Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜெனீவா ஆலோசனை நாட்டின் இறைமைக்கான சவாலாகும் – ஜனாதிபதி! ஜெனீவா ஆலோசனை நாட்டின் இறைமைக்கான சவாலாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘ஜெனீவா யோசனை நாட்டின் இறைமைக்கு மற்றும் அபிமானத்திற்கு சவாலாகும். தமது பாதுகாப்புப் படையினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக ஏற்றுக்கொண்ட வரலாற்றில் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இணை அனுசணையிலிருந்து விலகியதற்கான காரணம் இதுவாகும். நாம் இப்பிரச்சினையின் ஆரம்பத்திற்கு செல்ல வேண்டும். உமா மகேஷ்வரன் தமது அரசியல் செயற்பாட்டை ஆரம்பித்தது பொருளாதார பின்ன…

    • 1 reply
    • 826 views
  2. யாழ்.மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியல் இதோ.! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புசார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வெளியாகியுள்ளது. கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த நால்வர், மற்றும் இரண்டு பெண்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. புதுமுகங்களாக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள எவருமே வெல்லக்கூடிய மக்கள் செல்வாக்கைப் பெற்றவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஆபிரகாம் சுமந்திரன் குறிப்பிட்டதுபோல் தோற்பதற்காக நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள். வேட்பாளர் பட்டியல் வருமாறு: 1. மாவை.சேனாதிராஜா 2. ஆபிரகாம் சுமந்திரன் 3. ஈஸ்வரபாதம் சரவணபவான் 4. சிவாஞானம் சி…

    • 13 replies
    • 1.9k views
  3. ’தேர்தலுக்குப் பின் புதிய அரசமைப்பு’ நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பின்னர், நாட்டுக்கு உகந்த புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அரசமைப்பின் 19ஆவது திருத்தம், நாட்டுக்குள் பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது என்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது இடம்பெறும் பிரச்சினைகளும், இந்தப் 19ஆவது திருத்தம் காரணமாகவே ஏற்பட்டுள்ளதென்றும், அவர் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று (09), ஊடக நிறுவனங்களின் பிரதானிகளைச் சந்தித்துக் கருத்துரைக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்…

    • 0 replies
    • 292 views
  4. அரசாங்கத்தின் மீது குற்றம் இல்லை என்றால் சர்வதேச நீதிமன்றம் செல்லப் பயப்படுவது ஏன்? – மணிவண்ணன் by : Litharsan இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம் இல்லை என்றால், எவரும் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லையென்றால் சர்வதேச நீதிமன்றத்தின் முன் தோன்றுவதற்கு ஏன் பயப்படுகின்றீர்கள் என அரசாங்கத்திடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் மற்றும் படையினரை சர்வேதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துங்கள் எனவும் அதன் பின்னர்தா…

    • 0 replies
    • 379 views
  5. ஐ.நா.பேரவை உறுப்பு நாடுகளிடம் மாவை வேண்டுகோள்! இலங்கையில் இறுதிப் போரின்போது நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் இலங்கையை முன்நிறுத்தி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதற்கு ஐ.நா. பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தூதரகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி அடங்கிய குழுவினருக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான இந்த சந்திப்பு, இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்…

  6. அமைச்சர்களின் படங்கள் மற்றும் செய்திகள் பாட புத்தகத்திலிருந்து நீக்கம்! கால மாற்றங்களுக்கு பொருத்தமான வகையில் முறையான கல்விக்காக தேசிய கொள்கையொன்றை உடனடியாக உருவாக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அல்லது கல்வி அமைச்சர் மற்றும் நடைமுறையில் உள்ள அரசாங்கம் மாறும்போது மாற்றம் அடையாத நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக உருவாக்கப்படும் கல்வி முறைமையாக அது அமைய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்வி அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ‘கல்விக் கொள்கை’ உருவாக்கும்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்ற…

  7. புலிகள் ஜனநாயகப் படுகொலைகள் மூலமே தனி இயக்கமானார்கள்: எம்.ஏ.சுமத்திரன் ஜனநாயக வழியில் செயல்படும் நாம் புலிகளைப்போல் ஜனநாயகப் படுகொலை செய்யமுடியாது.அவர்கள் ஜனநாயகப் படுகொலை செய்தே தனி இயக்கமாக உருவெடுத்தார்கள் என தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். நேற்று வீரசிங்கம் மண்டபத்தில் “ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்” எனும் தொனிப்பொருளில் சிவில் சமூக பிரதிநிதிகளின் கூட்டமைப்பின் மீதான விமர்சனக் கருத்துக்களுக்கு பதில் உரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எமது கட்சி யுத்த காலத்தை கடந்து வந்த கட்சி. இது யுத்த காலத்திற்கு முன்னரும் இருந்தது யுத்த காலத்திற்குப் பின்னரும் இருக்கும் கட்சி. இது யுத…

  8. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தமது கட்சியில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வை காணாமல் சர்வதேச பிரச்சினைகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. பத்தரமுல்லை - நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை குறிப்பிட்டுள்ளார். தினமும் ஐக்கிய தேசிய கட்சியின் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். எனினும் அவருக்கு அவருடைய கட்சியிலுள்ள முரண்பாடுகளை தீர்க்க முடியாமல் போயுள்ளது. யானை தவிர்ந்த ஏனைய சின்னத்தின் கீழ் போட்டியிடப் போவதில்லை என …

    • 0 replies
    • 278 views
  9. ரஷ்யாவின் இரண்டு கடற்படைக் கப்பல்கள் மூன்று நாள் உத்தியோகபூர்வ நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளன. நேற்றையதினம் (04) Yaroslav Mudry, Victor Konetsky எனும் கப்பல்களே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. குறித்த கப்பல்கள் இரண்டும் இலங்கை கடற்படையினரின் சம்பிரதாயபூர்வ மரியாதையுடன் இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து Victor Vasilyevich Kostriukov , Mikchail Aleksandrovich இரண்டு ரஷ்ய கப்பல்களின் கடற்படைத் தளபதிகளும், மேற்கு கடற்படை கட்டளையின் கொமாண்டர் ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போது இ…

    • 2 replies
    • 384 views
  10. முதலாவது தனிமைப்படுத்தும் மத்திய நிலையம் உருவாக்கப்பட்டது! ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலை முதலாவது தனிமைப்படுத்தும் மத்திய நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. ஈரான், தென் கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்காக இந்த பிரிவு பயன்படுத்தப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான தேசிய செயற்றிட்டம் பாதுகாப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலை, தனிமைப்படுத்தி வைப்பதற்கான சிறந்த இடம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார். இங்கு கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தங்கவைக்கப்படமாட்டார்கள் எனவும், க…

    • 1 reply
    • 364 views
  11. இனம் , மதம் மற்றும் மொழி அல்லது வாழும் பிரதேசத்தை கவனிக்காது சமுதாயத்தில் அனைவருக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமாயின் எவ்வித பேதங்களும் நாட்டில் ஏற்படாது. முன்வைத்துள்ள மக்கள் மயப்பட்ட பொருளாதார மாதிரியில்  இவ்விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டு  தயாரிக்கப்பட்டுள்ளது. என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்துறை சார்ந்தவர்களுடன் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம் பெற்ற  கலந்துரையாடலின் போது  ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பொருளாதார முன்னேற்றத்தின் பிரதிபலன்களை மக்கள் அனைவருக்கும் விசேடமாக வறிய மக்களுக்கு கிடைக்கப்பெறும்…

    • 1 reply
    • 1k views
  12. கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலும் இந்த வரைதல் செயற்பாடுகளை தன்னார்வலர்களாக இளைஞர்கள் முன்வந்து செய்தனர்.அது போல வடக்கிலும் அதற்கான அடித்தளம் போடப்படுகிறது.. யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் இந்த நடவடிக்கைகளை தமிழ் இளைஞர்கள் தாமாகவே முன் வந்து சுவரோவியங்கள் வரைவதற்கு சுவர்களை தூய்மைப்படுத்துதல் செயற்பாடுகளை செய்து வரைதலில் ஆர்வமுள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கவும் தயாராக உள்ளனர். இந்த முயற்சி நிறைய திறமையாளர்களை ஊக்குவிப்பதோடு சமூக பொறுப்புணர்வுள்ள இளைஞர் சமுதாயத்தையும் உருவாக்குகிறது.. அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க ஆர்வமுள்ளவர்கள் நீங்கள் செல்லும் வழியிலேயே இப்படியான நிகழ்வுகளை காணும் போது அவர்களோடு பேசி உங்கள் ஆதரவுகளை வழங்குதல் சிறப்பானது. …

    • 9 replies
    • 1.4k views
  13. யானைச் சின்னத்தில் ஓரணியில் களமிறங்குவதற்கு சஜித், ரணில் ஆலோசனை: ராஜித by : Dhackshala ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் யானைச் சின்னத்தில் ஒரே அணியில் போட்டியிடுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவது குறித்து ஆராயவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், “ஐ.தே.க வின் தலைவர் விக்ரமசிங்க…

    • 1 reply
    • 264 views
  14. வவுனியா மாமடு அக்ரபோதி பாடசாலையில் திடீர் சுகவீனமுற்ற 60 வரையிலான மணவர்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இன்றையதினம் பாடசாலைக்கு சமூகமளித்திருந்த 5 மற்றும் 8 ஆம் தர மாணவர்களின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இதனை அவதானித்த பாடசாலை நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரையும் உடனடியாக மாமடு பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒரு தொகுதியினர் மாமடு பிரதேச வைத்தியசாலையிலும் 26 வரையிலான மாணவர்கள் வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றார்கள். மாணவர்களின் நிலமை மோசமாக இல்லை என்றும், காலையிலும், பிற்பகலிலும் வந்த மாணவர்கள் சிகிச்சை பெற்று வைத…

    • 0 replies
    • 234 views
  15. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச ரீதியான அறிக்கை தயாரிக்கும் பூர்வாங்க விசாரணைகளே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ,இதுவரை சர்வதேச விசாரணை இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே சர்வதேச விசாரணை நடைபெற்றுள்ளதாகவோ அல்லது விசாரணை முடிவடைந்துவிட்டதாகவோ யாராவது கூறுவார்களாயின் அது தவறு என்றும் அவ்வாறான சர்வதேச விசாரணை ,இனிமேல்தான் நடாத்தப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் ,இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே ,இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் ,இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெற்று முடிந்து விட்டதாக தமிழ் தேசிய…

  16. (ஆர்.விதுஷா) ஐக்கிய தேசியக்கட்சிக்குள் பிளவு  ஏற்படவில்லை. மாறாக மக்கள் விரும்பிய புரட்சியே இடம் பெற்றுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா சிங்கள பௌத்தனாகவும் அனைத்து இன மதத்தவர்களையும் நேசிக்க; கூடிய ஒரு நல்லவராகவும் இருக்க கூடியவரின் கைகளுக்கு அதிகாரம் செல்வதே நாட்டு மக்களின் விருப்பாக  இருந்தது எனவும் அந்த மாற்றமே இப்பொழுது கட்சிக்குள் இடம் பெற்றுள்ளதாகவும்  குறிப்பிட்டார். நுகேகொடையில்  ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினுடைய வாசஸ்தலத்தில் இன்று இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது , ஐக்கிய …

    • 0 replies
    • 188 views
  17. இலங்கை சம்பந்தமாக ஐ.நா சபை வெளியிட்ட சில அறிக்கைகளையே ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட குற்றங்கள் சம்பந்தமாக நடாத்தப்பட்ட சர்வதேச, சுயாதீன விசாரணைகளின் அறிக்கைகள் என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார் சுமந்திரன். இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது. இன்று (05) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளனர். இலங்கை சம்பந்தமான விசேட சர்வதேச குற்றவியல் மன்றமொன்றைக் கோராமலும் அல்லது இலங்கையை சர்வதேச குற்றவியல் மன்றத்திற்குப் பாரப்படுத்துமாறு கோராமலும், ஐக்கிய நாடுகளாலும் மற்றையோராலும் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கைகளை வைத்து ஊடக அறிக்கைகளின் படி சுமந்திரன் சர்வதேச விசாரணையானது முடிவடைந்துவிட்டது என்று தமிழர்களை நம்பவைக்கப் ப…

  18. மஹர பள்ளிவாசலை ஒப்படைக்க உத்தரவு மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் அமைந்­துள்ள ஜும்ஆப் பள்­ளி­வாசலை, மீளவும் உரிய பள்ளிவாசல் நிர்வாக சபையினரிடம் ஒப்படைக்குமாறு, அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா, சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த பள்ளிவாசல் விவ­கா­ரம் தொடர்பில், முன்னாள் நாடாளு­மன்ற உறுப்­பி­ர் பைஸர் முஸ்­த­பா தலை­மையிலான குழுவினர், கடந்த வாரம் நீதி அமைச்சில், நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலில், மஹர சிறைச்­சாலை வளாக ப…

    • 0 replies
    • 299 views
  19. இலங்கையில் இறுதிப்போரின் போது நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய சர்வதேச நீதிமன்றில் இலங்கையை முன்நிறுத்தி விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐ.நா. பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் இன்று  ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச் சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் இறுதிப்போரின் போது நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகள் தொ…

    • 0 replies
    • 288 views
  20. ’600 ரூபாய்க்கு குறைவாக எந்தவொரு மரகறிகளும் இல்லை’ மரக்கறிகளின் விலை அதிகரித்து செல்வதன் காரணமாக பொதுமக்கள் கடும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். கிலோகிராம் ஒன்று 600 ரூபாய்க்கு குறைவாக எந்தவொரு மரகறிகளும் தற்போது இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Ads by AdStudio …

  21. விமான நிலையத்துக்கு வருவோர்க்கு முக்கிய அறிவித்தல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு பயணிகளுடன் வரும் நபர்களுக்கு நாளை (06) காலை முதல் அனுமதி வழங்கப்படும். அதன்படி, விமான பயணிகள் உள்நுழையும் மற்றும் வெளியேறும் வரவேற்பு பகுதிக்கு பயணியுடன் ஒருவர் செல்ல முடியும். இதற்கான அனுமதிசீட்டினை 30 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியும். அதனை வழங்கும் பகுதி நாளை காலை திறக்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பயணிகளுடன் ஏனையோர் வருவது தடைசெய்யப்பட்டிருந்தது. http://www.tamilmirror.l…

    • 0 replies
    • 289 views
  22. தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் – முக்கிய தகவலினை வெளியிட்டார் மஹிந்த தேசப்பிரிய! பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதியில் இருந்து 1000 ரூபாய் சம்பளத்தினை வழங்க முடியுமா என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கருத்து வெளியிட்டுள்ளார். ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளார். ‘பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்படுகிறது. கடந்த அரசாங்க காலத்திலும் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்குமாறு கோரி புறக்கோட்டையிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு வருடங்களில் அதனை வழங்க…

    • 4 replies
    • 515 views
  23. இலங்கை சிறுவர்கள் ஒன்றிணைந்து கின்னஸ் சாதனை சிறுவர்களுக்கான பிரபல சிறுகதை எழுத்தாளர் சிபில் வெத்தசிங்க நாடளாவிய ரீதியில் உள்ள 20,000 சிறுவர்களுடன் ஒன்றிணைந்து கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ´மந்திர பளிங்கு´ என்ற சிறுவர் கதை ஒன்றை எழுதி அவர்கள் இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளனர். சிறுவர்களின் கற்பனைத் திறன், படைப்பாற்றலைப் பயன்படுத்தி எழுத்து, சித்திரம் வரைதல் மற்றும் கவிதை எழுதல் போன்ற திறன்களின் ஊடாக இக்கதை பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. சிறுவர்களின் படைப்பாற்றல், கற்பனைத்திறன் மற்றும் திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த கதை எழுதப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=126460

    • 1 reply
    • 304 views
  24. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகள் – அமைச்சரவையில் ஆலோசனை by : Dhackshala இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய தொழில்நுட்ப கொங்ரிட் பெனல்களினாலான நிரந்தர வீடுகளை நிர்மாணித்தல் தொடர்பாக அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் களைக்கப்பட்டதன் பின்னர் காபாந்து அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக புதிய தொழில்நுட்ப நிலையான குறைந்த செலவு (ஒரு வீட்…

    • 0 replies
    • 318 views
  25. மேரி ஜெமஸ்டிடா - யாழ் மாநகர சபை முதல்வர் சந்திப்பு ஐக்கிய நாடுகளுக்கான அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான விவகார பணிப்பாளர் மேரி ஜெமஸ்டிடா இன்றையதினம் யாழ் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு யாழ் மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது அரசியல் விவகாரங்கள் மற்றும் யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலை குறித்தும் அதிகமாக பேசப்பட்டதாக மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்- http://tamil.adaderana.lk/news.php?nid=126449

    • 0 replies
    • 207 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.