Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்கள் பெற தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்..! சுமந்திரன் விருப்பம். நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களை பெறுவதற்காக ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்க தமிழ்தேசிய கூட்டமைப்பு தயாராக உள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊர்காவற்றுறை கட்சி அலுவலகத்தில் கட்சி ஆதரவாளர்களிடம் பேசும் போது அதன் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கருத்தைத் தெரிவித்தார் என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.வடக்க…

  2. யாழ்ப்பாணம் உரும்பிராயில் உயரமான கிறிஸ்மஸ் மரம் திறந்து வைப்பு யாழ்ப்பாணம், உரும்பிராய் புனித மிக்கேல் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள் 85 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் நேற்று இரவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.குறித்த கிறிஸ்மஸ் மரத்தை அமைப்பதற்கு 15 பேர் கொண்ட குழுவால் 10 நாட்களில் அமைக்கப்பட்டுள்ளதுடன். கடந்த நான்கு வருடங்களாக அமைக்கப்பட்டுவரும் கிறிஸ்மஸ் மரத்தில் இந்த வருடம் அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரமே உயரமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரத்தை புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குத்தெந்தை அருட்பனி ம.பத்திநாதர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.குறித்த மரத்தை அமைப்பதற்கு இரும்பு குழாய்கள்,வைக்கோல் மற்றும் 1100…

  3. கொழும்பில் மாயமான கடல் சிங்கம் – பாதுகாப்பிற்காக 4 குழுக்கள் நியமனம் தெற்கு கடற்கரை பகுதியில் உலாவிய கடல் சிங்கத்தை கடந்த ஒருவார காலமாக அவதானிக்க முடியவில்லை என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறுதியாக குறித்த கடல் சிங்கம், பம்பலப்பிட்டி கடற்கரை பகுதியில் அண்மையில் அவதானிக்கப்பட்டதாக அந்த திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், குறித்த உயிரினத்தின் பாதுகாப்புக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் நான்கு குழுக்கள் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 20ஆம் திகதி காலி – உனட்டுவன கடற்கரை பகுதியில் குறித்த கடல் சிங்கம் முதன்முறையாக அவதானிக்கப்பட்டது. இதையடுத்து, சில சந்தர்ப்பங்களில் தென்மேற்கு கட…

  4. முச்சக்கர வண்டி கட்டணக் குறைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பு முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை குறைக்க சுயதொழில் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த இத் தீர்மானம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் செயற்படுத்ப்படவுள்ளதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. அந்தவகையில் 1 கிலோ மீற்றருக்கான கட்டணத்தை 10 ரூபாயாலும், அடுத்த கிலோமீற்றர் கட்டணத்தை 5 ரூபாயாலும் குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் சுனில் ஜெயவர்தன தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் புதிய வரிச் சலுகைகள் காரணமாக முச்சக்கர வண்டி உதிரி பாகங்கள் திடீரென வீழ்ச்சியடைந்ததால் இந்த முடிவு எடுக்கப்…

  5. யாழில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல் யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்தரணியினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டம் சுமார் 12.30 மணிவரை நடைபெற்றது. யாழ் மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பிரதேசங்களின் பொலிஸ் அதிகாரிகள் சமூக நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.…

  6. யாழ். மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சட்டத்துக்கு புறம்பான மணல் அகழ்வு, வாள்வெட்டு வன்முறைகள் உள்ளிட்ட குற்றச்செயல்களை முற்றாக ஒழிக்க இன்றிலிருந்து பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப்படையின் சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன தெரிவித்தார். வடக்கில் இடம்பெற்று வரும் மண் கொள்ளை, வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்கள், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் தொடர்பாக கூட்டம் கடற்றொழில் மற்றும் நீரியல் மூலவளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார். “யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய…

    • 0 replies
    • 275 views
  7. பிணையில் விடுவிக்கப்பட்டார் சம்பிக்க ரணவக்க முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. Update – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் சம்பிக்க முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சற்று முன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். Update – சம்பிக்க பிணையில் விடுவிக்கப்படுவாரா? – முடிவு இன்று முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு பிணை வழங்குவது தொடர்பான முடிவு அறிவிக்கப்படவுள்ளது. அதற்கமைய குறித்த முடிவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கவுள்ளது. கடந்த 19ஆம் அமைச்சர் சம்பிக்க சார்பில் முன்னிலையான சட்ட…

    • 3 replies
    • 548 views
  8. க.விஜயரெத்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அமரர் ஜோசப் பரராசசிங்கத்தின் 14ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு, மட்டக்களப்பு ரயில் நிலைய வீதி, கூட்டுறவு மண்டபத்தில் நாளை (25) பிற்பகல் 02 மணியளவில் நடைபெறவுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவர் லோ.திபாகரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், பொன்.செல்வராசா, த.கனகசபை, மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது, அகவணக்கம், மலரஞ…

    • 0 replies
    • 360 views
  9. யாழ்.மாவட்டத்தில் 19 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு இல்லை..! போருக்கு பின்னான 10 வருடங்களாக தொடரும் அவலம்.. யாழ்.மாவட்டத்தில் சுமார் 19 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு இல்லாத நிலை தொடர்ந்து கொண்டிருப்பதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் கூறியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் சமூக நலனோம்பு அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் மூலம் வீடற்றவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இன்றைய புள்ளிவிவரத்தின்படி 19 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடு இல்லை.அதிலும் குறிப்பாக தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் த…

  10. இலங்கை தமிழரசு கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய இரா.சம்பந்தன், தாம் சர்வதேச சமூகத்திடமிருந்து எழுத்து மூலமான உத்தரவாதங்களைப் பெற்றிருப்பதாகக் கூறுகின்றார்கள். அவ்வாறாயின், அந்த எழுத்து மூலமான உத்தரவாதங்கள் என்ன என்பதை சம்பந்தன் வெளிப்படுத்தத் தயாரா என ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழரசு கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் சம்பந்தன் ஆற்றிய உரை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, சம்பந்தன் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு விசுவாசமாக நடந்துகொண்டாரா? தமிழ் மக்களுக்கு உரித்தான உரிமைகள் எதனையாவது பெற…

    • 9 replies
    • 1.2k views
  11. தேர்தலில் கொழும்பிலும் போட்டியிட கூட்டமைப்பு திட்டம்! எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதன்படி கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த தீர்மானம் குறித்த இறுதி முடிவுகள் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு பின்னரே அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் ப…

  12. 43 வருட அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தயாராகும் ரணில்! 43 வருட அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளிவைக்க தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். அந்தவகையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், இந்த தீர்மானம் எடுக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாலிகாகந்த மகாபோதி விகாரைக்கு விஜயம் செய்தபோது வணக்கத்திற்குரிய பானாகல உபதிஸ்ஸ தேரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்தோடு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை அடைவது தொடர்பாக தான் உறுதியுடன் இருப்பதாகவும் இருப்பினும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இன்னும் முடிவு செ…

    • 2 replies
    • 488 views
  13. மட்டு. போதனா வைத்தியசாலையில் 6 மாதங்களுக்குள் 10க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள்- சுரேந்திரன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் உயிழப்புக்கள் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்கள் தொடர்பாக உடனடிக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் இந்த அவசரக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் உரிய ஒரேயொரு போதனா வைத்தியசாலையாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உள்ளது. இங்கு வைத்திய வசதிகள் உய…

  14. கண்களை இறுக மூடிக்கொண்டு உலகம் இருட்டிவிட்டதாக நினைத்து கருணா அம்மான் செயற்படுகிறார் என தேசிய காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்பு இணைப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர் தெரிவித்துள்ளார். நேற்று (23) கல்முனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போது தெரிவித்தார். தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தமிழ் மக்களின் 2000 ஏக்கா் காணிகளை இரவோடிரவாக அபகரித்து விட்டதாக தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தார். அதுக்கு பதிலளித்த அவர் மேலும் தனது உரையில், தமிழ் மக்களினால் காட்டி கொடுப்பாளராகவும், தமிழின அழிப்பு துரோகியாகவும் அடையாளப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் அவர்களின்…

    • 0 replies
    • 537 views
  15. “கப்பம் பெறுதல் கடத்தலில் ஈடுபட்ட கருணா அம்பாறைல் நீலிக்கண்ணீர் வடிக்க தேவையில்லை…” - கோடீஸ்வரன் December 22, 2019 கப்பம் பெறுதல் கடத்தலில் ஈடுபட்ட கருணா அம்பாறைக்கு வந்து நீலிக்கண்ணீர் வடிக்க தேவையில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். மல்வத்தை அப்பிள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(22) நண்பகல் மல்வத்தை விபுலானந்ததா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தனது கரு…

  16. எம்.ஆர்.எம்.வஸீம்) வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரிவடைந்து செல்கின்றது. பொதுத்தேர்தலுக்கு முன்னர் புதிய கட்சிகள் உருவாக வாய்ப்பிருக்கின்றது. அதனால் வடக்கு கிழக்குக்கு தேசிய மட்டத்தில் முன்னுரிமை வழங்கி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதன் மூலமே அந்த மக்களின் உள்ளங்களை வெற்றிகொள்ள முடியும் என இலங்கை கம்யூனிஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார். சோசலிச மககள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், யாழ்ப்பாணத்தில் அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம…

    • 2 replies
    • 478 views
  17. அமெரிக்க – இந்தியா உயர்மட்டப் பேச்சில் சிறிலங்கா குறித்தும் கவனம் DEC 22, 2019by கார்வண்ணன்in செய்திகள் வொசிங்டனில் கடந்த வாரம், அமெரிக்க- இந்திய உயர் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தைகளில், சிறிலங்கா விவகாரம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பர் ஆகியோர், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருடன் வொசிங்கடனில் இரண்டாவது அமெரிக்க- இந்திய 2+2 அமைச்சர்கள் மட்ட பேச்சுக்களை நடத்தினர். இந்தப் பேச்சுக்களின் பின்னர் கடந்த 18ஆம் நாள், கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கருத்…

  18. காரொன்று மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதே, நாட்டின் தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளதாக விமர்சித்த தேசிய மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சமிர பெரேரா, பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிபீடமேறிய அரசாங்கம், அதனை நிலைநாட்டாது வேறு விடயங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் சாடினார். ஹட்டனில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கைது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படும் நாடகமாகக்கூட இருக்கலாம் என்று தான் சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவப் பிரச்சினையைத் திசைத்திருப்புவதற்காக, சம்பிக்கவ…

    • 0 replies
    • 416 views
  19. எதிர்வரும் ஜனவரி மாதம் 03ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியதும், நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சித் தலைவராக, சபநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்படவுள்ளார். சபாநாயகருக்கு உள்ள அதிகாரங்களுக்கு அமைய, ஜனவரி மாதம் 03ஆம் திகதி சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகும் போது, எதிர்க்கட்சித்தலைவர் ஆசனத்தை சஜித் பிரேமதாசவுக்கு ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனவரி மாதம் 03ஆம் திகதிக்கு முன்னதாக, சபை முதல்வர் மற்றும் ஆளும் தரப்பின் பிரதம கொரடா ஆகிய பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளவர்கள் தொடர்பில் தமக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படும் கட்சிகளின் தலைவர்களுக்கு சபாநாயகர் தரப்…

    • 0 replies
    • 362 views
  20. (இராஜதுரை ஹஷான்) அரசியல் பழிவாங்கலை இலக்காகக் கொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு சுயாதீன நீதிமன்றம் சரியான நீதியை வழங்கும் என்ற நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. சர்வாதிகார ரீதியில் அதிகாரத்தை பிரயோகித்து ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளுக்கு இனி இடமளிக்க முடியாது என பாரர்ளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். விகாரமாதேவி பூங்கா வளாகத்தில் இன்று மாலை இடம் பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களின் மதவழிபாடு நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவும் பாரள…

    • 0 replies
    • 388 views
  21. பௌத்த மதகுருக்களை, அரசியலில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் – மல்வத்து பீடம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பௌத்த மதகுருக்கள் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்கக் கூடாது என மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்துவதன் மூலமும் தங்கள் பொறுப்புகளை முறையாகச் செய்வதன் மூலமும் பௌத்த மதகுருக்கள் நாட்டுக்கும் தேசத்திற்கும் மதத்திற்கும் ஒரு சிறந்த சேவையை வழங்க முடியும். எமது மதகுருக்கள் அரசியல் காரணமாக மனக்கிளர்ச்சியுடன் செயற்படுகிறார்கள். உலகெங்கிலும் உள்ள பௌத்த மதகுருக்களின் மரியாதையும் புகழும் பாதிப்படையத் தொடங்கியுள்ளது. எனவே, மத…

    • 6 replies
    • 638 views
  22. கடந்த காலத்தைப் போல் 16 ஆசனங்களைப் பெறுவது கேள்விக்குறியே – வெளிப்படுத்தும் சித்தார்த்தன் கடந்த காலங்களைப் போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெறுவது கேள்விக்குறியாக இருந்தாலும் அதிகளாவன ஆசனங்களைப் பெறுவதில் நம்பிக்கை உள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆசனங்கள், மாற்று அணியின் பிரவேசம் காரணமாகவே பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புளொட் அமைப்பின் மத்திய குழு கூடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “ஜனாதிபதி தேர்தல் அதன் பின்னரான பெறுபேறுகள் மற்றும் த…

  23. ஈழத் தமிழரின் நலன் காக்கும் வரலாற்று பொறுப்பு பிரிட்டனுக்கு இருக்கிறது: பொறிஸ் ஜோன்சனுக்கு விக்னேஸ்வரன் வலியுறுத்து ஈழத் தமிழரின் நலன் காக்கும் வரலாற்று பொறுப்பு பிரிட்டனுக்கு இருக்கிறது என்று பிரிட்டனின் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்குத் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கட்சியின் ஸ்தாபகரும், செயலாளர் நாயகமுகமான நீதியசரர் சி.வீ.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மனித உரிமைகள் நிலைநாட்டப்படுகின்றமையை உறுதிப்படுத்தி, தமி ழர்களின் பாதுகாப்பையும் நலனையும் பேணுவதற்கு இன்னும் காலம் பிந்திவிடவில்லை என்றும் விக்னேஸ்வரன் தனது வாழ்த்து செ…

  24. (எம்.மனோசித்ரா) சம்பிக ரணவகவின் கைது இலங்கை வரலாற்றில் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு ஏற்படாத இழுக்கு என சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிஸ் ஆணைக்குழுவின் அவதானத்திற்கு கொண்டுச் செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர் கூட்டம் தொடர்பில் சபாநாயகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சபாநாயகர் கருஜய சூரிய தலைமையில் பாராளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றது. 8 ஆவது பாராளுமன்றத்தின் 4 ஆவது அமர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின…

  25. (லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 22 முற்பகல் 08.10) ராஜபக்ஷவின் குடும்பத்தை கடுமையாக விமர்சித்த கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் இருவரை வேட்டையாட கோட்டாபய ராஜபக்சவின் இனவாத அரசாங்கம் தயாராகி வருவதாக லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு செய்து வந்துள்ளது. இவ்வாறு வேட்டையாட முயற்சிக்கப்படும் முன்னாள் அமைச்சர்கள் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் ராஜபக்சக்கள் கைவிட்டு நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோர் என தெரியவந்துள்ளது. இந்த இரு முன்னாள் அமைச்சர்களும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அன்னம் சின்னத்திற்கு ஆதரவாக மேடைகளில் பேசியவர்களில் மிக முக்கியமானவர்கள் ஆவர். தேர்தலுக்கு முன்னரும் தேர்தலின் பின்னரும் ராஜபக்சக்களை இவர்கள் மிகவும் கடுமையாக வி…

    • 0 replies
    • 366 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.