Jump to content

தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் புலிகளின் சித்தாந்தத்தை பிரசாரம் செய்கிறார்கள் – கமல் குணரத்ன


Recommended Posts

தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் புலிகளின் சித்தாந்தத்தை பிரசாரம் செய்கிறார்கள் – கமல் குணரத்ன

kamal-Gunarathna.jpg

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றிலுமாக இலங்கை இராணுவம் தோற்கடித்தபோதும் சில தமிழ் அரசியல் வாதிகள் அந்த சித்தாந்தங்களை தமிழ் மக்களின் மனதில் பரப்ப முயற்சிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) சாம்பியா நாட்டின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டபிள்யூ.எம். சிகாஸ்வேவை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பெரும்பான்மையான தமிழ் மக்களின் அபிலாஷைகள் அந்த அரசியல்வாதிகளின் சித்தாந்தத்திலிருந்து வேறுபட்டவை என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இவ்வாறான பிரிவினைவாத சித்தாந்தத்தை தோற்கடிப்பதற்கான சவால் இன்னும் தமக்கு உள்ளது என்றும் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

புலிகளினால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் ஒரு தனி நாட்டை விரும்பவில்லை, ஆனால் சில தமிழ் அரசியல்வாதிகள் அதிகாரப் பகிர்வை விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்த சந்திப்பின்போது, பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் இராணுவத்தினரின் பங்களிப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன சாம்பியா நாட்டின் இராணுவத் தளபதிக்கு விளக்கியிருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

http://athavannews.com/ltte-terrorism-defeated-militarily-but-few-tamil-politicians-still-propagate-its-ideology/

Link to comment
Share on other sites

8 hours ago, nunavilan said:

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றிலுமாக இலங்கை இராணுவம் தோற்கடித்தபோதும் சில தமிழ் அரசியல் வாதிகள் அந்த சித்தாந்தங்களை தமிழ் மக்களின் மனதில் பரப்ப முயற்சிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

சகல சிங்கள-பௌத்த போர்க்குற்றவாளிகளும் முழுமையாக தண்டிக்கப்படும் வரை,
தமிழர்களுக்கு முழுமையான நீதி நியாயம் கிடைக்கும் வரை,
தமிழீழ தனிநாடு அவசியம் என்ற ஏக்கம் தமிழ் மக்கள் மனதில் பெருகிக்கொண்டே போகும்.

Link to comment
Share on other sites

ஒரு இராணுவ அரசிற்கு சுழி போடப்பட்டு வருகின்றது. வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

18 hours ago, nunavilan said:

தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் புலிகளின் சித்தாந்தத்தை பிரசாரம் செய்கிறார்கள் – கமல் குணரத்ன

kamal-Gunarathna.jpg

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றிலுமாக இலங்கை இராணுவம் தோற்கடித்தபோதும் சில தமிழ் அரசியல் வாதிகள் அந்த சித்தாந்தங்களை தமிழ் மக்களின் மனதில் பரப்ப முயற்சிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

புலிகளினால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் ஒரு தனி நாட்டை விரும்பவில்லை, ஆனால் சில தமிழ் அரசியல்வாதிகள் அதிகாரப் பகிர்வை விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

 

மக்கள் புலிகளினால்  பாதிக்கப்பட்டிருக்கலாம் , அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்। அதை  அந்த  மக்கள்தான் கூற வேண்டும்।  இருந்தாலும் புலிகளின் சித்தாந்தமோ அல்லது வேறு ஒரு சித்தாந்தமாகவோ இருக்கலாம்। தமிழ் மக்களின் அரசியல் தீர்வை அரசு வழங்குமாக இருந்தால் எந்த சித்தாந்தமும் தேவைப்படாது। எனவே அரசுதான் இதட்குரிய பதிலை வழங்க வேண்டும்। 

Link to comment
Share on other sites

On 2/25/2020 at 4:24 PM, nunavilan said:

தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் புலிகளின் சித்தாந்தத்தை பிரசாரம் செய்கிறார்கள் – கமல் குணரத்ன

மனிதகுலத்துக்கு விரோதமான சிங்கள-பௌத்த சித்தாந்தத்தை எதிர்கொள்ளவல்ல ஒரே சித்தாந்தம் புலிகள் சித்தாந்தம் தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.