ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
இராணுவத்தின் ஒத்துழைப்புடன் 32 இலட்சம் கிலோ நெல் கொள்வனவு நெல் சந்தைப்படுத்தல் சபை, கடந்த இரண்டு வார காலத்திற்குள் 163,430,000 ரூபா பெறுமதியான 3,268,600 கிலோ நெல்லை கொள்வனவு செய்வதற்கு இலங்கை இராணுவம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதற்காகவும் அரிசி வர்த்தகத்தில் நிலவும் அரிசி மாஃபியாவை முறியடிக்கும் நோக்குடனும் இலங்கை இராணுவம் நெல் கொள்வனவில் ஈடுபட்டுள்ளது. நெல் சந்தைப்படுத்தும் சபை, இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லினை கொள்வனவு செய்கின்றது. நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு படை தலைமையகங்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம், மாவட்…
-
- 2 replies
- 759 views
- 1 follower
-
-
-எஸ்.நிதர்ஷன் புதிய கூட்டணியானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் “பி“ அணி என்றுத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூட்டமைப்புக்கும் இந்தக் கூட்டணிக்கும் கொள்கையில் வித்தியாசமில்லையென்றும் கூறினார். யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், நேற்று முன்தினம் (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், இன்றைக்கு, வடக்கு. கிழக்கில். இரண்டாம் பெரும் கட்சியாக தாங்கள் இருப்பதாகவும் தங்களுடைய வளர்ச்சியைத் தடுப்பதற்காக, கொள்கை ரீதியாக எந்தவிதமான வித்தியாசமும் இல்லாமல் இன்னுமொரு மாற்று அமைப்பு என்று கூறிக் கொண்டு, ஒரு சிலர் செயற்படுவதாகவும் சாடினார். இவர்கள், வ…
-
- 1 reply
- 1.2k views
-
-
போராட்டங்களை சீா்குலைக்க கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் தலைமையில் பாாிய சதி..! உறவுகள் குற்றச்சாட்டு.. காணாமல் ஆக்கப்பட்டவா்களை பிாித்தாழும் தந்திரம் ஊடாக மக்களின் கோாிக்கையினை மழுங்கடிக்க கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் முயற்சித்துக் கொண்டிருப்பதாக வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர். இன்று காலை 11.30 மணியளவில் கிளிநாச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு குற்றம் சாட்டினர்.ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா, வலிந்து காணாமல் ஆக்கப்பட்…
-
- 1 reply
- 1.1k views
-
-
நான் நிதியை திருப்பி அனுப்பினேனா? மஹிந்தவின் கருத்தால் பொங்கி எழுந்த விக்கி! by : Jeyachandran Vithushan மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக இருந்தவர்களே வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியிருப்பார்கள் என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விக்னேஸ்வரன் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் திருப்பி அனுப்பிவிட்டார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் தெரிவித்த கருத்து தொடர்பாக வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் போய் எங்களைக்…
-
- 6 replies
- 1.7k views
-
-
(எம்.மனோசித்ரா) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் வழங்குவது தொடர்பில் முத்தரப்பு உடன்படிக்கை நாளை கைசாத்திடப்பட மாட்டாது. இந் நிகழ்வு எதிர்வரும் இரு தினங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் உப தலைவர் பழனி சக்திவேல் இதனை உறுதிப்படுத்தினார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நாளை இடம்பெறும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்க பிரதிநிதிகள் , பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் , அரசாங்க தரப்பினர் என மூன்று தரப்புகளும் இவ் ஒப்பந்தத்தில் கைசாத்திடவிருந்தமை குறிப்பிடத்தக்கது…
-
- 0 replies
- 411 views
-
-
திருகோணமலை – கிளிவெட்டி, குமாரபுரம் படுகொலையின் 24ஆவது ஆண்டு நினைவேந்தல், குமாரபுரம் கிராம மக்களின் ஏற்பாட்டில், குமாரபுரம் படுகொலை நினைவு தூபியில் நேற்று (11) மாலை நடைபெற்றது. இதன்போது, குமாரபுரம் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற பூசை வழிபாடுகளில் முன்னதாக ஈடுபட்ட உறவினர்கள், உயிரிழந்த தமது உறவுகளுக்கு மலர்தூவி, சுடரேற்றி, அஞ்சலி செலுத்தினர். இந்த நினைவேந்தலில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ண சிங்கமும் கலந்துகொண்டார். 1996.02.11 அன்று இடம்பெற்ற குமாரபுரம் படுகொலையில், 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட 09 பிள்ளைகள், 09 பெண்கள் உட்பட 24 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 26 பேர் இதில் படுகாயமடைந்தனர். http://www.tamilmirror.lk/திருகோணமலை/குமா…
-
- 0 replies
- 366 views
-
-
இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை 2.34 மணிக்கு 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை இன்று அதிகாலை 2.34 மணிக்கு விடுக்கப்பட்டிருந்தது. வளிமண்டலவிய…
-
- 0 replies
- 344 views
-
-
அடுத்த 25 வருடங்களுக்கு ஐ.தே.க.வினால் ஆட்சியமைக்க முடியாது – அமைச்சர் நிமல் by : Jeyachandran Vithushan அடுத்த 25 வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியினால் ஆட்சிக்கு வர முடியாத நிலை காணப்படுவதாக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஊவா பரணகம பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினையே காரணம் எனக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலின்போது பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டுவந்தன. என்றாலும் அனைத்து சக்திகளுக்கும் …
-
- 0 replies
- 237 views
-
-
ரஞ்சனின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு! by : Jeyachandran Vithushan நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பிணை கோரிக்கை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரை தொடர்ந்தும் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிபதிகளில் விடயங்களில் தலையீடு செய்தமைக்காக அரசியலமைப்பின் 111 சி (2) வது பிரிவை மீறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. சமூக ஊடகங்களில் வெளியான அவரது சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள…
-
- 0 replies
- 243 views
-
-
இலங்கைத் தமிழர்கள் உரிய கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும்.. - இந்திய பிரதமர் நரேந்திர மோடி February 8, 2020 இலங்கையில் வாழும் சிறுபான்மையின தமிழ் மக்கள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் உரிய கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நான்கு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று (08) புது டெல்லியில் அமைந்துள்ள ராஸ்டிரபதிபவனில் பாரத பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பின் பின்னர் இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். இதன்போதே இந்திய பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கரு…
-
- 19 replies
- 1.3k views
-
-
இந்திய பிரதமரை சந்தித்தார் பிரதமர் மகிந்த இந்தியாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பயணமான பிரதமர் மகிந்த ராஜபக்ஷ டெல்லியில் உள்ள ஐதரபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்தி மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நேற்று டெல்லியை சென்றடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்திய மத்திய அமைச்சர் சஞ்சய் தோத்ரே வரவேற்றுள்ளார். டெல்லியை சென்றடைந்த சென்றடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில், வாரணாசி, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு மகிந்த ராஜப…
-
- 5 replies
- 753 views
-
-
தமிழர்களின் அடிப்படை கோரிக்கைகளை ஏற்கக்கூடிய எந்த தரப்பினரும் எங்களுடன் இணைய முடியும் – சுரேஸ் by : Dhackshala தமிழ் மக்களுடைய அடிப்படை கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்த தரப்பினரும் தங்களுடன் இணைந்துகொள்ள முடியும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிவித்தல் விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைச்சாத்திடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்த அவர், “தமிழ் மக்களுடைய அடிப்படை கோரிக்கைகளான ச…
-
- 2 replies
- 379 views
-
-
பகிடிவதைக் குற்றச்சாட்டு: இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட மாணவனின் வீடு மீது தாக்குதல்! பகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய மாணவன் ஒருவருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த மாணவனின் வீட்டுக்குச் சென்ற நால்வர், மாணவன் அங்கு இல்லாத சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து உடைத்துவிட்டுச் சென்றுள்ளனர் . இந்தச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணியளவில் இடம்பெற்றது. வீட்டுக்குள் நுழைந்த நால்வர், மாணவனை அழைத்துள்ளனர். அவர் அங்கில்லாத நிலையில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த…
-
- 1 reply
- 755 views
-
-
சிறிய மற்றும் மத்தியதர கைத்தொழில் ஊக்குவிப்பு அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக, 1 பில்லியன் ரூபாய் நட்டயீடு கோரி, வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். மேற்படி அமைச்சில், நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துரைத்த அமைச்சர் விமல் வீரவன்ச, தன்னைப்பற்றி உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்டமைக்கு எதிராகவே தான் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், அமைச்சர் விமல் வீரவன்ச தன்னைப்பற்றி போலியானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் எனவும் அமெரிக்காவில் தான் வங்கிக் கணக்கொன்றை வ…
-
- 1 reply
- 363 views
-
-
‘கூட்டமைப்புக்கும் த.தே.ம.முக்கும் தலை வலி’ -என்.ராஜ், செந்தூரன் பிரதீபன் மாற்றுத் தலைமை உருவாக்கத்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தலைவலியைச் சந்தித்துள்ளதாக, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - கட்டப்பிராயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் வழங்கிய ஆணைகளில் இருந்து விலகி, வேறு வழியில் தடம்மாறி சென்றதன் காரணமாகவே, புதிய கூட்டணி உருவாகியதாகவும் கூறினார். அத்துடன், புதிய கூட்டணி …
-
- 2 replies
- 671 views
-
-
சமூக ஊடகங்களும் செய்தித்தளங்களும் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும் -யாழ் பல்கலை மாணவர்கள் வேண்டுகோள் உள்நாட்டிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் யாழ் பல்கலைக்கழகம் அதிகமாக கவனம் பெறும் இடமாக காலங்காலமாக அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது.எனவே இங்கே இடம்பெறும் சிறிய தவறுகளும் உடனடியாக ஊடக வெளிகளில் படம்போட்டு காட்டப்படுகின்றன. அவ்வாறான ஒரு விடயமாகவே இந்த பகிடிவதை சம்பவமும் அமைந்திருக்கின்றது.குறித்த பகிடிவதை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மாணவர்கள் ஒழுக்காற்று அதிகாரிகளினால் பூரணமாக விசாரணை செய்யப்பட்டு குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.குறித்த விடயம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் திரிவுபடுத்தப்பட்ட கருத்துக்களும் சம்பவங்களும் தொடர்பில் சமூக ஊடக உரி…
-
- 11 replies
- 1.3k views
-
-
தீமையளிக்கக் கூட நினைக்காத தமிழ் சமூகம் இன்று தீமையை நோக்கிச் செல்கிறது- வடக்கு ஆளுநர் மற்றவர்களுக்குத் தீமையளிக்கக் கூட நினைக்காத எமது சமூகம் இன்று தீமையை நோக்கிச் செல்கிறது என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். அத்துடன், யாழ். பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பகிடிவதை நடைபெற்றதாக வெளியான செய்திகள் தொடர்பாக தனக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். யாழில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவ்வாறு இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “வடக்கு மாகாண மக்களுக்கான சேவைகளை என்னால் மாத்திரம் தனியே முன்னெடுக்க முடியவில்லை. எல்லோருடைய ஒத்துழைப்ப…
-
- 1 reply
- 567 views
-
-
சீனாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மாணவர்களை இராணுவ முகாமிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்டு, தியத்தலாவை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 33 மாணவர்களும் 16ஆம் திகதி அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தலைமை தொற்று நோயியல் நிபுணர் சுதாத் சமரவீர தெரிவித்தார். குறித்த 33 மாணவர்களும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி கெரோனா வைரஸ் பரவலின் மையமாக விளங்கிய சீனாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, இவ்வாறு தியத்தலாவை முகாமில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே மாணவர்களின் வெளியேற்றம் குறித்து கருத்து தெரிவித்த தொற்று நோயியல் நிபுணர் சுதாத் சமரவீர இவ்வாறு கூறினார். அத்துடன் 33 மாணவர்களும் கொரோனா தொற்…
-
- 0 replies
- 265 views
-
-
நான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவல் சம்பவங்கள் அதிகரிப்பு – சுற்றுலாப்பயணிகளுக்கும் தடை! நான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஜானக ஹந்துன் பத்திராஜ இதனைத் தெரிவித்துள்ளார். பதுளை, மொனராகலை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் காட்டுத் தீ பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திட்டமிட்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு எவரேனும் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். …
-
- 0 replies
- 363 views
-
-
பாலியல் ரீதியான பகிடிவதைக்கு எதிராக யாழில் போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ரீதியான வன்முறைகளுக்கு எதிராக பெண்கள் அமைப்பினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, பாலியல் வன்முறை மற்றும் பகிடிவதைக்கு எதிராக கோசமிட்டனர். ‘மகிழ்ச்சியான பல்கலைக்கழக வாழ்க்கையை மரணத்தில் முடிக்காதே’, ‘தற்கொலை சிந்தனையை தூண்டும் பகிடிவதை தேவைதானா’, ‘நாட்டிலும் வீட்டிலும் பெண்கள் சமத்துவ…
-
- 4 replies
- 1k views
-
-
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவின் புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவியேற்றார் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மனோஜ் ரணகல பதவியேற்றார் மும் மத தலைவர்களிள் ஆசீர்வாதத்துடன் பதவியேற்பு நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.36 மணியளவில் இடம்பெற்றது. கொழும்பு மத்தி பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய மனோஜ் ரணகல, இடமாற்றலாகி யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவியேற்றுக்கொண்டார். இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடமையாற்றியவர் தற்போது கொழும்புக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழ்ப்பாண-பொலிஸ்-பிரிவின/
-
- 1 reply
- 721 views
-
-
விடுவிக்கப்பட்ட காணிகளை விரைவில் பயன்படுத்துங்கள் – வடக்கு ஆளுநர் பணிப்பு! by : Jeyachandran Vithushan விடுவிக்கப்பட்ட காணிகளை இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மக்கள் பாவனைக்கு உட்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த அறிவிப்பை பிரதேச செயலாளர்கள் காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறும் அவர் கூறியுள்ளார். ஆளுநர் செயலகத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதேச செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதன்போது, யாழ். மாவட்டத்திலுள்ள மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, வீட்டுத்திட்டம், வீடமைப்பு என்பவற்றின் உண்மை நிலவரங்களை பிரதேச செயலாளர்களிடம் தனித்தனிய…
-
- 1 reply
- 460 views
-
-
கடத்தி வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட, பொய்யான தகவல்களை வழங்கி தேசத்தை அசெளகரியபப்டுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் வீசா பிரிவின் பெண் ஊழியர் கானியா பனிஸ்டர் பிரான்சிஸ் குறித்த தொலைபேசி தரவுகளை மையப்படுத்திய விசாரணைகள் தொடர்வதாக சி.ஐ.டி. இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தது. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பெற்றுக்கொள்ளப்பட்ட, சுவிட்சர்லாந்து தூதரகத்தின் வீசா பிரிவின் சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி கானியா பனிஸ்டர் பிரான்சிஸ், அவரது கணவர் மற்றும் அவரது மகளின் வகுப்பாசிரியையாக கடமையாற்றிருந்த ஆசிரியை ஒருவர் ஆகிய மூவரி…
-
- 2 replies
- 560 views
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய கோட்டாபய ராஜபக்ச அமோக வெற்றி பெற்று ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றதில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய நாட்டிற்கு நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகின்றார். ஆனாலும் அவை அனைத்தும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பாண்மையை பெற்றுக்கொள்வதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றன என ஒருசாரார் குற்றஞ்சாட்டிவருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதியாக கோட்டாபய பதவியேற்ற பின்னர் அரச அலுவலகங்களிற்கு தானே நேரில் சென்று கண்காணித்துவந்தார். அந்தவகையில் இன்றும் ஜனாதிபத…
-
- 2 replies
- 513 views
-
-
-டி.விஜித்தா, சண்முகம் தவசீலன் நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்று (11), நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது. அந்த வகையில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலர், மாவட்டச் செயலகங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். முல்லைதீவு மாவட்டத்தில் இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர் இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேசச் செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 18 வயது முதல் 29 வயதுகிடைப்பட்ட இளைஞர், யுவதிகள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். இம்முறை, வடக்கில் உள்ள இளைஞர் கழகங்களை சாராத இளைஞர்கள் மற்…
-
- 1 reply
- 412 views
-