Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் நடைபெறவுள்ள விவாதம் குறித்த அறிவிப்பில், அடுத்தடுத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் பின்னணி குறித்து சந்தேகம் கிளம்பியுள்ளது. இலங்கை போர் நடைபெற்ற போது, அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்த, தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., - தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. லோக்சபாவில், விதிஎண் 193ன் கீழ், பொது விவாதமாக நடைபெறவுள்ள இலங்கை தமிழர் பிரச்னை, கடந்த வாரமே நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், நடக்கவில்லை. இந்நிலையில், லோக்சபா அலுவல்கள் குறித்த கையேடு நேற்று காலை வழக்கம் போல அனைவருக்கும் வினியோக…

  2. December 7, 2018 புதிய சமஷ்டி முறை பிரிவினை அரசியலமைப்பு வருவதை தடுக்கவே, தான் ஆட்சியை கைப்பற்றியதாக மஹிந்த கூறுவது தந்திரமான போலித்தனமும், கேலித்தனமும் நிறைந்த கட்டுக்கதை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறுவதன் மூலம் மஹிந்த ராஜபக்சே, மாற்றி மாற்றிப் பேசி வடிவேலு போன்று செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மகிந்த தெரிவித்த இரண்டு கருத்துக்கள் வடிவேலு நகைச்சுவை ஒன்றில் காலை ஒரு கருத்தையும் மாலை ஒரு கருத்தையும் கூறுவார். அவ்வாறு கூறிவிட்டு, அதுவேற வாய், இ…

  3. 19வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின் கருத்து வெளியானது APR 09, 2015 | 12:24by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது அரசியலமைப்புத் திருத்தம், சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு இசைவானதே என்றும், எனினும் இதன் சில பகுதிகளை நிறைவேற்ற கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் சிறிலங்கா உயர்நீதிமன்றம் வியாக்கியானம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த பின்னர், அதுபற்றிய தமது கருத்தை, நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பியிருந்தது. சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று பிற்பகல் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதன்படி…

    • 0 replies
    • 373 views
  4. சிறிலங்கா அதிபர் நடத்தும் இரண்டு போராட்டங்கள் – ரைம் சஞ்சிகை கருத்து APR 15, 2015 | 12:52by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, கடினமான பணியை ஆற்றிக் கொண்டிருப்பதாகவும், ஒரு புறம் அவர், ஜனநாயகத்தை மீளக் கொண்டு வரவும் மறுபுறத்தில் பிரதான வல்லாதிக்க சக்திகளைத் திருப்திப்படுத்துவதற்கும் போராடி வருவதாகவும் ரைம் சஞ்சிகை தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் செவ்வியுடன் புகழ்பெற்ற ரைம் சஞ்சிகையின் வெளியாகியுள்ளது. இந்த இதழுக்கு சிறிலங்கா அதிபர் அளித்துள்ள செவ்வியில், நாட்டின் அதிகாரங்கள் மையத்தில் ஒன்றுகுவிக்கப்பட்டுள்ளது பிரதானமான பிரச்சினையாக உள்ளது என்றும், அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். …

    • 0 replies
    • 450 views
  5. மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் முருகன் என்றால்'அழகன்' என்று பொருள். நல்லூரில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமான் தமிழ்க் கடவுளாக தமிழர்கள் செறிந்து வாழும் வடபகுதியில் குடிகொண்டு மக்களுக்கு அருள் பாலித்து வருகின்றான். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தில் இன்று 27 ஆம் திகதி தேர்த்திருவிழா. உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளான முருகப்பெருமான் தம்மை வழிபடும் அடியார்களின் துன்பங்களையும் துயரங்களையும் இன்னல்களையும் இடுக்கண்களையும் நீக்கியருளும் பொருட்டு இந்த நல்லூரிலே கோயில்கொண்டு எழுந்தருளி வீற்றிருக்கின்றான். புனித நகராம் நல்லூரிலே அருள்பாலிக்கும் அழகன் முருகப்பெருமானுக்கு நடைபெறுகின்ற வருடாந்த மஹோற்ச…

  6. நத்தார் கொண்டாட்ட விபத்துக்களால் 548 பேர் வைத்தியசாலையில்! நத்தார் கொண்டாடத்தில் ஏற்பட்ட விபத்துக்களினால் 548 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 13 வீதத்தினால் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வாகன விபத்திக்களினால் 163 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நூற்றுக்கு 18 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.elukathir.lk/NewsMain.php?san=22594

  7. Published By: DIGITAL DESK 3 28 NOV, 2023 | 02:31 PM விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் படங்கள் பொறித்த சட்டை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரொருவர் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டார். கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றது. இதன்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். …

  8. மேற்குலக நாடுகளின் நிதியுதவி துண்டிக்கப்படுவது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும்: ஜி.எல்.பீரிஸ். மிலேனியம் சவால் திட்டத்தின் கீழ் சிறீலங்கா அரசை மேற்குலக நாடுகள் இணைக்காதது சிறீலங்கா அரசை பெரும் சீற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஜேர்மனி, பிரித்தானியா, நெதர்லாந்து ஆகிய சிறீலங்காவுக்கான நிதியுதவியை மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி இடைநிறுத்தியமை இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் அமெரிக்காவும் சிறீலங்காவை இணைக்காததே சிறீலங்கா கடும் சீற்றத்துக்கு தள்ளப்படக் காரணம் எனத் தெரியவருகிறது. இதுகுறித்து வோசிங்டன் சென்றிருக்கும் சிறீலங்கா வர்த்தகத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உடகவியாரிடம் கருத்துரைக்கையில் ... மனித உரிமை மீறல் காரணங்களை காரணம் காட்டி நிதியுதவிகளை …

    • 2 replies
    • 1.2k views
  9. வடக்கு இ.போ.ச. பிரிப்பை நிறுத்தப் பிரதமர் உத்தரவு; சரவணபவன் எம்.பியின் தலையீட்டால் உடன் நடவடிக்கை வடபிராந்திய இலங்கைப் போக்குவரத்துச் சபை யாழ்., வன்னிப் பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்ட போதும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் வடக்கில் பூதாகரமாக மாறியிருந்த நிலையில் அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடினார். அதையடுத்து இலங்கைப் போக்குவரத்துச் சபைத் தலைமையகத்துக்கு இது தொடர்பில் அவர் அறிவித்துள்ளார். அதனையடுத்து வடபிராந்திய பிரிப்பை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்றும் அது தொட…

  10. “யாழ்ப்பாண மண்ணில் எனது தாய்மொழி தமிழில் சேவை செய்யக் கிடைத்ததையிட்டு பெருமடைகின்றேன். இந்தப் பெரும் பாக்கியத்தை வழங்கிய இறைவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன” என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் தெரிவித்தார். “யாழ்ப்பாணம் மண்ணில் பணிபுரிவதற்கு நான் கொடுத்துவைத்தவனாக பெருமைப்படுகின்றேன். எனது இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி இந்த மக்களுக்கு சேவையாற்றுவேன் உறுதியளிக்கின்றேன்” என்றும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானாகப் பதவியேற்ற பின்னர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தலைமையில் நடைபெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான புத்தாண்டு உ…

  11. கரையோர சுவீகரிப்பிற்கு எதிராக நாளை பொன்னாலையில் போராட்டம்! யாழ்ப்பாணம் – அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் முயற்சி எடுத்துள்ள நிலையில் அதைக் கைவிடுமாறு வலியுறுத்தி பொன்னாலை சந்தியில் கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். பொன்னாலை சந்தியில், நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ள இப்போராட்டத்திற்கு பொன்னாலை தொடக்கம் அராலி வரையுள்ள கடற்றொழிலாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரைக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்…

  12. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் பழ. நெடுமாறன் நேரில் முறையீடு யாழ்ப்பாணத்தில் பட்டினியால் வாடும் ஈழத்தமிழர்களுக்காக தமிழக மக்கள் மனமுவந்து அளித்த உணவுப் பொருட்களும், மருந்துப் பொருட்களும் இந்திய அரசின் அலட்சியப் போக்கால் யாருக்கும் பயன்படாது வீணாகிக் கொண்டிருக்கும் செய்தியை ஜெனிவாவில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவரிடம் பழ. நெடுமாறன் நேரில் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் முக்கிய வழித்தடத்தை சிங்கள அரசு மூடியதால் ஏறத்தாழ கடந்த ஓராண்டு காலமாக யாழ் மக்கள் பட்டினியாலும், மருந்துப் பொருட்கள் கிடைக்காமலும் அவதியுற்று வருகின்றனர். யாழ் மக்களின் துயர் துடைக்க தமிழீழ ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் தமிழகமெங்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட…

  13. திருகோணமலையில் புலிகளின் வான் தாக்குதல் நடைபெறக் கூடும்: கொழும்பு ஆங்கில ஊடகங்கள் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2007, 13:34 ஈழம்] [சி.கனகரத்தினம்] திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று கொழும்பு ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழான த நேசனில் வெளியாகியுள்ள செய்தி: சிறிலங்காவின் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகளைத் தாக்கப் போவதாக விடுதலைப் புலிகள் கடந்த வியாழக்கிழமையன்று பகிரங்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து கொழும்பு மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் பாதுகாப்பு சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடும்பிமலையில் புதன்கிழமையன்று விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருக…

    • 1 reply
    • 1.6k views
  14. 30 DEC, 2023 | 06:45 PM (நா.தனுஜா) எமது அரசியல் முற்றிலும் மாறுபட்டதாகும். இன்றளவிலே ஒட்டுமொத்த அரச இயந்திரமும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருக்கின்றது. அவ்வாறிருக்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதானது, அந்த அரச இயந்திரத்தை ஏற்றுக்கொண்டதாகவே அமையும். மாறாக இந்த ஒட்டுமொத்த அரச கட்டமைப்பையும் எதிர்க்கின்றோம் என்பதை ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலமே காண்பிக்கமுடியும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் மும்மொழிகளிலும் தேர்ச்சியுடைய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் க…

  15. திருமதி குமாரதுங்கவின் கடிதம் [23 - July - 2007] ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவும் சேர்ந்து அமைத்திருக்கும் புதிய கூட்டணியான தேசிய காங்கிரஸை முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க உடனடியாகவே வரவேற்றிருக்கின்றார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் அமைப்பாளர் மங்கள சமரவீரவும் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் தேசிய காங்கிரஸ் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். மறுநாளே லண்டனிலிருந்து சமரவீரவிற்கு கடிதமொன்றை எழுதியிருக்கும் திருமதி குமாரதுங்க, புதிய கூட்டணியின் நோக்கங்களுக்கு தனது ஆசீர்வாதம் மாத்திரமல்ல தனது பெற்றோர்களான காலஞ்சென்ற பிரதமர்கள் எஸ்.டபிள்யூ.ஆர்.ட…

  16. யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் டண்டணக்கா தொலைக்காட்சியின் இயக்குநருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. கடந்த ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அன்றைய தினம் மாலை 6.30 மணி வரை வாக்களிக்க முடியும் என பொய் செய்தியை தொடர்ச்சியாக டாண் தொலைக்காட்சி ஒளி பரப்பியிருந்தது. இந்த செய்தியால் பாதிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றின் உதவியை நாடியிருந்தார். இதன் வழக்கு விசாரணைக்காக தொலைக்காட்சியின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது. ஆனால் அவர் நீதிமன்றுக்கு சமுகமளிக்காதமையை அடுத்து அவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிடப்பட்டது. முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாயவை பங்காளராக கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்படும் இத்தொலைக்காட்சி தனது மாதந்…

    • 3 replies
    • 776 views
  17. சிறிலங்கா அதிபரின் பிலிப்பைன்ஸ் பயணம் அரச நிதி வீணடிப்பு – ஹர்ஷ டி சில்வா சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸ் பயணம், எந்தத் திட்டமும் இன்று மேற்கொள்ளப்பட்டது என்றும், இதனால் அரசாங்கம் பயணம் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும், பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குற்றம்சாட்டியுள்ளார். கடந்த வாரம் ஐந்து நாட்கள் பயணமாக பிலிப்பைன்ஸ்சுக்கு சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பினார். சிறிலங்கா அதிபரின் குழுவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வெளிவிவாகர அமைச்சர் திலக் மாரப்பன மாத்திரமே இடம்பெற்றிருந்தார். அந்தக் குழுவில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்…

    • 0 replies
    • 277 views
  18. மகிந்தவின் நிகழ்ச்சி நிரல் தமிழின அழிப்புத்தான் நாய்களின் விடயத்தில் தாம் பௌத்த தர்மத்தைக் கடைப்பிடிப்பதாக காட்டும் மகிந்தரின் ஆட்சியில், தமிழர்களின் உயிர்கள் நாயிலும் கேவலமாகிவிட்டது. தமிழர்களைக் கொள்வதற்காக தன்னினத்தின் உயிர்களையும் பலி கொடுக்க மகிந்த தயாராகவே உள்ளார். கொலைகள் இன்றேல் ஆட்சி இல்லை என்ற தற்போது நிலையே நாட்டில் நிலவுகிறது. மகிந்தர் அணியைப் பொறுத்தவரை தமிழின அழிப்பே முதன்மையானதாக இருக்கின்றது. இலங்கையில் மாறி மாறி ஆட்சிப்பீடத்தில் இருந்த அரசுளும், சிங்களத் தலைவர்களும் செய்ததையே மகிந்தரும் செய்தாலும், மகிந்தர் இப்போது முன்னணி வகிக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஏனைய ஆட்சியாளர்கள் உலகை ஏமாற்றும் விதத்தில் தமிழருக்கு கூடுதல் அதிகாரங்களை வழ…

  19. மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும்-தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை! மாகாண சபைகளின் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் நிதியில்லை என்றால் அந்நிதியை இந்தியா வழங்க வேண்டும் என இலங்கைக்கான இந்தியாவின் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தவைர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பிலே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இனப்பிரச்சினைகான நிரந்தரமான தீர்வினை வழங்குவதற்கு இந்த…

    • 3 replies
    • 393 views
  20. வித்தியாவின் கொலை சந்தேகநபரான குமார் சுவிஸ் ரஞ்சன் அல்ல ; புளொட் அறிவிப்பு புங்குடுதீவு மாணவி வித்தியாவில் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சுவிஸ் குமார் என்பவர், எமது அமைப்பைச் சேர்ந்த சுவிஸ் ரஞ்சன் அல்ல என்று புளொட் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனுடைய கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தில் கைதாகியிருப்பவர், சுவிஸில் பிரகாஸ் என்றும் புங்குடுதீவில் குமார் என்றும் அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் என்பவராவார். ஆயினும், வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரகாஸ் அல்லது குமார் என்பவரின் புகைப்படம்…

  21. [ ஞாயிற்றுக்கிழமை, 09 ஒக்ரோபர் 2011, 00:56 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] கொழும்பு மாநகரசபைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் ஐதேக அதிகளவு வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் உள்ளது. கொழும்பு மாநகரசபையின் தொகுதி வாரியான முடிவுகள் அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ள போதும் இன்னமும் இறுதியான முடிவும், ஆசன ஒதுக்கீடும் அறிவிக்கப்படவில்லை. எனினும் ஐதேக அதிக ஆசனங்களுடன் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகியுள்ளது. இங்கு மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி 26 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. மத்திய கொழும்பில் ஐதேக 40,369 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2…

  22. விமான சேவைகளில் மோசடி – விசாரணை ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆணைக்குழுவின் காலம் மே மாதம் 5 ஆம் திகதி வரை மீளவும் நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் மிஹின்லங்கா விமான சேவை ஆகிய நிறுவனங்களின் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டமை, நுழைவுத் தேர்வில் சித்திபெறாத மற்றும் தகைமையற்றவர்களை பணிக்கமர்த்தியமை, ஒப்பந்தங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை, விமானப் பணியாளர்கள் சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு துணை நின்றமை உள்ளிட்ட மோசடிகள் இடம்பெற்றதாக க…

  23. Published By: VISHNU 12 FEB, 2024 | 08:02 PM (எம்.ஆர்.எம்.வசீம்) சிறைக்கைதிகள் சிறைச்சாலையிலிருந்து விடுதலையான பின்னர் அவர்கள் சமூகத்துக்குப் பயனுள்ள நபர்களாக உருவாக்குவதை நோக்காகக்கொண்டு அனைத்து சிறைச்சாலைகளிலும் தொழிற்சாலைகளை அமைப்பதற்காகச் சிறைச்சாலை திணைக்களம் மற்றும் தொழில்துறை அபிருத்தி சபைக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு திங்கட்கிழமை (12) நீதி அமைச்சில் இடம்பெற்றது. நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்வுக்கு முன்னால் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய மற்றும் தொழில்துறை அபிவிருத்தி சபையின் தலைவர் சாரங்க அலகப்பெரும ஆகியோர் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். புரிந்துணர்…

  24. ஞாயிறு 19-08-2007 13:51 மணி தமிழீழம் [மயூரன்] பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை நிலைநாட்ட பாகிஸ்தான் உதவும் - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை நிலைநாட்ட இலங்கை மற்றும சர்வதேச சமூகத்திற்கும் பாகிஸ்தான் உதவும் என இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற பாகிஸ்தானுடைய சுதந்திரதின நிழக்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் முன்னகர்வுகள் மற்றும் ஒருமைப்பாடு ஊடாக சமாதானத்தை ஏற்படுத்த அனைத்து வகையிலான உதவிகளையும் பாகிஸ்தான் வழங்கும் என பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கும் இலங்கைக்குமான இரு தரப்பு உறவுகளும் சுமூகமாக முன்னெடுக்கப்படும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.