Jump to content

புலிகளைப் பற்றிய படம் : 5கோடிக்கு வாங்கிய ஐங்கரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைப் பற்றிய படம் : 5கோடிக்கு வாங்கிய ஐங்கரன்

உலகத்தமிழர்களின் உள்ளத்தை பதறவைத்துக்கொண்டிருக்கும் ஈழ விடுதலைப் பற்றிய திரைப்படத்திற்கு 5 கோடி ரூபாய் விலை கொடுத்துள்ளது ஐங்கரன் நிறுவனம்.

நொடிக்கு நூறு மரணங்கள்; தடுக்கி விழுந்தால் இரத்த ஆறுகள் என துயரமே துணையாகிப்போன ஈழத்தமிழர்களின் செய்திதான் இன்றைய தேதியில் ஊடகங்களில் பிரதானம். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பிரச்சனை பற்றி எடுக்கப்பட்ட படம்தான் ‘In the name of Butha'.

இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்குமான போரில் இடையில் புகுந்த இந்திய ராணுவமும் தன் பங்கிற்கு நடத்திய வெறியாட்டங்களும், ஈழத்தமிழர்களின் உரிமை குரல்வளையை தொடர்ச்சியாக நசுக்கிவரும் இலங்கை ராணுவத்தின் முகமூடிகளை கிழித்தெறியும் சம்பவங்களுமே இப்படத்தின் கதையாம்.

இந்த துணிச்சலான முயற்சிக்கு முதல் போட்டது sai an films நிறுவனம். சாய் ஜார்ஜ், சண்முகதாஜ் ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படத்தை ராஜேஸ் டச் ரிவர் இயக்கியுள்ளார். மலையாளத்தில் 600 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ராஜாமணி இசையமைக்க, வசனம் மற்றும் பாடல்களை ராஜாசந்திரசேகர் எழுதியுள்ளார். ஜெய்ன்ஜோசப் -ராஜரத்னம் ஆகிய இரட்டையர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

படத்தின் உரையாடல்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இடம்பெற்றுள்ளதாம். தமிழில் இப்படத்திற்கு ‘புத்தரின் பெயரால்' என பெயரிடப்பட்டுள்ளது. நாயகனாக சிச்சு, நாயகியாக சோனியா, போராளிகளின் தலைவனாக லால், மற்றும் கணேஷ்பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

புலிகளின் போர் உச்சக்கட்டத்தை தொட்டிருக்கும் இவ்வேளையில் இப்படத்தை வெளியிடும் உரிமையை ஐங்கரன் நிறுவனம் 5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாம். ஈழ பிரச்சனை குறித்து எத்தனையோ படங்கள் வெளியாகியிருந்தாலும் அதிக விலைகொடுத்து வாங்கப்பட்ட படம் இது மட்டுமே.

- சினி சவூத்

Link to comment
Share on other sites

‘In the name of Butha' இந்தப் படம் சில வருடங்கள் முன்னே தியேட்டரில் பார்த்திருக்கிறேன்!!

அல்லது இது வேற படமோ?

Link to comment
Share on other sites

‘In the name of Butha' இந்தப் படம் சில வருடங்கள் முன்னே தியேட்டரில் பார்த்திருக்கிறேன்!!

அல்லது இது வேற படமோ?

வசி அதே படத்தைத்தான் சில வியாபாரிகள் காத்து உள்ள போது தூத்திக் கொள்ள வெளிக்கிட்டிருக்கினம் என நினைக்கிறன். ஏதோ இது தமிழ் நாட்டிலை ஓடினால் சரி அதோடை ஈழத்தமிழர் துயர் பேசியதால் இந்தியாவில்தடை செய்யப் பட்ட படங்களும் ஓடினால் சரி.உதாரணம் ஆணிவேர்

Link to comment
Share on other sites

இந்தப்படம் வெளிநாடுகளில் ஓடியது

ஆனால்

இந்தியாவில் தடை என கேள்விப்பட்டேன்...

Link to comment
Share on other sites

வசி அதே படத்தைத்தான் சில வியாபாரிகள் காத்து உள்ள போது தூத்திக் கொள்ள வெளிக்கிட்டிருக்கினம் என நினைக்கிறன். ஏதோ இது தமிழ் நாட்டிலை ஓடினால் சரி அதோடை ஈழத்தமிழர் துயர் பேசியதால் இந்தியாவில்தடை செய்யப் பட்ட படங்களும் ஓடினால் சரி.உதாரணம் ஆணிவேர்

புத்தரின் பெயரால் என்ற படம் எடுக்கப்பட்டது தெரியும். புலம் பெயர் நாடுகளில்திரையிடப்பட்டுக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளக்காட்டன் சொல்வது சரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் வெளிவந்தது 2002 இல். தமிழர் வாழும் நாடுகள் பலவற்றில் 2003 இல் திரையிடப்பட்டது.

http://www.inthenameofbuddha.com/

http://en.wikipedia.org/wiki/In_the_Name_of_Buddha

Link to comment
Share on other sites

புத்தரின் பெயரால்

எழுதியவர்: வன்னித்தென்றல்

Saturday, 07 January 2006

இலங்கையிலிருந்து அகதியாக வெளிநாடு பயணிக்கும் ஓர் இளைஞனின் மனப்பதிவுகளாகவே இத்திரைப்படத்தின் திரைக்கதை நகர்ந்து செல்கிறது.

அந்த இளைஞன் பெயர் சிவா.இலங்கையிலிருந்து வள்ளத்தில் இந்தியாவுக்குச் செல்லும் சிவா, அங்கிருந்து லண்டனுக்குச் சென்று அடைக்கலம் கோருகிறான்.

சிவா விமானத்தில் பயணிக்கும்போது - திரைக்கதை அவனது நினைவுகளோடு பின்னோக்கிப் பயணிக்கிறது.

மருத்துவபீட மாணவனான சிவா அமைதியை விரும்புபவன். அவனது வாழ்க்கையில் பேரிடியாக அவனது தந்தையின்

அகால மரணம் சம்பவிக்கிறது. அடுத்தடுத்து அவனது வாழ்வில் துயரங்கள் தொடர்கின்றன.

அவனது காதலி கீதாவின் தாயாரை ஐந்து இராணுவச் சிப்பாய்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கிக் கொடூரமாகக்

கொலை செய்கிறார்கள்.

அந்தக் கொடுமையான சம்பவத்தை நேருக்கு நேராகப் பார்க்கும் சிவா குமுறுகிறான். மருத்துவ பீடக் கல்வியை கைவிட்டுவிட்டுப் போராளியாகக் களமிறங்குவதற்கு அவன் தீர்மானிக்கிறான். அவ்வேளையில் இந்திய அமைதிப்படை வந்து சேருகிறது.

~இனிமேல் அமைதி ஏற்பட்டுவிடும்| என்ற நம்பிக்கையில் - தனது விடுதலைப் போராளியாகும் எண்ணத்தை சிறிது மாற்றிக்கொள்கிறான் சிவா. ஆனால், நிலைமை முன்பைவிட மோசமாக மாறுகிறது.

தமிழரைக் காக்கவென்று வந்த இந்திய ~அமைதி|ப்படை , தமிழர் மீது எண்ணற்ற கொடுமைகளைக் கட்டவிழ்த்து

விடுகிறது. இந்திய இராணுவச் சிப்பாய்களின் கொடூர வெறியாட்டத்தில் சிக்கிச் சின்னாபின்னப்பட்டுப் போகிறாள்

சிவாவின் காதலி கீதா.

இந்நிலையில் சிவாவின் தாயார் தன்னிடமிருந்த நகைகளைக் கொடுத்து, ~~உன்னையும் இழக்க நான் விரும்பவில்லை.

எங்கேயாவது தப்பிப் போய்விடு. நிலைமை என்றாவது சகஜமாகும். அன்றைக்குத் திரும்பிவா...|| என்று சிவாவை

அனுப்பி வைக்கிறார்.

இத்துடன் அந்த ~ஃப்ளாஷ் - பக்| காட்சி நிறைவடைகிறது.

லண்டன் விமான நிலையத்தில் வந்திறங்கும் சிவாவை விசாரணை செய்கிறார் பெண் அதிகாரி ஒருவர். அவரிடம் தனது துயரக் கதையைக் கூறுகிறான் சிவா.

சிறுமியாக இருந்தபோது உலகமகாயுத்த காலப்பகுதியில் நாஜிக்களின் சித்திரவதைக் கூடத்தில் கொடுமைகளை அனுபவித்திருந்த அந்த அதிகாரியால் சிவாவின் சோகங்களைப் புரிந்துகொள்ளமுடிகிறது. சிவாவுக்கு அகதி அந்தஸ்த்துக் கொடுத்து லண்டனுக்குள் அனுமதிக்கிறார் அவர். அத்துடன் நிறைவடைகிறது திரைப்படம்.

சிவாவின் காதலியாக நடித்திருக்கும் கீதா இயல்பிலேயே கவிதை எழுதக்கூடியவர். தனது துயரங்களை - வலிகளை

- வரிகளாக்கி அவர் தரும் கவிதைகள் படம் முழுவதும் இடம்பெற்று மனதை உருக்குகின்றன.

~என் மண் அள்ளிக் கேட்கிறேன். நீ எப்போது எங்களுக்குக் கிடைப்பாய் என்று| - தன் தாய் மண்ணை அள்ளி எடுத்து கீதா ஏங்குவது போன்று அமைக்கப்பட்டிருக்கும் பல காட்சிகளில் இடம்பெற்றிருக்கும் கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் சி.கே.ராஜா சந்திரசேகர் என்ற இந்தியப் பாடலாசிரியர். இப்படத்துக்கான வசனங்களையும் இவரே

எழுதியிருக்கிறார்.

படத்தின் இயக்குநர் ராஜேஷ_க்கு வயது முப்பதுதான். லண்டனில் படித்துக்கொண்டிருக்கும்போத

Link to comment
Share on other sites

ஈழத்தமிழருக்கு ஆதரவாக எடுத்த படமொன்று ஓடவில்லை என்றால் : இனி ஒரு படமும் உருவாகாது. இதாவது வெளியில் வந்து ஓடட்டும். அப்பதான் இன்னும் கொஞ்சம் படம் எடுப்பார்கள்.

Link to comment
Share on other sites

இந்தத் திரைப்படத்தை பார்த்திருக்கிறேன். பெரியளவில் என்னைக் கவரவில்லை. படம் ஒருவித அயர்ச்சியைக் கொடுத்தது.

Link to comment
Share on other sites

in the name of buddah போராட்டத்தையோ புலிகளையோ கொச்சைப்படுத்தாது சிறீலங்காவின் பேரினவாதத்தின் 50 வீதத்தையாகுதல் காட்டுமாக இருந்தால் அது இன்றைய காலத்திற்கு பொருத்தமானது.

Link to comment
Share on other sites

in the name of buddah போராட்டத்தையோ புலிகளையோ கொச்சைப்படுத்தாது சிறீலங்காவின் பேரினவாதத்தின் 50 வீதத்தையாகுதல் காட்டுமாக இருந்தால் அது இன்றைய காலத்திற்கு பொருத்தமானது.

4 வருடங்களுக்கு முன்னம் திரை இட்டார்களே பாக்க இல்லையோ....??? அது சரி கள்ள DVD யிலை பாத்து பழகின உங்களிட்ட போய் இந்த கேள்வி..! :)

சீக்கியர்கள் எல்லாம் கூடி திரை அரங்குகளுக்கு வெளியிலை போராட்டம் எல்லாம் நடத்தினார்கள்.. இந்திய இராணுவ கால கொடுமைகளை அதிகமாக காட்டினார்கள் என்பதால்...

Link to comment
Share on other sites

பொற்கோயிலை அழித்த புலிகளை அழிக்க இந்திய உதவி தொடர வேணும் எண்டு சீக்கியர்கள் போராட்டங்களை தொடங்க வேண்டும்.

புதுடெல்லியில இருக்கிற சிறீலங்கா தூதுவர் கம்சா மாதிரி துடிப்பாக இயங்க வேணும்.

Link to comment
Share on other sites

அம்சா தென் இந்திய ஊடகக்காரர்களை சிறீலங்காவுக்கு அனுப்பி விருந்து வச்சு எல்லாம் செய்து கொடுத்தார். இப்ப தமிழக மக்களின் எழுச்சி நிலவரத்தால் பத்திரிகைகாரர்கள் அம்சாவின் அழைப்புக்கு பயப்படுகிறார்களாம். :( ஓய்வு கிடைக்கும் போது சென்னையிலுள்ளவர்கள் புட்டி கு - டி எல்லாத்துக்கும் பாண்டிச்சேரிக்கு போவார்கள்.

பின்னர் அம்சா தயவால் சிறீலங்கா போக பிளைட் டிக்கெட்டிலிருந்து எல்லாமே இலவசமாகவே கிடைத்தது. அதுக்கு இப்ப மண் விழுந்து போச்சு எண்டு ஒரு ஊடகவியல் கூடல் சொல்லிச்சு :) பலர் குடும்பத்தோடு சிறீலங்காவுக்கு போய் வர சுகபோக வசதிகளை பெற்றுக் கொடுத்துள்ளார் கம்சா. எப்பவும் சென்னையில் விருந்து வைத்து தூண்டில் போடுவதுதான் கம்சாவின் முதல் வேலை. பின்னர் சிறீலங்கா உல்லாசம் :(

தமிழக மீனவர்களை கொன்ற போதும் அம்சா சொன்ன கம்சாவெல்லாத்தையும் இதனால்தான் எழுதினார்களோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மீண்டும் 100% யதார்த்தமான பார்வை. நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது. நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை. அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்…. ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.
    • இன்று மீராவுக்கு தூக்கம் கிடையாது பிரியன்........சி.எஸ்.கே அந்தமாதிரி விளையாடி இருக்கு......எஸ்.ஆர்.எச் படு தோல்வி......சென்னை அதிக ஓட்டங்களினாலும் விக்கட்டினாலும் வென்று 3 ம் இடத்துக்கு வந்திருக்கு...... கூடவே திரிஷாவின் முத்தங்கள் வேறு.......!  😂
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02     தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங் களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம். உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை - கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -   "யாரும் இல்லை, தானே கள்வன், தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"   என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது.   இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோக மாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம்.   தாலி என்ற சொல் தாலிகம் என்ற, பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியா கவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.   எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை.   இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும் தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7, மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என   "..... எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர ஓடிப் பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"   என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத் தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சி யாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன தமிழர்களிடையே தொன்று தொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.   இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன.   மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந்தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும் .   இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாகத் எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட, உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 03 தொடரும்           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.