ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143682 topics in this forum
-
தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளித்தால் தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களே தலையேடுக்கும்- செல்வம் எம்.பி. by : Litharsan தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் ஊடாக தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களையும் சோதனைச் சாவடிகளையுமே அதிகரிக்க முடியும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். “வடக்கு மாகாணம் இன்று இராணுவ பிரசன்னம் அதிகரித்த மாகாணமாக காட்சியளிக்கின்றது. இந்த அரசாங்கம் ஆட்சிப் பீடமேறிய கையோடு அதிகளவான இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தமிழ் மக்கள் நாள்தோறும் இம்சிக்கப்படும் நிலை காணப்பட…
-
- 3 replies
- 485 views
-
-
ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கும் உடன்படிக்கையை நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கம்பனிகள், தொழிற்சங்கங்கள், அரச தரப்பு என முத்தரப்பினர் இணைந்து இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவிருந்தன. எனினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் தொண்டமான் ஆகியோர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்ததால், இந்த விடயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடு…
-
- 1 reply
- 359 views
-
-
கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 7ஆம் திகதி பெருந்திருவிழா நடைபெறவுள்ளது.இந்நிலையில், கச்சதீவிற்கு யாத்திரிகர்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.இந்தக் கலந்துரையாடலில், பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், இராணுவத்தினர், அரச மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைசார்ந்த அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் திருவிழாவிற்கான பூர்வாங்க ஏற்பாடுகளும், அன…
-
- 0 replies
- 609 views
-
-
செங்கலடி எல்லை வீதி வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைப்பு மட்டக்களப்பு - செங்கலடி எல்லை வீதியில் அமைந்துள்ள வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைத்தெறியப்பட்டுள்ளது. செங்கலடி எல்லை வீதியில் செங்கலடி உதயசூரியன் உதவிக்குழு அமைப்பினரால் அண்மையில் இவ் வழிப்பிள்ளையார் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 06 மணியளவில் குறித்த பிள்ளையார் சிலையை அடித்து உடைத்து வீசப்பட்டுள்ளதை உதயசூரியன் உதவிக்குழு உறுப்பினர்கள் அவதானித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில், நேற்றிரவு சுமார் 08 மணியளவில் இவ் வழிப்பிள்ளையார் முன்றலில் நின்று தாம் இறுதியாகச் சென்றதாகவும் நேற்று (12) நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளாகவும் தெரிவித்தனர். மேலும் இ…
-
- 4 replies
- 780 views
-
-
எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டாலும் மின்சார கட்டணங்களை அதிகரிக்க போவதில்லை என தெரிவித்த மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர , தீடீர் மின் வெட்டுக்கு ஒரு போதும் இனி இடமளிக்க போவதில்லையென தெரிவித்தார். இந்திய சக்தி வளர்ச்சி மன்றத்தின் மூன்றாவது கூட்டம் இன்று கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றிருந்தது அதில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். புதுப்பிக்க கூடிய சக்தி மூலங்கள் மூலம் இலங்கைக்கு தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக சூரிய சக்தி மூலத்தை பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கான முயற்சியில…
-
- 2 replies
- 341 views
-
-
பிரதமர் மஹிந்தவின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இந்தியாவுக்கு இலங்கை தரவேண்டிய 120 மில்லியன் கடன்களை திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் இந்தியாவிடம் இருந்து கிடைக்கும் என ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. 4 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த வாரம் இந்தியா சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, டெல்லியில் இடம்பெற்ற நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போதே இக்கோரிக்கையினை விடுத்திருந்தார். இந்நிலையில் குறித்த கோரிக்கைக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே இந்திய அரசாங்கம் பிரதமரின் கோரிக்கைக்கு பதிலளிக்க முடியும். இந்தியாவிற்கு இலங்கை திருப்பி செலுத்த வேண்டிய கடன் நிலுவை வ…
-
- 6 replies
- 1.4k views
-
-
367 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீடு சபையில் சமர்ப்பிப்பு! நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்காக செலுத்த வேண்டிய 367 பில்லியன் ரூபாயினை செலுத்தும் வகையில் இந்த மதிப்பீடு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பிக்க ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைத்தது.…
-
- 0 replies
- 270 views
-
-
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும்போது கவனத்திற்கொள்ளவேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. இன்று (13) பிற்பகல் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற "பலமானதொரு அரசு" எமது அரசியலமைப்பொன்றுக்கான முன்மொழிவுகள் என்ற கருப்பொருளின் கீழ் “யுத்துகம அமைப்பு தயாரித்த முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. எமக்கு உரிமையுள்ள பலமான அரசை மீண்டும் உருவாக்குதல், உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம் மற்றும் மக்கள் இறைமை, ஒற்றை ஆட்சியை நாட்டில் உறுதிப்படுத்தல், நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறைகளுக்கிடையில் அதிகார சமநிலை மற்றும் கடமையை முதன்மையாகக்கொண்ட சமூகம் என்ற ஐந்து இலக்கு…
-
- 1 reply
- 691 views
-
-
இதயம் சின்னத்தை அனுமதித்தால் தேசியப்பட்டியல் : ரணிலுக்கு விசேட சலுகையை அறிவித்தார் சஜித்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குவதற்காக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணி நேற்று தேர்தல்கள் செயலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சிக்குள் இருக்கும் பிணக்குகளை தீர்த்து ‘இதயம்’ சின்னத்தின் கீழ் போட்டியிட ஒப்புக் கொண்டால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்குவதாக சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளதாக கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனவே நாளை இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போது இந்த விடயம் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகி…
-
- 1 reply
- 325 views
-
-
கடந்த இரண்டு வாரங்களில் இராணுவத்தினர் தலையீடு செய்து, நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக சுமார் 33 இலட்சம் கிலோகிராம் நெல்லை கொள்வனவு செய்ய உதவியுள்ளனர். நாட்டில் உள்ள அரிசி மாஃபியாவை இல்லாது செய்யும் நோக்கில் இராணுவம் இந்த நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள இராணுவ தலைமையகங்கள் தலையீடு செய்து நெல் கொள்வனவுக்கு உதவி செய்துள்ளன. நெல்லுக்கு உத்தரவாத விலையை பெற்றுக்கொடுத்து விவசாயிகள் அதிகபட்ச விலையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 38 களஞ்சியசாலைகள் இராணுவத்தினால் புதுப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்…
-
- 0 replies
- 587 views
-
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், விசேட தீர்ப்பாயம் மூலம் விசாரித்தால் மட்டுமே நீதி கிடைக்கும் பொறுப்புக்கூறலும் தமிழ் மக்களுக்குரிய நீதியும் கிடைப்பதாக இருந்தால் - சர்வதேச குற்றவியல் விசாரணையானது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றமூடாகவோ, அல்லது சர்வதேச குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஒன்றினூடாகவோ மேற்கொள்ளப்பட வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களினது அமைப்பின் இணைப்பாளர் க.கருணாவதி தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் அமைப்பினர் நேற்று பிற்பகல் கிளிநொச்சி யில் அமைந்துள்ள சோலைவனம் விடுதியில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித் தார். இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 30/1 தீர்மானத்தில் உள்ளக விசார…
-
- 0 replies
- 425 views
-
-
இ.தொ.கா - எஸ்.பி கடும் வாக்குவாதம்: கூட்டத்தில் குழப்பம் டி.சந்துரு நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கத்துக்கும், இராஜாங்க அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்கவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, இ.தொ.காவின் அங்கத்தவர்கள், கடுமையான எதிர்ப்பை தெரிவித்தமையால், அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் எவ்விதமான முடிவுகள் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தின் போது, நானு ஒயாவில் கடந்த 20 வருடங்களாக வசிக்கும் குடும்பமொன்றுக்கு எதிராக, நுவரெலியா பிரதேச சபையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறவேண்டு…
-
- 0 replies
- 875 views
-
-
கொஸ்கொட தாரகவின் சிறையில் மற்றுமொரு மோதல் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஓழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவின் உறுப்பினரான கொஸ்கொட தாரக, அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரானின் உதவியாளர் ஒருவர் மீது, மோசமான முறையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது சகோதர இணையத்தளமான லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. சிறைச்சாலையில் “ஐ” பிரிவில் கடும் பாதுகாப்புடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரக, அங்கிரு…
-
- 0 replies
- 462 views
-
-
தொல்பொருள் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழா?: தமிழர் வரலாற்றைத் திரிவுபடுத்தும் முயற்சி- சீ.வீ.கே. by : Litharsan தொல்பொருள் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சிற்குள் கொண்டு வருவது பொருத்தமான விடயமல்ல என வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தீர்மானிக்கும் விடயத்தை தமிழ் மக்களிடம் திணித்து தமிழ் மக்களின் வரலாற்றைத் திரிவுபடுத்த எத்தணிப்பதாகவே எண்ணுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “ஏற்கனவே, தொல்பொருள் திணைக்களம்தான் தமிழர்களின் பூர்வீகம், புராதனம் உள்ளி…
-
- 0 replies
- 404 views
-
-
தலைமறைவான குருநாகல் வைத்தியருக்கு இளஞ்செழியன் வழங்கிய அதிரடி உத்தரவு சிகிச்சைக்கு சென்ற பெண் நோயாளர் ஒருவரை பாலியல் வல்லுறவு புரிந்த வைத்தியர் ஒருவருக்கு எதிராக நேற்று (12) திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார். திருகோணமலை கந்தளாயில் 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயுர் வேத சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்கு சென்ற பெண் நோயாளி ஒருவர் மீது பாலியல் வல்லுறவு புரிந்ததாக ஆயுர்வேத மருத்துவர் மொஹமட் அபுதாஸிஸ் மொஹமட் வாகித் என்ற ஆயுர் வேத வைத்தியரும் பாலியல் வல்லுறவுக்கு உதவியாகவும் உடந்தையாகவும் இருந்ததாக வைத்தியரின் உதவியாளராக கடமையாற்றிய சிங்கள பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டு திருகோணமலை மேல் ந…
-
- 0 replies
- 594 views
-
-
மாங்குள வைத்தியசாலை வளாகத்தில் அகழ்வு – மனித எச்சங்கள், துப்பாக்கி ரவைகள், ஆடைகள் மீட்கப்பட்டன! by : Jeyachandran Vithushan முல்லைத்தீவு – மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நீதிபதியின் உத்தரவுக்கமைய இன்று (வியாழக்கிழமை) மேலதிக அகழ்வு பணிகள் முன்னெடுக்கபட்டன. அந்தவகையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தலைமையில் பொலிஸார், தடயவியல் பொலிஸார் மற்றும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினரின் பங்கு பற்றுதலுடன் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த அகழ்வின்போது சிதைவடைந்த மனித எச்சங்கள், துப்பாக்கி ரவைகள், இரண்டு பேருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஆடை…
-
- 0 replies
- 251 views
-
-
பகிடிவதையில் ஈடுபட்டார் எனும் குற்றசாட்டில் யாழ்.பல்கலை கழகத்தால் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள மாணவனின் வீட்டின் மீது தாமே தாக்குதலை மேற்கொண்டதாக ஆவா குழு முகநூல் ஊடாக உரிமை கோரியுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் உள்ள குறித்த மாணவனின் வீட்டுக்குள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த நால்வர், மாணவனை அழைத்துள்ளனர். அவர் அங்கில்லாத நிலையில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் மற்றும் யன்னல் கண்ணாடிகளை அடித்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் ஆவா குழு என தம்மை அட…
-
- 4 replies
- 1.3k views
-
-
தனிச் சிங்கள அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் – ஞானசாரர் சர்ச்சை கருத்து! தனிச் சிங்கள அரசாங்கத்தை உருவாக்கி, அடிப்படைவாத சிந்தனைகளற்ற தமிழ் முஸ்லிம் புதிய அரசியல் தலைவர்களை அதற்குள் உள்ளவங்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனாவின் காரியாலயத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், தனி சிங்கள பௌத்த தலைவர் தெரிவு செய்ததை போன்று தனி சிங்கள அரசாங்கமும் தோற்றம் பெற வேண்டும் என கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் “கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்ட நேரத்தில் இருந்து இன்று வரையில் தான் ஒரு சி…
-
- 2 replies
- 689 views
-
-
ஶ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ‘மலையக தாய்’ சிலையை அகற்ற உத்தரவு! மலையகத் மக்களின் வாழ்வியல் மற்றும் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான மாபெரும் சித்திரக் கண்காட்சி, பத்தனை ஶ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் இன்று ஆரம்பமானது. ‘முகவரி வர்ணப்பிரவாகம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த சித்திரக் கண்காட்சியை, தமிழ்ப் பிரிவு மாணவர்களே ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களின் கடின உழைப்பாலேயே இச்சிலை வடிவமைக்கப்பட்டது. எனினும், இச்சிலையை அகற்றுமாறு இன்று மாலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழர்களை மட்டும் பிரதிபலிக்கும் வகையிலான சிலைக்கு இடமளிக்க முடியாது என கல்லூரியின் பீடாதிபதி கட்டளையிட்டுள்ளார் என…
-
- 0 replies
- 984 views
-
-
விடுதலைப்புலிகள் காலத்தில் செயற்பட்டதைப்போலவே கூட்டமைப்பு இன்றும் உள்ளது – சி.வி.கே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அதே நோக்கத்துடன்தான் தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கிறது என வடமாகாண அவைத் தலைவர், சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். விடுதலைப்புலிகள் இருக்கும் காலத்தில் எவ்வாறு கூட்டமைப்பு இருந்ததோ தற்போது சில உறுப்பினர்கள் மாறினாலும் அதேபோன்றே கட்சி செய்யப்படுவதாக அவர் கூறினார். மேலும் கடந்த 2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையிலேயே பங்காளிக் கட்சிகள் கூட்டமைப்பிற்குள் தொடர்ந்தும் இருக்கின்றது என்…
-
- 0 replies
- 320 views
-
-
இராணுவத்தின் ஒத்துழைப்புடன் 32 இலட்சம் கிலோ நெல் கொள்வனவு நெல் சந்தைப்படுத்தல் சபை, கடந்த இரண்டு வார காலத்திற்குள் 163,430,000 ரூபா பெறுமதியான 3,268,600 கிலோ நெல்லை கொள்வனவு செய்வதற்கு இலங்கை இராணுவம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதற்காகவும் அரிசி வர்த்தகத்தில் நிலவும் அரிசி மாஃபியாவை முறியடிக்கும் நோக்குடனும் இலங்கை இராணுவம் நெல் கொள்வனவில் ஈடுபட்டுள்ளது. நெல் சந்தைப்படுத்தும் சபை, இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லினை கொள்வனவு செய்கின்றது. நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு படை தலைமையகங்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம், மாவட்…
-
- 2 replies
- 764 views
- 1 follower
-
-
-எஸ்.நிதர்ஷன் புதிய கூட்டணியானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் “பி“ அணி என்றுத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூட்டமைப்புக்கும் இந்தக் கூட்டணிக்கும் கொள்கையில் வித்தியாசமில்லையென்றும் கூறினார். யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், நேற்று முன்தினம் (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், இன்றைக்கு, வடக்கு. கிழக்கில். இரண்டாம் பெரும் கட்சியாக தாங்கள் இருப்பதாகவும் தங்களுடைய வளர்ச்சியைத் தடுப்பதற்காக, கொள்கை ரீதியாக எந்தவிதமான வித்தியாசமும் இல்லாமல் இன்னுமொரு மாற்று அமைப்பு என்று கூறிக் கொண்டு, ஒரு சிலர் செயற்படுவதாகவும் சாடினார். இவர்கள், வ…
-
- 1 reply
- 1.2k views
-
-
போராட்டங்களை சீா்குலைக்க கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் தலைமையில் பாாிய சதி..! உறவுகள் குற்றச்சாட்டு.. காணாமல் ஆக்கப்பட்டவா்களை பிாித்தாழும் தந்திரம் ஊடாக மக்களின் கோாிக்கையினை மழுங்கடிக்க கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் முயற்சித்துக் கொண்டிருப்பதாக வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர். இன்று காலை 11.30 மணியளவில் கிளிநாச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு குற்றம் சாட்டினர்.ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா, வலிந்து காணாமல் ஆக்கப்பட்…
-
- 1 reply
- 1.1k views
-
-
நான் நிதியை திருப்பி அனுப்பினேனா? மஹிந்தவின் கருத்தால் பொங்கி எழுந்த விக்கி! by : Jeyachandran Vithushan மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக இருந்தவர்களே வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியிருப்பார்கள் என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விக்னேஸ்வரன் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் திருப்பி அனுப்பிவிட்டார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் தெரிவித்த கருத்து தொடர்பாக வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் போய் எங்களைக்…
-
- 6 replies
- 1.7k views
-
-
(எம்.மனோசித்ரா) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் வழங்குவது தொடர்பில் முத்தரப்பு உடன்படிக்கை நாளை கைசாத்திடப்பட மாட்டாது. இந் நிகழ்வு எதிர்வரும் இரு தினங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் உப தலைவர் பழனி சக்திவேல் இதனை உறுதிப்படுத்தினார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நாளை இடம்பெறும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்க பிரதிநிதிகள் , பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் , அரசாங்க தரப்பினர் என மூன்று தரப்புகளும் இவ் ஒப்பந்தத்தில் கைசாத்திடவிருந்தமை குறிப்பிடத்தக்கது…
-
- 0 replies
- 414 views
-