ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வருகையை எதிர்பார்த்த, 72 க்கும் அதிகமானவர்கள் மரணித்துப் போயினர்… August 29, 2020 “10 வருடங்களாகியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வருகையை எதிர்பார்த்து, 72 க்கும் அதிகமான அவர்களின் உறவுகள் மரணித்துப் போன நிலையிலும் எமக்கான தீர்வு ஒன்று வழங்கப்படவில்லை” என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வாடி வீட்டு வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் தம்பிராசா செல்வராணியின் தலைமையில் சனிக்கிழமை(29.08.20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், “உயிருடன் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக…
-
- 0 replies
- 448 views
-
-
தொண்டமானாறு பலத்தினுடான போக்குவரத்திற்கு சந்நிதி பக்தர்களுக்கு அனுமதி August 29, 2020 வலிகாமம் கிழக்கு ஊடாக சந்நிதி உற்சவத்தினை அடையும் பக்தர்களின் வசதி கருதி தொண்டமானாறு பாலம் ஊடான போக்குவரத்திற்கு நேற்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா விழப்புணர்வுக்கு மக்கள் ஒத்துழைத்து செயற்படவேண்டும் என பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். பாலத்தினூடாக மக்களை போக்குவரத்திற்கு அனுமதிக்கும் வழிபாடுகளுடன் கூடிய சம்பிரதாய நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பால நுழைவாயிலில் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது. அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆட்சி எல்லைப்பகுதியில் உள்ள நீரியல் வளத்திணைக்களத்திற்…
-
- 0 replies
- 305 views
-
-
கூட்டமைப்புக்குள் பிளவா? – சீ.வீ.கே. பதிலளிப்பு கூட்டமைப்பிற்குள் பிரிவினை ஏற்படாதவண்ணம் பங்காளிக் கட்சிகளோடு இணைந்து நட்புறவோடு தமிழரசுக் கட்சி பயணிக்கும் என கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் வட மாகாண அவைத்தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை வவுனியாவில் இடம்பெறவுள்ளது. பல ஊடகங்களில் நாளைய கூட்டத்தில் பிரளயங்கள், குளறுபடிகள் இடம்பெறும், முரண்பாடுகள் ஏற்படும் எனச் ச…
-
- 3 replies
- 590 views
-
-
தமிழ் மக்கள் அரசியல் இலக்குகளில் ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்றும் பொருளாதார சலுகைகளையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் தேர்தல் முடிவடைந்த பின்னர் சிலர் கூற விழைந்துள்ளார்கள். அது உண்மையானால், வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதுதொடர்பில் சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு இதுதான் சரியான சந்தர்ப்பம். ஒற்றை ஆட்சியின் கீழ் பொருளாதார நலன்கள் மட்டுமே அவர்களுக்கு வேண்டும் என்று மக்கள் தீர்மானித்தால் நான் அரசியலில் இருந்து உடனே விலகி விடுவேன். இல்லையென்றால், எமது தலைவர்கள் புதிதாகச் சிந்தித்து அரசியல் மேதகைப் பண்புகளுக்குரிய முடிவுகளை எடுத்து எமது இனப்பிரச…
-
- 4 replies
- 589 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் மீண்டும் சபையில் எதிர்ப்புக் கருத்துக்களை பதிவு செய்தனர். தமிழ் மொழிபேசும் தமிழினம் இந்த பூமியின் பூர்வீக உரித்துடையவர்களா? இதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா? தேசத்துரோக கருத்துக்களை முன்வைத்து சபையில் உரையாற்றிய வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனை உடனடியாக சபையை விட்டு வெளியேற்றுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியினர் சபையில் போர்க்கொடி தூக்கினர். பாராளுமன்ற அமர்வுகள் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடிய வேளையில் ஆரம்பத்திலேயே சபையில் சர்ச்சை வெடித்தது. கடந்த பாராளுமன்ற அமர்வுகளின் போது வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக…
-
- 8 replies
- 995 views
-
-
இனவாதிகளாக இருந்தவர்கள் எனக்கு ஆலோசனை வழங்குவது விசித்திரமானது; பொன்சேகாவுக்கு கஜேந்திரகுமார் பதிலடி August 28, 2020 “இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக, நான் தெரிவிக்கும் கருத்துக்களில் கவனமாய் இருத்தல் அவசியம் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அவர்கள் குறிப்பிட்டிருந்தார். நான் அவருக்கு கூற விரும்புவது நான் எனது கருத்துக்களை மிகவும் எச்சரிக்கையுடனும், அளந்துமே தெரிவித்து வருகிறேன். எனக்கு அவரது அறிவுரை ஆச்சரியத்தை தருவதோடு விநோதமாயும் உள்ளது.” இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தொன்றுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றும்போது தெரிவித…
-
- 6 replies
- 738 views
-
-
யாழில் இவ்வருடம் "பியர் "பாவனையில் குறைவு யாழ்ப்பாண மதுவரித் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம், நல்லூர், வேலணை ஆகிய பகுதிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் கடந்த 6 மாதம் வரையிலான புள்ளிவிபரங்களின்படி பியர் நுகர்வு 27% ஆல் குறைவடைந்துள்ளதாக யாழ்ப்பாண மதுவரி திணைக்கள புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு 21 இலட்சத்துக்கு மேற்பட்ட லீட்டர் பியர் விற்பனை இடம்பெற்றதாகவும் எனினும் இவ்வருடம் கடந்த 6 மாத புள்ளிவிவரங்களின்படி 7 இலட்சத்து 42 ஆயிரம் லீட்டர் பியர் நுகர்வு மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் யாழ்ப்பாண மதுவரி திணைக்கள புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு வைன் நுகர்வு கடந்த வருடத்துடன் ஒப்பிடும…
-
- 18 replies
- 2.2k views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமனம் August 27, 2020 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டிருக்கின்றார். இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்குக் கிடைத்திருக்கின்றது. பல்கலைக்கழக கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் பரிந்துரைகளுடன் கிடைத்த மூன்று பெயர்களில் இருந்து, பல்கலைக் கழகப் பேரவை மதிப்பீட்டின் படி முதல் நிலையைப் பெற்றருந்த பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். http://th…
-
- 17 replies
- 1.2k views
-
-
சந்நிதி முருகனுக்கு காவடி, அங்கப்பிரதட்சணம், கற்பூரச் சட்டி எடுக்கத் தடை வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவில் அங்கப்பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது. இதனால் நேற்று(வியாழக்கிழமை) ஆலயத்துக்கு வருகை தந்த காவடிகள் தடுக்கப்பட்டன. தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய பெரும் திருவிழா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் இடம்பெற்று வருகிறது. எதிர்வரும் செப்ரெம்பர் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்த் திருவிழா இடம்பெறவுள்ளது. ஆலயத்துக்கு வருகைதரும் …
-
- 6 replies
- 657 views
-
-
‘பகல் கனவு காணக் கூடாது’ -நடராசா கிருஸ்ணகுமார் வடக்கு – கிழக்கில் அபிவிருத்தியின் ஊடாக மக்களை தமது பக்கம் திருப்பி விடலாடிமன்று அரசாங்கம் கருதுவதாகத் தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அரசாங்கம், பகல் கனவு காணக் கூடாதெனவும் கூறினார். வவுனியாவில், நேற்று (25) நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், நாடாளுமன்ற ஆரம்ப உரையில், இந்த நாட்டின் ச…
-
- 6 replies
- 1k views
-
-
இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதே புதிய அரசின் கொள்கை – ஜயநாத் கொலம்பகே இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதே புதிய அரசின் வெளிவிவகாரக் கொள்கை என வெளிவிவகார அமைச்சின் செயலாளரும் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியுமான ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், புதிய அரசின் வெளிவிவகார கொள்கை, இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் நலன்களை பாதுகாப்போம். அதாவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டோம் என்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும் இதே கொள்கை…
-
- 9 replies
- 869 views
-
-
துரைராஜசிங்கம் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதற்காக கொண்டுவருகிறோம்? விளக்குகின்றார் சி.வீ.கே.சிவஞானம் August 28, 2020 சி.வி.கே.சிவஞானம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு நாளை சனிக்கிழமை வவுனியாவில் கூடவிருக்கும் நிலையில், அந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சி.துரைராஜசிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டு இருக்கின்றது. நாளைய கூட்டத்தில் இந்தப் பிரேரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவருமான சி.வீ.கே. சிவஞானம், கட்சியின் பொருளாளர் கனகசபாபதி, யாழ் மேயர் இமானுவேல் ஆனல்ட் மற்றும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் …
-
- 2 replies
- 519 views
-
-
ஆனைவிழுந்தான் சரணாலய விவகாரம் – சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானம்! ஆனைவிழுந்தான் சரணாலய பகுதியில், சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 25 ஆம் திகதி, ஆனைவிழுந்தான் சரணாலயத்தின் 0.697 ஹெக்டேயர் நிலப்பரப்பில், சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மண்ணகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக சிலாபம் நீதவான…
-
- 0 replies
- 388 views
-
-
மண்டைதீவில் கடற்படைக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி முறியடிப்பு யாழ்ப்பாணம் – மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் இன்று (28) காணிகளை அளவிடுவதற்கு வருகை தந்த போது அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து நில அளவையை நிறுத்திவிட்டு அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மண்டைதீவு, கிராம சேவகர் பிரிவான ஜே/08 பகுதியில் தெற்கு கடற்கரை சுடலை வீதியில் உள்ள நான்கு பேருக்கு சொந்தமான 62 பரப்பு தனியார் காணிகளை கடற்படையினரின் முகாமை விஸ்தரிப்பதற்காக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதற்காக இன்று நில அளவைத் திணைக்களத்தினர் ஊடாக காணி அளவீட…
-
- 0 replies
- 268 views
-
-
கட்டுநாயக்க விமான நிலையம் அடுத்த மாத இறுதியில் திறக்கப்படுமா? இந்திய நிலைமையால் குழப்பம் August 28, 2020 எதிர்வரும் மாதத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. அயல் நாடான இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிர வேகமாக பரவி வருகின்றது. இதுவே விமான நிலையத்தைத் திறக்காமல் இருப்பதற்கான பிரதான காரணம் என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியாரச்சி தெரிவித்துள்ளார். அதற்கமைய விமான நிலையம் கால வரையின்றி தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்காகத் திறக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். …
-
- 1 reply
- 339 views
-
-
கொழும்பு – மட்டக்குளியில் வைத்து கஞ்சாவை கடத்தி சென்ற இரண்டு கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையின் உத்தியோகபூர்வ வாகனத்தில் குறித்த கஞ்சா தொகையை எடுத்துச் செல்லும்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://newuthayan.com/கஞ்சா-கடத்திய-கடற்படை-வீ/
-
- 1 reply
- 472 views
-
-
445 பட்டதாரிகளுக்கு மட்டு’வில் நியமனம்! வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நடவடிக்கைகள் நேற்று (27) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனமே மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட 445 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டன. https://newuthayan.com/445-பட்டதாரிகளுக்கு-மட்டுவ/
-
- 0 replies
- 347 views
-
-
புலிகள் யாழ்ப்பாணத்தை வென்றெடுப்பதனை பாகிஸ்தான் உதவியினாலேயேதடுக்க முடிந்தது என புதிய வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு மிகவும் முக்கியமான நாடுகள். ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினருக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த இடமளிக்ககூடாது.மேற்குலகு சார்ந்த வெளியுறவு கொள்கையில் இருந்து விலகுவதற்கான காலம் கனிந்திருக்கின்றது.தெற்காசியாவும் இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர பிரச்சினைகளைக் கொண்டுள்ளன. இரண்டும் எமது நண்பர்கள். மிகவும் நெருக்கடியான காலங்களில் அவை இரண்டும் எமக்கு உதவியுள்ளன.யுத்த காலத்தில் புலிகளினால் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை…
-
- 0 replies
- 341 views
-
-
குடிநீர் இன்றி தவிக்கும் தென் தமிழீழத்தின் சாளம்பஞ்சேனை தென் தமிழீழம் , மட்டக்களப்பு – கிரான் புணாணை மேற்கு கிராம அதிகாரிக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான சாளம்பஞ்சேனை கிராமத்தில் வாழும் மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். இங்கு வாழும் மக்கள் 1961ம் ஆண்டு குடியேறினர். பின்னர் நாட்டின் அவ்வப்போது ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னர் மக்கள் மீள குடியேறி வாழ்ந்து வருகின்றனர். குறித்த சாளம்பஞ்சேனை கிராமமானது மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடியில் இருந்து சுமார் 16 கிலோமீற்றர் தூரம் சென்று இடப்பக்கமாக 02 கிலோமீற்ற…
-
- 0 replies
- 327 views
-
-
சிங்கள மயமாக்கலை ஏற்படுத்தவா கிழக்கில் தேரர்கள் அடங்கிய செயலணி? – சார்ள்ஸ் கேள்வி தமிழர்களுடைய வரலாறு, கலாசார அடையாளங்கள் என்பன அழிக்கப்பட்டு எதிர்காலத்தில் பௌத்த சிங்கள மயமாக்கலை ஏற்படுத்தவா தமிழர்கள் இல்லாத கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமையை பாதுகாக்கும் செயலணி அமைக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கை இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, இடம்பெற்று வரும் விவாதத்தில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக கிழக்கு …
-
- 1 reply
- 823 views
-
-
விக்னேஸ்வரனுக்கு விரும்பியதைச் சொல்ல உரிமை உண்டு' நாடாளுமன்றத்துக்குள் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தமது கருத்துக்களை தெரிவிக்க சுதந்திரம் உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றின் முதல் அமர்வில் ஆற்றிய உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றில் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையில் சபாநாயகர் இதனைக் கூறியுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/விக்னேஸ்வரனுக்கு-விரும்பியதைச்-சொல்ல-உர…
-
- 1 reply
- 429 views
-
-
’விக்னேஸ்வரன் கூறிய உண்மையால் கூட்டமைப்பு மௌனித்து விட்டது’ க. அகரன் “வரலாற்றை திரிவுபடுத்தி இலங்கையை சிங்கள, பௌத்த நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் பயணிக்கின்ற பேரினவாதிகள், விக்னேஸ்வரனின் கூற்றை ஜீரணிக்க முடியாது கூச்சலிட்டு வருகின்றனர் ” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தேர்தல் நிறைவடைந்தவுடன் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமையாக செய…
-
- 1 reply
- 507 views
-
-
கல்முனை பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தும் தொடர்ந்தும் முயற்சி செய்வேன்! எனது விருப்பு வாக்கினை விட குறைந்த வாக்குகளை பெற்ற சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் பாராளுமன்றம் சென்றுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட மக்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு மக்களுடன் இணைந்து தொடரந்தும் பயணிக்க உள்ளதாக தமிழர் மகா சபை சார்பில் கடந்த 9 ஆவது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார். நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பாக அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவ…
-
- 1 reply
- 400 views
-
-
மைத்திரிக்கு தயாராகும் இத்த கயிறு ரணில் புண்ணியத்தில் கிடைத்தது ஜனாதிபதி பதவி. ஒரு ஜனாதிபதி பதவி நாட்டின் உயர் பதவி. அதன் பின்னர் கவுரவமாக ஓய்வு எடுப்பதே சிறப்பானது. தோல்வியினை தாங்காத மகிந்தா, மீண்டும் பதவிக்கு வரும் திட்டத்தில், குருநாகல் மாவட்டத்தில் போட்டி இட்டு வென்று எம்பி ஆனார். மைத்திரி ஓய்வு எடுத்தாலும், ஆசை யாரை விட்டது. தான் ஒரு மகிந்தா என்ற நினைப்பில், மகிந்தா போலவே, சுதந்திர கட்சி தலைமை பதவியில் இருந்தாலும், பாய்ந்து, மகிந்தா கட்சியில் போட்டி இட்டு, இம்முறை மகிந்தா புண்ணியத்தில் எம்பி ஆகியுள்ளார். வரவுள்ள புதிய அரசியல் அமைப்பில், துணை பிரதமர் பதவி நிலை ஒன்றினை உருவாக்கி, தனக்கு தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். …
-
- 1 reply
- 594 views
-
-
கிழக்கின் தொல்பொருள் செயலணியில் மேலும் நால்வர் கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு மேலும் 4 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டு, அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிப்பட்டுள்ளது. இந்த செயலணியில், மல்வத்து – அஸ்கிரிய பீடங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க வென்டருவே உபாலி தேரர், அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர், மல்வத்து பீடத்தின் பதிவாளர் கலாநிதி பஹமுனே சுமங்கல தேரர் மற்றும் அம்பன்வெல்லே ஶ்ரீ சுமங்கல தேரர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியில் ஏற்கனவே 12 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் குறித்த நால்வரையும் இணைத்து அந்த செயலணியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 1…
-
- 1 reply
- 340 views
-