ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
கடத்தப்பட்ட மகனை தேடிய தந்தை மரணம் வவுனியாவில் வைத்து கடத்தப்பட்ட தனது மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் இன்று காலை மரணமடைந்துள்ளார். வவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் சின்னச்சாமி நல்லதம்பி (வயது71) என்ற தந்தையே இன்றைய தினம் அவரது வீட்டில் உள்ள மரமொன்றில் ஏறியபோது கீழே வீழ்ந்து இறந்துள்ளார். வவுனியாவில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 1204 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இவரது மகனை 2008 ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக வைத்து இனந்தெரியாதோர் கடத்திச்சென்றிருந்தனர். இந்நிலையில், தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர் 1200 ஆவது நாளன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்…
-
- 0 replies
- 523 views
-
-
திருட்டில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது! குருநாகல் – பொல்ஹாவெலவில் இரண்டு வீடுகளில் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சந்தேகநபர் கடந்த பெப்ரவரியில் பனலிய மற்றும் பொல்கஹவெல ஆகிய பிரதேசங்களிலுள்ள இரு வீடுகளுக்குள் நுழைந்து தங்க நகைகளை திருடியுள்ளதாகவும் குறித்த நகைகளின் பெறுமதி சுமார் 2 இலட்சம் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருடப்பட்ட நகைகளைத் தேடி பொலிஸார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபர் குற்றமொன்றுக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட கேகாலையை சேர்ந்த பொலிஸ் அதிகாரியாவார் https://newuthayan.com/திருட்டில்-ஈடுபட்ட-முன்ன/
-
- 0 replies
- 385 views
-
-
ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது – ஜனாதிபதி! ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொசன் பௌர்ணமியினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இலங்கை தேசத்திற்கு பௌத்த சமயத்தின் செய்தியை சுமந்து வந்த அரஹத் மகிந்த தேரரின் வருகையை நினைவுகூர்ந்து மிகுந்த பக்தியுடன் சமயக் கிரியைகளில் ஈடுபடுவது எமது நாட்டு மக்கள் பல்லாயிரம் வருடங்களாக பேணி வரும் வழக்கமாகும். தேரர் அவர்கள…
-
- 0 replies
- 667 views
-
-
அனைத்து உயிரினங்களும் நலம் பெறட்டும் – பிரதமர்! முழு உலகும் மீண்டும் தம்மை சுயவிசாரணை செய்துகொள்ள வேண்டும் என்பதே கொவிட் – 19 தொற்று எடுத்துக்கூறும் முக்கிய பாடமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொசன் பௌர்ணமியினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தேசத்தை நாகரீகமடையச் செய்த, தேசத்தை முதிர்ச்சியடையச் செய்த, தேசத்தை முன்னேற்றிய, தேசத்தைப் பாதுகாத்த புத்தமதத்திற்கு அடிப்படையாக அமைந்த புனித பொசொன் போயா தினம் இம்முறை இரண்டாயிரத்து முன்னூற்றி இருபத்தியெட்டாவது தடவை பிறக்கிறது. இந்தியாவின் அசோகப் பேரரசரின் ஆசிர்வாதத்துடன் வருகை தந்த மகிந்த தேரர் தலைம…
-
- 0 replies
- 366 views
-
-
த பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கான அறிவிப்பு….! த பினான்ஸ் நிறுவனத்தின் அனைத்து வைப்பாளர்களுக்கும் எதிர்வரும் 07ஆம் திகதி முதல் இழப்பீடு வழங்க தீரமானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்தள்ளது. அதன்படி அனைத்து வைப்பாளர்களுக்கும் 06 இலட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இது குறித்த மேலதிக விடங்களை 011 23 98 788, 011 24 77 261 என்ற இலங்கை மத்திய வங்கியின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தியும் மற்றும் 011 24 81 594 , 011 24 81 320 என்ற மக்கள் வங்க…
-
- 0 replies
- 611 views
-
-
சொன்னதை செய்ய தவறினால் இந்த அரசை தோற்கடிப்பேன் – சஜித் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் நாட்டு மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்காமல் இருக்குமாயின் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், மக்களின் ஆசிர்வாதத்துடன் வெற்றி பெற்று தற்போதைய அரசாங்கத்தை தோல்வியடைய செய்வோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும், ‘தற்போதைய அரசாங்கத்திற்கு கடந்த வருடம் நவம்பர் மாதக்காலப்பகுதியில் இந்நாட்டு மக்கள் மீது அதிகமான அக்கறை இருந்தது. இந்த அக்கறை கடந்துள்ள இந்த ஏழு மாதகாலத்தில் இருப்பதாக தெரியவில்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில்…
-
- 0 replies
- 325 views
-
-
நாவற்குழியில் இளைஞர்கள் 10 பேர் கைது! யாழ்ப்பாணம் – நாவற்குழிப் பகுதியில் ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் இளைஞர்கள் 10 பேரை சாவகச்சேரி பொலிசஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞர்கள் நாவற்குழி பகுதியிலுள்ள மைதானம் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் இன்று (04) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட 10 பேரும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜராக திகதியிடப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். https://newuthayan.com/நாவற்குழியில்-இளைஞர்/
-
- 0 replies
- 308 views
-
-
நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்றுக்கொள்ள வேண்டும் மத்திய வங்கியின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தி பினேன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிலைமை குறித்து அவரி மாளிகையில் இன்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறினார். இதன்போது மத்திய வங்கியின் ஆளுநர் டப்பிள்யூ.டீ.லக்ஸ்மன், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் அமைச்சர்கள் பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர் மத்திய வங்கியின் கீழ் உள்ள நிதி நிறுவனங்கள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவதாக…
-
- 5 replies
- 849 views
-
-
ஆபத்து முடிவிற்கு வந்துவிட்டது : ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி தகவல் கொரோனா காரணமாக சமூகத்திற்குள் ஏற்பட்டிருந்த ஆபத்து முடிவிற்கு வந்துள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பொதுமக்களிற்கு புதிதாக நோய் பரவுவதை தடுப்பதற்காக அதிகாரிகள் திட்டமொன்றை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸை முற்றாக ஒழிப்பதற்கான சிறந்த தந்திரோபாயத்தை உருவாக்கியுள்ள நாடு இலங்கை என்பதால் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப விரும்புகின்றனர். வெளிநாடுகளில் சிக்கியுள்ள அனைவரையும் நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து இலங்கை உறுதியாகவுள்ளது என்றார். அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறு…
-
- 3 replies
- 868 views
-
-
-எஸ்.என்.நிபோஜன் மாவீரர்களின் நினைவுகூரலை, அரசாங்கம் வன்முறை மூலம் தடுக்க நினைப்பதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். வனவளத் திணைக்களத்தினரால் அடாத்தாகப் பிடிக்கப்பட்டுள்ள தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தை, இன்று (04) பார்வையிட்டு, அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இது தற்போது ஓர் அரச காரணியாகுமெனவும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில், 101ஆம் இலக்கத்தை உடைய இந்தப் பகுதி, அரச காரணியாக ஒதுக்கப்பட்டுள்ளதெனவும் கூறினார். அரச காணியை வனவளத் திணைக்களம் தன்னுடையதென அடையாளப்படுத்துவதாக இருந்தால், கிராம அலுவலர், பிரதேச செயலாளர் ஆகியோரின் அனுமதியுடனே இவ…
-
- 0 replies
- 432 views
-
-
எப்.முபாரக் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் செவ்வியை முழுமையாக பார்வையிடாமலும் தெளிவான மொழிபெயர்ப்பை பெறாமலும் சுமந்திரன் அவர்கள் மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்றது என மூதூர் பிரதேச சபையின் உப தவிசாளர் சி.துரைநாயகம் (20) தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் சமூக வலைத்தள ஊடகம் ஒன்றிற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் வழங்கப்பட்ட செவ்வி தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலைப்பாடு குறிப்பிட்ட செவ்வியை முழுமையாக பார்வையிடாமையினாலும், தவறான மொழிபெயர்ப்புடன் கூடிய குறிப்பிட்ட சில கேள்விகளுக்கான பதில்களில் உள்ள தெளிவற்ற புரிதலின் காரணமாக ஏற்பட்டுள்ளன. …
-
- 43 replies
- 4.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துக்களுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்று ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. கே.பியைப் போன்று அர்ஜுன மகேந்திரனையும் அழைத்துவருவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறினாலும் அது சாத்தியமாகாது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரான சட்டநிபுணர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது பேசிய அவர், கே.பி என்கின்ற குமரன் பத்மநாதனை அழைத்துவந்த முறை எமக்கு நன்றாகத் தெரியும். இது சூழ்ச்சி மூலமாக இடம்பெற்றத…
-
- 0 replies
- 477 views
-
-
டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை நாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறித்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் காலப்பகுதியில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்பட்டபோதிலும் தற்போது அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. http://athavannews.com/டெங்கு-மற்றும்-எலிக்-காய/
-
- 6 replies
- 547 views
-
-
உழவியந்திர விபத்தில் நபர் ஒருவர் உட்பட 30 கோழிகளும் பலி! கிளிநொச்சி – முறிப்பு பகுதியில் நேற்று (03) இரவு உழவு இயந்திரத்தின் மட்காட்டில் இருந்து பயணித்தவர் தவறி சில்லுக்குள் விழுந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 8ம் வாய்க்கால் பகுதியை சேர்ந்த நல்லதம்பி யோகேஸ்வரன் (41) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். இதேவேளை உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்தவர் சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் வீடொன்றின் வேலியை உடைத்துக் கொண்டு கோழி கூட்டின் மீது மோதியுள்ளது. இதன்போது கூட்டிலிருந்த 30 கோழிகளும் இறந்துள்ளன. சம்பவத்தை அடுத்து சாரதி தப்பியோடியுள்ளார். உழவு இயந்த…
-
- 0 replies
- 373 views
-
-
திங்கட்கிழமை முதல் 100 கண்காணிப்பாளர்கள் தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக சுமார் 100 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவால் தேர்தல் தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், மற்றுமொரு பகுதியினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என, அதன் இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க கூறியுள்ளார். http://www.tamilm…
-
- 2 replies
- 435 views
-
-
குமாரன் பத்மநாதனை அழைத்து வருவதில் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி! தண்டிக்கப்படாததன் பின்னணி என்ன? தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துக்களுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்று ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. கே.பியைப் போன்று அர்ஜுன மகேந்திரனையும் அழைத்துவருவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறினாலும் அது சாத்தியமாகாது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரான சட்டநிபுணர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது பேசிய அவர், கே.பி என்கின்ற கு…
-
- 0 replies
- 410 views
-
-
ஸ்ரீலங்காவின் உண்மையான கடன் தொகை எவ்வளவு? வெடித்தது புதிய சர்ச்சை அரசாங்கத்தின் முழுக் கடன் தொகை தொடர்பில் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு தரவுகளுக்கு இடையே வேறுபாடு காணப்படுவதாக கணக்காய்வாளர் நாயகத்தின் புதிய அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்கிற்கு அமைய 70,000 கோடி ரூபா வேறுபடுகின்றது. நிதி அமைச்சின் தரவுகளுக்கு அமைய 2019 ஆம் ஆண்டு இறுதியாகும் போது அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 12 இலட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாவாகும். எனினும், 70,000 கோடி ரூபா அரச கடன் அதில் உள்ளடக்கப்படவில்லை என கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்படாத அரச கடன் தொகைக்குள் 31,820 கோடி ரூபாவி…
-
- 4 replies
- 659 views
-
-
திருமணமாகி 9 நாட்களில் மனைவியை கழுத்து நெரித்து கொன்ற கணவன் மட்டக்களப்பு – ஐயங்கேணி, ஜின்னா வீதி பகுதியில் தனது மனைவியை (24-வயது) நபர் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். நேற்று (03) இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஐயங்கேணிக் கிராமத்தில் வசித்து வந்த அப்துல் காதர் ஷியாமியா (24-வயது) என்ற இளம் குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 9 தினங்களுக்கு முன்னரே, திருமணம் முடித்து விவாகரத்து செய்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபராக அந்தப் பெண்ணின் கணவர் நவாஸ் முஹம்மத் ஷபீக் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – ஊறுகொடவத்தயை பிறப்பிடமாகக் கொண்ட சந்தேக நபர் ஏறாவூ…
-
- 0 replies
- 715 views
-
-
அலுவலகம் முடிந்து எனது வாகனத்தில் வீடுநோக்கி புறப்பட்டேன்... இரவு 8.30 மணி... வோர்ட் பிளேஸ் ஊடாக பெரியாஸ்பத்திரி முன் உள்ள சந்தியில் திரும்பி மருதானை நோக்கி வந்தபோது இடையில் கலர் லைட் அருகே சிறிய சத்தம் கேட்டது.. கண்ணாடியை பார்த்தேன்... ஒன்றுமில்லை... கொஞ்சம் முன்னே வந்தபோது ஒரு ஓட்டோக்காரர் என்னை முந்தியபடி சிங்களத்தில் கத்தியபடி வாகனத்தை ஓரமாக்குமாறு பணித்தார்... என்ன பிரச்சினை...? என்று கேட்டேன்... “ஓரமாக நிறுத்துங்கள்... சொல்கிறேன்” என்றார்... சரியென்று நிறுத்தினேன்... அருகே வந்தார்... நான் வாகனத்தில் இருந்து இறங்காமல்... என்ன பிரச்சினை என்று கேட்டேன்.. “ நீங்கள் இடது பக்கம் வாகனத்தினை திரும்பியதால் எனது …
-
- 0 replies
- 423 views
-
-
நிதி நிறுவனங்களின் வீழ்ச்சி; பொறுப்பை மத்திய வங்கியே ஏற்க வேண்டும்…! இலங்கை மத்திய வங்கியின் கீழ் இயங்கி வரும் நிதி நிறுவனங்கள் சரிவை சந்தித்தமைக்கான பொறுப்பை இலங்கை மத்திய வங்கி ஏற்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிதி நிறுவனங்கள் தொடர்பில் அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மத்திய வங்கியின் கீழ் உள்ள நிதி நிறுவனங்கள் தொடர்ந்து சரிவை எதிர்நோக்கி வருவது மற்றும் இது போன்ற நிதி நிறுவனங்களின் தவறான நிர்வாகம் குறித்து அரசாங்கம் அதிருப்தி அடைவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக அரச நிதி நிறுவனங்களின் மீதான மக்களின் நம்பிக்கை குறைவடையும் வாய்ப்பு உள்ளதாகவும் ப…
-
- 0 replies
- 315 views
-
-
கனடாவிலிருந்து ஸ்ரீலங்கா சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம் கனடாவில் இருந்து ஸ்ரீலங்கா சென்ற பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, காலி, களுவெல்ல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு கனடாவிலிருந்து குறித்த பெண் வந்துள்ளார். இதன்போது, புகைப்படம் எடுக்க வந்த கனேடிய பெண்ணுக்கு புகைப்படம் எடுக்க உதவுவது போன்று நடித்து அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த பெண் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடமும் கனேடிய உயர் ஸ்தானிகராலயத்திலும் முறைபாடு செய்துள்ளார். அவரிடம் இருந்த புகைப்படம் ஊடாக …
-
- 0 replies
- 510 views
-
-
மலையகத்தை சேர்ந்த பிராந்திய செய்தியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் போலியான செய்தியை வெளியிட்டு வருகின்றன. அவருக்கு கொரோனா தொற்று இல்லையென பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அவர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் செய்திசேகரிப்பில் ஈடுபட்ட நிருபர் ஒருவர், தடிமன் காரணமாக நேற்று வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் சமூகநலன்கருதி பொறுப்புடன் தாமாக முன்வந்து தன்னை சுயதனிமைக்கு உட்படுத்திக் கொண்டார். இன்னும் பிசிஆர் பரிசோதனை முடிவுகள்கூட வெளியாகவில்லை. அதற்குள் இன்று காலை முதல் அவருக்கு கொரோனா பரவிவிட்டது, அறிகுறிகள் தென்படுகின்றன என ச…
-
- 1 reply
- 529 views
-
-
-எஸ்.நிதர்ஷன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரனை விலக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, டெலோ முன்னின்று அழுத்தங்களைப் பிரயோகிக்குமென்று, டெலோவின் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில், இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், சுமந்திரனுக்கு அடிப்படையிலேயே போராட்டம், அதன் வலி, அதன் சுமை, தாக்கம், பெறுமதி பற்றித் தெரியாதெனவும் ஆயுதப் போராட்டம் ஏன், எதற்கு, யாரால் உருவானது என்றும் அவருக்குத் தெரியாதெனவும் கூறினார். இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்த சுமந்திரனைப் பத…
-
- 4 replies
- 892 views
-
-
யாழில் நேற்று இரவு இரண்டு வயது பெண் குழந்தை மாயம்! கதறும் தாய் யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியில் நேற்று இரவு 2 வயது குழந்தை ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இதில் ஆர்கலி என்ற 2 வயது குழந்தையே கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் கடத்தப்பட்ட குழந்தையின் தாயார் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நேற்று இரவு குழந்தை உணவருந்திக்கொண்டு இருந்ததாகவும், அப்போது மின்சாரம் தடைப்பட்ட நிலையில் குழந்தையின் அழுகுரல் கேட்டு தாய் ஓடி வந்துள்ளார். இதன்போது குழந்தையை காணவில்லை எனவும், சிலர் மதிலால் கடந்து சென்றதை பார்த்ததாகவும் தாயார் முறைப்பாடு செய்துள்ளார். குழந்தையின் தாயும், தந்தையும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார…
-
- 1 reply
- 455 views
-
-
விவசாயிகளிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்…! உடலில் மஞ்சள் புள்ளிகள் உள்ள வெட்டுக்கிளிகளின் பரவல் எதிர்பாராத விதமாக அதிகரித்து வருவதை அவதானித்தால் உடனடியாக விவசாய திணைக்களத்திடம் அறிவிக்குமாறு விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது https://newuthayan.com/விவசாயிகளிடம்-விடுக்கப்/
-
- 1 reply
- 424 views
-