Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இல்லாதவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமூக பொறுப்புடன் உதவுவோம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டான ஊரடங்கு உத்தரவு காரணமாகவும், வர்த்தக, விவசாய, மீன்பிடி மற்றும் உற்பத்தி செயற்பாடுகளின் இடைநிறுத்தம் காரணமாகவும், தொழில் வாய்ப்புக்களை இழந்து இதுவரை நாளாந்த வருமானத்தை நம்பி வாழ்ந்துவந்த பல குடும்பங்கள் மோசமாக பாதிப்படைந்துள்ளன. இன்றும் சில சனசமூக நிலையங்கள் எம்மிடம் உதவி நாடி நின்றன. பொருள்களின் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு காரணமாக வடக்கு கிழக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வ…

    • 8 replies
    • 944 views
  2. சுற்றுலாப் பயணிகளுக்கான ETA உள்ளிட்ட விசா வசதிகள் இடைநிறுத்தம் by : Benitlas நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் ETA உள்ளிட்ட விசா வசதிகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு வரை விசா வசதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பணிப்பாளர் கயன் மிலந்த தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டிற்கு பயணிகள் வருவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு வரை இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் …

    • 1 reply
    • 352 views
  3. ’வடக்கு, கிழக்கு, மத்திய, தென் மாகாணங்களின் சுகாதார நிலைமை முன்னேற்றம்’ கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களை விடவும் வடக்கு, கிழக்கு, மத்திய, தென் மாகாணங்களின் சுகாதார நிலைமை மற்றும் அதனால் ஏற்படும் சமூக பொருளாதார பக்க விளைவுகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமாகவே இருக்கின்றனவென, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கூறினார். இது குறித்து அவர், விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், அதிக அவதானம் தலைநகரம் உட்பட மேற்கு கரையோர பிரதேசங்களில் வாழும் திக்கற்ற மக்கள் மீதே காட்டப்படுவதாக…

    • 0 replies
    • 357 views
  4. மன்னாரில் விசேட அதிரடிப்படையினர், சுகாதாரத் துறையினரின் நடவடிக்கை! by : Litharsan மன்னார் நகர்ப் பகுதிகளில் கிருமி நீக்கும் நடவடிக்கையினை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்தனர். விசேட அதிரடிப்படையினருடன் மன்னார் பொலிஸார், மன்னார் நகர சபை, பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து குறித்த பணியை இன்று (புதன்கிழமை) முன்னெடுத்தனர். விசேட அதிரடிப்படையின் வடமாகாண பொறுப்பதிகாரி லயனல் குணதிலக்கவின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த கிருமி நீக்கும் நடவடிக்கை இடம்பெற்றது. இந்த நடவடிக்கை, வவுனியா விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி டிப்தி கெட்டி ஆராய்ச்சி, மன்னார் விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி மலன் பிகிராடோ மன்னார் மாவட்ட சிரேஸ்…

    • 0 replies
    • 534 views
  5. மட்டக்களப்பில் 1,037 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்: அரசாங்க அதிபரின் முக்கிய அறிவிப்பு! by : Litharsan மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்து 37 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரனா தொற்று தடுக்கு செயலணியின் விசேட கூட்டம் இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் தொற்றுத் தடுக்கு செயலணியின் தலைவருமான கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஊரடங்குச் சட்டம் நாளை காலை தளர்த்தப்படவுள்ள நிலையில் அதன்போ…

    • 0 replies
    • 371 views
  6. கொழும்பில் இருந்து வந்த சிறப்பு அதிரடிப் படைக் குழு: யாழ்.சுகாதாரத் துறையுடன் களத்தில்! யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்தப் பணி மாநகரில் பொதுமக்கள் கூடும் இடங்களில் முன்னேடுக்கப்படுகிறது. சிறப்பு அதிரடிப் படையினரின் கொழும்பிலிருந்து வருகை தந்த அணியினர், மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், யாழ்ப்பாணம் பிரதேச செயலக கிராம சேவையாளர்கள் மற்றும் பொலிஸார் உள்ளிட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். யாழ…

    • 0 replies
    • 364 views
  7. கொரோனா வைரஸ் பரவல் (Covid - 19) காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான உணவுத் தேவையைப் பூர்த்திசெய்யும் பொருட்டு, ஜனனம் Foundation மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. கொழும்பு பிரதேசங்களான தெஹிவளை, வெள்ளவத்தை, மட்டக்குளி ஆகிய பகுதிகளில் வாழும் சுமார் 600 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை, தலைவர் மனோ கணேசனின் வரிகாட்டலுக்கிணங்க, ஜனகன் வழங்கிவைத்தார். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களின் முன்னெடுப்பில் முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் குருசாமி தலைமையில், தற்போதைய கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் பால சுரேஷ், திருமதி மஞ்ச…

    • 0 replies
    • 395 views
  8. தமிழர்களாகிய நாமும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் – சிவஞானம் ஸ்ரீதரன் உலகின் பெரிய நாடுகளே அச்சத்தில் உறைந்திருக்க, தமிழர்களாகிய நாமும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும். 4 இலட்சத்திற்கும் மேலான மக்கள் இடம்பெயர்ந்திருந்த வேளை 70 ஆயிரம் மக்கள் இருப்பதாகக் கூறி அனுப்பப்பட்ட பொருட்களையே பகிர்ந்துண்டு உயிரைக்காத்தவர்கள் நாங்கள்.அதைப்போன்று இருப்பவற்றைக்கொண்டு இல்லாதவர்களுக்கும் பகிர்ந்து பட்டினியில் இருந்தும் கொடூர நோயிலிருந்தும் எம்மை நாமே சுயமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்ற கொரோகா வைரஸ் இந்த உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது.இ…

  9. நாடாளுமன்றத்தை தனிமைப்படுத்தல் நிலையமாகப் பயன்படுத்துமாறு ஆலோசனை! by : Benitlas நாடாளுமன்றத்தை தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பு நிலையமாகப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சிலர் கோரிக்கை விடுக்கின்றனர். ஏன் இவ்வாறு கோருகின்றனர்? இவ்வாறானவர்கள் இல்லாமல் வைரஸைக் கட்டுப்படுத்த முடியாது என்று எண்ணுகின்றனர். எவ்வித பயனும் இன்றி நாடாளுமன்றத்தைக் கூட்டி 92 இலட்சம் வீண் செலவு செய்ய எதிர்பார்ப்பது எதற்காக? நாடாளுமன்றம் கூட்டப்படாத சந்தர்ப்பத…

  10. கொரோனா அச்சம் காரணமாக யாழில் 8 பேர் அனுமதி! கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணம் யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், யாழ்ப்பாணத்தில் கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸின் அச்சம் இதுவரை நீங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். http://athavannews.com/கொரோனா-அச்சம்-காரணமாக-யா/

  11. யாழ்ப்பாணம், கைதடியில் உள்ள இலங்கை வங்கியில் கொரோனா நோயாளியுடன் தொடர்பிலிருந்த பெண் ஒருவர் அங்கு கடமையாற்றியகாரணத்தினால் குறித்தவங்கி இன்று செவ்வாய்க்கிழமைமுதல்தொடர்ந்து 14 நாட்களுக்குமூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குகடமையாற்றியவர்களும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ்நாட்டில்இருந்துவந்தபாதிரியாருடன்தொடர்பில்இருந்ததாவடிப்பகுதியைசேர்ந்தநபருக்குகொரோனாவைரஸ்தொற்றுஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்வசித்து வந்த தாவடி பகுதி முற்றுகையிடப்பட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் வீடுகளிலேயே கட்டாய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு பெண் கைதடியில் உள்ள இல…

    • 0 replies
    • 338 views
  12. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று இடம்பெற்ற சர்வ கட்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்போது, “ஊரடங்கு அமுல்படுத்தப்படும் வேளையில் தோட்டத்தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடவும், தோட்ட தொழிற்சாலைகள் இரவு நேரத்தில் தொழிற்படவும், தொழிலாளர்களின் வருமானத்துக்கு பாதகம் ஏற்படா வண்ணம் தடையின்றி தொழில் வழங்கப்பட வேண்டும்” என மனோ கணேசன் கோரிக்கை விடுத்திருந்தார். “வயல்களில் விவசாயம் செய்வோருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி தோட்ட தொழிலாளருக்கும் வழங்கப்பட வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இதை மனோ கணேசன் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பொலிஸ்மா அதிபர், மலையக பிரதேச பொலி…

  13. In இலங்கை March 24, 2020 12:31 pm GMT 0 Comments 1280 by : Litharsan இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுக்கடுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு வடக்கு மாகாணத்திலும் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்து. இந்நிலையில் மக்கள் அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நகர் பகுதிகளில் திரண்டிருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யவேண்டிய நிலையில் மக்கள் நகரங்களில் அலைமோதினர். அந்தவகையில், யாழ்ப்பாணத்தில் கடந்த 84 மணித்தியாலங்கள் நடைமுறையிலிருந்த ஊரடங்க…

    • 0 replies
    • 725 views
  14. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு – அவர்களில் இருவர் வைத்தியர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணைத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை மற்றும் வெலிகந்த ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெறும் தொற்றாளர்களில் இருவர் வைத்தியர்கள் என சுகாதார தரப்பு செய்திகள் தெரிவித்தது. அதில் மேலும் சிலர் சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களின்-எ-4/

    • 1 reply
    • 577 views
  15. யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் வீடு அமைந்துள்ள தாவடிக் கிராமம் முழுமையான கண்காணிப்பில் உள்ள நிலையில் இன்று (24.03.2020) காலை 8.30 மணியில் அப்பகுதியில் இருந்து வெளியேறவோ அல்லது உள் நுழையவோ அனுமதி மறுக்கப்பட்டது. கிராம சேவகர் , பிரதேச செயலாளர் , உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் , பொதுச் சுகாதார அதிகாரி , பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/78558

    • 0 replies
    • 540 views
  16. விக்கியின் கட்சியில் திருமலை முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் ரூபன் தேர்தல் களத்தில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராகவும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளராகவும் பின்னர் விடுதலைப்புலிகளின் தலைமை செயலக பொறுப்பாளராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றிய ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்) களம் இறங்குகிறார். விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி ஊடாக இவருக்கு ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தம்வரை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போராடி பின்னர் பின்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார். 1985 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாக இணைத்துக்கொண்ட ரூபன் 24 வருடங்கள் போ…

    • 18 replies
    • 1.8k views
  17. யாழ்ப்பாணம் - செம்மணி பகுதி இளையதம்பி வீதியில் அமைந்துள்ள பிலதெப்பியா கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற வழிபாட்டின் போது சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகர் அவர்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அவர் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்துள்ளார். விமான நிலையத்திலும் எவ்வித பரிசோதனைகளும் இவருக்கு இடம்பெறவில்லை. வழிபாடு இடம்பெற்ற போது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது என்பதுடன் ஒலிவாங்கியை கையில் பிடித்திருக்கவே மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். பின்னர் சுவிஸ் நாட்டிற்கு மீள சென்றுவிட்டார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு…

    • 63 replies
    • 4.7k views
  18. ஜனாதிபதியின் 16 முக்கிய தீா்மானங்கள்..! அச்சத்தால் முடங்கியிருக்கும் மக்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியளிக்குமாம்.! இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகாித்துக ் கொண்டிருக்கும் நிலையில் முடக்கப்பட்டிருக்கும் நாட்டுக்கு மக்களுக்கு தேவையான வாழ்வாதார உதவிகள், மக்களுடைய வங்கி கடன்கள் மீளளித்தல் உள்ளிட்ட மக்களின் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீா்வை வழங்க உத்தரவிட்டுள்ளாா். இன்று மாா்ச் மாதம் தொடக்கம் இந்த உத்தரவுகள் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த தீா்மானங்கள் மத்திய வங்கி ஆளுநா், அமைச்சுக்களின் செயலாளா்கள், மாகாசபை பிரதம செயலாளா்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், வாி நிறுவன தலைவா்களுக்கு உத்தரவுகளாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. அந்த தீா்மானங்களாவன, …

  19. (நா.தனுஜா) சார்க் நாடுகளின் கொவிட் - 19 ஐ தோற்கடிப்பதற்கான நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்திருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக முழு உலகுமே பாரிய நெருக்கடி நிலையொன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில்இ இச்சவாலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கான வீடியோ மாநாடொன்று கடந்த 15 ஆம் திகதி சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் நடைபெற்றது. அதன்போது பிராந்தியம் என்ற வகையில் இச்சவாலுக்கு ஒன்றிணைந்து முகங்கொடுப்பதற்கான நிதியைத் திரட்டிக்கொள்வதற்கும் தலைவர்களுக்கிடையில் இணக்கம் காணப்பட்டது. அதன்படி குறித்த நிதியத்திற்காக இலங்கை 5 மில்லியன் அமெரி…

  20. அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் முரண்பட்டுக்கொண்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிறைச்சாலையில் கொரனா காய்ச்சல் என்ற சந்தேகத்தில் 4 பேரை அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் கைதிகள் சிறை உடைப்பு முயற்சி மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அநுராதபுர சிறைச்சாலையில், சற்றுப் பதற்றமான நிலை நிலவுவதாகவும். அரசியல் கைதிகளின் சிறையையும் ஆயுள் கைதிகள் உடைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தினால் துப்பாக்கி சிறைச்சாலையில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது. ht…

  21. அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 11 தமிழ் அரசியல் கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இன்று இரவு மாற்றப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று ஏற்படலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டது. அண்மையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்ற வதந்தி காரணமாக சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 2 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இந்த அசாதாரண சூழ்நிலையை அடுத்து தமிழ் அரசியல் கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு பாதுகாபுக்காக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதனடிப்படையி…

    • 0 replies
    • 423 views
  22. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக இன்றிலிருந்து 23ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு அமுலாகும் ஊரடங்குசட்டமானது எதிர்வரும் 23ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இன்று சில பகுதிகளில் அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டமானது காலை 9 மணியிலிருந்து மதியம் 12 மணிவரை நீக்கப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/139390?ref=imp-news

    • 89 replies
    • 7.5k views
  23. கொரோனா தொற்றிய முதலாவது இலங்கையர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய முதலாவது இலங்கையரான சுற்றுலா பயணிகள் வழிகாட்டி அந்த நோய் முற்றாக குணமடைந்து அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி சென்றுள்ளார். இன்றைய தினம் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி சென்றதாக சுகாதார அதிகாரிகள் தெரிபித்துள்ளனர். இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் குழுவொன்றுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இந்த மாத ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து அவர் கடந்த 20 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதுடன் தற்போது அவர் தற்போது முற்றாக குணமடைந்துள்ளார். இதற்கு முன்ன…

    • 4 replies
    • 447 views
  24. கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 91 ஆக அதிகரிப்பு by : Jeyachandran Vithushan நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளதுடன் 227 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிலுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மருத்துவ கண்காணிப்பில் மேலும் 05 பேர் உள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள 45 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் 3,506 பேர் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 52 வயதான சுற்றுலா வழிகாட்டி ஒருவர் முற்றாகக் குணமடைந்து வைத்தியசாலையில் …

    • 0 replies
    • 493 views
  25. அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் கப்பல்கள் நாட்டுக்கு வருவது தடை கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பரவும் அபாயத்தை தடுக்கும் வகையில் அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் நாட்டுக்குள் வருவதை அரசாங்கம் தடை செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக நாட்டினுள் ஏற்பட்டுள்ள நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை எக் காரணம் கொண்டும் இத் தீர்மானத்தில் நெகிழ்வுத்தன்மைக்கு இடமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/78402

    • 2 replies
    • 588 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.