Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் ஏதும் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டு கோவணத்துடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை மாலை 04.00 மணியளவில் இடம்பெற்ற போராட்டத்தை அகில இலங்கை கமநல சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. விவசாயிகளுக்கு சரியான மானியங்களை வழங்காமை மற்றும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன் நிதி அமைச்சு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமை மற்றும் தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் “விவசாயிகளுக்கு ஒய்வூதியம் வழங்கும் வயதை அறுபதிலிருந்து அறுபத்துமூன்றாக உயர்த்தியமை“ உள்ளிட்டவற்று…

  2. கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிக்கும் – அறிவிப்பு இன்று எதிர்வரும் 26ம் திகதி நடைபெறப்போகும் சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடிவு செய்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்டமைப்பு நடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடி நேற்று மாலை இதற்கான முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கபப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பினை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையினல் 10 அம்சக்கோரிக்கை ஒன்றையும் பொன்சேகாவிடம் கூட்டமைப்பு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது. சிறிலங்காவின் அதிபர் தேர்தல் தொடர்பான அறி…

  3. இலங்கையில் ஏனையதுறைகளைப் போலவே கல்வியிலும் இராணுவ தலையீடு காணப்படுவதாக வடமாகாண விவசாய அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். மன்னார் வெள்ளாங்குளம் அ.த.க. பாடசாலையின் 78ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஏனைய துறைகளைப் போலவே கல்வித் துறையிலும் இராணுவ தலையீடு காணப்படுகின்றது. அதன்படி அதிபர்கள், பல்கலைக்கழகப் புகுமுக மாணவர்கள் என இராணுவ முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படுகிறது. எனவே இந்தச் செயலானது ஜனநாயகப் பண்புகளுக்கு மாத்திரம் அல்லாமல் கல்வி வளர்ச்சிக்கும் எதிரானது மேலதிகாரிகள் இட்ட …

  4. கிளிநொச்சியை சூழும் அபாயம் : 815 பேருக்கு இதுவரை டெங்கு நோய்த்தொற்று கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஆராய்ச்சியியல் ஆய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இவ்வாறு அதிகரித்துள்ள நுளம்புகள் டெங்குநோயாளிகளைக் கடிக்கநேரிட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிதீவிரமாக டெங்குநோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுப்பிரிவினர் எச்சரித்துள்ளனர். தை மாதத்திலிருந்து நேற்று வரையான 227 நாட்களில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் மொத்தம் 815 பேர் டெங்குகாய்ச்சலால் பீடிக்கப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இவர்…

  5. அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளுக்கிடையிலான விரிசல் மேலும் அதிகரிக்கும் சாத்தியம்! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் தொடர்ந்தும் சிறுமைப்படுத்தினால் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கூடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தை விமர்சித்து வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அரசாங்கத்தில் இருந்து நீக்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலம் வாய்ந்த தலைவர்கள் சிலரும் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி ம…

  6. பொது மக்களின் இடங்களில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் : சலோகா பெயானி ஆணைக்குழுவுக்கு அறிக்கை இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் விபரங்க ளின் வெளிப்படைத் தன்மை பேணப்படுவதுடன் பொது மக்களின் இடங்களில் இருந்து இராணுவம் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் என்று ஐ.நா.வின் அகதிகளுக்கான விசேட அறிக்கையாளர் சலோகா பெயானி தெரிவித்துள்ளார். இலங்கையில் போரினால் இடம்­பெ­யர்ந்­த­வர்­களின் பிரச்­சி­னைக்கு ஒரு காத்­தி­ர­மான தீர்வைக் காண்­ப­தற்கு வளர்ச்­சியை அடிப்­ப­டை­யாகக் கொண்ட யுக்தி தேவை என்றும் அவர் கூறியுள்ளார். அண்­மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அவர், அது குறித்த அறிக்கை ஒன்றை ஐ.நா.மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வுக்கு சமர்ப்­பித்­துள்ளார். அந்த அறிக்­கை­யி­லேய…

  7. (ஆர்.ராம்) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் தென் ஆசிய மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தரிக் அஹமட் பிரபுவிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/131723/dsd.jpg அதுதொடர்பில் தெரியவருவதாவது, “தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானிய கொண்டிருக்கின்ற கரிசனைகளுக்கும், அதற்காக வழங்கி வரும் ஒத்துழைப்புக்களும் முழுமையான நன்றிகள். தமிழ் மக்கள் தமது கருமங்களை சுதந்திரமாக ஆற்றக்கூடியவாறாக இரண்டாக இருந்த நாட்டை 1933 ஆம் ஆண்டு பிரித்தானியாவே ஒன்றாக மாற்றியமைத்தது. அதன் பின்னரே தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகள் ஆக்கப்பட்டார்கள். தற்போது வரையில் …

  8. எதிர்வரும் அதிபர் தேர்தலில் தனக்கு 80 சதவீத வாக்குகள் கிடைக்குமென எதிரணிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று நுவரெலியா நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில் அதிபர் தேர்லினை முன்னிட்டு நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பில் தனக்கு 90 வீதமானோர் வாக்களித்துள்ளதாக தெரிவித்தார். தேர்தலில் தான் வெற்றி பெற்ற பின்னர் தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். குறிப்பாக, அரச ஊழியர்களின் சம்பள உயர்வு அரச நி்வாகத்தில் அரசியல் தலையீடுகளை தடுத்தல், தோட்டத்தொழிலாளர்கள் உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கும் நியாயமான சம்பளத்த…

  9. இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நேச்சல் சந்து நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருதரப்பு நலன்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் யஷ்வந்த்குமார் சின்ஹாவும் பங்கேற்றுள்ளார். எனினும், இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் இந்தப் பயணத்தின் நோக்கம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. முன்னதாக, இவர், முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்கவுள்ளத…

  10. ‘என்னை நீக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை’ முகத்திலடித்தாற்போல டெனீஸ் முதலமைச்சருக்கு நேற்றுக் கடிதம் ‘‘என்னை அமைச்­சுப் பத­வி­யிலிருந்து நீக்­கு­வதாக அறி­விக்க உங்­க­ளுக்கு (முத ல­மைச்­ச­ருக்கு) அதி­கா­ர­மில்லை. நானே இப்போதும் அமைச்சுப் பத­வி­யில் தொடர்­கின்­றேன். அதில் தலையீடு செய் வ­தி­லி­ருந்து வில­கி­யி­ருங்­கள்’’ இவ்­வாறு வடக்கு மாகாண போக்­கு­வ ரத்து அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் முத­ல­ மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு நேற்­றுக் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார். அமைச்­ச­ர­வை­யில் வெற்­றி­டம் ஏற்­ப­ட வில்லை என்­றும் தானே அமைச்­ச­ரா­கத் தொடர்­கிறார் என்றும் வடக்கு மாகாண ஆளு­நர் குரேக்­கும், அமைச்­சர் பா.டெனீஸ…

  11. Published by J Anojan on 2022-02-09 11:30:51 கொள்ளுப்பிட்டி மற்றும் தங்காலை பகுதிகளில் பதிவான இருவேறு சம்பவங்களில் ஜேர்மன் பெண்கள் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டி பகுதியில் ஜேர்மன் பெண் ஒருவர் போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்காக 28 வயதான இலங்கை வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஜேர்மன் பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான குறித்த வர்த்தகர், …

    • 2 replies
    • 396 views
  12. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடத் தீர்மானம் ‐ டக்ளஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக சமூக சேவைகள் அமைச்சரும், ஈ.பி.டி.பி கட்சியின் தலைவருமான டக்களஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி தலைவர் என்ற ரீதியிலேயே யாழ்ப்பாண மக்கள் தம்மை அறிந்து வைத்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சின்னத்தில் போட்டியிடுவது பொருத்தமாக அமையாது எனவும் அவர் தெரிவித்துள்ளர். ஆளும் கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதனால் தமது வாக்கு எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சியை விட்டு தாம் விலகப் போவதில்லை …

    • 3 replies
    • 1k views
  13. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒத்துழைத்து செயற்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உலக தமிழர் பேரவை என்ற புலம் பெயர்ந்த தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காணப்படுகின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு வடமாகாண சபை சிறந்த தளமாக காணப்படுகிறது. இந்த மாகாணத்தில் இடம்பெற்ற தேர்தலின் போது தமிழ் மக்கள் தங்களுக்கான தீர்வு குறித்த தெளிவான பதிலை வழங்கியுள்ளனர். இந்த நிலையில் தமிழ் மக்களின் ஆதரவை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பை மேலும் பலப்படுத்துவதன் ஊடாக, அரசியல் தீர்வு நோக்கிய முன்னெடுப்பை மேற்கொள்ள முடியும் என்று அந்த அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. http://akkinikkunchu.com/new/index.php?option=com_conte…

  14. ஹம்­பாந்­தோட்டை துறை­முகம் அடுத்த மாதம் சீனா­விடம் ஹம்­பாந்­தோட்டை சர்­வ­தேச துறை­மு­கத்தை ஒக்­டோபர் முதலாம் திகதி சைனா மேர்சன்ட் நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைக்­க­வுள்­ள­தாக அரச வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சைனா மேர்சன்ட் நிறு­வ­னத்­துக்கு குத்­த­கைக்கு வழங்கும் ஒப்­பந்தம் சில வாரங்­க­ளுக்கு முன்னர் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் 80 சத­வீதப் பங்­குகள் சைனா மேர்சன்ட் நிறு­வ­னத்­துக்கும் 20 சத­வீதப் பங்­குகள் இலங்கை துறை­முக அதி­கா­ர­ச­பைக்கும் உரித்­தாகும் வகையில் 99 வருட குத்­த­கைக்கு சைனா மேர்சன்ட் நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இதன்மூலம் இலங்கை அரசுக்கு 1.2 பில்லியன் ரூபா …

  15. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 09.02.2010 அன்று ஒலிபரப்பாகிய யாழ்ப்பாணச் செய்தியாளரின் கருத்தாய்வு நன்றி- ATBC

  16. பலஸ்தீனத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெத்லஹேம் நகரிலுள்ள நெற்விட்றி தேவாலயத்திற்கு விஜயம் செய்து நள்ளிரவு ஆராதனைகளில் ஈடுபட்டார். இந்த நிகழ்வுகளில் பலஸ்தீன் ஜனாதிபதி கலாநிதி மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/--main/95958-2014-01-07-09-29-13.html

  17. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி, EPDPபியும் பிரேரனை! February 26, 2022 இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) உறுப்பினர் வைரமுத்து ஜெயரூபனால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசசபையின் 48வது அமர்வு நேற்றைய தினம் காலை 9 மணிக்கு சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பிடி.பி) பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து ஜெயரூபனால் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரிய பிரேணையொன்று சபைக்கு கொண்டுவரப்பட்டது. குறித்த பிரேரணை சபை உறுப்பினர்களால் …

    • 1 reply
    • 222 views
  18. வடக்கு, கிழக்கில் தனித்தே போட்டி – கூட்டணி கிடையாது எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனித்துப் போட்டியிடவும், ஏனைய மாகாணங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது, இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏற்கனவே அடிமட்டத்தில் இருந்து பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்தோ, அல்லது தனியான கூட்டணி ஒன்றை அமைத்தோ, முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடாது. இணைந்து போட்டியிடுவ…

  19. ஓரணியில் ஒன்றுபட்டுள்ளோம் எனவே இது சிறந்த எதிர்காலத்துக்கான ஆரம்பப்புள்ளி – இரா.சாணக்கியன் தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துள்ளது. அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக தற்போது ஓரணியில் திரண்டுள்ளோம். மக்களும் ஒன்றுபட்டுள்ளனர். எனவே, சிறந்த எதிர்காலத்துக்கான ஆரம்பப்புள்ளியாகக்கூட இது அமையலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார் . நுவரெலியா நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் எமது விடுதலைப்போராட…

  20. இலங்கை அரசு அடிப்படை மனித உரிமைகளை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது:- இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பேர்னாட் சவேஜ். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அடிப்படை மனித உரிமைகளை புறந்தள்ளுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பேர்னாட் சவேஜ் கொழும்பு வார ஏடு ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் (21.02.2010) தெரிவித்துள்ளார். அதன் தமிழ் வடிவம் வருமாறு: கேள்வி: ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. எனவே தற்போதைய நிலையில் இருந்து இருதரப்பும் மேற்கொண்டு செல்ல வேண்டிய திசை என்ன? பதில்: இதற்கான திட்டம் 18 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. அது பல விடயங்களை கொ…

    • 0 replies
    • 590 views
  21. பல தமிழ்க் கட்சிகளை உள்ளடக்கிய புதிய தமிழ் அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கான உடன்பாட்டுக்கான வரைவைத் தயாரிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஈபிடிபி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஈபிடிபி பேச்சாளர் நெல்சன் எதிரிசிங்க, “புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்ற தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் விரைவில், உடன்பாடு கையெழுத்திடப்படும். இந்தக் கூட்டணியின் பிரதானமான நோக்கம், நாடாளுமன்றத் தெரிவுக் குழு மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல்தீர்வு காண்பதேயாகும். நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ள நிலையில், ஈபிடிபி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியை உள்ளடக்கிய …

  22. இலங்கை அரசாங்கம் தனது நியாயபூர்வ தன்மையை இழந்துவிட்டது – ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசாங்கத்தை பதவி விலகச்செய்யப்போகின்றோம்- வெளிநாட்டு ஊடகத்திற்கு ஹர்சா டி சில்வா பேட்டி நாட்டின் கடன்நெருக்கடி மற்றும்அதனுடன் தொடர்புபட்ட ஏனைய பிரச்சினைகளை கையாண்ட விதம் காரணமாக அரசாங்கம்தனது நியாயபூர்வ தன்மையைஇழந்துவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா சிஎன்பிசிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதற்காக தனது கட்சி இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறப்போகின்றன நாங்கள் அரசாங்கத்தை பதவி விலகச்செய்யப்போகின்றோம் – இந்த அரசாங்கம் தனது நியாயப…

    • 0 replies
    • 323 views
  23. கொன்று குவிப்பைக் கண்டு கதறியோருக்கு ‘ஆறுதலையாவது வழங்க முடியும்’ “இளைஞர், யுவதிகள், வயதுவந்தவர்கள், குழந்தைகள் என்று, எதுவித வேறுபாடும் இன்றி பல்லாயிரக் கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட இந்த மண்ணில் நின்று, அந்த நிகழ்வுகளை நேரடியாகக் கண்டும் கலங்கியும் கதறியும் அனுபவித்த மக்களுக்குச் சற்று ஆறுதலையாவது வழங்க முடியும் என்ற எண்ணத்தில் இந்த அகமானது அமைக்கப்பட்டமை வரவேற்புக்குரியது” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு, வட்டுவாகலில் நிர்மாணிக்கப்பட்ட, பிரம்ம குமாரிகள் இராஜ யோகா நிலையம் திறப்பு விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில், சிறப்பு…

  24. ஜி.எல்.பீரிஸின் அமைச்சு பதவியில் மாற்றம் – வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி வெளிநாட்டு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் கையொப்பமிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு வெளிநாட்டு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், அவர் மீண்டும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2022/1272915

  25. சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை நாட்டுக்கும் இனத்திற்கும் எதிரானது : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வட மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை ஏற்புடையதல்ல என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரச படையினர் மேற்கொண்ட யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சிவாஜிலிங்கம் கோரியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.எனினும், சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.