Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டேன் – கோத்தா அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு தான் ஒருபோதும் அடிபணியமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமகா விகாரையில் நேற்று பௌத்த பிக்குகள் மத்தியில் கருத்து வெளியிட்ட அவர், “எனக்கு மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள். அந்த ஆணையின் படியே நான் செயற்படுவேன். ஒரு நோக்கத்துக்காகவே என்னை மக்கள் தெரிவு செய்தனர். அவர்கள் விரும்பியதை நிறைவேற்றி வைக்க வேண்டும். சில அரச சார்பற்ற நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளுக்கமைய, குற்ற வி்சாரணைப் பிரிவின் அதிகாரிகள் சிலர் விசாரணைகளை நடத்தினர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார் http://www.puthinapp…

  2. நிசாந்த சில்வா ஜெனிவாவுக்கு சென்றிருக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர் தங்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்ட குற்ற விசாரணைத் திணைக்களத்தின் தலைமை ஆய்வாளர் நிசாந்த சில்வா ஜெனிவாவுக்கு சென்றிருக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு நேற்று சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ச அங்கு, விகாராதிபதி மற்றும் பௌத்த பிக்குகளுடன் உரையாடும் போது இதுபற்றி தகவல் வெளியிட்டுள்ளார். “எங்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்ட நிசாந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறியதாக இன்று நான் கேள்விப்படுகிறேன். அவர் ஜெனிவாவுக்குச் சென்றிருக்க வேண்டும்“ என சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார். http://www.pu…

  3. இராஜாங்க அமைச்சர் நியமனம் இன்று நடைபெறாது? புதிய இராஜாங்க அமைச்சர்களுக்கான நியமனம் மற்றும் அவர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று நடைபெற வாய்ப்புகள் இல்லை என்று அதிகாரபூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 20 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், இவர்கள் பிரதி அமைச்சருக்கு மேலான அதிகாரங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டது. எனினும், இந்த பதவியேற்பு நிகழ்வு இன்று இடம்பெற வாய்ப்புகள் இல்லை என்றும் நாளை அல்லது மறுநாளே இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. கடந்த வாரம் அமைச்ச…

  4. சிறிலங்கா அதிபர் செயலக பிரதானியாக மேஜர் ஜெனரல் எகொடவெல சிறிலங்கா அதிபர் செயலக தலைமை அதிகாரியாக,சிறிலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியான மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலக பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 1971ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து கொண்ட மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தீவிர பங்காற்றியவர். ஆனையிறவுப் பெருந்தளம், 2000ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளிடம் வீழ்ச்சி கண்ட போது அதன் கட்டளை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெலவே பணியாற்றியிருந்தார். இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், 2007ஆம் ஆண்டில் இருந்து, 2015 வரை, அவர் ரக்ன லங்கா …

  5. நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதனால் நவம்பர் 27 முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரை ஆறு மாவட்டங்களில் சிறப்பு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அந்த பிரிவின் இயக்குநர் டாக்டர் அருணா ஜெயசேகர தெரிவித்தார். இந்த திட்டம் கொழும்பு, கம்பாஹா, மாத்தளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தொடங்கப்படும். அத்துடன் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருப்பதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுமாறு பொதுமக்களை அவர் கேட்…

    • 2 replies
    • 780 views
  6. கி.பி 309 முதல் 322 வரை ஆட்சியில் இருந்த கோத்தாபய மன்னருக்குப் பின்னர் மீண்டும் ஒரு கோத்தாபய நாட்டுக்கு கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில், அவர் அறம் சார்ந்தும் சட்டத்தை மதித்தும் நாட்டை ஆட்சி செய்து சுபீட்சமும் ஒழுக்கப் பண்பாடுமிக்க ஒரு நாட்டை கட்டியெழுப்புவார் என நாட்டிலுள்ள அனைத்து மக்களும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக கலாநிதி சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர் தெரிவித்தார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று (24) பிற்பகல் கொட்டாவ, ருக்மலே தர்ம விஜயாலோக்க விகாரையில் கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் மகா நாயக்க தேரரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களை…

    • 0 replies
    • 253 views
  7. இலங்கையில் தேர்தலுக்குப் பின் பெயர் பலகைகளில் இருந்து அழிக்கப்படும் தமிழ் எழுத்துகள் - நடப்பது என்ன? 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTWITTER Image captionநடுவில் இருந்த தமிழ் எழுத்துகள் மை பூசி அழிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் ஊடாக ஆட்சி மாற்றம் ஏற்பட்…

  8. (ஆர்.யசி) இந்த ஆட்சியாளர்களுக்கு சிறுபான்மை மக்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்க்க எவரும் முயற்சிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார, தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி சிந்திக்து அவர்களுடன் பயணிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன் வடமேல் ஆளுநர் மொஹமட் முசமிலுக்கு எதிராக சிங்கள பெளத்த மக்களை தூண்டிவிட நாம் எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை. எம்மை சாட்டி எவரும் பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் எனவும் அவர் கூறினார். வடமேல் மாகாண ஆளுநர் மொஹமட் முசமிலின் நியமனத்துகத்கு எதிராக சிங்கள மக்கள் தேரர்கள் சிலருடன் இணைந்து எதிர்ப…

    • 0 replies
    • 421 views
  9. இரா.செல்வராஜா) மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து செயல் திட்ட அறிக்கையொன்றை சமர்பிப்பதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி தேவராஜ் தலைமையில் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். இக்குழுவில் மலையகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளேன்.இக்குழுவினர் பல்கலைக்கழகம் அமைய வேண்டிய இடம் தேவையான வளங்கள் மற்றும் ஏளைய தேவைகள் குறித்து செயற்திட்ட அறிக்கையை சமர்பிப்பார்கள். குறித்த அறிக்கை கிடைத்த பின்னர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , உயர்கல்வி அமைச்சர் பந்துல்ல குணவர்தன ஆ…

    • 2 replies
    • 822 views
  10. (செ.தேன்மொழி) நாட்டை பிளவுபடுத்தும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் 13 அம்சக் கோரிக்கைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளித்தமையின் காரணமாகவே அந்த கட்சிக்குள் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார். ஐ.தே.க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மோசடிகளுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பத்தரமுல்ல - நெலும்மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். https://www.virakesari.lk/article/69703

    • 0 replies
    • 429 views
  11. இன்னமும் 4 மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடப்பது உறுதி. உறங்கிக் கிடந்த கட்சிகள் எல்லாம் உற்சாகமாகமடைய ஆரம்பித்து விட்டன. கன்னித் தேர்தலை சந்திக்கும் தமிழ் மக்கள் கூட்டணி அதி உற்சாகமாக உள்ளது. ஆசனப் பங்கீடு விவகாரம் இப்போதே கூட்டணிக்குள் சூடுபிடித்து விட்டது.எது எப்படியோ, தமிழர் தாயகத்தில் இம்முறை பலமான போட்டி நிலவப் போகிறது. முக்கியமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய முன்னணி என ஐந்து முனைப் போட்டி நிலவுவது உறுதி.இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் க. வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கூட்டணியில…

  12. மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுகேணிபகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மூன்று இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது, மீன் பிடிப்பதற்காக சென்ற இளைஞர்களில் 4 பேர் நீரில் மூழ்கிய நிலையில், ஒருவர் உடனடியாக அப்பகுதி மக்களால் காப்பாற்றப்பட்டிருந்தார். அதனையடுத்து, காணாமல் போன மூன்று பேரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே குறித்த மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மடடககளபபல-நரல-மழகய-மவர-உயரழபப/150-241507

  13. குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் 704 பேர், இன்று (25) முதல் அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு - குடியகல்வு பிரிவுக்கு, குறித்த திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த ஊழியர்களின் பெயர் பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பெயர் பட்டியில் இன்று (25) அதிகாலை விமான நிலையத்தின் குடிவரவு - குடியகல்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், பெயர்களை கணினி மயப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ப…

    • 3 replies
    • 890 views
  14. தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கி தமிழ்மக்களின் மனங்களை வெல்லவேண்டும் என யாழ்.இந்து சமயப் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் இலட்சோப இலட்ச வாக்குகளைப் பெற்று இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை எமக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்கள மக்கள் அமோக வாக்கினைச் செலுத்தி ஜனாதிபதியாக தெரிவு செய்து வரலாற்றில் அழியாத புகழை தாங்கள் பெற வழிசெய்துள்ளார்கள். எனினும் இத்தகைய சாதனை படைத்த தங்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காது போனமை தாங்கள் தமிழ் மக்களின் மனங்களை வ…

  15. கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரபலமான முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கொண்ட அரசியல் கூட்டணியொன்று உருவாகவுள்ளது. அதற்கான பேச்சுக்கள் நடந்துவருகின்றன. மட்டக்களப்பு ,அம்பாறை ,திருகோணமலை மாவட்டங்களை சார்ந்த இப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ,முன்னாள் இராஜாங்க அமைச்சர்மார் இருவர் இந்த கூட்டணியில் இணையவுள்ளனர். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்த அரசியல் கூட்டணி தனித்து போட்டியிடவுள்ளது.இந்தக் கூட்டணி நாடளாவிய ரீதியில் போட்டியிடவும் ஆலோசனை நடத்தி வருகிறது. தகவல் : சிவா ராமசாமி https://www.madawalaenews.com/2019/11/blog-post_785.html

  16. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரஸ்வாமி தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே அவர் ராஜினாமா கடிதத்தை கொடுத்திருப்பதாகவும் டிசம்பர் முதலாம் திகதி முதல் அவர் பதவியில் இருந்து விலகிவிடுவாரெனவும் மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். https://www.madawalaenews.com/2019/11/blog-post_736.html

    • 0 replies
    • 441 views
  17. அரியாலை வீட்டில் ஆயுதக் கிடங்காம் – தோண்டும் பணிகள் ஆரம்பம்… November 24, 2019 அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதக் கிடங்கு உள்ளமை தொடர்பில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அனுமதி வழங்கப்பட்டமையை அடுத்து அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரியாலை தபால் கட்டைச் சந்திக்கு அண்மையாக உள்ள வீட்டில் இராணுவ முகாம் அமைந்திருந்தது. குறித்த முகாம் வடமாகாண சபைத் தேர்தலை அடுத்து அகற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று குறிப்பிட்டு தெய்வீ…

    • 3 replies
    • 918 views
  18. பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்னர் நிதியமைச்சருக்கான தனது கடமைகளை நிதியமைச்சில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி, பொருளாதார அலுவல்கள், கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், கலாசாரம், நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு வசதிகள் அமைச்சராக கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/69666

    • 3 replies
    • 398 views
  19. பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைதாகி சிறை வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவம், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பை வழங்குமாறு தாய்நாட்டிற்கான இராணுவத்தினர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கருணா அம்மான், குமரன் பத்மநாதன் உள்ளிட்டவர்கள் இன்று வெளியே சுதந்திரமாக இருக்கின்ற நிலையில், ஏன் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வெளியே அனுமதிக்க முடியாது என்று அந்த அமைப்பின் இணைப்பாளரான மேஜர் அஜித் பிரசன்ன கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் தாய்நாட்டிற்கான இராணுவத்தினர் என்கிற அமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தது. இதில் க…

  20. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கான தகுதியை சஜித் அடையவில்லை – ராஜித எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கான தகுதியை முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச இன்னும் அடையவில்லை என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கட்சிக்குள் நிலவிய முரண்பாடு தோல்விக்கு காரணமாக அமைந்ததாக குறிப்பிட்டார். ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நிறுவனங்கள் மேலும் அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிக சிரத்தையுடனும…

    • 1 reply
    • 361 views
  21. குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அதிரடியாக இடமாற்றம் நீண்டகாலமாக சி.ஐ.டி.யின் குற்றப் புலனாய்வாளராக கடமையாற்றி வரும் ஷானி அபேசேகர, சி.ஐ.டி. பொறுப்பதிகாரியாக, உதவி பொலிஸ் அத்தியட்சராக, பொலிஸ் அத்தியட்சராக, பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்த நிலையில் தற்போதைய சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர அந்த பதவியில் இருந்து நீக்கி, தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக தரமுர்த்தப்பட்ட பின்னர் கடந்த 2017 ஆம் அண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி சி.ஐ.டி.யின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இலங்கையின் மிக அனுபவ…

    • 4 replies
    • 594 views
  22. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவசர விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று நிறைவடைந்துள்ள நிலையில் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்று இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்திய வெளிவிகார அமைச்சரின் வருகை பெரும் முக்கியத்துவமாக நோக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை கொழும்பு வந்துள்ளார். இந்திய பிரதமரின் விசேட பணிப்பின் பேரிலேயே இலங்கை வந்துள்ள அவர், இன்றிரவு ஜனாதிபதி கோத்தாபயவை சந்திக்கவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங…

    • 61 replies
    • 5.4k views
  23. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பயணித்த வாகனத் தொடரணி மீது இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதுரங்குளி கணமூலை பகுதியில் வைத்து மாலை 5.30 மணியளவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் தொகுதியில் மாத்திரம் ஐ.தே.மு அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், குறித்த தேர்தலில் ஐ.தே.மு வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மதுரங்குளி கணமூலை பகுதிக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, அ.இ.ம.கா புத்தளம் …

  24. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஆசி வேண்டி பிரார்த்தனை. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நாட்டுக்கும் நல்லாசி வேண்டி காத்தான்குடியில் துஆப் பிரார்த்தனையொன்று இடம்பெற்றது. காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் புதிய ஜனாதிபதிக்கும் புதிய பிரதமருக்கும் நாட்டுக்கும் நல்லாசி வேண்டி காத்தான்குடியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றது. காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜூம் ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற வைபவத்தில் பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ்.எம்.சியாட் உள்ளிட்ட நகர சபையின் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர். துஆப் பிரார்த்தனையினை காத்தான்குடி முகைதீன் மெத…

  25. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தியா பிரஸ்தாபிக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வு ஒன்றை இந்தியா ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. இதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு செய்யும் என்று தமிழ் மக்கள் முழுமையாக நம்புகின்றார்கள். என தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கேள்வி:- இந்திய வெளிநாட்டமைச்சர் இலங்கைக்கு பயணம் செய்து புதிய ஜனாதிபதி…

    • 3 replies
    • 778 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.