Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இணையத்தள நிதி மோசடி – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை இணையத்தள நிதி மோசடிகளினால் ஏமாந்துவிடாது, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வலியுறுத்தியுள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளம் ஊடாக பல நிதி மோசடிச் சம்பவங்கள் பாதிவாகியுள்ளதாக இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ராஜீவ் யாசிரு குருவிடேஜ் குறிப்பிட்டுள்ளார். இணையத்தளமூடான வர்த்தக செயற்பாடுகள் தொடர்பான போர்வையில் இத்தகைய மோசடிக்காரர்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஒரு சேவையை வழங்குவதற்கு முன்னர் தமது வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடுமாறு மோசடிக்காரர்கள் வலியுறுத்தி, நிதி மோசடிச் செயலில் ஈடுபடுவதாகவும் குருவிடேஜ் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இவ்வாறான இணையத…

  2. யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் தலை தூக்கும் பகிடி வதை பகிடிவதை காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட புதுமுக மாணவன் ஒருவன் தவறான முடிவு எடுத்து உயிரிழக்க முயற்சித்த நிலையில், அதிகாரிகளின் தலையீட்டால் மாணவன் காப்பாற்றப்பட்டான்.யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கலைப்பீட புதுமுகமாணவனை, மூத்த மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த புதுமுக மாணவன் தான் உயிரிழக்கப் போவதாக சக மாணவர்களிடம் நேற்றுமுன்தினம் கூறியுள்ளார். இந்தத் தகவலை சக மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் விசாரணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டார்.விசாரணையின் போது கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முக்கிய பொறுப்பில்…

  3. தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட சிறிய முன்னேற்றம் சவேந்திர சில்வாவின் தடை குறித்து கூட்டமைப்பு இலங்கை இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்க இராஜ்யத்தினுள் நுழைவதை அமெரிக்கா தடை செய்து கட்டளை பிறப்பித்துள்ளது.போரின் இறுதிக்கட்டத்திலே இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் ஆக்கியவற்றிக்கான ஆதாரங்களின் அடிப்படையில் 58வது பிரிவின் கட்டளை தளபதியாக இருந்த ஷவேந்திர சில்வா பொறுப்பு கூறவேண்டியவராகின்றார்.இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட வேளை மேற்குறித்த அதே காரணங்களின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரது நியமனத்தினை கண்டித்திருந்தது. இந்நிலையில் இலங்க…

  4. கொல்லப்பட்ட மகனின் நீதிக்காக போராடிய தாயார் உயிரிழப்பு திருகோணமலை மாணவர் படுகொலை கடந்த 2006 ஜனவரி 2ஆம் திகதி மாலை இடம்பெற்றது. உயர்தர பரீட்சைக்கு பின்னர் பல்கலைகழகம் உள்ளிட்ட வாய்ப்புக்களை எதிர்நோக்கியிருந்த மாணவர்களே படையினரால் அழைத்துச் செல்லப்பட்டு காந்தி சுற்று வட்டத்தின் அருகில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களில் ஒருவரான மனோகரன் ரஜித்தர் என்ற மாணவனின் தாயார் உயிரிழந்துள்ளார்.தனது மகனின் படுகொலைக்கு உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் நீதி கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், அதற்கான நீதியை பெற்றுக்கொள்ளாமலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும…

  5. பிரதமரின் கருத்தை மறுதலிக்கும் கூட்டமைப்பு அதிகாரப் பகிர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆர்வம் காட்டவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ வெளியிட்டுள்ள கருத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுதலித்துள்ளது. 13 ஆம் திருத்தத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம், அதிகாரப் பகிர்வுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆர்வம் காட்டவில்லை எனவும், மாறாக இலங்கையிலுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் ஏற்றுக்கொள்ளாத விடயங்களைக் கோருவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது ‘தி ஹிந்து’-விற்கு தெரிவித்திருந்தார். எனினும், பிரதமரின் இந்த குற்றச்சாட்டினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்றாக மறுதலித…

  6. இலங்கை தொடர்பாக விரைவில் தீர்மானம் – சம்பந்தருக்கு ஐரோப்பிய ஒன்றியம் வாக்குறுதி! தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நிர்வாக இயக்குனர் பவோலா பம்பலோனி தலைமையிலான குழுவினர் கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போது கடந்த காலங்களில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடைமுறைகள் தொடர்பாக இரா. சம்பந்தன் தெளிவுபடுத்தினார். மேலும் இலங்கை அரசாங்கமானது ஐரோப்பிய ஒன்றியம் அங்கம் வகித்த இணைத்தலைமை நாடுகள் இந்தியா ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளிற்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார். விடுதலைப்புலி…

  7. தனி சிங்கள அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற கருத்தானது ஈழ போராட்டம் முன்னெடுப்பதை மேலும் வலுப்படுத்தும் ஞானசார தேரரின் தனி சிங்கள அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற கருத்தானது ஈழ போராட்டம் முன்னெடுப்பதை மேலும் வலுப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.ஒரு நாட்டில் ஒரு சட்டத்தையே அனைத்து இன மக்களும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையினை நிறைவேற்றுவதற்கு முழு ஒத்துழைப்பினையும் பெரும்பாலான மக்கள் வழங்க வேண்டும் என விசக்கருத்தை விதைத்திருக்கிறார். நாட்டின் முக்கியமான தேர்தல் ஒன்று நெருங்கும் நேரத்தில் இவ்வாறான கருத்துகளை தெரிவித்து நாட்டி…

    • 3 replies
    • 576 views
  8. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் எதிர்காலம் தானாகவே இல்லாமல் போய்விடும் -என்.சிறீகாந்தா தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் தற்போதைய சூழ்நிலையில் தமிழ் தேசிய கட்சிகள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஒன்றுபட வேண்டும் என்றே நாம் விரும்பினோம். அதனையே நாம் வலியுறுத்தி வந்தோம். அந்த அடிப்படையிலேயே தற்பொழுது நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்கி உள்ளோம்.தமிழ் தேசிய மக்கள் முன்னணி தான், தாங்களே மாற்றுத் தலைமை என்றும் அதனை மழுங்கடிக்கவே தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். அவ்வாறான எந்த தேவைகளும் எமக்கு கிடையாது ஏனெனில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் தா…

    • 6 replies
    • 723 views
  9. -என்.ராஜ் சர்வதேச ரீதியில் கூகுள் நடத்திய கூகுள் கோட் இன் - 2019 (Google Code – In 2019) போட்டியில், யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மாணவன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். நித்தியானந்தன் மாதவன் என்ற மாணவனே, இவ்வாறு வெற்றி பெற்றுள்ளார். இவருக்கான கௌரவிப்பு விழா, கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமையகத்தில், ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில், 76 நாடுகளைச் சேர்ந்த 3,566 மாணவர்கள் பங்கேற்றனர். இதன்போது, 29 திறந்த மூல நிறுவனங்களுடன் 20 ஆயிரத்து 840 இடுபணிகள் (tasks) வழங்கப்பட்டன. இதில் “Apertium” என்ற மென்பொருள் தொடர்பில், குறித்த மாணவன் முதலிடத்தைப் பெற்று, Grand Prize Winner பட்டத்தை வென்றுள்ளார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்…

    • 13 replies
    • 1.5k views
  10. யாழ்.மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமனம்! யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய அரசாங்க அதிபர் வேதநாயகன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளமை காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இவர் முன்னதாக வாழைச்சேனை, வவுனத்தீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக பதவி வகித்துள்ளார். இதேவேளை, கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பதில் உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளதோடு, உணவு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவு…

  11. நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது, அன்னம் சின்னத்திலேயே போட்டியிடுவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அணியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அணியும் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது. இன்று மாலை, ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையே இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/யனயம-இலல-இதயமம-இலல-அனனம-இறத/150-245533

  12. எஸ்.கணேசன் "பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாவையே வாங்கிக்கொடுக்க முதுகெழும்பற்ற - செல்லாக்காசு அரசியல் வாதிகளுக்கு - ஆயிரம் ரூபாய் தொடர்பில் கதைப்பதற்கு எவ்வித அருகதையும் கிடையாது. வழங்கப்பட்ட உறுதிமொழியின் பிரகாரம் மார்ச் முதலாம் திகதி முதல் நிச்சயம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும்." - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். இன்று (14) டயகம நெட்போன் பிரதேச பாடசாலையின் கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறியதாவது, " கோட்டாபய ராஜபக்‌ஷ என்பவர் அரசியல்வாதி கிடையாது, அவர்…

    • 0 replies
    • 462 views
  13. -மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வரலாற்றில் முதற்றடவையாக நரம்பியல் வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வரலாற்றில் இதுவரை காலமும் நரம்பியல் வைத்தியர் ஒருவர் இன்றியே காணப்பட்டு வந்த நிலையில், முதற்றடவையாக தற்போது நரம்யில் வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும் நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்குச் சென்ற நோயாளிகள் இனிவரும் நாள்களில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தங்களது சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடியும். http://www.tamilmirror.lk/வன்னி/களநசசகக-நரமபயல-வததய-நபணர-நயமனம/72-245522

    • 0 replies
    • 370 views
  14. இறுதி தீர்மானத்திற்கு கூடிய ஐக்கிய தேசிய கட்சி! உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பில் இறுதி தீர்மானம் ஒன்றை எட்டுவதன் நோக்குடன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தரப்பினர் மற்றும் சஜித் பிரேமதாச தரப்பினருக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இன்று (14) பிற்பகல் 02.30 க்கு இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (14) முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின்னர் அவர் இதனை தெரிவித்தார். ´சமகி ஜனபல வேகய´ என்ற பெயரில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் கீழ் பாராளுமன்ற தேர…

    • 1 reply
    • 403 views
  15. இலங்கை அரசாங்கம்; வலுக்கட்டாயமாக காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு நீதி உண்மை மற்றும் இழப்பீடு ஆகியவற்றை வழங்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பில் இன்று காணாமல்போனவர்களின் உறவினர்கள் மேற்கொள்ளவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச மன்னிப்புச்சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இன்றைய நினைவுகூறல் என்பது தங்கள் அன்புக்குரியவர்கள் குறித்த பதிலுக்காக  வலுக்கட்டாயமாக காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் வலிமிகுந்த நீண்ட கால காத்திருப்பை நினைவுபடுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார். உலகின் பல பகுதிகளை …

  16. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் மன்னார் நகர் மத்தியில் ச.தொ.ச. கட்டுமான பணியின்போது கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் மீட்கப்பட்டதடயப்பொருட்களை பகுப்பாய்வு செய்வதற்காக தரப்படுத்த சென்றபோது மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரியின் பொறுப்பிலிருந்த பாதுகாப்பு அறைக் கதவு கைபிடி உடைந்தும் யன்னல் திறந்திருந்தும் காணப்பட்டதால் பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் இவ் வழக்கில் முன்னிலையான அரச சட்டவாதி காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர் சார்பாக ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி மீது தகாத வார்த்தையை பிரயோகித்தமையால் சட்டத்தரணிகள் வெளிநடப்பு செய்தனர். 2018 மார்ச் மாதம் மன்னார் நகரில் கண்டு பிடிக்கப்பட்ட மன்னார் ச.தொ.ச. புதை குழி வழக்கு கடந்த திங்கட…

    • 0 replies
    • 416 views
  17. ரிசாட் மனைவியின் மற்றுமொரு வீடு....! .sl_box{ margin-bottom: 5px !important; } .sl_box3{ padding-top: 12px !important; } நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது மொத்த கூட்டுறவு விற்பனை நிலையமான சதொசவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கள்கள் தொடர்பிலான ஆவணங்கள் மீட்கப்பட்ட வீடானது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் மனைவிக்கு சொந்தமான வீீடு என குற்றப்புலனாய்வு திணைக்களம் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது. ஆவணங்கள் மீட்கப்பட்ட குறித்த வீடானது வௌ்ளவத்தையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கத…

  18. 33 பேரும் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு சீனாவின் வுஹானிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், தியத்தலாவை இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்ட 33 பேர், இன்று (24) பிற்பகல் தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த 33 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட வைத்தி பரிசோதனைகளின் போது, எவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என்று தெரியவந்தது. இந்த நிலையில், அவர்கள் தியத்தலாவை இராணுவ முகாமிலிருந்து அக்குரேகொட இராணுவ முகாமுக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பின்னர், அவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்ப…

  19. கைது செய்யப்பட்டுள்ள உதயங்க வீரதுங்கவினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை! by : Benitlas குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ள ரஸ்யாவிற்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் உதயங்க வீரதுங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். உதயங்க வீரதுங்க இன்று அதிகாலை 4.37 அளவில் மஸ்கட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த யு.எல் – 208 என்ற இலக்கமுடைய விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உதயங்க வீரதுங்கவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரணை! ரஸ்யா…

  20. அரசியல் இருப்புக்காக அடிக்கடி மாற்றப்படும் கல்விக் கொள்கைகளால் எந்தப் பயனும் இல்லை- ஸ்ரீதரன் by : Litharsan இலங்கையின் கல்விக் கொள்கைகள் அவ்வப்போது அரசியல் இருப்புக்காக மாற்றப்படும் நிலையில் அவற்றினால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தரமான கல்விக் கொள்கையை உருவாக்காமல் முன்னேற்றத்தைக் காணமுடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சி, உருத்திரபுரத்தில் உள்ள சக்திபுரம் பகுதியில் கிராமிய அபிவிருத்திம் திட்டத்தின்கீழ் இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட ஜமுனன் முன்பள்ளிக்கான புதிய கட்டடம் நேற்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. …

  21. யாழ். – சென்னை விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் பரிசீலனை February 14, 2020 யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் பரிசீலித்து சாதகாரமான முடிவொன்றினை மேற்கொள்வதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய இன்று(13.02.2020) விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க> கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் விமானப் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற நிலையில் மேற்குறிப்பிட்ட உறுதிமொழி வழ…

  22. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எங்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர் -அனந்தி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி புதிதாகத் தோற்றம் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியாக இருக்கின்ற நிலையில் பலதரப்பட்ட விமர்சனங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இந்த புதிய கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாமை காரணமாக பல விமர்சனங்களை அவர்கள் முன்வைக்கின்றனர் என ஈழமக்கள் சுயாட்சிக் கழகத்தின் தலைவர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தம்மிடம் சில இளையோர்கள் முகநூலில் இருக்கின்றார் என்பதை வைத்துக் கொண்டு உண்மைக்குப் புறம்பாக எங்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாட்டை தமிழ் தேசிய மக்கள் மு…

    • 9 replies
    • 892 views
  23. தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளித்தால் தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களே தலையேடுக்கும்- செல்வம் எம்.பி. by : Litharsan தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் ஊடாக தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களையும் சோதனைச் சாவடிகளையுமே அதிகரிக்க முடியும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். “வடக்கு மாகாணம் இன்று இராணுவ பிரசன்னம் அதிகரித்த மாகாணமாக காட்சியளிக்கின்றது. இந்த அரசாங்கம் ஆட்சிப் பீடமேறிய கையோடு அதிகளவான இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தமிழ் மக்கள் நாள்தோறும் இம்சிக்கப்படும் நிலை காணப்பட…

    • 3 replies
    • 485 views
  24. ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கும் உடன்படிக்கையை நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கம்பனிகள், தொழிற்சங்கங்கள், அரச தரப்பு என முத்தரப்பினர் இணைந்து இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவிருந்தன. எனினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் தொண்டமான் ஆகியோர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்ததால், இந்த விடயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடு…

    • 1 reply
    • 359 views
  25. கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 7ஆம் திகதி பெருந்திருவிழா நடைபெறவுள்ளது.இந்நிலையில், கச்சதீவிற்கு யாத்திரிகர்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.இந்தக் கலந்துரையாடலில், பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், இராணுவத்தினர், அரச மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைசார்ந்த அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் திருவிழாவிற்கான பூர்வாங்க ஏற்பாடுகளும், அன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.