Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஒரே 'சூப்பர் ஸ்டார்' தான்-விஜய் தமிழ் திரையுலகின் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு சொந்தக் காரர் ரஜினிகாந்த் மட்டுமே, அது வேறு எவருக்கும் பொருந்தாது என்று கூறியுள்ளார் நடிகர் விஜய். விஜய் தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக சத்தம் போடாமல் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந் நிலையில் திருவண்ணாமலை மாவட்ட விஜய் நற்பணி மன்றத்தின் 10வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி உதவிகள் வழங்கும் விழா விஜய் தலைமையில் கொட்டும் மழையில் திருவண்ணாமலையில் நடைபெற்றது. கன மழையிலும் இந்த விழாவிற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானவர்களைப் பார்த்து அசந்து போனார் விஜய். நிகழ்ச்சியில் பேசிய விஜய், நான் சினிமாவுக்கு வரும் முன் என் தந்தை எனக்கு நடிப…

    • 3 replies
    • 2k views
  2. தமிழில் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும், 'இளைஞன்’ படத்தில் இருந்துதான் என் கணக்கு ஆரம்பம்னு சொல்லலாம். அந்த அளவுக்கு பவர் ஃபுல் கேரக்டர் எனக்கு. நிச்சயம் 'இளைஞன்’ இன்னிங்ஸ் என் சினிமா கேரியரில் முக்கியமான படம்!''- கொஞ்சு தமிழில் கதைக் கிறார் சோட்டாணிக்கரை சேச்சி ரம்யா நம்பீசன்! ''அப்பப்ப வந்துட்டுப் போறீங்க... தமிழ்ல ஹீரோயின் பஞ்சம் இருக்குற நேரத்தைப் பயன்படுத்திக்க மாட்டேங்குறீங்களே?'' '' 'ராமன் தேடிய சீதை’யில் நல்ல கேரக்டர்தான் எனக்கு. ஆனா, அடுத்தடுத்து வந்த எல்லா வாய்ப்புகளும் அதே டிட்டோ அழுமூஞ்சி கேரக்டர்கள்தான். அதுல நடிச்சு பேரைக் கெடுத்துக் கறதுக்குச் சும்மாவே இருக்கலாம்னுதான் இருந்தேன். அப்படிக் காத்திருந்து கவர்ந்தது 'இளைஞன்’ வாய்ப்பு. நிச்சய…

    • 0 replies
    • 876 views
  3. தனக்கென்று தமிழ் சினிமாவில் 'புதிய பாதை' போட்ட ரா. பார்த்திபன் தற்போது 'வித்தகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி, மலையாளத்திலும் இவர் நடித்து வருகிறார். மலையாளத்தில் இவர் கதாநாயகனாக நடித்த 'மேல்விலாசம்' எனும் திரைப்படம் தமிழில் 'உள்விலாசம்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்திய ராணுவத்தில் அடிக்கடி நிகழும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. இப்படத்தை மாதவ் ராமதாஸன் என்பவர் இயக்கியிருக்கிறார். பார்த்திபனுடன் சுரேஷ் கோபி, 'தலைவாசல்' விஜய், 'நிழல்கள்' ரவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை என்னவென்றால் ஜவான் ராமச்சந்திரனாக வரும் பார்த்திபன், தனது ராணுவ உ…

  4. அரசியல் கோதாவில் இருந்து விலகி விட்ட குஷ்பு இப்போது சின்னத்திரையில் மட்டும் ஒரு சில நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். அதனால் முழுநேர தயாரிப்பாளராக முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே கிரி, ரெண்டு, நகரம் மறுபக்கம், கலகலப்பு ஆகிய படங்களை தயாரித்திருப்பவர், அஜீத்தை வைத்து ஒரு படம் தயாரிக்க கல்லெறிந்தார். ஆனால், அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதனால் அந்த முயற்சியை தற்காலிகமாக கைவிட்டுவிட்டார். ஆனால், இப்போது ஒரே நேரத்தில் 5 படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம் குஷ்பு. அப்படி தான் தயாரிக்கும் படத்தை தனது கணவர் சுந்தர்.சி மட்டுமின்றி மற்ற இயக்குனர்களுக்கும் இயக்க வாய்ப்பு கொடுக்கப்போகிறாராம். அதோடு ஏற்கனவே ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன்-ஹன்சிகாவை புக் பண்ணி வ…

  5. சத்யராஜ், மாதவன், த்ரிஷா ஆகியோர் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த கூட்டணியை ஒன்று சேர்த்தது பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ்! டூயட் மூவிசுடன், மோசர் பேர், மிர்ச்சி மூவிஸ் இணைந்து தயாரிக்கும் 'வெள்ளித்திரை' ஓர் இளம் இயக்குனரை பற்றியது. இதில் பிரபல நடிகர்கள் நடிப்பது போன்ற காட்சிகள் வருகின்றன. நடிகை த்ரிஷாவிடம் ப்ருதிவிராஜ் கதை கூறுவதுபோல் ஒரு காட்சி வருகிறது. இக்காட்சியில் த்ரிஷா நடிகை த்ரிஷாவாகவே நடித்துள்ளார். அதேபோல் சத்யராஜ், மாதவன், கார்த்தி ஆகியோர் ஒரு காட்சியில் நடிகர்களாகவே படத்தில் தோன்றுகின்றனர். இந்தக்காட்சி சமீபத்தில் ஏவி.எம்.ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. இதனை ஷூட் செய்த இயக்குனர் விஜி, மலையாள 'உயனாறு தாரம்' படத்தை அப்படியே ரீ-மேக் செ…

  6. ஒரே படத்தில் ஜெயம் ரவி, ஜீவா! சத்யம் திரையரங்கில் கூடியிருந்தவர்களுக்கு சந்தோஷ செய்தி ஒன்றை கூறினார் ஜெயம் ரவி. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றை விரைவில் இயக்க உள்ளாராம் ஜெயம் ரவி. இதில் தன்னுடன் நடிக்க ஜீவாவை கேட்டிருக்கிறார். அவரும் ஈகோ எதுவும் பார்க்காமல் கதையை கேட்டு உடனே ஓ.கே. சொல்லியிருக்கிறார். சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் நடைபெற்ற 'தெனாவட்டு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இந்தத் தகவலை வெளியிட்டார் ஜெயம் ரவி. பிறகு பேசிய ஜீவா இதனை ஆமோதித்ததுடன் தெனாவட்டு படப்பிடிப்பில் நடந்த தீ விபத்தை ஹாஸ்யத்துடன் சொல்ல முயன்றார். (காமெடி இன்னும் ஜீவாவுக்கு முழுதாக கைவரவில்லை) ராம. நாராயணன் ஆடியோவை வெளியிட ஜெயம் ரவி, ரமேஷ், ஜீவன், சீமான், சுப்ரமணியம் சிவா, நா.…

  7. ஒரே படம்...ஒரே தியேட்டர்...முடிவுக்கு வந்த 1009 வார சாதனை! மும்பை: இந்தி நடிகர் ஷாருக்கான் - கஜோல் நடித்து வெளியான 'தில் வாலே துல் ஹனியா லே ஜாயங்கே' படம் 1009 வாரங்கள் ஓடி சாதனை படைத்து, தனது திரையிடலை இன்றுடன் முடித்துக் கொண்டது. நடிகர் ஷாருகான் -கஜோல் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளிவந்த 'தில் வாலே துல் ஹனியா லே ஜாயங்கே' படமும், பாடல்களும் இந்தியா முழுவதும் பிரபலம் பெற்றது. மும்பையில் உள்ள ’மராத்தா மந்திர்’ தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம், இன்றுடன் 1009 வாரங்கள் (அதாவது சுமார் 20 ஆண்டுகள்) ஓடி உள்ளது. இந்த படம் இன்றுடன் மராத்தா மந்திர் தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 1000 வாரம் நிறைவு …

  8. ஒரே வருடத்தில் மூன்றாவது முறையாக கட்சி மாறும் நடிகை பூஜா காந்தி. எடியூரப்பா கட்சியில் இருந்து விலகி பிரபல நடிகை பூஜா காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீராமுலு முன்னிலையில் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சியில்... நடிகை பூஜா காந்தி தமிழ் மற்றும் கன்னடத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கன்னட சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக திகழ்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை பூஜா காந்தி திடீரென்று அரசியலில் காலடி எடுத்து வைத்தார். முன்னாள் முதல்–மந்திரி எச்.டி.குமாரசாமி முன்னிலையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இணைந்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு கட்சி கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டு அரசியலில் தீவிரம் காட்டி வந்தார். இந்த நிலை…

    • 0 replies
    • 349 views
  9. ஒரே வருடத்தில் ரஜினி, தனுஷ், விஷாலுக்கு ரெண்டு படங்கள்... 2018 தமிழ் மூவிஸ் லிஸ்ட்..! பல புதுமுகங்களுக்கான அடையாளம், சிறு பட்ஜெட் படங்கள் வெற்றி என ஓரளவு ஆரோக்கியமானதாக அமைந்தது இந்த வருட தமிழ் சினிமா. மேலும் ரிச்சி, வேலைக்காரன், அருவி, பலூன் என இந்த வருடம் வெளியாகும் படங்களே வெயிட்டிங்கில் இருக்க, அடுத்த வருடத்துக்கான ப்ளே லிஸ்ட் தயாராகிவிட்டது. 2018ல் வெளியாக இருக்கும் அதிக எதிர்பார்ப்புள்ள படங்களின் பட்டியல் இதோ... இமைக்கா நொடிகள்: ஹாரர் பட வரிசையில் நல்ல வரவேற்பைப் பெற்றது `டிமாண்டி காலனி'. இயக்குநர் அஜய் ஞானமுத்து மேலும் கவனம் குவிய அவரின் அடுத்த படமான `இமைக்கா நொடிகளி'ல் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், …

  10. இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்த முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர், அங்கு எஞ்சி வாழும் ஈழத் தமிழ் மக்கள், முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அரச பயங்கரவாதத்தால் அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு அவல நிலையில் உழல்கிறது என்பதையும் கடந்த காலத்தின் எச்சங்களுடன் சித்தரித்திருக்கிறது ‘ஒற்றைப் பனை மரம்’. 2009இல் போரில் சரணடைந்த பெண் போராளியான கஸ்தூரி (நவயுகா), ராணு வத்தின் குண்டு வீச்சுக்கு நிறைமாதக் கர்ப்பிணி மனைவியைப் பறிகொடுத்த சுந்தரம் (புதியவன் ராசய்யா), அவர் தனது மகளாகத் தத்தெடுத்துக்கொண்ட அஜாதிகா ஆகியோர் பல வருட முகாம் வாழ்க்கைக்குப் பின்னர், சொந்த ஊரான கிளிநொச்சிக்கு வந்து வசிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால், போருக்குப் பிறகான வ…

  11. [size=4]ஒலிம்பிக் தொடக்க விழாவில், பஞ்சாபி பாடல் ஒன்றுக்கு இசையமைத்துள்ளாராம் ஏ.ஆர்.ரஹ்மான்.[/size] [size=3][size=4]இளையராஜாவின் திரைப்பாடலும், ஏ.ஆர்.ரஹ்மானின் தனிப் பாடலும் லண்டன் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறுவது அனைவரும் அறிந்தது. இளையராஜா கடந்த 80களில் இசையமைத்து, கமல்ஹாசன் நடித்த ராம் லட்சுமண் படத்தில் இடம் பெற்ற நான்தான் உங்கப்பண்டா என்ற துள்ளல் இசைப் பாடல் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறுகிறது.[/size][/size] [size=3][size=4]அதேசமயம், ரஹ்மான் புதிதாக இசையமைத்துள்ள பாடல் தொடக்க விழாவில் இடம் பெறுகிறராம். தொடக்க விழா கமிட்டியின் தலைவரான இயக்குநர் டேனி பாயில் விருப்பத்திற்கேற்ப இந்தப் பாடலை வடிவமைத்துள்ளாராம் ரஹ்மான். இது ஒரு பஞ்சாபி பாடலா…

    • 9 replies
    • 1.3k views
  12. கமல் இயக்கத்தில் வெளியாக இருந்த 'விஸ்வரூபம்' திரைப்படம் ஜனவரி 2013க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிற்கு 'குருதிப்புனல்' படத்தின் மூலம் Dolby தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தினார். இந்திய திரையுலகில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு 'விஸ்வரூபம்'. இப்படத்தினை PVP சினிமாஸ் வெளியிட இருக்கிறது. அக்டோபர் 12ம் தேதி 'விஸ்வரூபம்' வெளியீடு என்று செய்திகள் வெளிவந்தன. இப்படத்துடன் சூர்யாவின் 'மாற்றான்' மோத இருக்கிறது என்று செய்திகள் களைகட்டின. இந்நிலையில் 'விஸ்வரூபம்' படத்தை 2013-ற்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள். 'விஸ்வரூபம்' படத்தின் ஒலியை Auro 3D என்ற தொழில்நுட்பத்தில் உருவாக்கி வருகிறார் கமல். Wilfried Van Baelen என்பவர் இப்பணியில் உதவி செய்வ…

  13. ஒளிக்குத் தப்பிய வாழ்க்கை செல்லப்பா தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் (31.10.1931) வெளியாகி 82 ஆண்டுகளாகிவிட்டன. தமிழகத்தில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் திரைப்படம் பார்க்கும் அனுபவம் விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே விளங்குகிறது. திரைப்படமோ அதுசார்ந்த மனிதர்களோ இல்லாவிட்டால் பெரும்பாலான தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்கள் நிகழ்ச்சிகளைக் குறிப்பாகச் சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரிக்கச் சிரமப்படும் என்பதே எதார்த்தம். ஒவ்வொரு வருடமும் சுதந்திரத் தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் வசீகரமான திரைத்துறை ஆளுமைகள் தம் அனுபவங்களை விவரித்து உரையாடும் காட்சிகள் பெரும்பாலான தொலைக்காட்சிகளில் காணக்கூடி…

  14. ஒளிப்பதிவாளர் இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார் மின்னம்பலம் புகைப்பட கலைஞர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் என பன்முக ஆளுமை திறன் கொண்ட கே.வி.ஆனந்த், திடீர் மாரடைப்பு காரணமாக இன்று(ஏப்ரல் 30) அதிகாலை 3மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.அவருக்கு வயது 54. கே.வி.ஆனந்த் 90களில் ஒளிப்பதிவாளராக தனது திரைப்பயணத்தை துவக்கினார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து கோபுர வாசலிலே, மீரா, திருடா திருடா, தேவர் மகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றினார். பின்னர் 1994ஆம் ஆண்டு மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘தென்மாவின் கொம்பத்து’ படத்தில் முதன்முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்…

  15. இலங்கைப் பற்றி 'CEYLON”எனும் தலைப்பில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனால் தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கும் படமானது 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் இலங்கையை பற்றியதாக இருக்கின்றது என்பதனால் அந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இந்த படத்திற்கு தமிழில் இப்படத்திற்கு 'இனம்' என்று பெயரிட்டு இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன், 'தளபதி', 'ரோஜா', 'இருவர', 'ராவணன்' உள்ளிட்ட பல படங்களுக்கு தனது வித்தியாசமான கேமரா கோணம், ஒளி அமைப்புகளால் பெயர் பெற்றவராவார். ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணைப்பில் உருவான 'துப்பாக்கி' படத்தின் ஒளிப்பதிவாளர் இவரே. ப்ருத்விராஜ் நடித்த 'உருமி' என்ற படத்தினையும் இவரே இயக்கி இருக்கிறார். 'துப…

  16. ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் கருத்துரிமையை நெறிக்கக் கூடாது: சூர்யா, கமல் எதிர்ப்புக் குரல் பட மூலாதாரம், Surya/Kamal படக்குறிப்பு, சூர்யா - கமல் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், கார்த்திக் சுப்புராஜ் என பலரும் தங்களது எதிர்ப்பை பதிவை செய்து வருகின்றனர்.ஏன் இந்த சர்ச்சை, இதன் பின்னணி என்ன? ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021 என்ன சொல்கிறது? பொதுவாக ஒரு திரைப்படம் திரையரங்கு மூலமாக மக்களை சென்றடைவதற்கு முன்பு அதற்கு 'யு, யு/ஏ அல்லது ஏ' சான்றிதழை தணிக்கை…

  17. ஒளிரும் நட்சத்திரம்: அஜித் 1. அஜித் என்றால் உழைப்பு, அஜித் என்றால் துணிவு என அர்த்தம் சொல்கிறார்கள் ரசிகர்கள். அதை ஒப்புக்கொள்ளும்விதமாக இருக்கிறது அஜித்தின் வாழ்க்கை. 16 வயதில் 11-ம் வகுப்பைத் தொடர விரும்பாத ‘ட்ராப் –அவுட்’ மாணவர். 19 வயதில் டூ வீலர் மெக்கானிக். 20 வயதில் தொழில் அதிபர். 22 வயதில் சினிமாவில் கதாநாயகன். 24 வயதில் பைக் பந்தய வீரர். மாநில அளவிலான பைக் பந்தயம் ஒன்றில் பங்கேற்றபோது, நேர்ந்த விபத்தில் அஜித்தின் முதுகெலும்பு முறிந்துபோனது. ஆனால், இன்றுவரை தனது தன்னம்பிக்கையைக் கைவிட்டதில்லை அஜித். 2. சென்னைத் தமிழரான சுப்ரமணியம் – கொல்க…

  18. ஒளிரும் நட்சத்திரம்: அனுஷ்கா ஓவியம்: ஏ. பி. ஸ்ரீதர் 1. திரையில் கவர்ச்சிக் கதாநாயகியாக வாழ்க்கையைத் தொடங்கி காவியக் கதாநாயகியாக உயர்ந்து காட்டியவர் அனுஷ்கா. 1981-ம் ஆண்டு, நவம்பர் 7 அன்று கர்நாடகா மாநிலம் மங்களூரில் விட்டல் ஷெட்டி - ஊர்மிளா பிரபுல்லா தம்பதியின் மகளாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் மகாலட்சுமி. சிறுவயதுமுதல் குடும்பத்தினர் ‘ஸ்வீட்டி’ என்ற செல்லப் பெயரால் அழைத்துவருகிறார்கள். இவருக்கு சாய் ரமேஷ், குணராஜ் ஆகிய இரு சகோதரர்கள் இருக்கிறார்கள். பெங்களூரு ஈஸ்ட்வுட் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்து, மவுண்ட் கார்மெல் கல்லூரியில் இளங்கலையில் கணினி அறிவியல் பயின்றவர். 2. …

  19. ஒளிரும் நட்சத்திரம்: சிவகார்த்திகேயன் ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர் 1. தொலைக்காட்சியிலிருந்து திரையுலகில் நுழைந்து முன்னணிக் கதாநாயகனாக வென்ற பலர் வட இந்தியாவில் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் அப்படியொரு இடத்தைப் பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன். 1985, பிப்ரவரி 17-ம் தேதி தாஸ்- ராஜி தம்பதிக்கு மகனாகச் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிறந்தவர். இவரது தந்தை சிறைத் துறையில் தலைமை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து தமிழக அரசின் தங்கப் பதக்கம் வென்றவர். தந்தையின் வேலை காரணமாகக் குடும்பம் பல ஊர்களுக்குக் குடிபெயர்ந்து சென்றது. அதில் ஒன்று திருச்சி. அங்கே பள்ளிப் படிப்பை முடித்த சிவகார்த்திகேயன் 18 வயதில் …

  20. ஒளிரும் நட்சத்திரம்: செல்வராகவன் ஓவியம் ஏ. பி. ஸ்ரீதர் 1. அவலங்களின் அழகை, அவமானங்களின் வெடிப்புகளைத் துணிவுடன் திரையில் கொண்டுவருபவர் செல்வராகவன். மக்களோடு மனரீதியாகத் தொடர்புகொண்டவன்தான் ஒரு திரைப் படைப்பாளியாக இருக்க முடியும் என்று நம்புகிறவர். சினிமாவை தூய கலையாக மட்டுமே பார்க்க வேண்டும், அதில் வணிக அம்சங்களைத் திணிப்பது அந்தக் கலை மீதான வன்முறை என்று கூறுபவர். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்கள் பழமையை இறுகப் பிடித்துக்கொண்டு ரசிகர்களை ஏமாற்றிவருவதாகத் துணிவுடன் தொடர்ந்து கூறி வருபவர். 2. கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தம்பதியின் மூத்த மகனாக 1977 மார்ச் 5 அன்று, சென்னையில் பிறந்தவர் செல்வராகவன். ச…

  21. ஒளிரும் நட்சத்திரம்: த்ரிஷா ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர் 1. ‘நம்ம சென்னை பொண்ணு’ எனக் கொண்டாடப்படும் த்ரிஷா, நடிக்க வந்து 15 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 15 வயதில் மூன்று வயதுச் சிறுவனுக்கு அம்மாவாக, அனைத்து இந்திய மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் 1998-ல் நடித்தார். 2. 1999-ல் ‘ஜோடி’ தமிழ்ப் படத்தில் சிம்ரனின் தோழியாகச் சில காட்சிகளில் வந்துபோனார். பிறகு, 2000-வது ஆண்டில் ‘மிஸ் சென்னை’யாகவும் 2001-ல் ‘மிஸ் இந்தியா பியூட்டிஃபுல் ஸ்மைல்’ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். அழகிப் பட்டங்கள் தந்த புகழ் வெளிச்சத்தால், குஜராத்தின் புகழ்பெற்ற பெண் இசையமைப்பாளரும் பாடகியுமான ஃபால்குனார்…

  22. ஒளிரும் நட்சத்திரம்: நயன்தாரா ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர் 1. இந்திய விமானப்படையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர் நயன்தாராவின் அப்பா குரியன் கொடியாட்டு. இதனால் குஜராத்தின் ஜாம்நகர், தலைநகர் டெல்லி ஆகிய நகரங்களில் பத்தாம் வகுப்புவரை படித்தார் நயன்தாரா. இந்தி மொழி நன்கு அறிந்தவர். தமிழ், தெலுங்கு மொழிகளை நன்கு பேசக் கற்றிருக்கிறார். கேரளத்தின் திருவல்லாவில் உள்ள புனித தோமா கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்தபோது, மலையாள சினிமாவின் மூத்த இயக்குநர் சத்யன் அந்திக்காடுவால் திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். அறிமுகப் படம் பெரும் வெற்றி பெற்றது. 2. நயன்தாரா அறிமுகமான ‘மனசின்னக்கரே’(2003) படத்தைப் பார்த்த நடி…

  23. ஒளிரும் நட்சத்திரம்: நாசர் ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர் 1. தமிழ் சினிமாவில் அரிதாரம் அற்ற அரிதான கலைஞர்களில் முக்கியமானவர் ம.நாசர். கதாபாத்திரத்தின் குண இயல்புகளை ஆழமாக உள்வாங்கி, அதை அளவான, இயல்பான உணர்ச்சிகளாக வெளிப்படுத்தி ‘நடிப்புக்கொரு நாசர்’ என்று பெயர் பெற்றவர். 05.03.1958-ல் சென்னையை அடுத்த செங்கல்பட்டு அருகேயுள்ள மேலேரிப்பாக்கம் என்ற கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, மகபூப் பாட்ஷா- மும்தாஜ் பேகம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். 2. கிராமத்திலிருந்து செங்கல்பட்டு நகருக்குக் குடிபெயர்ந்த நாசரின் பெற்றோர், அங்கிருந்த புனித மேரிஸ் தொடக்கப்பள்ளி, பின்னர் புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அவரைப் படி…

  24. ஒளிரும் நட்சத்திரம்: விஜய் சேதுபதி ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர் 1. கடந்த சில ஆண்டுகளாக அதிகப் படங்களில் நடிக்கும் கதாநாயகன் என்ற பெயரைத் தக்கவைத்திருக்கும் விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தைச் சூட்டியவர் இயக்குநர் சீனு.ராமசாமி. காளிமுத்து- சரஸ்வதி தம்பதியின் மகனாக 16.01.1978-ல் ராஜபாளையத்தில் பிறந்தவர் விஜய் சேதுபதி. 2. விஜய் சேதுபதியின் தந்தை சிவில் இன்ஜினீயர். பணி நிமித்தம் சென்னைக்குக் குடும்பம் குடிபெயர்ந்ததால், தனது உயர்நிலைக் கல்வியைச் சென்னையில் பயின்றார். பள்ளிக்காலத்தில் விளையாட்டிலோ பிற தனித்திறமைகளிலோ ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி, அதிகம் கேள்வி கேட்பவராக வளர்ந்தார். சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரி…

  25. ஒளிரும் நட்சத்திரம்: விஷால் 1. ஆகஸ்ட் 29-ம் தேதி 1977-ல் ஜி. கிருஷ்ணா ரெட்டி – ஜானகி தேவி தம்பதியின் இரண்டாவது மகனாகச் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் விஷால். சக மனிதர்கள், சக கலைஞர்கள் மீது பரிவும் மரியாதையும் கொண்டவர். விலங்குகள் மீதும் மிகவும் அன்பு கொண்டவர். சிறுவயதிலிருந்து வளர்த்துவந்த ஜூலி என்ற நாய் இறந்தபோது கதறி அழுதிருக்கிறார் விஷால். பிரபல நடிகராக ஆனது முதல் தனது பிறந்தநாளை ஆதரவற்றவர்களுடன் கொண்டாடிவருகிறார். 2. விஷாலின் தந்தைக்கு கிரானைட் விற்பனை மற்றும் ஏற்றுமதி முக்கியத் தொழில். எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். ஆகிய இருவருக்கும் தீவிர ரசிகர். சினிமா மீது அவருக்கு இருந்த ஈட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.