Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தயார் – தினேஷ் உறுதி! by : Jeyachandran Vithushan போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக (உள்நாட்டுக்குள்) இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஐ.நா. அமர்வில் இலங்கையின் நிலைப்பாட்டினை அறிவித்தார் வெளிவிவகார அமைச்சர்! ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது உரையைத் தொடங்கினார். இதன்போது கடந்த அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய 40/1 மற்றும் அதற்கு முந்தைய 30/1, 34/1 ஆகியவற்றிலிருந்து விலகுவ…

    • 4 replies
    • 600 views
  2. நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலைக்கு மத்தியில், மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்வதற்காக 128 மெகாவோட் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடமிருந்து உடனடியாக கொள்வனவு செய்ய மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இது தொடர்பில் நேற்று முன்தினம் இலங்கை மின்சார சபைக்கு அறிவித்தப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/235248/உடனடியாக-கொள்வனவு-செய்ய-தீர்மானம்

    • 5 replies
    • 864 views
  3. இலங்கை தொடர்பான அறிக்கை இன்று சமர்ப்பிப்பு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில் இன்று (27) நடைபெறும் அமர்வின்போது இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சல் பச்லெட்டினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் அதற்கு பதில் வழங்கப்படவுள்ளது. இதேவேளை, மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சல் பச்லெட் மற்றும் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு இடையிலான கலந்துரையாடல் நாளை (28) நடைபெறவுள்ளது. முன்னதாக, இ…

  4. இந்தியப் பிரதமருக்கு நன்றி தெரிவித்த இலங்கைப் பிரதமர் by : Dhackshala ஜப்பானில் கொரோனாவினால் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலிலிருந்த இரு இலங்கையர்ளையும் வெளியேற்றியதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு, ஜப்பான் யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த இலங்கை உட்பட ஏனைய ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலமாக இன்று (வியாழக்கிழமை) காலை டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து இடம்பெறும் வைத்திய பரிசோதனைகளின் பின்னர், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்காவிட்டால், அவர…

  5. சஜித் தலைமையில் நுவரெலியாவை கைப்பற்றுவோம் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. கூட்டணியாக களமிறங்கி பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தை கைப்பற்றுவோம் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஹட்டன் கினிகத்தேனை சிங்கள மகா வித்தியாலயத்தின் மைதானம் புனரமைக்கப்பட்டு வைபவ ரீதியாக இன்று 27() தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரத்தின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்த தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தலின்…

  6. வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு குறித்த விசாரணை இறுதி கட்டத்தில் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக அரச பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட சந்தேகநபர்கள் நான்கு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்ட போது பிரதி சொலிசிட்டர் நாயகம் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார். இன்றைய தினம் வழக்கின் சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனார…

  7. சிறந்த வினைத்திறனை வெளிப்படுத்திய 110 அரசாங்க நிறுவனங்களுக்கு விருது அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கைக்கு அமைய 2018 ஆம் ஆண்டில் உயர்ந்த வினைத்திறன் மட்டத்தை அடைத்த நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் நாளை (28) பாராளுமன்றத்தில் நடைபெறும். 2018 ஆம் ஆண்டு நிதியாண்டுக்குரிய அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கையை கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அக்குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நடவடிக்கை எடுத்திருந்தார். 2018 ஆம் ஆண்டில் 844 நிறுவனங்கள் மதிப்பீட்டுக்கு உ…

  8. ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகிய முடிவுக்கு பிரித்தானியா, கனடா கடும் அதிருப்தி! பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதான அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு பிரித்தானியா மற்றும் கனடா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கான இணை அனுசரணையில் இருந்து இலங்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தமை தமக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக வெளிவிகார மற்றும் கொமன்வெல்த் அலுவலக அமைச்சர் லோர்ட் தாரிக் அகமட் தெரிவித்தார். மேலும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறும் அவர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தினார். இதேவேளை பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நா. மனித உரிம…

    • 4 replies
    • 539 views
  9. நாடாளுமன்றத்தை சுத்தம் செய்ய வேண்டும் – அநுர! by : Jeyachandran Vithushan தற்போதைய நாடாளுமன்றத்தை சுத்தம் செய்ய வேண்டிய காலம் தற்போது உதயமாகியுள்ளதாக மக்கள் முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். சிலாபத்தில், நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “காலத்துக்குக் காலம் அரசாங்கம் மாறுகிறது. அரசாங்கம் மாறுகின்றபோது, சகல வேலைத்திட்டங்களும் மாறும் என்றே, மக்கள் நினைக்கின்றனர். ஆனால், பழைய முகங்களே மீண்டும் அதே இடத்துக்கு வருகின்றனர். அவர்கள் பழைய தாளத்துக்கு ஏற்றவாறே, மீண்டும் செயற்படுகின்றனர். மக்கள் பாரிய எதிர…

  10. ஐ.நா.வில் அரசாங்கம் மற்றொரு தீர்மானத்தை முன்வைக்க வேண்டும் – ஜே.வி.பி.! இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கப்பட்ட 30/1 தீர்மானத்தை தங்கள் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத், 2015 ஆம் ஆண்டு தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவதன் மூலம் சாதகமான முடிவை அடைய முடியாது என்று கூறி இந்த நடவடிக்கையை தமது கட்சி அன்றே எதிர்த்தது என கூறினார். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான 30/1 மற்றும் 40/1 தீர்மானங்களில் இருந்து இலங்கை விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று ஐக்கிய நாடுகளின் ம…

  11. சஜித் கூட்டணியில் உத்தியோகபூர்வமாக இணைந்தது தமிழர் முற்போக்கு கூட்டணி! முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கூட்டணி உத்தியோகபூர்வமாக சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியில் இணைந்துகொண்டது. சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தமிழ் முற்போக்குக் கூட்டணி இந்த அறிவிப்பை வெளியிட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த மனோ கணேசன், புதிய கூட்டணியில் இணையவும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரேமதாசவை ஆதரிக்கவும் கட்சியில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ஒப்புக்கொண்டதாகக் கூறினார். சமகி ஜன பலவேகயவின் பயணம் முக்கியமாக தேசிய பாதுகாப்பு, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வ…

  12. ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவருக்கு விளக்கமறியல் ! ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது அவரை மார்ச் 11 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்க நீதவான் உத்தரவிட்டார். மிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட உதயங்க வீரதுங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இம்மாதம் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ரஷ்யாவிற்கான-இலங்கையின்/

  13. தமிழ் தேசியக்கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய கோரியும்,பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த சனிக்கிழமை காலை ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் ஐந்தாவது நாளாக இன்று தொடரும் நிலையில், மன்னார் நகர சபை உறுப்பினர்கள் இன்று மாலை நேரடியாக சென்று கலந்தரையாடியுள்ளனர். மன்னாரைச் சேர்ந்த இரத்தினம் ஞானசேகரம் யூலியஸ்(வயது-39) என்ற நபரே மன்னார் நகர சபை மண்டபத்திற்கு முன்னால் குறித்த உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது அங்கத்துவ கட்சிகளுடன் இணைந்து கட்சியை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். எனினும் பல்வேறு தரப்பினர் சென்று கலந்த…

  14. இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது :சி.சிறிதரன் கல்மடு வட்டார இணைப்பாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் ஆறு மணியளவில் இடம்பெற்றது கல்மடுவட்டார பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராசா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ,பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுரேன் ,பிரதேச சபை உறுப்பினர்களான சிவமோகன் ,வீரபாகுதேவர் ஆகியோர் கலந்துகொண்டனர் இக் கலந்துரையாடலில் இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் ஆராயப்பட்டதுடன் மேலும் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது அதனைவிட குறித்த பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்ச…

  15. ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு – நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் அனைத்து பிரதேச செயலகங்கள் இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றன. இதில் வவுனியா மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் இவ்வேலை வாய்ப்புக்களுக்கு விண்ணப்பத்திருந்தனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், வவுனியாவில் அரச உத்தியோகத்தர் ஒருவரும் இரண்டு இராணுவ வீரர்களும் குறித்த நேர்முகத் தேர்வினை நடத்தி வருகின்றனர். வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 890 பேர் விண்ணப்பத்திருந்த நிலையில், இன்று ஐந்து கிராம சேவகர் பிரிவிற்கான நேர்முகத் தேர்வுகள் உதவி பிரதேச செயலாளர்,…

  16. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த கால விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முற்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தது.எனவே இது அந்த குற்றப்பத்திரிகைகளை மூடி வைக்கும் செயற்பாடாக உள்ளதாக கருதப்படுகிறது. என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். அவர் இன்று புதன்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி தானே நியமித்த நீதிபதியின் முன் அவரே சென்று  சாட்சியம் வழங்கி அவரே தீர்ப்பு வழங்க முற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிபதிகளுக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். தான் தமிழ்…

  17. ஆசிரியர்கள், அதிபர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம்: கல்வி நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிதம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகயீன விடுமுறை போராட்டம் காரணமாக மாணவர்களும் பெற்றோரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இடைக்கால கொடுப்பனவைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று (புதன்கிழமை) ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முற்றாக முடங்கியுள்ளன. இன்று காலை முதல் பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்துவந்த பெற்றோர் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்துவந்து விட்டுச்சென…

  18. முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தேசிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் மட்டக்களப்பு பிரஜைகள் குழுவை அண்மையில் மட்டக்களப்பு, மாமாங்கம் பிரதேசத்தில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் உட்பட பலர் கலந்துகொண்ட அந்தச் சந்திப்பில், பிள்ளையானுடன் இணைந்து அடுத்த நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க தமக்கு உதவுமாறு தமிழ் தேசிய மக்கள் கூட்டணியினர் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். சிறைக்குச் சென்று பிள்ளையானை சந்திக்க தாம் தயார் என்றும் அவர்கள் அங்கு உறுதியளித்துள்ளார்கள். வடக்கும், கிழக்கும் இணைந்த ஆட்சி, 'தமிழ் தேசியம்' எனக் கூறி வரும் விக்னேஸ்வரன் தலைமையிலான அணி, வடக்கு கிழக்கு பிரிவுற்று , வெறுமனே த…

    • 2 replies
    • 548 views
  19. தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் புலிகளின் சித்தாந்தத்தை பிரசாரம் செய்கிறார்கள் – கமல் குணரத்ன by : Jeyachandran Vithushan கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றிலுமாக இலங்கை இராணுவம் தோற்கடித்தபோதும் சில தமிழ் அரசியல் வாதிகள் அந்த சித்தாந்தங்களை தமிழ் மக்களின் மனதில் பரப்ப முயற்சிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன குற்றம் சாட்டியுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) சாம்பியா நாட்டின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டபிள்யூ.எம். சிகாஸ்வேவை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பெரும்பான்மையான தமிழ் மக்களின் அபிலாஷைகள் அந்த அரசியல்வாதிகளின்…

    • 4 replies
    • 861 views
  20. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பி..! இணை அனுசரணை வழங்குவதிலிருந்து விலகியது இலங்கை.. ! ஐ.நா மனித உாிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 40/1 மற்றும் 30/1, 34/1 ஆகிய தீர்மானங்களிலிருந்து விலகுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சா் தினேஸ் குணவா்த்தன ஐ.நா பேரவையில் உத்தியோகபூா்வமாக அறிவித்துள்ளாா். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43ஆவது அமர்வு ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று சுவிஸ் நேரப்படி முற்பகல் 10 மணிக்கு இலங்கை விவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன உரையாற்றினார். இதன்போதே அவர் இந்த முடிவை சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். கடந்த அரசு அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும் மீறியது. இலங்கையின் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானத்துக்கு இணை அனுசர…

    • 3 replies
    • 1.1k views
  21. ஒரு இறாத்தல் பாணின் விலையை 05 ரூபாவால் குறைக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நாளை நள்ளிரவு (27) இவ்விலைக் குறைப்பு அமுலுக்கு வருவதாக சங்கம் முடிவு எடுத்துள்ளது. பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க தீர்மானம்? 10:56am பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அந்த வகையில் ஒரு இறாத்தல் பாணின் விலையை 05 ரூபாயால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று (25) இடம்பெறும் கூட்டத்தின் பின்னர், திருத்தப்பட்ட அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் அறிவிக்கப்படுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்…

  22. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவாவிற்கான இயக்குநர் ஜோன் பிசர் கருத்து வெளியிட்டுள்ளார். டுவிட்டரில் அவர் இதனை பதிவு செய்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஐக்கியநாடுகளிற்கான தனது அர்ப்பணிப்புகளை இலங்கை கைவிடுகின்றது என குறிப்பிட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். யாரும் ஏமாறக்கூடாது யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள ராஜபக்சாக்கள் பொறுப்புக்கூறுதலை முன்னகர்த்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவாவிற்கான இ…

  23. (ஆர்.விதுஷா) சம்பள முரண்பாட்டுப்பிரச்சினைக்கான தீர்வை உடனடியாக பெற்றுத்தரக்கோரி அதிபர் ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்ட சுகயீனவிடுமுறை போராட்டம் மற்றும் ஆர்பாட்ட பேரணியின்   காரணமாக பாடசாலை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தது. " இடைக்கால கொடுப்பனவை வழங்குதல் உள்ளிட்ட சம்பள முரண்பாட்டுக்கான தீர்வினைப்பெற்றுத்தருமாறு கோரி இன்று நாடளாவிய ரீதியிலுள்ள அதிபர் , ஆசிரியர்கள் சுகயீன  விடுமுறைப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாகவே அரச பாடசாலைகளின் மாணவர்களுடைய கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் காரணமாக 100 இற்கும் அதிகமா…

  24. அடுத்த வாரத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சி.ஐ.டியினர் அழைத்து விசாரணைகளை முன்னெடுப்பார்களென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்ததோடு, தன்னைக் கொலை செய்வதற்கு முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் இணைந்து சூழ்ச்சி செய்த விவகாரம் தொடர்பில் தன்னால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென்றார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ரணிலை-சி-ஐ-டி-விசாரிக்கும்/150-246070

    • 0 replies
    • 354 views
  25. நூற்றாண்டு பழைமையான பள்ளியில் புத்தர்சிலை – ரிஷாட் கண்டனம் by : Dhackshala மஹர சிறைச்சாலையில் 100 வருடங்கள் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்தும் இந்த இழிச்செயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கேட்டுள்ள அவர், இந்தச் செயலானது அரசியலமைப்பில் மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும் அடிப்படை உ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.