ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான பேத்தாழை மாவடி மாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு இன்று (12) காலை நிறைவு பெற்றது. கடந்த ஜூன் 28ஆம் திகதி கும்பம் வைத்தலுடன் ஆரம்பமான ஆலய நிகழ்வுகள் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற்று தீர்த்தம் ஆடுதல், திருக்குளிர்த்தி பாடுதல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வுடன் முடிவுற்றது. இதன்போது பிரதேசத்தில் உள்ள பக்க அடியார்கள் அம்பாளின் அருளையும் ஆசியையும் பெற்றதுடன் இசை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர். கோயில்களில் வழிபடச் சென்ற பிள்ளையான் பக்தி பரவசமாகி சாமிக்கு சாட்டையடித்து பாவம் கழுவும் அவலம் சாமி பாவம் http://www.jvpnews.com/srilanka/76193.html
-
- 1 reply
- 2.5k views
-
-
மகிந்தவின் குடியியல் உரிமைகளை குறிவைக்கும் ரணில் – சுதந்திரக் கட்சி, ஜேவிபி எதிர்ப்பு மோசமான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு ஏற்ற வகையில், அரசியலமைப்பின் 81 ஆவது பிரிவில் திருத்தம் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உதவ வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் முன்னைய ஆட்சிக்கால முறைகேடுகள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடந்த சிறப்பு விவாதத்தின் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். “முன்னைய ஆட்சிக்கால ஊழல்கள், மோசடிகள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழு, மோசமான குற்றங்க…
-
- 1 reply
- 228 views
-
-
பொலிஸார்... சங்கிலி அபகரிப்பு, மற்றும் கொள்ளைச் சம்பவங்களில்... ஈடுபடுகின்றனர் – சரத் பொன்சேகா. கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் சங்கிலி அபகரிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 1.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான விலைமானுக்கோரல் நடைமுறைகளை மீறி வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெயின் தரம் குறைவாக இருப்பதாகவும், அதில் ஊழல் நடந்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல…
-
- 3 replies
- 312 views
-
-
வெளிக்கடைச் சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தினால் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு ஆபத்தில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் வீ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார். பொன்சேகாவின் பாதுகாப்பு எந்த வகையிலும் அச்சுறுத்தல் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளவாட மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 30 மாத கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகாவிற்கு நேற்றைய தாக்குதல்களின் போது எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்திற்கும், சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்கும் இடையில் இடைவெளி காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். http://www.tharavu.com/2010/11/blog-post_6247.h…
-
- 0 replies
- 446 views
-
-
பாடசாலைத் தோட்டத்தில் பயிரிடப்பட்ட பச்சைமிளகாயால் இரு ஆசிரியைகள் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் கடந்த தி்ங்கட்கிழமை வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் தோட்டம் ஒன்று மாணவா்களால் செய்யப்பட்டு வருகின்றது. இத் தோட்டத்திற்கு பொறுப்பாக ஒரு ஆசிரியா் நியமிக்கப்பட்டிருந்தார். அங்கு பயிரிடப்படும் விளை பொருட்களை பாடசாலையின் அபிவிருத்திக்காக அப் பாடசாலை ஆசிரியா்களுக்கு சந்தை விலையிலும் பார்க்க குறைவான விலையில் விற்கப்படுவதாகவும் தெரியவருகின்றது. குறித்த பாடசாலையில் குடை மிளகாய் என்னும் மிளகாய் பயிரிடப்பட்டிருந்ததாகவும் அவை சில சாடிகளில் வைக்கப்பட்டு அலங்காரத்திற்காக சில வகுப்பிற்கு முன் வைக்கப்டிருந்ததாகவும் தெரியவருகின்றது. மிளகாய்த் தட்டுப்பா…
-
- 7 replies
- 992 views
-
-
வர்த்தகர் படு கொலை வழக்கில் வாஸ் குனவர்தனவுக்கு 5 வருட கடூழிய சிறை!!! வர்த்தகர் மொஹம்மட் ஷியாம் படு கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குனவர்தனவுக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஷியாம் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான அப்போதைய உதவி பொலிஸ் அத்தியட்சரும் தற்போதைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருமான ஷானி அபேசேகரவை அசுறுத்தியமை தொடர்பில் குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி 5 வருட கடூழிய சிறைக்கு மேலதிகமாக 25000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித…
-
- 0 replies
- 165 views
-
-
நாட்டில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு... எம்மால், நிரந்தர தீர்வு வழங்க முடியும் – சாணக்கியன்! நாட்டில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு எம்மால் நிரந்தர தீர்வு வழங்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக இல்லாதொழித்து நாட்டு மக்களை மந்தபோசணைக்கு கொண்டு சென்ற தரப்பினர் தற்போது புதிய அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கு கூற வேண்டியவர்கள் தற்போது மேலவை இலங்கை கூட்டணி என்ப…
-
- 2 replies
- 229 views
-
-
:!: நள்ளிரவு வேளை வீதியில் நடமாடிய சிறுமி படையினரால் பெற்றோரிடம் ஒப்படைப்பு :!: நள்ளிரவு வேளை தனியாக வீதி யில் நடமாடிய 12 வயதுச் சிறுமியை இராணுவத்தினர் தடுத்து வைத்திருந்து மறுநாள் காலை அப்பகுதி கிராம சேவை யாளர் முன்னிலையில் விடுவித்தனர். இச்சம்பவம் கடந்த மூன்றாம் திகதி நள் ளிரவு கைதடிப் பகுதியில் இடம்பெற் றது. அன்றைய தினம் இரவு தனது பேர்த்தி யாரின் வீட்டில் நின்ற சிறுமியை மறு நாள் நயினாதீவு அம்மன் கோயிலுக்கு அழைத்துச் செல்கின்றோம் என்று பெற்றோர் கூறிவிட்டு தமது வீட் டிற்கு சென்று விட்டனர். நயினாதீவுக்கு மறு நாள் செல்வது என்ற சிந்தனையோடு பேர்தியார் வீட்டில் அன்றைய இரவு இச்சிறுமி உறங்கினார். நள்ளிரவு ஒரு மணியளவில் விழித்த சிறுமி ஒருவருக்கும் சொல்லாமல் இரண்டு பைகளில்…
-
- 2 replies
- 2.2k views
-
-
நான் பதவி விலகப்போவதில்லை! பிரதமர் அறிவிப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலக வேண்டும், ஜனாதிபதி இவரை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்ற கருத்துக்கள் தென்னிலங்கையில் பலமாக எழுந்தன. புதிய பிரதமராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்க வேண்டும் என்ற தகவல்களும் அப்பப்போது வெளிவந்துகொண்டு இருந்தன. பிரதமர், ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி, கட்சி உறுப்பினர்கள் என அடுத்தடுத்து இடம்பெற்ற விசேட கூட்டங்களால் கொழும்பு அரசியல் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. இவ்வாறான இக்கட்டான நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பை அலரி மாளிகையில் நடத்திவருகின்றார். இதில் கருத்து தெரிவித்த பிரதமர், …
-
- 6 replies
- 658 views
-
-
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு : அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களை சந்தித்தார் ஜனாதிபதி 14 SEP, 2022 | 03:50 PM இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முன்வந்துள்ள அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களுடனான ஆரம்ப கலந்துரையாடலொன்று இன்று (14) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடு செய்வது தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி (David Holly) உள்ளிட்ட முதலீட்டாளர்கள் குழுவொன்று கலந்துகொ…
-
- 2 replies
- 277 views
- 1 follower
-
-
கிளைமோரிலிருந்து தப்பிக்க சிங்கள இராணுவத்துக்கு சீன வாகனங்கள் [ஞாயிற்றுக்கிழமை, 30 யூலை 2006, 00:42 ஈழம்] [ந.ரகுராம்] வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கிளேமோர் தாக்குதல்களிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் தப்பி பயணிக்க சீனாவில் தயாரிக்கப்பட்ட 25 நவீன பீ.ரி.ஆர். வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முடிவடைவதற்குள் படை வீரர்கள் பயணி;ப்பதற்கென 75 யுனிகொன் வாகனங்கள் தயாரிக்கப்படவுள்ளதாகவும் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கனமான தகடுகளைப் பயன்படுத்தி இந்த யுனிகொன் வாகனங்கள் தயாரிக்கப்படவுள்ளன. கிளேமோர் குண்டுகளினால் இந்த வாகனங்கள் பாதிப்படைய மாட்டாதென்பதால் இனிமேல் வாகனத் தொடரணிகளின் போது பேரூந்துலக்குப் பதிலாக இந்த பீ.ரி.ஆர். அல்லது யுனிகொன் …
-
- 0 replies
- 758 views
-
-
இலங்கையில் பூரண மதச் சுதந்திரம் கிடையாதென அமெரிக்கா குற்றச்சாட்டு: [sunday, 2010-11-21 06:39:33] இலங்கையில் பூரண மதச் சுதந்திரம் கிடையாதென அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. மதச் சுதந்திரம் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென அரசாங்கம் பகிரங்கமாக பிரச்சாரம் செய்த போதிலும் உண்மையில் நிலைமை அதுவல்ல என அமெரிக்காவின் மதச் சுதந்திரம் குறித்த வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யமாறு கோரி மஹா சங்கத்தினர் நடத்தத் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2500 ஆண்டு பௌத்த மத வரலாற்றில் மிகவும் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே மஹாசங்க அமர்வுகள் நடைபெற்ற…
-
- 1 reply
- 684 views
-
-
புகையிரத நிலையத்தை நோக்கி நகரும் மாணவர்களின் ஆர்ப்பாட்டம் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி நகர்ந்து செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனால் கொழும்பு, கொம்பனி வீதி மற்றும் அதனை அண்மித்த வீதிகளில் வாகன நெரிசல் காணப்படுவதாகவும் இதனால் அப் பகுதியூடான போக்குவரத்தை மேற்கொள்வோர் மாற்று வீதியை பயன்படுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். சைட்டத்தை மூடுதல் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவித்தல் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.virak…
-
- 0 replies
- 242 views
-
-
நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் நச்சுத்தன்மை – இலங்கையர்களுக்கு பேரிடியான தகவல் நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் இருந்து சிசுக்கள் மற்றும் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் விஷம் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். திரிபோஷவில் அடங்கியிருக்க வேண்டிய அளவை விட அஃபலரொக்சின் அளவு அதிகமாக இருப்பதன் காரணமாக திரிபோஷ தயாரிப்பு நிறுவனம் அவற்றை சேகரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாதம்பையில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார். நச்சுத்தன்மை வாய்ந்…
-
- 17 replies
- 1.2k views
- 1 follower
-
-
காட்டிக்கொடுப்பில் முஸ்லீம்கள் Witnesses told Reuters that local Muslims helped the military identify suspected rebel sympathizers. http://today.reuters.com/news/articlenews....C1-ArticlePage1
-
- 0 replies
- 1k views
-
-
-
மேற்கு ஆஸ்திரேலிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் அனைவரும் இந்தியா திரும்ப மறுத்ததை தொடர்ந்து நவ்றுத் தீவுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியத் தூதரக அதிகாரிகளை புகலிடக்கோரிக்கையாளர்கள் சந்திக்க மறுத்ததை தொடர்ந்தே இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலியா எடுத்துள்ளது. ஆஸி. குடிவரவுத்துறை அமைச்சர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அவர்கள் இனிமேல் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார்கள், அத்துடன் ஆஸ்திரேலியாவிலும் தங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மூன்று விமானங்கள் மூலமாக அவர்கள் நவ்றுவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஆ…
-
- 0 replies
- 348 views
-
-
அட்மிரல் கரன்னகொடவைக் கைது செய்ய நடவடிக்கை கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. 2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக வழக்கு கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றில் நடந்து வருகிறது. இந்தக் கடத்தல்கள் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட அறிந்திருந்தார் என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிவானிடம் தெரிவித்திருந்தார். …
-
- 0 replies
- 331 views
-
-
London நகரில் நடைபெறும் போராட்டம் http://ibctamil.fm/raddio.html
-
- 5 replies
- 2.3k views
-
-
அரசாஙகத்தின் ஆசீர்வாதத்துடன் முஸ்லிம் கட்சிகள் ஊவாவில் போட்டியிடுகின்றது? 08 ஆகஸ்ட் 2014 அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் முஸ்லிம் கட்சிகள் ஊவா மாகாணசபையில் தனித்து போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி ஊவா மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்துவதில்லை என கட்சி தீர்மானித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் ஊவாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் க…
-
- 0 replies
- 325 views
-
-
விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவுநர் ஜலியன் அசேஞ் லண்டனில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ள போதிலும், விக்லீக்ஸ் கிளப்பிய சர்ச்சைகள் இலங்கை அரசியலில் இன்றும் புகைந்துகொண்டுதான் இருக்கின்றது. இலங்கை தொடர்பாக இதுவரையில் வெளிவராத ஆவணங்கள் வெளிவரும் பட்சத்தில் கொழும்பு அரசியலில் ஒரு பூகம்பம் கிளம்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் ஜலியன் அசேஞ் லண்டனில் வைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டிருக்கின்றார். விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் இலங்கை தொடர்பாக மூன்று வகையான தகவல்கள் உள்ளடங்கியிருந்தன. ஒன்று, விடுதலைப் புலிகளுடனான போரில் இடம்பெற்றிருக்கக்கூடிய போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் இதில் வெளியாகியிருக்கின்றது. இரண்டாவத…
-
- 0 replies
- 936 views
-
-
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தன்னைத் தானே தாக்கியமை மருத்துவ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த பல்கலைக்கழக மாணவனுக்கு எதிராக இனங்களுக்கிடையில் முறுகலை தோற்றுவித்தமை தொடர்பாக குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். http://virakesari.lk/articles/2014/08/12/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%…
-
- 2 replies
- 522 views
-
-
திருகோணமலை துறைமுகம், எண்ணெய் தாங்கி அபிவிருத்திகளை இந்தியாவுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டும் இனியொரு போதும் எதிர்ப்புக்களுக்கு இடமளிக்க முடியாது : ஜனாதிபதி By T. Saranya 15 Oct, 2022 | 10:14 AM (எம்.மனோசித்ரா) திருகோணமலை துறைமுக அபிவிருத்தி மற்றும் எண்ணெய் தாங்கி அபிவிருத்தி ஆகியவற்றில் இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டியது முக்கியத்துவமுடையதாகும். 2003 இல் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது. எனவே இனியொரு போதும் இத்திட்டம் குறித்த எதிர்ப்புக்களுக்கு இடமளிக்க முடியாது என்…
-
- 0 replies
- 151 views
-
-
ஒட்டுப்படைக்குழுக்களைச்சேர
-
- 6 replies
- 2.8k views
-
-
இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணிக்கு வடகிழக்கில் இருந்து 3 பேர் தெரிவு! திங்கட்கிழமை, 13 டிசம்பர் 2010 10:35 இலங்கையின் தேசிய கிரிக்கட் அணிக்கு வடக்கு, கிழக்கு பிரதேசத்திலிருந்து 3 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரும் பெரியகல்லாறு கடின பந்து விளையாட்டுக்கழகத்தின் பயற்றுவிப்பாளருமான மோசஸ் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மட்டக்களப்பு, பெரியகல்லாறு கடின பந்து விளையாட்டுக்கழகத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு மற்றும் கல்லாறு பகுதியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 27 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். …
-
- 0 replies
- 729 views
-