Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்க 30 பேர் கொண்ட குழு நியமனம் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மணல் கடத்தலைத் தடுக்க 30 பேர் கொண்ட சிறப்பு பொலிஸ் பிரிவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி மக்கள் இந்த விடயம் குறித்து பருத்தித்துறை பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் அவசரப் பிரிவுக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடமராட்சி கிழக்குப் பகுதிகளான குடத்தனை, பொற்பனை மற்றும் மணற்காடு பகுதிகளில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் பெருமளவான மணல் சட்டவிரோதமாக அகழப்படுவதாக த…

  2. ஜனாதிபதி கோட்டா ஆட்சியில் மீண்டும் தொடங்கியது காணி பறிப்பு..! வலி,வடக்கில் 5 ஏக்கா் மக்களின் காணியை பறிக்க திட்டம். யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில் 400 மீற்றா் நீளமான பகுதியை மீள வழங்குமாறு யாழ்.மாவட்ட செயலா் என்.வேதநாயகன் பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதம் எழுதியிருக்கும் நிலையில், அதனை மீறி தனியாா் காணிக்கு ஊடாக பாதை அமைக்க விமானப்படையினா் முயற்சித்து வருகின்றனா். விமான நிலையத்திற்கு செல்லும் 400 மீற்றா் நீளமான வீதி செப்பனிடப்படாமல் விடப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பாதையை செப்பனிட காணியை விமானப்படை வழங்கவேண்டும். என தொடா்ச்சியாக கோாிக்கை முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அங்குள்ள 11 பொதுமக்களுக்கு சொந்தமான சுமாா் 5 ஏக்கா் காணி…

  3. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) சுவிஸ் தூதரக பெண் அதிகாரியை கடத்தவில்லை என அரசாங்கமும் பொலிசாரும் கூறுவது உண்மையென இன்னமும் நம்ப முடியாதுள்ளது. நல்ல வேளையில் இருக்கும் பெண், குடும்பம் பிள்ளைகள் என இருக்கும் பெண் அதிகாரி ஒருவர் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட 10 நாட்களில் தனது உயிர், குடும்பம், பிள்ளைகளின் உயிரைக்கூட பொருட்படுத்தாது இவ்வாறான குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைப்பாரா என ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த நாட்டில் மீண்டும் வெள…

    • 4 replies
    • 909 views
  4. பெண் அரச ஊழியர் மீது தாக்குதல்-முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கருணா கோரிக்கை பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை கமநல சேவைகள் திணைக்களத்தில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர் தாக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை கமநல சேவை திணைக்களத்தில் பணிபுரியும் பெண் அரச உத்தியோகத்தரை அதே திணைக்களத்தில் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் நபர் புதிய வருடத்தில் அரச உத்தியோகத்தர்கள் கடமை பொறுப்பேற்கும் நிகழ்வின்போது தாக்கியுள்ளார். இவ்வாறு தாக்கப்பட்டு காயமடைந்த குறித்த பெண் உத்தியோகத்தர் தற்போது 3 நாட்களாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று …

    • 7 replies
    • 1.2k views
  5. எதிர்க்கட்சித் தலைவர் சுமந்திரனா? – மஹிந்த அணி கேள்வி! இன்று எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் இடையில் எதிர்க்கட்சி தலைவர் மோதல் வந்துள்ளது என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘எதிர்க்கட்சித் தலைவரின் கன்னியுரை சபையில் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவா என்ற கேள்வி எழுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவர் உள்ளனர். முதலில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தீர்மானித்து அதன் பின்னர் உரையாட வர வேண்டும். சஜித் பிரேமதாசவின் அதிக…

  6. January 7, 2020 Add Comment ஆசியா நாடுகளில் பரவி வரும் நிமோனியா வைரஸ் இலங்கையையும் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுகாதார அமைச்சு காண்காணிப்புடன் செயற்பட்டுவருவதாகவும் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த வைரஸ் தாக்கம் அதிகரிக்குமாயின் நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர விமான நிலையத்திலும் வைத்தியசாலைகளிலும் ஒரு அவசர திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தயாராகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தடைவிதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்…

  7. அம்பாறை மாவட்டம் உஹண கோணாகொல்ல பகுதியில் உள்ள சேனரத்புர பிராந்திய மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவர் நான்கு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் உஹன காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உஹண பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றின் மாணவிகள் நால்வர் செவ்வாய்க்கிழமை(7) இடம்பெறவிருந்த ஒரு போட்டியில் கலந்துகொள்வதற்காக மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்காக சென்றுள்ளனர். குறித்த விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க சென்ற நான்கு சிறுமிகளே இவ்வாறு மருத்துவரினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். …

    • 2 replies
    • 936 views
  8. சாவகச்சேரி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கொடிகாமம் நகர்ப்பகுதி சந்தை சுவர்களில், கடைகளின் சுவர்களில் தமிழர் பண்பாட்டு பாரம்பரிய கலாசாரங்களையும் தொழில்நுட்பங்களையும் பிரதி பலிக்கக்கூடிய வகையிலான வர்ணப்படங்களை பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களது நிதிப்பங்களிப்பில் வரைந்து அழகுபடுத்துவதற்கான அனுமதியினை கோரி சாவகச்சேரி பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வில் உபதவிசாளர் செ.மயூரன் பிரேரணையாக சமர்ப்பித்திருந்தார். கலை பண்பாடு மற்றும் கலாசாரங்களை வெளிப்படுத்தக் கூடியதும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தக்கூடியதுமான ஓவியங்களை கொடிகாமம் பிரதேச ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வரைவதற்கு சபையின் ஒருமித்த தீர்மானத்தின் பிரகாரம் கொடிகாமம் பிரதேச இளைஞர்கள் வர்த்தகர்கள் பொது மக்கள் ஒன்றிணைந்து இ…

  9. -எஸ்.றொசேரியன் லெம்பேட் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் இளைஞர், யுவதிகளை நவீன யுகத்தினுள் உள்ளீர்கும் முகமாக உருவாக்கப்பட்ட 'ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித் திட்டம், இன்று (7) காலை 10 மணிக்கு, மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில், அதன் மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.மஜித் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிராம ரீதியாக உள்ள இளைஞர்களை 'ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக உள்வாங்கி, எதிர்கால தொழில் வாய்ப்பை ஊக்குவிக்கும் முகமாக குறித்த நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. குறித்த நிகழ்வில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி பூலோக ராஜா, தேசிய இளைஞர் சேவைகள…

  10. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்ச ஷானி அபேசேகர சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் இவ்வாறு சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணைக்குழு இன்று (07) அறிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாக தெரியவந்த தகவலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரி…

  11. பாறுக் ஷிஹான்-2009ம் ஆண்டிற்கு முன்பு தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை துப்பாக்கிதான்இருந்தது. தமிழ் மக்களுக்கு ,தமிழ் இளைஞர்களுக்கு பிரச்சனை இருக்கிறது அது எமக்கு தெரியும் வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக்க தெரிவித்தார். வன ஜீவராசிகள் இராஜங்க அமைச்சராக பதவியேற்ற விமல வீர திஸ்ஸநாயக்க அவர்களை வரவேற்கும் நிகழ்வு திங்கட்கிழமை (6) மாலை கல்முனை பிரதேசத்தில் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமிழ் பிரதேசங்களின் அமைப்பாளர் சி. சாந்தலிங்கம் மற்றும் கல்முனை பிராந்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞரணி அமைப்பாளர் ஜெ.கிஷாந்தன்,ரஜீவன் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.மேலும் அவர் உரையாற்றுகையில் தமிழ் ,முஸ்லிம் மக்கள் தங்கள் தல…

  12. (செ.தேன்மொழி) மெகசின் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. வெலிக்கடைச் சிறைசாலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த செல்லபிள்ளை மகேந்திரன் எனப்படும் கைதியொருவரே நேற்று முன்தினம் வியாழக்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்துடன் தொடர்பு கொண்டபோது அவர்கள் கூறியதாவது, மட்டகளப்பு பகுதியைச் சேர்ந்த செல்லபிள்ளை மகேந்திரன் என்பவர் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் திகதியே கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலை புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தமை காரணமாக கைது செய்யப்பட்ட இவர் 50 வருட சிறைதண்டனையும் , ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையிலே மெகசின்…

  13. (ரொபட் அன்டனி) தேசிய இனப்பிரச்சினை க்கு அரசியல் தீர்வு வேண்டுமாயின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையின் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே தமிழ் கூட்டமைப்பு கடந்த காலங்களைப் போன்று சண்டித்தனம் காட்டா மல் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதே பொருத்தமானதாக அமையும் என்று ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். அரசாங்கத்தை தீர்மானிக்க முடியும் என்ற கூட்டமைப்பின் எண்ணம் இம்முறை பிழைத்துவிட்டது. எனவே அந்த யதார்த்தைப் புரிந்துகொண்டு கூட்டமைப்பு செயற்பட வேண்டும். மாறாக கடந்த காலங்களைப் போன்று சண்டித்தனம் காட்ட முற்படுவது சானக்கியமாக அமையாது என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய…

  14. கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் காந்திக்கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்காது விட்டால், தான் குழந்தையுடன் உயிரை மாய்த்துக்கொள்ளவுள்ளதாக பெண் ஒருவர் வீதியில் தனிநபராக போராட்டத்தில் இன்று (02) ஈடுப்பட்டுள்ளார். காந்தி கிராமத்தில் கசிப்பு பாவனை அதிகரித்துள்ளது எனவும் இதனால் தன்னைப் போன்ற பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். அங்கு பெண்களுக்கான பாதுகாப்பான சூழல் காணப்படவில்லை என, தெரிவிக்கும் அவர், கசிப்பு பாவனையாளர்களால் அச்சமான நிலைமையே ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குடும்பத்தில் நிம்மதியில்லை, பாடசாலை பிள்ளைகள் நிம்மதியாக படிக்க முடியாதுள்ளதுடன், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிய…

    • 4 replies
    • 624 views
  15. மலையக தியாகிகள் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் இடம்பெறும் என மலையக சிவில் அமைப்புகள் அறிவித்துள்ளன. மஸ்கெலியா பஸ்தரிப்பிடத்துக்கு அருகாமையில் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வுகள் பிற்பகல் 2 மணிவரை நடைபெறவுள்ளன. மலையகத் தமிழர்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்வின் ஏனைய அம்சங்கள் ஆரம்பமாகும். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்து, மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த முல்லோயா கோவிந்தன் …

    • 0 replies
    • 337 views
  16. குருணாகலில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயம்! Published by J Anojan on 2020-01-07 16:18:10 குருணாகல், மல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். பஸ் ஒன்றும் பவுசர் ஒன்றும் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/72733

    • 0 replies
    • 270 views
  17. டெலிகொம் தலைவர் இராஜினாமா ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பீ.ஜீ குமாரசிங்க சிறிசேன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதேவேளை கிராமிய அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர் நிமல் பெரேரா ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பீ.ஜீ குமாரசிங்க சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.com/195002/

    • 0 replies
    • 425 views
  18. பதுளையில் காட்டுத் தீ – 10 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரை பதுளை பெரகல – கீழ் விகாரகல பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக பத்து ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்புத்தளை பொலிஸாரும் அல்துமுள்ளை பிரதேச மக்களும் ஒன்றிணைந்து பாரிய சிரமத்துக்கு மத்தியில் காட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக அப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/பதுளையில்-காட்டுத்-தீ-10-ஏக/

  19. 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள சில ஏற்பாடுகள் நடைமுறைச் சாத்தியமற்றன… January 6, 2020 அரசியல் தீர்வுகள் மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தியுடன் இணைந்து செல்ல வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (06.01.20) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது, அபிவிருத்தி மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து அறிந்துகொள்வதில் தூதுக்குழுவினர் ஆர்வமாக இருந்த நிலையில் அவர்களுக்கு மேலும் விளக்கமளித்த ஜனாதிபதி, உதாரணமாக 13வது அரசியலமைப்பு திருத்தத்தை எடுத்துக் கொண்டால், அதில் உள்ள சில ஏற்பாடுகள் நடைமுறை சாத்தியமற்றன என்றும் க…

  20. யாழ்ப்பாணம் - சங்கிலியன் மந்திரிமனை எவ்வித பராமரிப்பும் கண்காணிப்புமின்றி, காதலர்களின் ஓய்வுகூடமாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது. இரண்டாம் சங்கிலியன், யாழ்ப்பாணத்தின் அடையாளமாக வராலாற்று பதிவுகள் கூறுகின்ற நிலையில், அதற்கான அடையாளச் சின்னங்களாக யாழ்ப்பாணம் - முத்திரைச் சந்தியில் சங்கிலியன் சிலை, அதன் அருகில் யமுனா ஏரி, சங்கிலியன் தோப்பு, மந்திரிமனை என்பன காணப்படுகின்றன. இதில், மந்திரிமனை தவிர்த்த ஏனைய சின்னங்கள் தொல்பொருள் திணைக்களத்தாலும் யாழ்ப்பாணம் மாநகர சபையாலும் அடையாளப்படுத்தப்பட்டு, பெயர்ப் பலகை நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையில், மந்திரிமனை எந்தவோர் அடையாளப்படுத்தலும் பராமரிப்பும் இன்றி காணப்படுகிறது. ஏற்கெனவே, தொல்பொருள் சின்னம் என அடையாளப்…

  21. யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட கனடா பிரஜைகள் இருவர் கைது யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட கனடா பிரஜைகள் இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இருவரும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் கனடாவில் தஞ்சம் புகுந்து கனடா பிரஜாவுரிமையை தற்போது பெற்றுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு வந்த அவர்கள், இலங்கையில் தங்கி நிற்பதற்கான கால அவகாசம் முடிவடைந்தபோதும் மீண்டும் கனடாவிற்கு செல்லாத நிலையில், இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/யாழ்ப்பாணத்தை-பூர்வீகமா/

  22. தேசிய கொள்ளை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வழங்கப்பட்ட நியமனங்கள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்து அந்த நியமனங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை கொழும்பு - காலி முகத்திடலில் அகில இலங்கை திட்ட உதவியாளர்களுக்கான பயிற்சி நியமனதாரிகளின் சங்கத்தினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் தமது கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/72653 வேலையற்ற பட்டதாரிகள் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள்,…

    • 1 reply
    • 358 views
  23. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. நெதர்லாந்தின் தூதுவர் தஞ்சா கோங்க்ரிஜ்ப், இத்தாலி தூதரகத்தின் பிரதித் தலைவர் அலெக்ரா பைஸ்ட்ரோச்சி, ருமேனியாவின் தூதுவர் கலாநிதி விக்டர் சியுஜ்தியா, பிரான்சின் தூதுவர் எரிக் லாவெர்டு மற்றும் ஜெர்மனியின் தூதுவர் ஜோன் ரோட் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். தூதுவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக முதலில் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தைப் பற்றியும் சாதகமாக கருத்துக்களை முன்வைத்த …

    • 1 reply
    • 592 views
  24. என்னை நம்பியவர்களை நான் கைவிடுவதில்லை: அமைச்சர் டக்ளஸ். ‘என்னை நம்பியவர்களை குறிப்பாக என்னை நம்பி வந்த மக்களை நான் ஒரு போதும் கை விடுவதில்லை’ என கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் நேற்று (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார். இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். பேசாலை பகுதியில் யுத்த காலத்தின் போது அழிக்கப்பட்ட படகுகளுக்கான நட்ட ஈடுகள் எவையும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற கருத்தை மீனவ சங்க பிரதிநிதிகள் அமைச்சரிடம் முன் வைத்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ‘என்னை நம்பியவர்களை குறிப்பாக என்ன…

  25. குடும்பமாக அரசியலில் ஈடுபடுவது என்பது அரசியலுக்கும் புதிதல்ல, நம் நாட்டுக்கும் புதிதல்ல. இப்போது நாட்டில் நடப்பதுகூட ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிதான். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னரும் இதுதான் நடந்தது. ஆனால், தமிழில் குடும்ப அரசியல் என்பது சற்றுக் குறைவுதான். அப்படியே நடந்தாலும் தந்தைக்குப் பின் தனயன் என்ற நிலைதான் நீடித்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் அவரின் மகன் கலையமுதனும் இப்போது ஒரே நேரத்தில் அரசியலில் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களின் பதவிகள் வேறுவேறுதான். தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைந்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வருகின்றது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சி. பேரம் பேசி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.