ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
30/1 பிரேரணையில் இருந்து விலகத் தயார் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான 30/1 பிரேரணையிலிருந்து விலக அரசாங்கம் தயாராகி வருகின்றதென தெரிவிக்கும் சு.க செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி, அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கும் வகையில் 2015, 2016 ஆம்…
-
- 1 reply
- 380 views
-
-
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய அமெரிக்கா முயற்சி எடுக்கும் – கூட்டமைப்பிடம் அமெரிக்க காங்கிரஸ் உறுதி! இலங்கை அரசாங்கமானது தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதிசெய்யும் வகையில் அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேரா இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குழுவினரை தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், தேசிய பிரச்சினைக்கு தீர்…
-
- 2 replies
- 679 views
-
-
ஸ்ரீலங்கா இராணுவ உறுப்பினருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன்! Ronees முன்னாள் இராணுவ உறுப்பினர் ஒருவருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி மூதூர் பாரதிபுரத்தை சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தமை தொடர்பில் குறித்த முன்னாள் இராணுவ உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதற்கமைய வழக்கு விசாரணையில் அவருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 10 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும்…
-
- 0 replies
- 614 views
-
-
ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகள் சுயாதீனமாக இடம்பெறும் என்ற நம்பிக்கை இல்லை – பாலித by : Dhackshala ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கான நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாது போய்விட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்…
-
- 0 replies
- 527 views
-
-
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை வேடிக்கை பார்த்து இந்தியா வரலாற்று தவறை இழைத்துவிட்டது: விக்னேஸ்வரன் ஆதங்கம் “இலங்கைத் தமிழர் பிரச்சனையிலே இந்திய அரசு தனது தார்மீகப் பொறுப்பில் இருந்து தப்பியோட முடியாது. தமிழ் நாடு அதன் அங்கத்துவப் பிரதேசம் என்ற படியால் மட்டுமல்ல எதிர்கால பாரதநாட்டுப் பாதுகாப்பையும் உத்தேசித்தே இக்கூற்று பொருத்தமாகின்றது” என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார். “இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு, வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்த போராளிகளும் கொல்லப்பட்டபோது இந்தியா அதனை வேடிக்…
-
- 3 replies
- 555 views
-
-
யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தில் அம்மாச்சி உணவகம் திறந்துவைப்பு யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் இன்று திங்கட்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், அரச அதிபர் சமன் பந்துலசேன, வளாகத்தின் முதல்வர் ரி.மங்களேஸ்வரன், ஒருங்கிணைப்புகுழு தலைவரின் இணைப்பாளர் க. கணேசலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். சுமார் ஜந்து மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த உணவகத்தால் வளாகத்தில் கல்வி பயிலும் 1500 இற்கும் மேற்பட்ட மாணவர்களும் அதனை அண்டிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் பயனடையவுள்ளனர்.குறித்த அம்மாச்சி உணவகம் வவுனியா வளாகத்தினுள் அமை…
-
- 3 replies
- 1k views
-
-
நாடளாவிய ரீதியில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள போலி வைத்தியர்களை இனங்கண்டு தண்டிக்க நடைமுறையில் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாடுமுழுவதும் சுமார் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான போலி வைத்தியர்கள் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறான போலி வைத்தியர்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானோரை அடையாளம் கண்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார். எனவே, அவ்வாறான போலி வைத்தியர்களை இனங்கண்டு, அவர்களைத் தண்டிக்க நடைமுறையில் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருமாறு அரசாங்கத்தை…
-
- 0 replies
- 341 views
-
-
தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கை தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஞானசார தேரர்! சாய்ந்தமருதில் புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதைப் போன்று, தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருக்கும் கல்முனையிலும் தனிப் பிரதேச செயலகத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் “சாய்ந்தமருது தனி பிரதேச செயலக பிரிவாக பிரித்தமை உண்மையில் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதுதொடர்பில் இன்று பலரும் அச்சமடைந்து, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் எதிர்ப்பினை வெள…
-
- 0 replies
- 465 views
-
-
143 புதிய அரசியல் கட்சிகள் பதிவு – தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத் தேர்தல் தொடர்பாக புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான 143 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியுடன் நிறைவடைந்ததாகவும் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணையகம் முன்னெடுக்கும் என ஆணையகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதற்கிடையில், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் இன்று அல்லது நாளை கூடி எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர். புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய விண்ணப்…
-
- 0 replies
- 308 views
-
-
வர்த்தகமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு இம்மாதத்தில் வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார். யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகத்தனை திறந்து வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். இதன் போது மேலும் தெரிவிக்கையில், வவுனியா பல்கலைக்கழகம் தொடர்பாக வன்னி மக்களிற்கு விரைவில் ஒரு நற்செய்தி கிடைக்க இருக்கின்றது. இவ்விடயம் சென்ற அரசில் இருக்கின்ற அமைச்சர்களாலும் தொடர்ச்சியான சந்திப்புக்களாலும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடைய முயற்சியினாலும் இதற்குரிய அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அதில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக வர்த்தகம…
-
- 3 replies
- 781 views
-
-
யாழ்.மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபர் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள கணபதிப்பிள்ளை மகேசன் முன்னதாக மட்டக்களப்பு வாழைச்சேனை, வவுணதீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக பதவி வகித்துள்ளார்.அத்துடன் கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பதில் உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளதோடு, உணவு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். இந்நிலையில் யாழ்.மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று திங்கட்கிழமை காலை தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.(15) http://www.samakala…
-
- 9 replies
- 769 views
-
-
-செ.கீதாஞ்சன் கொழும்பில், சட்டப் புத்தகங்களைச் சுமந்தவர்களே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பலவீனத்துக்குக் காரணமானவர்களென, வடக்கு மாகாண சழபயின் முன்னாள் உறுப்பினர் எஸ்.மயூரன் தெரிவித்தார். முல்லைத்தீவில், நேற்று (15) நடைபெற்ற டெலோ கட்சியின் மாவட்ட அலுவலகத் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், கூட்டமைப்பு பலவீனமடைந்து செல்வதற்கு, தமிழீழ விடுதலை இயக்கம் காரணமில்லையெனத் தெரிவித்தார். சட்டப் புத்தகங்களைச் சுமந்தவர்களும் எழுதியச் சட்டங்களை வாசித்தவர்களுமே. இன்று வடக்கில் தமிழ்மக்களுக்காக கதைத்துக்கொண்டிருக்கின்றார்களெனவும், இதை பார்ப்பதற்குக் கேவலமாக இருப்பதாகவும் கூறினார். http://w…
-
- 4 replies
- 1k views
-
-
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தனது ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்நின்று செயற்பட்ட தளபதிகளில் ஒருவராவார். அந்தவகையில் நாடு என்ற ரீதியில் நாம் அவருக்கு ஆதரவாக செயற்பட வேண்டும்” என சஜித் பதிவேற்றியுள்ளார். இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது. அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் இவ்விடயம் தொடர்பான அறிவித்தலை நேற்று முன்தினம் விடுத்…
-
- 26 replies
- 2.1k views
-
-
(எம்.மனோசித்ரா) ' நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு ' தேசிய கொள்ளைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்படும் வெகுசன ஊடகக் கொள்கையின் படி வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்காக நாடு முழுவதிலிருந்தும் அனைத்து வெகுசன ஊடகவியலாளர்களின் தகவல்களையும் சேகரிக்க தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதற்காக கடந்த ஆண்டு அல்லது இவ்வாண்டு அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்ட வெகுசன ஊடகவியலாளர்களிடம் இருந்து மாத்திரம் தகவல்கள் திரட்டப்படவுள்ளன. இதற்காக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் www.media.gov.lk இணையதளம் ஊடாக பதிவிறக்கம் செய்து கொள்ள அல்லது அமைச…
-
- 1 reply
- 320 views
-
-
நாளை நடைபெறவுள்ள காதலர் தினத்தை முன்னிட்டு, யாழ்.நகரில் திடீரென முளைத்த ‘காதல் பரிசுக் கடைகளில்’ இளைஞர், யுவதிகள் கூட்டம் அலைமோதியது. யாழ் வைத்தியசாலை வீதியில் அமைக்கப்பட்ட இவ்வாறான அங்காடி ஒன்றில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காதல் பரிசுகளை இளையோர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றதை அவதானிக்க முடிந்தது. “காதலையும் வியாபாரமாக்கி விட்டார்களே” என இதனை அவதானித்த பலரும் விசனமடந்தனர். https://newuthayan.com/யாழ்-நகரில்-சூடுபிடித்த/
-
- 29 replies
- 2.6k views
-
-
இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தாபய தெரிவு செய்யப்பட்ட பின்னர் காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் அவர்களிற்கு ஆதரவாக செயற்படும்மனித உரிமை செயற்பாட்டாளர்களிற்கு எதிரான படையினரினதும் புலனாய்வு பிரிவினரினதும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச மனிதஉரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வடகிழக்கின ஆறு பகுதிகளில் காணாமல்போனவர்களினது குடும்பத்தவர்களின் சார்பில் செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தின் கண்காணிப்பு நடவடிக்கையும் மிரட்டல்களும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சமீபத்தை சந்திப்பொன்றிற்கு முன்னதாக காணாமல்போனவர்களின் தாய்மார்க ள் ஒவ்வொருவரிற்கும் ஆகக்குறைந்த…
-
- 1 reply
- 419 views
-
-
MCC ஒப்பந்ததம் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் தொடர்பான பேராசிரியர் லலிதசிறி குனருவன் தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. http://www.tamilmirror.lk/செய்திகள்/MCC-ஒபபநதம-அறகக-ஜனதபதயடம-கயளபப/175-245661
-
- 2 replies
- 719 views
-
-
அரசியல் பழிவாங்கல் குறித்த விசாரணைகள் ஆரம்பம்! 2015ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி வரை இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இன்று(திங்கட்கிழமை) முதல் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரட்னவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழு தமது அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது. இதற்கமைவாக ஆணைக்குழுவிற்கு எதிர்வரும் 20ஆம் திகதி வரை முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும். கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் ஊடாக சாட்சியங்கள் தற்போது பதிவு செ…
-
- 2 replies
- 567 views
-
-
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் சகோதரரான முத்தையா பிரபாகரன் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தான் போட்டியிட உள்ளதாக முன்வைக்கப்படும் தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், மலையக சமூகத்தின் மீது அக்கறை கொண்டே தனது சகோதரர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தால் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாமல் போயுள்ளமை வருத்தத்துக்குரியதென தெரிவித்துள்ள அவர், அதற்காக ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் புதிய வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். http://www.tam…
-
- 0 replies
- 435 views
-
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு தீர்வு
-
- 0 replies
- 320 views
-
-
இருபத்திரெண்டாக காணப்படுகின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பத்தாகா குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தேசியத்தில் பேரினவாத சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் இருபத்திரெண்டு உறுப்பினர்களை பத்தாக குறைத்து பின்னர் அதனை அடுத்த தேர்தலில் ஆறாக மாற்றுவதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. இந்த சதி குறித்து நாம் …
-
- 0 replies
- 337 views
-
-
(இராஜதுரை ஹஷான்) இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டுள்ள தடையினை ஆளும் தரப்பினர் பொதுத்தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்று ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். சிறந்த அரசாங்கத்தை உருவாக்க தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவால் ஒருபோதும் குறிப்பிடமுடியாது. நல்லாட்சியின் நோக்கத்தை இவரே இல்லாதொழித்தார் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு …
-
- 0 replies
- 415 views
-
-
சவேந்திர சில்வா விவகாரம்: இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா விதித்துள்ள தடை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக விளக்கமளிக்க இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தூதரை இன்று முற்பகல் வெளிவிவகார அமைச்சுக்கு வருமாறு தான் அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா மற்றும…
-
- 2 replies
- 528 views
-
-
சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் தடையானது எமது நாட்டின் கெளரவம் மற்றும் இறையாண்மைக்கு விடுக்கும் அச்சுறுத்தலாகும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார். அத்துடன் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர மற்றும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஆகியோரே காரணமாகும். யுத்தக்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்க தீர்மானித்தது. அதற்கான ஆவணத்தில் மங்கள சமரவீர கைச்சாத்திட்டிருந்தார். ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமையவே மங்கள சமரவீர இதனை மேற்க…
-
- 0 replies
- 243 views
-
-
யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது- சுரேஷ் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளது என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது என தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கல்முனையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் கூறுகையில், “ஐக்கிய நாடுகள் சபையில் மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு, இலங்கையில் யுத்தம் நடைபெற்ற நிலையில் அப்போது இடம்பெற்ற மனித உரிமை விடயங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜெனிவா…
-
- 3 replies
- 469 views
-