ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
இலங்கையின், ஹெர்மஸ் பெரு நிறுவன நிறைவேற்று அதிகாரியாக கஸ்தூரி செல்லராஜா வில்சன் நியமனமாகி உள்ளார். Hemas Holding plc என்னும் இலங்கையின் பெரு நிறுவன நிறைவேற்று அதிகாரியாக 2020, அக்டோபர் 1ம் திகதி முதல் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். விலகிச் செல்லும் Steven Enderby என்பவரின் இடத்துக்கு இவர் நியமனமாகியுள்ளார். ஜூலை 1ம் திகதி முதல், அவரின் கீழ், நிழல் நிறைவேற்று அதிகாரியாக கடமை தொடங்கவுள்ளார் கஸ்தூரி. 2002 ம் ஆண்டு முதல் நிறுவனத்துடன் செயல்படும் கஸ்தூரி, அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளார். 2016ல் நிறுவனத்தின், மருந்துகள் பிரிவுக்கு பொறுப்பாக இருந்து அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளார். இலங்கையின் வரலாறில் ஒரு தமிழ் ப…
-
- 45 replies
- 4.1k views
-
-
இலங்கை தமிழரசு கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய விமலேஸ்வரி உள்ளிட்ட ஏனைய நால்வரையும் உடன் கட்சியிலிருந்து நீக்குமாறு தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கத்துக்கு எழுத்துமூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அவரது அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நேற்று முன்தினம் 27/06/2020 அன்று தமிழரசுக் கட்சி மகளிர் அணிச் செயலாளர் என்று கூறப்பட்ட விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் மற்றும் நால்வர் யாழ்ப்பாணம் ஊடக மையத்துக்குச் சென்று தெரிவித்த கருத்துக்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இக்கடிதத்தை எழுதுகிறேன். நேற்று 28/06 காலை தாங்களும் தொலைபேசி மூலம் இவ்விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தீர்கள். 1.…
-
- 10 replies
- 1.7k views
-
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்க நடவடிக்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை எதிர்வரும் ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்னர் திறப்பதற்கு அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வத்தளை, நீர்கொழும்பு உள்ளூராட்சிசபை பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியுள்ளதாவது, “வௌிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் அழைத்து வரப்படுவது எதிர்வரும் ஓகஸ்ட் 1ஆம் திகதிக்குள் நிறைவுக்கு கொண்டு வரப்படும். நாட்டுக்கு இன்னும் 20,000 பேர் வருகை தரவுள்ளனர். ஏற்கனவே 10,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த செயல்முறையை …
-
- 2 replies
- 655 views
-
-
ஜனாதிபதி செயலணி இனவழிப்பின் புதிய பரிணாமம்: ஒன்றிணைந்த போராட்டத்திற்கு தமிழர் மரபுரிமை பேரவை அழைப்பு (ஆர்.ராம்) கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணி கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் புதிய பரிணாமம் என்று தெரிவித்து தமிழர் மரபுரிமை பேரவை தனது கடுமையான கண்டனங்களையும் வெளியிட்டுள்ளது. தமிழ், முஸ்லிம் உறவை பலமாக மீளக்கட்டியெழுப்புவதன் மூலம் தான் சிங்கள பௌத்த ஏகாதிபத்திய தேசியவாதத்திற்கெதிரான எதிர்ப்பை வடக்கு-கிழக்கில் காட்ட முடியுமெனக் குறிப்பிட்டுள்ள பேரவை, வரலாற்றுத்தவறுகளுக்கு இடமளிக்காது ஒன்றிணைந்த போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் பேரவை விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி கோத்தாபய …
-
- 1 reply
- 398 views
-
-
ஊருக்குள் புகுந்த முதலை சிக்கியது! மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தல் செய்துவந்த முதலையொன்று அப்பகுதி மக்களினால் பிடிக்கப்பட்டது. பாலமீன்மடு ஐந்தாம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த நிலையிலேயே நேற்று (29) மாலை குறித்த முதலை பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 அடி நீளமான முதலையானது நீண்ட நாட்களாக அப்பகுதி மக்களை அச்சுறுத்திவந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். https://newuthayan.com/ஊருக்குள்-புகுந்த-முதலை/
-
- 0 replies
- 764 views
-
-
மனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித் மனிதாபிமானம் இல்லாது தொடர்ந்தும் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மோதரையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் நிலவிவரும் காலத்தில், இந்த அரசாங்கம் மக்களுக்காக எந்த நிவாரணத்தை வழங்கியுள்ளது என கேட்க விரும்புகிறேன். உலகிலேயே இன்று எரிபொருளின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இலங்கையில் மட்டும் எரிபொருளின் விலையில் மாற்றங்கள் இல்லை. இதுவா மக…
-
- 0 replies
- 369 views
-
-
முகக்கவசம் அணியாத 2658 பேர் தனிமைப்படுத்தல் இலங்கையில் நேற்று (29) முதல் அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொது இடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடிய 2658 பேர் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (30) காலை 6 மணி வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசங்கள் இன்றி நடமாடிய 1217 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/முகக்கவசம்-அணியாத-2658-பேர்-த/
-
- 0 replies
- 469 views
-
-
பிரதமரை சந்தித்த வட மாகாண ஆளுநர் வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் நேற்று (29) காலை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் வட மாகாணத்தில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பிலும், இந்தியாவில் இருந்து கடல் வழியாக வரும் சட்ட விரோத படகுகளின் வருகையை தடுப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கை மற்றும் வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=130325
-
- 0 replies
- 395 views
-
-
வாக்கெண்ணும் நடவடிக்கை காலை 8 மணிக்கு ஆரம்பம் நாடாளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும். இதனை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/வககணணம-நடவடகக-கல-8-மணகக-ஆரமபம/150-252574
-
- 0 replies
- 489 views
-
-
கருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்- சரத் வீரசேகர by : Yuganthini இனவாதக் கருத்துக்களை பரப்பி, தமிழ் இளைஞர்களை திசைத்திருப்பும் கருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர வலியுறுத்தினார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தத்திற்கு எதிராக போராடி, யுத்தத்தை வெற்றிக் கொண்டவர்தான் இன்று நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிறார். நாம் நாட்டை பிளவுபடுத்துவதற்கு எதிராகத்தான் அன்று போரிட்டோம். எனவே, இனியும் நாட்டில் சமஷ்டிக்கு …
-
- 0 replies
- 432 views
-
-
கருத்துக்கணிப்பு என்ற போர்வையில் பொதுமக்களின் விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கை- தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை June 30, 2020 பொதுத்தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பினை மேற்கொள்வது என்ற போர்வையில் சமூக ஊடங்களில் தனிநபர்களின் விபரங்களை பெறும் நடவடிக்கை குறித்து இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குழுக்களில் இணையுமாறும்,தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பில் பங்கெடுக்குமாறும் விடுக்கப்படும் வேண்டுகோள்கள் மூலம் இவ்வாறு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன என தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் விடுக்கப்படும் இவ்வாறான வேண்டுகோள்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்க…
-
- 0 replies
- 360 views
-
-
ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் 125 பேருக்கு தொடர்பு: அம்பலமாகியது இரகசிய கடிதம் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 125பேர் இலங்கையில் இருப்பதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக, விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், நேற்று (திங்கட்கிழமை) முன்னிலையாகியிருந்த பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சர் எஸ்.ஜி.சதரசிங்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலத்தில் அரச உளவுச் சேவை பணிப்பாளராக செயற்பட்ட நிலந்த ஜயவர்தன, கடந்த 2019 ஏப்ரல் 10ஆம் திகதி, மட்டக்களப்பு பகுதிய…
-
- 0 replies
- 417 views
-
-
சுகாதார நடைமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் பிரவேசித்த ஆயிரத்து 200 இற்கும் அதிகமானோர்; தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 14 தினங்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல்மாகாணத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனிடையே கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கென முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பில் பொது மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் கோட்டை, பொரள்ள, தெமட்டகொட, கடவத்தை, கிரிபத்கொட உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கான தெளிவூட்டல் மற்றும் இலவசமாக முகக்கவசம் வழங்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்…
-
- 1 reply
- 526 views
-
-
முல்லைத்தீவில் இயற்கை அரண்கள் எனும் தன்னார்வ தொண்டு அமைப்பின் உறுப்பினர்களால் இன்றைய தினம் சிரமதானப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் அ.த.க பாடசாலையில் குறித்த சிரமதானப் பணிகள் காலை 08.30 மணி முதல் இடம்பெற்றது. கொரோனா அச்சம் காரணமாக கடந்த பல நாட்களாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், குப்பை கூழங்களாக இருந்த பாடசாலைச் சூழலை சுத்தம் செய்யும் செயற்பாட்டை இந்த அமைப்பு முன்னெடுத்திருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இயற்கை வளங்களை பாதுகாத்து இயற்கையின் இருப்பை பேணுதல் என்ற தொனிப்பொருளில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, இயற்கை விவசாயம் மற்றும் வீட்டுத் தோட்டங்க…
-
- 3 replies
- 908 views
-
-
பிரதமரை சந்தித்த வட மாகாண ஆளுநர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வட மாகாண ஆளுநர் எஸ். எம் சார்ள்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பு இன்று (29) முற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகளின் பின்னர் வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கையினை வழமைக்கு கொண்டு வருதல் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளது. அத்துடன், சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களை தடுத்து நிறுத்துவது தொடர்பிலும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், வடக்கில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொ…
-
- 0 replies
- 674 views
-
-
பணிப்புறக்கணிப்பை கைவிட்ட தபால் ஊழியர்கள் கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் முன்னெடுத்த பணிபுறக்கணிப்பு, இன்று (29) வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டுள்ளது. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் தபால்மா அதிபரால் இது தொடர்பில் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. தபால் வாக்கு சீட்டுகள் விநியோகத்தை காரணமாக கொண்டு நேற்று (28) நள்ளிரவு முதல் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டனர். இதற்கு முன்னர் குறித்த நடவடிக்கை, கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது அது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. https://new…
-
- 0 replies
- 435 views
-
-
வைத்தியசாலையின் கழிவு நீர்ப் பிரச்சினையால் மக்கள் சிரமம்! கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் கழிவு நீர், வைத்தியசாலைக்கு வெளியே விடப்படுவதனால் இது தங்களது குடிநீர் நிலைகளை மாசுபடுத்துகிறது எனவும், அதனால் துர்நாற்றம் வருகிறது எனவும் வைத்தியசாலை சூழலில் வசிக்கின்ற மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து கழிவு நீரை ஆற்றுக்குள் விடப்பட்டு வருகிறது. இந்த நீரானது ஆறு ஊடாக கிளிநொச்சி குளத்தை வந்தடைகிறது. கிளிநொச்சிக் குளத்திலிருந்தே குடிநீருக்கு நீர் பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், வைத்தியசாலையிருந்து வெளியேறுகின்ற கழிவு நீரில் வைத்தியாசாலையின் இராசயனங்கள் அடங்கியிருக்கலாம். எனவே, அவற்றை…
-
- 0 replies
- 572 views
-
-
வாக்கு கேட்டு வீடு விடாக பிரச்சாரம் செய்யச் செல்லும் த.தே.ம.முன்னணியினர் தமிழ் மக்களால் விரட்டப்பட்டும் சம்பவங்கள் பரவலாக யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இடம்பெற்று வருகின்றன. இதோ ஒரு சம்பவம்: வாக்கு கேட்டு வீட்டுக்கு செல்லும் த.தே.மக்கள் முன்னணி வேட்பாளரும், ஆதவாளரும் விரட்டப்படும் காட்சி: பிரச்சாரம் செய்யச் சென்ற குறித்த த.தே.ம.முன்னணியினருக்கு இவ்வாறான விளக்கமொன்றை இளைஞரொருவர் வழங்குகிறார். அதேபோன்று தான் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கோட்டாபய தான் வந்திருக்கிறார். நீங்கள் கடந்த தேர்தலில் வாக்கு போடக்கூடாது என்றீர்கள்.. இந்த நிலையில் உங்களுக்கு ஒரு விடயம் தெரிந்திருக்க வேண்டும், இந்த முறையும் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்றால் கோட்டபாய தான் …
-
- 7 replies
- 969 views
-
-
யாழ் மறை மாவட்டத்தின் முதலாவது ஆயருக்கு சிலை திறப்பு! யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தின் முதலாவது ஆயரான இத்தாலியை சேர்ந்த ஒரசியோ பெத்தாசினியின் உருவச்சிலை இன்று (27) யாழ் ஆயர் இல்லத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த உருவச்சிலையினை யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது குறித்த சிலையை வடிவமைத்த சிற்பக் கலைஞர்கள் இருவர் ஆயரினால் கெளரவிக்கப்பட்டனர். சிலை திறப்பு நிகழ்வில் யாழ் மறைமாவட்ட குருக்கள் பலரும் கலந்து கொண்டனர். https://newuthayan.com/யாழ்-மறை-மாவட்டத்தின்-மு/
-
- 16 replies
- 1.3k views
-
-
வெளியூர் பழ வியாபாரிகளால் உள்ளூர் வியாபாரிகள் பாதிப்பு! யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெளி மாவட்ட பழ வியாபாரிகள் பழ விற்பனையில் ஈடுபட்டு வருவதால் உள்ளூர் பழ வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர். மாநகர சபை எல்லைக்குள் பழ விற்பனையில் ஈடுபடுவதற்கு மாநகர சபைக்கு நாளாந்தம் 110 ரூபா செலுத்தி வருகின்றோம். ரம்புட்டான், அன்னாசி, மங்குஸ்தான் போன்றவை குறிப்பிட்ட பருவங்களில் மாத்திரம் கிடைக்கக் கூடியவை. அவற்றை நாம் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து சிறிய இலாபம் வைத்து விற்பனை செய்கிறோம். இவற்றை வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் கொண்டு வந்து மாநகர சபைக்கு உட்பட்ட வீதியோரங்களில் வைத்து விற்கின்றனர். இதனால் எமது…
-
- 1 reply
- 503 views
-
-
முகக்கவசத்தில் தோன்றிய விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட முகக் கவசங்கள் பிரச்சார கூட்டங்களின் போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது. நேற்று (28) யாழ்ப்பாணத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் இந்த முகக்கவசங்கள் கட்சி ஆதரவாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தெற்கில் பொதுஜன பெரமுன கட்சியினர் தமது கட்சி இலட்சனை பொறித்த முகக்கவசங்களை விநியோகிக்கும் நிலையில், யாழ் தேர்தல் மாவட்டத்திலும் முகக்கவசங்கள் ஊடாக பிரச்சார நடவடிக்கைளை முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/முகக்கவசத்தில்-தோன்றிய-வ/
-
- 1 reply
- 573 views
-
-
ரூ.100 கோடி’ யஸ்மின் சூக்காவிடம் நட்ட ஈடு கோரி கடிதம்..! உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிடம் 100 கோடி ரூபா நட்ட ஈடு கோரி, இலங்கையின் தேசிய உளவுத் துறை பிரதானி மேஜர் ஜெனரால் துவான் சுரேஷ் சலே கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த நட்ட ஈட்டை செலுத்தாவிடின் 14 நாட்களில், யஸ்மின் சூக்காவுக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக குறிப்பிட்டே, சட்டத்தரணி பஹன் வீரசிங்க ஊடாக அவர் இந்த நட்ட ஈடு கோரும் கடிதத்தை அனுப்பியுள்ளார். கடந்த மே (22), தேசிய உளவுத் துறை பிரதானியான சுரேஷ் சலே மற்றும் மேலும் நான்கு இரானுவத்தினர் பிரிகேடியர் தரத்தில் இருந்து மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டனர். அது தொடர்பில் கடந்த ஜூன் (01) விஷே…
-
- 3 replies
- 714 views
-
-
20 ஆசனங்கள் கிடைக்கும் என்பது கூட்டமைப்பின் பகல் கனவு – சிவாஜி by : Vithushagan காட்டிக் கொடுத்தும் சோரம் போயும் அரசியல் செய்யும் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சி அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ”நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றை இலக்கத்திலேயே ஆசனங்களை கைப்பற்றும். ஏனெனில் தமிழ் மக…
-
- 1 reply
- 393 views
-
-
மட்டக்களப்பில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நேயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வி. குணராஜசேகரம் அறிவித்துள்ளார். அந்த வகையில், ஜுன் 12 ஆம் திகதி தொடக்கம் ஜுன் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 20 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். டெங்குத் தொற்றுக்கு ஆளாகிய அனைவரும் சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர். இறப்புக்கள் எதுவும் சம்பவிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவ…
-
- 0 replies
- 429 views
-
-
2019’ சாதாணதர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்! கல்வி பொதுத்தராதர சாதாணதர பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசோதனை செய்வதற்கான விண்ணப்பங்களை ஜூலை மாதம் 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தபால் ஊடாக அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. https://newuthayan.com/2019-சாதாணதர-பரீட்சை-எழுதிய/
-
- 0 replies
- 416 views
-