ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton) இன்று (25) முற்பகல் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது உயர் ஸ்தானிகர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதுடன், ஜனாதிபதியுடன் சுமூகமாக கலந்துரையாடினார். பிரதி பிரித்தானிய உயர் ஸ்தானிகர் டொம் பர்னும் (Tom Burn) இச்சந்திப்பில் கலந்துகொண்டார். https://www.virakesari.lk/article/69702
-
- 2 replies
- 742 views
-
-
வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் பிரதம நீதியரசர் கே.சிறீபவன்? முன்னாள் பிரதம நீதியரசர் கே.சிறீபவன் உள்ளிட்ட மூவரின் பெயர்கள் வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கான பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.இவர்களில் முன்னாள் பிரதம நீதியரசர் கே.சிறீபவனே தமது முதல் தெரிவாக இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் பிரதம நீதியரசர் கே.சிறீபவனை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில்ஏனைய 6 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களை நியமிப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15) http://www.samakalam.com/செய்திகள்/வடக்கு-மாகாண…
-
- 11 replies
- 1.7k views
-
-
ஜனாதிபதி அவதானித்துள்ளார், முன்னேற்றம் விரைவில் – அமைச்சர் பிரசன்ன இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயத்தின் ஊடாக இராஜதந்திர ரீதியில் பாரிய வெற்றியை நாட்டுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை வரவேற்பதற்காக சென்ற அமைச்சர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சாதாரண பயணிகள் செல்லும் வழியின் ஊடாகவே தமது பயணத்தை மேற்கொண்டதுடன், மீண்டும் அதே வழியிலேயே திரும்பிவந்தார். இதன்போது விமான நிலையத்தின் செயற்பாடுகளை அவதானித்ததுடன், புதிதாக ப…
-
- 0 replies
- 2.2k views
-
-
19 ஆவது திருத்தத்தை நீக்க ஒருபோதும் இடமளியோம் - ஐ.தே.க Published by J Anojan on 2019-12-02 15:04:27 (நா.தனுஜா) நிறைவேற்றதிகாரத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் இடையில் சமநிலையொன்றை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நீக்கவேண்டும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதுகுறித்து எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுட்டிக்காட்டும்பட்சத்தில் நாம் அவதானம் செலுத்தத் தயாராக இருக்கின்றோம். ஆனால் அதனை முழுமையாக நீக்குவதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையக…
-
- 0 replies
- 309 views
-
-
தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியா கூறியிருக்கிறது. கொழும்புக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியாவின் இந்த விருப்பத்தை தெரிவித்ததாக புதுடில்லியில் இன்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். தமிழ் மக்கள் சமத்துவத்துடனும் நீதியுடனும் சமாதானம் மற்றும் கன்னியத்துடனும் வாழக் கூடியதாக அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வொன்றை காண்பதற்கான தேசிய நல்லிணக்க செயன்முறைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை இலங…
-
- 53 replies
- 4.3k views
- 1 follower
-
-
நவ. 27 மாவீரவர் நாள். மாவீரர் நாள் என்றதுமே, தமிழர் தாயகம் எங்கும் உணர்ச்சி பெருக்கெடுத்துப் பாயும். அந்த உணர்ச்சியை கட்டுக்குள் வைத்து, மனதைக் கனக்க வைப்பதாக ஒலிக்கும், “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய...” மாவீரர்நாள் பாடல். மாவீரர்களை நினைவுகூருவது தொடர்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இவ்வாறான பாடல் ஒன்றின் தேவையை, அப்போதைய மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா முன்வைத்திருந்தார். 1992 மாவீரர் நாள் நினைவேந்தலின்போது கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் வர்ணராமேஸ்வரன் இப்பாடலைப் பாடினர். அச்சமயம் அங்கு நின்ற போராளி ஒருவர், இப்பாடல் குறித்து “வெளிச்சம் இதழில்” இக்கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரை மீள்பிரசுரமாகிறது.) 1992 ஆம் ஆண்டின் மாவீரர் நாள் பிறக்கப…
-
- 30 replies
- 3.2k views
-
-
ரணில் விக்ரமசிங்க அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார். குறிப்பாக சொல்ல போனால் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தருவேன் என்று பல தடவைகள் சொல்லி கடைசி நிமிடம்வரை எங்களை ஏமாற்றி விட்டார் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை ( 29) நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள வீரச்சோலை அ.த.க. பாடசாலைக்கு ஒலி பெருக்கி சாதனங்களை பண்முக படுதப்பட்ட நிதியிலிருந்து வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ். திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், வடகிழக்கிலே வாழுகின்ற தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமை…
-
- 8 replies
- 1.5k views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முழுக் கட்டுப்பாட்டை சீனாவுக்கு கொடுத்தமை தவறென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்திய ஊடகவியலாளர் நிதின் கோகலேவுக்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்று இந்தியாவுக்கான விஜயத்திற்கு முன்னர் முதன்முதலில் இந்த பேட்டியை வழங்கியிருக்கும் ஜனாதிபதி , இந்தியாவுக்கு எதிரான எந்த வேலையையும் தமது நாடு செய்யாது என்பதனை குறிப்பிட்டுக் கூறியுள்ளார். அந்த செவ்வியின் சாராம்சம்… ”நான் ஒரு நடுநிலைவாதியாக இருக்க விரும்புகிறேன் என்று நான் பதவி ஏற்றுக்கொண்ட உரையில் கூட குறிப்பிட்டுள்ளேன். அது சாத்தியம். உலகில் இதற்கு எடுத்துக்காட்டுகள் உள்ளன. இன்றைய புவிசார் அரசியலில் இந்தியப் பெ…
-
- 14 replies
- 2.4k views
-
-
முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத புதிய அமைச்சரவை உருவாக்கமானது தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களை சிங்கள மக்கள் காப்பாற்றிவிட்டனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் எதிர்கால திட்டம் குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை(1) மாலை 5 மணி முதல் 7 மணிவரை மக்கள் சந்திப்பு இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களை சிங்கள மக்கள் காப்பாற்றி…
-
- 1 reply
- 484 views
-
-
முல்லைதீவு வட்டுவாகல் பாலத்துக்கு மேலாக நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் பாதிப்பு முல்லைத்தீவு_ புதுக்குடியிருப்பு பகுதியை இணைக்கும் வட்டுவாகல் பாலத்துக்கு மேலாக நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றது. நீர் பாலத்துக்கு மேலாக பெருக்கெடுத்து ஓடுவதால் பணிகளுக்காக செல்பவர்களும், மாணவர்களும் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். ஒவ்வொரு மழைகாலங்களிலும் குறித்த பாலம் இவ்வாறான நிலைமைக்கு செல்வதோடு ஆபத்தான முறையில் பிரயாணிகள் பயணம் செய்யவேண்டிய நிலையும் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இன்று அதிகாலை முதல் வட்டுவாகல் பாலத்துக்கு மேலாக நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றது. நீர் பாலத்துக்கு மேலாக பெருக்கெடுத்து ஓடுவதால் பல விபத்துகள் குறித்த பகுதி…
-
- 0 replies
- 274 views
-
-
இரண்டரை கட்சிகளை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் ஆணைகளை புறந்தள்ளி செயற்பட்டு அரசாங்கத்தை பாதுகாக்கும் கட்சியாகவே உள்ளது. காலத்தின் தேவையுணர்ந்து முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் புதிய மாற்று அணியை கொண்ட கூட்டு விரைவில் உருவாகும் என தெரிவித்துள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். டவவுனியாவில் உள்ள தனியார் விடுதியொன்றில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு இன்று (1) கூடியது. அதன் நிறைவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவா இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான அரசியல் நிலவரங்கள் கள நிலவரங்கள் பற்றி வடக்கு கிழக்கு மாக…
-
- 3 replies
- 505 views
-
-
குற்ற விசாரணை திணைக்களத்தின் உயர் அதிகாரியான நிஷாந்த சில்வாவை இலங்கைக்கு நாடு கடத்த முடியாதென சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுவிஸ் சட்டத்திட்டத்திற்கு அமைய அவரையும் அவரது குடும்பத்தினரையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்பு மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிஷாந்த சில்வாவுக்கு எதிராக இன்டர்போல் பிடியாணை இல்லாமையினால் அவருக்கு எதிராக செயற்படுவதற்கு சுவிஸ் பொலிஸாருக்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என அறிவிக்கப்படுகிறது. இதேவேளை, மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று நிஷாந்த சில்வாவை சந்தித்து லசந்த விக்ரமதுங்க, வசீம் தாஜுடீன், கீத் நோயார், எக்னெலிகொட, உபாலி தென்னகோன் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர். நிஷாந…
-
- 2 replies
- 806 views
-
-
க.பொ.த. சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம் 2019ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த பரீட்சைகள் 4 ஆயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இம்முறை 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சாத்திகள் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ளனர். பரீட்சை நாளாந்தம் காலை 8.30க்கு ஆரம்பமாகவுள்ளதுடன் பரீட்சார்த்திகள் அரை மணி நேரத்திற்கு முன்னராக பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இதேவேளை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள கல்விப் பொதுத் தரா தர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள ம…
-
- 1 reply
- 331 views
-
-
ட்ரோன் கமராவை பறக்கவிட்ட நபர் கைது நுவரெலியா-மீபிலிமான பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் ட்ரோன் கமராவை பறக்கவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலிய பொலிஸ் நிலைய விசேட அதிரடிப்படைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 9 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சேனாநந்த வித்தியாலய பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சு அல்லது சிவில் விமான சேவை ஆணைக்குழுவின் அனுமதியின்றியே குறித்த நபர் ட்ரோன் கமராவை பறக்கவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், அவரிடமிருந்த ட்ரோன் கமரா மற்றும் அதன் உதிரிப்பாகங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் த…
-
- 0 replies
- 265 views
-
-
யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கான தேர்தலை நடத்துவதில் தொடர்ந்தும் இழுபறி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேர்தலை இம்மாத இறுதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை காரணமாக அது தள்ளிப்போகும் நிலைமை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு கடந்த ஒக்டோபர் மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, ஒன்பது பேர் அதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் காரணமாக அதற்கான தேர்தலை நடத்துவதில் தடங்கல் ஏற்பட்டிருந்தது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர், நேற்று முன்தினம் சனிக்கிழமை கூடிய யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவை விண்ணப்பதாரிகளின் தகுதி, தராதரங்களை மதிப்பீடு …
-
- 0 replies
- 298 views
-
-
30வருட பயங்கரவாத யுத்தத்திற்குள் அகப்பட்டு பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய வட,கிழக்கு மக்கள் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஐக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்துவரும் சூழ்நிலையில், தமிழ், முஸ்லிம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்தும் வகையில், விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். இவரது செயற்பாடுகளினால் தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் தூண்டப்பட்டு இன மோதல்கள் இடம்பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. இந்தவிடயம் குறித்து கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, …
-
- 3 replies
- 581 views
-
-
அங்கயன், வியாழேந்திரனுக்கு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைமையே கிட்டியது! மஸ்தானுக்கும் அதே நிலை! By: Submitted: 2019-11-27 20:16:41 அங்கஜன் இராமநாதன்,எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்டோருக்கு மாவட்ட இணைப்புக் குழு தலைவர் பதவிகளே வழங்கப்பட்டுள்ளன. நேற்று இடம்பெற்ற மாவட்ட இணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் நியமனத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்து சிவலிங்கம், காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்டோரும், மாவட்ட இணைப்புக் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட மட்டத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுடன் இண…
-
- 9 replies
- 1.3k views
-
-
நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை தேர்தல் தொகுதியில் நாகந்தலாவ மலபத்தாவ எனுமிடத்தில் வீடொன்றின் மீது மண்சரிவில் சிக்குண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தை மகன் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வலப்பனை பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட வலப்பனை பதியபெலல்ல பிரதான வீதிக்கு அருகில் நாரந்தலாவ மலபத்தாவ எனுமிடத்தில் பிரதான வீதியுடனான பாரிய மண்மேடு சரிவு (30) இரவு 8.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. நாரந்தலாவை பகுதியில் பிரதான வீதிக்கு கீழ் பகுதியில் அமைந்திருந்த இரண்டு வீடுகள் மீது மண் மற்றும் பாரிய கற்கள் இதன்போது சரிந்து மூடியுள்ளன. இதன்போது, ஒரே வீட்டில் வசித்து வந்த 50, 48,17,ம…
-
- 1 reply
- 520 views
-
-
பதவியேற்று 10 நாட்களின் ஜனாதிபதி மேற்கொண்ட முக்கிய தீர்மானங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மக்களின் பாராட்டுகளுக்கு உள்ளாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்றைய தினம் விசேட அறிக்கையொன்றை அனுப்பி ஜனாதிபதியின் குறித்த தீர்மானங்கள் தொடர்பாக அறிவித்துள்ளது. அந்த தீர்மானங்கள் வருமாறு, 1. மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதியை தடை செய்தல். 2. 15% சதவீதமாகக் காணப்பட்ட யஅப வரியினை 8% சதவீதமாகக் குறைத்தல். 3. தொலைபேசி கட்டணங்களுக்காக அறவிடப்பட்ட வரியினை 25 சதவீதத்தினால் குறைத்தல். 4. அரச நிறுவனத் தலைவர்களின் நியமிப்பின்போது விசேட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பெற்று…
-
- 0 replies
- 428 views
-
-
(எம்.மனோசித்ரா) இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் அதில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதால் அவை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே தீர்க்கமான முடிவொன்றை எடுக்க முடியும் என்று முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வெளிநாடொன்றுக்கான முதலாவது விஜயமாக இந்தியாவிற்குச் சென்றிருக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, விஜயத்தின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை நண்பகல் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அதன் பின்னர் ஹ…
-
- 0 replies
- 425 views
-
-
இலங்கை கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி: கேள்விக்குறியாகிறதா தகவலறியும் உரிமை சட்டம்? ரஞ்சன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னணியில், இலங்கையில் தகவலறியும் உரிமை தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாக இணையத்தள ஊடகவியலாளர் தேசிய அமை…
-
- 0 replies
- 913 views
- 1 follower
-
-
இன்று புதுடெல்லி பறக்கிறார் கோத்தா – நாளை முக்கிய சந்திப்புகள் ஏற்பாடு Nov 28, 2019 | 1:27by கார்வண்ணன் in செய்திகள் சிறிலங்கா அதிபர் கோத்தபய ராஜபக்ச இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். சிறிலங்கா அதிபர் இந்தியப் பயணத்தின் போது, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார். சிறிலங்கா அதிபருடன், அவரது செயலர் பிபி ஜயசுந்தர, வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்க, திறைசேரி செயலர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல, அதிபரின் ஆலோசகர் லலித் வீரதுங்க, அதிபரின் தனிப்பட்ட செயலர் சுஜீஸ்வர பண்டார ஆகியோர் புதுடெல்லி செல்லவுள்ளனர் என்று அதிபரின் ஊடகப் பிரிவ…
-
- 28 replies
- 2.7k views
- 2 followers
-
-
பெரும்பான்மை சமூகத்தினரின் விருப்பத்திற்கு மாறாக எதனையும் செய்யமுடியாது- அதிகார பகிர்வு குறித்த கேள்விக்கு கோத்தாபய பதில்- இந்துவிற்கு பேட்டி இலங்கையின் பெரும்பான்மை சமுகத்தினரின் விருப்பத்திற்கு மாறாக எதனையும் செய்ய முடியாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார் த இந்துவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களிற்கு நீதி சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி இந்திய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது, அதற்கு உங்கள் பதில் என்ன என்ற கேள்விக்கு பெரும்பான்மை சமுகத்தின் விருப்பங்களிற்கு எதிராக எதனையும் செய்ய முடியாது எனவும் நான் கருதுகின்றேன்.பெரும்பான்மை சமூகத்தின் விருப்பத்திற்கு மாறாக யாராவது ஏதாவது வாக்குறுதியளித்தால் அது பொய்.பிரதேசங்க…
-
- 1 reply
- 954 views
-
-
புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தினால் ஆட்சிமுறையில் கொண்டுவரப்பட்ட சிக்கல்கள் காரணமாக முன்னைய சகல ஜனாதிபதி தேர்தல்களையும் விட தற்போது நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தல் வேறுபட்டதாக இருந்தது என்று கூறியிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச, புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு அந்த திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான தனது சகோதரர் கோதாபய ராஜபக்ச ஜனாதிப…
-
- 5 replies
- 767 views
-
-
எஸ்.வினோத் கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் உத்தியோகத்தர் ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நாட்டின் இராஜதந்திர வரலாற்றில் ஓர் கரும்புள்ளியாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலையடுத்து முதற்தடவையாக தனது மெளனத்தைக் கலைத்த முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, இச் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளதுடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின்னர் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் ம…
-
- 0 replies
- 300 views
-