ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143667 topics in this forum
-
தேர்தல் நெருங்கியுள்ளதால் தமிழ் மக்கள் மத்தியில் தாம் இழந்துள்ள அரசியல் செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தவும், அரசியல் வெறுமையில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொண்டு மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காகவுமே தமிழரசுக் கட்சியினர் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் சரணாகதியாகியுள்ளனரே தவிர, காலம் கடந்த ஞானமாகக் கூட மக்களின் நலன்களுக்காக அவர்கள் இப்போதும் தம்மை மாற்றிக்கொள்ளவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்று அலரிமாளிகை சென்று பிரதமருடன் ஐக்கியமடைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரது செயற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கருத்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்துத் தெரிவ…
-
- 1 reply
- 438 views
-
-
மட்டக்களப்பு, காத்தான்குடியில் உள்ள கர்பலா பிரதேச கடற்கரை ஓரத்தில் உள்ள விடுதியொன்று இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குறித்த விடுதி உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான், தனது உறுப்பினர்களுக்கு பயிற்சியளித்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காத்தான்குடி பொலிஸார் மற்றும் கொழும்பில் இருந்து வருகைதந்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் குறித்த விடுதியை சுற்றிவளைத்துள்ளனர். அத்துடன் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்ற வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். http://athavannews.com/சஹ்ரானின்-பயிற்சிக்கூடம/
-
- 1 reply
- 480 views
-
-
விக்னேஸ்வரன் சம்பந்தனை ஏமாற்றியது உண்மை; சுமந்திரனுக்கு அருந்தவபாலன் பதிலடி Leftin May 7, 2020 விக்னேஸ்வரன் சம்பந்தனை ஏமாற்றியது உண்மை; சுமந்திரனுக்கு அருந்தவபாலன் பதிலடி2020-05-07T16:07:31+00:00Breaking news, உள்ளூர் சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே. தன்னுடன் சேர்ந்து தமிழ்மக்களை அவரும் ஏமாற்ற வேண்டுமென சம்பந்தன் எதிர்பார்த்ததன் மூலம், சம்பந்தன் ஏமாந்தது உண்மைதான் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன். சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதா…
-
- 8 replies
- 888 views
-
-
யாழில் முதியவருக்கு இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்து கையளிக்கப்பட்டது யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியில் முதியவருக்கு இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்து கையளிக்கப்பட்டது. ஜே/263 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் வயோதிப் பெண் தனது பேரப்பிள்ளையுடன் வசித்து வருகின்றார். அவருக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு கோப்பாய் பிரதேச செயலகத்தால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த விடயம் இராணுவத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த விடயம் நுகேகொடை பகுதியைச் சேர்ந்த துஷாரா தேனுவர என்ற பெண் வீட்டினை அமைத்து வழங்க முன் வந்திருந்தார். இராணுவத்தின் ஒத்துழைப்புடன் கட்டிமுடிக்கப்பட்ட வீட்டினை தன…
-
- 14 replies
- 1.2k views
-
-
In இலங்கை May 2, 2020 12:10 pm GMT 0 Comments 1076 by : Litharsan அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் தெனியாய பிரதேசத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் நெருக்கடி நிலையில் வறுமை நிலையில் உள்ள தெனியாய பிரதேசத்தில் உள்ள பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (சனிக்கிழமை) வழங்கப்பட்டன. இதன்போது தெனியாய பிரதேசத்தில் உள்ள சுமார் 500இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் காரணமாக அன்றாடம் பொருளாதார ரீதியாக பல குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர். நாளாந்த கூலித் …
-
- 17 replies
- 2.4k views
-
-
ஜனாதிபதியுடன் பேசினார் ட்ரம்பின் பாதுகாப்பு ஆலோசகர்! by : Benitlas அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பாதுகாப்பு ஆலோசகர் ரொபர்ட் சார்ல்ஸ் ஓப்ரைன் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது தொலைபேசியூடாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளளன, இதன்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு அமெரிக்கா உறுதியளித்துள்ளது, அமெரிக்க மக்கள் சார்பாக இலங்கைக்கு வென்டிலேட்டர்களை வழங்குவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆர்வமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா – இலங்கைக்கிடையிலான நட்புறவும் ஒத்துழைப்பும…
-
- 1 reply
- 408 views
-
-
சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரியது இலங்கை! by : Benitlas தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இலங்கை அரசாங்கம் அவசர நிதி உதவி கோரியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் கெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் கோரிக்கை தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மேலதிக நிதி உதவியினை பெற்றுக் கொள்ளும் வகையில் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://athavannews.com/சர்வதேச-நாணய-நிதியத்திட-2/
-
- 1 reply
- 420 views
-
-
கொழும்பிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தலைமையிலான குழுவினரால் மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு கொழும்பிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் மக்களின் குறைநிறைகளை நேரடியாகச் சென்று மனோகணேசன் கேட்டறிந்து கொண்டார். அந்தவகையில், இதுவரை 9 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாட்டை ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஜனனம் அமைப்பின் தலைவருமான கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி மேற்கொண்டதுடன் மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார். இந்த நிவாரணப் பணியில் முன்னண…
-
- 4 replies
- 770 views
-
-
’முஸ்லிம்கள் மீதான பாரபட்சத்தைக் கண்டிக்கிறேன்’ முஸ்லிம் சமூகத்தின் மீதான இனவாத பாரபட்சத்தைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன், கொரொனா வைரஸ் தொற்றால் உயிரிழந்ததாக கூறி, இஸ்லாமிய பெண்னொருவரின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்காக வேதனையடைவதாகவும் தெரிவித்தார். இதுத் தொடர்பில் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள மனோ, “கொரொனாவினால் மரணிக்காத, கொழும்பு முகத்துவாரத்தை சேர்ந்த ஒரு இஸ்லாமிய இலங்கை தாயின் உடல், முறை தவறி தகனம் செய்யப்பட்டமைக்காக ஒரு இலங்கையனாக வேதனையடைகிறேன். …
-
- 1 reply
- 919 views
-
-
சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டதை விட, அதிகமாக பல பில்லியன் ரூபாய்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் கடனாக பெற்றுள்ளமை ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டின் இறுதி நான்கு மாதங்களில் மாத்திரம் 12 ஆயிரம் கோடிகளை அரசு கடனாகப் பெற்றுள்ளதாக, இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை வெளிக்காட்டும் வகையில், தலைநகரை மையமாகக் கொண்டு செயற்படும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளி விவரங்களின் ஊடாக தெரியவந்துள்ளது. கடந்த ஒக்டோபரில் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட கணக்கறிக்கைக்கு அமைய, ஜனவரி-ஏப்ரல் காலத்திற்காக பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை 721 பில்லியன் ரூபாய் மாத்திரமே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வெரைட் ரிசர்ச்சின் அறிக்கைக்கு அமைய, இலங்கை அரசு, உள்நா…
-
- 1 reply
- 323 views
-
-
அனைத்து தனியார் நிறுவனங்களும் தமது நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க இணக்கம்! by : Benitlas அனைத்து தனியார் நிறுவனங்களும் தமது நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. திறன் விருத்தி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பணியிடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசேட செயலணி மற்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அத்துடன், தனியார் துறையின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் போது கொரோனா தடுப்பு முறைமைகளை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட…
-
- 0 replies
- 417 views
-
-
’பந்துல ஒரு கோமாளி’ புலம் பெயர் தமிழர்களின் அழுத்தத்தாலேயே ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அலரி மாளிகையில் நடைபெற்றக் கலந்துரையாடலைப் புறக்கணித்தாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் மறுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பில் நடைபெற்றக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துக்கொள்வதை புலம் பெயர் தமிழ் அமைப்புக்களால் தடுத்து நிறுத்த முடியவில்லையே. ஆனால் எதிர்க்கட்சிகளை நிறுத்திவிட்டனரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுத் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மன…
-
- 0 replies
- 880 views
-
-
11ஆம் திகதி ஊரடங்கு தளர்வு: மட்டக்களப்பு நிலைமை குறித்து ஆராய கூடியது கொரோனா செயலணி! by : Litharsan நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் வரும் 11ஆம் திகதி நீக்கப்பட்டு, நாடு வழமைக்குத் திரும்பவுள்ள நிலையில் மட்டக்களப்பு நிலைமை தொடர்பாக ஆராயும் விசேட கொரோனா செயலணிக் கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தலைவருமான கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்தா, இராணுவ, பொலிஸ் உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு போதனா வ…
-
- 0 replies
- 785 views
-
-
உக்ரேனிலிருந்து ஆறு பொறியியலாளர்கள் நாட்டிற்கு வருகை உக்ரேன் விமான சேவை பொறியியலாளர்கள் 6 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். உக்ரேன் – கியெவ் நகரிலிருந்து உக்ரேன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் அதிகாலை 4.00 மணியளவில் குறித்த ஆறு பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கை விமான சேவைக்குரிய விமானங்களின் திருத்தப் பணிகளுக்காகவே குறித்த ஆறு பேரும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக உக்ரேன் செல்ல முடியாதிருந்த அந்நாட்டுப் பிஜைகள் 116 பேர், குறித்த விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. http://athavannews.com/உக்ரேனிலிருந்து-ஆறு-பொறி/ …
-
- 1 reply
- 518 views
-
-
வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தல்! நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் உணவகங்களில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் மற்றும் பொதுமக்களுக்கான ஆலோசனைகள் தொடர்பாக வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தற்போது மிகவும் ஆபத்தான கொரோனா தொற்றுநோய் பரவி வருவதனால் உணவகங்களில் உணவு உண்ணும் போது பின்வரும் நடைமுறைகளை அவதானமாகக் கடைப்பிடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 1) இயலுமானவரை உணவினை வாங்கிச் சென்று உண்ணுங்கள். 2) உணவகத்தின் உள்ளே இருவருக்கு இடையி…
-
- 0 replies
- 310 views
-
-
ருமேனிய ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த ஏழு இலங்கையர்களிற்கு கொரோனா – இலங்கையர்கள் பணிநீக்கம்! ருமேனியாவின் ஆடைதொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த இலங்கையர்களில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்த 44 இலங்கையர்களையும் நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த அனைவரும் வேலைக்கு சமூகமளிக்காமை காரணமாகவே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாகவே குறித்த இலங்கையர்கள் வேலைக்கு செல்ல மறுப்பு தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை ருமேனிய மக்களிற்…
-
- 0 replies
- 360 views
-
-
10 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கொடுத்து 3 போத்தல்களில் தேயிலை சாயம் வாங்கிய நபர்..! யாழ்.நகரில் நடமாடும் மோசடி பேர்வழிகள்! மக்களே அவதானம்.. யாழ்.நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் 10 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கொடுத்து 3 போத்தல்களில் தேயிலை சாயம் வாங்கிய சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றிருப்பதாக வர்த்தகர்கள் கூறியிருக்கின்றனர். நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு வந்த ஒருவர் தன்னிடம் போத்தல் சாரயம் உள்ளதாகவும் போத்தல் ஒன்றுக்கு 3500 ரூபாய் வீதம் 10,500 ரூபாய் பணம் தந்தால் அந்த 3 சாராய போத்தல்களையும் தருவதாக கூறியிருக்கின்றார். இதனையடுத்து ஜிம்மா பள்ளிவாசல் வீதிக்கு வர்த்தக நிலைய பணியாளரை அழைத்த மர்ம நபர் 10500 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண…
-
- 6 replies
- 1.8k views
-
-
நெருக்கடி நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு- தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறித்து விமல்! by : Litharsan கொரோனா வைரஸ் பரவலின் நெருக்கடியான நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தமை ஏற்றுக்கொள்ள கூடிய செயற்பாடு என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமரிடம் எந்தவித கோரிக்கைகளையும் சமர்ப்பிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில…
-
- 4 replies
- 687 views
-
-
புதிய அரசியல் கலாசாரம் ஒன்றின் ஊடாகவே வடக்கின் கல்வியை கட்டி எழுப்பலாம்; கணேஷ் வேலாயுதம் Bharati May 7, 2020 புதிய அரசியல் கலாசாரம் ஒன்றின் ஊடாகவே வடக்கின் கல்வியை கட்டி எழுப்பலாம்; கணேஷ் வேலாயுதம்2020-05-06T16:56:57+00:00உள்ளூர் பானகமுவ நிருபர் இம்முறை வெளியான க. பொ. த சாதாரணப் பரீட்சைப் பெறு பேறுகளின் அடிப்படையில் வட மாகாணம் தொடர்ந்து ஒன்பதாவது நிலையில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. புதிய அரசியல் கலாசாரம் ஒன்றின் மூலமாகவே இதை மாற்றியமைக்க முடியும். தொடர்ந்து எதிர்ப்புவாத அரசியலை மட்டும் பேசிக் கொண்டிப்;பதில் எவ்விதமான அர்த்தமுமில்லை என்று சிவன் அறக்கட்டளையின் இயக்குனரும், ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளரு…
-
- 6 replies
- 692 views
-
-
யாழ்மாவட்டத்தில் மக்களை பழிவாங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்...? உனக்கு சமுர்த்தி கொடுப்பனவு தரமுடியாது செய்கிறதை செய்...!அசிங்கமான முறையில் நடந்து கொள்ளும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் . தொடர்ந்து உரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், யாழ்மாவட்டத்தில் அன்றாடம் கூலி வேலை செய்யும் சமுர்த்தி பயனாளிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து சமுர்த்தி பயனாளிகளும் நன்மை தரக்கூடிய வகையில் உதவித்திட்டங்கள் கிடைக்கின்றனவா? என்பதையும்,சமுர்த்தி அதிகாரிகள் என்ன செய்கின்றனர் என்பதையும் சமுர்த்தி பயனாளிகள் என்ன கூறுகிறார்கள் ...?
-
- 9 replies
- 945 views
-
-
பரிசோதனை நடவடிக்கைகளுக்கு ஊடகங்களும் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும்- யாழ்.பல்கலை மருத்துவ பீடாதிபதி by : Litharsan யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளை தொடர்ந்து தடையின்றி முன்னெடுப்பதற்கு ஊடகங்களும் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் தெரிவிக்கையில், “எல்லாருக்கும் தெரியும் கடந்த மாதம் 2ஆம் திகதியில் இருந்து யாழ். மருத்துவ பீடம் கொரோனா வைரஸ் பரிசோதனையை தனியாக செய்துவந்தது. ஆனால், இரண்டு தினங்களுக்கு முன்னர்…
-
- 1 reply
- 405 views
-
-
கொவிட் 19 நோய்த்தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முடியுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்காக புதிய பொருளாதார மாதிரியொன்றை தயாரிக்கும் பொறுப்பு பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது. செயலணி விடயத் துறைகளுக்கு ஏற்ப பகுதியாக பிரிந்து இலக்குமயப்பட்ட புதிய பொருளாதார திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மே 11 முதல் மீண்டும் வழமைநிலைக்கு கொண்டுவரப்படும் இயல்பு வாழ்க்கையுடன் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பும் நோக்குடன் ஜனாதிபதி செயலணியுடன் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலின் போதே ஜ…
-
- 10 replies
- 843 views
-
-
யாழில் திருட்டு கும்பல் சிக்கியது; பெண்கள் இருவரும் அடங்குவர் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தன் வீதி ஊரெழு பகுதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் உள்ளவர்களை தாக்கி காயப்படுத்தி வீட்டில் இருந்த பணம், நகை, சைக்கிள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இரண்டு பெண்கள் உள்ளடங்கலாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருட்டில் ஈடுபடுவதற்கு பயன்படுத்திய சைக்கிள், வாள் திருட்டுப்போன கோடரி, சைக்கிள், திருடிய நகைகளை அடைவு வைத்ததற்கான அடைவு சிட்டைகள் மற்றும் விற்பனை செய்ததற்கான சிட்டைகள் என்பவற்றினை பொலி…
-
- 0 replies
- 553 views
-
-
ஆயுத குழுவை பயன்படுத்தி வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள், செல்வந்தர்கள்களிடம் பணம் பறித்த போலீசார் ... அதிர்ச்சி தகவல் வெளியானது .நெல்லியடியை சேர்ந்த வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள், செல்வந்தர்கள் போன்றவர்களை பணத்துக்காக மின்னல் ஆயுத குழுவை பயன்படுத்தி நெல்லியடி பொலிஸ் நிலையத்தின் தமிழ் பேசும் நான்கு பொலிஸார் திட்டமிட்டு இலக்கு வைத்து வத்திருக் இன்றனர் என்று அதிர்ச்சி தகவல் வெளி யாகி உள்ளது.கடந்த வாரம் கைது செய்யப்பட்ட மின்னல் ஆயுத குழு முக்கியஸ்தர் ஒருவர் சாட்சியாக மாறி காங்கேசன் துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் முன்னிலையில் வாக்குமூலம் வழங்கிய போது இவ்வாறான விடயங்களை வெளிப்படுத்தினார்.இவர் இவ்வாக்குமூலத்தில் முக்கியமாக தெரிவித்து உள்ளவை வருமாறுநெல்லியடியில் உள்ள பண பலம்…
-
- 1 reply
- 585 views
-
-
ஏறாவூர் தமிழ் வித்தியாலயம் கோட்டத்தில் முதலிடம் க.பொ.த (சா/த).பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்திற்குட்பட்ட ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளது. அப் பாடசாலையைச் சேர்ந்த ராதாகிருஸ்ணன் கேமதருண் எனும் மாணவன் 9-ஏ சித்தி பெற்று பாடசாலைக்கும் அப்பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக க.பொ.த. (சா/தர) பரீட்சையில் 9-ஏ சித்தி பெற்ற சந்தர்ப்பமும் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. 9-ஏ சித்தி பெற்று பாடாசாலைக்கும் பாடாசாலைச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்த இம் மாணவனை பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகம் என்போர் தமது வெகு…
-
- 25 replies
- 3.1k views
-