ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143667 topics in this forum
-
(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்களின் மூளையாக செயற்பட்டதாக நம்பப்படும்,ப யங்கரவாதி சஹ்ரான் ஹசீமின் கும்பல், புத்தளம் - வனாத்துவில்லுவில் பகுதிகளில், பெற்றோரை இழந்த அநாதரவான பிள்ளைகளுக்கு ஆயுத பயிற்சி அளித்து, அவர்களை மனித வெடிகுண்டுகளாக சமூகமயப்படுத்த திட்டமிட்டிருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரனான சாய்ந்தமருதில் தற்கொலை செய்துகொண்ட பயங்கரவாதி ரில்வான், வனாத்துவில்லு பகுதியில் உள்ள அரபுக் கல்லூரிக்கு சென்று ஆயுதம் மற்றும் கைக்குண்டு பயன்பாடு குறித்து பயிற்சி கொடுத்து, அந்நிய மதத்தவர்களை கொலை செய்ய தமக்கு போதனை செய்ததாக, அந்த அரபுக் கல்லூரி ம…
-
- 6 replies
- 722 views
- 1 follower
-
-
கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த அரசு, நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையையும் மறைக்க முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா குற்றஞ்சாட்டியுள்ளார். எவ்வாறெனினும் உண்மை வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தேர்தலை இலக்காக கொண்டு விமான நிலையங்களை மூடுவதற்கும் பரிசோதனைகளை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் தயக்கம் காட்டியதாக நேற்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் வைத்து அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முதலாவது நோயாளர் மார்ச் மாதம் 10ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார். இன்றுடன் 53 நாட்கள். 28 ஆயிரத்து 728 பிசிஆர் பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. நா…
-
- 0 replies
- 433 views
-
-
மார்ச் 2ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தைக் கலைத்ததன் பின்னரான 6ஆம் திகதியன்று, இடைக்காலக் கணக்கறிக்கை மூலம் 12.29 பில்லியன் ரூபாயை அரசாங்கம் இரகசியமான முறையில் நிறைவேற்றியுள்ளதென, மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியது. கொழும்பில் நேற்று (06) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அரச நிதி நிலைவரம் தொடர்பான அறிக்கையில் இதனைக் காணமுடிவதாகக் கூறினார். இடைக்காலக் கணக்கறிக்கை ஊடாக அரச செலவீனங்களுக்கான நிதி ஒதுக்கப்படுமாயின், அது தொடர்பில் நாடளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமெனத் தெரிவித்த அவர், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், 12.29 பில்லியன் …
-
- 0 replies
- 481 views
-
-
உள்ளூர் சிகை அலங்கார மற்றும் அழகு நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதிப்பதும் அதற்கான வழிகாட்டுதல்கள் குறித்தும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க அனைத்து மாகாண மற்றும் மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார். இந்த வழிகாட்டுதல்களானது நாட்டின் அனைத்து சிகை அலங்கார மற்றும் அழகு நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் பதில் பணிப்பாளர் ஜெனரல் லக்ஷ்மன் கமலத் கூறினார். அந்த உத்தரவுகளின் படி சிகை அலங்கார ஊழியர்கள் முடிவெட்டுவதற்கு மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள். தாடி மற்றும் மீசை வெட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் உதடுகள் மற்றும் வாயுடன் தொடர்புகளை தடுக்கும் நோக்கில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டு…
-
- 0 replies
- 593 views
-
-
(ஆர்.யசி) வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது பண்ணிப்பிற்கு அமைய 306 கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எனினும் தமிழ் அரசியல் கைதிகள் எவரையும் விடுவிக்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். வெசாக் தினமான நாளை கைதிகள் விடுதலையாகவுள்ள நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கும் வகையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் 223 கைதிகளை விடுதலை செய்யவும் அதேபோல் விசேட கவனம் செலுத்தப்பட்ட…
-
- 1 reply
- 619 views
-
-
வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 228 கைதிகள் விடுதலை! வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 306 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கும் வகையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் 228 கைதிகளை விடுதலை செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது. எனினும் இவர்களின் பாரிய குற்றங்களில் ஈடுபட்ட, போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட எவரும் விடுவிக்கப்படவில்லை. போதைப்பொருள் கடத்தல்களை …
-
- 1 reply
- 457 views
-
-
தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது! தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிராக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் இந்தியாவின் புதுடெல்லியில் பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே குறித்த இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து 11 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிராக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். http://athavannews.c…
-
- 0 replies
- 394 views
-
-
பத்திரிக்கை செய்தியினை முகநூலில் விமர்சனம் செய்தவரை காவல்துறையினர் அழைத்து எச்சரிக்கை May 6, 2020 பத்திரிக்கை செய்தியினை முகநூலில் விமர்சனம் செய்தவரை யாழ்ப்பாண காவல்துறையினர் அழைத்து எச்சரித்து விடுவித்துள்ளனர். யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் , நேற்றைய தினம் வெளியான தலைப்பு செய்தி தொடர்பில், ஒருவர் செய்திக்கும் , தலைப்புக்கும் தொடர்பில்லை என பத்திரிகையை விமர்சித்து முகநூலில் பதிவொன்றினை எழுதி இருந்தார். குறித்த முகநூல் பதிவுக்கு பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து கருத்திட்டிருந்தனர். இந்நிலையில் , பதிவை எழுதிய நபருக்கு எதிராக யாழ்பாண தலைமை காவல்நிலையத்தில் பத்திரிகை நிறுவனத்தால் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டி…
-
- 0 replies
- 479 views
-
-
ஸ்ரீ சபாரத்தினத்தின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தல் May 6, 2020 தமிழ் ஈழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன் கிழமை மாலை மன்னாரில் இடம் பெற்றது. மன்னாரில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ)கட்சியின் தலைமை அலுவலகத்தில் டெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும், மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.ரி.மோகன்றாஜ் தலைமையில் மாலை 3.30 மணியளவில் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நினை வேந்தல் நிகழ்வின் போது தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஸ்ரீ சபாரத்தினத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து தீபம் ஏற்றி அஞ்சலி செ…
-
- 0 replies
- 495 views
-
-
நவாலி சிலோன் மிசன் இடுகாடு விஷமிகளினால் சேதமாக்கப்பட்டது! யாழ்ப்பாணம் – வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட நவாலி பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் சில நினைவுத் தூபிகள் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன் குறித்த விடையம் தொடர்பாக ஆராய்ந்திருந்துள்ளார். குறித்த விடையம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/நவாலி-சிலோன்-மிசன்-இ…
-
- 19 replies
- 1.7k views
-
-
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இரு நாட்கள் பரிசோதனைகள் இடம்பெறாமைக்கு காரணம் ஆய்வு கூடத்தில் சில சரிப்படுத்தல்களை செய்ய வேண்டிய தேவைகள் இருந்தன. தற்போது அவை சரி செய்யப்பட்டு இன்றிலிருந்து பரிசோதனைகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஒரு சிலர் பிழையான உள்நோக்கங்களுடன் வந்ததிகளை பரப்ப கூடும். அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக வடக்கு மாகாணத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திலும்…
-
- 3 replies
- 516 views
-
-
கிளிநொச்சி கல்வி வலயத்தினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளில் தமிழ் புறக்கணிப்பு May 5, 2020 கிளிநொச்சி கல்வி வலயத்தினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர்களினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது கல்வி வலயத்தினால் , ஆசிரியர்களுக்கு , ஆசிரிய அடையாள அட்டைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு , சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகள் காணப்படுகின்றன. அது தொடர்பில் ஆசிரியர்கள் , வலய அதிகாரிகளிடம் கேட்ட போது, இது இராணுவம் காவல்துறையினருக்கு காட்டவே பயன்படும். வேறு தேவைகளுக்கு உங்களுக்கு ஆசிரிய அடையாள அட்டை தேவையில்லை தானே. இராணுவம் காவல்துறையினருக்…
-
- 2 replies
- 573 views
-
-
கைது செய்யப்பட்ட ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தடுப்புக்காவலில் வைத்துள்ளமை சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில், இன்று (06) உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள அவரை சந்திப்பதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்குமாறும் குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட 06 பேர் இந்த மனுவி…
-
- 1 reply
- 463 views
-
-
(இராஜதுரை ஹஷான்) சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட வேளையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு இராணுவத்திற்கு எதிராக தாக்குதலை தொடுக்கவில்லை. அச் செயற்பாடு ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தை சீர் செய்ய அரசாங்கத்திற்கு அது ஒரு சாதகமான சூழலாக காணப்பட்டது. ஆனால் தற்போதைய எதிர்க்கட்சியினரது செயற்பாடு அவ்வாறு கிடையாது. நெருக்கடி நிலையிலும் அரசியல் இலாபம் தேடிக்கொள்கின்றார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்…
-
- 0 replies
- 436 views
-
-
மகிந்த ராஜபக்சவின் அழைப்பை TNA ஏற்றுக்கொண்டது… May 2, 2020 பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அழைப்பை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டு்ளதாக, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என, யாழ்ப்பாணம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் தலைவர்களும் கூட்டமை…
-
- 48 replies
- 3.2k views
-
-
1.2 டிரில்லியன் ரூபாய்க்கு அரசாங்கம் ஒப்புதல் – நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நேரத்தில் எவ்வாறு சாத்தியம் என்கின்றது ஜே.வி.பி. by : Jeyachandran Vithushan நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நேரத்தில் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி 1.2 டிரில்லியன் ரூபாய் கணக்கீட்டு அறிக்கைக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது என்று ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அரச நிதி தொடர்பான அறிக்கையில் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன என்றார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது நிதி எவ்…
-
- 2 replies
- 451 views
-
-
ஶ்ரீலங்கன் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம் சர்வதேச ரீதியில் சரக்கு விமான சேவைகளை மீள ஆரம்பிக்க ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது. சர்வதேச ரீதியில் பெரும்பாலான சரக்கு விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களை சர்வதேச ரீதியில் சந்தைப்படுத்துவதற்காக வாரம் ஒன்றுக்கு 27 சரக்கு விமான சேவைகளை மேற்கொள்ள ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி முதல் இந்த செயற்றிட்டத்தின் கீழ் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சரக்கு விமான போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்படவுள்ளது. லண்டன், சீனாவின் பீஜிங், அவுஸ்ரேலியாவின் மெல்பர்ன்…
-
- 1 reply
- 641 views
-
-
வடக்கில் சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்குரிய அறிவுறுத்தல்கள் by : Jeyachandran Vithushan சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்குரிய அறிவுறுத்தல்களை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் விடுத்துள்ளார். நீண்டநாட்களாக அமுலில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகைஅலங்கரிப்பு நிலையங்களை (சலூன்களை) அணுகவுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும் என குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக பின்வரும் நடைமுறைகளை தங்களது சிகை அலங்கரிப்பு நிலையங்களில் அமுல்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். …
-
- 0 replies
- 458 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) நாடளாவிய ரீதியில் 313 படையினர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்றிரவு 7.00 மணி வரையிலான காலப்பகுதியில் பாதிக்கப்பட்டிருந்ததாக சுகாதார துறையினர் தெரிவித்தனர். 302 கடற்படை வீரர்கள், 10 இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு விமானப்படை வீரர் என 313 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கேசரியிடம் தெரிவித்தார். இதில் அடையாளம் காணப்பட்டுள்ள 302 கடற்படை வீரர்களும் வெலிசறை, ரங்கல கடற்படை முகாம்களை சேர்ந்தவர்கள் எனவும் வெலிசறை கடற்படை முகாமின் 277 பேருக்கும் ரங்கல கடற்படை முகாமின் 25 பேருக்கும் இந்த கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்புப்…
-
- 3 replies
- 579 views
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் வீடு ஒன்றிற்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த சம்பவம் யாழ்ப்பாணம் பிரப்பங்குளம் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஈ.பி.டி.பி உறுப்பினர் இரா. செல்வவடிவேல், தனது மகனுடன் சென்று குறித்த வீட்டிற்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுள்ளார். அந்த வீட்டிலுள்ள கோழிப்பண்ணையை அகற்றாவிடின் ஆவா குழுவைக் கொண்டு அழிக்க வேண்டி வரும் எனவும் எச்சரித்துள்ள மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல், பண்ணை உரிமையாளரைத் தாக்கியும் உள்ளார். இந்தச் சம்ப…
-
- 20 replies
- 2.1k views
-
-
பழைய நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுக்காவிட்டால், அவருக்கு மறக்க முடியாத பாடத்தை கற்பிக்க போவதாக தம்பல அமிர தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி ஜனாதிபதி ஜனநாயகமாக செயற்பட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், ஜனாதிபதிக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும் எனவும் தம்பர அமில தேரர் கூறியுள்ளார். இணையத்தளம் வழியாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையில் அந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடுகளை சட்டரீதியாக மேற்கொள்ள உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள…
-
- 5 replies
- 659 views
-
-
அரசியல் வெறுமையிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளவே கூட்டமைப்பினர் நாடகம் போடுகின்றனர்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அரசியல் வெறுமையில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளவே கூட்டமைப்பினர் நாடகம் போடுகின்றனர் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் 1173 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அவர்கள் இன்று தமது போராட்ட தளத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு பதாகைகளை தாங்கியிருந்ததுடன் ஊடக சந்திப்பையும் நடத்தியிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த சங்கத்தின் இணைப்பாளர் கோ.ராஜ்குமார் இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ் ஊடக சந்திப்பில் அவர் மேலும் கருத்து …
-
- 1 reply
- 626 views
-
-
கிளிநொச்சியில் அப்பிள் செய்கை சாத்தியமானது – மாதிரி அப்பிள் கன்றிலிருந்து அறுவடை செய்துள்ளார் ஒரு விவசாயி by : Jeyachandran Vithushan குளிர்வலய கன்றுகளை வெப்ப வலயங்களில் உருவாக்குவதில்விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை காலமும் வெளிநாடுகளிலிருந்து அப்பிள்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்துள்ளன. கொரோனோ அச்சுறுத்தல் நிறை்த இக்காலகட்டத்தில் இறக்குமதி பொருட்களும், உற்பத்திகளும் நாட்டில் அரிதாகவே கிடைக்கின்றது. எனினும் இறக்குமதி செய்யப்படும் உற்பத்திகளை இலங்கையிலும் மேற்கொள்ள முடியும் என்பதை பல விவசாயிகள் நிடூபித்துள்ளனர். 1960ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் முதல் முதலாக அப்பிள் பயிரிடப்பட…
-
- 18 replies
- 1.6k views
-
-
முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெற்ற தமிழினப்படுகொலைகளின் 11 ம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் எதிர்வரும் 18..05.2020 அன்று நடைபெறும். என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு தெரிவித்துள்ளது கொவிட் 19(covid 19 )பரவல் காரணமாக தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாட்டு நடைமுறைகள் , சட்டங்கள் என்பவற்றிற்கு மதிப்பளித்து அவற்றைக் கடைப்பிடித்தபடி இந்நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது உள்ளூர் வளங்களை ஒன்றுதிரட்டிப் பயன்படுத்துவதன் மூலம் இந் நினைவேந்தல் எளிமையாகவும் உரியமுறைப்படியும் மேற்கொள்ளப்படும். இது தொடர்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு நிதி திரட்டல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாது. இந்நினைவ…
-
- 1 reply
- 479 views
-
-
கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களின் வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லை என கூறி குறித்த இலங்கையர்கள் குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர். இலங்கை மாணவர்கள் உட்பட 208 பேர் பிரித்தானியாவில் இருந்து இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். குறித்த குழுவில் பலர் பணம் செலுத்தும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு சென்றுள்ளனர். நீர்கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல்களில் …
-
- 4 replies
- 672 views
-