Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. மூத்த மகன் விஷாலின் திடீர் மரணத்தால் நிலைகுலைந்த பிரபுதேவா, சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 'வில்லு' ஷ¨ட்டிங்கில் கலந்துகொண்டார். நேற்று சென்னை மீனம்பாக்கம் அருகிலுள்ள வீட்டில், தன் மகன் விஜய்யுடன் ரஞ்சிதா நடித்த காட்சிகளை பிரபுதேவா இயக்கினார். இதில் நயன்தாரா, கீதாவும் நடித்தனர். பிறகு பின்னி மில்லில் விஜய், நயன்தாரா நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது. http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=419

    • 0 replies
    • 1.5k views
  2. அன்பும் கலகலப்பும் பொங்கி வழியும் கூட்டுக் குடும்பத்தின் செல்லப் பிள்ளை ஷக்தி. கடைசி தங்கை கீர்த்தனாவுக்கு (சரண்யா மோகன்). நல்ல இடத்திலிருந்து சம்பந்தம் பேச வருகிறார்கள். அண்ணனுக்கும் மாப்பிள்ளை பிடித்தால்தான் கல்யாணத்துக்கு சம்மதிப்பேன் என்கிறார் கீர்த்தனா. சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் ஷக்தி கும்பகோணம் வருகிறார். தங்கையின் மாப்பிள்ளையை பார்த்து ஓ.கே. சொல்ல, கல்யாண ஏற்பாடுகள் பரபரக்கிறது. இந்த சந்தோஷ நிகழ்ச்சிக்கு இடையில் சென்னையில் தனக்கும் சந்தியாவுக்கும் இடையேயான காதல் கதையை சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டு வருகிறார் ஷக்தி. சாவின் விளிம்பில் இருக்கும் தன் அம்மாவின் ஆசைக்காக மகனின் திருமணத்தோடு மகளின் திருமணத்தையும் நடத்த நினைக்கிறார்கள் சம்பந்தி வீட்டார்கள். …

    • 0 replies
    • 1.3k views
  3. நயன்தாரா கால்ஷீட்டை நாங்கள் வீணாக்கவில்லை என்றார் தயாரிப்பாளர் போஸ். லிங்குசாமி இயக்கும் பையா படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். போஸ் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்க ரூ. 1 கோடிக்கும் அதிகமாக நயன்தாராவுக்கு சம்பளம் பேசப்பட்டது. இதுவரை எந்த நடிகைக்கும் இவ்வளவு அதிக சம்பளம் தராததால் இது தமிழ் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், Ôசம்பளத்தை குறைக்கக் கூறியதால் லிங்குசாமி படத்திலிருந்து விலகுவதாக நயன்தாரா அறிவித்தார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர் போஸ் கூறியதாவது: நயன்தாராவுக்கு முதலில் பேசப்பட்ட சம்பளத்தை, சமீபத்தில் குறைத்துக்கொள்ள சொன்னது உண்மைதான். சமீபகாலமாக ப…

  4. என்னை பார் யோகம் வரும்’ ஜமீன்ராஜ் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் படம் ‘பேட்டை முதல் கோட்டைவரை’. இதில் சத்யராஜ் ஜோடியாக லட்சுமி நடிக்கிறார். இவர் பழைய ஹீரோயின் லட்சுமி அல்ல. புதுமுகம். இவர் மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் ஜோடியாக ‘தமிழ்தேசம்’ படத்தில் நடித்து வருகிறார். தன் நண்பருடைய மகனுக்கு ஜோடியாக நடிக்கும் லட்சுமி, இப்போது தனக்கே ஜோடியாக நடிப்பது பற்றி சந்தோஷப்படும் சத்யராஜ், உடனே ரகுவுக்கு போன் செய்து, “நான் இன்னும் யூத் ஹீரோதாம்பா. பாரேன், உன் ஜோடி இப்ப என் ஜோடியா நடிச்சுகிட்டிருக்கு” என்று குசும்பு செய்திருக்கிறார். http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=411

    • 0 replies
    • 1.2k views
  5. Started by vettri-vel,

    ரஜினி ஜோர்ஜ் புஷ் சந்திப்பு (தசாவதாரம் படப்பிடிப்பு)

    • 0 replies
    • 1.3k views
  6. ஸ்ருதி கமல்ஹாசன் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  7. மலையாள பட ஷூட்டிங்குக்காக தாய்லாந்து சென்ற நடிகை பாவனா அந்நாட்டு புரட்சியாளர்களிடம் சிக்கிக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருடன் நடிகர்கள் பிருத்விராஜ் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவும் மாட்டிக் கொண்டிருப்பதாக வந்துள்ள தகவலைத் தொடர்ந்து பெரும் பதட்டம் எழுந்துள்ளது. லாலிபாப் என்ற மலையாளப் படத்தின் ஷூட்டிங்குக்காக பாவனா, பிருத்விராஜ் உள்ளிட்ட நடிகர்கள் குழு சமீபத்தில் தாய்லாந்து சென்றது. தாய்லாந்தில், அந்நாட்டு பிரதமர் சோம்சாய் வாங்சவாத் ஊழல் ஆட்சி புரிவதாகக் கூறி, அவருக்கு எதிராக மக்கள் புரட்சியில் இறங்கியுள்ளனர். புரட்சியாளர்கள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சொர்ணபூமி என்ற சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள…

  8. ஆஸ்கார் படங்களை திருடி எடுக்கும்போது தமிழ்ப்படத்திற்கு எங்கிருந்து ஆஸ்கார் கிடைக்கும்? ப.கவிதாகுமார் இந்தியாவில் எத்தனையோ மொழிகளில் திரைப்படங்கள் வெளியானாலும், தமிழ்மொழியில் வெளியாகும் படத்துடன் முடிந்து போவதில்லை. அப்படம் குறித்த தாக்கங்கள். வெற்றி, தோல்விகளைப் பற்றி அக்கறைப்பட்டு படங்கள் எடுத்த காலம் போய், அடுத்த முதல்வர் கனவோடு படங்கள் எடுக்கும் சமூக அவலம், தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் காணமுடியாததாகும். கடந்த நாற்பதாண்டு தமிழக வரலாறு என்பது திரையுலகத்தோடு பின்னப்பட்டது என்றால் அது மிகையாகாது. அறிஞர் அண்ணா துவங்கிய அப்பயணம் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகி, ஜெயலலிதா எனத் தொடருகிறது. அதன் நீட்சியாக அடுத்த முதல்வர் நான்தான் என்ற விஜயகாந்தின்…

  9. அழகழகாக கொடுத்த முத்தங்கள் இடம் பெற்ற காட்சிகளை தயவு செய்து படத்தில் சேர்க்காதீர்கள், அதை கட் செய்து விடுங்கள் என மிட்டாய் பட இயக்குநரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறாராம் அப்படத்து நாயகி மாயா உண்ணி. இதென்ன கலாட்டா என்கிறீர்களா. தொடர்ந்து படியுங்கள். கேரளத்து அழகி மாயா உண்ணி, தமிழுக்கு வந்துள்ளார் மிட்டாய் படம் மூலம். முதல் படம் என்பதால் கவர்ச்சியில் சற்றும் வஞ்சம் வைக்கவில்லை மாயா. படத்தில் முத்தக் காட்சியும் இடம் பெறுகிறது. இதற்காக ஹீரோவுக்கு அழகழகாக முத்தம் கொடுத்து நடித்துள்ளார் மாயா. இது அவரது வீட்டுக்குத் தெரிய வரவே, என்ன கொடுமை மாயா இது என்று கோபமாகி விட்டார்களாம். இதெல்லாம் கூடாது, இப்படியெல்லாம் நடிக்க வேண்டும் என்றால் நீ நடிக்கவே வேண்டாம் எ…

  10. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தின் பின்னணியில் எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை என விஜய் கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 37 இடங்களில் விஜய் ரசிகர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தார்கள். சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில், விஜய் கலந்து கொண்டு ரசிகர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். இதற்காக சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் பந்தல்கள் போடப்பட்டிருந்தன. 'புத்தர் கடவுளாக உள்ள நாட்டில் யுத்தம் நிற்க உண்ணாவிரத போராட்டம்' என்று எழுதப்பட்ட பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது, அதைப்பார்த்து பெண்கள் கதறி அழுவது போன்ற படங்களும் வைக்கப்பட்…

  11. புலிகளைப் பற்றிய படம் : 5கோடிக்கு வாங்கிய ஐங்கரன் உலகத்தமிழர்களின் உள்ளத்தை பதறவைத்துக்கொண்டிருக்கும் ஈழ விடுதலைப் பற்றிய திரைப்படத்திற்கு 5 கோடி ரூபாய் விலை கொடுத்துள்ளது ஐங்கரன் நிறுவனம். நொடிக்கு நூறு மரணங்கள்; தடுக்கி விழுந்தால் இரத்த ஆறுகள் என துயரமே துணையாகிப்போன ஈழத்தமிழர்களின் செய்திதான் இன்றைய தேதியில் ஊடகங்களில் பிரதானம். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பிரச்சனை பற்றி எடுக்கப்பட்ட படம்தான் ‘In the name of Butha'. இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்குமான போரில் இடையில் புகுந்த இந்திய ராணுவமும் தன் பங்கிற்கு நடத்திய வெறியாட்டங்களும், ஈழத்தமிழர்களின் உரிமை குரல்வளையை தொடர்ச்சியாக நசுக்கிவரும் இலங்கை ராணுவத்தின் முகமூடிகளை கிழித்தெறியும் சம்பவங்களு…

    • 13 replies
    • 5.6k views
  12. சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவராக கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்த சத்தியநாராயணா திடீரென நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி 1996ம் ஆண்டு முதலே இருந்து வருகிறது. இதுவரை இதற்குத் தெளிவான பதில் எதையும் ரஜினி தரவில்லை. ஆனால் சமீப காலமாக ரஜினி ரசிகர்கள், தங்களது தலைவர் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என நெருக்க ஆரம்பித்துள்ளனர். விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், ஆந்திராவில் சிரஞ்சீவி என பல நடிகர்களும் அரசியலில் குதித்து கலக்கிக் கொண்டிருக்கும்போது நாம் மட்டும் ஒதுங்கியிருப்பது சரியல்ல என்று அவர்கள் ரஜினியை வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு உச்சகட்டமாக கோவையில் ரஜினி ரசிகர்கள் தனிக…

  13. இந்த சினிமாச் சுற்று கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்றுதான் நினைக்கிறேன். இப்படி முடிவடைந்து விட்டதாக எல்லோரும் நினைக்கும் பொழுதில் ஏதாவது ஒரு புள்ளியில் முடிவை முறியடித்துக்கொண்டு யாரேனும் எழுவதில்லையா ? அது போலத்தான் இந்தச் சுற்றுக்கு அழைத்த லோசன் சின்னக்குட்டி ஆகியோரின் கேள்விகளோடு நீண்ட தாமதத்தில் வந்திருக்கிறேன். இதற்கு கொஞ்சம் காரத்தை குறைக்கும் நோக்கமும் உண்டு. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்? ஏழு! நிறையவே நினைவிருக்கிறது. மத்திய கிழக்கிற்கு போன அப்பா கொண்டு வந்த டிவி விசிஆர் இல் பாண்டியன் நடித்த ஆண்பாவம். இங்கே பாண்டியன் விசிஆர் என்பதெல்லாம் ஏழு வயதில் தெரிந்த விடயங்கள் அல்ல. அதற்கடுத…

    • 0 replies
    • 1.2k views
  14. தமிழ்வானத்தின் ஆதரவில் இன்று வெற்றிகரமாக நோர்வே மண்ணில் ஏகன் திரைப்படம் திரையிடப்பட்டது.;

    • 18 replies
    • 4.4k views
  15. அவமானத்தை வெற்றி கொள்ள.... பா.விஜயின் பாட்டு மனித வாழ்க்கை கவலை இல்லாமல் இல்லை அவன் பணக்காரனா அதானப்பா - கோடீஸ்வரனா இருந்தா என்ன, குடிசையில இருந்தா என்ன கவலை என்பதில்லாமல் இல்லை. இதனால யாருடைய வாழ்க்கையும் தினம் தினம் போராட்டம் நிறைஞ்சதாத் தான் இருக்கிறது. வல்லவனுக்கு வல்லவன் இருக்கிறான் என்பதிலிருந்து என்ன தெரிகிறது? ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு விதத்தில அதாவது படிப்பிலோ. பதவியிலோ, அந்தஸ்திலோ,அறி்விலோ, சண்டித்தனத்திலோ அதானப்பா- வீ...ரம் என்பகிறாங்களே அதிலேயோ, ஒருத்தனை விட இன்னொருத்தன் குறைவாக கணிக்கப்படுகிறான் என்பதுதான். இதனால என்ன பாதிப்பு ஏற்படுகிறது? வலியோர் மெலியோரை ஏளனம் செய்வது, அவமானப் படுத்துவது சகசமாகிவிடுகிறது. வலியோனைப் போல தானும் முன்னுக்க…

  16. ஏன் எமது சினிமா சாகிறது? சுதேசமித்திரன் தன்னிகரில்லாத தமிழ் சினிமாவின் தொன்று தொட்ட வரலாற்றில் ஆகச்சிறந்த அம்சக்கூறுகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள் என்று யாராவது என்னிடம் கேட்க விரும்பினால் நான் நல்க விரும்பும் பட்டியல் இதுதான். ஜெயமாலினியின் இடுப்பு, ஜோதிலட்சுமியின் அலட்சிய ஆட்டம், சில்க் ஸ்மிதாவின் கண்கள், அனுராதாவின் தொடைகள், ராதாவின் காது, ஸ்ரீதேவியின் ஸ்கின்டோன் மர்மம், ஸ்ரீப்ரியாவின் க்ளிவேஜ், கமலஹாசன் நெளியும் நளினம், சுருளிராஜனின் குரல் வளம், டி. ராஜேந்தரின் தைரியம், கவுண்டமணியின் செந்தில், மோகனின் ஒலிவாங்கி, ராமநாராயணனின் சாதனை, ஏவியெம்மின் வெற்றிப் படங்கள், சிவக்குமாரின் தெய்வீகத் திருவுருவம், பாலச்சந்தரின் குடும்பக் கட்டுப்பாடில்லாத கதைகள்,…

  17. குசேலன் தோல்வி, ஒகேனக்கல் பிரச்சினையில் கர்நாடகத்திடம் மன்னிப்பு கேட்டது போன்றவற்றால் ரஜினியின் இமேஜ் அடிவாங்கியிருப்பது குறித்து யார் கவலைப்படுகிறார்களோ இல்லையோ எந்திரன் படத் தயாரிப்பாளரும் இயக்குநரும் பெரிதும் கவலைப்படுகின்றனர். ஈழத் தமிழர் பிரச்சினைக்காக நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கமாட்டேனென அஜித் கூறியதாகச் செய்தி வெளியானதும் ஏகன் படம் பல வெளிநாடுகளில் ஈழத் தமிழர்களால் தடை செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஐங்கரன் இன்டர்நேஷனல் அஜித்தைக் கூப்பிட்டு உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளுமாறு ஆணையிட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இதே போன்று ரஜினிக்கும் உத்தரவு போடப்பட்டிருக்கிறது. கூடுதலாக மிகுந்த செலவுடன் தயாரிக்கப்பட்டு வரும் எந்த…

  18. லிரைவில் வெளிவரவிருக்கும் தனுசின் திரைப்படத்தில் அவரின் தந்தையாக ஈழத்துக்கவிஞன் வ.ச.ஜெயபாலன் நடிக்கின்றார்

  19. சென்னை: பாடகி பி.சுசீலாவின் பெயரில் துவக்கப்பட்டுள்ள அறக்கடளை சார்பில் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகிக்கு, ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு அடங்கிய 'பி.சுசீலா தேசிய விருது' வழங்கப்படுகிறது. அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய, குறிப்பாக தமிழ் மனங்களில் ரீங்காரமிடும் பெயர் பி.சுசீலா. அவர் திரை உலகில் பாட வந்து இந்த ஆண்டுடன் 57 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுவரை 40 ஆயிரம் பாடல்களை அவர் பாடியுள்ளார். தற்போது, பி.சுசீலா தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் இசைத் துறையில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு விருதும், நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவியும் செய்ய உள்ளார். மேலும், இசைத்துறைக்கென தனி நூலகம் ஒன்றையும் தொடங்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து பா…

  20. தீபாவளிக்கு வந்த ஏகனும், சேவலும் ஓடிக்கொண்டிருக்கும் போது தனத்திற்கு விமரிசனமா என்று நீங்கள் நினைக்கலாம். நான்குபாட்டு அதிலும் இரண்டு குத்துப்பாட்டு, சில சண்டைக் காட்சிகள், வெளிநாட்டு சீன்கள், இடையில் கலர் கலராக ஆடைகளை மாட்டும் நாயக நாயகிகள் இன்னபிற ஐட்டங்களைக் கொண்ட அந்தப்படங்களுக்கு விமரிசனம் எழுதும் தேவை எதுவுமில்லை. அப்படி எழுதினாலும் கும்மியும், ஜல்லியுமாய்த்தான் இரைக்க வேண்டும் என்பதால் சமூகக் கருத்துக்களை -அது சரியோ, தவறோ- பிரதிபலிக்கும் படமென்பதால் தனத்திற்கு விமரிசனம் எழுதுகிறோம். பலரும் இந்தப் படத்தை பார்த்திருக்க மாட்டார்கள் என்பதால் கதைச் சுருக்கம். தாசித் தாய்க்குப் பிறந்து தாயைக் காப்பாற்றுவதற்காக விபச்சாரத்திற்கு அறிமுகமாகும் தனம் ஐதராபாத்தில் இரு…

  21. கவிதை என்பது அறிவு சார்ந்தது அல்ல உணர்வு சார்ந்தது... கவிஞர் யுகபாரதியுடன் நேர்காணல் சந்திப்பு : முத்தையா வெள்ளையன் பாரத நாடு பழம் பெரும் நாடு நாம் அதன் புதல்வர் நாசமாய்ப் போவோம்" என எதார்த்தமான கவிதைகளோடு இலக்கிய உலகில் அறியப்படுகிறவர். பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம். புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்" என்ற அறிமுகப்பாடலோடு சினிமாவுக்குள் நுழைந்த இவர், தமிழின் தனித்தன்மையோடும் அடையாளத்தோடும் அரசியலோடும் இயங்குபவர். இவரை ஒரு மாலை நேரத்தில் “கருஞ்சட்டைத் தமிழர்” இதழுக்காகச் சந்தித்தோம். உங்களுக்கு கவிதை ஏன் எழுதணும்னு தோனுச்சு. முதல் கவிதை எப்போது எழுதினீங்க... என்னுடைய குடும்ப சூழல்தான் என்னை…

    • 0 replies
    • 2.5k views
  22. பெண் ஒருத்தி, இரண்டு கணவர்களுடன் மணக்கோலத்தில் நடந்து வருவது போன்ற மிட்டாய் திரைப்பட போஸ்டர்கள் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. இதே மிட்டாய் திரைப்படத்தில் அடுத்த சர்ச்சைக்குரியக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்பட நாயகி மாயா உண்ணி தன் வாயில் தண்ணீரை நிரப்பி, செடிக்கு தண்ணீர் விடுவது போல துப்ப, அதை கதாநாயகன் பிரபா தன் வாயில் பிடிப்பதுபோல காட்சி எடுக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரைச் சாலையில் இந்தப் படப்பிடிப்பு நடைபெற்றது. நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு அந்தக் காட்சி படமாக ஆரம்பித்தது. கதாநாயகி மாயா உண்ணி வாயில் தண்ணீரை நிரப்பிக் கொண்டார். காட்சியில் நடிக்க தான் தயார் என்பதுபோல், அவர் தனது கட்டை விரலை உயர்த்தினார். இந்த சமி…

  23. நட்சத்திர ஓட்டலில் இருந்து நடு இரவில் சிம்பும் அவரது தம்பியும் போதையில் தள்ளாடித் கொண்டு வந்தார்கள். அவர்கள் வந்த கார் காணாமல் போனதால் ஆட்டோவில் வீட்டிற்கு சென்றார்கள். -இப்படி ஒரு செய்தி தினசரிகளில் வந்து பற்றிக் கொள்ள மறுநாளே சிலம்பரசனின் அப்பா விஜய டி.ராஜேந்தர் மறுப்பு அறிக்கை விடுகிறார். விஷயம் அதோடு நின்று விடவில்லை. 17ஆம் தேதி காலையில் அனைத்து பத்திரிகைகளையும், மீடியாக்களையும் மகனுடன் சந்தித்தார் டி.ஆர். சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் அன்று செப்டம்பர் 10ஆம் தேதி சிலம்பு சென்னையிலேயே இல்லை. அவர் இலங்கையில் சிலம்பாட்டம் படப்பிடிப்பில் இருந்தார். அதற்கான பாஸ்போர்ட் ஆதாரம் இதோ (காண்பிக்கிறார்) செப்டம்பர் 3ஆம் தேதி இலங்கை சென்ற சிலம்பரசன் செப்டம்பர் 14ஆம் தேதி தான் ச…

  24. உலக கண்ணழகி ஐஸ்! மேலும் புதிய படங்கள்உலகிலேயே கவர்ச்சியான கண்ணழகி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் முன்னாள் உலக அழகியும், இந்நாள் நம்பர் ஒன் நடிகையுமான ஐஸ்வர்யாராய் பச்சன். இந்திய அழகின் பிரதிநிதியாக உலகமெங்கும் உலா வந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா ராய். 'இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்து உலகமெங்கும் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள இந்தியக் கலைஞர் இவர் மட்டும்தான்' என்கிறது ஆசியா வீக் பத்திரிகை. இவரது மாமனார் அமிதாப்புக்குக் கூட அடுத்த இடம்தான் (நடிப்பில் அல்ல... பாப்புலாரிட்டியில்!) உலக அழகி பட்டம் பெற்ற பின்னர் திரையுலகில் நுழைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் கண்கள் தான் உலகிலேயே மிகவும் கவர்ச்சியான கண்கள் அறிவித்துள…

    • 7 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.