ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142952 topics in this forum
-
(இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் சிறந்த நிர்வாகத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே சீர்குலைக்கின்றார் என்று மக்கள் கருதுவது முற்றிலும் தவறானதாகும். நீதிமன்றத்தினால் குற்றவாளி என்று குறிப்பிடப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி அரச உயர் பதவிகளை வழங்கியுள்ளார். என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், இந்நாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கும் எவ்வித வேறுப்பாடுகளும் கிடையாது. தேர்தல் காலத்தில் தேசதுரோக ஒப்பந்தமாக விமர்சிக்கப்பட்ட எம்.சி.சி. ஒப்பந்தத்தை பொதுத்தேர்தலுக்கு பிறகு இரகசியமான முறையில் கைச்சாத்திடும் முயற்சியினை அரசாங்கம் முன்னெடுக்கின்றது எனவும் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை மு…
-
- 2 replies
- 444 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம் February 27, 2020 நாங்கள் தொலைத்தது ஆடுகளையோ அல்லது மாடுகளையோ இல்லை. தொலைத்தது எங்களுடைய உயிர்களையும், பிள்ளைகளையுமே. எங்களுக்கான ஒரு நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம் என்பதனை அரசாங்கத்திற்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை (27) மதியம் மன்னாரில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்,,,, மன்னார் நீதிமன…
-
- 2 replies
- 680 views
-
-
-எஸ். நிதர்ஷன் கொடிகாமம் - மாசேரி பகுதியில் உள்ள ஆவா குழு உறுப்பினர் ஒருவரின் வீட்டின் மீது, நேற்று (25) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானும் வீட்டின் தளபாடங்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. பட்டா ரக வாகனத்தில் வந்த 15 பேர் கொண்ட கும்பலொன்றே, இந்தத் தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டதாக, கொடிகாமம் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஆவா-வீட்டில்-தாக்குதல்/71-246078
-
- 4 replies
- 667 views
-
-
யாழில் தொடரும் அடாவடி – நேற்று மட்டும் 3 இடங்களில் தாக்குதல்! யாழ். வண்ணார்பண்ணை மற்றும் கொக்குவில் மேற்கு பகுதிகளில் 3 இடங்களில் வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. நேற்று மாலை 6 மணியளவில் வண்ணார்பண்ணை முருகமூா்த்தி ஆலயத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்ற வாள்வெட்டு கும்பல், கடையை அடித்து நொருக்கியதுடன், உரிமையாளரையும் தாக்க முயற்சித்துள்ளது. இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை நடாத்தியிருக்கின்றது. குறித்த கும்பல் தாக்குதல் நடாத்திவிட்டு கொக்குவில் மேற்கு வராகி அம்மன் கோவிலடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றின் மீதும், அதற்கு அருகில் உள்ள வீடொன்றின் மீதும் தாக…
-
- 2 replies
- 942 views
-
-
ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை by : Dhackshala நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நுகோகொடை நீதவான் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்தே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்தோடு அவருக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற செயற்பாடுகளில் தலையிட்ட குற்றச்சாட்டு தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ரஞ்சன்-ராமநாயக்க-பிணையில/
-
- 3 replies
- 711 views
-
-
வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது பேரப்பிள்ளைக்கு நீதிகோரி கடந்த மூன்றுவருடங்களாக முல்லைத்தீவில் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டத்தில் பங்கெடுத்திருந்த தாயார் ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளார் . செல்வம் சிவபாக்கியம் என்ற தாயாரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் . முகமாலையை பிறப்பிடமாகவும் மந்துவில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட செல்வம் சிவபாக்கியம் என்ற தாயே நேற்று காலமானார். இவரின் இறுதிக் கிரியைகள் இன்று (27) காலை அவரது இல்லத்தில் நடைபெற்றது . தனது மகளின் மகனான அல்பிரட் தினு என்ற தனது பேரப்பிள்ளை 2009 இறுதியுத்த பகுதியில் வட்டுவாகல் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் ஏக்கத்தோடு ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் மழை வெயில் பனி என்று எதையுமே பொருட்…
-
- 0 replies
- 781 views
-
-
இரண்டு வார கால அவகாசத்தை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளோம். முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு உடனடி தீவைப்பெற்றுக்கொடுக்காவிடின் மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அதிபர் , ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுதத்த போரட்டத்தில் ஈடுப்படுவதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த தேசிய கல்வி சேவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரியந்த பத்லேரிய , மேலும் கூறுகையில், ஆசிரியர் - அதிபர் சேவையை வரையறுக்கப்பட்ட சேவையாக கடந்த அரசாங்கம் அறிவித்தது. இந்நிலையில்,அந்த நடவடிக்கைளை முன்னெடுக்கும் வரையிலான இடைக்கால கொடுப்பணவை வழங்குமாறு கோரிக்கையொன்றினை அரசாங…
-
- 0 replies
- 507 views
-
-
தேர்தல் காலத்தில் பரப்பப்படும் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், “உண்மைச் சதுக்கம் - பொய்களை முடக்குவோம்” எனும் அமைப்பொன்று, இன்று (27) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சிக்குள்ளிருக்கும் எதிர்கால அரசியல் சந்ததிகளை உள்வாங்கி, நேர்த்தியான அரசியல் கலாசாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே, இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/உணமச-சதககம-பயகள-மடககவம-அமபப-உதயம/175-246132
-
- 3 replies
- 610 views
-
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணம் தீவப் பகுதி மீனவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று முன்னெடுத்தனர். யாழ். பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணி யாழிலுள்ள இந்திய துணைத் தூதரம் வரை சென்று நிறைவடைந்தது. இதன் போது கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களம், கடற்தொழில் அமைச்சர் , இந்திய துணைத் தூதரகம் ஆகியவற்றுக்கு மகஐரொன்றையும் கையளித்தனர். இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைப் படகுத் தொழிலால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன் கடற்தொழிலாளர்களும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றதாகவும் தெரிவித்த மீனவர்கள் இந்திய மீனவ…
-
- 0 replies
- 538 views
-
-
புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து சவுதி அரேபிய அரசாங்கம், மக்காவுக்குப் புனிதப் பயணம் செல்வதற்கான விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு முழுவதும் COVID-19 வைரஸ் பரவி வருவதால், யாத்திரிகர்களுக்கான விசாக்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டதாக சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. உம்ராவுக்காக சவுதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. ஓர் ஆண்டில் ஒவ்வொரு மாதமும், உம்ரா செய்வதற்காக உலக நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள்…
-
- 5 replies
- 506 views
-
-
போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தயார் – தினேஷ் உறுதி! by : Jeyachandran Vithushan போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக (உள்நாட்டுக்குள்) இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஐ.நா. அமர்வில் இலங்கையின் நிலைப்பாட்டினை அறிவித்தார் வெளிவிவகார அமைச்சர்! ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது உரையைத் தொடங்கினார். இதன்போது கடந்த அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய 40/1 மற்றும் அதற்கு முந்தைய 30/1, 34/1 ஆகியவற்றிலிருந்து விலகுவ…
-
- 4 replies
- 598 views
-
-
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலைக்கு மத்தியில், மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்வதற்காக 128 மெகாவோட் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடமிருந்து உடனடியாக கொள்வனவு செய்ய மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இது தொடர்பில் நேற்று முன்தினம் இலங்கை மின்சார சபைக்கு அறிவித்தப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/235248/உடனடியாக-கொள்வனவு-செய்ய-தீர்மானம்
-
- 5 replies
- 861 views
-
-
இலங்கை தொடர்பான அறிக்கை இன்று சமர்ப்பிப்பு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில் இன்று (27) நடைபெறும் அமர்வின்போது இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சல் பச்லெட்டினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் அதற்கு பதில் வழங்கப்படவுள்ளது. இதேவேளை, மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சல் பச்லெட் மற்றும் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு இடையிலான கலந்துரையாடல் நாளை (28) நடைபெறவுள்ளது. முன்னதாக, இ…
-
- 1 reply
- 489 views
-
-
இந்தியப் பிரதமருக்கு நன்றி தெரிவித்த இலங்கைப் பிரதமர் by : Dhackshala ஜப்பானில் கொரோனாவினால் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலிலிருந்த இரு இலங்கையர்ளையும் வெளியேற்றியதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு, ஜப்பான் யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த இலங்கை உட்பட ஏனைய ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலமாக இன்று (வியாழக்கிழமை) காலை டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து இடம்பெறும் வைத்திய பரிசோதனைகளின் பின்னர், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்காவிட்டால், அவர…
-
- 0 replies
- 469 views
-
-
சஜித் தலைமையில் நுவரெலியாவை கைப்பற்றுவோம் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. கூட்டணியாக களமிறங்கி பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தை கைப்பற்றுவோம் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஹட்டன் கினிகத்தேனை சிங்கள மகா வித்தியாலயத்தின் மைதானம் புனரமைக்கப்பட்டு வைபவ ரீதியாக இன்று 27() தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரத்தின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்த தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தலின்…
-
- 0 replies
- 635 views
-
-
வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு குறித்த விசாரணை இறுதி கட்டத்தில் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக அரச பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட சந்தேகநபர்கள் நான்கு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்ட போது பிரதி சொலிசிட்டர் நாயகம் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார். இன்றைய தினம் வழக்கின் சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனார…
-
- 0 replies
- 649 views
-
-
சிறந்த வினைத்திறனை வெளிப்படுத்திய 110 அரசாங்க நிறுவனங்களுக்கு விருது அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கைக்கு அமைய 2018 ஆம் ஆண்டில் உயர்ந்த வினைத்திறன் மட்டத்தை அடைத்த நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் நாளை (28) பாராளுமன்றத்தில் நடைபெறும். 2018 ஆம் ஆண்டு நிதியாண்டுக்குரிய அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கையை கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அக்குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நடவடிக்கை எடுத்திருந்தார். 2018 ஆம் ஆண்டில் 844 நிறுவனங்கள் மதிப்பீட்டுக்கு உ…
-
- 0 replies
- 292 views
-
-
ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகிய முடிவுக்கு பிரித்தானியா, கனடா கடும் அதிருப்தி! பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதான அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு பிரித்தானியா மற்றும் கனடா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கான இணை அனுசரணையில் இருந்து இலங்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தமை தமக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக வெளிவிகார மற்றும் கொமன்வெல்த் அலுவலக அமைச்சர் லோர்ட் தாரிக் அகமட் தெரிவித்தார். மேலும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறும் அவர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தினார். இதேவேளை பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நா. மனித உரிம…
-
- 4 replies
- 535 views
-
-
நாடாளுமன்றத்தை சுத்தம் செய்ய வேண்டும் – அநுர! by : Jeyachandran Vithushan தற்போதைய நாடாளுமன்றத்தை சுத்தம் செய்ய வேண்டிய காலம் தற்போது உதயமாகியுள்ளதாக மக்கள் முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். சிலாபத்தில், நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “காலத்துக்குக் காலம் அரசாங்கம் மாறுகிறது. அரசாங்கம் மாறுகின்றபோது, சகல வேலைத்திட்டங்களும் மாறும் என்றே, மக்கள் நினைக்கின்றனர். ஆனால், பழைய முகங்களே மீண்டும் அதே இடத்துக்கு வருகின்றனர். அவர்கள் பழைய தாளத்துக்கு ஏற்றவாறே, மீண்டும் செயற்படுகின்றனர். மக்கள் பாரிய எதிர…
-
- 2 replies
- 764 views
-
-
ஐ.நா.வில் அரசாங்கம் மற்றொரு தீர்மானத்தை முன்வைக்க வேண்டும் – ஜே.வி.பி.! இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கப்பட்ட 30/1 தீர்மானத்தை தங்கள் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத், 2015 ஆம் ஆண்டு தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவதன் மூலம் சாதகமான முடிவை அடைய முடியாது என்று கூறி இந்த நடவடிக்கையை தமது கட்சி அன்றே எதிர்த்தது என கூறினார். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான 30/1 மற்றும் 40/1 தீர்மானங்களில் இருந்து இலங்கை விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று ஐக்கிய நாடுகளின் ம…
-
- 0 replies
- 261 views
-
-
சஜித் கூட்டணியில் உத்தியோகபூர்வமாக இணைந்தது தமிழர் முற்போக்கு கூட்டணி! முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கூட்டணி உத்தியோகபூர்வமாக சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியில் இணைந்துகொண்டது. சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தமிழ் முற்போக்குக் கூட்டணி இந்த அறிவிப்பை வெளியிட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த மனோ கணேசன், புதிய கூட்டணியில் இணையவும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரேமதாசவை ஆதரிக்கவும் கட்சியில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ஒப்புக்கொண்டதாகக் கூறினார். சமகி ஜன பலவேகயவின் பயணம் முக்கியமாக தேசிய பாதுகாப்பு, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வ…
-
- 0 replies
- 319 views
-
-
ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவருக்கு விளக்கமறியல் ! ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது அவரை மார்ச் 11 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்க நீதவான் உத்தரவிட்டார். மிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட உதயங்க வீரதுங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இம்மாதம் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ரஷ்யாவிற்கான-இலங்கையின்/
-
- 0 replies
- 193 views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய கோரியும்,பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த சனிக்கிழமை காலை ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் ஐந்தாவது நாளாக இன்று தொடரும் நிலையில், மன்னார் நகர சபை உறுப்பினர்கள் இன்று மாலை நேரடியாக சென்று கலந்தரையாடியுள்ளனர். மன்னாரைச் சேர்ந்த இரத்தினம் ஞானசேகரம் யூலியஸ்(வயது-39) என்ற நபரே மன்னார் நகர சபை மண்டபத்திற்கு முன்னால் குறித்த உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது அங்கத்துவ கட்சிகளுடன் இணைந்து கட்சியை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். எனினும் பல்வேறு தரப்பினர் சென்று கலந்த…
-
- 3 replies
- 429 views
-
-
இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது :சி.சிறிதரன் கல்மடு வட்டார இணைப்பாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் ஆறு மணியளவில் இடம்பெற்றது கல்மடுவட்டார பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராசா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ,பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுரேன் ,பிரதேச சபை உறுப்பினர்களான சிவமோகன் ,வீரபாகுதேவர் ஆகியோர் கலந்துகொண்டனர் இக் கலந்துரையாடலில் இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் ஆராயப்பட்டதுடன் மேலும் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது அதனைவிட குறித்த பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்ச…
-
- 7 replies
- 1.5k views
-
-
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு – நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் அனைத்து பிரதேச செயலகங்கள் இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றன. இதில் வவுனியா மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் இவ்வேலை வாய்ப்புக்களுக்கு விண்ணப்பத்திருந்தனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், வவுனியாவில் அரச உத்தியோகத்தர் ஒருவரும் இரண்டு இராணுவ வீரர்களும் குறித்த நேர்முகத் தேர்வினை நடத்தி வருகின்றனர். வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 890 பேர் விண்ணப்பத்திருந்த நிலையில், இன்று ஐந்து கிராம சேவகர் பிரிவிற்கான நேர்முகத் தேர்வுகள் உதவி பிரதேச செயலாளர்,…
-
- 1 reply
- 852 views
-