ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
பரந்தனில் அமையவுள்ள இரசாயனத் தொழிற்சாலைக்கு அதை அண்டி வசிக்கும் மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் பரந்தன் குமரபுரம் மக்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினருக்கு குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டது. இரசாயனத் தாக்கம் தொடர்பிலும் அச்சம் தெரிவிக்கப்பட்டது. இரசாயனக் கழிவுகளின் வெளியேறும் போது சூழலுக்கு ஏற்படும் பாதகம் தொடர்பிலும் ஆராயப்பட்டது. பரந்தனில் வசிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய தொழிற்சாலைகள் அமைய வேண்டும் எனவும் மக்களால் சுட்டிக் காட்டப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் கருத்துரைக்கும் போது- எமது மக்களுக…
-
- 4 replies
- 715 views
-
-
13வது திருத்தம் குறித்து மீளாய்வு செய்யவேண்டும் – தமிழ் கூட்டமைப்பு தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் இல்லை- கெஹெலிய 13வது திருத்தம் குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தமிழ்தேசிய கூட்டமைப்பு தாங்களே தமிழ் மக்களின்பிரதிநிதிகள் என தெரிவிப்பதுவழமை ஆனால்இனிமேல் அவர்கள் அவ்வாறு தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் இதனை அவர் தெரிவித்துள்ளார். மிகசிறிய எண்ணிக்கையிலானவர்களே இனப்பிரச்சினை குறித்து பேசுகின்றனர் பொருளாதார தீர்வுகளே தேவையாக காணப்படுகின்றன. வடக்குகிழக்கிலிருந்து சமீபத்தைய தேர்தல்கள் மூலம் 11 பேர்நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் மக்கள் தமது நீர்ப்பாசன…
-
- 2 replies
- 439 views
-
-
13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கும் முயற்சியில் இலங்கை: விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் இறங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரங்களைக் கையாளுவதற்காக, இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை நியமிக்க இந்தியா தயாராகி வருவதாக செய்திகள் கூறுகின்றன. 1987ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட அமைதி உடன்பாட்டுக்கு அமையவே, 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் 13 ஆவது திருத்தச்சட்டத்தையும் நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கவுள்ளதாக கூறிவருகிறது. இதையடுத்தே, இலங்கை அரசாங்கத்துடன் 13 ஆவது திருத்தச் சட்…
-
- 22 replies
- 1.8k views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) மத்தள விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்குதல் மற்றும் நிறுத்தி வைத்தல் என்பவற்றுக்காக கட்டணம் அறவிடுவதை ஒரு வருடத்திற்கு இடை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்தள விமான நிலையத்திற்கு சர்வதேச விமானங்களை வரவழைப்பதை இலக்காகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் 8 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவிக்கையில் , சர்வதேச விமானங்களுக்கு அதிகபட்ச சுமையான ஒரு மெட்ரிக் தொன்னிற்கு அறவிடப்படும் தரையிறங்குவதற்கான கட்டணம் 4 டொலர்களாகும். இதே வேளை விமானத்தை நிறுத்தி வைப்பதற்கான கட்டணம் தறையிறக்குவதற்…
-
- 4 replies
- 614 views
-
-
புதிய கொரோனா தொற்றாளர்கள் 28 பேர் அடையாளம் நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 28 பேர் அடையாளம் காணப்பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்த 11 பேர், இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 5 பேர், பஹ்ரைனிலிருந்து வருகை தந்த 4 பேர், கட்டார், வியட்நாட் மற்றும் குவைட் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த தலா ஒருவர் , பங்களாதேஷில் இருந்து வருகை தந்த 4 பேர் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர் களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 262 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண மாகக…
-
- 0 replies
- 419 views
-
-
சேதமடைந்த கப்பல் தொடர்பில் கடல்சார் பங்குதாரர்கள் தமது கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு – சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவு சேதமடைந்த எம்.டி. நியூ டயமண்ட் கப்பல் தொடர்பாக தங்கள் கருத்துக்களைச் சமர்ப்பிக்குமாறு அனைத்து கடல்சார் பங்குதாரர்களுக்கும் சட்டமா அதிபர் திணைக் களம் உத்தரவிட்டுள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற கடல்சார் பங்குதாரர்களுக்கு இடையி லான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித் துள்ளார். தீயினை அணைப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்ட செலவுகளைக் கோருவதற்கான வழிகள் கோரப்படும் என அவர் தெரிவித்தார். இலங்கையின் நீர் நிலைகளில் இதுவரை எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் எதுவு…
-
- 0 replies
- 262 views
-
-
சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு பிரதமரின் வாழ்த்துச் செய்தி! ஜனநாயகத்தை பாதுகாத்த ஒரு நாட்டின் பிரதமர் என்ற வகையில் சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிடுவதற்கு கிடைத்தமை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச ஜனநாயக தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்ட்டாப்படுகிறது. இதனை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கும் உறுதிபடுத்துவதற்கும் உலக நாடுகளை ஊக்குவித்து 2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஆண்டுதோறும் செப்டம்பர் 15ஆம் திகதி சர்வதேச ஜனநாயக தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. …
-
- 0 replies
- 390 views
-
-
20 ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு முதல்முறையாக கூடுகின்றது by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/06/GL-pieris.jpg தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை ஆய்வு செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட குழு இன்று கூடுகின்றது. அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குறித்த குழு, 20 ஆவது திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை ஆராய்ந்து நாளை பிரதமரிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும் இந்த அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் தாக…
-
- 1 reply
- 463 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் மின் இணைப்பு கிடைக்கப்பெறாத மக்களுக்கு மின்சாரம் பெற்றுத் தரப்படும் என போலியான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதானமாக இருக்கும்படி இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. போலி மின் இணைப்பு படிவங்கள் வழங்கப்படுவது தொடர்பில் பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டமையை தொடர்ந்து இலங்கை மின்சார சபையின் கிளிநொச்சி அலுவலகத்திடம் தொடர்பு கொண்டு வினவிய போது இந்த எச்சரிக்கையை விடுத்தனர். மின் இணைப்பு கிடைக்கப்பெறாத மக்கள் புதிதாக மின்சார இணைப்பை பெறுவதாயின் இலங்கை மின்சார சபையிடமே விண்ணப்பத்தை பெற்று உரிய முறைப்படி பூர்த்தி செய்து வழங்க வேண்டுமே தவிர கட்சிகள் தனிநபர்கள் வழங்கும் விண்ணப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என இலங்கை மின்…
-
- 1 reply
- 373 views
-
-
கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கனடா உயர் ஸ்தானிகர் சந்திப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான தவராசா கலையரசனை இலங்கைக்கான கனடா நாட்டு உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், “அம்பாறை மாவட்டத்திற்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கப்பட்டமை தொடர்பில் எமது கட்சிக்குநன்றி தெரிவித்தார்.எதிர்காலத்தில் இம்மாவட்டத்தில் இடம்பெற உள்ள நிலைமைகளை அறிந்து நடவடிக்கை எடுப்பதாக கூறி இருந்தார்.இதனால் இவர்களுடன் இணைந்து எமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு எமக்க…
-
- 0 replies
- 405 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மைக்கல் பச்லெட் இலங்கையின் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் வரைபு அவதானம் செலுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 45 வது மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின் தொடக்க அமர்வில் பேசியபோதே பச்லெட், இதனை வெளிப்படுத்தியுள்ளார். புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கையின் மனித உரிமைகளுக்கான கடமைகள் குறித்த தனது கவலைகளையும் பச்லெட் இதன்போது வெளிப்படுத்தினார். https://www.virakesari.lk/article/89905
-
- 1 reply
- 382 views
-
-
யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவை குறித்த பகுதிக்கு சென்று, விடயங்களை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். பொம்மைவெளி பகுதியில் வெள்ளப் பெருக்கு அபாயம் தொடர்ச்சியாக காணப்படுவதாகவும், தமக்கான வீடமைப்பு திட்டத்தை அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அந்த பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவனொருவன் ‘மஹிந்த மாமா எங்களுக்கு வீடு கட…
-
- 6 replies
- 1.3k views
-
-
கனேடிய தமிழ் முதலீட்டாளர்களை குறிவைக்கும் சிறீலங்கா பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறீலங்கா அரசு புலம்பெயர் தமிழ் சமூகத்தில் உள்ள முதலீட்டாளர்களை நோக்கி தனது பார்வையை திருப்பியுள்ளது. அதன் முதல் கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை (11) சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சாவுக்கும் கனடாவைத் தளமாகக் கொண்ட ஒரு சில தமிழ் முதலீட்டாளர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொண்டிருந்தார். வடக்கு-கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளும் திட்டங்கள் இந்த சந்திப்பில் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் வடக்கு கிழக்கில் பலவந்தமான சிங்கள குடியேற்றங்களை…
-
- 7 replies
- 643 views
-
-
வவுனியா தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து தப்பியவர் மன்னாரில் பிடிபட்டார்! வவுனியா, பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியவர் மன்னாரில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த சிலாபம் மாதம்பே பகுதியைச் சேர்ந்த விஜித றுவான் குணவர்த்தன (வயது-36) என்பவர் நேற்றிரவு தப்பிச் சென்றிருந்தார். இந்நிலையில், அவர் இன்று (சனிக்கிழமை) மாலை 6.30 மணியளவில் மன்னார் சௌத்பார் ரயில் நிலையப் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்தநபரை மீண்டும் வவுனியா பெரியகாடு, இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல இராண…
-
- 1 reply
- 374 views
-
-
தமிழரசுக் கட்சியின் செயலாளராக கிழக்கு மாகாணம் மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டும்.! - சி.வி.கே தெரிவிப்பு.! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளர் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்பவராகவே அமையவேண்டும் எனவும், அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவரை நியமிப்பதே பொருத்தமானதாக அமையும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும், தமிழரசுக் கட்சியின் துணைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த கி.துரைராஜசிங்கம் தனது பதவியை இராஜினமா செய்துள்ளதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சி.வி.கே.சிவஞானம் இ…
-
- 1 reply
- 385 views
-
-
மன்னாரில் நடைபெற்றது... இந்து எழுச்சி மாநாடு! மன்னார் இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இந்து எழுச்சி மாநாடும், இந்து குருமார் பேரவையின் 25ஆவது ஆண்டு விழாவும் இன்று நடைபெற்றது. மன்னார் இந்து குருமார் பேரவையின் தலைவர் மனோ ஐங்கர சர்மா தலைமையில் மன்னார் நகர மண்டபத்தில் இந்நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக காலை 9.45 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தடியில் இருந்து மன்னார் நகர மண்டபவம் வரை அமைதியான முறையில் ஊர்வலம் இடம்பெற்றது. குறித்த ஊர்வலத்தில் இந்து குருமார்கள், இந்து மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்ததுடன் இதன்போது நந்திக் கொடியை ஏந்தியவாறு மன்னார் நகர மண்டபம் வரை ஊர்வலமாக வந்தனர். அதனைத் தொடர…
-
- 4 replies
- 686 views
-
-
சிங்கள தேசிய கட்சிகள் வட, கிழக்கை மையப்படுத்த தொடங்கியுள்ளன – மணிவண்ணன் சிங்களத் தேசிய சக்திகள் அல்லது அவர்களோடு சேர்ந்து பயணிக்கின்ற கட்சிகள் வடக்கு, கிழக்கை மையப்படுத்தி உருவெடுக்கின்ற சூழ்நிலை இப்போது ஏற்பட்டிருக்கின்றது என்று தமிழ் தேசிய இளைஞர் பேரவையை தலைமைதாங்கும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிங்கள தேசிய சக்திகள் மையம்கொள்வதை தடுக்க ஒன்றிணைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் கலந்துரையாடல் தென்மராட்சி – கொடிகாமம் நட்சத்திர மஹால் விடுதியில் இன்று (13) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் பின்னல் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மணிவண்ணன், “தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளையோர் அ…
-
- 2 replies
- 512 views
-
-
இலங்கையில் பிளாஸ்டிக் முட்டை உற்பத்தி? அவசர அறிவிப்பு இலங்கையில் செயற்கை முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின்றன. எனினும் இது வதந்திகள் இல்லை என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான முட்டைகள் இருந்தால், அது குறித்து உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும் என்று அதன் தலைவர் உபுல் ரோஹானா அவசர அறிவிப்பு விடுத்துள்ளார். சந்தையில் பிளாஸ்டிக் முட்டைகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பிரச்சாரங்களில் கவனம் செலுத்துவதாகவும் உபுல் ரோஹானா தெரிவித்தார் இதேவேளை கடந்த வாரமளவில் வவுனியாவில் உள்ள கடையில் பிளாஸ்டிக் முட்டை கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http…
-
- 0 replies
- 263 views
-
-
“எமது முன்னாள் முதலமைச்சருக்கு பக்கபலமாக நான் எப்போதும் இருப்பேன்” டெனீஸ்வரன் திடீர் அறிவிப்பு எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் கதைக்காத ஒரு விடயத்தை எமது முன்னாள் முதலமைச்சர் உரக்கச் சொல்லி இருக்கின்றார். முதற்கண் அதற்கு தலைவணங்குகிறேன். அவருக்கு பக்கபலமாக நான் எப்போதும் இருப்பேன் என வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். சி.வி.விக்னேஸ்வரன் மீது டெனீஸ்வரன் தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற வேண்டும் என சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் உட்பட பலர் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள முகப்புத்தகப் பதிவிலேயே டெனீஸ்வரன் இதனைத் தெரிவித்திருக்கின்றார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, என்ன…
-
- 0 replies
- 181 views
-
-
சுமந்திரன், சிறிதரனுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விரைவில் நடவடிக்கை.! - சி.வி.கே.! "இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் உள்ளிட்டவர்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்." - இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, தமிழரசுக் கட்சியில் இருந்து எம்.ஏ.சுமந்திரனை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி கட்சிய…
-
- 2 replies
- 442 views
-
-
எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களுக்காக உயிரைக் கொடுத்து உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பேன். அதேவேளை, முஸ்லிம் மக்கள் எமது எதிரிகள் அல்லர் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன் என தமிழர் மகா சபை சார்பில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம், கல்முனைப் பகுதியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அம்பாறை மாவட்ட மக்களை அபிவிருத்தியின்பால் இட்டுச்செல்ல சகல அரசியல் கட்சிகளு…
-
- 0 replies
- 747 views
-
-
பௌத்த தத்துவத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கு புதிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர் பௌத்த மக்களுக்கு போன்றே பௌத்த தத்துவம் குறித்து ஆர்வம் கொண்ட பிற மதத்தவர்களுக்கும் அறிவை பெற்றுக்கொள்வதற்கு களனி ரஜமஹா விகாரையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஆதாரமாக விளங்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை), களனி ரஜமஹா விகாரையின் www.kelaniyatemple.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தபோதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார். பௌத்த தத்துவம் தொடர்பிலும், பிக்குமார்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும், தீர்வு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு செயற்பா…
-
- 4 replies
- 722 views
-
-
நல்லை குருமுதல்வரை சந்தித்த யாழ் மாவட்ட கட்டளை தளபதி . யாழ்.மாவட்டத்தின் புதிய இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார இன்று (12) காலை நல்லூர் வீதியில் உள்ள நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றார். யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு புதிதாக பதவியேற்றுள்ள இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்ற நிலையில், இன்று காலை நல்லூர் வீதியில் உள்ள நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றார். மேலும், யாழ்.மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், “நான் பதவியேற்ற பின் இன்றைய தினம் முதன் முதலாக இந்து மத குருவை சந்தித்திருக்கின்றேன். சந்திப்பில் மிகவும் …
-
- 6 replies
- 1.3k views
-
-
கஜேந்திரன் எம்.பி. அம்பாறைக்கு களவிஜயம்; கல்முனையை தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் BharatiSeptember 11, 2020 தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய பட்டியல் உறுப்பினராக செல்வராஜா கஜேந்திரன் அம்பாறை மாவட்டத்திற்கு களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். கடந்த 9 ஆவது பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் இரண்டு ஆசனங்கள் பெறப்பட்ட நிலையில் தேசிய பட்டியல் மூலம் வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் எம்.பியாக அவர் சார்ந்த கட்சியினால் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அம்பாறை மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளை ஆராயும் முகமாக வருகை தந்த அவர் கல்முனை உப பிரதேச செயலகம் நாவிதன்வெளி பிரதேச செயலகம் திருக்கோவ…
-
- 10 replies
- 1.1k views
-
-
பொலிஸாருக்கு தகவல் வழங்கும் மக்களுக்கான சன்மானத் தொகை அதிகரிப்பு. சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளுடன் சந்தேகநபர்களை கைதுசெய்யும் பொலிஸாருக்கும் இவை குறித்து தகவல்களை வழங்கும் பொது மக்களுக்கும் வழங்கும் சன்மானத் தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தினால் இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “ரி-56 ரக துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்படால் தகவலை வழங்கியவருக்கும் கைதுசெய்த பொலிஸாருக்கும் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும். ரி-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டால் பொலிஸ் உத்தியோகத்தருக்கு இரண்டு இலட்சம் ரூபாயும் தகவலை வழங்கியவருக்கு இரண்டு இலட்…
-
- 2 replies
- 724 views
-