ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
வாள்வெட்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நாவற்குழியில் ஏழு பேர் கைது! யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏழு பேர் இன்று (14) மாலை நாவற்குழி பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். டிலு என்ற பெயருடைய வாள் வெட்டுக்கு குழுவின் தலைவர் எனக் கருதப்படும் நபர் ஒருவர் உடபட ஏழு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நாளை (15) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். https://newuthayan.com/வாள்வெட்டுத்-தாக்குதல்/
-
- 0 replies
- 283 views
-
-
இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் விதமான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டால்- அதை வழங்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். இன்று யாழில் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2015 இல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி, ஆட்சி மாற்றத்தில் நாமும் ஓரளவு பங்களித்திருந்த நிலையில், இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மீட்சிக்கும் நான்கரை வருடங்களில் பல விடயங்களை மேற்கொண்டோம். …
-
- 6 replies
- 1.3k views
-
-
கல்முனையில், கருணாவுக்கு... ஆதரவான விளம்பர பதாதைகள் எரிப்பு. கல்முனையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஆதரவு தெரிவித்து காட்சிப்படுததப்பட்ட விளம்பர பதாதைகள் இனந்தெரியாதவர்களால் எரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை – கல்முனை வாழ் இளைஞர்கள் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் கப்பல் இலச்சினையுடன் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளரான கருணா அம்மானிற்கு 35 அடி நீளமான விளம்பர பதாதைகளை முக்கிய சந்திகளில் வைத்திருந்தனர். அத்தோடு, அம்பாறை – கல்முனை பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிட…
-
- 18 replies
- 2.1k views
-
-
தேசிய முச்சக்கரவண்டி சங்க தலைவர் படுகொலை கொழும்பு – மிரிஹான பகுதியில் வைத்து நேற்று (10) இரவு நாடாளுமன்ற வேட்பாளரும், இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவருமான சுனில் ஜயவர்த்தன (53-வயது) குழு ஒன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பகுதியிலுள்ள வாகனங்களை குத்தகைக்கு விடும் நிறுவனமொன்றில் முச்சக்கரவண்டி ஒன்றை விடுவிப்பது தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான இவர், முச்சக்கரவண்டி சாரதிகளை பாதிக்கும் “லீசிங் மாபியா” தொடர்பில் பல்வேறு விமர்சன காணொளிகளை வெளியிட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவரது…
-
- 11 replies
- 1.6k views
-
-
'இலங்கையில் இராணுவத் தலைமையின் அழுத்தம் அதிரிக்கும் அபாயம்' - கேர்ணல் ஹரிகரன் தகவல் (ஆர்.ராம்) இலங்கையில் சிவில் நிருவாகம் உட்பட பல்வேறு கட்டமைப்புக்களிலும் இராணுவ மயமாக்கல் தொடருமாயின் பொதுத்தேர்தல் நெருக்கும்போது இராணுவத் தலைமையின் அழுத்தம் அதிரிக்கும் அபாயமுள்ளதாக இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள் ஒருவரும் இராஜதந்திர மூலோபாயங்கள் பற்றி எழுத்தாளருமான கேர்ணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்துள்ளார். தற்போதைய பூகோளச் சூழலில் இலங்கை ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் நல்லிணக்க அரசியல் காணப்படுவதால் இலங்கை விடயங்களில் இந்தியா தலையிடுவதற்…
-
- 1 reply
- 519 views
-
-
யாழில் கொரோனாவின் தாக்கத்தையடுத்து வேகமாகப் பரவும் காசநோய் யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நோய்த் தொற்றுடையவர்கள் 90 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், மேலும் 20 நோயாளர்கள் சமூகத்துடன் இணைந்துள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் பரவல் என்பது இலங்கையில் குறைந்தளவே காணப்படுகின்றது. இருப்பினும் பல்வேறு நாடுகளில் இவ்வைரஸின் தாக்கம் பெரிதளவில் காணப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் 3 தொற்று நோ…
-
- 1 reply
- 485 views
-
-
திருமலை பேருந்து நிலையத்தில் சிறுமியை கடத்திய மர்மநபர் -தீவிர தேடுதலில் பொலிஸார் திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று நண்பகல் சிறுமியை இழுத்துச் சென்ற மர்மநபர் ஒருவரை பொலிஸார் தேடிவருகின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தனது உறவினருடன் பேருந்து நிலையத்திற்கு வந்த 8 வயது மதிக்கத்தக்க சிறுமி தாகமாக இருப்பதாக தனது உறவினரிடம் தெரிவித்ததை அடுத்து, சிறுமியின் உறவினர்கள் அங்குள்ள கடை ஒன்றில் தண்ணீர் போத்தல் வாங்குவதற்காக சிறுமியை ஓரிடத்தில் நிற்குமாறு கூறிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். குறித்த கடையில் தண்ணீர் போத்தலை வாங்கியபின்னர் வந்து பார்த்தபோது சிறுமி அவ்விடத்தில் இல்லாததால் பதற்றமடைந்த சிறுமியின் உறவினர்கள் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர். …
-
- 4 replies
- 586 views
-
-
சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை…! திர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பில் சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தடுக்க காவல்துறையினர் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்படி துண்டு பிரசுரங்கள், பிரசார சுவரொட்டிகள், வேட்பாளர் படங்கள், சின்னங்கள் மற்றும் கட்சியின் கொடிகளை காட்சிபடுத்துவது தொடர்பிலான விசேட செயற்பாடு ஒன்று இன்று (14) ஆரம்பிக்கவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பதில் காவல்துறைமா அதிபரின் உத்தரவின் கீழ், இந்த நடவடிக்கையானது நாட்டிலுள்ள அனைத்து காவற்துறை பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்படவுள்ளது. வீதித் தடைகள், நடமாடும் சேவைகள் மற்றும் மோட்டார்சைக்கிள் போக்குவரத்தின் ஊடாக …
-
- 0 replies
- 381 views
-
-
இனவாதிகளின் சிறைப்பிடிக்குள் ரணில், சஜித் : பொதுஜன பெரமுனவின் பிரதியே ஐக்கிய மக்கள் சக்தி - மங்கள (ஆர்.ராம்) தென்னிலங்கை வாக்குகளுக்காக சிங்கள, பேரினவாதத்தினை முன்னிலைப்படுத்தும் பொதுஜனபெரமுனவின் பிரதியாகவே ஐக்கிய மக்கள் சக்தியும் காணப்படுகின்றது என்று முன்னாள் நிதி மற்றும் வெகுஜன, தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இதேவேளை, அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து தலைமைத்துவம் வழங்கும் வகையிலான நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவோ அல்லது வலுவான எதிர்க்கட்சி என்ற வகிபாகத்தினை வகிப்பதற்காக வெளிப்படையான கருத்துக்களை வெளியிடவோ, செயற்பாடுகளை முன்னெடுக்கவோ தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டார். மாற்று சக்தி என்பதற்கான கொள்கைகள் உட்பட எந்தவிதமான இலட்சணங்க…
-
- 1 reply
- 497 views
-
-
யாழில் இன்று இடம்பெற்ற தேர்தல் ஒத்திகை (தி.சோபிதன்) யாழ்ப்பாணத்தில் பொதுத் தேர்தலுக்கான பரீட்ச்சார்த்த தேர்தல் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் நாவாந்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் வாக்களிப்பு நடைபெற்றது. நாவாந்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த வாக்காளர்கள் பரீட்ச்சார்த்த தேர்தலில் வாக்களித்தனர். இந்த வாக்களிப்பு இன்று காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை நடைபெற்றது. வாக்காளர்களுக்கன அறிவுறுத்தல்கள் ஏற்கனவே கிராம அலுவலர்கள் ஊடாக வளக்கப்பட்டிருந்தன. குறித்த வாக்களிப்புக்கு வருகை தந்த வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்ததுடன் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமும் கொண்டு வந்தனர் .அத்துடன் வாக்களிக்க வருபவர்கள் கறுப்பு அல்…
-
- 0 replies
- 337 views
-
-
வடக்கை இலக்கு வைக்கும் ஜனாதிபதி செயலணி : அனுராதபுரம் முதல் வடக்கில் நாக விகாரை வரையான பாரம்பரியத்தை தக்கவைக்க நடவடிக்கை கிழக்கின் தொல்பொருள் பிரதேசங்களை கண்காணிப்பதைப்போன்றே வடக்கிலும் தொல்பொருள் பிரதேசங்களை கண்காணிக்கும் பொறுப்பை ஜனாதிபதி செயலணிக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்னவின் தலைமையில் இந்த வாரம் கூடும் செயலணிக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நியமித்த விசேட ஜனாதிபதி செயலணி கிழக்கின் தொல்பொருள் பிரதேசங்களை முற்றுமுழுதாக கண்காணித்து அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் கடந்த செயலணிக் கூட்டத்த…
-
- 0 replies
- 274 views
-
-
கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்தாலும் தேர்தல் நிச்சயம் நடைபெறும் – தேர்தல்கள் ஆணையாளர் இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸின் பரவல் ஏற்பட்டாலும் பொதுத்தேர்தல் நிச்சயம் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னநாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காணப்படும் பகுதிகளில் விசேட வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதன் மூலம் வாக்களிப்பு இடம்பெறும் என்றும் இது குறித்து சுகாதார அதிகாரிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். தேர்தலை மீண்டும் ஒத்திவைப்பதற்கு பதில் அதனை நடத்துவதற்கான அவசர சூழ்நிலை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா வைரஸ் குறிப்பிட்ட ஒரு பகுதியில் பரவினால் முடக்கப்பட்டுள்ள பகுதிக்குள் தேர்தல…
-
- 0 replies
- 244 views
-
-
மங்கள அரசியலை விட்டு விலகவில்லை June 14, 2020 முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தேர்தல் போட்டியிலிருந்து விலகல் எனக்கு கவலையை தந்தாலும், அவர் அரசியலை விட்டு ஓய்வு பெறவோ, வேறு கட்சியில் சேரவோ போவதில்லை, சிவில் சமூகத்தில் பணியாற்ற போகிறேன் என்று எனக்கு கூறியதில் மகிழ்ச்சி. அவரது சிவில் சமூக பணியின் மூலம், இலங்கையர் அடையாளமும், பல்லின பன்மைதன்மை அடையாளமும் இன்னமும் வலுவடைய வேண்டுமென அவருக்கு தான் கூறினேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது டுவீட்டர் தளத்தில் கூறியுள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் ஊடகங்களுக்கு மேலும் கூறியுள்ளதாவது, இந்த அரசாங்கம் இன்று பகிரங்கமாக “சிங்கள பெளத்தம் மட்டும்” என்ற கொள்கையை கடைபிடிக்கின்றது…
-
- 0 replies
- 358 views
-
-
தேர்தல் ஒத்திகை தொடங்கியது – (படங்கள்) கொரோனா வைரஸ் தொற்று அபாயத்துக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுத் தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்ற பரீவ்சார்த்த தேர்தல் ஒத்திகை இன்று (10) காலை முதல் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் மேற்பார்வையில் இந்த ஒத்திகை அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்று வருகின்றது. இந்த ஒத்திகையின் போது, வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் விதம், வாக்காளர் ஒருவருக்கு வழங்கப்படும் கால எல்லை மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது குறித்த காரணிகள் ஆராயப்படவுள்ளது. https://newuthayan.com/தேர்தல்-ஒத்திகை-நடவடி/
-
- 2 replies
- 944 views
-
-
தமிழ் மக்களிள் ஆதரவை ஒருபோதும் மறக்கப்போவதில்லை- மைத்திரி தன்மீது நம்பிக்கை வைத்தே ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் எனக்கு வாக்களித்தனர் எனவும் அதனைத் தான் ஒருபோதும் மறக்கப்போவதில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய ஆட்சியில் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என தான் நம்பவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஆனால் தான் வழங்கிய சலுகைகள் இவர்களால் வழங்க முடியுமா என்பதை தெளிவாகக் கூறமுடியாது எனக் கூறியுள்ளார். தற்போதைய அரசியல் செயற்பாடுகள், புதிய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுத்த செயற்பாடுகள் குறித்து தமிழ் தேசிய பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் …
-
- 3 replies
- 475 views
-
-
வரணி ஆலயத்தில் திருடியவர் கைது; நேற்று கைதானவர் விடுதலை! யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி வடக்கில் அமைந்துள்ள கும்பிட்டான்புல பிள்ளையார் ஆலயத்தை கடந்த (09.06.2020) உடைத்து கொள்ளையிட்ட நபர் இன்று (13) கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் – சங்கானையை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு மந்துவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து திருட்டுப்போனதாக கூறப்படும் சங்கிலி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் (12) மந்துவிலை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தில் கைதான நிலையில், அவர் சம்பவத்தில் தொடர்பற்றவர் என்பது உறுதி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையிலேயே ஆலய சிசிடீவியில் அகப்பட்ட திருடன் கைது செய்யப்பட்டுள்ள…
-
- 1 reply
- 661 views
-
-
பூநகரியில் மக்கள் காணியை அபகரித்த வனத் திணைக்களம் – மக்களுக்கு எதிராக வழக்கு! கிளிநொச்சி – பூநகரி, கிராஞ்சி மொட்டையன் குளம் கிராமத்தில் மக்களுக்குரிய காணியை வனவள திணைக்களம் தமக்குரிய காணி என அடையாளப்படுத்தி பொதுமக்களை காணிக்குள் செல்லவிடாது தடுத்ததால் அங்கு மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பொது மக்கள் சிலருக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையறிந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு இடங்களை பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பாதிப்புகளை கேட்டறிந்து உரிய சட்ட நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கியத…
-
- 0 replies
- 339 views
-
-
யாழ் பல்கலை துணைவேந்தராக இராணுவ அதிகாரியா? மறுக்கிறது மானியங்கள் ஆணைக்குழு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒரு இராணுவ அதிகாரியை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ துணைவேந்தராக நியமிக்கப் போகிறார் என்ற செய்தியில் உண்மை இல்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க உறுதிபடத் தெரிவித்துள்ளார். நாட்டில் பல்வேறு உயர் பதவிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் இராணுவ உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஒரு வருட காலத்துக்கும் மேலாக வெற்றிடமாகவுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, கடந்த 9ம் திகதியுடன் விண்ணப்பங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலை…
-
- 1 reply
- 494 views
-
-
இளவாலை கடலில் மிதந்து வந்த 57 கிலே கஞ்சா! யாழ்ப்பாணம் – இளவாலை கடற்பரப்பில் மிதந்து வந்த 57 கிலோ கஞ்சா கடற் படையினரால் மீட்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் இன்று (12) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இளவாலை கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் மர்ம பொருட்கள் மிதந்து வந்ததை அவதானித்த கடற்படையினர் குறித்த மூட்டைகளை சோதனையிட்டுள்ளனர். அப்போது அதற்குள் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீட்கப்பட்ட கஞ்சா மூட்டைகள் இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/இளவாலை-கடலில்-மிதந்து-வந/
-
- 3 replies
- 568 views
-
-
(நா.தனுஜா) இலங்கை - சீனா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதிலும், ''ஒரு மண்டலம் ஒரு பாதை" செயற்திட்டத்தை மேம்படுத்துவதிலும் இலங்கையின் அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது. சீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான 'ஒரு மண்டலம் ஒரு பாதை' திட்டத்தின் கீழ் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான முதலாவது கூட்டம் கடந்த வியாழக்கிழமை வீடியோ மூலமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சர்வதேச திணைக்களங்களுக்கான அமைச்சர் ஸோங்க் ராஓ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட கட்ச…
-
- 2 replies
- 475 views
-
-
16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு இலங்கை அரசு தடை!! 16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதை அரசாங்கம் தடை செய்துள்ளது. சம்பளம் ( இந்திய தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்திலும் திருத்தத்தை மேற்கொள்ளவும் (Cap 135) Minimum Wages (Indian Labour) ordinance amendment Act அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: இன்று 12ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கு அமைவாக ஊழியர்களை பணியில் ஈடுத்தக்கூடிய ஆகக்குறைந்த வயது 16 என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் 2020 ஜுன் மாதம் 12ஆம் திகதியன்று இடம்பெறும் சர்வ…
-
- 4 replies
- 1.3k views
-
-
48,000 ஆண்டுகளுக்கு முன் வில் மற்றும் அம்பு தொழில்நுட்பத்தின் ஆரம்ப சான்றுகள் இலங்கையில் இருந்துள்ளது – ஆய்வில் தகவல் இலங்கையின் ஆதிமனிதர்கள் 48,000 ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகளின் எலும்புகளிலிருந்து கருவிகளை வடிவமைத்து குரங்குகள் மற்றும் அணில்களை வேட்டையாட பயன்படுத்தினர் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இது ஐரோப்பா மற்றும் அபிரிக்காவிற்கு வெளியே, இலங்கையில், வில் மற்றும் அம்பு பயன்பாட்டின் ஆதாரங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் கடந்த ஆண்டு, ஃபா-ஹீன் லீனா குகையில் காணப்பட்ட குரங்கு மற்றும் அணில் எலும்புகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் குறித்த தகவலினை வெளியிட்டனர். இந்த குகை தெற்காசியாவில் ஹோமோ சேபியன்களின் ஆரம்பகால புதைபடிவ தோற…
-
- 1 reply
- 697 views
-
-
கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் அரசின் முகவர்களா? – சிவமோகன் கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் அரசின் முகவர்களா? என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது என வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (13) அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த கேள்வியை எழுப்பியுள்ள அவர், தமிழர் ஒற்றுமையை சீர் குலைக்க நினைக்கும் பலர் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், “தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து கட்சிகளாக பிரிந்தும் சுயேட்சைக்குழுக்களாகவும் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களுக்கு தமிழ் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். அவர்கள்…
-
- 4 replies
- 555 views
-
-
யாழில் சுமந்திரன் கூறிய பெரும் பொய்! ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி .தவராசா பகிரங்க எச்சரிக்கை
-
- 6 replies
- 802 views
-
-
அனைத்து பல்கலைகழகங்களும் ஜூன் 22 இல் திறப்பு Published by T. Saranya on 2020-06-13 15:22:40 அனைத்து பல்கலைகழகங்களும் இறுதி ஆண்டு பரீட்சைகளுக்காக ஜூன் 22 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களின் இறுதியாண்டு பரீட்சையை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது. https://www.virakesari.lk/article/83901
-
- 0 replies
- 433 views
-