Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சமந்தாவும், அவருடன் கல்லூரியில் படிக்கும் ஒரு பையனும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். ஆனால், பெற்றோர்கள் சம்மதிக்காததால், ஃபஹத் ஃபாசிலுக்கும் சமந்தாவுக்கும் திருமணம் நடைபெற்று விடுகிறது. திடீரென ஒருநாள் பழைய காதலனிடம் இருந்து சமந்தாவுக்கு போன். அவன் கஷ்டத்தில் இருப்பதாகச் சொல்ல, அவனுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கும் சமந்தா, வீட்டுக்கு வரச் சொல்கிறார். வந்த இடத்தில் இருவருக்கும் இடையே உடலுறவு நடந்துவிடுகிறது. சமந்தா இரண்டாவது ஆட்டத்தைத் தொடங்கும்போது, அவன் இறந்துவிடுகிறான். என்ன செய்வதென்று தெரியாமல், அவனை ஃப்ரிட்ஜுக்குள் வைத்துவிடுகிறார் சமந்தா. வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பும் ஃபஹத், ஃப்ரிட்ஜுக்குள் ஒருவன் பிணமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகி…

  2. நடிகை நமீதா காரில், பறக்கும் படையினர் அதிரடி சோதனை.. நடுரோட்டில் கடும் வாக்குவாதம் கணவருடன் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்ற நடிகை நமீதாவின் காரை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக கட்சியில் இணைந்த நடிகை நமீதா, கடந்த தேர்தலின்போது நட்சத்திர பேச்சாளராக வாக்கு சேகரித்தார். ஆனால், நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு யாருக்கும் ஆதரவு இல்லை என ஒதுங்கி உள்ளார். இந்த நிலையில், அவரின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், நடுரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க சேலம் மாவட்டத்த…

  3. பேய் இருப்பது போன்று வீடியோக்களை எடுத்து மக்களை ஏமாற்றி யூ டியூபில் காசு பார்க்கும் நயன்தாரா, நிஜமாகவே பேயிடம் சிக்கினால்..? மீடியாவில் வேலை பார்க்கும் யமுனாவுக்கு, பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். யூ டியூப் ஆரம்பிக்கலாம் என்ற அவரது ஐடியாவை, அலுவலகத்தில் ஏற்க மறுக்கின்றனர். இதனால் வெறுத்துப்போய் பொள்ளாச்சியில் இருக்கும் தன் பாட்டி வீட்டுக்குப் போகிறார் யமுனா. பாட்டி வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில், தன் நிழலைப் பார்த்து தானே பயப்படும் யமுனாவுக்கு, இதையே வீடியோவாக்கி காசு பார்க்கலாம் என்ற ஐடியா தோன்றுகிறது. அதன்படி தன் பாட்டி மற்றும் யோகி பாபுவுடன் பேய் வீடியோ எடுத்து யூ டியூபில் பிரபலமாகிறார் யமுனா. ஒருநாள் நிஜமாகவே பேய…

  4. 'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 1978-ம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து 'உதிரிப்பூக்கள்', 'ஜானி', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'கை கொடுக்கும் கை' என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். முன்னதாக, 'சபாஷ் தம்பி', 'நிறைகுடம்', 'கங்கா', 'திருடி' உள்ளிட்ட சில படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார். கதையாக எழுதி கிடைத்த வரவேற்பைவிட, இயக்குநராக அவருக்குக் கிடைத்த இடம் மிகவும் பெரியது. 2006-ம் ஆண்டு வெளியான 'சாசனம்' என்ற படம்தான் மகேந்திரன் இயக்கிய கடைசிப் ப…

  5. கமலால் அவ்வளவு பெரிய அசிங்கத்துக்கு ஆளான டைரக்டர் ஷங்கர்....! இந்தியன் 2’ என்ற படத்துக்கு பெரிய தொகையாக அட்வான்ஸ் வாங்கியிருக்கிறோம். அப்படம் துவங்கி ஒரு வார கால படப்பிடிப்பு கூட நடக்காமல் அந்தரத்தில் நிற்கிறது என்கிற எண்ணம் துளியும் இல்லாமல் அரசியலில் கமல் முழு மூச்சில் இயங்கிக்கொண்டிருக்க, பட இயக்குநர் ஷங்கரோ கமலால் தொடர்ந்து சில அவமானங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் ’இந்தியன் 2’ கடந்த ஜனவரி 18, படப்பிடிப்பு சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கி ஒருவார கால படப்பிடிப்புக்குப் பின்னர் நொண்டியடிக்க ஆரம்பித்தது. அப்போது எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்ததபோது கமலின் ஒப்பனை பொருத்தமில்லாமல் இருந…

  6. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் ஷூட்டிங், ஏப்ரல் 10-ம் தேதி தொடங்குகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சர்கார்’. விஜய் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்தார். வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு, ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படம் அரசியல் சம்பந்தப்பட்டது எனவும், அதற்கு ‘நாற்காலி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அதை ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துள்ளார். இதுவரை …

  7. திரைப்பட நடிகைகள் குறித்து அவதூறாகக் கருத்துக்களை வெளியிட்ட நடிகர் ராதாரவியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது தி.மு.க. இது தொடர்பாக தி.மு.கவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடிகர் ராதாரவி தங்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டுவருவதாகக் கூறி, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமை Getty Images Image caption ராதா ரவி இந்த அறிவிப்பை …

  8. மீண்டும் திரைப்பட பாடல்களை எழுதுவதற்கு தயாராகிவிட்டேன்- வைரமுத்து அறிவிப்பு கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக, இருபதிற்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய ஆளுமைகளைப் பற்றி தமிழாற்றுப்படை கட்டுரைகளை படைத்து முடித்து விட்டேன். தற்பொழுது மீண்டும் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காகவும், கவிதை எழுதுவதற்கும் காத்திருக்கிறேன். இளம் இயக்குநர்களும், இளம் இசையமைப்பாளர்களும் என்னை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘நெடுநல்வாடை’ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதன் போது, விழாவில் சிறப்பு அதிதியாக பங்கு பற்றிய வைரமுத்து தெரிவிக்கையில், “நெடுநல்வாடை’ என்ற இந்த படத்…

  9. முதல் பார்வை: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உதிரன்சென்னை அளவுக்கு அதிகமாக நேசித்த காதலியை விட்டு காதலன் விலக நேர்ந்தால் அதுவே 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'. முரட்டுத்தனமும் முன்கோபமும் கொண்ட இளைஞன் கௌதம் ( ஹரிஷ் கல்யாண்). ஃபேஷன் டிஸைனிங் படிக்கும் கல்லூரி மாணவி தாரா (ஷில்பா மஞ்சுநாத்). தமிழ் சினிமாவின் எழுதப்படாத 555-வது விதிப்படி இவர்கள் இருவரின் முதல் சந்திப்பு மோதலில் முடிய, அடுத்தடுத்த சந்திப்புகள் நட்பாகவும் காதலாகவும் மலர்கிறது. ] அம்மாவின் பிரிவை ஹரிஷ் கல்யாணால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த ஏக்கத்துடனும் காயத்துடனும் வாழும் ஹரிஷ், காதலி ஷில்பா எந்த சமயத்திலும் தன்னை விட்டு விலகிப் போய்விடுவாரோ என்று அஞ்சுகிறார். அதனால் ஏற்படும் பதற்றத்திலு…

  10. இளையராஜா - எஸ்.பி.பி. வி.ராம்ஜி Posted: 15 Mar, 2019 11:41 am அ+ அ- வி.ராம்ஜி ’இளையராஜா எப்போதுமே சம்திங் ஸ்பெஷல். அவர் மாதிரி இசையமைக்க ஆளே இல்லை. அவருக்கு எத்தனை முறை தேசிய விருதுகள் கொடுத்தாலும் தகும்’ என பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தனியார் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இதில், ’ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ என்கிற ‘நினைவெல்லாம் நித்யா’ பாடலை சிறுவன் வெகு அழகாகப் பாடி அசத்தினான். அந்தப் பாடல் பாடி முடித்த போது, நெக்குருகி அழுதேவிட்டார் எஸ்.பி.பி. அப்போது எஸ்.பி.பி. பேசியதாவது:சில விஷயங்களை மனம் விட்ட…

  11. முதல் பார்வை: சத்ரு உதிரன்சென்னை குழந்தைகளைக் கடத்தும் குற்றவாளிகளைத் தண்டிக்கும் காவல் உதவி ஆய்வாளரின் கதையே 'சத்ரு'. ராயபுரத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிகிறார் கதிரேசன் (கதிர்). அவர் நேர்மைக்குப் பரிசாக பணியில் சேர்ந்து 2 ஆண்டுகளில் 2 முறை சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். பிரபாகரன் (லகுபரன்) தன் நண்பர்கள் 4 பேருடன் இணைந்து பணத்துக்காகப் பள்ளிக் குழந்தைகளைக் கடத்துகிறார். லகுபரன் 5 கோடி பணம் வேண்டும் என்று டீல் பேசுகிறார். இந்த சூழலை சாமர்த்தியமாகக் கையாண்டு குழந்தையையும், பணத்தையும் மீட்கிறார் கதிர். இதில் லகுபரனின் நண்பன் கொல்லப்படுகிறார். இதனால் ஆவேசமாகும் லகுபரன், கதிர் குடும்பத்தைக் கொலை செய்யப் போவதாக சவால் விடுக்கிறார். கதிர் தன் குடும்பத…

  12. திருமணம் சில திருத்தங்களுடன் - திரை விமர்சனம்! திருமணம் நடக்கும் விதத்தில் உள்ள சிக்கல்களைப் பற்றிப் பேசும் படம் எப்படி இருக்கிறது? திருமணம் நடத்துவது நிச்சயம் எளிமையான விஷயம் அல்ல. காதலர்கள், வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்வதுகொள்வது என்பதும் கடினம்தான். அப்படி ஒரு திருமணத்தில் எத்தனை தடங்கல்கள் ஏற்படும் என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான் திருமணம் சில திருத்தங்களுடன். உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ், சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, மனோபாலா முதலானோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் சேரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜமீன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, அக்காவின் பாசத்தம்பியாக அன்பிலும் …

  13. 90 எம்எல்: திரை விமர்சனம்! பாலுறவு உள்ளிட்ட சிக்கல்களைப் பெண்களின் பார்வையில் பேசும் இந்தப் படம் எப்படி உள்ளது? பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஓவியா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் 90 எம்.எல். அனிதா உதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கும்படியாக ஏ சான்றிதழுடன் வெளியாகியுள்ளது. நிவிஸ் என்டர்டெய்ன்மென்ட் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. அபார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் நான்கு தோழிகளுடன் புதிதாக வந்த ரீட்டா நட்பாகிறார். அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக வலம் வரும் ரீட்டாவை மற்ற பெண்களுக்குப் பிடித்துப் போகிறது. அவளைப் போல் தம்மால் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. ரீட்டாவின் குணநலன்கள் அவர்களையும் மாற்ற, துணிச்சலுடன் சுதந…

  14. ஆஸ்கர் 2019: விருதுகளைக் குவித்த படங்கள்! திரைப்படங்களுக்காக வழங்கப்படும் விருதுகளில் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள், திரைக் கலைஞர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது ஆஸ்கர் விருதுகளைத்தான். 91ஆவது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி இன்று (பிப்ரவரி 25) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டு ஆஸ்கர் நிகழ்ச்சியை ஹாலிவுட் நடிகர் ஹெவின் ஹர்ட் தொகுத்து வழங்குவதாக இருந்தது. 2009 -2011 காலகட்டத்தில் அவர் LGBT சமூகத்தவர்களை தரக்குறைவாகப் பேசியது கடந்த டிசம்பர் மாதம் ட்விட்டரில் பரவியது. இது தொடர்பாக சர்ச்சை உருவான நிலையில் அவர் மன்னிப்பு கேட்டதோடு ஆஸ்கர் நிகழ்ச்சியைத் தான் இந்த முறை தொகுத்து …

    • 1 reply
    • 716 views
  15. முதல் பார்வை: டுலெட் உதிரன்சென்னை வாடகைக்கு வீடு தேடும் படலத்தில் அவதிப்படும் ஒரு குடும்பத்தின் கதையே 'டுலெட்'. சினிமா துறையில் உதவி இயக்குநராக இருப்பவர் சந்தோஷ். அவரது மனைவி ஷீலா. இவர்களின் 5 வயது மகன் தருண் யு.கே.ஜி. படிக்கிறார். வீட்டின் உரிமையாளர் ஆதிரா அடுத்த மாதத்துக்குள் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று கறாராகச் சொல்கிறார். சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சந்தோஷ்- ஷீலா தம்பதியினர் சென்னை முழுக்க வாடகை வீடு தேடி அலைகிறார்கள். சாதி, மதம், உணவுப் பழக்கம், வேலையின் நிமித்தம் என்று பல்வேறு காரணங்களால் வீடு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் நண்பரின் ஆலோசனைப்படி சினிமாவில் வேலை செய்வதை மறைத்து வீடு தேடுகிறார் சந்தோஷ். ஆனால், அப்போதும் ஒரு…

  16. இலங்கையை ஆட்சி செய்த கடைசி மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்க மன்னனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் மும்மொழியிலும் உருவான திரைப்படம் தான் கிரிவெசிபுர. இத்திரைப்படத்தின் உத்தியோகபூர்வ முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தை தேவிந்த கோங்காகே இயக்கியுள்ளார். இவரே கதை,திரை கதை,வசனம் எழுதியுள்ளார். இக்கதைப்பற்றி 4 1/2 வருடங்கள் ஆராய்ச்சியும் செய்துள்ளார். கிரிவெசிபுர படத்தின் பிரதான கதாபாத்திரங்களாக புபுது சத்துரங்க (ஸ்ரீ விக்ரம இராஜசிங்கன்) மஹேந்திர பெரேரா (பிலிமதலவ்வை),புத்திக லொகுகெட்டிய (டொன் டி யெஸ்) ஆகியோர் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தில் ஸ்ரீ விக்ரம இராஜசிங்க மன்னனின் பட்டத்து ராணி ஸ்ரீ வெங்கட் ரங்கம்மாளாக இலங்கை தமிழ் சினிமாவின் ந…

    • 0 replies
    • 510 views
  17. சத்தியராஜ் மகளின் உன்னத கனவு நனவானது!! பிரபல நடிகர் சத்தியராஜ்ஜின் மகள் திவ்யா தென்னிந்தியாவில் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் என்பதுடன், இலாப நோக்கமற்ற உலகப் புகழ் தொண்டு நிறுவனமான அக்சயா பாத்ராவின் தூதுவராகவும் உள்ளார். இந்நிலையில் திவ்யா, கல்வி அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து தமிழ்நாட்டின் அரச பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான காலை உணவு வழங்க அரசாங்கம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை பரிசீலித்த அமைச்சர் அதற்கு அனுமதியும் வழங்கினார். இதையடுத்து அக்சய பாத்ரா தொண்டு நிறுவனமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து இன்று முதல் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க ஆரம்பித்துள்ளன. இதன் தொடக்க விழாவை இ…

  18. முதல் பார்வை: எல்கேஜி உதிரன் லால்குடியில் சாதாரண வார்டு கவுன்சிலராக இருக்கும் இளைஞன் வியூகம் வகுத்து தமிழக முதல்வராக உயர்ந்தால் அதுவே 'எல்கேஜி'. லால்குடி கருப்பையா காந்தி (ஆர்ஜே பாலாஜி) வார்டு கவுன்சிலராக இருக்கிறார். தன் அப்பா அழகு மெய்யப்பன் (நாஞ்சில் சம்பத்) மாதிரி தோற்றுப்போன அரசியல்வாதியாக இல்லாமல் வெற்றிபெற்ற அரசியல் தலைவராக வலம் வர வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக கார்ப்பரேட் கம்பெனியுடன் பேசி தமிழகத்தின் ஆளுமையாக குறுகிய காலத்திலேயே வளரத் திட்டமிடுகிறார். முதல்வர் ஆவுடையப்பன் (அனந்த் வைத்தியநாதன்) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் முதல்வருக்கு வந்த நோயை எதிர்த்து நூதனப்…

  19. படத்தின் காப்புரிமை Frazer Harrison/ Getty Images 91வது 'அகாடமி அவார்ட்ஸ்' எனப்படும் ஆஸ்கர் விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரிலுள்ள ஹாலிவுட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியான ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க வகையில் மக்களிடையே வரவேற்பையும், சமூகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்திய திரைப்படங்கள், நிபுணர்கள் குழுவின் தீவிர ஆலோசனைக்கு பிறகு, ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், எவரும் எதிர்பார்க்காத வகையில் 'கிரீன் புக்' திரைப்படம் சிறந்த திரைப்படம், உண்மைத் திர…

  20. Published : 22 Feb 2019 18:02 IST Updated : 22 Feb 2019 18:02 IST காதலியின் தீராத நோயைத் தீர்க்க முயற்சிகள் எடுக்கும் இளைஞனின் கதையே 'கண்ணே கலைமானே'. அப்பா, அப்பத்தாவின் சொல்லுக்குக் கட்டுப்படும் இளைஞன் கமலக்கண்ணன் (உதயநிதி). மதுரை மாவட்டம் சோழவந்தானில் மண்புழு உரம் தயாரிக்கும் பண்ணையை நடத்தி வருகிறார். ஊரில் உள்ள உறவுக்காரர்களுக்கும் இயற்கை விவசாயம் குறித்து வகுப்பெடுக்கிறார். முதியோர் இல்லம் திறக்க உதவுவது, வங்கிக் கடன், கல்விக் கடனுக்கு தன்னால் இயன்றதைச் செய்வது என்று ஊருக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறார். …

  21. மீடூ புகாருக்கு விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக் செய்திகள் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களில் அதிகமான பாடல்கள் பாடி உள்ள பிரபல பாடகர் கார்த்திக் மீது ‘மீ டூ’வில் சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் கூறப்பட்டது. வெளிநாட்டு தமிழ் பாடகி இந்த புகாரை கூறியிருந்தார். இதனை பாடகி சின்மயி வெளியிட்டார். இதற்கு தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் கார்த்திக் விளக்கம் அளித்து கூறியிருப்பதாவது:- “புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலில் உயிர் துறந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். என்மீது கூறப்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். என்னை சுற்றி எப்போதும் மகிழ்ச்சி பரவ வேண்டும் என்று விரும்புப…

  22. ஆஸ்கார் விருதுகள் 2019 – கோ. கமலக்கண்ணன் February 17, 2019 1 ஆஸ்கார் எப்போதும் ஒரு வித கலவையான ரசனையுடனேயே படத்தேர்வில் ஈடுபடுகிறது. முழுக்க சிறந்த திரைப்படங்களை மட்டுமோ, அல்லது முழுக்க வணிக வெற்றி படங்களையோ கொண்டோ அது தன் பட்டியலை நிரப்புவதில்லை. அது அதிகளவிலான மக்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டாடிக் கொள்வதற்கான தருணமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவதற்கான பிரயத்தனங்களிலேயே எப்போதும் ஈடுபடுகிறது. ஆஸ்காரின் தேர்வுகள் ஏதோவொரு அரசியல் நோக்கத்தைத் தன்னுள்ளே வைத்தே செயல்பட்டு வருகிறது என்பது இன்று புரிந்து கொள்ள முடியாத கருத்தமைவல்ல. அது கூடிய மட்டும் மக்கள் கூட்டத்தை அதிகமாக உள்ளடக்கிக் கொள்ளும் பொருளாதாரப் பணியில் தன் கவனத்தைக் கூர்கிறது. அதனால்தான், ஹோ…

  23. நாம் புலிகளாக இருந்தோம்! - இயக்குநர் செழியன் நேர்காணல் சந்திப்பு: ஆர்.சி.ஜெயந்தன் இது உலக சினிமாக்களை வியந்து கொண்டாடும் தலைமுறை யின் காலம். இப்போது தமிழ் சினிமா ஒன்றை உலகமே உச்சிமுகர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படம் ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், இயக்குநர் செழியனின் படைப்பாக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டுலெட்’. உலக அளவில் 100 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு, 84-ல் அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்ட படம். சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது உட்பட, மொத்தம் 32 சர்வதேச விருதுகளை அள்ளிக் குவித்திருக்கும் முதல் தமிழ் சினிமா. உலகம் சுற்றித் திரும்பியிருக்கும் ‘டுலெட்’ பிப்ரவரி 22 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில் இயக்குநர் செழியனைச்…

  24. திரை விமர்சனத்தின் எல்லை எது? - அ. குமரேசன் ‘பேரன்பு’ திரைப்படத்தை முன்னிட்டு விமர்சன வெளியில் ஒரு பயணம் எந்தவொரு படைப்பானாலும் கொண்டாடப்படுவதற்கு உரிமை கோருவது போலவே, ஏற்பின்மையையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும். இரண்டும் கலந்ததே விமர்சனம் அல்லது திறனாய்வு. நம் ஊரில் விமர்சனம் என்றாலே போட்டுத்தாக்குகிற வேலையாகவும், திறனாய்வு என்றாலே ஏதோ நுண்மாண் நுழைபுலம் வாய்க்கப்பெற்றவர்களின் வேலையாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இயக்குநர் ராமின் ‘பேரன்பு’ திரைப்படம் தொடர்பாகத் தேர்ந்த திரைப்பட விமர்சகர்களாக அறியப்பட்டவர்களும் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். அப்படியாக அறியப்படாத அம்மாக்களும் அப்பாக்களும் பிள்ளைகளும் விவாதிக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவு, இசைக் க…

  25. இளையராஜா 75 நிகழ்ச்சியில் சர்ச்சை... பார்த்திபனுடன் ஒரு சிறப்பு நேர்காணல்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.