Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சாய்ந்தமருது நகர சபை விவகாரம் – அமைச்சரவையின் அதிரடி தீர்மானம் சாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்துக்கான வர்த்தமானியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுவரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுள்ள அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். http://athavannews.com/சாய்ந்தமருது-நகர-சபை-விவ/

  2. இராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – குற்றச்சாட்டுக்களை மறுத்தது கடற்படை இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை கடற்படை மறுத்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூட்டையடுத்து படகின் கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன், கண்ணாடித் துண்டு பட்டதில் மீனவரொருவர் காயமடைந்துள்ளதாக இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த குற்றச்சாட்டுக்களை இலங்கை கடற்படை முற்றாக நிராகரித்துள்ளது. கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட்…

  3. முன்னாள் நீதிபதி, உள்ளிட்ட இருவருக்கு 16 வருட கடூழியச் சிறைத் தண்டனை! முன்னாள் நீதிபதி உள்ளிட்ட இருவருக்கு 16 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம மாவட்ட முன்னாள் நீதிபதி சுனில் அபேசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகச் செயற்பட்ட பொலிஸ் கொன்ஸ்ரபிள் ஆகியோருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இன்று(வியாழக்கிழமை) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். அத்துடன், இலஞ்சமாக பெற்ற 3 இலட்சம் ரூபாயை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என உத்தவிடப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக, பிரதிவாதிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனைச் செலுத்தத் தவறினால் மேலும் ஒரு …

  4. இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது. அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்கஇராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் இராணுவதளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவருடைய கட்டளை பொறுப்பு காரணமாக பாரியமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற நம்பகதன்மை மிக்க தகவல்கள் காரணமாக, குறிப்பாக 2009 இல் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தின் 58 வது படைப்பிரிவு மேற்கொண்ட சட்டவிரோத கொலைகள் காரணமாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 பிரிவின் கீழ் கோரப்பட்டிருப்பதன் அடிப்படையில் அமெரிக்க இ…

  5. யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான பயணிகள் விமான சேவை வரும் மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 நாட்களும் இடம்பெறும் என்று இந்திய விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் யாழ்ப்பாணம் சென்னை இடையேயான விமானக் கட்டணம் அதிகரிப்புக்கு இரண்டு மடங்கு வரி அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள யாழ்ப்பாணம் விமான நிலைய அதிகாரிகள், நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் ஒரே அளவிலான விமான நிலைய வரி அறிவிடப்படுவதாகத் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ள இந்தியன் எயார் நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் அதிகாரிகள் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் பிரதிநிதிகளை வணிகர் கழகத்தில் சந்தித்தனர். இதன்போது…

  6. முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பான கருத்தை நாம் வன்மையாகக் கண்டிப்பதாக  தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எமது போராட்டத்தை ஆதாரம் இல்லாது கொச்சை படுதினால் அவருக்கு எதிராக போராடுவோம் என எச்சரிக்கை விடுத்துல்லனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டுறவுகள் அமைப்பின் யாழ் இணைப்பாளர் சுகந்தி ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்டாவது, நீதியரசர் விக்னேஸ்வரன்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கஜேந்திரகுமார் பிரித்தாழ்வதாக அண்மையில் கூறியதனூடாக  எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பு மீது கட்சி ச…

  7. (இராஜதுரை ஹஷான்) ஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம்  முன்னேடுக்கும் தீர்மானம் பாரதூரமானது. பொருளாதார ரீதியில் மோசடியான நிலைமையினை தோற்றுவித்துள்ள அரசாங்கம். சர்வதேச மட்டத்தில் இலங்கையினை தனிப்படுத்தப்படுத்துவம் நடவடிக்கைகளை மாத்திரமே முன்னெடுக்கின்றது என தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர. இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டிய விடயத்தை இவர்களே தங்களின் சுய அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். நல்லாட்சி அரசாங்கம் 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமையினை பேரவையில் இலங்கையினை காட்டிக் கொடுக்கவில்லை. மாறாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மின்சார கதிரையில் இருந்து காப்பாற்றினோம். எனவும் தெரிவித்தார். பாராளு…

  8. -சுப்பிரமணியம் பாஸ்கரன் நடைபெறவுள்ள மனித உரிமைகள் அமர்வின்போது, இலங்கை அரசாங்கத்துகு கடுமையான அழுத்தங்களை சர்வதேசம் முன்வைக்க வேண்டுமென, வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத் தலைவி கலாரஞ்சனி தெரிவித்தார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில், சர்வதேசத்திடம் அரசாங்கம் பதில் சொல்ல வேண்டுமெனத் தெரிவித்தார்.. ஓ. எம். பி அலுவலகத்தை தாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோமெனத் தெரிவித்த அவர், அந்த அலுவலகத்தில் தமக்கு நம்பிக்கை இல்லையெனவும் கூறினார். இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசங்கள் வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் எதையும் தமக்கு செய்யவில்லையெனத் தெரிவித்த அவர், தமது உறவுகள் தொட…

    • 0 replies
    • 434 views
  9. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்குமாறு கோரி வடக்கு, கிழக்கில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.அதற்கமைய யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் 3 ஆண்டுகள் ந…

    • 2 replies
    • 351 views
  10. மட்டக்களப்பில் பிரசித்தி பெற்றதும் முக்கியம் வாய்ந்ததுமான முறக்கட்டான்சேனை விஷ்ணு ஆலயம் மற்றும் இராம கிருஸ்ண மிசன் வித்தியாலயம் என்பவற்றிற்கு சமீபமாக நீண்ட காலமாக ஏற்படும் பாரிய மண்ணரிப்பு பாதிப்பை தடுப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆழுனர் திருமதி அனுராதா ஜயம்பத் மாவட்ட அரசாங்க அதிபரை பணித்துள்ளார். ஸ்ரீ ரமண மகரிசி அறப் பணி நிலையத்தின் இலங்கை கிளை தலைவர் மாரிமுத்து செல்லத்துரை இந்த மண்ணரிப்பு பாதிப்பு பற்றி கிழக்கு மாகாண ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து மாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைய ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்த்தன இந்த பணிப்புரையை அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ளார். இந்த பணிப்புரைக்கு அமைய மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தலுக்…

  11. மார்ச் 3ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது by : Dhackshala நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய இது தொடர்பாக இன்று அறிவித்தார். அரசாங்கத்தினால் இன்று (வியாழக்கிழமை) சமர்ப்பிக்கப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கான திருத்தங்கள் அனைத்தையும் விலக்கிக்கொள்வதாக சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த அரசாங்க காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட பாரிய அளவிலான கடனை செலுத்த வேண்டியிருப்பதாக தெரிவித்த அமைச்சர், வைத்தியசாலைகளில் மருந்து கொள்வனவு, உர கொள்வனவு உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக முன்னைய அரசாங்க…

  12. கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு by : Dhackshala கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மறுஅறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு தற்காலிகமாக பூட்டு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதுவை பிரதேசத்தில் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் மருங்கில் அமைந்துள்ள வனப்பகுதியில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீப்பரவல் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதியின் 18 மற்றும் 19 ஆம் கிலோ மீற்றர் தூண்களுக்கு இடையில் ஏற்பட்…

  13. இனிய பாரதிக்குத் தொடர் விளக்கமறியல் எஸ்.ஜமால்டீன் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் “இனிய பாரதி” என அழைக்கப்படும் குமார சாமி புஸ்பகுமாரை, மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான முஹம்மது ஹனிபா முஹமட் ஹம்ஸா உத்தரவிட்டார். சந்தேக நபர், நீதமன்றத்தில் இன்று (20) ஆஜர்படுத்தப்பட்டபோதே, மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார். அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரதேசத்தில் ஐவரும் ,அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசததில் ஒருவருமாக 06 பேர், 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு…

  14. பிரகீத் எக்னெலிகொட வழக்கு - சாட்சி விசாரணைகளை மார்ச் 11 ஆம் திகதி ஆரம்பிக்க உத்தரவு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் ஒன்பது பேருக்கு எதிரான தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்க கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழங்கு இன்று (20) சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போது, குறித்த வழக்கின் சாட்சி விசாரணைகளை மார்ச் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்த நீத…

  15. பாராளுமன்றம் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரிய இது தொடர்பாக இன்று அறிவிக்கையில் பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். அரசாங்கத்தினால் இன்று (20) சமர்ப்பிக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கான திருத்தங்கள் அனைத்தையும் விலக்கிக் கொள்வதாக சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த அரசாங்க கரலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட பாரிய அளவிலான கடனை செலுத்த வேண்டியிருப்பதாக தெரிவித்த அமைச்சர் வைத்தியசாலைகளில் மருந்து கொள்வனவு …

  16. அரசுக்கு அழுத்தம் தராதீர் என்பது சர்வாதிகாரப் போக்கின் வெளிப்பாடு! ´அரசியல் தீர்வு தருவோம் என்ற உத்தரவாதம் எதனையும் முன்வைத்து புதிய ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எனவே, எவரும் அதற்கான அழுத்தங்களை பிரயோகிக்ககூடாது´ எனத் தகவல் தொடர்பாடல் அமைச்சர் தெரிவித்திருப்பது சர்வதிகார போக்கை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து இனமக்களதும் பிரச்சினைகளையும் உணர்ந்து அவற்றுக்கான தீர்வினை ஏற்படுத்த வேண்டியது ஜனாதிபதியினதும் அரசினதும் கடமையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் …

    • 1 reply
    • 872 views
  17. 30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல – சுதர்ஷனி! 30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்காகவே இராணுவ தளபதி சவேந்திர சில்வா யுத்தவெற்றிக்கு பாரிய பங்களிப்பு வழங்கினார். 30 வருட கால யுத்தம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது அல்ல. உலகில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலை புலிகள் அமைப்பினை முற்றாக இல்லாதொழிக்க வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு காணப…

    • 2 replies
    • 856 views
  18. ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை அனுமதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015 ஆம் ஆண்டு கூட்டாக கொண்டு வந்த தீர்மானத்தை மீளப்பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுள்ள அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த முன்மொழிவை சமர்ப்பித்தார். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வ…

  19. குற்றச்செயல்களை தடுப்பதற்காக சைபர் சட்டமொன்றினை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை! சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக கடுமையான முறையில் சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2019ஆம் ஆண்டின் புள்ளி விபரங்களை பகுப்பாய்வு செய்கின்ற போதும் குற்றங்கள் குறைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. 2018ஆம் ஆண்டில் 253 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும் 2019இல்…

  20. திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க அனுமதி மன்னார் திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தொடர்பான வழக்கானது நேற்றைய தினம் மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் எம்.சஹாப்தீன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த விசாரணையின் போது மாந்தை கோவில் நிர்வாகத்தினரும் திருக்கேதீஸ்வர நிர்வாகத்தினரும் இணக்கப்பாடு ஒன்றிற்கு வந்ததற்கு அமைவாக வருகின்ற சிவராத்திரியை முன்னிட்டு எதிர்வரும் 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி மாலை வரை குறித்த பகுதியில் தற்காலிக அலங்கார வளைவு அமைப்பதற்கான அனுமதியை மன்னார் மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் வியாழக்கிழமை வழங்கியுள்ளது. திருக்கேதீஸ்வரம் பகுதியில் அலங்கார வளைவு அமைத்த போது கடந்த வருடம் உள்ளக ரீதியில் இரண்டு ம…

    • 60 replies
    • 4.7k views
  21. வெளிநாட்டிருந்து வருகை தந்தவர்கள் தங்கியிருந்த வீடு பட்டப்பகலில் உடைத்து 20 பவுண் தங்க நகைகளும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் திருடப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கரவெட்டி, சாமியன் அரசடிப் பகுதியில் இன்று புதன்கிழமை முற்பகல் இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தமது உறவினரின் வீட்டில் தங்கியுள்ளனர். வீட்டிலுள்ள அனைவரும் இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆலயத்துக்குச் சென்றுள்ளனர். அவர்கள் பிற்பகல் 1.30 மணியளவில் வீடு திரும்பிய போது, வீட்டுக்குள் உள்ள பொருட்கள் ஆங்காங்கே வீசப்பட்டிருந்தன. வீட்டின் பின் கதவ…

    • 0 replies
    • 815 views
  22. கோட்டாவை பலப்படுத்தும் விதமாகவே பொதுத்தேர்தலிலும் களமிறங்குவோம்- மைத்திரிபால ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பலப்படுத்தும் நோக்கில்தான், பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து களமிறங்கத் தீர்மானிக்கப்பட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரித்தானியர்களிடம் சுதந்திரம் பெற்று நாடு என்ற ரீதியில் நாம் தலைத்தூக்கிக் கொண்டிருக்கும்போது தான், யுத்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. 30 வருடங்களுக்கும் மேல் நீடித்த இந்த யுத்தம்தான் இலங்கையை வறும…

    • 8 replies
    • 822 views
  23. தமிழ் மக்களின் ஒற்றுமையை இதுவரையில் திட்டம் போட்டுக் குலைத்து வருபவர்கள் யார் ? கஜேந்திரகுமாருக்கு விக்கேஸ்வரன் கேள்விக்கணைகள் யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக தமிழர் அனைவரும் உணர்வெழுச்சியுடன் பங்குகொள்ளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் தாம் மட்டும் வேறான இடத்தில் தமது நிகழ்வை நிகழ்த்தி பிரிவினையை வளர்ப்போர் யார்? என வட.மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் குறித்த கட்சியின் கருத்துக்கு பதிலளித்துள்ளார்.அத்துடன் சி.வி.விக்கேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அவர் வழங்கிய பதில்களும் பின்வருமாறு அமைந்துள்ளது. …

  24. (செ.தேன்மொழி) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்று முதலாவது நினைவுதின நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி முதலே ஆரம்பிக்கபட இருப்பதாக தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நாட்டு மக்கள் அனைவரையும் இன மத பேதமின்றி இந்த நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளுமாறும் வேண்டுகொள்விடுத்தார். கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, உயிர்த் ஞாயிறுதின தாக்குதல்களின் போது 300 அளவிலானோர் உயிரிழந்துள்ளதுடன் , 500 பேர் வரை காயமடைந்திருந்தனர். இதன்போது நாடுபூராகவும் பதற்றநிலைமை ஏற்பட்டிருந்தது. பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறான சந்தரப்பத்திலே நாட்டு மக்கள…

    • 6 replies
    • 585 views
  25. (இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணை 80 சதவீதம் முழுமைப் பெற்றுள்ளதாக தெரிவித்த, சட்டம் மற்றும் ஒழுக்காற்று பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, குண்டுத்தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் வெகுவிரைவில் சட்டத்தின் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறினார். அத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஈர்க்கப்பட்டுள்ள அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை நல்வழிப்படுத்த இந்தியாவில் சிறப்பு பயிற்சிப் பெற்ற குழுவினரால் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இலங்கையில் இஸ்லாமிய மற்றும் ஏனைய மத அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள், தாக்குதல்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்கான திட்டங்கள் வகுக்க…

    • 0 replies
    • 380 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.