Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொறுப்புக்கூறுதல் நீதி நல்லிணக்கம் குறித்த தனது வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்- மைக்பொம்பியோ Rajeevan Arasaratnam இலங்கை மக்கள் பேண்தகு அபிவிருத்தியுடன் இறைமையும் சுதந்திரமும் கொண்டவர்களாக விளங்கவேண்டும் என அமெரிக்க விரும்புகின்றது என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இதனை தெரிவித்துள்ளார். நட்புறவு மிக்க சகா என்ற அடிப்படையில் அமெரிக்கா அதனையே வழங்குகின்றது என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாடுகள் பகிரப்பட்ட விழுமியங்களை கொண்டுள்ளன என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ நான் இந்தி…

    • 0 replies
    • 360 views
  2. அனைத்து நாடுகளுடனும் இணைந்து பயணிக்க இலங்கை தயாராகவே உள்ளது – தினேஸ் by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/10/dinesh-1.jpg அணி சேரா நாடு என்ற வகையில், அனைத்து நாடுகளுடனும் இணைந்து பயணிக்க இலங்கை தயாராகவே உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வருகையானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆசியாவிலேயே இலங்கைதான், பழ…

    • 0 replies
    • 959 views
  3. முஸ்லிம்களை நம்பும் தமிழ் தலைமைகள் இனியாவது திருந்த வேண்டும் ! கலையரசன் October 27, 2020 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களையும் தமிழர்களின் சேர்த்து சிறுபான்மை இனம் என்று பேசி வந்தனர். அவ்வாறு பேசிய தமிழ் தேசிய தலைவர்களுக்கு 20ஆவது திருத்தத்தை ஆதரித்து சிறந்த ஒரு பதிலடி கொடுத்துள்ளனர். இனியாவது தமிழ் தலைவர்கள் திருந்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்தினை முன்வைத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 20வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதனை மூவின மக்களும் எதிர்த்துள்ளனர். இந்த சீர்திருத்த…

  4. “நொதேன் பவர் ” – பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடுகளை பெற சம்மதம்… October 28, 2020 யாழ்.சுன்னாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த “நொதேன் பவர்” நிறுவனத்தினால் பொறுப்பற்ற விதத்தில் வெளியேற்றப்பட்ட கழிவோயிலினால் பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் உற்பத்தி நிறுவனமான “நொதேன் பவர்” நிறுவனத்திலிருந்து வெளியேறிய கழிவோயில் அப்பிரதேசத்தை சூழவுள்ள வீடுகள் , தோட்டங்களின் குடிநீர் கிணறுகளில் கலந்தன. அதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் பிரகாரம் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை …

  5. கோட்டாபயவைச் சந்தித்தார் பொம்பியோ! October 28, 2020 இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவைச் சந்தித்துள்ளார். நேற்று (27.10.20) இரவு 7.35 மணியளவில் இலங்கை சென்றடைந்த அமெரிக்க ராஜாங்க செயலாளர் உட்பட.ட குழுவினரை வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி உட்பட அமெரிக்க தூதவர அதிகாரிகள் வரவேற்றிருந்தனர். ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான இரு தரப்பு கலந்துரையாடலை அடுத்து அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இணைந்து விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளார். இதனையடுத்து அவர் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று பிற்பகல்…

  6. சுகாதார அமைச்சரின் தடுப்பூசி கதையால் அரசாங்கத்திற்கு சிக்கல் : October 27, 2020 கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்று தயாரிக்கப்படுவதாகவும், அதனை வழங்குவதற்கு தயாராகுமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தை கேட்டுள்ளதாகவும், இலங்கை சுகாதார அமைச்சர் சமீபத்தில் அறிவித்திருந்தார். கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருக்க வேண்டுமென சுகாதார அமைச்சர் அறிவித்த விடயம், தற்போது அரசாங்கத்திற்கு சிக்கலை தோற்றுவித்துள்ளது. இது குறித்து தமக்கு அறியத்தரப்படவில்லை என இலங்கை தொற்றுநோயியல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆய்வக சோதனை மட்டத்தில் உள்ள தடுப்பூசிகளை பரிசோதிக்க இலங்கையைப் பயன்படுத்துவதற்கான திட்டமாக இது இருக்கக்கூடும் என சுகாதாரத் துறையில் …

  7. யாழ் இந்துக் கல்லூரியிலிருந்து 179 பேர் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு! யாழ்.இந்துக் கல்லூரியிலிருந்து 179 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. 31 மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும், 21 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் சகல துறைகளுக்குமாக மொத்தமாக 179 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர். புதிய பாடத்திட்டத்தின் கீழ் 107 பேரும் பழைய பாடத்திட்டத்தில் கீழ் 72 பேரும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழ்-இந்துக்-கல்லூரியிலி/

  8. வெற்று கார்பன் பேனா குழாய்கள் மற்றும் பற் தூரிகைகள் மீள் சுழற்சி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்! பாவனையின் பின் ஒதுக்கப்படும் வெற்று கார்பன் பேனா குழாய்கள் மற்றும் பற் தூரிகைகள் மீள் சுழற்சி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக தயாரிக்கப்பட்ட முதலாவது கொள்களன் கடந்த 26ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் இந்நிகழ்ச்சித்திட்டம் “நாம் வளம்பெற்று நாட்டை வளப்படுத்துவோம்“ என பெயரிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு பாடசலைகளில் இருந்து ஒதுக்கப்படும் கார்பன் பேனா குழாய்கள் சுமார் 80 கிலோ கிராம்களாகும். வருடமொ…

  9. மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை பி.சி.ஆர் பரிசோதனையில் இன்று செவ்வாய்க்கிழமை (27) உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கொரோனா தொற்றாளர்களின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 ஆக உயர்வடைந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவத்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/137105/covid.jpg குறித்த நபர் கொழும்புக்கு சென்று திரும்பியதாக பொது சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து அவரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தளுக்கு உட்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர் கொழும்பு பத்தரமுல்லை பகுதியிலுள்ள…

  10. Share (ஆர்.யசி) நாட்டில் இரண்டாம் அலையாக உருவாகியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றின் வீரியம் அதிகம் என்பதால் மிக வேகமாக சமூகத்தில் பரவும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிகை விடுத்துள்ளார். கொவிட் -19 வைரஸ் பரவல் சமூக பரவலாக மாற்றம் பெற்றுள்ளதாக தொடர்சியாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நாட்டின் நிலைமை குறித்து தெளிவுபடுத்துகையில் அவர் இவற்றை கூறினார். அவர் மேலும் கூறுகையில், நாட்டில் அதிகளவில் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதனால் அது சமூக பரவல் எனவும் கருத வேண்டாம். இது அனைத்துமே பரந்த கொத்தணியாக கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை மினுவாங்கொடை கொத்தணியே பெரிய கொத்தணியாக அடையாளம் கா…

  11. -செ.கீதாஞ்சன் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று, பொன்னகர் கிராமத்தில், தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட அனுமதியை மீளப்பெற்றுள்ளதாக, பிரதேச சபை தவிசாளர் க.தவராசா தெரிவித்தார். பொன்னகர் பகுதியில், சிறிய தொலைத்தொடர்பு கோபுரமொன்றை அமைத்து, தொலைத்தொடர்பு சேவையை விஸ்தரிபதுடன், அதில் கமெரா, மின்குமிழ் என்பன இணைப்பு செய்வதற்காக, டயலக் நிறுவனத்தினர் அனுமதி கோரினர். இதற்கமைய, மக்கள் நன்மை கருதி இதற்கான அனுமதி வழங்கப்பட்ட போதும், இந்தத் தொலைத்தொடர்பு கோபுரத்தால் தீங்கு ஏற்படும் எனத் தெரிவித்து அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அது தொடர்பில் பிரதேச செயலாளரிடமும் முறையிட்டனர். இதையடுத்து, டயலக் ந…

  12. யாழ்ப்பாணம் குருநகர் பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று குருநகர் பகுதியில் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் சன நெருக்கம் அதிகமுள்ள குருநகர் பகுதியில் ஏனையவர்களுக்கு தொற்று பரவுவதை தடுப்பதற்காக அப்பகுதியினை சாராதவர்கள் மற்றும் வெளியாட்கள் உட் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு இடங்களில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/93082

  13. மட்டக்களப்பு மாவட்டத்தில் வழிபாடுகள் இடைநிறுத்தம், சிகை அலங்கார நிலையங்களுக்கு பூட்டு SayanOctober 27, 2020 மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதல் எதிர்வரும் ஒருவாரத்திற்கு சகல மதத்தலங்களில் மக்கள் ஒன்றுகூடும் வழிபாடுகள் இடைநிறுத்தம், சிகை அலங்கார நிலையங்களுக்கு பூட்டு வர்த்தக நிலையங்களில் அனைத்துவிதமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் இந்த தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் க. கருணாகரன் தெரிவித்தார் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார் மட்டக்களப்பு வாழைச்சேனைப் பிரதேசத்தில் மேலும் 16…

  14. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் சுயநலனுடன் செயற்பட்டு வருகின்றனர் BATTINEWS MAINOctober 27, 2020 தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் சுயநலத்துடன் செயற்பட்டு வருகின்றமை காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 'ஏனைய மாவட்டங்களில் இரண்டிற்கும் மேற்பட்ட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் …

  15. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புராதன இடங்களை அடையாளப்படுத்த விசேட குழு தொல்பொருள் திணைக்களத்தினால் அனுப்பி வைப்பு Dicksith மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புராதன இடங்கள் என தொல்பொருள் திணைக்களத்தினால் பட்டியலிடப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டு அவற்றை அளவைமேற்கொண்டு எல்லைப்படுத்தவென விசேட குழுவொன்று தொல்பொருள் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்விசேட குழு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான க.கருணாகரணை இன்று (26) மாவட்ட செலயகத்தில் வைத்து சந்திப்பொன்றை மேற்கொண்டது. இக்குழுவின் முதற்கட்ட செயற்பாடாக ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 102 இடங்களைப் பார்வையிட்டு அளவை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.இதன்போது அரசா…

  16. மைக் பொம்பியோ வருகை; போர்க்கொடி தூக்குகிறது சீனா- காட்டமான அறிக்கை.! இலங்கைக்கு தேவையற்ற பிரச்சனைகளைக் கொண்டு வர வேண்டாம் என அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவின் நாளைய விஜயத்தை முன்னிட்டு இலங்கைக்கான சீனத் தூதரகம் இன்று (27) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு:- "அமெரிக்க முதன்மை பிரதி உதவி இராஜாங்க செயலர் டீன் தொம்ஸன் இராஜாங்க செயலாளரின் எதிர்வரும் விஜயம் தொடர்பாக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் சீனா - இலங்கை உறவு தொடர்பாக பகிரங்கமாக வலியுறுத்தல் விடுத்ததுடன் தலையீடு செய்தமை மட்டுமன்றி வெளிநாட்டு உறவுகள் தொடர்பாக 'கடினமானதும் ஆனால் தேவையானதுமான தீர்மானங்களை' இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தமையானது இரா…

  17. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர். http://cdn.virakesari.lk/uploads/medium/file/137249/IMG_20201026_134126.jpg இன்று வவுனியாவில் காணாமல் போனவர்களினால் மேற்கொள்ளப்படும் போராட்ட பந்தலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமெரிக்க வெளிவிவகார செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் வன்னியில் நடந்த இனப் போரின்போது, 25,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். நாங்கள் 1347 வது நாளாக ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு …

  18. மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், மேல் மாகாணத்துக்கு மட்டுமல்ல கிளிநொச்சியிலும் நிறைய சேவை செய்ய விரும்பினார். அவர் செய்ய நினைத்ததை கட்டாயமாக நிறைவேற்ற வேண்டுமென நாங்கள் தீர்மானித்துள்ளோம் என்று அவரது மகனும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (26) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும், “எனவே தான் இங்கு 35 மில்லியனை ஒதுக்கியுள்ளோம். இங்கே 28 ஆயிரம் வீடுகளை கட்டுவதாக ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்திருந்தார். அதையும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். என்னை பொறுத்தவரை நான் சொன்னதைச் செய்வேன். உங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் கட்டாயம் செய்வோம். நான் தமிழ் பேசும் அமைச்சர், அதிலும் இளமையான அமைச்சராக இருக்கிறேன். நான…

  19. இயல்பு நிலைமை பாதிக்காதவாறு சுகாதார வர்த்தமானி அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்ற வேண்டும் என இன்றைய (26) கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். வடமாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “வடமாகாணத்தின் கொரோனா தொடர்பான கூட்டத்தில் பொதுவாக மாவட்டங்களுடைய நிலைமைகள் ஆராயப்பட்டு அதனடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிலவரங்கள் பற்றி ஆராய்ந்து அறியபட்டதோடு. அங்குள்ள தொற்று நிலைமைகளுக்கு ஏற்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டன என்பது பற்றியும் ஆராயப்பட்டது. மேலும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள சட்ட ரீதியான ஏ…

  20. கொரோனா தொற்று உறுதியான நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை இனிமேல் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா, இன்று (26) முதல் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள் என்றும் கூறினார். https://newuthayan.com/தொற்றாளியுடன்-தொடர்புடை/

  21. பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரன் படுகொலை வழக்கின் மரண தண்டனை கைதியான முன்னாள் எம்பி துமிந்த சில்வாவை பொது மன்னிப்பில் விடுதலை செய்யக் கோரும் அரச தரப்பு எம்பிகளின் மனுவில் மனோ கணேசன் எம்பி மற்றும் அவரது கூட்டணியான தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பிகள் கையெழுத்திட்டுள்ளனர். அரச தரப்பின் இந்த மனுவில அரச எம்பிகளான சுரேன் ராகவன், கெஹெலிய ரம்புக்வெல, வீரகுமார திஸாநாயக்க, மஹிந்த அமரவீர உள்ளிட்ட சிலர் கையெழுத்திடாத நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணி கையெழுத்திட்டுள்ளது. இது குறித்து மனோ கணேசன் ஆங்கில ஊடகத்திற்கு வழங்கிய அறிக்கையில், “முன்னாள் கொழும்பு மாவட்ட எம்பி துமிந்த சில்வா கொலை குற்றச்சாட்டின் நிமித்தம் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் இருக்கின்றார். சம்பவம் நிகழும் போது அவ…

    • 9 replies
    • 1.4k views
  22. யாழில் முஸ்லீம் மக்களை மீளவும் குடியமர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் – நியாஸ் யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் மீளவும் குடியமர்த்துவதற்கான ஒழுங்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளவில்லை என யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நியாஸ்( நிலாம்) தெரிவித்துள்ளார். கடந்த யுத்த அனர்த்தம் காரணமாக 1990 ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் 30 ஆண்டுகளுக்கு பின்னரும் சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்படவில்லை என்பதை கருத்திற்கு கொண்டு இனிவரும் காலங்களில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஒக்டோபர் 25 ஆம் திகதியுடன் முஸ்லீம் மக்கள் இடம்பெயர்ந்த 30 வருட நிறைவை முன்னிட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றில் இவ்வேண்டுகோளை கேட்டுள்ளார்.…

  23. கொரோனாவுக்காக அரசாங்கத்தினால் சேகரிக்கப்பட்ட நிதி தொடர்பில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார். இந்த நிதிக்கு எவ்வளவு சேகரிக்கப்பட்டது என்பதை நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் “இட்டுகம” என்ற பெயரில் இந்த நிதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு ஜனாதிபதி நிதியில் இருந்து 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த நிதிக்கும், இதற்கு பின்னர் சேகரிக்கப்பட்ட நிதிகளுக்கும் என்ன நடந்தது என்பதை அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு …

    • 3 replies
    • 547 views
  24. மக்களுக்கு சேவையாற்றவே இருபதுக்கு ஆதரவளித்தேன் மக்களுக்கு சேவையாற்றுவதனை நோக்காக கொண்டே 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தாக பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். பொதுஜன முன்னணி அரசாங்கம் எதிர்வரும் 10,15 வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம். இவ்வாறு இருக்கும் போது எதிர்க் கட்சியில் இருந்துக் கொண்டு மக்கள் நலன்சார் விடயங்களை முன்னெடுக்க முடியாது. எதிர்க் கட்சியில் இருந்துக்கொண்டு வெறுமனே கொள்ளை அரசில் பேசிக்கொண்டிருக்க முடியாது. கடந்த தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியுள்ளேன். அவ்வாறு வழங்கப்பட்ட உறுதிமொழியை காப்பாற்ற வ…

    • 2 replies
    • 671 views
  25. பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று வெளியிடப்படவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதுதொடர்பாக தெரிவிக்கையில்,2019ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று வெளியிடப்படவிருப்பதாக தெரிவித்தார். 41 ஆயிரத்து 500 மாணவர்கள் இம்முறை கழங்களுக்கான அனுமதியைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கமைவாக மருத்துவ பீடத்திற்கு 270 பேர் பொறியியல் பீடத்திற்கு 405 பேர் என்ற ரீதியில் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.