Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து உரிய முற்பாதுகாப்பு நடைமுறைகளுடன் நாட்டிற்குள் சுற்றுலாப்பயணிகளை வரவேற்பதற்கு இலங்கை சுற்றுலாத்துறை தயாராக இருக்கிறது. இதன்போது அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்பதுடன் அவர்கள் குழுக்களாகவோ, குடும்பமாகவோ அல்லது தனியாகவோ வருகைதர முடியும்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை காலமும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டிற்குப் பெருமளவு வருமானத்தை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அறி…

  2. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்புகிறது ரயில் சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொதுப் போக்குவரத்து சேவையை வழமை போன்று முன்னெடுப்பதற்கு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.அடுத்துவரும் சில தினங்களில் மக்களின் செயற்பாடுகள் மற்றும் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பில் சுகாதாரப் பிரிவு வழங்கும் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை வழமைக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழக்கமான கால அட்டவணையில் புகையிரத சேவைகள் இடம்பெறுமென ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த சில வாரங்களாக இயங்கி வந்த சிறப்பு அட்டவணை, இனி…

  3. இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள் இல்லாத ஜனாதிபதி செயலணி: தொல்பொருள் ஆய்வில் அனைவரும் சிங்கள பௌர்த்தர்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியொன்று நிறுவப்பட்டுள்ள பின்னணியில், அது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணமானது, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என பல சமூகங்கள் வாழும் ஒரு பகுதியாக காணப்படுகின்ற நிலையில், அந்த மாகாணத்தில் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு சொந்தமான பல தொல்பொருள் சின்னங்கள் காணப்படுகின்றன. எனினும், கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் சின்னங்களை அடையாளம் கண்டு அவற்றை முகாமைத்துவம் செய்யும் வகையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிய…

    • 1 reply
    • 609 views
  4. சேலை அழகு என்பதற்காக அழகு ராணி போட்டியில் வெற்றியீட்ட முடியாது…! புடவை அழகு என்பதற்காக அழகு ராணி போட்டியில் வெற்றி பெற்று விட முடியாது. எனவே தேர்தல் குறித்து கூடிய அவதானம் செலுத்தி செயற்பட வேண்டும். தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் ஜக்கிய தேசியக் கட்சி தாக்கல் செய்தவையாகவே மக்கள் கருதுகின்றனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதே போன்று ஜனாதிபதியின் வர்த்தகமானி அறிவிப்பு காலவதியாகியுள்ளது. அரசியலமைப்பினை மீறாது பாதுகாக்க வேண்டுமாயின் நாடாளுமன்ற அமர்வை ஆகஸ்ட் வரை ஒத்தி வைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும். இருப்பினும் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் திகதியை ஜனாதிபதி அறிவித்தே ஆக வேண்டும் என ரணில் கூறினார். ஜ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்ப…

  5. காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேசத்தில் இரவில் நடமாடுவதாக கூறப்படும் நிர்வாண நபரை (கிரிஸ் பேய்) கண்டுபிடிக்க பொலிஸார் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளனர். நெலுவ, ஹினிதும, தவலம, உடுகம மற்றும் வந்துரப பகுதிகளில் பொலிஸ் குழுக்கள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நெலுவ பெலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வார காலங்களாக நெலுவ மற்றும் ஹினிதும பொலிஸ் பிரதேசங்களில் வீடுகளுக்கு நிர்வாணமாக நுழையும் நபர்கள் அங்குள்ளவர்களை அச்சுறுத்துவதாக பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக திடீர் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிரிஸ் பேய்களின் நடமாட்டம் காரணமாக பொது மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள…

  6. தந்தை, மகள் உட்பட மூவர் பலியான சோகம்! பதுளை – மடுல்சீமை, எல்ல பகுதியில் குளம் ஒன்றில் நீராடச் சென்ற தந்தை மற்றும் மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று (06) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தந்தை (38-வயது, மகள் (13-வயது) மற்றும் உறவுமுறை சிறுமி (12-வயது) ஆகிய மூவரே உயிரிழந்துள்ளனர். சடலங்கள் பசறை வைத்தியசாலைக்கு வைக்கப்பட்டுள்ளன. https://newuthayan.com/தந்தை-மகள்-உட்பட-மூவர்/

  7. காதலியை காப்பாற்ற முயன்ற காதலன் மரணம்….! மொறட்டுவை-ஏகொடஉயன பகுதியில் நீரில் மூழ்கிய காதலியை காப்பாற்ற முயன்ற காதலன் உயிரிழந்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (05) இடம்பெற்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது. குறித்த இருவரும் நேற்று கடலுக்கு சென்றிருந்த வேளையில் காதலி கடல் அலையால் இழுத்து செல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்ட காதலன் தனது காதலியை கரைசேர்த்ததாகவும், அதன்பின்னர் வந்த அலையால் அவர் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மொறட்டுவை-ஏகொடஉயன பகுதியை சேர்ந்த 23 வயதான நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது. நீரில் மூழ்கிய குறித்த நபரின் காதலி பாணந்துரை பொது மருத்துவமனையில் சிக…

  8. வீடுபுகுந்து தாக்குதல்; நால்வர் கைது! யாழ்ப்பாணம் – நெடுந்தீவு 6ம் வட்டாரத்தில் வீடொன்றுக்குள் புகுந்த விசமிகள் அங்கிருந்த உடமைகளை அடித்து நொருக்கிய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்கள், கல்வேலிகள், நீர் பம்பி, மின்சார இணைப்புக்கள் என பல இலட்சம் ரூபா பெறுமதியான உடமைகள் நாசமாக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (04) இரவுவேளையே குறித்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் நேற்று (05) காலையில் வீட்டு உரிமையாளர் அறிந்துள்ளார். வீட்டு உரிமையாளரால் நெடுந்தீவு பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் வசிக்கும் நான்கு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வி…

  9. தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ் பொது நூலகம் தமிழர்களின் கலாச்சாரம் இன்று கேள்விகுறியானாலும் சில பல இடங்களில் அது வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. யாழ் நூலகம் பற்பல கிடைத்தற்கரிய பழம்பெரும் நூல்கள் மற்றும் தமிழ் ஓலைச் சுவடிகள் நாழிதழ்கள், வார மாத இதழ்கள் துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய காலம் அது. பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த எமது பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றிலும், கல்வியிலும் முக்கியம் வகிக்கும் யாழ் பொது நூலகம் பற்றி ஒரு நோக்கு.. நூலக வரலாறு இந்த நிறுவனத்துக்கான கருப்பொருள் க.மு. செல்லப்பா என்னும் ஆர்வ…

  10. நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு Report us Kamel 3 hours ago நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் ஆறு லட்சம் ரூபாவிற்கு மட்டுமே இலங்கை மத்திய வங்கி பொறுப்புச் சொல்லும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இயங்கி வரும் பல்வேறு நிதி நிறுவனங்களில் மக்கள் பணத்தை வைப்புச் செய்து வருகின்றனர். இவ்வாறு வைப்புச் செய்யப்படும் பணத் தொகைகளில் ஆறு லட்சம் ரூபா வரையிலேயே, இலங்கை மத்திய வங்கி பொறுப்பு ஏற்கும் என்ற வகையில் பந்துல குணவர்தன கருத்து வெளியிட்டுள்ளார். …

  11. இலங்கையின் மாணவர்களுக்கு சீன அரசாங்கம் 125 ஆயிரம் முகக்கவசங்களை வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடம் இந்த முகக்கவசங்களை சீனத் தூதரகத்தின் அதிகாரி ஹூ வெய் கையளித்ததாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள வருமானம் குறைந்த குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கே இந்த முகக்கவசங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. சீனத் தூதரகம் இலங்கை மாணவர்களுக்கு சிறந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அன்பளிப்புக்களை வழங்கிவருவதாக தூதரக அதிகாரி இதன்போது குறிப்பிட்டார். அத்துடன் கொரோனவைரஸ் பாதிப்பால் நலிந்துப்போயிருக்கும் பொருளாதாரத்துக்கு சீனத் தூதரகம் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://www.tamilwin.com/community/01/247851?ref=home-feed

    • 0 replies
    • 363 views
  12. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களிக்காடு பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி அற்ற முறையில் கிரவல் அகழ்வு இடம்பெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், அவ்விடத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் நேற்று சென்றுள்ளனர். குறிப்பாக குறித்த இடத்திற்கு ஊடகவியலாளர்கள் சென்று செய்தி சேகரிக்கும் பணியை ஆரம்பித்ததும், அந்த இடத்தில் இருந்த டிப்பர் வாகனங்கள் அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றதோடு மீண்டும் அந்த இடத்திற்கு கிரவல் ஏற்றுவதற்காக வருகைதந்த டிப்பர் வாகனங்களும் திரும்பிச் சென்றுள்ளன சம்பவ இடத்துக்கு சென்றதும் சம்பவத்தை அவதானித்த ஊடகவியலாளர்கள் முள்ளியவளை காவல் நிலைய பொறுப்பதிகா…

    • 3 replies
    • 753 views
  13. வடமாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை - ஆளுநர் வடமாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் ஆளுநர் செயகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே வடமாகாண ஆளுநர் மேற்கண்ட வலியுறுத்தலைச் செய்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வட மாகாண பொலிஸார் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவற்காக அர்ப்பணிப்புடன் முன்னெடுத்த அளப்பரிய சேவைகளை பாராட்டுக்கின்றேன். தற்போது வடக்கு மாகாணத்தில் சட்டத்திற்கு விரோதமான முறையில் சமுதாயத்தைப் பாதிக்கின்ற நிகழ்வுகள் இடம்பெ…

    • 5 replies
    • 646 views
  14. தமிழ் அரசியல் அரங்கில் செயற்பட்டுவருகின்ற பல அரசியல் தலைவர்களும் சுமந்திரன் வெளியிட்டு வருகின்ற நிலைப்பாடுகள், கருத்துக்கள் தொடர்பாக மிகப் பெரிய அதிருப்திகளை பதிவுசெய்து வருகின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் அங்கம் வகிக்கும் பெரும்பாலான தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் சுமந்திரனின் போக்கு, நிலைப்பாடுகள் தொடர்பாக தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றார்கள். பெரும்பாலான தமிழ் மக்கள் சுமந்திரனை திட்டி தமது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள். ஏன்? சுமந்திரன் மீது ஏன் இத்தனை விமர்சனங்கள் எழுகின்றன? எதற்காக சுமந்தினை அவரது கட்சியின் சகாக்கள் கூட எதிர்க்கின்றார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடுகின்ற 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி இத…

    • 3 replies
    • 820 views
  15. சிறுவனை தாக்கிய பொலிஸ் குழு; விசாரணை தீவிரம்! களுத்துறை – தர்கா நகரில் தாரிக் அஹமட் (14-வயது) என்ற ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை பொலிஸ் குழுவொன்று தாக்கியமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 25ம் திகதி ஊரடங்கு அமுலில் இருந்த போது தர்கா நகரின் பொலிஸ் சோதனைச்சாவடி அருகே சைக்கிளில் சென்ற குறித்த சிறுவனை பொலிஸார் மற்றும் சிலர் இணைந்து தாக்கியுள்ளனர். இது தொடர்பான காணொளிகள் ட்டுவிட்டரில் பகிரப்பட்டுள்ளன. 43 people are talking about this …

    • 3 replies
    • 564 views
  16. வீடுகளுக்கு பொலிஸாருடன் செல்லும் மர்ம மனிதர்கள் கொழும்பில் வீடுகளுக்கு விபரம் சேகரிக்க பொலிஸாருடன் சிவில் உடையில் செல்லும் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் இன்று (05) பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. தேசிய பாதுகாப்பு நடவடிக்கையாக கொழும்பில் தற்காலிகமாக வசிப்பவர்கள் – வாக்காளர் பதிவற்றவர்களை பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு அண்மையில் அறிவுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து வீடுகளுக்கு பொலிஸாருடன் சிவில் உடையில் மர்ம நபர்களும் சென்று தகவல் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/வீடுகளுக்கு-பொலிஸாருடன்/

    • 2 replies
    • 490 views
  17. மூளையில் இரத்தக்கசிவு - வீடு திரும்பி 5 நாட்களின் பின் உயிரிழந்த 5 வயதுச் சிறுவன் மட்டக்களப்பில் விபத்து இடம்பெற்று 5 நாட்களின் பின்னர், 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – கல்லடியில் கடந்த மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில், கல்லடியை சேர்ந்த ஒருவரும் அவரின் மகனும் காயமடைந்துள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு மறுதினமே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, சிறுவன் மீண்டும் சுகயீனமுற்ற நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், CT Scan எடுப்பதற்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு சிறுவன் உயிரிழந்துள…

  18. போதை மாத்திரைகளுடன் மூவர் கைது! மோட்டார் சைக்கிள்களில் போதை மாத்திரைகளை கொண்டு சென்ற மூவரை, பொலிஸார் இன்று (05) கைது செய்துள்ளனர். களுத்துறை – பேருவளை, அம்பேபிட்டி பகுதியில் வைத்தே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 1360 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். https://newuthayan.com/போதை-மாத்திரைகளுடன்-மூவர/

  19. மன்னாரில் புலனாய்வு பிரிவால் அறுவர் கைது இந்தியாவிலிருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலைமன்னாருக்கு இருவரை அழைத்து வந்த மற்றும் உதவினார்கள் என்ற சந்தேகத்தில் 6 பேர் புலனாய்வுத்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாருக்கு தனது பிள்ளையுடன் வந்த நபர் ஒருவர் மடு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த குறித்த இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தும் நிலையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த நபர் எவ்வாறு மன்னாருக்கு வந்தார்கள் என அரச புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், படகு மூலம் அவர்களை இலங்கை…

  20. மந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..! யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மந்துவில் சின்னச்சந்தைப் பகுதியில் இன்று (05) இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. நபர் ஒருவர் தனது வீட்டுக் காணியை துப்பரவு செய்து குப்பைகளை எரிக்கும் போது காற்று காரணமாக குப்பையிலிருந்து பறந்த தணல் அயல் வீட்டாரின் தென்னை, பனை மீது விழுந்து தீ பற்றி பாரிய விபத்து ஏற்பட்டது என தெரியவருகிறது. இதைனயடுத்து சம்பவம் தொடர்பில் தீ அணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த தீ அணைப்புப் படை தீயை கட்டுப்படுத்தும் பணியை முன்னெடுத்துள்ளது. https://newuthayan.com/மந்துவில்-பகுதியில்-சற்ற/

  21. ஊடகப்பிரிவு - தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரத்னஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் ஹூலின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் இவ்வாறு செயற்படுவது, ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்குகின்றதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். பேராசிரியர் ஹூல் நேர்மையாகப் பணிபுரிபவர். அவரது நேர்மைத்தன்மையும் சுயாதீனச் செயற்பாடுகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபணமாக்கப்பட்டிருக்கின்றன. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு தேவை…

    • 10 replies
    • 1.3k views
  22. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழரின் தாயகம் அல்ல. இதுவும் பௌத்த - சிங்களவர்களின் பூமிதான். அதாவது ஒட்டுமொத்த இலங்கையும் பௌத்த - சிங்கள நாடு. தமிழர்கள் இதை உணர்ந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்துப் புலம்பிக்கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை” என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். “வடக்கு, கிழக்கை நாம் பாதுகாக்க வேண்டுமெனில் இங்கு இராணுவத்தைத்தான் நிலைநிறுத்த வேண்டும். அவர்களின் நேரடிக் கண்காணிப்பில்தான் அனைத்துச் செயற்பாடுகளும் நடைபெறும்" எனவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியை நாம் வரவேற்கின்றோம். பெரும்பான்மை பௌத்த - சிங்களவர்களின் வா…

    • 1 reply
    • 463 views
  23. வீட்டுக்குள் கசிப்பை பதுக்கிய பூசகர் வசமாக மாட்டினார்! வீட்டுக்குள் சட்டத்துக்குப் புறம்பான கசிப்பை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். ஏழாலையைச் சேர்ந்த பூசகர் ஒருவரே 27 லீற்றர் கசிப்பை வீட்டின் குளியலறையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவின் கீழான சிறப்புக் குற்றத்தடுப்புப் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பூசகர் இதே குற்றச…

    • 7 replies
    • 1k views
  24. (எம்.மனோசித்ரா) பாதுகாப்பான நாடு, ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கும், கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கும் தனித்தனியாக இரண்டு ஜனாதிபதி செயலணிகள் நியமிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவினால் நேற்று செவ்வாய்கிழமை (02) அதற்கான வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தில் தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் வழங்கி, நீதி மற்றும் சட்டத்தின் ஆணையை பாதுகாக்கும், ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என ஏற்றுக்கொள…

    • 3 replies
    • 1.2k views
  25. In கொழும்பு June 5, 2020 9:28 am GMT 0 Comments 1243 by : Benitlas நாட்டில் மேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பட்டப்படிப்பிற்கு தகுதி பெறும் மாணவர்களில் 31 ஆயிரம் மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதனால் ஏனைய மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வியற்கல்லூரிகளுக்கு அனுமதி பெறுகின்றனர். இந்நிலையில், இந்த வருடம் புதிய பீடங்களையும் புதிய கல்வியல் பிரிவுகளையும் அமைப்பதன் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு 37,500 பேரை இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானி…

    • 0 replies
    • 429 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.