Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 7 அக்டோபர் 2020 பட மூலாதாரம், JDS NOFIREZONE தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாக செயல்பட்டார் என முன்னாள் இராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா வெளியிட்ட கருத்து, சர்வதேச ரீதியில் மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனிற்கு உணவு, தண்ணீர் வழங்கி, அவரை இலங்கை இராணுவமே சுட்டுக் கொலை செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். அப்போது அவையில் பேசிய சரத் ஃபொன்சேகா பாலச்சந்திரன் தொடர…

    • 2 replies
    • 931 views
  2. தம்மை அடையாளப்படுத்தத் தவறிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை கண்டுபிடிப்பதற்காக வீட்டுக்கு வீடு இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் சில ஊழியர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று தம்மை அடையாளப்படுத்தத் தவறிவிட்டனர். இதன் விளைவாக, இந்த ஊழியர்களைக் கண்டுபிடிப்பதற்காக வீட்டுக்கு வீடு இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலுக்கான மூலத்தைக் கண்டறிய, சுகாதாரத் தரப்பினரும், பாதுகாப்புத் தரப்பினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பிரெண்டிக்…

  3. (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) கஞ்சா பாவனையை ஊக்குவிக்கும் வகையில் பாராளுமன்ற ஊழியர்களுக்கு புத்தகமொன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் எவ்வாறு விநியோகிக்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என, எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியபோது, ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பாராளுமன்றத்தில் இன்று (நேற்று) கஞ்சா தொடர்பாக கதைக்கப்பட்டது. அவ்வாறாக கதைக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்களுக்குள் பாராளுமன்ற ஊழியர்களுக்கு புத்தகமொன்று விநியோகிக்கப்பட…

  4. (எம்.எம்.சில்வெஸ்டர்) இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மீதான வரி அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டால் நுகர்வோருக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட முடியாமல் போவதுடன் எதிர்வரும் காலங்களில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா முதல் 250 ரூபா வரை உயர்வடைவதற்கான அபாய நிலைமை உருவாகும் என்று நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள கலாநிதி என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். “கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் என தங்களை அடையாளப்படுத்திய…

  5. 18 நிலையங்களில் ரயில் நிறுத்தப்படாது – ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/09/114265635_train-mask2-720x450.jpg பிரதான ரயில் பாதையில் ராகம, படுவத்த தொடக்கம் யத்தல்கொட வரையில் 18 ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதிக்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்ததாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, புத்தளம் ரயில் பாதையில் பேரலந்த தொடக்கம் குரண வரையில், நேற்று நள்ளிரவு முதல் குறிப்ப…

    • 0 replies
    • 402 views
  6. பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் ஆலோசனைகள் எதிர்வரும் ஞாயிறுக்கிழமை இடம்பெறவுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கலந்துகொள்ளவுள்ள மாணவர்கள் அவர்களுக்கான பரீட்சை இலக்கத்தை சீருடையின் வலது புறத்தில் அணிந்திருக்க வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு பரீட்சாத்திகள் பரீட்சை மண்டபங்களுக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்முறை பரீட்சைக்கு முதல் முறையாக பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். பரீட்சாத்திகளை அழைத்து வரும் பெற்றோர் பரீட்சை மத்திய நிலைய வளாகத்திற்குள் ப…

    • 0 replies
    • 686 views
  7. சீனத் தூதுக்குழுவினர் கொழும்புக்கு விஜயம் சீனாவின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும், தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான மேன்மை தங்கிய யங் ஜீச்சி அவர்களின் தலைமையிலான உயர் அதிகாரமுள்ள சீனத் தூதுக்குழுவினர் ஒக்டோபர் 8 ஆந் திகதியாகிய இன்று கொழும்பை வந்தடையவுள்ளனர். உலகளாவிய கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர், தெற்காசியப் பிராந்தியத்தில் இடம்பெறும் சீனாவின் முதலாவது விஜயமாக இது அமைவதனால், உலகளாவிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுதல் மற்றும் பொருளாதார உறவுகளின் மறுமலர்ச்சி ஆகியவற்றில் இந்த விஜயம் இலங்கைக்கும் சீனாவிற்குமிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விஜயம் செய்யும் சீனத் தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாப…

  8. கடலை கண்டதில்லையா மலையக இளைஞர்கள்? மஹேஸ்வரி விஜயனந்தன் அண்மைக் காலமாக மலையக இளைஞர்களின் வீண் சாவு, அதிகமாக அதிகரித்துள்ளதை தினமும் ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்து துன்பப்படுவதா அல்லது இவர்களின் அறியாமையை நினைத்து வெட்கப்படுவதா என ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருப்பது நான் மட்டுமல்ல. என்னைப்போன்று மனித உயிர்களின் பெறுமதியை உணர்ந்தவர்களும் நிச்சயம் இவ்வாறு தான் சிந்திப்பார்கள் என்பதில் ஐயமில்லை. தற்கொலையாக இருக்கட்டும் ரயிலில் மோதுண்டு இறப்பதாக இருக்கட்டும் ஏன் அண்மையில் அதிகரித்து வரும் கடலில் மூழ்கி உயிரிழத்தல் போன்ற அனைத்து சம்பவங்களிலும் மலையக இளைஞர்கள் வீணாக உயிரிழக்கின்றனர். உண்மையில் அதிக நீர்வளம் கொண்ட மலையகத்திலிருந்து தலைநகருக்கு தொழிலுக்காக வரும் இ…

  9. நிதி மோசடி விசாரணைப் பிரிவினரின் வெளிநாட்டு பயணங்களுக்கு 141 இலட்சம் செலவு; பிரதமர் தகவல் நிதி மோசடி விசாரணை பிரிவின் (எஃப்.சி.ஐ.டி) அதிகாரிகள் 2015 முதல் 2019 வரையான விசாரணை நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டுள்ளதுடன், அச்சுற்றுப்பயணங்களில் ஈடுபட்ட அதிகாரிகள் 20 பேருக்கான சுற்றுப்பயணத்திற்கான விமான பயணச்சீட்டு கட்டணம் மற்றும் சுற்றுப்பயணத்திற்கான கொடுப்பனவாக சுமார் ரூபாய் 141 இலட்சம் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து பதில…

  10. இலங்கையை விளையாட்டு மைதானமாக நினைக்கக் கூடாது - ஜயநாத் கொலம்பகே. இலங்கை பூகோள அரசியல் சக்திகளுக்கான உதைபந்தாட்ட மைதானமாக விளங்க முடியாது என வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கையின் அமைவிடத்தை கருத்தில் கொண்டு பூகோள அரசியல் சக்திகள் அதனை விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கு அனுமதிக்கமுடியாது. அந்த போட்டியில் ஆகக்குறைந்தது நாங்கள் நடுவராகவாவது இருக்கவேண்டும். இந்த விளையாட்டில் சர்வதேசஅளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளை உள்வாங்கவேண்டிய தேவையுள்ளது. தேசிய நலன்களை அ…

  11. காணாமல் போன மகனைத் தேடிய தாய் மரணம் - தொடரும் துயரம் வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா மகறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மனோன்மணி வயது 70 என்ற தாயே இன்றையதினம் மரணமடைந்துள்ளார். இவரது மகன் பெரியசாமி செல்வகுமார் வயது 45 கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். அவரைத்தேடி வவுனியாவில் 1328 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடிய நிலையில் மகனை காணாமலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தமது பிள்ளைகளைத் தேடிய இரு தந்தைமார் வவுனியாவில் அண்மையில் மரணமடைந்திருந…

  12. கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தை உணராமல் பரீட்சை நடத்துவது விசப்பரீட்சைக்கு ஒப்பானது : இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் (எம்.நியூட்டன்) தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் பயங்கரமானது எனவும், பல மாவட்டங்கள் தனிமைப்படுத்தலோடு முடங்கியுள்ளதெனவும், சில மாகாணங்களில் சகல கல்வி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன எனவும், தொற்றானது இன்னும் பல பிரதேசங்களுக்கு பரவும் ஆபத்து உள்ளதெனவும், ஊடகங்களில் பிரதான செய்திகளாக வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையும், உயர்தர பரீட்சைகளும் போட்டிப் பரீட்சைகளே. நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வியில் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மேல்நிலை வர்க்கத்தினரைமாத்திரம் வ…

  13. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா. சம்பந்தன் மீண்டும் தெரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் தொடர்ந்தும் இருப்பாரென கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பேச்சாளர் பதவிக்கு எஸ்.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரது பெயர்கள் பிரேரரிக்கப்பட்ட நிலையில், முரண்பாடுகள் ஏற்பட்டமை காரணமாக பேச்சாளர் தெரிவு நேற்றைய தினம் நடைபெறவில்லை என கூறப்படுகின்றது. பேச்சாளர் தெரிவு காலவரையறையின்றி ஒத்திவைக்கப் பட்டிருப்பதால் எம்.ஏ.சுமந்திரனே அதுவரை தொடர்ந்தும் பேச்சாளராகச் செயற்படுவார…

  14. தமிழர் தரப்புடன் இணைந்ததாக இருந்த முஸ்லிம்களை தனியான இனத்துவ அடையாளத்தைக் கொண்ட தரப்பாக பிரிக்க உளவுத் துறைக்கு பாரிய தேவை இருந்த நிலையில், வடக்கிலிருந்து தமிழீழ விடுதலை புலிகள் முஸ்லிகளை வெளியேற்றியதை அடுத்து, முஸ்லிம்களின் அத்தகைய கோரிக்கைக்கு எமது உளவுச் சேவையும் மறைமுகமாக உதவியது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புலிகளுடனான யுத்ததின் போது உளவுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள பெற்றுக்கொள்ள அது ஒரு உக்தியாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் நேற்று இதனை வெளிப்படுத்தினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொ…

    • 4 replies
    • 675 views
  15. யாழ்ப்பாணம் புங்குடுதீவு முடக்கத்துக்குள்! யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதி மக்கள் வெளியேறாதவாறு முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியில் வசிக்கும் மேலும் 385 இற்கும் மேற்பட்டோர் இன்று சுய தனிமைப்படுத்தப்பட்டனர். நேற்றுமுன்தினம் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 945இற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள். புங்குடுதீவுப் பகுதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனினும், புங்குடுதீவு பிரதேசத்தில் இருந்து யாரும் வெளியேறாதவாறும் அப்பிரதேசத்துக்குள் யாரும் செல்லாதவாறும் முடக்கப்பட்டுள்ளது. …

  16. பௌத்த பிக்கு தலைமையில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள்? மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் உள்ள மேய்ச்சல் தரை காணிகளை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு தலைமையிலான சிலர் அத்துமீறி அபகரித்து வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நிலங்கள் குறித்த பிக்குவால் ஆபகரிக்கப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் இருந்து வருகை தந்து அத்து மீறி நுழைந்து தமிழர்களுக்குச் சொந்தமான மேச்சல் காணிகளை பிடித்து துப்பரவு செய்து வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கு மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மற்றும் பண்ணையாளர்கள் இணைந்து மக…

  17. ரியாஜ் பதியுதின் விடுவிக்கப்பட்டமைக்கான காரணம் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதினின் சகோதரர் ரியாஜ் பதியுதின் பயங்கரவாதத்துடன் நேரடியாக தொடர்புபட்டமைக்கான சாட்சிகள் இல்லாமையின் காரணமாகவே விடுவிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (06) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேயசிறி ரியாஜ் பதியுதினின் விடுதலை தொடர்பில் வினவிய போதே சமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகள் முடிவடையவில்லை எனவும், எதிர்காலத்தில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் விடுவிக்கப்பட்டதன் மூலம் நிரபராதி என கருத முடியாது எனவும் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

  18. மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது இடங்களில் ஓன்று கூடுவதற்கு தடை! by : Vithushagan http://athavannews.com/wp-content/uploads/2020/10/DSC0031-720x450.jpg மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது இடங்களில் ஓன்று கூடுவதற்கு தடை செய்யப்பட்டடுள்ளதுடன் சுகாதார அமைச்சின் கொரோனா அறிவுறத்தலை கடைப்பிடிக்குமாறு கொரோனா தடுப்பு செயலணியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டம் இன்று (புதன்கிழமை ) மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது இதன் போது எடுக்கப்பட் தீர்மானம் தொடர்பாக அவர் தெரிவித்தார். கம்பஹாவில் தற்போது ஏற்பட்ட கொரோனா நிலைமை காரணமாக எமது மாவட்ட…

    • 0 replies
    • 473 views
  19. குறித்த தினத்தில் பரீட்சைகள் நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்க போவதில்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட பிரகாரம் ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுகாதார நடைமுறைகளுக்கு அமைய புலமை பரிசில் பரீட்சை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள 2,936 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை 2020 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பரீட்சைக்காக நாடு முழுவதும் அமைக்க…

    • 0 replies
    • 575 views
  20. நாடளாவிய ரீதியில் ஊரடங்கை அமுல்படுத்தி எந்தப் பயனும் இல்லை – சுகாதார அமைச்சு by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/07/pavithra-vanniarachchi.jpg இலங்கையில் கொரோனா தொற்றை விரைவில் கட்டுப்படுத்தி, மீண்டும் ஒட்டுமொத்த உலகுக்கும் முன்மாதிரியான நாடாக இலங்கையை மாற்றுவோம் என சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாவிட்டால், அந்தப் பிரதேசங்களுக்கு ஊரடங்கைப் பிறப்பித்து எந்தவொரு பயனும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசா…

    • 0 replies
    • 290 views
  21. சேனாரத்னவின் பதவி பறிப்பு; அஜித் ரோஹணவுக்கு பதவி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவருக்குப் பதிலாக முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண புதிய பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் விடுதலை தொடர்பில் முரண்பாடான அறிக்கைகளை இரு சந்தர்ப்பங்களில் ஜாலிய சேனாரத்ன வெளியிட்டமை தொடர்பில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் விமர்சனம் வெளியிட்டதன் பின்னணியில் இந்த பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது. அதேபோல் மல்கம் ரஞ்சித்தின் விமர்ச…

  22. பிரபாகரனின் இளைய மகனை இராணுவம் கொலை செய்யவில்லை – சரத் பொன்சேகா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் கொலை செய்யவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் குழந்தைப் படையணியின் தளபதியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உரையாற்றிய போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனிற்கு பிஸ்கட் கொடுத்து இராணுவம் சுட்டுக் கொன்றது என குற்றம்சாட்டினா…

    • 15 replies
    • 1.8k views
  23. யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் – 3 ஆயிரத்து 915 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலில்..! யாழ்ப்பாணம் – புங்குடுதீவில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக 3 ஆயிரத்து 915 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். மேலும் அந்தப் பகுதியில் முழுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இந்த கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அ…

  24. பசுவதைச் சட்டம் ஏற்றுக்கொள்கின்றேன் ,காளை மாடுகளை என்ன செய்வது?

    • 0 replies
    • 599 views
  25. என் மீது இப்போதும் வீண் பழி போடுகின்றனர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.