வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
[size=5]தமிழ் சினிமாவின் கற்பனை வறட்சியும் அக்கறைப் பஞ்சமும்[/size] அரவிந்த கிருஷ்ணா ஏன் தமிழ் சினிமாவில் மாற்று முயற்சிகள் வருவதில்லை? வந்தாலும் அவை ஏன் நேர்த்தியான ஆக்கங்களாக இருப்பதில்லை? அப்படியே இருந்தாலும் அவை ஏன் ஓடுவதில்லை? த்ரீ இடியட்ஸ், பீப்ளி லைவ், மை நேம் இஸ் கான் முதலான இந்திப் படங்கள் சமூக அக்கறையுடன் சில முக்கியமான பிரச்சினைகளைத் தொட்டுக் காட்டுகின்றன. பா, பிளாக், பர்ஃபி, தாரே ஜமீன் பர் முதலான சில படங்கள் தனி மனிதர்களின் அதிகம் கவனிக்கப்படாத சில உடல் நல மன நலப் பிரச்சினைகளைப் பற்றி அக்கறையுடன் பேசுகின்றன. இவை வணிக ரீதியாகவும் வெற்றி பெறுகின்றன. மேலே சொன்ன அனைத்துப் படங்களிலும் ஒரு முன்னணி இயக்குநர், நட்சத்திர ஹீரோ, நட்சத்திர ஹீரோயின் ஆகியோர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழக இயக்குனர்களுக்கு செருப்படி நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக. நான் பிளாக் ஆரம்பித்த போது, என்னுடய தளத்தில் யாருடைய படைப்பினையும் களவாண்டு, பசை செய்து வெளியிட விரும்பவில்லை. அதே போல சினிமா சம்பந்தமான விசயங்களையும் வெளியிட விருப்பமில்லை. ஹிட்டுக்காக, பிட்டு படம் ஓட்டவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் இந்த நோக்கத்தினை, சற்று தளர்த்தி சினிமா சம்பந்தமான, ஆனந்த விகடனில் பிரசுகமான ஒரு விசயத்தினை எனது பிளாக்கில் வெளியிட முடிவெடுத்தேன். அது..... 'தி சைக்கிளிஸ்ட்' இயக்குனர் மஹ்சன் மக்மல்பஃப் - ஒளிப்பதிவாளர் செழியன் வாழ்க்கையில் ஒரு முறையாவது சந்தித்துவிட வேண்டும் என்று விரும்புபவர்களின் மனப்பட்டியல் நம் எல்லோரிடமும் இருக்கிறது. அதில் …
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
பூ ஒன்று புயலானது என்கிற படத்தின் மூலம்தான் நடிகை விஜயசாந்தி கொஞ்சம் அதிரடி நாயகியாக மாறினார். அது தெலுங்கு பட ரசிகர்களுக்குப் பிடித்து போகவே, வைஜயந்தி ஐ பி எஸ், லாக்கப் என்று தொடர்ந்து அதிரடிப் படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற இடத்தைப் பிடித்தார். அந்த சமயத்தில் நடிகை விஜயசாந்தியின் தெலுகு படங்களை தமிழில் டப் செய்தாலும் அந்த படம் சூப்பர் ஹிட்தான். இதே பார்முலாவை இப்போது, நடிகை அனுஷ்காவுக்காக கையில் எடுத்துள்ளனர் தெலுகு திரைப்படத்துறையினர். அனுஷ்காவும் பல வருடங்களாக உள்ள தெலுங்கு லேடி சூப்பர் ஸ்டார் இடம் காலியாக உள்ளதை ராணி ருத்ரமாதேவி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மூலம் மிக நன்றாகவே புரிந்து கொண்டுவிட்டார். டெல்லி, சிறீவைகுண்டம் பா…
-
- 0 replies
- 549 views
-
-
நம்ம சினிமாக்கள் என்னதான் ஒரு பக்கம் டெவலப் ஆகிட்டே போனாலும் சில நேரங்கள்ல 'சி’ சென்டர் ஆடியன்ஸே ஈஸியாக் கண்டுபிடிச்சுக் கலாய்க்கிற மாதிரியான காட்சிகளை, இன்னமும் நம்ம டைரக்டர்ஸ் திரைக்கதைகளில் கோட்டை விட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க. இதெல்லாம் பாத்தா கண்ணு வேர்க்குது. சில சாம்பிள்ஸ் நீங்களே பாருங்க. உங்களுக்கும் கண்ணு வேர்க்கும். 'எந்திரன்’ படத்துல ஒரு காட்சி. எலெக்ட்ரிக் ட்ரெயின்ல ஐஸ்வர்யாராயைச் சீண்டுகிற ரவுடிகளை அடிச்சுத் துவம்சம் பண்ற நம்ம 'ரோபோ’ ரஜினி பேட்டரி சார்ஜ் இல்லாம கீழே விழுந்துடுறாரு. அங்கே ஒரு எலக்ட்ரிக் போஸ்ட்டுக்குள்ளே கையை விடுறாரு. ('படையப்பா’ படத்தில் பாம்புப் புற்றுக்குள்ளேயே கையை விட்டவராச்சே) அப்படியே அதில் கிடக்கிற வயரை எடுத்து ப்ளக் பண்ணி சார்ஜ…
-
- 0 replies
- 569 views
-
-
மரியான்’ படத்தில் ‘மரி’யைத் தூக்கி விட்டால் என்ன ஆகும்..? ‘யான்’தானே..?அதேதான் ‘யான்’ படக் கதையும். முன்னதில் காதலிக்காக வெளிநாடு போய் பயங்கரவாதிகளிடம் சிக்கிக் கொள்வார் தனுஷ். இதில் காதலுக்காக வெளிநாடுபோய், போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கி உயிருக்குப் போராடுகிறார் ஜீவா. ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் தனக்கொரு ‘கோ’ தந்த உற்சாகத்தில் ரவி கே.சந்திரனுக்கும் “எடுத்துக்கங்’கோ…” என்று டேட்ஸ் கொடுத்தார் போலிருக்கிறது ஜீவா. ஒரு ஹீரோவாக அவரும் சரி, அவரை ‘ஹேன்ட்ஸம்’ யூத்தாகக் காட்டியிருப்பதிலும் சரி, இரண்டு பேரும் ஜெயித்திருக்கிறார்கள். ஆனால், ஸ்கிரிப்ட்…!!!!???? (இந்த விமர்சனம் முழுக்க இப்படி ஏகப்பட்ட ஆச்சரியக் குறிகளையும், கேள்விக் குறிகளையும் எதிர்கொள்ள வேண்டும் நீங்கள்…) இந்…
-
- 0 replies
- 1.7k views
-
-
தெலுங்கு படவுலகில் தமிழ் கலைஞர்களுக்கு தனிமரியாதை கிடைத்து வரும் காலம் இது. தமிழர்கள் என்றால் யோசிக்காமல் படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்து வருகிறார்கள் தெலுங்கு தயாரிப்பாளர்கள். சென்ற வருட தெலுங்குபட 'ஹிட்' லிஸ்ட் தமிழர்கள் மீதான மரியாதையை அதிகப்படுத்தியுள்ளது. சென்ற வருடம் வெளியான படங்களில் 'ஸ்டாலின்', 'பொம்மரிலு' படங்கள் மட்டுமே பெரிய அளவில் வெற்றி பெற்றன. இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர்கள் தமிழர்கள். ஸ்டாலினை ஏ.ஆர். முருகதாஸும், பொம்மரிலுவை தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரும் இயக்கியிருந்தனர். தவிர, தமிழ் படங்கள் தெலுங்கில் 'டப்' செய்யப்பட்டு அதிக வசூலை ஈட்டி வருகின்றன. இதனால் தமிழ் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர் தெலுங்கு நட்சத்திரங்கள். செல்வ…
-
- 0 replies
- 822 views
-
-
மாற்றமே மாறாதது என்ற மார்க்ஸின் புகழ்பெற்ற வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ... சிம்புவுக்கு நூறுசதம் பொருந்தும். கதாநாயகியை மாற்றுவது, ஒளிப்பதிவாளர்களை மாற்றுவது, சமயத்தில் தயாரிப்பாளர்களையே மாற்றுவது சிம்புவின் சினிமா கேரியரில் சகஜம். 'வல்லவன்' படத்திற்குப் பிறகு தருண்கோபியின் படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. இப்போது இதிலும் சிறிய மாற்றம். சிம்புவின் புதிய படத்தை ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்குகிறார். படத்திற்கு 'சிலம்பாட்டம்' என பெயர் வைத்திருக்கிறார்கள். சிம்புவின் புதிய படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரிப்பதாக இருந்தது. இப்போது இதுவும் மாறியிருக்கிறது. நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தருண்கோபியிடம் கதை கேட்டிருந்தார். அவர் இயக்கும் படத்தைதான் தயாரிப்…
-
- 0 replies
- 836 views
-
-
ரோஜாக் கூட்டம் பார்த்திபன் கனவு, உயிர், பம்பரக்கண்ணாலே உள்பட பல தமிழ்படங்களில் கதாநாய கனாக நடித்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் தொழில் அதிபர் சாரங்கபாணியின் மகள் வந்தனா என்பவருக்கும் வருகிற ஜுன் 18-ந்தேதி திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வந்தது. திருமண பத்திரிகை அச்சிடும் பணியÛயும் தொடங்கினர். திருமண பட்டாடைகள், நகை கள் போன்றவற்றை தேர்வு செய்யும் பணியும் துவங்கி யிருந்தது. இந்த நிலையில் வந்தனா அவரது தந்தை சாரங்கபாணி, அண்ணன் ஹர்ஷவர்த்தன் ஆகியோர் மீது ரூ18 கோடி கடன் மோசடி புகார் தொடர் பான திடுக்கிடும் தகவல் வெளியானது. மணமகள் வந்தனா உள்ளிட்டோர் மீது கனரா வங்கி சார்பில் புகார் செய் யப்பட்டுள்ளது. இதை சி.பி.ஐ. விசாரித்து வரு…
-
- 0 replies
- 1k views
-
-
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் கட்டுமானக் களம் அது. ஒரு அசம்பாவிதத்தால் பலர் வேலையை விட்டு போய்விட, புதிதாக ஆட்களைத் தேட வேண்டிய நெருக்கடி அதன் பொறுப்பாளர் கோனாருக்கு (ராஜ்கிரண்) ஏற்படுகிறது. இலங்கை அகதிகள் முகாமில் இருந்து ஆஸ்தி ரேலியா தப்பிச் செல்ல முனையும் ஈழத் தமிழர் கள் அவரது கண்ணில்படுகின்றனர். ஆஸ்தி ரேலியாவுக்குப் பத்திரமாக அனுப்பிவைப்பதாக உறுதியளித்து அவர்களை வைத்து வேலை யைத் தொடர்கிறார். பணியிடத்தில், இலங்கைத் தமிழ்ப் பெண்ணுக் கும் தமிழக கட்டுமானத் தொழிலாளிக்கும் காதல் ஏற்படுகிறது. தேர்தல் நெருங்குவதன் காரணமாக ஏற்படும் அரசியல் நெருக்கடிகளால் அகதிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. அவர்கள் என்ன ஆனார்கள், காதல் கைகூடியதா என்பதே சத்யசிவா இயக்கத்தில் வந்துள்ள…
-
- 0 replies
- 251 views
-
-
2015-ன் டாப் 10 ஹீரோக்கள்! ’ஹீரோ’ - இன்றும் பெரும்பாலான தமிழ் சினிமாக்களின் ‘ட்ரம்ப் கார்ட்’! படத்தின் கதை, களம் குறித்தெல்லாம் கண்டு கொள்ளாமல் ஹீரோ பெயருக்காகவே படம் பார்க்கப் படையெடுக்கும் பழக்கம் தமிழர்களிடம் இன்னும் உண்டு. அப்படி நம்பி வந்தவர்களை நம் ஹீரோக்கள் எந்தளவுக்கு குஷிப்படுத்தினார்கள்? அவர்களில் யார் டாப்-10. சின்னதாக அலசுவோமா! http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/56777-2015-top-10-heros-in-tamil.art
-
- 0 replies
- 554 views
-
-
ருவாண்டாவில் 1994 இல் இடம்பெற்ற இனப் பிரிவினையில் ஏறத்தாழ எட்டு லட்சம் பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் சொல்லியிருக்கிறது. அதுவும் ஹூட்டு இனத்தைச் சேர்ந்த தலைவரான Juvenal Habiyarimana கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 100 நாட்களில்! இது நாட்டின் மொத்த சனத்தொகையின் இருபது வீதமாம்! சிறுபான்மை இனமான டுட்சி இனத்தவரே பல நூற்றாண்டுகளாக, ருவாண்டாவின் அதிகாரவர்க்கமாக இருந்திருக்கிறார்கள். 1962 ஹுட்டு இனத்தவர் ஆட்சியைக் கைப்பற்ற, அகதிகளாக வெளியேறிய டுட்சி இனத்தவரிலிருந்து, 1990 இல் Rwandan Patriotic Front (RPF) என்ற போராளிகள் அமைப்பு உருவாக உள்நாட்டுச் சண்டை நடக்கிறது. 1993 இல் போர்நிறுத்தம் ஏற்படுகிறது. இந்தநிலையில் 1994 இல் Juvenal Ha…
-
- 0 replies
- 1.3k views
-
-
[size=2] சத்யராஜ் , மணிவண்ணன், சீமான், ரகு மணிவண்ணன், கேரளா புது வரவு மிருதுளா, கோமல் ஷர்மா, வர்ஷா ஆகியோர் நடிக்க மிகப்பிரம்மாண்டமாக தயாராகும் படம் 'அமைதிப்படை பார்ட் 2 ' -''நாகராஜ சோழன் எம் ஏ., எம் எல் ஏ''. [/size] [size=2] 1994 ல் வெளிவந்து அரசியல் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய படம் அமைதிப்படை. நடிகர் சத்யராஜின் நடிப்பு பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை கொண்டாடிய படம் அமைதிப்படை. [/size] [size=2] இயக்குனர் மணிவண்ணனைப் பார்க்கும் ரசிகர்களும் சரி, அபிமானிகளும் ''சார் அமைதிப்படை மாதிரி ஒரு படம் கொடுங்க'' என்று கேட்டதன் விளைவு.. இந்த அமைதிப்படை இரண்டாம் பாகம். [/size] [size=2] இந்தப் படத்துக்கு 'அமைதிப்படை பார்ட் 2 '- ''நாகராஜ…
-
- 0 replies
- 695 views
-
-
“வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன்” - சென்னைக்காக குரல் கொடுத்த பார்த்திபன் சென்னையில் கொரோனா பரவல் தீவிரமானதையடுத்து பலர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதைவைத்து மீம்ஸ்களும் வந்தன. இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் கவிதை வடிவில் சென்னை நகரின் மகிமையை விளக்கியும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியும் ஆடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது: “சென்னை தன்னை பற்றி என்னை விட்டு சொல்ல சொன்ன கவிதையிது. தடைகள் ஆயிரம் தகர்த்தவன். படைகள் ஆயிரம் பார்த்தவன். பஞ்சம் கண்டவன், பகையும் கண்டவன். பேரலையும் கண்டவன். பேரிடரையும் கண்டவன். பெயர் மாறி உருமாறி வலுவானவன். எது வந்த போதிலும் நிறம் மாறாதவன். வந்தவர் எத்தனை? போனவர் எத்தனை? கண்டது எத்தனை? கொண்டது எத…
-
- 0 replies
- 533 views
-
-
சமந்தாவுக்கு ஆகஸ்டு மாதம் திருமணம் நடிகை சமந்தா திருமணத்தை ஆகஸ்டு மாதத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்காக படங்களில் நடிப்பதை அவர் குறைப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து திருமணத்துக்கு தயாராகிறார்கள். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து விட்டனர். நாகசைதன்யாவின் தம்பியும் நடிகருமான அகில் ஆந்திராவில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் ஸ்ரேயா என்பவரை காதலிக்கிறார். இவர்கள் திருமணம் மே மாதம் நடக்க உள்ளது. இந்த திருமண…
-
- 0 replies
- 359 views
-
-
தியேட்டர்களில் வரவேற்பு இல்லை - 18 புதிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப் பட்டதையடுத்து கடந்த 10-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அதன் பிறகு சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’, ‘மரிஜுவானா’ உள்ளிட்ட 7 படங்கள் தியேட்டர்களில் வெளியிடப்பட்டன. ஆனால் இந்த 7 படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. கொரோனா அச்சம் காரணமாக தியேட்டர்களுக்கு செல்லவே ரசிகர்கள் பயப்படுகிறார்கள். இதனால் தியேட்டர்களில் கூட்டம் இல்லை. தீபாவளி பண்டிகையின் போது தமிழகம் முழுவதும் 700 தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டம் வராததால் 50 தியேட்டர்கள் மூடப்பட…
-
- 0 replies
- 293 views
-
-
ஈழத்தமிழர்களின் வாழ்வியலை வலிகளை அவர்கள் பட்ட.. பட்டுக்கொண்டிருக்கின்ற துன்பங்களைப் பலர் பல கோணங்களில் இன்று படமாக்கி வருகின்றனர். அந்தவகையில் தனது வித்தியாசமான கேமிரா கோணங்கள் மூலம் புகழ் பெற்ற பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் “இனம்” என்ற படம் மூலம் மீண்டும் இயக்குனராக களமிறங்கி இருக்கிறார். “அசோகா”, “உறுமி” போன்ற ஒருசில படங்களை ஏற்கனவே இயக்கிப் புகழ் பெற்ற இவர் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் “Ceylon” எனவும் தமிழில் “இனம்” எனவும் இப் படத்துக்கு பெயர் சூட்டியுள்ளார். துப்பாக்கி, தளபதி, ரோஜா, உயிரே, இராவணன் போன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர் அண்மையில் “இனம்” படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரை தனது ட்விட்டர் பக்க…
-
- 0 replies
- 679 views
-
-
யூடியூபை இன்னமும் கலக்கி வரும் ‘ஒய் திஸ் கொலவெறி’ வீடியோ: 12.5 கோடி பார்வையாளர்களை எட்டியது தனுஷ். - கோப்புப் படம். '3' திரைப்படத்தில் அனிருத் இசையில் தனுஷ் பாடி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன ஒய் திஸ் கொலவெறி பாடல் படம் வெளியாகி 6 ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்களின் மனங்களை விட்டு அகலாமல் நீங்கா இடம்பெற்று வருகிறது. படம் ரிலீஸ் ஆகி 6 ஆண்டுகள் ஆகியும் யூடியூபில் 12.5 கோடி பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்துள்ளது. ஒவ்வொருவரும் தங்களுக்கேயுரிய ஒய் திஸ் கொலவெறி பாடலை உருவாக்கி பதிவேற்றிய வைரல் பாடலாகும் இது. இன்று வரை 12.5 கோடி பார்வையாளர்களை ஈர்த்தாலும் இந்தப் பாடல் மீதா…
-
- 0 replies
- 246 views
-
-
டிசம்பர் 15 முதல் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா! சென்னை: எட்டாவது சர்வதேச திரைப்பட விழா, சென்னையில் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவை, செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தொடங்கி வைக்கிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ், பிலிம் சேம்பர், ஐநாக்ஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. துருக்கி, நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், கனடா உள்ளிட்ட 43 நாடுகளைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், தமிழில் நந்தலாலா, அங்காடித் தெரு உட்பட 12 திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. மாலை நேரங்களில் சம்பந்தப்பட்ட திரையரங்க வளாகங்களில் சினிமா குறித்த விவாதங்களும் நடைப…
-
- 0 replies
- 671 views
-
-
விஜய். டி.வி. சார்பில் முதன் முதலாக தமிழ்நாடு முழுக்க ரசிகர்களை நேரில் சந்தித்து வகக்குவேட்டை நடாத்தி சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. அஜித்குமார் சிறந்த நடிகராகவும், திரிஷா சிறந்த நடிகையாகவும் அறிவிக்கப்பட்டனர். டைரக்டர் தரணி திரிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதை வழங்கினார்.சிறந்த பின்னணி பாடகிக்கான விருது எஸ். ஜானகிக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருது எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கும் வழங்கப்பட்டது. சிறந்த பாடகருக்கான விருதை கமலஹாசன் மகள் ஸ்ருதி அக்ஷரா வழங்கினார். சிறந்த பாடகிக்கான விருதை மாணிக்கநாராயணன், ரோகிணி ஆகியோர் வழங்கினர். நாளைய சூப்பர் ஸ்டாருக்கான விருது விஜய்க்கு வழங…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://sinnakuddy.blogspot.com/2007/04/blog-post_12.html
-
- 0 replies
- 752 views
-
-
முதல் பார்வை: ஆண் தேவதை உதிரன் பெருநகர வாழ்க்கையில் கார்ப்பரேட் கலாச்சாரத்தில் சிக்கிய மனைவிக்கும், தேவைகளைச் சுருக்கிக்கொண்டு வாழ நினைக்கும் கணவனுக்கும் இடையே பிரச்சினை வெடித்தால் அதுவே 'ஆண் தேவதை'. மெடிக்கல் ரெப்பாக பணிபுரியும் இளங்கோ (சமுத்திரக்கனி) மாதாமாதம் இலக்கைத் தொட வேண்டி வேலையைத் துரத்திக் கொண்டே ஓடுகிறார். அவரது மனைவி ஜெஸ்ஸிகா (ரம்யா பாண்டியன்) நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை, பிள்ளைகளுக்கான நல்ல கல்வி ஆகியவற்றுக்காக ஐடி வேலையில் மிளிரத் துடிக்கிறார். இருவரும் பரபரப்பு மிகுந்த வேலையிலேயே கவனம் செலுத்துவதால் இவர்களின் இரட்டைக் குழந்தைகளானா ஆதிரா, அகர முதல்வனை யார் பார்த்துக்கொள்வது என்ற பிரச்சினை எழுகிறது. பிள்ளைகளின் நலனுக்காக வேலையை விட்ட…
-
- 0 replies
- 409 views
-
-
ரஜினிகாந்தின் திரைப்படங்கள் ஏழாவது மனிதன் படத்தை இயக்கிய கே.ஹரிஹரன் ரஜினிகாந்த் பற்றி கட்டுரைகள் எழுதினாலும் தொலைக்காட்சியில் பேசினாலும் ஒரு விஷயத்தை முக்கியமாக வலியுறுத்துகிறார்.ரஜினிகாந்த் திரைத்துறையில் வெற்றி பெற்றதற்கு பின்னால் இருக்கும் காரணம் அந்தக் காலகட்டம்தான் என்கிறார்.1975யில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் மிகச் சிறிய வேடத்தில் ரஜினிகாந்த் அறிமுகமாகிறார்.அந்தக் காலகட்டத்தில் லட்சியவாதத்தின் மீது இளைஞர்களுக்கு உருவான நம்பிக்கையின்மையும் விரக்தியுமே ரஜினிகாந்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்கிறார் ஹரிஹரன்.இதில் ஒரளவு உண்மை இருக்கிறது.என் தந்தை பழைய காங்கிரஸில் இருந்தார்.காமராஜரின் பக்தர்.எழுபதுகளில் காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ் பழைய காங்கிரஸ் என்று …
-
- 0 replies
- 4.6k views
-
-
அட்டகத்தி, மெட்ராஸ், காலா படங்களின் இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய சினிமாவுக்காக எந்த அளவுக்குப் பேசப்பட்டவரோ, அதே அளவுக்கு அவர் சினிமாவுக்கு வெளியில் பேசும் கருத்துகளுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் கவனிக்கப்படுபவர், விமர்சிக்கப்படுபவர். சென்னை வானம் என்ற பெயரில் அவர் நடத்தும் மூன்று நாள் கலை நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் பரபரப்பாக இருந்த பா. ரஞ்சித், அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாமென்று மறுத்துவிடுகிறார். பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசியதிலிருந்து: கே. இந்த வானம் கலைவிழா எதற்காக நடத்தப்படுகிறது, எதனை நோக்கமாகக் கொண்…
-
- 0 replies
- 567 views
-
-
மும்பை போர்ப்ஸ் இதழின் இந்திய பதிப்பில் இந்தியாவை சேர்ந்த 100 பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.இந்த பட்டியல் பிரபலங்களின் வருமானம் மற்றும் அவர்கள் எவ்வளவு பிரபலமாக உள்ளனர் ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு பட்டியலில் முதலிடத்தில் இருந்த சல்மான் கான் இந்த ஆண்டு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஷாருகான் முதல் இடத்தை பிடித்து உள்ளார்.கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த அமிதாப் பச்சன் இந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் உள்ளார்.டோணி கடந்த ஆண்டும் சரி இந்த ஆண்டும் சரி 4-வது இடத்தில் தான் உள்ளார். போர்ப்ஸ் பட்டியலில் ஆமீர் கான் 5-வது இடத்திலும், அக்ஷய் குமார் 6வது இடத்திலும், விராட் கோலிலி 7-வது இடத்திலு…
-
- 0 replies
- 364 views
-
-
’காட்ஃபாதரி’லிருந்து ’தேவர் மகன்’ மற்றும் ’நாயகன்’: கமல் எனும் மேதை – ஆர். அபிலாஷ் May 16, 2020 - ஆர்.அபிலாஷ் · சினிமா தமிழில் “காட்ஃபாதரின்” தாக்கத்தில் ஏகப்பட்ட படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் “தேவர் மகன்” மற்றும் “நாயகன்” நேரடியாகவே “காட்ஃபாதரை” நினைவுபடுத்துபவை; தமிழ் சினிமா வரலாற்றில் மைல்கல்களாக பாராட்டத்தக்கவை. இந்த இரு படங்களில் “தேவர் மகன்” மேலான கச்சிதமான திரைக்கதையை கொண்டது. ஒருவிதத்தில் “காட்ஃபாதரை” விட சிறந்தது “தேவர் மகன்” திரைக்கதை; ஒரு திரைக்கதையாளராக கமல் ஒரு மேதை. இதைப் பற்றி பேசுவதே இந்த கட்டுரையின் நோக்கம். “காட்ஃபாதருக்கும்” “தேவர் மகனுக்கும்” நாடகீய முரணும் (அமைதியான ஒருவன் தனக்குள் இருக்கும் வன்முறையாளனை எதிர்கொள்வது…
-
- 0 replies
- 555 views
-