ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த தமிழ் பெண் பொலிஸ் – யாழில் சம்பவம்! தெல்லிப்பளையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டுக்குள் மறைந்திருந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் – கோப்பாய் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ‘சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளையிட்ட நகைகளை வவுனியாவில் விற்பனை செய்துள்ளமையை அறிந்து மானிப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் தெல்லிப்பளையில் உள்ள தமிழ் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் மறைந்திருப்பதாக பொலிஸா…
-
- 0 replies
- 865 views
-
-
யாழில் வங்கி முகாமையாளர் வீட்டில் தாக்குதல்! யாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத குழு காருக்குத் தீ வைத்துள்ளது. யாழ்.கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள வரதராஜா கேதீஸ்வர சர்மா என்பவரது வீட்டுக்குள் நேற்று (வியாழக்கிழமை) இரவு புகுந்த இனம் தெரியாதவர்கள் வீட்டு வளவினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். எனினும் காருக்கு வைக்கப்பட்ட தீ முழுமையாக அதன்மீது பரவாததால், பகுதியளவில் கார் சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். http://athavannews.com/யாழில்-வங்கி-முக…
-
- 0 replies
- 296 views
-
-
ரோஹண விஜயவீரவின் மனைவி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு காணாமல் போனதாக கூறப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோகண விஜயவீரவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான உத்தரவு ஒன்றை அரசாங்கம் விடுக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதி மன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது. ரோஹண விஜயவீரவின் மனைவி சித்ராங்கனீ விஜயவீரவினால் இந்த மேல் முறையீட்ட மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்றைய தினம் (16) நீதியரசர் குழாமினால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதி அரசர்களான சிசிர டி.ஆக்குருப், எஸ்.துரைராயா, காமினி அமரசேகர ஆகியோர் நீதிபதி குழாமில் இடம் பெற்றிருந்தனர். மனுதாரரான சித்ராங்கனீ…
-
- 0 replies
- 571 views
-
-
எதிர்க்கட்சிக்கு சென்ற பின்பும் அடக்குமுறை தொடர்கிறது தற்போதைய எதிர்க்கட்சியின் செயற்பாடு, ஆட்சியில் இருக்கும் போது மேற்கொண்ட மந்தமான செயற்பாட்டை ஒத்ததாக காணப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார். எதிர்க்கட்சிக்கு சென்ற பின்னரும் வழக்கமான அடக்குமுறை தொடர்வதாக அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்பில் அச்சம் மற்றும் சந்தேகமின்றி அனைவரும் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதனை பொருத்துக் கொள்ளமுடியாமல் சில காரணங்களை கொண்டு அத்தகைய சூழ்நிலையை மீண்டும் உருவாக்க சில சக்திகள் முயற்சிப்பதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். …
-
- 0 replies
- 381 views
-
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல் விவகாரம் - விரைவில் பேச்சுவார்த்தை இந்திய மீனவர்கள் இலங்கை கடற் பரப்புக்குள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபடுகின்ற போதும் தடை செய்யப்பட்ட தொழில் உபகரணங்களை பாவித்து கடல் வளங்களையும் அழித்தும் வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் இம்மாத இறுதியில் கொழும்பில் நடைபெறலாம் என எதிர்பார்ப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அண்மையில் பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, இலங்கை கடற் பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பான பிர…
-
- 0 replies
- 315 views
-
-
மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள வைத்தியர் ஷாபி by : Dhackshala குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியராக கடமையாற்றிய ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கில் பயங்கரவாதி சஹ்ரானின் பெயரால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கருத்தடை விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தாய்மார்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சாணக, சந்தேகநபரான ஷாபி, லாபிர் எனும் சந்தேகநபருடன் தோன்றும் ஒளிப்படத்துடன் கூடிய இறுவெட்டொன்று சி.ஐ.டி.யிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த லாபிர்…
-
- 0 replies
- 560 views
-
-
உண்மைகளை மூடி மறைத்து ஆட்சி செய்கிறது அரசாங்கம்- பிமல் குற்றச்சாட்டு I by : Yuganthini புதிய அரசாங்கம் உண்மைகளை மூடி மறைத்து ஆட்சி செய்து வருகின்றதென மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் பிமல் ரத்னாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவானவுடனே சில முக்கிய அமைச்சர்கள் உடனடியாக பதவி துறந்தார்கள். இவ்வாறு இவர்கள் உண்மையாகவே பதவி விலகினார்களா அல்லது பதவி விலக்கப்பட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. …
-
- 0 replies
- 411 views
-
-
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரல் by : Dhackshala 2020ஆம் ஆண்டிற்குரிய புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதற்கான பத்திரிகை அறிவிப்பு நாளை (வியாழக்கிழமை) தேசிய பத்திரிகைகளில் வௌியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு 58ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் திருத்தச் சட்டத்தின் 1981ஆம் முதலாம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைய இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தயாரிப்புப் பணிகள் பூர்த்தியடைந்து…
-
- 0 replies
- 233 views
-
-
யாழில் இராணுவச் சிப்பாய் மீது தாக்குதல் – இராணுவத்தினர் வலைவீச்சு யாழ். – வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினரால் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டன. இராணுவச் சிப்பாயைத் தாக்கியவரைக் கைது செய்யும் நோக்குடன் குறித்த பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணி தொடக்கம் இவ்வாறு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. நேற்று தைப்பொங்கல் தினத்தன்று பிற்பகல் இராணுவச் சிப்பாய் ஒருவர் பொதுமகனால் தாக்கப்பட்டார். வீதியைக் கடக்க முற்பட்ட சிறுமி ஒருவரை மோதி விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை குறித்த இராணுவச் சிப்பாய் கண்டித்துள்ளார். இதன்போது அந்நபரின் உறவினர்கள் அங்கு கூடி குறித்த இராணுவச் சிப்பாயுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு அவரை தாக…
-
- 2 replies
- 562 views
-
-
வடமாகாண மக்களின் பிரச்சினை என்ன..? ஆராய்வதற்காக இம்மாதம் யாழ்ப்பாணம் வருகிறார் ஐனாதிபதி.. வடமாகாண மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக இம்மாதம் நிறைவுக்குள் ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்ஷ யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். கொழும்பில் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமகே இதனை தெரிவித்தார். வடக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும். தோட்டப்புற மக்கள் மற்றும் வட மாகாண மக்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவது அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார். https://jaffnazone.com/news/15392
-
- 3 replies
- 574 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்)உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்தியபிரதான பயங்கரவாதியான ஸஹ்ரான் ஹாஷிமின் பிரதான இரு சகாக்களை ஐக்கிய அரபு அமீரகம் சென்று கைது செய்துள்ள சி.ஐ.டி. சிறப்புக்குழு அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்து சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.குறித்த தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை அடுத்து நாட்டிலிருந்து தப்பியோடியதாகக் கூறப்படும் இருவரே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர்களை 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சி.ஐ.டி. தலைமையகமான நான்காம் மாடியில் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை நேற்று பெற்றுக்கொண்டுள்ளதா…
-
- 1 reply
- 357 views
-
-
கூடிய விரைவில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுக்கொடுக்கும் -டக்ளஸ் நம்பிக்கை தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அந்த வகையில், இந்த தைப்பொங்கல் மகிழ்ச்சி கரமானதாக அமைந்துள்ளதுடன், எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையையும்ஏற்படுத்தியுள்ளது.தோட்டத்தொழிலாளர்கள் நீண்ட காலமாக சம்பள உயர்வுகோரி போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் அந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக எங்களுடைய அரசாங்கம் 1000 ரூபாய் சம்பள உயர்வை அவர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த செவ்வாய்க்கிழமை தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுத்தருவதாக கூறியிருக்கின்றார்.ஆகவே, கூடிய விரைவில் தமிழ்…
-
- 0 replies
- 319 views
-
-
யாழ்.நவீன சந்தைப் பிரச்சனைகள் தொடர்பில், எந்த நடவடிக்கையும் இல்லை. யாழ்.நவீன சந்தைப் பிரச்சனைகள் தொடர்பில் மாநகர சபையிடம் பல தடவைகள் எடுத்து கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த சபை பொறுப்பேற்ற பின்னர் தான் வீதிக்கு குப்பைகள் அதிகளவில் வருகின்றன. இவை தொடர்பில் எந்த அக்கறையும் இன்றி உறுப்பினர்கள் சபையில் சண்டை பிடிப்பது அருவருக்கத்தக்கது என யாழ்.வணிகர் சங்க தலைவர் ஞானகுமார் கவலை தெரிவித்துள்ளார். நவீன சந்தை கட்டட தொகுதி வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இதுவரை காலமும் யாழ்.மாநகர சபை முதல்வர், ஆணையாளர்கள், மற்றும் மாநகர சபை கட்சி உறுப்பினர்களுடன் பேச்சுக…
-
- 0 replies
- 721 views
-
-
இந்த நாட்டில் தமிழர்களுக்கும் உரிமை உண்டு – தமிழ் மக்களுக்கும் அதிகாரம் உள்ளது..! வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்.பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என பொய் கூறிக்கொண்டு திரிகின்றவர்களுக்கு நான் சப்பாத்தால்தான் பதில் சொல்வேன் .மரணத்தை தழுவும் வரை பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தருவதற்காக பாடுபடுவேன் என கல்முனை ஸ்ரீ சுபத்திரராம விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார். கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனை மாநகரில் தைத்திருநாள் பொங்கல் விழா புதன்கிழமை (15) கல்முனை பழைய பேருந்து நிலைய முன்றலில் தமிழ் இளைஞர் சேனை தலைவர் ந . சங்கத் தலைமையில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு தனதுரையில் குற…
-
- 0 replies
- 405 views
-
-
ஐ.தே.க.வின் தலைவர் சஜித்தா? ரணிலா? – முடிவு இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பிரச்சினை தொடர்பாக இறுதி முடிவு செய்யப்படவுள்ளது. அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தின்போதே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பிரச்சினை தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படவுள்ளது. கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் இன்று முடிவு எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்போது ரணில் விக்ரமசிங்க ஒரு தலைமைக் குழுவை முன்மொழிந்து ஆராயுமாறும் சஜித் பிரேமதாச வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர். இருப்பினும் இறுதியில் வாக்கெடுப்பு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டத…
-
- 0 replies
- 354 views
-
-
யாழ்ப்பாணம் மாநகர் கொட்டடியில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலையடுத்து ஊரவர்கள் துரத்திச்சென்ற போது 3 மோட்டார் சைக்கிள்களைக் கைவிட்டுவிட்டு குறித்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் கொட்டடி வைரவர் கோவிலடியில் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றது. படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 3 மோட்டர் சைக்கிள்களில் வந்த ஏழுக்கு மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்றே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. அவர்கள் பொம்மைவெளியைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுவதாக கொட்டடி மக்கள் தெரிவித்தனர். வன்முறைக் கும்பல் கைவிட்டுச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களும் கொட்டட…
-
- 1 reply
- 417 views
-
-
வவுனியாவில் 15 நாட்களுக்கு மின்சாரத் தடை – முழு விபரம் வவுனியாவில் 15 நாட்களுக்கு மின்சாரம் தடைப்படவுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது. அதற்கமைய நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 31ஆம் திகதி வரையில் மின்சாரம் தடைப்படும் என அச்சபை அறிவித்துள்ளது. குறித்த தினங்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் அத்தியாவசிய பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர். இந்த நேரங்களில் வைத்தியசாலை மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்களில் முன்கூட்டியே மின் தடையை நிவர்த்தி செய்யக்கூடிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் மின்தடையினை அடுத்து தேவைய…
-
- 0 replies
- 418 views
-
-
தனியார் பஸ்களில் பயணிகளை அசௌகரியத்துக்கு உள்ளாகும் வகையில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலி, ஔிபரப்புவது இன்று (15) முதல் தடை செய்யப்பட்டுள்ளது. அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டால் அது குறித்து 1955 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. முறைப்பாடுகளுக்கு அமைய பஸ் சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.அனைத்து பஸ் வண்டிகளிலும் ஒலிபரப்புவதற்கு ஏற்ற வகையில் 1000 பாடல்கள் அடங்கிய தொகுப்புகள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இன்று (15) முதல் குறித்த பாடல்கள் மாத்திரமே பஸ்களில் ஒலிபரப்பப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சு வலியுறுத்தியுள்ளது. https://newuthayan.com/இன்ற…
-
- 6 replies
- 802 views
-
-
காணாமல்போன பல்கலை மாணவனை தேட தனி பொலிஸ் குழு by reka sivalingamJanuary 14, 2020January 14, 2020040 காணாமல்போயுள்ள மலையகத்தை சேர்ந்த மருத்துவபீட மாணவனை தேடும் பணி இன்று (14) நான்காவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது. எனினும் எவ்வித தகலும் கிடைக்கவில்லையென மாணவனின் உறவினர்களிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாணவனின் கையடக்க தொலைபேசியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையில், கல்லடி பாலத்துக்கு அருகாமையில் வைத்தே இறுதியாக தொலைபேசி இயங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், சீசீடிவி கமரா காட்சிகளும் ஆராயப்பட்டுவருகின்றன. தொலைபேசி உரையாடல் குறித்த குரல் பதிவும் ஆராயப்படவுள்ளன. இவ்விவகாரத்தை கையாள்வதற்…
-
- 3 replies
- 758 views
-
-
வருவாரா... மாட்டாரா... ரஜினி சொன்னது என்ன? இந்த வீடியோவிற்கான பின்னோட்டங்களையும் வாசியுங்கள்.
-
- 0 replies
- 538 views
-
-
அரச நிறுவனங்கள் மற்றும் நிறைவேற்று குழுக்களின் தலைவர்களின் மாதாந்த கொடுப்பனவினை 1 இலட்சம் ரூபாய் வரை வரையறுத்து ஜனாதிபதி செயலாளரால் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்று நிரூபத்துக்கு அமைய குறித்த தலைவர்களுக்கு உத்தியோகப்பூர்வ வாகனம் ஒன்று மாத்திரமே வழங்கப்படும். அத்துடன், பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அந்த உறுப்பினர்களுக்கு உத்தியோகப்பூர்வ வாகனங்களை வழங்க வேண்டாம் என, ஜனாதிபதி செயலாளர் ஆலோசனை கூறியுள்ளார். அரச செலவீனத்தை குறைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய ஜனாதிபதி செயலாளரால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. http://www.tamilmir…
-
- 0 replies
- 330 views
-
-
ஜனநாயகம் மனித உரிமை விடயங்களில் இலங்கை சாதித்த விடயங்கள் பறிபோகலாம் - மனித உரிமை கண்காணிப்பகம் அச்சம் இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் இலங்கையில் மனித உரிமைகளிற்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. 2019 இல் சர்வதேச மனித உரிமை நிலவரம் குறித்த தனது அறிக்கையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கை கடந்த சில வருடங்களில் அடிப்படை உரிமைகளை மீள ஏற்படுத்துவது ஜனநாயக ஸ்தாபனங்களை மீள கட்டியெழுப்புவதில் உருவாக்கிய முன்னேற்றங்கள் ஒரு பழிவாங்கல்களுடன் இல்லாமல் செய்யப்படலாம் என நிலவுகின்ற அச்சத்திற்கு உரிய காரணங்கள் உள்ளன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத…
-
- 1 reply
- 552 views
-
-
உலகில் பலம்வாய்ந்த நான்கு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் கடந்த 24 மணி நேரத்தில் இலங்கைக்கு வருகை தந்தமை ஒரு அரிய அரசியல் நிகழ்வாகும். ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ், சீன வெளிவிவகார அமைச்சர் வேன்ங் ஈ, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்கே லெவ்ரோவ் மற்றும் ஜப்பான் இராஜாங்க அமைச்சர் கொசோ யமமோடோ ஆகியோர் இன்று பிற்பகல் வரை இலங்கையில் தங்கியிருந்தனர். வீழ்ச்சியுற்றிருக்கும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவது தனது பதவிக் காலத்தினுள் எதிர்பார்க்கும் முக்கிய விடயமாகும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களை பாரா…
-
- 2 replies
- 1.1k views
-
-
சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வை காண பிரார்த்திக்கிறேன் – சம்பந்தன்! சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வை காண பிரார்த்திக்கிறேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘நீண்டகாலமாக தீர்வு காணப்படாத எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு, சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வைக் கண்டடைய இந் நந்நாளில் பிரார்த்திக்கிறேன். இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மனித வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான இயற்கை வளங்களை அருளு…
-
- 3 replies
- 634 views
-
-
ராஜித சேனாரத்னவிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று (14) ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவரிடம் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வௌியேறிய நிலையில், அவர் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியிருந்தார். கடந்த மாதம் 26ஆம் திகதி நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இருதய நோய் காரணமாக ராஜித சேனாரத்ன அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைகளின் பின்னர் இன்று (14) அதிகாலை ராஜித சேனாரத்ன வைத்தியசாலையிலிருந்து வௌியேறியிருந்தார். இதேவேளை, வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பான வழக்கில், முன்னாள் அமை…
-
- 2 replies
- 615 views
- 1 follower
-