ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143677 topics in this forum
-
இன, மத, மொழி, சாதி ரீதியில் தேர்தல்காலங்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதை தவிர்க்குமாறு கிளிநொச்சி மாவட்ட சர்வ மத தலைவர்கள் எடுத்துரைத்துள்ளனர். அதேவேளை மக்கள் சுயமாக சிந்தித்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கையும் விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். வாக்காளர்கள் தமது வாக்குரிமையை மத ரீதியாகவும் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் பார்க்காமல் அதனை ஜனநாயகத்தினுடைய ஒரு அங்கமாக பார்த்து சரியான தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட சர்வமத நல்லிணக்க குழுவினர் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட சர்வமத நல்லிணக்க …
-
- 0 replies
- 213 views
-
-
தமிழ் மக்கள் மத்தியிலே எனக்கு பூரண ஆதரவு இருக்கின்றது. எதிர்வரும் தேர்தலில் நிச்சயமாக நான் வெற்றிபெறுவேன் என்று இலங்கை இழப்பீட்டு காரியாலத்தின் முன்னாள் ஆணையாளரும், பாராளுமன்றதேர்தல் வேட்பாளருமான கேணல் ரட்ண பிரிய தெரவித்தார். வவுனியாவிற்கு இன்றையதினம் விஜயம் செய்த அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்ததுடன் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நான் வடக்கு பகுதியிலே இராணுவத்தில் கடமையாற்றுகின்ற போது முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு தமிழ்மக்களுடன் நெருங்கிய தொடர்பு எனக்கு இருக்கிறது. தமி…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையிலிருந்து அதிகமான பௌத்தர்கள் யாத்திரைக்குச் செல்லும், இந்தியாவின் புத்தகாயா யாத்திரைப் பயணங்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு, குறித்த யாத்திரை தொடர்பில் ஏற்பாடுகளைச் செய்யும் நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தெளிவுப்படுத்தும் நடவடிக்கையை புத்தசாசன அமைச்சு முன்னெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென, புத்தசாசன அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/பததகய-யததரய-இடநறதத-யசன/175-246575
-
- 0 replies
- 665 views
-
-
மலையக பல்கலைக்கான நிதி அடுத்த வரவு செலவு திட்டத்தில்.. வாக்குறுதி படி ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் by : Jeyachandran Vithushan மலையகத்துக்கான பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான நிதி அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதேவேளை ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி படி, தோட்ட தொழிலார்களுக்கான தோட்ட ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மலையக பல்கலைக்கழகம் அமையவுள்ள இடத்தை தெரிவுசெய்வதற்காக ஹட்டனுக்கு இன்று (திங்கட்கிழமை) கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்ட உயர்கல்வி அமைச்சர், தனது பணிகளை முடித்துக்கொண்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகை…
-
- 1 reply
- 275 views
-
-
சமகி ஜனபல வேகயவின் சின்னம் தொடர்பில் இன்று தீர்மானம் சமகி ஜனபல வேகயவின் சின்னம் தொடர்பில் இன்று (09) தீர்மானிக்கவுள்ளதாக அந்த கூட்டணியின் தலைவரும், முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை கூறினார். எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் புதியதொரு கூட்டமைப்பை உருவாக்க அனுமதியளிக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் சமகி ஜனபல வேகயவுடன் இணைந்துள்ளதாக அந்த கூட்டணியின் பொதுச்செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 474 views
-
-
வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது என்ற கருத்து தவறானது – சி.வி. வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது என்ற கருத்து தவறானதென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கரணவாய் மேற்கு அந்திரான் குடியிருப்பு பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசியலிலே எமது தன்னாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். வட கிழக்கு இணைவு மற்றும் தமிழர் தாயகத்தில் தன்னாட்சியானது சமஷ்டி ரீதியாக உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இதற்குக் காரணம் உண்டு. பல…
-
- 3 replies
- 528 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட கட்சியின் செயற்குழுவில் தீர்மானித்த பின்னரும் ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிடுவதாக தெரிவித்திருப்பது ராஜபக்ஷ்வினரின் தேவையை நிறைவேற்றுவதற்காகும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மனுஷ் நாணயக்கார தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி செயற்குழுவில் தீர்மானித்ததுடன் கூட்டணியின் தலைவராகவும் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அதேபோன்று கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவையும் செயற்குழு அங்கிகரித்தது. அத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி குழுவும் சஜித் பிரேமதாச சார்ப்பாக …
-
- 1 reply
- 338 views
-
-
இலங்கையைத் தனிமைப்படுத்த முடியாது - என்கிறார் பிரதமர் மஹிந்த.! இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்கவோ, இலங்கையை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தவோ எந்த நாடும் நடவடிக்கை எடுக்காது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சி பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த பிரசாரத்தில் உண்மையில்லை. நாட்டுக்காகவே ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இணை அனுசரணை வழங்கியதில் இருந்து இலங்கை விலகியது. இணை அனுசரணை வழங்கியதில் இருந்து விலகியமை சம்பந்தமாக இலங்கைக்கு வேறு எந்த நாடும் எவ்வித அழுத்தங்களை கொடுக்க முடியாது. ஒரு நாட்டின் மீது பொருளாதார தடையை மனித உரிமை ஆணைக்குழுவால் விதிக்க முடி…
-
- 2 replies
- 913 views
-
-
ஜனாதிபதியிடம் ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள கோரிக்கை தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் வில்பத்து காடழிப்பு தொடர்பில் தன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக்குழு அமைத்தாவது உண்மைகளை வெளிப்படுத்துமாறு அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=126591
-
- 1 reply
- 282 views
-
-
இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதித்தது கட்டார் இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க கட்டார் தீர்மானித்துள்ளது. மார்ச் மாதம் 9ஆம் திகதி முதல் இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இலங்கை, சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, சிரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் வருகைக்கு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 3827 பேர் உயிரிந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முகமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, கட்டார் ஏர்வேஸ் ஏற்கனவே இத்தாலிக்கு செல்லும் விமான ச…
-
- 2 replies
- 753 views
-
-
மைத்திரியின் செயற்பாட்டில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன – ஆனந்த குமாரஸ்ரீ by : Dhackshala ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு, முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோரே பொறுப்புக் கூற வேண்டும் என ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரஸ்ரீ தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், முன்னாள் ஜனாதிபதியின் செயற்பாட்டில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார். மொனராகலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஆனந்த குமாரஸ்ரீ, “ஈஸ்டர் க…
-
- 0 replies
- 455 views
-
-
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டும் – மட்டக்களப்பில் உறவுகள் போராட்டம் by : Dhackshala இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் ஆரம்பமாகிய பேரணி, பிரதான வீதியூடாக காந்திபூங்கா வரையில் சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்…
-
- 0 replies
- 238 views
-
-
இலங்கையில் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு: சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கை இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி சர்வதேச மகளிர் தினம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் துஷ்பிரயோக வழக்குகளும், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளும், 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளும் பதிவாகியுள்ளமையை சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது. பாலியல் வல்லுறவு வழக்குகளில் 78, கடுமையான பாலியல் வன்முறை வழக்குகளில் 21 மற்ற…
-
- 0 replies
- 573 views
-
-
(எம்.மனோசித்ரா) பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பொது மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறுவதற்கும் பொறுப்பு கூறலை நிலைநாட்டுவதற்கும் தமது சொத்துக்கள் விபரங்களை பொது வெளியில் வெளிப்படுத்துமாறு ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தாம் ஊழலுக்கு எதிரான அர்ப்பணிப்புள்ளவர் என்பதையும் மிக வெளிப்படைத் தன்மை , பொறுப்புக் கூறுபவர் என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்த முடியும் என்றும் குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை பொது வெளியில் தெரியப்படுத்த முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த இந் நிறுவன…
-
- 2 replies
- 553 views
-
-
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பலமே மக்களின் விடுதலைக்கு உதவும் - மாவை கடந்த காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பலம் பெற்றிருந்ததோ அத்தகைய பலம் தொடர்ந்தும் இருப்பதன் மூலம்தான் எங்களது விடுதலையை நாங்கள் அடையமுடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார். நாவாந்துறையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஒன்றிணைந்து செயற்படுவதற்காகத்தான் கடந்த ஆட்சிக் காலத்தில் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டோம் ஆனால் தமிழ் மக்களுக்கு எல்லாம் கிடைக்கப்போகின்றது என்ற அற்ப நோக்கத்திற்காக அரசியல் சூழ்ச்சி செய்து நாம்மேற்கொண்டிருந்த அத்தனை நடவடிக்கைகளையும் இல்லாது செய்த…
-
- 9 replies
- 986 views
-
-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை இலங்கை வங்கிக் கிளைக்கு முன்னால் அமைந்துள்ள பிரதான வீதியை மோட்டார் சைக்கிள்களில் கடக்கும் போது தலைக்கவசம் அணியாமல் செல்வதால் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. விசேடமாக குறித்த பகுதியால் தலைக்கவசம் அணியாமல் செல்லும் மோட்டார் சைக்கிள் பயணிகள் போக்குவரத்து பொலிஸாருக்கு பயந்து அவசரமாக செல்வதினால் பயணிகள் விபத்துக்களை எதிர்கொள்கின்றனர். இதனைக் கருத்திற் கொண்டு அப்பிரதேச இளைஞரான மிப்ராஸ் என்பவர் அவ்விடத்தில் தலைக்கவசம் ஒன்றினை வைத்து அது தொடர்பான விளக்கத்தையும் காட்சிப் படுத்தியுள்ளார். குறித்த வீத…
-
- 4 replies
- 501 views
-
-
’கோட்டா, மஹிந்த இணைய முடியாது’ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இணைந்துச் செயற்பட முடியாதென மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மஹிந்தவுடன் ஒன்றிணைந்து செயற்பட முடியாதென்பதாலேயே கோட்ட 19ஐ இல்லாதொழிக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று(08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் http://www.tamilmirror.lk/செய்திகள்/கடட-மஹநத-இணய-மடயத/175-246566
-
- 1 reply
- 571 views
-
-
“கப்டன் பண்டிதர்” குடும்பம் நீதிமன்ற உத்தரவில் வீட்டில் இருந்து வெளியேற்றம்! by G. Pragas தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான “கப்டன்” பண்டிதரின் தாயார் சின்னத்துரை மகேஸ்வரி மற்றும் சகோதரன் ஆகியோர் தாம் குடியிருந்த வீட்டிலிருந்து நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்றைய (05) தினம் வெளியேற்றப்பட்டுள்ளனர். புலிகளின் முன்னாள் நிதி மற்றும் ஆயுதப் பராமரிப்பு பொறுப்பாளருமான கப்டன் பண்டிதர் 1985ம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பண்டிதரின் தாயாரும் இரண்டு சகோதரர்களும் யாழ்ப்பாணம் – கம்பர்மலையில் வசித்து வந்த நிலையில் இவர்களில் ஒரு சகோதரன் 2006ம் ஆண்டு சுட்டுக்…
-
- 17 replies
- 1.8k views
-
-
கொழும்பில் போட்டியில் இருந்து விலகியது கூட்டமைப்பு.! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இம்முறை போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நியமனக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. கொழும்பில் போட்டியிடுவதற்குப் பதிலாக, சட்டத்தரணி தவராசாவின் பெயரை தேசியப்பட்டியலில், முன்னுரிமைப்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://jaffnazone.com/news/16259
-
- 3 replies
- 834 views
-
-
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2020 மார்ச் 08 , பி.ப. 04:28 - 0 - 4 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கவனயீர்ப்புப் போராட்டமொன்று, மட்டக்களப்பு, காந்திபூங்கா முன்னால் இன்று (08) முன்னெடுக்கப்பட்டது. பெண்கள் கூட்டமைப்பும் அரச சாரா தொண்டு நிறுவனங்களின் இணையமும் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கவனயீர்ப்பில் பெண்கள், சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள், மதத் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இதன்போது, “அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்”, “அரசே!, பெண்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தியுள்ள அனைத்து நுண்கடன்களையும் இரத்துச் செய்” என்ற கோரிக்கைகளைப் பெண்கள் முன்வைத்தனர். ht…
-
- 0 replies
- 284 views
-
-
வடக்கில் முக்கிய தமிழ் அரசியல்வாதியை கொலை செய்ய சதி - ஆறு பேர் கைது - இலங்கையின் பாதுகாப்பு வட்டாரங்கள்தகவல் வடக்கில் முக்கிய தமிழ் அரசியல்வாதியொருவரை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சிகள் தெரியவந்துள்ளதை தொடர்ந்து வடக்குகிழக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்திவெளியிட்டுள்ளது. முக்கிய தமிழ் அரசியல்வாதியை கொலை செய்வதற்கு திட்டமிட்ட ஆறு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. வடபகுதியில் பயங்கரவாத விசாரணை பிரிவினரும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் இணைந்து வீடொன்றை முற்றுகையிட்டு சோதனையிட்டவேளை நவீன தொலைத்தொடர்பு கருவிகளையும் வெடிபொருட்களையும் மீட்டுள்ளனர் எனவும் டெய…
-
- 4 replies
- 908 views
-
-
இன்று உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி சர்வதேச மகளிர் தினம் 2020 அனுஷ்டிக்கப்படுகின்றது, இந்நிலையில் இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. மனித உரிமைகளை உலகெங்கும் வலியுறுத்தவும் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒர் இலாப நோக்கற்ற அமைப்பே சர்வதேச மன்னிப்பு சபை ஆகும். 2020 ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் வல்லுறவு வழக்குகளும், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளும், 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளும் பதிவாகியுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது. பாலியல் வல்லுறவு வழக்குகளில் 78, கடுமையான பாலியல் வன்முறை வழக்குகளில் 21 மற்றும் சிற…
-
- 0 replies
- 364 views
-
-
சாவகச்சேரிக்கு வந்த சீன பிரஜை..! பெரும் பீதியில் உறைந்த மக்கள், சுகாதார அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.! யாழ்.சாவகச்சேரி -நுணாவில் பகுதியில் ஒப்பந்த நிறுவனக் கட்டடம் ஒன்றில் தங்கியுள்ள சீன பணியாளர் ஒருவரால் சாவகச்சேரி பகுதியில் கொரோனா பீதி ஏற்பட்ட சம்வம் இடம்பெற்றுள்ளது. தென்மராட்சிப் பகுதியில் வீதி அமைப்பு ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் சீன பிரஜை ஒருவர் இலங்கையில் இருந்து கடந்த முதலாம் மாதம் 15 ஆம் திகதி சொந்த நாடான சீனாவிற்கு சென்றுள்ளார். சீனா சென்ற குறித்த நபர் மீண்டும் கடந்த இரண்டாம் திகதி இலங்கை திரும்பி சாவகச்சேரி-நுணாவில் பகுதியில் அமைந்துள்ள தனது ஒப்பந்த நிறுவனக் கட்டடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த…
-
- 0 replies
- 440 views
-
-
ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி வீணை சின்னத்திலேயே போட்டி - டக்ளஸ் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியானது அக் கட்சியின் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா யாழில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் அமைக்கப்பட்ட பனை தென்னை வள சகூட்டுறவுச் சங்கத்தின் புதிய கட்டிடத்தை நேற்று சனிக்கிழமை திறந்து வைத்திருந்தார். இதன் பின்னர் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் பல்வேறு கட்சிகளும் அதே போல புதிய புதிய கூட்டணிகளும் தேர்தலில் போட்டியிடுகின்ற …
-
- 2 replies
- 389 views
-
-
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவளிக்காமை தமிழ்கட்சிகள் இழைத்த மாபெரும் தவறு என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமராட்சியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் கட்சிகள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தன.இது சிங்கள மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு வழிவகுத்தது. எதனை குறித்தும் ஆராயாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த இந்த தீர்மானமானத்தினால் முழு சமூதாயத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தமிழ் மக்களுக்கான தீர்வ…
-
- 1 reply
- 637 views
-