ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
பொதுத் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? – அமைச்சர் விமல் தகவல் 2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தேர்தலுக்குப் பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை நிராகரிப்பதாக கூறினார். மேலும் நாட்டில் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டிய நேரத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்தோடு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை ந…
-
- 0 replies
- 424 views
-
-
முதல் நான்கு மாதங்களில் நாட்டின் கடன் சுமை 1 டிரில்லியனாக அதிகரித்துள்ளது – ஹர்ஷ தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் முதல் நான்கு மாதங்களில் நாட்டின் கடன் சுமை கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இவ்வளவு குறுகிய காலத்தில் நாட்டின் கடன் ஏன் வானத்தை தொட்டது என்பதை அரசின் தலைவர்கள் விளக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கத்தின் கடன் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் கடன் சுமைக்கு இடையிலான விகிதத்தை சுட்டிக்காட்டிய அவர், ராஜபக்ஷ ஆட்சியில் மொத்த கடன் சுமை நான்கு மாதங்களுக…
-
- 0 replies
- 447 views
-
-
வடக்கில் தமிழர்களை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஏமாற்றும் மாற்று அணிகளை புறக்கணிக்க வேண்டும் - சுமந்திரன் (ஆர்.யசி) தமிழர்களின் நீண்டகால இலக்கை நோக்கி ஒரு அணியாக தமிழர்களை கொண்டு செல்ல வேண்டும் என நாம் முயற்சித்துக்கொண்டுள்ள நேரத்தில் மாற்று அணியென கூறிக்கொண்டு தமிழர்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை ஒரு சிலர் முன்னெடுத்து வருகின்றனர். தமிழர்களின் வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதுவும் தமிழர்களை பலவீனப்படுத்துவதும் மட்டுமே இவர்களின் நோக்கமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.எ சுமந்திரன் கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசார செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு செல்கின்ற நிலையில் அவர் இவற்றைக் கூறினார். அவர் …
-
- 2 replies
- 471 views
-
-
சுமந்திரனுக்கு அமைச்ச பதவி ஆசையிருந்தால் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது டெலிபோன் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வென்று அமைச்சுப் பதவி பெறுவதில் எமக்கு ஆட்சேபணை ஒன்றுமில்லை. ஆனால் தாம் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு தமிழ் மக்கள் தமக்கு ஆணைதர வேண்டும் எனக் கேட்டதன் மூலம் தமிழ் மக்களை முட்டாள்கள் என்றும் சுய கௌரவம் இல்லாதவர்கள் என்றும் ஏமாளிகள் என்றும் நினைக்கின்றார் போலத் தெரிகிறது என சாடியுள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன். நேற்று (28) மானிப்பாயில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக் காலமாக திரு.சுமந்திரன் அவர்களின் அறிக்கைகளும், பத்திரிகைச் செய்திகளும் எமக்கு அதிர்ச்சி தருவ…
-
- 18 replies
- 1.5k views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலைக்கு துரித நடவடிக்கை மேற்கொள்வேன் - டக்ளஸ் உறுதி அரசியல் கைதிகளின் அவலங்களையும் உணர்வுகளையும் அனுபவ ரீதியாக உணர்ந்தவன் என்ற வகையில் தற்போதைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்காலத்தில் ஆரோக்கியமான நடவடிக்கை மேற்கொள்வேன் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயங்களை இலகுவாக கையாள்வதற்கு அரசியல் அதிகாரம் வலுவானதாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மன்னார், அடம்பன் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பரப்புரைக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரச…
-
- 0 replies
- 482 views
-
-
உதயன் மீது வெறியாட்டம் நடத்தியது ஈ.பி.டி.பி – முன்னாள் உறுப்பினர் சாட்சி! உதயன் மீதான படுகொலைத் தாக்குதலை ஈ.பி.டி.பியினரே மேற்கொண்டனர். கொலைகள், கடத்தல்கள் போன்றவற்றை செய்தவர்கள் ஈ.பி.டி.பியினர்தான். இவர்கள் தாக்குதலை நடத்திவிட்டு பழியை விடுதலைப் புலிகள் மேலும் இராணுவத்தினர் மீதும் போட்டனர். தினமுரசு பத்திரிகையின் ஆசிரியரை ஈ.பி.டி.பியினரே கொன்றனர்” இவ்வாறு ஈ.பி.டி.பியின் அப்பாேதைய உறுப்பினர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பொன்னையா(சதா) என்பவர் நேற்று (29) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த அதிர்ச்சித் தகவலைக் குறிப்பிட்டார். அவர் மேலும் இது பற்றிக் குறிப்பிட்டதாவது: “ஈ.பி.டி.பியின் அலெக்சாண்டர் சார்ள்ஸ் தலைமையிலான குழுவே இந்தத்…
-
- 2 replies
- 554 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு சுமந்திரன் அறிவுரை.! காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வழங்குகின்ற ஆவணங்களை அவர்களின் உறவுகள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி திக்கம் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதே ரீதியில் பேச்சு நடத்தி பெற்றுக்கொள்ளப்பட்டதே காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் ஆகும். அவர்களால் வழங்கப்படுகின்ற ஆவணம் மரணச் சான்றிதழ் எனத் தெரிவித்து அந்த ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளவிட…
-
- 1 reply
- 600 views
-
-
இனவாதத்துக்கு பதிலடி கொடுக்க ஓரணியாக திரளுங்கள் – அரவிந்தகுமார் நடைபெறவுள்ள தேர்தலானது தமிழ் பேசும் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகின்ற தேர்தலாகும் எனவே, ஓரணியில் திரண்டு ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு கோருகின்றேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் அரவிந்தகுமார் தெரிவித்தார். பதுளையில் இன்று (30) மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும், நாட்டில் தற்போது இனவாதம் “தலைவிரித்து ஆடுகின்றது. தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் அவசியமில்லை என ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். சிறுபான்மையின மக்களின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைப்போம் என வெளிப்படையாக கூறிவருகின்றனர். எனவே, தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் திரண்டு பதிலடி கொடு…
-
- 0 replies
- 339 views
-
-
தோல்வியின் விளிம்பில் த.தே.கூ.: ஜனநாயக போராளிகளை வைத்து வாக்குவங்கியை அதிகரிக்க முயற்சி- சுரேஷ் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியின் விளிம்பில் நிற்பதால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளினுடைய பெயர்களைக் கூறுவதனூடாக வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ளலாம் என நினைப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதற்காகத்தான், ஜனநாயகப் போராளிகளை வைத்து ஊடக சந்திப்புக்களை கூட்டமைப்பினர் நடத்துகின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் …
-
- 3 replies
- 1.1k views
-
-
பாராளுமன்றத்தை சுத்தம் செய்ய வேண்டும் பலத்திற்காக கண்ணீர் வடித்த ஆட்சியாளர்கள் யாரும் மக்களுக்காக கண்ணீர் வடிக்கவில்லை என மக்கள் தேசிய சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்களுக்காக மேடையில் கண்ணீர் வடிக்கும் சிலர் நாட்டில் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் போது, பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று துயரப்படும் போது கண்ணீர் வடிப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 72 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் நாட்டை அழிவுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அதனால் பாராளுமன்றத்தை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=131589
-
- 2 replies
- 561 views
-
-
ஒருசாராரைப் பலவீனப்படுத்தி, காரியத்தைச் சாதிப்பதற்கு அரசாங்கம் முயல்கிறது – இரா.சாணக்கியன் ஒருசாராரைப் பலவீனப்படுத்தி, காரியத்தைச் சாதிப்பதற்கு அரசாங்கம் முயல்கிறது என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மட்டக்களப்பு மாவட்டத்தில், சிங்களப் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டும் முயற்சியை, அரசாங்கம் மிகத் தீவிரமாக முன்னெடுத்துள்ளது. ஒருசாராரைப் பலவீனப்படுத்தி, காரியத்தைச் சாதிப்பதற்கு அரசாங்கம் முயல்கிறது. அதனோர் அங்கமாகவே, தொல்பொருள…
-
- 2 replies
- 534 views
-
-
’சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம்’ -என்.ராஜ் சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாமெனத் தெரிவித்த மறவன்புலவு பகுதியில் சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தன், 1,000 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி சுமந்திரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறினார். மறவன்புலவு பகுதியில், சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்ததினால் அமைக்கப்பட்டுவரும் புதிய கோவிலின் கருவறைக்குள் சுமந்திரனின் சுவரொட்டிகள் நேற்றைய தினம் இரவு ஒட்டப்பட்டிருந்தன. தேர்தல் விதிமுறைகளை மீறி, கோவிலின் கருவறை…
-
- 29 replies
- 3.1k views
-
-
சவாலின்மையால் தேர்தல் சோம்பலை ஏற்படுத்துகின்றது' நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் எவ்வித சவாலுமில்லை என்பதால், இத்தேர்தல் மிகவும் சோம்பேறித்தனமாக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று (30) நாவலப்பிட்டியில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர், கடந்த 5 வருடங்களில் நாட்டில் எந்தவொரு வேலைத்திட…
-
- 1 reply
- 476 views
-
-
சர்வதேச நீதிகோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்! சர்வதேச நீதியை கோரி காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துவதற்கு சர்வதேசம் தலையிடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள், “எமது உறவுகளின் நிலையை வெ…
-
- 0 replies
- 358 views
-
-
இலங்கை அரசாங்கத்தை டக்ளஸே காப்பாற்றினார்’ -எஸ்.நிதர்ஷன் “ஜெனிவா சென்று, இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்று பேசியவர் தான் டக்ளஸ் தேவானந்தா. பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில், ஜெனிவாக்கு சென்று இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றியவர்” என, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம், நேற்று (29), மானிப்பாயில் நடைபெற்றது. அங்கு கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், “சிங்கள பகுதிய…
-
- 1 reply
- 512 views
-
-
அரசாங்கத்தை அமைக்க உதவுங்கள் அமைச்சரவையில் இணைந்து கொள்ளுங்கள்- தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு சம்பிக்க அழைப்பு July 30, 2020 நாங்கள் அரசாங்கத்தை அமைப்பதற்கு எங்களுக்கு கரம்கொடுங்கள் முஸ்லீம் மற்றும் மலையககட்சிகளை போல அமைச்சரவை பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என நாங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு வேண்டுகோள் விடுக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் ஆங்கில நாளிதழிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் ஒற்றையாட்சியில் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மகிந்தராஜபக்சவுடன் இணைந்து போட்டியிடுகின்றவர்கள் ஜனநாயக சக்திகள் இல்லை என தெரிவித்துள்ள சம்பிக்க ரணவக்க மகிந…
-
- 1 reply
- 637 views
-
-
முன்னணிக்கு ஆதரவளிக்க வடக்கின் ஐந்து பொது அமைப்புக்கள் முடிவு; யாழ்ப்பாணத்தில் நேற்று அறிவிப்பு July 30, 2020 நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தாம் பூரண ஆதரவை வழங்குவதாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 பொது அமைப்புகள் கூட்டாக ஆதரவு தெரிவித்துள்ளன. யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர். இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட கிராமிய உழைப்பாளர் சங்கம், மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், மாவட்ட பூந்தளிர் பெண்கள் அமைப்பு, மாற்றத்திற்கான மாவட்ட இளைஞர் பேரவை மற்றும் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு அகிய அமைப்புக்களே ஆதரவை தெரிவித்துள்ளன. http://…
-
- 1 reply
- 467 views
-
-
பொலிஸ் ஊடகப்பேச்சாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ரிசாட் எச்சரிக்கை! ஈஸ்டர் தாக்குதலுக்கு தனது பணம் செலவிடப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள கருத்தினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் முற்றாக நிராகரித்துள்ளார். கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டதாக தெரிவித்தே சில ஊடகங்கள் இன்றைய தினம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளன. எனினும் இது அப்பட்டமான பொய். தேர்தல் நெருங்குகின்ற நேரம் பார்த்து இவ்வாறான ஒரு பொய்யினைச் சொல்வதன் ஊடாக, தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை …
-
- 1 reply
- 452 views
-
-
(வீரகேசரி) விடுதலைப்புலிகள் ஆட்சிசெய்த வடகிழக்கை அரசியல் அங்கிகாரத்துடன் புலிகள்தான் ஆளவேண்டும். அது விரைவில் நடக்கும் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராஜா தெரிவித்தார். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் இன்றையதினம் -29- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுகருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தற்போதைய தேர்தல் தொடர்பாக புரிந்துணர்வு கடிதம் ஒன்றை தமிழரசுகட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜாவிடம் கடந்த இருமாதங்களுக்கு முன்னர் வவுனியாவில் வைத்து வழங்கியிருந்தோம். அது தொடர்பாக கூட்டமைப்பின் பங்காளி கட்ச…
-
- 3 replies
- 846 views
-
-
ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் சுமந்திரனின் பெயரை உச்சரிக்கவேண்டிய தேவை ஏற்படாது- கஜேந்திரகுமார் July 20, 2020 ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் சுமந்திரனின் பெயரை உச்சரிக்கவேண்டிய தேவை ஏற்படாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சுமந்திரன் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் என்ற தகுதியை இழந்து வெறுமனே ஒரு சட்ட ஆலோசகராகவே இருக்கின்றார் இதன் காரணமாக அவ்வாறான ஒருவருடன் நாம் விவாதிக்கவேண்டிய தேவையுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன்தினம் கட்சிகளுக்கு இடையிலான விவாதமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் இந்த நிகழ்வு இரத்துச்செய்யப்பட்டது என்பதை அவர…
-
- 33 replies
- 3k views
-
-
இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முக்கிய அறிவிப்பு சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் உள்ளிட்டோரை அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கைகளை இலங்கை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளன. இவ்விடயம் தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மேலும் கூறியுள்ளதாவது, “அரச சார்பற்ற செயலகம் உட்பட பல அமைப்புகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பான ஒழுக்கமான நாட்டை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணி…
-
- 3 replies
- 703 views
-
-
புலிகளை அழிக்க உதவிய போது வழங்கிய வாக்குறுதியை மீறிய இலங்கை அரசாங்கத்தை என்ன செய்யப்போகின்றது இந்தியா.? விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியாவின் உதவியை பெறும்போது வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பின்நிற்பதாகவும் இதற்கு இந்தியா என்ன செய்யப்போகின்றது என்ற கேள்வியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் எழுப்பினார். சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையிலும் இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்ததின் அடிப்படையிலும் இந்த நாட்டில் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேசத்தின் பங்களிப்புக்கு இடமுண்டு. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் …
-
- 3 replies
- 812 views
-
-
அரசியல் தீர்மானப்பிரகாரம் ஒரு அரசியல் கைதி கூட விடுவிக்கப்படவில்லை என்கிறது குரல் அற்றவர்களின் குரல்.! சிறைத் தடுப்பில் இருந்து இதுவரை வெளியேறிய அரசியல் கைதிகள் எவருமே அரசியல் தீர்மானப்பிரகாரம் விடுவிக்கப்படவில்லையென குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் கைதிகளது விடுதலைக்காக போராட அமைக்கப்பட்டுள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பு யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரங்களில் கடந்த நல்லாட்சி காலப்பகுதியில் தம்மால் பெருமளவு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக பிரச்சாரப்படுத்தப்பட்டுவருகின்றது. இதனை முற்றாக மறுதலித்துள்ள அமைப்பு அரசியல் கைதிகளில்; தனிப்பட்ட ரீதியில் சட்ட…
-
- 10 replies
- 862 views
-
-
அரசாங்கத்துக்கு நெருக்கமாக செயற்பட்டால்தான் நாங்கள் மாற்றத்தினை உருவாக்க முடியும் – கருணா தற்போதைய அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்படுவதன் ஊடாகதான் நாங்கள் மாற்றத்தினை உருவாக்க முடியுமென முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணாஅம்மான்) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்கள்பில் தற்போது பல கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால் மக்கள் யாருக்கு வாக்களிப்பதென்ற குழப்பத்தில் இருக்கின்றனர். நீங்கள் குழப்பமடையாமல…
-
- 2 replies
- 430 views
-
-
கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதை தாமதப்படுத்த ஐ.தே.க தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு தாக்கல் செய்தமைக்காக கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட பலர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர். பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் கட்சியுடன் இணைந்து நேர்மையாக செயற்படுவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியையடுத்து நீக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதை ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு தாமதப்படுத்தியுள்ளது. கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியில் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசியுள்ளனர். …
-
- 0 replies
- 394 views
-