Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு மாநாகர ஆளுநர், வடக்கு மாகாண செயலாளர் மற்றும் யாழ் மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கு பெயரிட்டு எழுதிய கடிதம் ஒன்றை வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இன்று (08) வெளியிட்டுள்ளார். அதில் இருப்பது வருமாறு, கடந்த மாத ஆரம்பத்திலிருந்து கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அமுல் செய்யப்படும் ஊரடங்குச் சட்டம் மற்றும் சுய தனிமைக் கட்டுப்பாடுகள் என்பனவற்றை எதிர்கொள்வதில் வடமாகாண மக்கள், பொதுவாகவும் யாழ். மாவட்ட மக்கள் குறிப்பாகவும் முகங்கொடுக்கின்ற சில பிரச்சினைகள் தொடர்பாக இந்தக் கடிதம் தங்களுக்கு எழுதப்படுகிறது. மாவட்ட ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் மக்கள் பிரதிநிதிகளாகப் பேசக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில் மாவட்ட ரீதியாகவும், மாகாண ரீதிய…

  2. இலங்கையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு உள்ளிட்ட சுகாதார மற்றும் பாதுகாப்புப் படையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபையும் பல்வேறு மக்கள் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில் நேற்று முன் தினம் பொது மக்கள் கூடிய நிரந்தர சந்தைகள், தற்காலிக சந்தைகள் உள்ளிட்ட பல்பொருள் விற்பனை நிலையங்கள், பொலிஸ் வளாகம், ஏ.ரி.எம். பணப்பரிமாற்று இயந்திர வளாகங்கள் ஆகிய இடங்களில் நேற்று (07) மாநகர சுகாதாரப் பிரிவினர் தொற்று நீக்கும் பணிகளை முன்னெடுத்தனர். மேற்படித் தொற்று நீக்கும் பணிகளில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கிய…

  3. பொருளாதார மத்திய நிலையங்கள் சிலவற்றை மூடுவதற்கு நடவடிக்கை முக்கிய பொருளாதார மத்திய நிலையங்கள் சிலவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை விசேட பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதால், நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) உற்பத்திகளை எடுத்து வந்த விவசாயிகள் மீண்டும் அவற்றை எடுத்துச்செல்ல நேரிட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தை மூடுமாறு அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவ்வாறு செய்ய முடியாது என தம்புத்தேகம விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கம் குறிப்பிட்டது. இதேவேளை, கெப்பெட்டிப்பொல விசேட பொருளாதார மத்திய நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. http://athavannews.com/பொருளாதார…

  4. யாழில் ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவு! சுகாதார அதிகாரிகள் குற்றச்சாட்டு Report us Vethu 5 hours ago கொரோனா நோயாளியான சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வட மாகாண சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. அரியாலையில் சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 300 பேர் கலந்து கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 200 பேர் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படாமல் மறைந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர…

  5. யாழ்ப்பாணம் - அராலி பிரதேசத்தில் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்ட இளைஞனை உரிய நேரத்தில் வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு பொதுச் சுகாதார பரிசோதகர் ஒத்துழைக்காமையினால் குறித்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் கொட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 30 வயதான நாகேந்திரன் புஸ்பராசா என்பவரே உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இளைஞன் 1 1/2 வருடங்களுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த நிலையில், தேக ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார். எனினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிளினிக் சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திடீர் உடல்நலக்…

  6. நாம் வாழ்வதா இல்லையா என்பதை தீர்மானிப்பது இந்த வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளைக் முன்னெடுக்கும் முறையிலேயே உள்ளது. எங்களது அவதானம், எங்களது அர்பணிப்பு, ஒழுக்கம் என்பவற்றின் அடிப்படையில் தான் இவ்வாறான பாரிய நோய் தொற்றில் இருந்து நாங்கள் வாழ்வதா, சாவதா என்பது தீர்மானிக்கப்படுகின்றது என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய விசேட உரையில் தெரிவித்திருக்கின்றார். இன்றிரவு 7.45 மணியளவில் தொலைக்காட்சிகள் மூலமாக பிரதமர் நிகழ்த்திய உரையில் முழு விபரம் வருமாறு: நான் உங்கள் மத்தியில் உரையாற்றுவது கொரோனா தொற்றுக்கு எதிராக எமது அரசாங்கமமு மக்களும் பாரிய யுத்தம் போன்ற பாரிய அச்சுறுத்தல் ஒன்றை எதிர்நோக்கியிருக்கும் சந்தர்பத்திலேயே. உலகம் முழுவதும் 200க்கும் அதி…

  7. (நா.தனுஜா) தற்போதைய நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை மழுங்கடித்து, ஏகாதிபத்தியவாதத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது. இத்தருணத்தில் அரசியல்சார் நலன்களை அடைய முயற்சிப்பது வரவேற்கத்தக்கதல்ல மாறாக மக்களின் பிரச்சினைகளுக்கான உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியிருக்கிறார். கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டுமக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் இன்று செவ்வாய்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தற்போது நாட்டின் அனைத…

    • 2 replies
    • 632 views
  8. யாழ் பொன்னாலை மக்கள் மீது அரச அதிகாரி அடாவடி! யாரும் பார்க்க மாட்டீர்களா?? பொன்னாலை J/170 சமுர்த்தி அலுவலகத்தில் இன்று காலை 8.30 மணிதொடக்கம் சமுர்த்தி பயனாளிகள் தவம் கிடந்தனர். தங்களை வருமாறு கூறிய சமுர்த்தி உத்தியோகத்தர் 11.00 மணிவரை வரவில்லை என மக்கள் கூறுகின்றனர். ஏனைய இடங்களில் வீடுகளுக்கு சென்று சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படுகின்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவர் அலுவலகத்தி்ற்கு மக்களை அழைத்து கொடுப்பனவை வழங்கியிருக்கி்றார். மக்கள் குழுமியிருப்பது தொடர்பாக சமுர்த்தி உத்தியோகத்தரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்தார். அலுவலகத்திற்கு வந்து மக்களுக்கு விடயத்தைக் கூறி அவர்களை வீடுகளுக்கு அனுப்புங்கள்.…

    • 2 replies
    • 666 views
  9. யாழ். மாவட்டத்தில் பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை – யாழ். வர்த்தக சங்கத் தலைவர் யாழ்ப்பாணத்தில் அநேகமான மக்கள் பொருட்களை ஒரு மாதம் அளவுக்கு வீடுகளில் வாங்கி வைத்துள்ளனர். இந்நிலையில் வீடுகளில் தற்போதுள்ள பொருட்கள் அப்படியே இருக்க அன்றாடம் தேவையான பொருட்களை மாத்திரம் வாங்கினால் இந்த செயற்கையான தட்டுப்பாடு ஏற்படாது.மற்றும்படி, யாழ். மாவட்டத்தில் பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என்பதுடன், தற்போதுள்ள அவசரகால நிலைமை சீரடைந்தால் வர்த்தகர்களுக்கு ஒரு மாதத்திற்கு வியாபாரம் நடைபெறாத அளவுக்கு மக்கள் பொருட்களை சேமித்துள்ளர்கள்” என யாழ். மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் ஜனக்குமார் தெரிவித்துள்ளார். யாழில் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவி…

    • 1 reply
    • 288 views
  10. எமது ஒரே எதிரி கொரோனா மட்டுமே - இதனை தோற்கடித்தே தீருவோம் : பிரதமர் - சமகளம் நாம் வாழ்வதா இல்லையா என்பதை தீர்மானிப்பது இந்த வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளைக் முன்னெடுக்கும் முறையிலேயே உள்ளது. எங்களது அவதானம், எங்களது அர்பணிப்பு ஒழுக்கம் என்பவற்றின் அடிப்படையில் தான் இவ்வாறான பாரிய நோய் தொற்றில் இருந்து நாங்கள் வாழ்வதா சாவதா என்பது தீர்மானிக்கப்படுகின்றது. அதனால் இந்த நோய் தொற்று உலகிற்கு தெரிய வந்த சந்தர்ப்பத்தில் இருந்து ஜனாதிபதியூடன்அரசாங்கமும் மக்களின் வாழ்வு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி செயற்பட்டுள்ளது. இந்த நிலையை புரிந்து கொண்டதால் தான் சீனாவில் வூஹான் நகரில் சிக்கியிருந்த இலங்கையர்களை உலகின் ஏனைய நாடுகளுக்கு முன்னர் விமானம் ஒன்றை அனுப்பி எமது நாட்டுக்கு அழைத்து …

  11. அற்ப விடயங்களுக்காக வீடுகளை விட்டு வௌியேறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் – இராணுவத் தளபதி by : Benitlas ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நோய்த் தடுப்பிற்கான ஊரடங்க…

  12. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கர்ப்பவதிகள் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோது சிகிச்சை பெற நேரிட்டால் வீடுகளில் இருந்துவிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்காலத்தில் அம்பியூலன்ஸ் வண்டி சேவைக்கு (1990) அல்லது தங்கள் பிரிவுகளில் உள்ள குடும்ப நல உத்தியோகத்தகர்களுடன் தொடர்பு கொண்டு வைத்தியசாலைக்குச் செல்வதற்கான உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார துறையினனர் அறிவித்துள்ளனர். கிளிநொச்சியில் ஊரடங்கு வேளையில் சிறுவர்கள், பிரசவத்தின் பின்னரான தாய்மார்கள் மற்றும் கர்ப்பவதிகள் எவருக்காவது காய்ச்சல் அல்லது வேறு நோய் நிலை ஏற்பட்டால் உடனடியாகத் தத்தமது பகுதி பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்களை தொடர்புகொண்டு அரச வைத்தியசாலைகளுக்குச் செல்வதற்கான போக்குவரவு உதவிக…

    • 0 replies
    • 262 views
  13. உலக நாடுகள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இத்தருணத்தில், எவ்வித மத, அரசியல் பேதங்களும் இன்றி, நிவாரண வேலைத்திட்டகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பிரதமர் நாட்டு மக்களுக்காக இன்று (07) ஆற்றிய விசேட உரையில் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளர் காணப்பட்டவுடன், நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை மூட நடவடிக்கை எடுப்பட்டது. கொரோனா தொற்றுக்கு எதிராக அரசாங்கமும் மக்களும் யுத்தம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். உலகில் 200 க்கு மேற்பட்ட நாடுகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்நாடுகளில் பலியானவர்களை எவ்வாறு மயானங்களுக்க…

  14. தொற்றாத நோய்கள் உள்ளிட்ட சுகாதார சேவைகளுக்கு தேவையான பல்வேறு மருந்துப் பொருள்கள் அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் இந்தியாவிலிருந்து நாளை (07) நாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளன என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்துக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கலந்துரையாடலொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இச்சந்திப்புப் பற்றி ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன: கொரோனா வைரஸ் நாட்…

    • 10 replies
    • 1.4k views
  15. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – கைது செய்யப்பட்ட 63 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது… April 7, 2020 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 63 பேரையும் எதிர்வரும் 20 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் இன்று (06) உத்தரவிட்டார். கடந்த 21.04. 2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் காத்தான்குடியை சேர்ந்த 64 பேர் கைது செய்யப்பட…

  16. இலங்கையில் கொரோனா வைரஸால் 6 ஆவது உயிரிழப்பு! by : Jeyachandran Vithushan இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 6 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 80 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/இலங்கையில்-6-ஆவது-நோயாளிய/

    • 0 replies
    • 364 views
  17. சமூர்த்தி பயனாளிகளுக்கு எவ்வித பேதமும் இன்றி கொடுப்பனவு வழங்கப்படும் – டலஸ்! by : Benitlas கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் சமூர்த்தி பயனாளிகளுக்கு எவ்வித பேதமும் இன்றி கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அனைத்து சமூர்த்தி பயனாளிகளுக்கும் நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படவில்லை. எந்த வேறுபாடும் இன்றி இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட்டதை எனது அரசியல் வாழ்வில் …

    • 0 replies
    • 255 views
  18. கொரோனா பரிசோதனை உபகரணங்களை சுகாதார துறையினருக்கு வழங்க டக்ளஸ் தீர்மானம் April 7, 2020 கொரோனா தொற்று நோயை பரிசோதிக்கும் பி.சி.ஆர் உபகரணங்களை சுகாதார துறையினருக்கு வழங்குவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ளார். கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் கீழ் உள்ள நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை நிறுவகம், நக்டா எனப்படும் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றிடம் உள்ள பி.சி.ஆர் உபகரணங்களை கொரோனா தொற்று நோயை பரிசோதிப்பதற்கு சுகாதார துறையினருக்கு உடனடியாக வழங்குமாறு குறித்த இரண்டு நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவான…

  19. வவுனியா மாவட்டத்தில் வீட்டுத்தோட்ட அபிவிருத்திக்கான மரக்கறி விதைகள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.விஜியகுமார் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அவர் நேற்று கருத்துத் தெரிவிக்கையில், “தற்போது வவுனியா மாவட்டத்தில் வீட்டுத்தோட்ட அபிவிருத்திக்கான மரக்கறி விதைகள் மற்றும் மரக்கறி நாற்றுக்கள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் சுகாதார திணைக்களம் மற்றும் விவசாய திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வவுனியா மாவட்டத்தினை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் வவுனியா நகருக்கு வருகைதந்து இலுப்பையடியில் அமைந்துள்ள கோவில்குளம் கமநல சேவை நிலையத்தில் 20 ரூபாயினைச் செலுத்தி குறித்த நாற்றுக்களைப் ப…

    • 2 replies
    • 481 views
  20. பிரித்தானியாவில் வசித்து வரும் இரண்டு இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உயிரிந்த நபர்கள் 72 மற்றும் 62 வயதுடையவர்கள் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தற்போது வரை வெளிநாடுகளில் இலங்கையர்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன. அவுஸ்ரேலியாவில் ஒருவரும், இங்கிலாந்தில் இரண்டு பேரும், சுவிட்சர்லாந்தில் ஒருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/uk/80/140716?ref=imp-news

    • 0 replies
    • 544 views
  21. மன்னார் மாவட்ட மக்கள் முன்வைத்த பல்வேறு முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் விசேட கூட்டம் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இந்த விசேட கூட்டம் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், பலநோக்குக் கூட்டுறவு சங்கத்தின் பிரதிநிதிகள், சதோச நிறுவனத்தின் பிரதேச முகாமையாளர்கள், உணவுப் பொருட்களை வெளிமாவட்டங்களில் இருந்துகொண்டு வரும் தனியார் நிறுவனங்கள், பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். மன்னார் மாவட்ட மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்துவரும் நிலையில் இதனைச் சாட்டாக வைத்து விலை மோசடி செய்தல், …

    • 0 replies
    • 280 views
  22. கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நிலையை அவசரகால நிலைமையாக கருதவில்லை – ஜனாதிபதி கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை அவசரகால நிலைமையாக கருதவில்லை என்றும் அவசரகால சட்டமொன்றை உருவாக்குவது தவிர்ந்து வேறு எந்தவொரு நிலைமையிலும் நாடாளுமன்றத்தை கூட்டவும் முடியாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பிரதான அமைச்சர்கள் மற்றும் சஜித் பிரேமதாச தரப்பினருடன் இடையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் பேசிய அவர், வெகு விரைவில் தேர்தலை நடத்துவதே தனது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,”நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் நாட்டில் அவசர சட்டமொன்றை உருவாக்கிக்கொள்வது தவிர்ந்து வேறு …

    • 1 reply
    • 353 views
  23. தமிழர்களின் இன்றைய ஆகக்குறைந்த வாழ்வாதாரமும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அறிவித்த சலுகைகள் முழுமையாக மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கொவிட்-19 என்னும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தில் உலகமெல்லாம் சிக்குண்டு கிடக்கிறது. இதற்கு இலங்கையும் விதிவிலக்கின்றி உள்ளது. தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டு நோயின் தாக்கம் தொடர்பான அச்சமும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில் அன்றாடம் உழைத்து வாழ்ந்த மக்களும், பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் உழை…

  24. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய ஆவா என பொலிஸாரால் கூறப்படும் வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் வினோதன் உள்ளிட்ட பலர் தப்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் மல்லாகம் சேர்ச் லேனில் உள்ள வீடொன்றில் இன்று மாலை அவரது நண்பர்களால் இணைந்து நடத்தப்பட்டது. இது தொடர்பில் தகவல் கிடைத்து அந்த வீட்டை இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போதே 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் அனைவரும் தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு நிறுத்தி வைக்கப்ப…

    • 2 replies
    • 894 views
  25. கொரோனா அச்சம் காரணமாக சிறுகுற்றக் கைதிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளான அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு அவசர கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில், “நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் போது செல் துகல்களை உடலில் சுமந்தவாறு தற்போது பல அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர். அத்துடன் தீர்ப்பு வழங்கப்பட்ட அரசியல் கைதிகளும் உள்ளனர். இவர்கள் தற்போது மருத்துவ வசதிகள் இல்லாமல் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக சிறைச்சாலைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.