கள் என்னடா சின்ன கரப்பான்பூச்சிக்கு இவ்வளவு பில்டப்ஸா என்று நினைப்பார்கள். அது படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் நடக்கிறது. அப்படி கரப்பான்பூச்சியை பார்த்தால் பயப்படும் நாயகி வேறு யாருமல்ல நம்ம அனுஷ்கா தான். கேரவனில் கரப்பான்பூச்சியை பார்த்துவிட்டால் அம்மணி அலறியடித்துக் கொண்டு ஓடுவாராம். என்ன அனுஷ்கா வாள் சண்டை கற்றுக் கொள்கிறீர்கள். ஆக்ஷன் காட்சிகளில் துணிச்சலுடன் நடிக்கிறீர்கள். இப்படி …
-
- 5 replies
- 697 views
-
-
நயன்தாரா நடிகையாக தொடர் வெற்றி, பிரபுதேவா இயக்குனராக மாபெரும் வெற்றி என புகழின் உச்சத்திலிருந்த (முன்னாள்)ஜோடியின் காதல் டூ கல்யாண ஏற்பாடு வரை அனைவரும் அறிந்ததே. திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் இருவரின் காதல் விவகாரம் பரபரப்பாவதும் அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டாலோ, திருமணம் நடந்துவிட்டாலோ அடங்கிவிடுவதும் சகஜம். ஆனால் நயன்தாரா-பிரபுதேவா காதல் விவகாரம் ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகிலும் இன்று வரை பரபரப்பாகவே இருந்துவருகிறது. பிரபுதேவா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “ என் வாழ்வில் இதுவரை நடந்தெல்லாம் விதியின் வசத்தால் நடந்தது. மனிதனுக்கென விதியொன்றை எழுதி அதன்படி மனிதனை ஆட்டிவைக்கிறார் கடவுள். என் விதிப்படி எல்லாம் நடந்துவிட்டது. இப்போது நன் சந்தோஷமாக இரு…
-
- 8 replies
- 4.1k views
-
-
மல்டி ஸ்டாரர் படங்களில் ஈகோபார்க்காமல் சக ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பதில் ஆர்யா ஒரு கில்லாடி! அவன் இவன் படத்தில் தனது உயிர் நண்பன் விஷாலுடன் இணைந்து அவன் இவன் படத்தில் நடித்தார். தற்போது தல அஜித்துடன் இணைந்து விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடித்திருக்கிறார். See more at: http://vuin.com/news/tamil/vijay-and-arya-team-up-again
-
- 0 replies
- 399 views
-
-
கோலிவுட்டின் பிரபல இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் ரகசியத்திருமணம் செய்துள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளன. பாஞ்சாலங் குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துகள் போன்ற பல பிரபல படங்களின் இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானின் திருமணம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே வதந்திகள் கிளம்பின. ஏற்கனவே ஈழத்தைச் சேர்ந்த விதவைப் பெண் போராளி ஒருவரை திருமணம் செய்யப்போவதாகவும் கூறப்பட்டது ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதத்தில் அமைந்துள்ளது தற்போதைய தகவல். அதாவது முன்னாள் அமைச்சர், முன்னாள் சபாநாயகர், சிறந்த தமிழறிஞர், பேச்சாளர் என்று மக்களால் பாராட்டப்பட்ட அமரர் காளிமுத்துவின் மகள் கயல்விழியைதான…
-
- 6 replies
- 1.1k views
-
-
விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் டிரைலர் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. கமலின் விஸ்வரூபம் 2 படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இதன் முதல் பகுதி கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு வெளியிட்டனர். See more at: http://vuin.com/news/tamil/under-water-action-sequence-in-viswaroopam-2
-
- 0 replies
- 338 views
-
-
கடல் முதல் அன்னக்கொடி வரை: தலைகளின் தோல்வி சகோ 2013ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு முடிந்துவிட்டது. இந்த ஆறு மாதங்களில் 75 படங்கள் வெளியாகிவிட்டன. இவற்றுள் பல சிக்கல்களைக் கடந்து வெளியீட்டுத் தேதி தள்ளிப்போடப்பட்டு, சில இடங்களில் படம் திரையிட்டுப் பாதியில் நிறுத்தப்பட்டு வெளியான விஸ்வரூபம் "பிளாக்பஸ்டர்" என்று சொல்லப்படும் மாபெரும் வசூல் வெற்றியைப் பெற்றிருக்கிறது (இதில் நடித்ததோடு தயாரித்து இயக்கியவரும் கமல்ஹாசன்தான்). விஸ்வரூபத்தையும் சேர்த்து நான்கே படங்களை மட்டுமே இயக்கியவர் என்றாலும் கமல்ஹாசன் ஒரு சிறந்த இயக்குனராகவும் புகழப்படுபவர். இவரது பல படங்களில் திரைமறைவு இயக்குநராக இவர்தான் செயல்படுவார் என்ற நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் இருந்துவருவதுண்டு. அந்த வகையில…
-
- 0 replies
- 507 views
-
-
எதிர் நீச்சல் படத்தின் அதிரடி வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் பரபரப்பாக பல புதிய படங்களில் நடித்து வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைத் தொடர்ந்து ‘மான் கராத்தே’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். See more at: http://vuin.com/news/tamil/one-more-hot-pair-in-kollywood
-
- 1 reply
- 478 views
-
-
வித்யா பாலன் நடிப்பில், ஹிந்தியில் உருவாகி பாலிவுட் பாக்ஸ் ஆபீஸையே கலக்கிய படம் கஹானி. இந்தப் படம் தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி வருகிறது. இதில் ‘அனாமிகா’ என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஹிந்தியில் வித்ய பாலன் நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க, சேகர் கம்யூலா இயக்கி வருகிறார். படமும் வேகமாக வளர்ந்து வருகிறது. ஹிந்தி கஹானியில் தனது கணவரைத் தேடி அலையும் வித்யாபாலன் எட்டுமாத கர்ப்பிணியாக தோற்றமளிப்பார். See more at: http://vuin.com/news/tamil/nayantara-refused-to-act-as-a-pregnant-lady
-
- 1 reply
- 923 views
-
-
செல்வராகவன் இயக்கிய முதல் படத்தில் இருந்தே தனக்கென்று தனிப்பாணியைப் பின்பற்றி படம் எடுத்து வருகிறார். மயக்கம் என்ன படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படம் இரண்டாம் உலகம். இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், அனுஷ்கா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் இப்படம் பற்றிய டாப் சீக்ரெட் தகவல் ஒன்று தற்போது வெளியே கசிந்துள்ளது. See more at: http://www.vuin.com/news/tamil/arya-landed-in-a-new-planet
-
- 0 replies
- 300 views
-
-
துப்பாக்கி படம் 120 கோடி ரூபாய் வசூல் செய்து எந்திரனி 125 கோடி ரூபாய் வசூலை நெருங்கியது. அதற்கு அடுத்த நிலையில் கமலின் விஸ்வரூபம் 100 கோடி ரூபாயை வசூல் செய்திருகிறது என்றாலும் துப்பாக்கி’யின் அசுர வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பில் இருக்கும் படம் விஜய்யின் ‘தலைவா’. See more at: http://vuin.com/news/tamil/vijay-to-become-the-next-superstar
-
- 8 replies
- 1.1k views
-
-
துப்பாக்கி படத்தைத் தொடர்ந்து ‘தலைவா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் இளையதளபதி விஜய். இந்தப் படம், மும்பையில் வாழ்ந்து மறைந்த வரதராஜ முதலியார் வாழ்க்கையை புதிய கோணத்தில் சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது. இதே வரதராஜ முதலியார் கதையை மணிரத்னம் நாயகனாக எடுத்தார். அதில் கமல் தனது வாழ்நாள் கதாபாத்திரத்தை வாழ்ந்திருந்தார். ஆனால் விஜய்க்கு இத்தனை இளம் வயதில் இதுபோன்ற ஒரு கதாபாத்திரம் ஒகேதானா என்று விஜயின் அப்பா எஸ்.ஏ.ஏசியிடம் கேட்டபோது “ விஜய் நாற்பது வயதைக் கடந்துவிட்டார். இந்தப் படம் பண்ண இதுதான் சரியான தருணம். படம் முடிந்து டபுள் பாசிட்டிவ் எனக்குப் போட்டுக்காட்டினார்கள். எனக்கே விஜய் மீது கூடுதல் மரியாதை வந்துவிட்டது. See more at: http://vuin.com/news/tamil/who-is-t…
-
- 0 replies
- 610 views
-
-
தடைகள் பல கடந்து வெளியான விஸ்வரூபம் தமிழ்நாடு, ஆந்திரா, வட இந்தியா ஆகிய மூன்று ஃபாக்ஸ் ஆபீஸ்களிலும் சேர்த்து 100 கோடி ரூபாய் வசூல் செய்தது! விஸ்வரூபம் இந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, கமல் இயக்கி நடித்து வரும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் எதிர்பார்ப்பு வானளாவ உயர்ந்து நிற்கிறது. காரணம் சமீபத்தில் வெளியான ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படம் எப்போது வெளிவரும் என கமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ‘விஸ்வரூபம் 2’ படத்தின் தற்போதைய நிலை என்ன? ‘விஸ்வரூபம் ’ படத்தின் திரைக்கதை எழுதும்போதே இரண்டு பாகங்களாக எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்ததால், முதல் பாகத்தில் நீக்கப்பட்ட காட்சிகளோடு புதிதாக பல காட்சிகளையும் சேர்த்து தயாராகி வருகிறது இந்த இரண்…
-
- 5 replies
- 1k views
-
-
மணிமேகலையின் தேவதைகள் வாசிக்கவும் எழுதவும் பேசவும் தெரிந்த, மற்றும் கணணி வசதிகளும் கொண்ட பெரும்பான்மையானவர்களுக்கு தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைப்பதற்கும் அனைவருடனும் பகிர்வதற்கும் பல்வேறுவகையான சாதனங்களும் சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் இன்றுள்ளன. ஆகவே அளவுக்கதிகமான கருத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன. இதைவிட அதிகமாக விமர்சனங்கள் மலிந்து போயிருக்கின்ற சூழலாக இருக்கின்றது இன்று. இருப்பினும் இது ஒரு வகையில் ஆரோக்கியமானதுதான். ஆனால் இந்த கருத்துக்கள விமர்சனங்கள் எந்தளவு பொறுப்புணர்வுடன் முன்வைக்கப்படுகின்றன என்பதில் கேள்வி உள்ளது. பொதுவாக பெரும்பாலான விமர்சனங்கள் எனப்படுபவை தமது நண்பர்களின் அல்லது ஓரே கருத்துடையவர்களின் படைப்புகளை புகழ்ந்தும…
-
- 9 replies
- 1.5k views
-