Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பிரமாண்ட ஊர்வலம்! இந்துமக்கள் எதிர் நோக்குகின்ற முக்கிய பிரச்சனைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பிரமாண்ட ஊர்வலம் வவுனியாவில் இன்றுகாலை ஆரம்பமாகியது. இப்பேரணியானது காலை வவுனியா குருமன்காடு காளிகோயில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி குருமன்காட்டு சந்தி ஊடாக சென்று அங்கிருந்து புகையிரத நிலைய வீதியின் ஊடாக நகர மத்தியில் அமைந்துள்ள மனிக்கூட்டு கோபுரம் சென்று பசார்வீதியூடாக சென்று சூசைப்பிள்ளையார் குளமூடாக வவுனியா கந்தசுவாமி கோவில் முன்றலிலே இவ் ஊர்வலம் நிறைவடைந்தது. மதமாற்றத்தை தடுத்தல் அதனை தடுக்க அரசாங்கத்தை சட்டமாக்க கோருதல், இந்துமதம் சார்…

  2. தமிழ் ஊடகவியலாளர்களின் தேவைகளை ஆராய அமைச்சர் வடக்கிற்கு விஜயம் வடக்கில் தமிழ்மொழி பேசும் ஊடகவியலாளர்களின் தொழில் துறையுடன் சம்பந்தப்பட்ட தேவைகளை ஆராய்வதற்காக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அம்மாகாணத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை இன்று (02) மேற்கொள்கிறார். விஜயத்தின் போது அமைச்சர் தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்து அவர்களின் தொழில்துறை தேவைகள் குறித்து கலந்துரையாடுகிறார். இதேவேளை, வடக்கில் உள்ள மாணவர்களை கல்வி மற்றும் ஊடகத்துறையில் ஈடுபடுத்துவது குறித்தும் அரசாங்கம் விசேட வேலைத் திட்டங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அரசாங்க தகவல் திணைக்களம்) http://tamil.adaderana.lk/news.php?nid=134600

    • 1 reply
    • 440 views
  3. 20ஆம் திருத்தத்தை தோற்கடிப்பது மக்களின் கைகளிலேயே உள்ளது- லால்காந் by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/10/lalkanth.jpg நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 20ஆம் திருத்த சட்ட மூலத்தை தோற்கடிக்க மக்களினால் மாத்திரமே முடியுமென மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக லால்காந் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை, நீதித்துறை செயல்முறை ஊடாக ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. அதனை, மக்களின்…

  4. எங்களது இருப்பையும் பாதுகாப்பையும் இந்தியா தான் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் - சிறிதரன்.! இலங்கை அரசின் சர்வாதிகாரப் போக்கும் இப்போதுள்ள 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அதனால் இலங்கையில் நடைபெறப்போகும் பல காரியங்களும் எங்களை தாண்டி இந்த அரசு ஏதோ செய்யப் போகின்றது என்ற அச்சம் எங்களிடம் இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மறைந்த பாடகர் எஸ்.பி.பி…

    • 6 replies
    • 1.1k views
  5. கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் நாளை முதல் தற்காலிக நிறுத்தம் C.L.Sisil October 2, 2020கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் நாளை முதல் தற்காலிக நிறுத்தம்2020-10-02T11:35:40+05:30 கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் யாவும் நாளை முதல் முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைய, பரந்தன் பூநகரி வீதியூடாக நாளை மூன்றாம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அனைத்து வகையான போக்குவரத்துகளும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். மேலும், பரந்தனிலிருந்து 12 ஆ…

  6. பனை சார் உற்பத்திப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பில் கவனம்; அருந்திக்க பெர்னாண்டோ.! பனை சார் உற்பத்திப் பொருட்களுக்கு எதிர்காலத்தில் வரிவிலக்கு அளிப்பது தொடர்பில் தான் அது தரப்பில் பேசிக் கொள்வதாக உள்நாட்டு சிறுகைத்தொழில் பனை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார். பரணி பகுதியில் அமைந்துள்ள பனை தொழிற்சாலை உற்பத்தி நிலையத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு உள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், எதிர்காலத்தில் பனம் பொருள் சார் உற்பத்திப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிப்பது தொடர்பில் தான் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருந்தார். அத்துடன் மானிய அடிப்படையில் கடன்களை பெற்று அவர்களின் வாழ்வாதாரத்தினை மேலும் மேம்ப…

    • 1 reply
    • 438 views
  7. 13::நடைமுறைப்படுத்துமாறு கூற மோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது.! ஸ்ரீலங்காவில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூற இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது . இவ்வாறு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “15 மில்லியன் டொலர் நிதியையும் கொடுத்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், இந்திய பிரதமர் கூறியிருக்கிறார். இந்தியாவின் இந்த மென்மையான காலனித்துவத்திற்கு அடிபணியாமல் போராடி உயிர்த் தியாகம் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்திய அணியில் இருந்து அரச உணவை உண்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. புதி…

  8. விக்கினேஸ்வரனின் கட்சி தேர்தலுக்காக செலவிட்ட தொகை குறித்த கணக்கறிக்கை வெளியானது! தமிழ் மக்கள் கூட்டணியினர் தமது தேர்தல் கணக்கறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதன்படி அந்தக் கட்சி சுமார் 88 இலட்சம் ரூபாவை தேர்தல் செலவாகக் குறிப்பிட்டுள்ளது. 14.5 இலட்சம் ரூபா உள்நாட்டிலிருந்தும், 73.6 இலட்சம் ரூபா வெளிநாட்டிலிருந்தும் நிதியுதவியாக கிடைத்துள்ளதாக அந்த கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://athavannews.com/விக்கினேஸ்வரனின்-கட்சி-த/

  9. ஹட்டனில் கோர விபத்து – 24 மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் காயம்! ஹட்டன் – டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. டயகம பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் தலைகிழாக கவிழ்ந்துள்ளதாக பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். இதன்போது 24 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 30 பேரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் காயமடைந்த அனைவரும் சிகிச்சைகளுக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் க…

  10. வவுனியாவில் உயர்தரத்தில் கல்வி கற்றுவந்த இரண்டு மாணவிகள் மாயம் உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவிகளை கா ணவில்லை என அவர்களது பெற்றோர் ஈச்சங்குளம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் உள்ள உயர்தர வகுப்பு மாணவி ஒருவரின் வீட்டில் தங்கி நின்று சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரும் கல்வி கற்று வந்தார். குறித்த மாணவியின் தாயார் கடந்த செவ்வாய்க் கிழமை காலை வேலைக்கு சென்ற நிலையில், பாடசாலையில் இருந்து குறித்த மாணவிகளை பரீட்சைக்கான அனுமதி அட்டையை பெற அனுப்பி வைக்குமாறு தாயாருக்கு தொலைபேசியில் தெரியப்படுத்த…

  11. போருக்குப் பின் இலங்கைக்கு சீனாவே உதவியது – கோட்டபாய இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தபோது நாட்டின் அபிவிருத்தி திட்டங்களில் முதலீடு செய்ய சீனாவே முன்வந்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கொரிய மக்கள் குடியரசு, ஜேர்மன், வத்திக்கான், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், ஜனாதிபதியை சந்தித்தித்தனர். இந்த சந்திப்பில் உரையாற்றிய கோட்டபாய, “2009ஆம் ஆண்டு இலங்கையில் பயங்கரவாதம் தோல்வியுறச் செய்ததன் பின்னர், நாட்டின் துரித அபிவிருத்தியையே அரசாங்கமும், மக்களும் எதிர்பார்த்தார்கள். போர் காரணமாக பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சி அடைந்தது. நாட்டின் துரித அபிவிருத்திக்கு வெளிநாடுகளின் உதவிகள்…

    • 1 reply
    • 528 views
  12. ஐ.நா பொதுச் செயலாளரின் குற்றச்சாட்டுக்கு இலங்கை விளக்கம் ´ஐக்கிய நாடுகள் சபை, அதன் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைகள் துறையில் உள்ள பொறிமுறைகள்´ தொடர்பான பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையில் உள்ள இலங்கை தொடர்பான குறிப்பு தொடர்பாக இலங்கை அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. நேற்று (30) இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் அமர்வில், இலங்கையின் பதில் வதிவிட பிரதநிதி தயானி மென்டிஸ் அரசாங்கம் சார்பாக வௌியிட்ட அறிக்கை பின்வருமாறு. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ´அச்சுறுத்தும் விஜயங்கள்´, ´கண்காணிப்பு´, ´துன்புறுத்தல் தொடர்பான முறைப்பாடுகள்´ மற்றும் ´பழிவாங்கல்கள்´ தொடர்பாக, குறித்த சம்பவங்களை விசாரணை செய்து நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முகமாக, சட்டத்தை நடைமுறை…

    • 2 replies
    • 821 views
  13. “என்னிடம் தவறில்லை. எனவே எந்த விசாரணைகளுக்கும் நான் தயாராகவே உள்ளேன். ஆனால் அந்த விசாரணை மக்கள் மன்றத்தில் அல்லது அனைவரும் பார்க்கும் விதமாக நடக்க வேண்டும் என்று கட்சிக்கான பதில் கடிதத்தில் குறிப்பிட்டேன்” இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தேசிய அமைப்பார் வி.மணிவண்ணன் தெரிவித்தார். யாழில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும், “என்னிடம் 37 சாட்சிய ஆவணங்கள் இருக்கின்றது. விசாரணை நடத்துவதாயின் கட்சிக்கு அப்பால் நீதிபதிகளையோ அல்லது தகுதியான மூன்று பேர் கொண்ட குழுவையோ நியமிக்க வேண்டும் எனக் கோரினேன். ஆனால் விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் பதில் அளித்துள்ளனர். என்னில் தவறில்லை என்பதால், எனக்கு எதிராக சாட்சி…

  14. முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (01) சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து கறுப்புக் கொடிகளுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்ட இடத்திற்கு அதிகளவான புலனாய்வாளர்கள் வருகைதந்து போரட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை புகைப்படம், மற்றும் காணொளி எடுத்து அச்சுறுத்தியிருந்தனர். அதேவேளை நேற்று (30) இப் போராட்டத்திற்கான ஒழுங்குபடுத்தலை மேற்கொண்டிருக்கும்போது, இராணுவ புலனாய்வாளர்கள் இருவர் இரவு 08.45 மணியளவில் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்படடோரின் உறவுகளின் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரியின் வீட்டிற்கு சென்று, மிரட்டும்தொனியில் போராட்டம் தொடர்பில் தகவல்களைச் சேகரித்துள்ளனர். இது தொடர்பில் மரியசுரேஸ்…

  15. யாழ்ப்பாணம், நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் தனுரொக்கின் நண்பன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்த வன்முறைச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பு.சிவா (வயது -30) அவரது தாயார் ரேணுகா (வயது -50) ஆகிய இருவர் மீதே வீடு புகுந்து இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அடங்கிய கும்பலே இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது என்று கோ…

    • 1 reply
    • 659 views
  16. இந்துமக்கள் எதிர் நோக்குகின்ற முக்கிய பிரச்சனைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பிரமாண்ட ஊர்வலம் வவுனியாவில் இன்று காலை ஆரம்பமாகியது. இப் பேரணியானது காலை 8.30 மணியளவில் வவுனியா குருமன்காடு காளிகோயில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி குருமன்காட்டு சந்தி ஊடாக சென்று அங்கிருந்து புகையிரத நிலைய வீதியின் ஊடாக நகர மத்தியில் அமைந்துள்ள மனிக்கூட்டு கோபுரம் சென்று பஜார் வீதியூடாக சென்று சூசைப்பிள்ளையார்குளம் பகுதியூடாக வவுனியா கந்தசுவாமி கோவில் முன்றலிலே இவ் ஊர்வலம் நிறைவடைந்தது. பசு வதையை எவ்வடிவிலும் தடுத்தல் அதனை அரசாங்கத்திற்கு சட்டமாக்க கோருதல், மதமாற்றத்தை தடுத்தல் அதனை தடுக்க அரசாங்கத…

    • 2 replies
    • 545 views
  17. இன்று சர்வதேச சிறுவர் தினமாகும். அதனையொட்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை (01.10.2020) 11மணியளவில் ஆரம்பமானது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களும் இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினராலும் கடத்தப்பட்டும் கைது செய்யப்பட்டும் காணப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என கோரி கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “வரவேண்டும்.. வரவேண்டும்.. ஐநா அமைதிப்படை வரவேண்டும்”,”எங்கள் குழந்தைகள் எங்கே இதற்கு பதில் கூற யாரும் இல்லையா?”,…

  18. கிழக்கில் சூரியன் உதிக்கவில்லை – வியாழேந்திரன் வானத்தில் மட்டும்தான் சூரியன் கிழக்கிலே உதிக்கின்றது, இருளை போக்குகின்றது ஆனால் கிழக்கு தமிழர்களுடைய வாழ்க்கையில் இன்னும் அந்த சூரியன் உதிக்கவில்லை இதுதான் உண்மை என இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களை புனரமைப்பு செய்வதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று (30) நாவற்குடா இந்து கலாசார மத்திய நிலையத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்ற போதே இதனை தெரிவித்தார். மேலும், “இந்த அரசியல் நீரோட்டத்தில் தொடர்ச்சியாக நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம், நான் சர்வதேச அரசியலைப்பற்றி சிந்திக்க முன்பு எனது மாகாணம் எனது மாவட்டத்தைப்பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது,…

    • 1 reply
    • 430 views
  19. தேசியப் பட்டியல் ஆசனத்தை நிராகரிக்கும் முன்னாள் பிரதமர் நூல் ஒன்றை எழுதப்போகின்றாராம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புத்தகம் ஒன்றை எழுதுவதற்கு தனது நேரத்தைப் பயன்படுத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர் களிடம் தெரிவித்துள்ளார். கட்சியின் இளம் உறுப்பினர்கள் எதிர்வரும் ஆண்டுகளில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பாடத்திட்டத்தில் பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்திருந்தார். புத்தகம் ஒன்றை எழுதத் திட்டமிருப்பதாலேயே முன்னாள் பிரதமர் அக்கோரிக்கையை…

    • 1 reply
    • 396 views
  20. ஜே.ஆர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை உருவாக்கியது ஏன்? பிரதீப் ஜெயவர்த்தன கருத்து முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன நாட்டின் ஸ்திரதன்மை மற்றும் பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்வதற்காகவே நிறைவேற்று அதிகார முறையை உருவாக்கினார் என அவரது பேரன் பிரதீப்ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். ஜனநாயகத்துக்குள் சர்வாதிகாரம் என்ற நூலை வெளியிட்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடு எதிர்கொண்டிருந்த பல சவால்களை எதிர்கொண்டு அகற்றுவதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை உதவியது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்தி முறியடிப்பதற்கு நிறைவேற்று அதிகார முறை உதவியது வெளிநாட்டு இராணுவங்களின் ஊருடுவல்கள்,கிளர்ச்சி மற்றும் நாட்டை அழித்த யுத்த…

  21. மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்ட செயற்பாட்டினை நேரடியாக சென்று பார்வையிட்ட விசேட குழு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் இலங்கை மின்சார சபையினால் மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பகுதியில் மேற்கொள்ளப் பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி திட்ட செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கு மின் வலு அமைச்சர் டலஸ் அழகபெரும மற்றும் காற்று சூரிய சக்தி வலு இராஜாங்க அமைச்சர் துமிந்த திசநாயக்க தலைமையிலான விசேட குழுவினர் நேற்று மாலை குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். சுமார் 30 காற்றாலைகளை கொண்டு அமைக்கப்பட்ட 103.5 மெகா வாற் மின் உற்பத்தி திறனை கொண்ட குறித்த திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பாக குறித்த அமைச்சர்கள் குழு ஆராய்ந்ததுடன் நேரடியாக காற்…

  22. கிழக்கில் தமிழர்களது இருப்பை அழிக்கும் வகையில் இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு தமிழர்கள் இனம் மாற்றப்படுவதும் தொடர்கிறது.! கிழக்கு மாகாணத்தில் தமிழர்களது இருப்பை அழிக்கும் வகையில் எல்லைப்பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு வருவதுடன் தமிழர்கள் இனம் மாற்றப்பட்டும் வருவதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். வானத்தில் மட்டும்தான் சூரியன் கிழக்கிலே உதிக்கின்றது, இருளை போக்குகின்றது ஆனால் கிழக்கு தமிழர்களுடைய வாழ்க்கையில் இன்னும் அந்த சூரியன் உதிக்கவில்லை இதுதான் உண்மை என, மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களை புனரமைப்பு செய்வதற்கான நிதியுதவி வழங்கிவைத்து உரையாற்றியஇராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தனது உரையில் தெரிவித்தா…

    • 2 replies
    • 555 views
  23. அறவழிப் போராட்டங்களை நடத்தி என்ன பயனைக் கண்டனர் தமிழர்.?! வடக்கு, கிழக்கில் தமிழர்கள் 'உரிமைகள் வேண்டும்' என்ற கோஷத்துடன் கடந்த காலங்களிலும், தற்காலத்திலும் அறவழிப் போராட்டங்களை நடத்தி என்ன பயனைக் கண்டார்கள்.? ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம், ஒரு நாள் ஹர்த்தால் போராட்டமும்தான் அவர்களின் தற்போதைய அறவழிப் போராட்டங்களா?" - இவ்வாறு கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார். அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல. "தமிழர்கள் அறவழியில் போராடியோ அல்லது மீண்டும் ஆயுதம் தூக்கிப் போராடியோ அரசை ஒரு போதும் மிரட்ட முடியாது. அரசு நடு நிலையுடன் செயற்படுகின்றது. இதைத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் கூறி வைக்க விரும்புகின்றோம்" எனவும் அவர் குறிப்பிட்டார். 'வட…

    • 4 replies
    • 803 views
  24. ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியில் மோசடி – சமூக வலைத்தளங்களால் கண்டறியப்பட்ட பிரபலம் ஈஸ்டர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக திரட்டிய நிதியை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பெண் ஒருவர் மீண்டும் அதனை வழங்குவதாக தற்போது உறுதியளித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இஷினி வீரசிங்க என்ற பெண், gofundme.com மூலம், 82,882 டொலரை திரட்டினார். இருப்பினும், திரட்டப்பட்ட நிதி பாதிக்கப்பட்ட எந்தவொரு குடும்பத்திற்கும் வழங்கப்படவில்லை என வெளிவந்த சர்ச்சைக்கு பின்னர் #Ishinigate என்ற காஸ்டக் மூலம் சமூக வலைத்தளங்களில் குறித்த சம்பவம் பரவலாக பேசப்பட்டுவருகின்றது. அவர் செய்ததாகக் கூறப்பட்ட கொடுப்பனவுகளின் ரசீத…

  25. இந்து சமுத்திரம்... திறந்த மற்றும், சுதந்திர வலயமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் திறந்த மற்றும் சுதந்திர வலயமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டும் என ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் முதன்முதலில் இலங்கையே பிரேரணை முன்வைத்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தென்கொரியா, ஜேர்மன், வத்திக்கான் மற்றும் சுவிட்சர்லாந்திற்கான புதிய நான்கு தூதுவர்கள் இன்று ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். இதன்போது இலங்கையில் கொரோனா தொற்றினை வெற்றிகரமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தமை தொடர்பாக புதிய தூதுவர்களும் இதன்போது ஜனாதிபதிக்கு பாராட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.