ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143667 topics in this forum
-
கொத்தனி முறையில் கொரோனா பரவுவது குறித்து தற்போது எதிர்வு கூற முடியாது – அனில் ஜாசிங்க கொத்தனி முறையில் கொரோனா பரவுவது குறித்து தற்போது எதிர்வு கூற முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடற்படையினரில் தொற்றுக்குள்ளானவர்களை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளன. கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்கள், அவர்களது குடும்பத்தினர் , பிரதேசவாசிகள் எதிர்காலத்தில் தொற்றுக்குள்ளாகக் கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இவர்கள் தொடர்பில் சுகாதாரசேவை சபை மற்றும் புலனாய்வுப்பிரிவினர் மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் கொத்தனி முறையில் தீவிரமாகப் பரவலடையாது என்ற…
-
- 0 replies
- 372 views
-
-
ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம் – அரசாங்கத்திற்கு உத்தரவாதம் வழங்கினார் ரணில்! ஆட்சியைக் கவிழ்க்கவோ, அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளவோ மாட்டோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் தொற்றினால் நாடு பேரழிவை சந்தித்துள்ள நிலையில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து அவதானம் செலுத்தி அதனை அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் முன்னெடுக்கக் கூடிய நிலைமையை ஏற்படுத்த முடியும். நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெறுகின்ற சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்க…
-
- 0 replies
- 415 views
-
-
விடுமுறையில் உள்ள அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி விடுமுறையில் உள்ள அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்றுவரும் மற்றும் தேசிய விளையாட்டுக் குழாத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது. இந்நிலையில், விடுமுறையில் உள்ள அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 234 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வீடுகளிலிருந்து நினைவு கூருங்கள்: பேராயர் அழைப்பு Bharati April 17, 2020 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வீடுகளிலிருந்து நினைவு கூருங்கள்: பேராயர் அழைப்பு2020-04-17T06:58:25+00:00உள்ளூர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை எதிர் வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணியளவில் வீடுகளில் இருந்தவாறு நினைவு கூருமாறு அனைத்து மக்களுக்கும் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். இந்த நேரத்தில் பெளத்த, கிறிஸ்தவ மற்றும் பிற சமய ஆலயங்களில் மணியை ஒலிப்பதன் மூலம் நினைவு கூரலில் பங்கேற்குமாறும் அவர் கேட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். …
-
- 49 replies
- 3.9k views
-
-
சுவிஸ் பாஸ்டரை இனி இலங்கைத் தீவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. இன அழிப்பு அரசு அதைத் தாமாகச் செய்ய வாய்ப்பில்லை. தமிழ் சிவில் அமைப்புக்களும்/ தமிழ் மக்களும் இதை ஒரு கோரிக்கையாக சிறீலங்கா அரசிடம் முன் வைக்க வேண்டும். அவர் ஒரு நோய்க்காவியாக செயற்பட்டது மட்டுமல்ல தனது மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளின் வழி நின்று மருத்துவ விஞ்ஞானத்திற்கு/ பகுத்தறிவுக்கு ஒப்பாத அழைப்புக்களினூடாக தொடர் மனிதப் பேரழிவுக்கு அறைகூவல் விடுக்கிறார். இது மதப் பிரச்சினை அல்ல – மனிதம் தொடர்பானது. இன அழிப்பிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள போராடும் இனத்தின் வாழ்வு மீது தொடுக்கப்படும் போர் இது. கொரோனாவால் உலகமே பேரபாயத்தில் இருக்கும் சூழலில் இவரது உள் நுழைவு பெரும் மனித…
-
- 95 replies
- 9.7k views
- 1 follower
-
-
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி சகரான் என்று நாமெல்லாம் நம்பிக்கொண்டிருக்கின்ற நேரத்தில், அந்த தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி என்று மற்றொருவரின் பெயர் தற்பொழுது அடிபட ஆரம்பித்துள்ளது. யார் அவர்.. அவரது பின்னணி என்ன.. அவருக்கு யார் யாருடனெல்லாம் தொடர்பு இருக்கின்றது.. அவருடைய செயற்திட்டங்களுக்கும் இலங்கையின் முக்கியமான ஒரு தமிழ் அரசியல்வாதிக்கும் இடையிலான சம்பந்தம் என்ன… இது போன்ற விடயங்களை பார்ப்பதற்கு முன்பாக முக்கியமான ஒன்றைத் தெரிவித்தாகவேண்டும். இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகமும் கூட, முஸ்லிம் தீவிரவாத ஆயுதக் குழுக்கள் தமது சமூகத்தின் பெயரைப் பாவித்து தமது சமூகத்தினுள் வளர்வதை, செயற்படுவதை துஞ்சற விரும்பவில்லை. கடந்த வருடம் இலங்கையில் க…
-
- 5 replies
- 861 views
-
-
மகேஸ்வரி விஜயனந்தன் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹஸீமினால், புத்தளம் - வனாத்தவில்லு பகுதியில் பாடசாலையொன்று நடத்தப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன, குறித்த பாடசாலையில் பயங்கரவாதம் தொடர்பான போதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என்றும் தெரிவித்தார். இந்தப் பாடசாலையில் ஆயுதப் பயிற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மூலமே இது குறித்துத் தெரியவந்ததென்றும் அவர் தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவ…
-
- 1 reply
- 632 views
-
-
பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றப்படுவதற்கு எதிராக முல்லைத்தீவில் எதிர்ப்பு நடவடிக்கைகள்.மேற்கொள்ளப்படுகிறது அந்தவகையில் முத்தையன்கட்டு இடதுகரைப் பாடசாலையின் பெற்றோர் இன்று மாலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான நிலையங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு சில பாடசாலைகளின் தளபாடங்கள் மற்றும் ஆவணங்களும் சீரமைக்கப்பட்டும் அகற்றப்பட்டும் உள்ளன. தனிமைப்படுத்தல் நிலையங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பாடசாலைகளாக முத்தையன்கட்டு இடதுவரை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை , முத்தையன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயம், அளம்பில் றோமன் கத்தோலிக்க …
-
- 9 replies
- 1.3k views
-
-
(நா.தனுஜா) நாட்டின் பொருளாதாரம் கடந்த வருடம் தளம்பல் நிலையை எதிர்கொண்டதாகவும் இதற்கு உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் முக்கிய காரணமென்றும் மத்திய வங்கி நாணயச்சபையின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி நாணயச்சபையின் 70 ஆவது ஆண்டறிக்கை நேற்று பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் மத்திய வங்கி ஆளுநர் டபிள்யூ.டி.லக்ஷ்மனால் கையளிக்கப்பட்டது. அவ் வறிக்கையில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன: கடந்த ஆண்டு நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் மற்றும் அதன் வளர்ச்சியில் ஒரு மந்தநிலை காணப்பட்டாலும்இ நுண்பாகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பெரும்பாகப் பொருளாதாரத்தில் ஓரளவேனும் சமநிலையைப் மேணு…
-
- 3 replies
- 414 views
-
-
கோவிட் 19: அரசாங்கத்திடம் பகிரங்கமாக எட்டுக் கேள்விகள் April 29, 2020 தமிழ் சிவில் சமூக அமையம் Tamil Civil Society Forum 29.04.2020 கோவிட் 19: அரசாங்கத்திடம் பகிரங்கமாக எட்டுக் கேள்விகள். ஒரு பொது சுகாதார அபாயக் காலப் பகுதியில் அவ்வபாயத்தை எதிர்கொள்வது தொடர்பில் பொதுத் தொடர்பாடல் (public communication) வெளிப்படையாகவும் (transparent) உண்மையாகவும் (accurate) இருத்தல் வேண்டும். பேரிடர் காலங்களில் அரசாங்கம் சொல்வதையும் செய்வதையும் குடிமக்களும் சிவில் சமூகமும் வெறுமனே நுகர்ந்து கொண்டு இருக்க முடியாது. சனநாயகம் என்பது பொது வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பின்பற்றப்பட வேண்டும். கேள்வி கேட்பது பேரிடர் காலங்களில் சுமையாகக் கருத்தப்படக்…
-
- 1 reply
- 399 views
-
-
நீர் நிரப்பப்பட்ட வாளியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை உன்னிச்சைப் பகுதியைச் சேர்ந்த 2 வயதுடைய இந்திரகுமார் றுஸ்மிதன் என்ற ஆண் குழந்தை, நீர் நிரப்பப்பட்ட வாளியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம், நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உயிரிழந்து குழந்தையும் அதே வயதுடைய அயல்வீட்டுக் குழந்தையும் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, முற்றத்தில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் மேற்படி குழந்தை விழுந்துள்ளது. குழந்தையின் அழு குரலைக் கேட்ட தாய் ஓடிவந்து பார்த்தபோது, குழந்தை நீருக்குள் கிடப்பதைக் கண்டெடுத்து, மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது, குழந்தை உயிரிழ…
-
- 2 replies
- 589 views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் சிறைவாசம் அனுபவிக்கும் முருகனின் தந்தையார் வைரவப்பிள்ளை வெற்றிவேலு (வயது 83) நேற்று அதிகாலை மரணமடைந்த நிலையில் இறுதிக்கிரியைகள் இன்று காலை நடைபெற்றது. சொந்த இடமான கிளிநொச்சி பளை இத்தாவிலுள்ள அவரின் வீட்டில் உடலம் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் இறுதிக்கிரியைகள் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பூதவுடல் அரசர் கேணி புன்னையடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. https://www.ibctamil.com/srilanka/80/142112?ref=rightsidebar
-
- 3 replies
- 551 views
-
-
(செ.தேன்மொழி) கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் அரசாங்கம் 5000 ரூபாவை நிவரணமாக வழங்கி வருகின்றது. இதனை 10 ஆயிரம் அல்லது 15 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல, வைரஸ் பரவலை அரசாங்கம் தேர்தலில் வெற்றிக் கொள்வதற்கு பயன்படுத்த முயற்சிப்பதாகவும் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் அலுவகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது, கொவிட் - 19 வைரஸ் பரவல் தொடர்பில் அரசாங்கம் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைக்கமைய செயற்படுவதாக தோன்றவில்லை. தேசிய பாதுகாப்பு என்றுக் கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அதனை உறு…
-
- 0 replies
- 317 views
-
-
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசம் மிகுந்த ஆபத்தான கட்டத்தை இன்று எதிர்நோக்கியுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகளவில் பல நாடுகளும் கொரோனா நோய் அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறையினர் அந்நோயைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கணிசமாகப் போராடி வருகின்றனர். அதற்கு அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களும் சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கமைய ஆதரவு தெரிவித்து வருகின்றது. சிறிலங்காவில் மட்டுமே சுகாதாரத்துறையினரைவிட இராணுவத்துக்கு முதன்மையளிக்கும் செயற்பாடு நடைபெற்று வ…
-
- 1 reply
- 507 views
-
-
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் – சுகாதார அமைச்சரை தாக்கும் ஐ.தே.க. by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸுற்கு எதிரான போராட்டத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தோல்வியுற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. நாட்டில், குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை அதிகரித்துள்ள என்ற சமீபத்திய அறிக்கைகளால் பெரிதும் கவலையடைவதாகவும் ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது. ஏப்ரல் 18 ஆம் திகதி, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை அடுத்து அமுலில் இருந்த நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீக்கப்படலாம் என்…
-
- 1 reply
- 543 views
-
-
தனிமைப்படுத்தல் நிலையத்துக்காக யாழில் இடம் தேடும் படையினர் Bharati April 28, 2020 தனிமைப்படுத்தல் நிலையத்துக்காக யாழில் இடம் தேடும் படையினர்2020-04-28T21:05:42+00:00உள்ளூர் கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் இராணுவத்தினருக்கான தனிமைப்படுத்தல் நிலையத்தை அமைப்பதற்கான முயற்சி வெற்றிபெறாததையடுத்து, வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லுரியை தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தோல்வியடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்களுடைய எதிர்ப்புடன், கல்லூரி நிர்வாகமும், யாழ். மாவட்ட ஆயரும் இதற்காக அனுமதியை வழங்க முடியாது எனத் தெரிவித்துவிட்ட நிலையிலேயே இந்த முயற்சியும் கைவிடப்பட்டது. வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லுரியில் த…
-
- 3 replies
- 403 views
-
-
கொரோனா தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டவர்கள் மற்றும் பரப்பியவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் சட்டத்தை மீறியமை தொடர்பில் எச்சரிக்கை மாத்திரம் செய்து, பொலிஸார் சில குழுக்களுக்கு எதிராக பாரபட்சத்துடன் செயற்பட்டமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தவறான தகவல்கள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை வெளியிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் நபர்கள் கைதுசெய்யப்படும் அதேவேளை, அரச அதிகாரியை விமர்சித்தமைக்கு எதிராக பொலிஸார் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கை கருத்துச் சுதந்திரத்தை பாதித்துள்ளதாக பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிற்கு, ஸ்ரீலங்கா மன…
-
- 1 reply
- 299 views
-
-
தனிமைப்படுத்தல் முகாம்களாக கிழக்கில் 11 பாடசாலைகள் சகா கிழக்கு மாகாணத்தில் 11 பாடசாலைகள், கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களாகின்றன. கல்முனைப் பிராந்தியத்தில் 04 பாடசாலைகளும் திருமலைப் பிராந்தியத்தில் 04 பாடசாலைகளும் அம்பாறைப் பிராந்தியத்தில் 03 பாடசாலைகளும் இராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. இத்தகவலை, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் ஊர்ஜிதம் செய்தார். கல்முனைப் பிராந்தியத்தில், கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை, நாவிதன்வெளி வேப்பையடி கலைமகள் வித்தியாலயம், அக்கரைப…
-
- 1 reply
- 353 views
-
-
அனைத்து முகாம்களையும் ஆய்வு செய்ய நடவடிக்கை அனைத்து படை முகாம்களையும் ஆய்வு செய்து முகாம்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு விசேட ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது. முகாம்களில் உள்ள சுகாதார நடைமுறைகள் குறித்து அதிக கவனம் செலுத்துவதாக செயலணியின் பிரதானி மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார். அத்துடன், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகள், சரியாக செயற்படுத்தப்படுகின்றதாக என்று ஆராயப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். சிறு முகாம்களின் பிரதானிகளை அழைத்து, சு…
-
- 0 replies
- 314 views
-
-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்ட 143 பி.சி.ஆர் பரிசோனையில் இதுவரை 4 பேருக்கு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி காலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார். மட்டு. பேதனா வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், “உலகலவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் என பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் சுகாதார அமைச்சு முன் ஆயத்தங்கள் செய்துள்ளது இதற்கமைய கொரோனா முகாமைத்துவம் செய்யும் வைத்தியசாலையாக எமது வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டது. இதற்கமைய வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் இரண்டாவது மாடியில் கொரோனா தொற்று நோய் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதே கட்…
-
- 0 replies
- 383 views
-
-
தேர்தலை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதற்கான இயலுமை இல்லை – மஹிந்த தேசப்பிரிய! by : Benitlas கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுத் தேர்தலை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதற்கான இயலுமை இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று(புதன்கிழமை) வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாட வேண்டியது அவ…
-
- 1 reply
- 342 views
-
-
வடக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்படவில்லை – சுகாதார அமைச்சு by : Jeyachandran Vithushan வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலுமே இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய 21 மாவடங்களிலும் கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று நண்பகல் வரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளாக 622 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்…
-
- 0 replies
- 269 views
-
-
இராணுவத்திற்கும் கொரோனா வைரஸ் தாக்கம் – நேற்று பாதிக்கப்பட்டோர் விபரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 31 பேர் நேற்று (செவ்வாய்க்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்பான தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார். அந்தவகையில் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களில் 21 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் மேலும் 6 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஏனைய 04 பேரும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கடற்படையினர்களில் பெரும்பாலோர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் மெதிரிகிரிய, அரநாயக்க, பொல்பி…
-
- 2 replies
- 899 views
-
-
அராலித்துறை இராணுவ முகாமில் தனிமை மையம் என மக்கள் எதிர்ப்பு! யாழ்ப்பாணம் – அராலித்துறையில் உள்ள இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு அப்பகுதியில் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அராலித்துறையில் அமைந்துள்ள இராணுவ முகாமில் நேற்று (28) தொடக்கம் குறித்த இராணுவ முகாம் தவிர்ந்த வெளியாட்கள் தொடர்ச்சியாக அங்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்து அயல் கிராம மக்கள் இன்று (29) காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது இராணுவ முகாமில் கொரோனா சந்தேக நபர்களை தனிமைப்படுத்தினால் அது தமக்கு ஆபத்தானதாக அமையும் எனவும் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் கவலை வெளியிட்டுள்ளனர். மேலும் அருகில் உள்ள தாம் …
-
- 0 replies
- 295 views
-
-
சக்கர நாற்காலியில் இருத்திய இன அழிப்புப் போர்: சாதித்து காட்டிய மாணவிகள் Last updated Apr 28, 2020 நடந்தது முடிந்த 2019 கல்வி சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகிய நிலையில் கல்விக்கு ஊனம் ஒருபோதும் தடையில்லை என்பதனை மாணவிகள் நிரூபித்துக்காட்டியுள்ளனர். இதில் உயிரிழை அமைப்பின் பயனாளிகள் பிள்ளைகள் 8 பேர் சித்தியடைந்துள்ளனர். இதில் விஷேசமாக எமது உயிரிழை அமைப்பின் பயனாளிகள் இருவர் தங்களது சக்கர நாற்காலிகளுடன் சென்று தங்களது கல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை என்பதனை நிருபித்துள்ளனர். 1.தன்னீருற்று மேற்கு முள்ளியவளையை சேர்ந்த கெங்காதரன் பவதாரனி இவர் கடந்த 2009ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தின் போது தனது முள்ளந்தண்டு பகுதியில் காயமடைந்து அன்றில் இ…
-
- 16 replies
- 1.7k views
-