வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5562 topics in this forum
-
ஹலிவூட் பட கதை சுருக்கமாக மரண பீதியுடன் பார்க்க வேண்டிய படம்
-
- 0 replies
- 393 views
-
-
தமிழகத்தில் மீண்டும் திறக்கப்படுகின்றன திரையரங்குகள் – வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது அரசு! தமிழகத்தில் எதிர்வரும் நவம்பவர் 10ஆம் திகதி முதல் திரையரங்குகளை திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, * திரையரங்க வளாகத்திற்குள் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். * முககவசம் அணியாதவர்களை திரையரங்கினுள் அனுமதிக்கக்கூடாது. * திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும் * திரையரங்குக்கு வெளியேயும், பொது இடங்களிலும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும். * திரையரங்கின் நுழைவாயிலில் மக்கள், ஊழியர்கள் என அனைவருக்க…
-
- 2 replies
- 686 views
-
-
தீபா மேத்தாவின் Funny Boy கனடாவின் சிறந்த பிறமொழிப்படமாக ஒஸ்காருக்கு தெரிவு பிரபல தமிழ்க் கனடிய எழுத்தாளர் ஷியாம் செல்வதுரையின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் 93 வது ஒஸ்கார் திரைப்பட விழாவுக்கு கனடாவிலிருந்து செல்லும் சிறந்த பிறநாட்டுப் படமாக, தீபா மேத்தாவின் Funny Boy தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. தீபா மேத்தா ஒஸ்கார் விழாவில் போட்டியிடத் தெரிவாகும் சிறந்த சர்வதேச படப் பிரிவில், இது இரண்டாவதாகும். 2007 ல் Water என்ற அவரது படம் ‘சிறந்த பிறமொழிப் படப்’ பிரிவில் போட்டிக்குத் தெரிவாகியிருந்தது. ஆனாலும் அதற்கு விருது கிடைக்கவில்லை. Telefilm Canada வின் ஆதரவுடன் வெளிவரும் இப்படம் இலங்கையர்களைப் பற்றியும், அங்கு நட…
-
- 4 replies
- 679 views
-
-
ஏழிசை வேந்தர் எம்.கே.டி. தென்னிந்தியாவின் முதல் மக்கள் நாயகன் என்ற பெருமைக்குரியவர் ‘எம்.கே.டி’ என இசை ரசிகர்களால் அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர். சினிமா என்கிற ஊடகத்தின் வெளிச்சத்தில், தமிழில் உருவான முதல் பிம்பம் அவர். பள்ளிப்பிராயக் காலத்தில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் நாடகப் பாடல்கள் அவரை வெகுவாகக் கவர்ந்து ஈர்த்ததோடு, ஓர் உந்துசக்தியாகப் பாடத் தூண்ட, தான் இயற்கையாகப் பெற்றிருந்த மதுர கானக் குரலில் பாடத் தொடங்கிவிட்டார். ‘திருச்சி ரசிக ரஞ்சனி சபா' அரங்கேற்றிய ‘ஹரிச்சந்திரா' நாடகத்தில், லோகிதாசன் கதாபாத்திரத்தை ஏற்றுத் தனது நாடக உலக அரங்கேற்றத்தைச் செய்தபோது, அவருடைய வயது 10. தீவிரமான ஆறு வருட கால கர்னாடக இசைப் பயிற்சிக்கு…
-
- 0 replies
- 287 views
-
-
பிரபாகரன் பெயரை வைத்து.!? "மேதகு" திரைப்படம் கதை.!? உண்மையை உடைக்கும் "கிட்டு நையப்புடை" Exclusive...
-
- 7 replies
- 1.3k views
-
-
விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தற்போது ‘லாபம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில், விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். விஜய்சேதுபதி நடிக்கும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா.. நமக்கெதற…
-
- 215 replies
- 22.4k views
- 1 follower
-
-
100 பேரில் ஒருவருக்கு மட்டுமே புரியும் படம். அதி புத்திசாலிகள் மட்டும் பார்க்கவும் - Riaru Onigokko😁
-
- 0 replies
- 445 views
-
-
பிரபாகரன் கேரக்டரில் விஜய் சேதுபதி: இயக்குநர் அழைப்பு! மின்னம்பலம் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையைப் பேசும் '800' என்ற திரைப்படத்தில், முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். இதுதொடர்பான போஸ்டர்களும் வெளியாகி இருந்த நிலையில், அதற்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விஜய் சேதுபதி அந்தப் படத்திலிருந்து விலக வேண்டுமென கோரிக்கை வைத்தன. இதனால் விஜய் சேதுபதியின் கலைத் துறை எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அவர் இந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என முத்தையா முரளிதரன் கோரிக்கை வைக்க, அதற்கு நன்றி, வணக்கம் என்று சொல்லி விலகலை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் பிரபாகர…
-
- 19 replies
- 2.7k views
-
-
“சூரரைப்போற்று” படத்திற்கு தடையில்லை! சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்திற்கு தடையில்லா சான்று கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரைப்போற்று’. இந்தப் படத்தை வருகிற 30ம் தேதி நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிட திட்டமிட்டிருந்த போதும் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சூர்யா, சூரரைப்போற்று படம் இந்திய விமானப்படை மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய கதைக்களத்தை கொண்டது என்பதால், அவர்களிடம் பல அனுமதிகளை பெற வேண்டி உள்ளதாகவும் இன்னும் சில என்.ஓ.சி. எனப்படும் தடையில்லா சான்றிதழ்களுக்கு ஒப்புதல் பெற வேண்டியுள்ளதால் படம் திட்டமிட்டபடி 30ஆம் திகதி வெளியாகாது என கூறி இருந்தார். …
-
- 0 replies
- 750 views
-
-
ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் - மத்திய அரசு விருது அறிவிப்பு இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதன்படி 2019ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசின் விருது அறிவித்துள்ளது. இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் கடந்த ஆண்டு ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இருந்தார். இந்திய சினிமாவில் இது புதிய முயற்சி என்று பலரும் பாராட்டினர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வ…
-
- 1 reply
- 650 views
-
-
நடிகர் கவுண்டமணி உடல் நலம் குறித்து வதந்தி பரப்பிய யூரியூப் சேனல் மீது காவல்நிலையத்தில் புகார் ! ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் கவுண்டமணி இறந்துவிட்டதாக தொடர்ந்து வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவி வந்தன. இந்நிலையில் இன்று நடிகர் கவுண்டமணி உடல்நலம் குறித்து வதந்தி பரப்பிய யூரியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது வழக்கறிஞர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கவுண்டமணி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனினும், தான் நலமுடன் உள்ளதாகவும், இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கவுண்டமணி விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையி…
-
- 0 replies
- 1.3k views
-
-
பாடல் பதிவுக்கு முன் SPB இதைத்தான் செய்வார் - ரகசியம் உடைக்கும் யுகபாரதி
-
- 0 replies
- 527 views
-
-
“புத்தம் புதுக் காலை” (அமேசான் பிரைம் - OTT வெளியீடு) ஆர். அபிலாஷ் ஐந்து குறும்படங்களையும் படங்களையும் பார்த்தேன். பலரும்சொல்வதைப் போல பழமை வீச்சம், தேய்வழக்குகள் அதிகம். எனக்கு அதை விட இப்படங்களின் திரைக்கதை அவசரமாய்உருவாக்கப்பட்டதைப் போலத் தோன்றுகிறது. ஓரளவுக்குநன்றாக வந்த Coffee, Anyone? கூட கிளைமேக்ஸை கோட்டைவிட்டதை போலத் தோன்றுகிறது. அப்படத்தைப் பற்றி முதலில்சொல்லுகிறேன். சுஹாசினி எழுதி இயக்கிய இப்படத்தில் மற்ற படங்களை விடதிரைக்கதை மேலாக இருக்கிறது. மூன்று சகோதரிகளின்வாழ்வில் வரும் சிறிய நெருக்கடிகள், அதை அவர்கள் ஒரேசம்பவத்தின் - அம்மா கோமாவுக்கு சென்று, வீட்டில் வைத்துஅப்பாவால் கவனிக்கப்பட்டு, அதிசயமாய் மீண்டு …
-
- 0 replies
- 686 views
-
-
ஜோதிகா வழங்கிய ரூ.25 லட்சம் நிதி உதவியால் புத்துயிர் பெற்ற அரசு மருத்துவமனை நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டார். பின்னர் அதுகுறித்து ஒரு விருது விழாவில் பேசிய ஜோதிகா, “கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை. இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. கோவிலுக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு தரும் கவனம், உண்டியலில் போடும் பணத்தை போல் பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கும் கொடுங்கள். அந்த மருத்துவமனையை பார்த்து விட்டு என்னால் கோவிலுக்கு செல்ல ம…
-
- 5 replies
- 1.4k views
-
-
உலக சினிமா - அப்பாஸ் கிராஸ்தமி.! உலக சினிமா ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் திருப்பியதில் முக்கியமானவர் அப்பாஸ் கிராஸ்தமி (Abbas Kiarostami). 1940-ல் டெஹ்ரானில் பிறந்த இவர் ஆரம்பகாலத்தில் விளம்பரப் படங்களை வடிவமைக்கும் ஓவியராக இருந்தார். 1969-ல் இவர் இயக்கிய 12 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமே இவரது முதல் திரைமுயற்சி. ‘Taste of Cherry’, ‘Where is the friends Home’, ‘Through the Olive trees’, ‘Close up’, ‘Life and nothing more’, ‘Ten’ ஆகியவை அப்பாஸ் கிராஸ்தமி இயக்கிய முக்கியமான திரைப்படங்களில் சில. டெஹ்ரானை சுற்றியுள்ள கிராமங்களே இவரது படங்களின் முக்கிய கதைக் களன்களாக இருந்து வருகின்றன. கிராமத்து மனிதர்களையே இவர் பெரும்பாலும் தனது படங்களில் நடிக்க வைக…
-
- 0 replies
- 460 views
-
-
எள்ளு வய பூக்கலையே’ பாடலுக்கு பின் இருக்கு ரகசியம் எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா கொல்லையில வாழ எல கொட்டடியில் கோழி குஞ்சு அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா காத்தோட உன் வாசம் காடெல்லாம் ஒம் பாசம் ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா சாவையும் கூறு போட்டு கொல்லய்யா கல்லாக நின்னாயோ கால் நோக நின்னாயோ கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு மல்லாந்து போனாலும் மண்ணோடு சாஞ்சாலும் அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு தலைச்சம் புள்ளை இல்லாம சரிஞ்சது எத்தன ஆட்சி நீயே எங்க ராசா வா வா களத்துக்கு…
-
- 0 replies
- 564 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் அமெஸான் பிரைமில் வெளியாகியிருக்கும் "புத்தம் புது காலை", ஐந்து குறும்படங்களின் தொகுப்பு. கொரோனா ஊரடங்கின் பின்னணியில் பாஸிட்டிவான உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட படங்கள் இவை. பட மூலாதாரம், PUTHAMPUTHUKALAI படக்குறிப்பு, இளமை இதே இதோ பட காட்சி முதல் படம் சுதா கோங்கரா இயக்கியிருக்கும் 'இளமை இதோ, இதோ'. மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும் கணவனை இழந்த பெண்ணும் இடையிலான காதலே இந்தப் படத்தின் கதை. இருவருக்கும் வளர்ந்த குழந்தைகள் இருந்தாலும், இளம் காதலர்களைப் …
-
- 0 replies
- 373 views
-
-
நடிகை குஷ்பு மீது மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார் மதுரை, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த நடிகை குஷ்பு, அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்த பின்னர் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் தான் 6 ஆண்டுகள் இருந்ததாகவும், தனக்கு அங்கு மரியாதை தரப்படவில்லை என்றும் கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சியில்லாத கட்சி என்று அவர் விமர்சனம் செய்தார். அவரது கருத்துக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நி…
-
- 0 replies
- 316 views
-
-
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பில் அருமையான கிராமிய மணம் கமழும் ஓர் திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் P.விருமாண்டி. ஏற்கெனவே நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதை இது. இவ்வாறான பல சம்பவங்கள் நிஜமாகவே நிகழ்ந்திருந்தாலும், இத்திரைப்படத்தின் மையக்கருவை ஒத்த கதையினை வேறெந்தத் திரைப்படத்திலும் இதுவரை நான் பார்த்ததில்லை. தமிழகத்தில் கிராமத்து மக்களின் கடினமான வாழ்க்கைச் சூழலையும், அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விதமான சவால்களையும் இத்திரைப்படம் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. கலகலப்பும், கலக்கமும் நிறைந்த காட்சிகள் மாறிமாறி இத்திரைப்படத்தின் முதற்பாதியை சற்று மசாலாத்தனத்துடன் நிறைத்திருந்தாலும் ரசிக்கும்படியாகவே இருந்தது. பரப…
-
- 14 replies
- 1.5k views
-
-
இரண்டாம் குத்து: ஆபாசத்தை ஒழித்து இளைஞர்களைக் காப்போம்! மின்னம்பலம் இரண்டாம் குத்து என்கிற இருட்டு அறையில் முரட்டுக்குத்து - பாகம் 2 திரைப்படம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. முதல் பாகம் ரிலீஸானபோதே இப்படிப்பட்ட பஞ்சாயத்துகளை சளைக்காமல் எதிர்கொண்ட அத்திரைப்படம் கட்டுக்கடங்காத பார்வையாளர்களை தியேட்டரிலும், சோஷியல் மீடியாக்களிலும் பெற்றது. அந்தப்படத்தை தியேட்டரில் பார்த்தவர்கள் 20 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் தான். நல்ல லாபத்தையும் சம்பாதித்தது. அப்படி இருந்தும், இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் ரிலீஸானதிலிருந்து இந்தப்படத்தை எதிர்த்துப் பேசுபவர்களும் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர். இயக்குநர் பாரதிராஜா தொடங்கிவைத்த …
-
- 14 replies
- 1.7k views
-
-
-
-
- 0 replies
- 463 views
-
-
விஜய் சேதுபதி நடிக்கவுள்ள முத்தையா முரளிதரன் பயோபிக் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்த் திரையுலகில் அதிகமான படங்களில் நடித்து வருபவர் விஜய் சேதுபதிதான். அவருடைய நடிப்பில் 'கடைசி விவசாயி', 'மாஸ்டர்', 'மாமனிதன்', 'உபென்னா', 'இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்கள் தயாராகியுள்ளன. 'லாபம்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'லால் சிங் சத்தா', 'துக்ளக் தர்பார்', 'காத்து வாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன. இந்தப் படங்கள் போக முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமானார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற…
-
- 1 reply
- 493 views
-
-
படப்பிடிப்பின் போது பலத்த காயம் பிரபல ஹீரோ அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி எர்ணாகுளம் மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் டொவினோ தாமஸ். இவர் நடித்த கோதா, அபியம் அனுவம் மற்றும் மாயநாதி போன்ற படங்கள் பெறும் வரவேற்பை பெற்றன. தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி-2 படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். இதனிடையே அவர் தற்போது வரவிருக்கும் காலா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் காலப்பட படபிடிப்பின் சண்டை காட்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக டொவினோ தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கேரள் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் டொவினோவ…
-
- 3 replies
- 1.1k views
-
-
`காணக்கூடாத சாதி'யும் பெண் தெய்வமும்... லீனா மணிமேகலையின் `மாடத்தி' பேசும் அரசியல் என்ன? சுகுணா திவாகர் மாடத்தி திரையரங்குகளிலோ ஓடிடி தளங்களிலோ 'மாடத்தி'யைக் காண இயலாத சூழலில் நீங்கள் 'மாடத்தி'யை இணையத்தின் மூலம் பார்ப்பதற்கான வாய்ப்பு அமைந்திருக்கிறது. சாதிய ஒடுக்குமுறையும் தீண்டாமையும் இந்தியாவின் நூற்றாண்டுகால துயர வரலாறு. தீண்டப்படாத சாதிகள் இருப்பதைப்போலவே 'காணக்கூடாத சாதிகளாக' இருப்பவர்கள் புதிரை வண்ணார்கள். இவர்கள் பகலில் நடமாடக்கூடாது. இரவில் மட்டும்தான் வெளியில் வரவேண்டும். எப்படி பட்டியலினச் சாதிகள் பிற ஆதிக்கச்சாதிகளால் ஒடுக்கப்படுகிறார்களோ, அதைப்போல பட்டியலினச் சாதிகளால் ஒடுக்குமுறைக்கு உள்…
-
- 0 replies
- 698 views
-