Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாம் கடந்த நான்கரை வருடங்களில் மக்களை ஏமாற்றவில்லை அதிகாரத்தை பயன்படுத்தி மலையக மக்களுக்கு உரிய வகையில் சேவைசெய்யக்கூடிய ஆற்றல் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே இருக்கின்றது. எனவே, பொதுத்தேர்தல் மூலம் எமது கரங்களை பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். லிந்துலை பாமஸ்டன் ரட்ணகிரி தோட்டத்தில் இன்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த ஆட்சியின்போது அனைத்து தோட்டங்களுக்கும் சேவைகளை வழங்கியிருந்தேன். மேலும் பல திட்டங்களையும் முன்னெடுக்கவிருந்த நில…

    • 0 replies
    • 532 views
  2. “ரிஷாட்டை அழைப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டால் மற்றவர்களின் உரிமைகளை மீறுவதாக அமையும்” by : Jeyachandran Vithushan ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ள ரிஷாட் பாதியுதீனை அழைப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டால், தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமையும் என பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் மீதான விசாரணையை தேர்தல் நிறைவடையும் வரை ஒத்திவைக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் நேற்று கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத…

    • 0 replies
    • 418 views
  3. மீனவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிய கடற்படை! துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு மன்னார் கடலில் வைத்து கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக மீனவர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் இருந்து இன்று (21) காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் சிலர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து சிறிது நேரம் மன்னார் பாலத்தடி கடற்கரையில் மீனவர்கள் ஒன்று திறண்டு தமது கண்டனத்தை தெரிவித்தனர். இதுகுறித்து தெரியவருவதாவது, “மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை காவலரனில் இன்று காலை மீனவர்கள் தொழிலுக்குச் செல்லும் தமது ஆவணங்களைச் சமர்ப்பித்து உரிய அனுமத…

  4. ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பை கைவிடுமாறு அமெரிக்க எம்முடன் பேரம் பேசியது; மணிவண்ணன் பகிர் தகவல் July 21, 2020 கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அதனைப் பகிஷ்கரிப்பது என்ற நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுத்த போது யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள், பகிஷ்கரிப்பு கோரிக்கையைக் கைவிடுமாறு தம்மைச் சந்தித்து கோரிக்கைவிடுத்ததாக அவ்வமைப்பின் முக்கியஸ்தரான சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்திருக்கின்றார். யாழ். திருநெல்வேலியிலுள்ள ‘திண்ணை’ விடுதிலில் தன்னையும், முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய அமைப்பாளர் செல்வராஜா கஜேந்திரனையும் சந்தித்த அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஜனாதிபதித் தேர்தலைக் கைவிடுமாறு தம்மை வ…

  5. 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை – விஞ்ஞாபனத்தில் சஜித் உறுதி அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார். பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) கொழும்பிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே சஜித் இந்த உறுதிமொழியை வழங்கினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஆட்சியாளர்கள் மக்களின் பிரச்சினைகளை மனிதாபிமானமாக அணுகும் அதேவேளை, சட்டத்திற்கும் கொள்கைக்கும் அமைவாகவே நாடொன்றை நிர்வகிக்க வேண்டும். அதுமாத்திர…

  6. கொரோனா தொற்றுக்கு உள்ளான அனைத்து கடற்படையினரும் குணமடைந்தனர்! கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 3 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து, அனைத்து கடற்படையினரும் பூரண குணமடைந்துள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 906 கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 06 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2730 ஆக பதிவாகியுள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 05 பேர் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்ப…

  7. ஆங்கிலேயரின் தொற்று நோய் கட்டுப்படுத்தல் சட்டமே இங்கு உள்ளது சுகாதார அமைச்சரினால் தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் படி மக்கள் ஒத்துழைத்தால் மாத்திரமே அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியும். எனவே இந்த வர்த்தமானி அறிவித்தல் ஒருபோதும் கொரோனா கட்டுப்படுத்தலுக்கு பிரயோசனமாக அமையாது” இவ்வாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். மேலும், “தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது 1981ம் ஆண்டு ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட தொற்று நோய் மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டமாகும். இந்த அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது பரிச…

  8. வயதுக்கு வராத சைக்கிள் கட்சி – கிண்டலடிக்கிறார் விக்கி கூட்டமைப்பு அடங்கலாக அரசுக்கு முண்டு கொடுக்கும் கட்சிகளையும் நீக்கினால் இரண்டே இரண்டு கட்சிகள் தான் மிஞ்சும். அவற்றில் ஒன்று எங்களுடையது. மற்றையது வயது வராத, முதிர்ச்சி பெறாத, வாதம் ஒன்றே வாழ்க்கை என்று வாதாடும் சைக்கிள் கட்சி” இவ்வாறு கூறியுள்ளார் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். அளவெட்டியில் நேற்று(19) இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: ” தம்பி பிரபாகரன் அன்று உருவாக்கிய கூட்டமைப்பு என்பது போய் இன்று அது கூட்டணியாக மாறியுள்ளதை ஏற்று வருகின்ற 5 ஆம் திகதி எமக்கு நீங்கள் வாக்கிடுவீர்கள் என நம்புகிறோம். வாக்கிடுவது எப்படியெ…

  9. முஸ்லிம்களை அநாதைகளாக்கி த.தே.கூட்டமைப்பு சதி: எச்.எம்.எம். ஹரீஸ் கவலை.! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமானது முஸ்லிம் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட சதியென முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ் கவலை தெரிவித்தார். "முஸ்லிம் மக்கள் தொடர்பில் அக்கறை இல்லாமல் - அவர்களை அநாதையாக்கிவிடும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது." - இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ் கவலை தெரிவித்தார். கல்முனையிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "இணைந்த வடக்கு - கிழக்கு …

    • 1 reply
    • 598 views
  10. (இராஜதுரை ஹஷான்) இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மரபுரிமைகள் திட்மிட்டவகையில் அழிக்கப்படுகின்றன. தொல்பொருள் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட வேண்டும். இரண்டாம் புவனேகபாகு மன்னனின் அரச மண்டபம் உடைக்கப்பட்டமை தொடர்பில் ஆராய குழு நியமித்துள்ளமை காலத்தை வீணடிக்கும் செயற்பாடாகும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். நாரஹேன்பிடியவில் உள்ள ராமான்ய நிகாய தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தொல்பொருள் மரபுரிமைகளை சேதப்படுத்துபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அனைத்து தரப்பினருக்கும் பொதுவானதாக உள்ளதா என்ற சந்தேகம் காணப்படுகி…

  11. எமக்கு ஒரு ஆசனம் கிடைக்காவிட்டால் தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது..! ஈரோஸ் தலமை வேட்பாளர் கருத்து.. நாடாளுமன்ற தேர்தலில் ஈரோஸ் அமைப்புக்கு ஒரு ஆசனமாவது கிடைக்கவேண்டும். இல்லையேல் தமிழ் மக்களுக்கு விமோசனம் என்பதே கிடையாது. என அக்கட்சியின் யாழ்.மாவட்ட தலமை வேட்பாளர் சி.முருகதாஸ் (ரவிராஜ்) கூறியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று முற்பகல் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞானபம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 70 வருடமாக கூட்டமைப்பு எதை கூறினார்களோ அதே விடயத்தை தான் இம்முறை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் கூறுகின்றார்கள்.கூ…

  12. நாம் அரசியல் செய்கிறோமா?; மக்களிடம் கேளுங்கள் – இப்படியும் சொல்கிறது இராணுவம்! “யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடுகின்றனரா என்பதை பொது மக்களிடம் கேட்டுப் பார்த்தால் விளங்கும். அரசியல்வாதிகள் போலிப் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்” இப்படிச் சொல்கிறார் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய. ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், “நேற்று முன்தினம் இராணுவ தளபதி யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்டு அங்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வீட்டு உரிமையாளர்களிடம் கையளித்தார். இது தொடர்பில் சில அரசியல்வாதிகள் இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டுகிறார்கள்.…

  13. வீட்டுச் சின்னம் சாக்கடைக்குள் தள்ளப்பட்டுள்ளது? வீட்டுச் சின்னம் சாக்கடைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகமும், தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் வேட்பாளருமான ப. உதயராசா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நீண்ட காலமாக பல ஆசனங்களை சுவீகரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த பொதுத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்படுவோம் என்பதற்காக பல பொய்யான பிரச்சாரங்களை மக்கள் முன் கொண்டு வருகிறார்கள். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவமோகன் ஆ…

  14. ‘கூட்டமைப்புக்குக் கொடுத்த காலம் காலாவதியாகிவிட்டது’ -சுப்பிரமணியம் பாஸ்கரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குக் கொடுத்த காலம் காலாவதியாகிவிட்டதெனத் தெரிவித்த யாழ். தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவில் போட்டியிடும் பொ.ஐங்கரநேசன், இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தோற்கடிக்கப்பட வேண்டுமெனவும் அதன் மூலம் இந்த அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் பாடம் புகட்ட வேண்டுமென்றும் கூறினார். கிளிநொச்சி கூட்டுறவுச்சபை மண்டபத்தில், நேற்று (19) நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உ…

  15. ரவி மற்றும் ரிஷாட் மீதான விசாரணையை ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு சி.ஐ.டி.யிடம் கோரிக்கை by : Jeyachandran Vithushan முன்னாள் அமைச்சர்கள் ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் மீதான விசாரணையை தேர்தல் நிறைவடையும் வரை ஒத்திவைக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தலின்போது விசாரணைகள் தொடங்கப்படுகின்றன, அதற்கான காரணங்கள் குறித்து சந்தேகம் உள்ளது எனவே வாக்கெடுப்பு முடியும்வரை விசாரணையை ஒத்திவைக்க ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது என அதன் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் கூறியுள்ளார். தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் நீண்டகாலம்காக விசாரணைகளில் …

    • 0 replies
    • 394 views
  16. முன்னாள் அமைச்சர்களான ராஜித, சம்பிக்கவிற்கு அழைப்பாணை by : Jeyachandran Vithushan முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி எதிர்வரும் 28ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பாக் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த தினத்தில் முன்னிலையாகுமாறு மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் முன்னாள் ஷானி அபேசிங்க மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை 2016 இல் ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக, எதிர்வரும் ஓகஸ்ட…

    • 0 replies
    • 549 views
  17. விவேகம் இல்லாத வீரத்தின் விளைவுகளையே மக்கள் அனுபவிக்கின்றனர்

    • 2 replies
    • 894 views
  18. முகக்கவசம் இன்றி பயணிப்போருக்கு பிரத்தியேக வகுப்புகள்! முகக்கவசங்கள் இன்றி பயணிப்போருக்கு பிரத்தியே வகுப்புகளை நடத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதற்கமைய முக்கவசங்கள் இன்றி பயணிக்கும் மற்றும் முகக்கவசங்கள் தொடர்பாக கவனம் செலுத்தாமல் இருப்பவர்களை பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு விசேட மருத்துவ ஆலோசனை வகுப்புகளை நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து முகக்கவசம் அணிவது நாட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேநேரம், மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாத 3061 பேருக்கு எ…

  19. நாடாளுமன்ற தேர்தலில் சரியான நேர்மையான விலைபோகாத பிரதிநிதிகளைத் தெரிவு செய்வோம் – தமிழ் மக்கள் பேரவை தேர்தல் அரசியல் கடந்து எமது மக்களின் சுபீட்சமான எதிர்காலத்தை இலக்காகக்கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையானது மக்களிடம் அன்புரிமையுடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்களிடம் தமிழ் மக்கள் பேரவையால் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நிற்கின்றது.தவறானவர்களைத் தெரிவு செய்துவிட்டு தூர விலகி நின்று குற்றம் குறைகளை மட்டும் கண்டுபிடித்து விமர்சித்து பொழுதைக் கழிப்பது ஆரோக்கியமான அணுகுமுறையாக அமையாது. எனவே வாக்களிப்பதுடன் எமது கடமைகள் முடிந்து விட்டன எனக் கருதாது தொடர் பங்களிப்புகளுக்கு ஆயத்தமாவோம்” என்று தமிழ் மக்கள் பேரவையின் அறிக்கையில் தெரிவி…

  20. இன்றும் சம்பந்தன் ஐயா அவர்களை விலைபேசி வாங்க முடியாத ஒரு சூழ்நிலையின் காரணமாகத் தான் கூட்டமைப்பினை ஒவ்வொரு துண்டுகளாக இன்று சிங்கள தேசம் உடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனைப் பலப்படுத்துவது எமது பாரிய கடமையாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிங்கள மக்களுக்கும் தமிழர்களுக்கும் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. சிங்கள ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியைத் தீர்மானிப்பதற்காகவும், அதனைத் தொட…

    • 6 replies
    • 840 views
  21. தமிழீழ விடுதலை புலிகளின் நோக்கம் அல்லது இலக்கு தவறானதல்ல..! எம்.ஏ.சுமந்திரன் கருத்து.. தமிழீழ விடுதலை புலிகளின் நோக்கம் தவறானதல்ல. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். இன்று காலை வானொலி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், தமிழீழ விடுதலை புலிகள் போராடிய விதம் காலத்தின் கட்டாயமாக இருந்தாலும், அந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் நோக்கம் தவறானதல்ல என்றார். https://jaffnazone.com/news/19415

    • 1 reply
    • 507 views
  22. வடக்கில் வென்றாலும் தோற்றாலும் தமிழன் தமிழனே- கிழக்கில் அந்த நிலையில்லை- கருணா July 17, 2020 வடக்கில் வென்றாலும் தோற்றாலும் தமிழன் தமிழனே ஆனால் கிழக்கில் தமிழருக்கு அவ்வாறான நிலைமை கிடையாது என விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில கிழக்குமாகாணாத்தில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதே எமது அரசியல் புரட்சியாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்குகிழக்கை பொறுத்தமட்டில் பல வேறுபாடுகள் உள்ளன வடக்கில் வென்றாலும் தோற்றாலும் தமிழன் தமிழனே என அவர் தெரிவித்துள்ளார். எனினும் கிழக்கில் மூவினங்கள் வாழ்கின்றன தமிழர்களின் இருப்பை காக்கவேண்டிய தேவையுள்ளது என அவர் தெரி…

    • 5 replies
    • 938 views
  23. சர்வதேச ஒப்பந்தங்களில் இருந்து விலகுவது எளிதல்ல – மஹிந்த சர்வதேச ஒப்பந்தங்களில் இருந்து விலகுவது எளிதான காரியமல்ல. தாரைவார்க்கப்பட்டுள்ள தேசிய வளங்களை எதிர்கால சந்ததியினருக்காக மீட்டெடுப்பதற்கான முயற்சியை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மஹியங்கனையில் இன்று (18) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இதனை குறிப்பிட்டார். மேலும், சர்வதேச நாடுகளுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தங்களில் இருந்து விலகுவது எளிதான காரியமல்ல. உரிய வழிமுறைகளை எவ்வித முரண்பாடுகளும் இல்லாத விதத்தில் முன்னெடுக்க வேண்டும். ஒப்பந்தத்தினால் தாரை வார்க்கப்பட்டுள்ள தேசிய வளங்களை மீட்டு அதனை எதிர்கால தலை முறையினருக்கு பொறுப்பாக்க வேண்டும் என்பதில் உறுத…

    • 3 replies
    • 558 views
  24. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ “பிரபாகரன் ஆயுதத்தால் பெற முயற்சித்த நாட்டை பேனாவால் எழுதிக்கொடுக்க நாங்கள் தயார் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று வெல்லவாய, செவனகல, தன்தும சந்தியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். செவனகல என்றவுடன் எங்களுக்கு நினைவுக்கு வருவது கரும்பு பயிர் செய்கையாகும். இதுவரையில் செவனகல சீனி தொழிற்சாலையில் 1200 டன் கரும்பு சாறு பிழிந்து சீனி உற்பத்தி செய்தோம். 2400 டன் கரும்பு பிழியும் வசதி கொண்ட சீனி தொழிற்சாலையை தேசிய தொழிற்சாலையாக கட்டியெழுப்புவோம். நாங்கள் தேசிய தொழிற்சாலைக்கு முதன்மைத்துவம் வழங்குவோம். வெள…

    • 1 reply
    • 516 views
  25. புங்குடுதீவில் 25 வீட்டுத்திட்ட தொகுதி திறந்துவைப்பு! தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 14.8 மில்லியன் ரூபாய் நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புங்குடுதீவு வீட்டுத்திட்ட குடியிருப்புக்கள் இன்று (18) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ருவான் வணிகசூரிய உள்ளிட்டோர் பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்ததுடன், வீட்டுத்திட்ட வீடுகளை பயனாளிகளிடம் கையளித்தனர். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தில் காணி அற்ற வறிய குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, 25 குடும்பங்களிற்கு 25 வீடுகள் புதிதாக அமைத்துக் கொடுக்கப்பட்டன. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.