Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கை கழுவும் நீர் பூமரங்களிற்கு…! பாடசாலை மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை முதற்கொண்டு யாழ் மாவட்டத்திலும் பெரும்பாலான பாடசாலைகளில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. பழைய பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களைக் கொண்டு கைகளைக் கழுவி சுத்தப்படுத்திக் கொள்வதற்காக 10 இற்கும் மேற்பட்ட கை கழுவும் கோப்பைகளை சிறப்பான முறையில் வடிவமைத்து அவற்றை பூ மரங்களுக்கு பயன்தரும் வகையில் மிகவும் நேர்த்தியாகப் பொருத்தியுள்ளனர். இதனால், மாணவிகள் வகுப்பறைகளுக்கு செல்லும் முன்னர் தமது கைகளை தொற்று நீக்கிகள் மூலம் சுத்தப்படுத்துவதுடன் சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு தண்ணீர் வீண்விரயம் செய்வதும் தடுக்கப்படுகின்றது. உடுவில் மகளிர் கல்லூரியின் இந்த சிறப்பான செய…

  2. ஈ – காணி பதிவை இலத்திரனியல் முறைமையில் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை July 1, 2020 காணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளைத் தவிர்ப்பதற்கும் பதிவு பொறி முறைமையைத் துரிதப்படுத்துவதற்கும் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார். காணிப் பதிவின் போது இடம்பெறும் மோசடிகள் மற்றும் தாமதங்கள் காரணமாகப் பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். காணி ஆணையாளர் திணைக்களம், காணி உரித்துகள் நிர்ணய நிறுவனம், நில அளவைத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகத் திணைக்களம் ஒன்றிணைந்த வகையில் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவு செய்யும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ச…

    • 5 replies
    • 824 views
  3. கிழக்கிற்கான ஜனாதிபதி செயலணியில் சிறுபான்மையினரை இணைக்க இணக்கம்: டக்ளஸின் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றார் July 1, 2020 கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களை பிரதிநிதி…

  4. அலரிமாளிகையில் இன்றையதினம் தமிழ் ஊடகவியலார்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். இதன்போது, அவருக்கு ஒரு கூடை கறுத்தக்கொழும்பான் மாம்பழம் வழங்கப்பட்டு, இது யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், மாம்பழம் ஒன்றை சுவைத்த பிரதமர் மஹிந்த, யாழ்ப்பாண மாம்பழம் மிகவும் அருமையான சுவைகொண்டது என்று கூறி சுவைத்து மகிழ்ந்தார் https://www.virakesari.lk/article/84925

  5. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் கடந்த ஜுன் 28ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றின் போது கட்சிக்கும், கட்சி உறுப்பினர்கள் சிலருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை முன்வைத்திருந்தார் என தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்பினர் என்னும் தகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.அத்தோடு யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் என்னும் பதவியில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். இது…

  6. மது போதையில் பயணித்த இளம் சட்டத்தரணி மீது வழக்கு! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி ஒருவர் மீது மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தெல்லிப்பளை பொலிஸாரால் வழக்கு நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. தெல்லிப்பளை பொலிஸ் பிரிவில் வீதிச் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை வழிமறித்துள்ளனர். எனினும் அந்தக் கார் நிறுத்தாது சென்றதால் சந்தேகம் கொண்ட பொலிஸார், அதனை பின்தொடர்ந்து சென்று வழிமறித்தனர். அந்த காரை செலுத்திச் சென்றவர், தன்னை சட்டத்தரணி என்று பொலிஸாருக்கு அறிமுகம் செய்தார். எனினும் அவர் மதுபோதையில் இருப்பதை முகத்தோற்றளவில் அறிந்துகொண்ட பொல…

  7. கல்முனை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று கல்முனை பிரதேச செயலக முன்றலில் நேற்று (30) மாலை இடம்பெற்றது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக அறுவடை செய்யப்படவிருந்த வேளாண்மைகள் அழுகிய நிலையில் பாதிப்படைந்திருந்தன. இந்நிலையில் குறித்த போராட்டத்தில் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுமார் 25 க்கும் அதிகமானோர் பங்கேற்று பல்வேறு சுலோகங்களை ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்தனர். மேலும் இப்போராட்டத்தில் மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டும் முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான ஸ்ரீலங்கா பெரமுனை கட்சியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட வேட்பாளர் கீர…

  8. பொதுத் தேர்தலின் முஸ்லிம் சமூகம் தங்களது தார்மீக ஒற்றுமையை காட்ட வேண்டும்; ஜே.எம்.லாஹிர் நாட்டில் உள்ள முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை ஏற்படுத்திய கட்சி என்றால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார். தோப்பூர் பகுதியில் நேற்று (30) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்: சமூகத்தின் விடுதலைக்காகவும், முஸ்லிம்களின் உரிமைக்காகவும் தற்போதைய கட்சியின் தேசியத் தலைமை ரவூப் ஹக்கீம் அவர்கள் செயற்பட்டு வருகின்றார்கள். அத்தோடு இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்லில் முஸ்லிம் சமூ…

  9. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்க முயற்சி..! 1 மாதத்தில் 17 வயது சிறுவன் உட்பட 22 பேர் சத்தமில்லாமல் கைது, அதிர்ச்சி சம்பவம் அம்பலம்.! செவ்வாய், 30 ஜூன் 2020 10:24 PM தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்தனர் என குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த மாதம் மட்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் 22 பேர் சத்தமில்லாமல் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த 22 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த விடயம் வெளிவந்துள்ளதாக கூறப்படுகின்றது. தேர்தல் காலத்தில் மிகவும் இரகசியமாக இடம்பெறும் இந்தக் கைதுகள் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. கைதானவர்…

    • 5 replies
    • 1.1k views
  10. அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றம்! அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில், அரச நிறுவனங்களின் வேலை நேரத்தை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரையும், தனியார் பிரிவின் வேலை நேரத்தை காலை 9.45 முதல் பிற்பகல் 6.45 மணி வரையும் மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நிலைமையினை தடுப்பதற்காக சமூக இடைவௌியை பேணுவதற்காகவும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் மற்றும் அரச மற்றும் தனியார் சேவைகளின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த நேரங்கள் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் …

  11. வடக்கில் சஜித்தின் பிரசாரக் கூட்டம் – ஊடகவியலாளர்களிடம் கடும் சோதனை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வவுனியாவில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களிடம் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கில் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று ஆரம்பிக்கிறார். அதற்கமைய முதல் பிரசாரக்கூட்டம் வவுனியாவில் இன்று காலை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், ஊடகவியலாளர்களின் செய்தி சேகரிப்புக்கான அனைத்து பொருட்களும் விசேட அதிரடிப்படையினரால் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்ட…

  12. இறுதிப்போரில் சரணடைந்தவர்கள் தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிடும் கருத்தை நம்ப முடியாது – சம்பந்தன் இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பலர் காணாமல் ஆக்கப்பட்டு இருந்தனர்.இதற்கு கண்கண்ட சாட்சியங்களும் உள்ளன. ஆகவே அரசும், இராணுவமும் தான் முழுப்பொறுப்பு, அவர்கள் தப்பவே முடியாது என தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இறுதிப் போரில் இராணுவத்தினரை களத்தில் நின்று வழிநடத்தியவர்களில் ஒருவரே தற்போது இராணுவத்தளபதியாக உள்ளார்.அவருக்கு அங்கு நடந்த உண்மை நிலவரம் தெரியும். எனவே அவர் உண்மையை வெளியிட வேண்டும்.அதை விடுத்து விடுதலைப்புலிகள் மீது பழி போட்டுவிட்டு அவர் தப்ப முடியாது. இறுதிப்போரில் இடம்பெ…

    • 5 replies
    • 1k views
  13. தமிழர் தாயகம் வரலாறு தெரியாத தேரர்!- த.ம.தே கூட்டணி வேட்பாளர் காட்டம் வடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் என்றும் இந்த வரலாறு தெரியாமல் எல்லாவல மேத்தானந்த தேரர் உளறுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எஸ். நிஷாந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. ஜனாதிபதி அவர்களினால் உருவாக்கப்பட்ட கிழக்கு தொல்லியல் பாதுகாப்பு எனும் தனிச் சிங்களவர்கள் 11 பேரைக் கொண்ட செயலணியில் ஒருவரான எல்லாவல மேத்தானந்த தேரர் அவர்கள் தமிழர்களின் வரலாறுகள் தெரியாமல் ஊடகங்களுக்கு தவறாக உளருகின்றார் தேரரின் இவ்வாறான செயற்பாடுகளை கண்டிக்கின்றேன். இலங்கையின் வடகிழக்கு பிரதேசம் அன்று தொட்டு தமிழரின் பூர்வீக தாயகம் என்பது வரலாற்று…

  14. வாக்குறுதிகளை நிறைவேற்றும் திடசித்தம் கொண்டோரை தெரிவு செய்யுங்கள் – டக்ளஸ் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் திடசித்தமும் மன உறுதியும் கொண்டவர்களை நாடாளுமன்றுக்கு அனுப்புங்கள் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கபள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக நாடாளுமன்ற தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகின்றது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், ‘இன்று உலக நாடளுமன்ற தினம் (The International Day of Parliamentarism). அடுத்த நாடாளுமன்றத்தைத் தேரிவு செய்வதற்காக எமது மக்கள் தயாராகி வரும் சூழலில் இந்த நாள் வந்திருக்கின்றது. நாடாளுமன்றத்தில் தன்னைப் பிரதிநிதித்துவம் செய்கின்றவர் – கொ…

  15. வடக்கில் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவில் பாகுபாடு – உமாசந்திரபிரகாஸ் வடக்கில் உள்ள மாவட்டங்களிலேயே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் பெரும் வித்தியாசம் உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாசந்திர பிரகாஸ் தெரிவித்துள்ளார். இன்றைய (30) தினம் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே உமாச்சந்திர பிரகாஸ் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ‘யுத்தத்தின் பின்னர் குறிப்பிடத்தக்களவானவர்கள் சிறுநீரக, இருதய மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று கிளிநொச்சியில் சிறுநீரக நோயாளியொருவரை சந்தித்தேன். கிளிநொச்சியில் சிறுநீரக நோயாளிகளிற்கு மாதாந்தம் 1000 ரூபா உதவித் தொக…

  16. வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும்.! வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார். வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய தேவை இல்லை. தற்போதுள்ள இராணுவ முகாம்களை மேலும் பலப்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அங்குள்ள முகாம்களை அகற்றுகின்ற எந்த நோக்கமும் எமக்கு கிடையாது. வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படுவதை வைத்துக் கொண்டு, மக்களின் செயற்பாடுகளில் இராணுவம் தலையிடும் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. ஜனாதிபதி கோட்ட…

    • 5 replies
    • 692 views
  17. இலங்கையின், ஹெர்மஸ் பெரு நிறுவன நிறைவேற்று அதிகாரியாக கஸ்தூரி செல்லராஜா வில்சன் நியமனமாகி உள்ளார். Hemas Holding plc என்னும் இலங்கையின் பெரு நிறுவன நிறைவேற்று அதிகாரியாக 2020, அக்டோபர் 1ம் திகதி முதல் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். விலகிச் செல்லும் Steven Enderby என்பவரின் இடத்துக்கு இவர் நியமனமாகியுள்ளார். ஜூலை 1ம் திகதி முதல், அவரின் கீழ், நிழல் நிறைவேற்று அதிகாரியாக கடமை தொடங்கவுள்ளார் கஸ்தூரி. 2002 ம் ஆண்டு முதல் நிறுவனத்துடன் செயல்படும் கஸ்தூரி, அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளார். 2016ல் நிறுவனத்தின், மருந்துகள் பிரிவுக்கு பொறுப்பாக இருந்து அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளார். இலங்கையின் வரலாறில் ஒரு தமிழ் ப…

    • 45 replies
    • 4k views
  18. இலங்கை தமிழரசு கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய விமலேஸ்வரி உள்ளிட்ட ஏனைய நால்வரையும் உடன் கட்சியிலிருந்து நீக்குமாறு தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கத்துக்கு எழுத்துமூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அவரது அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நேற்று முன்தினம் 27/06/2020 அன்று தமிழரசுக் கட்சி மகளிர் அணிச் செயலாளர் என்று கூறப்பட்ட விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் மற்றும் நால்வர் யாழ்ப்பாணம் ஊடக மையத்துக்குச் சென்று தெரிவித்த கருத்துக்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இக்கடிதத்தை எழுதுகிறேன். நேற்று 28/06 காலை தாங்களும் தொலைபேசி மூலம் இவ்விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தீர்கள். 1.…

    • 10 replies
    • 1.6k views
  19. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்க நடவடிக்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை எதிர்வரும் ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்னர் திறப்பதற்கு அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வத்தளை, நீர்கொழும்பு உள்ளூராட்சிசபை பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியுள்ளதாவது, “வௌிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் அழைத்து வரப்படுவது எதிர்வரும் ஓகஸ்ட் 1ஆம் திகதிக்குள் நிறைவுக்கு கொண்டு வரப்படும். நாட்டுக்கு இன்னும் 20,000 பேர் வருகை தரவுள்ளனர். ஏற்கனவே 10,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த செயல்முறையை …

  20. ஜனாதிபதி செயலணி இனவழிப்பின் புதிய பரிணாமம்: ஒன்றிணைந்த போராட்டத்திற்கு தமிழர் மரபுரிமை பேரவை அழைப்பு (ஆர்.ராம்) கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணி கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் புதிய பரிணாமம் என்று தெரிவித்து தமிழர் மரபுரிமை பேரவை தனது கடுமையான கண்டனங்களையும் வெளியிட்டுள்ளது. தமிழ், முஸ்லிம் உறவை பலமாக மீளக்கட்டியெழுப்புவதன் மூலம் தான் சிங்கள பௌத்த ஏகாதிபத்திய தேசியவாதத்திற்கெதிரான எதிர்ப்பை வடக்கு-கிழக்கில் காட்ட முடியுமெனக் குறிப்பிட்டுள்ள பேரவை, வரலாற்றுத்தவறுகளுக்கு இடமளிக்காது ஒன்றிணைந்த போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் பேரவை விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி கோத்தாபய …

  21. ஊருக்குள் புகுந்த முதலை சிக்கியது! மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தல் செய்துவந்த முதலையொன்று அப்பகுதி மக்களினால் பிடிக்கப்பட்டது. பாலமீன்மடு ஐந்தாம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த நிலையிலேயே நேற்று (29) மாலை குறித்த முதலை பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 அடி நீளமான முதலையானது நீண்ட நாட்களாக அப்பகுதி மக்களை அச்சுறுத்திவந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். https://newuthayan.com/ஊருக்குள்-புகுந்த-முதலை/

  22. மனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித் மனிதாபிமானம் இல்லாது தொடர்ந்தும் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மோதரையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் நிலவிவரும் காலத்தில், இந்த அரசாங்கம் மக்களுக்காக எந்த நிவாரணத்தை வழங்கியுள்ளது என கேட்க விரும்புகிறேன். உலகிலேயே இன்று எரிபொருளின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இலங்கையில் மட்டும் எரிபொருளின் விலையில் மாற்றங்கள் இல்லை. இதுவா மக…

    • 0 replies
    • 364 views
  23. முகக்கவசம் அணியாத 2658 பேர் தனிமைப்படுத்தல் இலங்கையில் நேற்று (29) முதல் அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொது இடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடிய 2658 பேர் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (30) காலை 6 மணி வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசங்கள் இன்றி நடமாடிய 1217 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/முகக்கவசம்-அணியாத-2658-பேர்-த/

  24. பிரதமரை சந்தித்த வட மாகாண ஆளுநர் வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் நேற்று (29) காலை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் வட மாகாணத்தில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பிலும், இந்தியாவில் இருந்து கடல் வழியாக வரும் சட்ட விரோத படகுகளின் வருகையை தடுப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கை மற்றும் வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=130325

    • 0 replies
    • 389 views
  25. வாக்கெண்ணும் நடவடிக்கை காலை 8 மணிக்கு ஆரம்பம் நாடாளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும். இதனை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/வககணணம-நடவடகக-கல-8-மணகக-ஆரமபம/150-252574

    • 0 replies
    • 485 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.