Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. அண்ணாத்த படக்குழுவில் எண்மருக்கு கொரோனா: தனிமைப்படுத்தலில் ரஜினி.! அண்ணாத்த படக்குழுவில் எண்மருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கதாநாயகனாக நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பித்து நடைபெற்று வந்த நிலையில் கொரோனாத் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர்-14ம் திகதி முதல் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் அண்ணாத்த படக்குழுவில் எட்டுப் பேருக்கு தொற்று உறுத…

  2. சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக ஆஸ்கருக்கு அடுத்தபடியாக உலக அளவில் கவுரவமிக்கதாகக் கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருதுப் போட்டியில் மலேசியா சார்பாக பங்கேற்க தகுதி பெற்றுள்ளது 'பரமதம்' திரைப்படம். 24 வயதான இளைஞர் விக்னேஷ் பிரபு, தன் சகோதரர் தனேஷ் பிரபுவுடன் இணைந்து இப்படத்தை இயக்கி உள்ளார். கடந்த ஆண்டே வெளியீட்டிற்கு தயாராகிவிட்ட போதிலும், கோலிவுட், ஹாலிவுட் உள்ளிட்ட இறக்குமதி படங்களின் தொடர் வெளியீடுகள், கொரோனா விவகாரம் ஆகிய காரணங்களால் இப்படம் இன்னும் மலேசியாவில் திரை காணவில்லை. எனினும் 18 அனைத்துலக விருதுகள் இந்த படத்துக்கு கிடைத்துள்ளது. இதை அங்கீகரிக்கும் வகையில் மலேசிய சாதனைப் புத்தகத்திலும் ஆசிய சாதனைப் புத்தகத்திலும் இ…

    • 1 reply
    • 397 views
  3. "இவ்வளவு பிற்போக்கு போலித்தனமா?!"- கெளதம் வாசுதேவ் மேனன்களுக்கு ஒரு தாயின் கடிதம்! எம்.எஸ்.அனுசுயா பாவக் கதைகள் நானும் ஒரு மகளுக்குத் தாய் என்பதால் கெளதம் என்ன தீர்வை முன்வைக்கிறார் என்கிற ஆர்வத்தோடு பார்த்தேன். மனைவி, மகன், இரு மகள்கள் என மதுரையில் வாழும் மத்திய வர்க்க குடும்பத் தலைவர் சத்யா. அவரின் செல்ல மகளுக்கு நடக்கும் பாலியல் வன்முறை குடும்பத்தை எவ்விதம் பாதிக்கிறது, அந்த அசம்பாவிதத்தை அந்தக் குடும்பம் எப்படி எதிர்கொள்கிறது, எப்படி அதைக் கடந்து வந்தார்கள் என்ற கருவை மையப்படுத்தியப் படம். நானும் ஒரு மகளுக்குத் தாய் என்பதால் கெளதம் என்ன தீர்வை முன்வைக்கிறார் என்கிற ஆர்வத்தோடு பார்த்தேன். …

  4. கீர்த்தி சுரேஷின் பாராட்டை பெற்ற குறும்படம் டீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில் வெளியான குறும்படம் "பெண் உறுப்பு". அருண் மிஜோ எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கே.ஆர்.வினோத் நடித்திருந்தார். பெண்களுக்கான சமூக கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த குறும் படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து வரும் நிலையில் இந்த படம் ஒரு விழிப்புணர்வாக கருதப்படுகிறது. தற்போது இந்த குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பார்வையை அறம் பட இயக்குனர் கோபி நாயனார் வெ…

  5. தனுஷின் ஹொலிவூட் பாய்ச்சல் | றூசோ சகோதரர்களின் இயக்கத்தில் தயாராகும் ‘The Gray Man’ இல் நடிக்கிறார் ஹொலிவூட்டில் நடக்கப் புறப்பட்ட சில நடிகர்களில் தனுஷ் கொஞ்சம் வேகமாக நடக்கவாரம்பிதிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். 2018 இல் வெளியான The Extraordinary Journey of the Fakir என்ற ஆங்கில மொழிப்படம் அவரது முதலாவது. கென் ஸ்கொட்டின் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட இக் ஹொலிவூட் படம் பிரன்ச் சிரிப்புச் சாகசக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. பக்கிரி ஒருவர் (இந்தியர்களைப் பக்கிரிகள் என்று பரிகாசம் செய்வது வின்ஸ்டன் சேர்ச்சில் காலத்தில் ஆரம்பமானது) ஐக்கியா தளபாடத்துக்குள் மாட்டிக்கொள்வதைச் சிரிப்பாக்குவது இப்படத்தின் சாகசம். (இந்த இடத்தில் தீபா மேத்தாவின் ஞாபகம் வந்தால் கொம்பனி பொறு…

  6. இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான அசுரன் இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) கடந்த 1952ம் ஆண்டு முதல் எல்லா ஆண்டுகளும் நடத்தப்பட்டு வருகிறது. மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த விழா, இந்த ஆண்டு கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சர்வதேச கோவா திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது இந்த திரைப்பட விழாவில் தேர்வான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனு…

  7. நடிகை ஷகிலா வாழ்க்கை படம் - "நான் செய்த தவறை செய்யாதீர்கள்" 18 டிசம்பர் 2020 நடிகை ஷகிலாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கிறது. அந்த படத்துக்கு "ஷகிலா" என்றே பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. 1990களில் இளைஞர்களின் நெஞ்சங்களை கவர்ந்த நாயகியாகவும், வயது வந்தோருக்கான படங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர் வட்டத்தை சேர்த்தவர் நடிகை ஷகிலா. அந்த காலகட்டத்தில் இவரது படங்கள் திரையரங்கில் ஓடியதால் வெள்ளிக்கிழமையன்று புதிய படங்களுக்கு திரையரங்கு கிடைக்க முடியாத நிலை நிலவியது. முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கே அது பெரும் சவாலாக இருந்தது. இதன் பிறகு ஆபாச படங்களில் நடிப்பதை முற்…

  8. சினிமா 2020 : இந்த வருடம் ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்கள்! மின்னம்பலம் புதிய நார்மலுக்குள் இருக்கிறோம். கொரோனா எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. சராசரிகள் அசாதாரண நிலைக்குள்ளாக சிக்கித் தவிக்கிறது. இதில் சினிமாவும் விதிவிலக்கில்லை. கடந்த வருடம் சுமார் 250க்கும் மேல் படங்கள் வெளியானது. இந்த வருடம் சுமார் 50 படங்கள் கூட வெளியாகியிருக்காது என்பதே உண்மை. ஆனாலும், இந்த வருடம் ரிலீஸான படங்களில் ரசிர்களின் மனதில் நின்ற, ரசிகர்கள் கொண்டாடிய டாப் 10 படங்களை மீள் பதிவாக இங்கே பட்டியலிடுகிறோம். தர்பார் இந்த வருடத்தின் ஓபனிங் திரைப்படமாக ரஜினி நடிப்பில் தர்பார் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் வெளியான தர்பார் படத்துக்குப் …

    • 1 reply
    • 469 views
  9. அவென்ஜர்ஸ்' இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கும் தனுஷ் நடிகர் தனுஷ் சகோதரர் செல்வராகவன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 2௦௦2ல் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்கம் எனப் படிப்படியாக உயர்ந்துள்ளார். ஏற்கனவே இரண்டு பாலிவுட் படங்களில் நடித்து உள்ளார். தற்போது மூன்றாவது பாலிவுட் படமான 'அட்ரங்கி ரே' படத்தில் நடித்து வருகிறார். கென் ஸ்காட் இயக்கிய சர்வதேச திரைப்படமான 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பாகி…

  10. பாலுமகேந்திராவுக்குப் பின்னர் இந்தியச் சினிமாவில் ஒளிப்பதிவாளராக உள் நுழையும் ஈழத்துக் கலைஞன் - சாந்தன் பாலுமகேந்திராவுக்குப் பின்னர் இந்தியச் சினிமாவில் ஒளிப்பதிவாளராக உள் நுழையும் ஈழத்துக் கலைஞன்- “சாந்தன்” மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் “பிசாசு -2” பட ஒளிப்பதிவாளர் ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் எனபவர் நாளுக்குநாள் வளர்ந்து வரும் தொழில் நுட்ப உத்திகளை உள்வாங்கக் கூடியவராக இருக்க வேண்டும். அதே நேரம் தான் படம் பிடிக்கும் காட்சிகள் பார்ப்பவரின் கண்ணுக்குள் குத்தாமல் இயல்பாக தோற்றம் அளிக்கும் வகையில் தன் தொழில்நுட்ப ஞானத்தைப் பயன்படுத்தக் கூடிய நுண்ணறிவு கொண்டவராக இருக்க வேண்டும். இதுதான் சாந்தனின் படப்பிடிப்புகளில் நான் கண்ட Miracle! “உரு” …

    • 2 replies
    • 1.1k views
  11. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை. சித்ரா கன்னத்தில் இருந்த இரத்த காயம்! ஹொட்டலில் கணவருடன் நடந்தது என்ன? கசிந்த முக்கிய தகவல் - நடிகை சித்ரா மரணமடைந்துள்ள நிலையில் அவருடன் இணைந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த குமரன் இரங்கல் தெரிவித்துள்ளார். சித்ராவின் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. அவர் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் தான் சித்ரா மிகவும் பிரபலமானார். அந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். அவருக்கு ஜோடியாக குமரன் என்பவர் கதிர் கதாபாத்திரத்தில் நடித்தார். சித்ராவின் மரணம் குமரனுக்கு பெ…

    • 27 replies
    • 3.8k views
  12. மைத்திரேயி ராமகிரிஷ்ணன் | இந்த வருடத்துக்கான சிறந்த நடிகர்களில் ஒருவர் – நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகை மிசிசாகா, ஒன்ராறியோவைச் சேர்ந்த 18 வயது தமிழ்க் கனடிய நடிகையான மைத்திரேயி ராமகிரிஷ்ணன், நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் 2020ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைகளில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மிண்டி கேலிங்கின் இணைத் தயாரிப்பான Never Have I Ever என்னும் நெற்ஃபிளிக்ஸ் நகைச்சுவைத் தொடர் ஒன்றில் நடித்துப் புகழ்பெற்ற மைத்திரேயிக்கு இதுவே முதல் நடிப்பு அனுபவம். 15,000 இளம் நடிகைகளுடன் போட்டி போட்டு இத் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் சந்தர்ப்பத்தை அவர் பெற்றிருந்தார். Never Have I Ever தொடரின் முதலாவது அங்கம் முடிவடைந்து தற்போது இரண்டாவது அங்கத்துக்கான (S…

  13. உக்ரைன் நாட்டில் உள்ள கீவ் ஓபரா ஹவுஸில் மிகப்பெரும் சண்டையுடன் படம் தொடங்குகிறது. அப்போது ‘ப்ரோட்டோகனிஸ்ட்’ என்ற அழைக்கப்படும் நாயகன் (ஜான் வாஷிங்டன்) எதிரி ஒருவனிடம் விநோதமான முறையில் ரிவர்ஸில் சுடும் துப்பாக்கி ஒன்று இருப்பதை காண்கிறார். அந்த சண்டையில் எதிர்களின் கையில் நாயகனை மீட்டு தங்கள் குழுவில் சேர்த்துக் கொள்கிறது ‘டெனெட்’ என்ற ரகசிய இயக்கம். காலத்தில் பின்னோக்கி பயணிக்கும் புல்லட்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படுவதாகவும், மேலும் கடந்த காலத்தையே அழிக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய ஆயுதம் ஒன்றும் இருப்பதாகவும் நாயகனிடம் விஞ்ஞானி ஒருவர் சொல்கிறார். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்காக மும்பை வருகிறார் நாயகன். அங்கே அவருக்கு அறிமுகமாகும் நீல் என்பவரின் உதவியுடன் ஆயுத விய…

  14. Started by அபராஜிதன்,

    @teakkadai1 என்னும் முரளிக்கண்ணன் பதிவு. கே எஸ் அதியமான் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் தொட்டாச்சிணுங்கி படம் வந்து வெற்றி பெற்றிருந்த நேரம். அதை இந்தியில் தயாரிக்கப் போவதாக செய்தி வந்திருந்தது. நான் அப்போது தங்கியிருந்த மேன்ஷனில் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார் “ரகுவரன் ரோல அங்க யாரு பண்ணப்போறா?”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா? என்ன? என்று நான் யோசித்தேன். ஒரு கணவன், தன் மனைவி தன்னை மட்டுமே நாயகனாக ஆராதிக்க வேண்டும், அன்பைப் பொழிய வேண்டும் என்று நினைக்கிறான். மனைவியோ ஒரு பாடகனிடம் தாய்மை அன்பு செலுத்துகிறாள். கணவன் இதனால் மனைவி…

  15. நெஞ்சமெல்லாம் பல வண்ணம் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் மகேஷ் பாபு, வெங்கடேஷ் - சமந்தா, அஞ்சலி நடிப்பில் தெலுங்கில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டுள்ள `நெஞ்சமெல்லாம் பல வண்ணம்' மொயின் பேக் வழங்க ரோல்ஸ் பிரைட் மீடியா பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் மெஹபு பாஷா தயாரித்துள்ள படம் `நெஞ்சமெல்லாம் பல வண்ணம்'. தெலுங்கில் “ சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு” என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளிய இந்த படத்தில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி, சமந்தாவும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இசை - மிக்கி ஜே.மேயர், பாடல்கள் - அமான்ராஜா, சுதந்திரதாஸ், ஏக்நாத், உமாசுப்பிரமணியம், கார்கோ அருண…

  16. யூடியூப் தளத்தில் 1 பில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனைப் படைத்தது ரௌடி பேபி பாடல்! நடிகர் தனுஷ் மற்றும் சாய்பல்லவியின் அட்டகாசமான கூட்டணியில் உருவாகியுள்ள ரௌடி பேபி பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனைப் படைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம், யூடியூபில் 900 மில்லியன் அதாவது 90 கோடி பார்வைகளை பெற்ற குறித்த பாடல் தற்போது 100 கோடி பார்வைகளை பெற்றுள்ளது. தென்னிந்திய மொழிகளில் வேறு எந்தப் பாடலும் யூடியூப் தளத்தில் இந்த எண்ணிக்கையைத் தொட்டதில்லை. இதுகுறித்து நடிகர் தனுஷ் தெரிவிக்கையில், “கொலைவெறி பாடல் வெளியான 9-வது வருடத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது ரௌடி பேபி பாடல். 100 கோடி பார்வைகளைத் …

  17. தமிழ் சினிமாக்களில் அம்பேத்கர்... ஏன், எதற்கு, எப்படி?! #Ambedkar சுகுணா திவாகர் அம்பேத்கர் அம்பேத்கரின் நினைவுதினமான இன்று அவரை தமிழ் சினிமா எவ்வாறு கையாள்கிறது, எவ்வாறு கையாளவேண்டும் என்பதை அலசுகிறது இக்கட்டுரை. அரசியல் சார்பற்றது என்று சொல்லப்பட்டாலும்கூட, தமிழ் சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே அது ஏதோ அரசியலைச் சார்ந்துதான் இருக்கிறது, படத்தின் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, சமயங்களில் பாடலாசிரியரின் அரசியல்கூட திரைப்படங்களில் பிரதிபலிப்பது உண்டு. 'சிவகாமியின் மகனிடம் சேதி சொல்லடி' என்று காங்கிரஸில் சேர காமராஜரிடம் கண்ணதாசன் 'பட்டணத்தில் பூதம்' பாடலின் மூலம் தூதுவிட்டார். …

  18. நடிகர் விஜயின் சொத்துகளை இலங்கை அரசு சுவீகரிப்பு.? - விஜய் தரப்பு பதில்.! தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கிவரும் இளைய தளபதி விஜய்க்கு சொந்தமாக இலங்கையில் உள்ள சொத்துகள் சுவீகரிக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகள் குறித்து விஜய் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான சங்கீதாவையே இளைய தளபதி விஜயின் திருமணம் செய்திருந்தார். அந்த வகையில் இலங்கையில் பல சொத்துகள் இளைய தளபதி விஜய் குடும்பத்தின் பெயரில் ஏறங்கனவே வாங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த சொதுகளை இலங்கை அரசு சுவீகரித்துள்ளதாக தகவல்கள் இணைய வெளியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தகவலை நடிகர் விஜய் தரப்பு மறுத்திருப்…

  19. திரை வெளிச்சம்: பலே… பலே… ‘பஃபே’ விருந்துகள்! ‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜியிலிருந்து.... திரையரங்குகளுக்கெனத் தயாரானத் திரைப்படங்கள் பலவும், கரோனா காரணமாக ஓ.டி.டி தளங்களில் வெளியாகிவருகின்றன. இவைதவிர ஓ.டி.டி. தளங்களுக்குப் பிரத்யேகமாகத் தயாரான ஆந்தாலஜி திரைப்படங்களும் அவ்வப்போது வெளியாகின்றன. தமிழ்ச் சூழலில், பிரபல இயக்குநர்கள், கலைஞர்களின் கூட்டணியில் உருவாகி அமேசானில் வெளியான ‘புத்தம் புது காலை’, நெட்பிளிக்ஸில் வெளியாகவிருக்கும் ‘பாவக் கதைகள்’ போன்ற ஆந்தாலஜி முயற்சிகள், தமிழ் சினிமாவின் அடுத்தகட்ட நகர்வுபோல் சினிமா ரசிகர்களைப் பரவலாக ஈர்த்துவருகின்றன. வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய பொதுவான ஒரு கருத்தாக்கம், காலகட்டம் அல்லது இலக்கிய வடிவத்தைக் கொண்ட க…

  20. நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்; பகுதி -01 – என்.கே.எஸ். திருச்செல்வம் நேற்று முன்தினம் ஒரு மறக்க முடியாத நாள். இசை மாமேதை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் தன் உடலை மட்டும் இவ்வுலகில் இருந்து எடுத்துச் சென்ற நாள். ஆனால் நம் நெஞ்சில் நிறைந்த பாடல்களை எமக்கெல்லாம் உயிராகத் தந்து விட்டுச் சென்ற நாள். அண்ணன் எஸ்.பி.பி. அவர்களின் பாடல்கள் தொடர்பில் கடந்த 50 வருடங்களாக என் அடி மனதில் தேங்கிக் கிடக்கும் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் அன்று எனது பேச்சாகவும், மூச்சாகவும் இருந்தது அவரின் பாடல்களே. ஒரு திரையுலகப் பிரபலத்திற்காக நான் அதிக மனவேதனை அடைந்த இரண்டாவது சந்தர்ப்பம் நேற்றைய தினத்தில் நடந்தது. …

  21. மேதகு திரைப்பட முன்னோட்டம் தமிழீழ தேசிய தலைவரின் வாழ்க்கை வரலாறு. 21 வயதே ஆனா பிரபாகரன் எனும் இளைஞன் ஆயுதப் போராட்டாம் தான் தமிழீழ விடுதலைக்கான ஒரே தீர்வு என கருதி தன்னை முழுமையாக போராட்ட களத்தில் அற்பணிக்க துணிந்ததற்கு பின்னால் உள்ள அரசியலே இக்காவியம். Direction : Kittu DOP : Riyas Music : APK Art Director : Mujbur, Ajar Editing : Elango DI : Vinayagam CG : Aravind Sound Recording : Golden Studio உறவுகளுக்கு வணக்கம், “மேதகு” முன்னோட்டம் இன்று (21/10) புதன் மாலை இந்திய நேரம் 6 …

  22. தியேட்டர்களில் வரவேற்பு இல்லை - 18 புதிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப் பட்டதையடுத்து கடந்த 10-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அதன் பிறகு சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’, ‘மரிஜுவானா’ உள்ளிட்ட 7 படங்கள் தியேட்டர்களில் வெளியிடப்பட்டன. ஆனால் இந்த 7 படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. கொரோனா அச்சம் காரணமாக தியேட்டர்களுக்கு செல்லவே ரசிகர்கள் பயப்படுகிறார்கள். இதனால் தியேட்டர்களில் கூட்டம் இல்லை. தீபாவளி பண்டிகையின் போது தமிழகம் முழுவதும் 700 தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டம் வராததால் 50 தியேட்டர்கள் மூடப்பட…

  23. முதல் பார்வை: சூரரைப் போற்று ஏர் ஓட்டும் விவசாயியாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவர்களை ஏரோப்ளேனில் பயணிக்க வைக்க வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்ட விமான சேவை நிறுவன அதிபரின் கதையே 'சூரரைப் போற்று'. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள ஒரு பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர் நெடுமாறன் ராஜாங்கம் (சூர்யா). அப்பா ஆறுவிரல் வாத்தியார் (பூ ராமு) மனு எழுதிப் போட்டு மின்சார வசதி உள்ளிட்ட கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உதவுபவர். அவரின் அஹிம்சா வழி மனுவால் சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்த முடியவில்லை. ஆனால், போராட்டத்தால் அதிர்வலையை ஏற்படுத்துகிறார் அவரின் மகன் சூர்யா. இது அப்பாவுக்குப் பிடிக்காமல் போகிறது. இதனால் மோதல் வலுக்க, சூர்யா தேச…

  24. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் அந்தகாரம், நெட்ஃப்ளிக்ஸில் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகியிருக்கும் மேலும் ஓர் அமானுஷ்ய - த்ரில்லர் படம். வினோத்தின் (அர்ஜுன் தாஸ்) டெலிஃபோன் பழுதாகிவிட வேறு ஒரு போனை வைக்கிறார்கள் பி.எஸ்.என்.எல்காரர்கள். ஆனால், அந்த போன் வந்ததிலிருந்து வினோதிற்கு பல பிரச்சனைகள் வந்து சேர்கின்றன. யாரோ தொலைபேசியில் அழைத்து, அவரது ஆத்மாவை உடலிலிருந்து விடுவிக்கப் போவதாகச் சொல்கிறார்கள். பார்வையில்லாத இளைஞனான செல்வத்திற்கு (வினோத் கிஷன்) சிறுநீரகக் கோளாறு. சிறுநீரகத்தை மாற்றத் தேவைப்படும் ரூபாய்க்காக, ஒரு வீட்டிலிருக்கும் ஆவியை ஓட்டுவதற்கு ஒப்புக்கொள்கிறார் செல்வம். ஆனால், அது விபரீதமாக முடிகிறது. மனநல நிபுணரான…

  25. கருப்பன் குசும்புக்காரன், தன்னோடு அழைத்துச் சென்று விட்டார். ஆழ்ந்த இரங்கல்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.