ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
இந்திய – இலங்கை உறவினை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி 1:49 pm November 29, 2019 0 41 Views இந்திய – இலங்கை உறவினை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல தமது பதவிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான இரண்டு நாள் அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (29) முற்பகல் இடம்பெற்றபோதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் தனது முதலாவது அரசமுறை வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜன…
-
- 0 replies
- 332 views
-
-
சுவிற்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய பெண்ணை கடத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் : பிரதமர் Published by R. Kalaichelvan on 2019-11-29 16:07:21 (எம்.ஆர்.எம்.வஸீம்) சுவிற்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய பெண்ணை கடத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். இதுபோன்ற சம்பவங்கள் இடம்பறுவதற்கு இடமளிக்கமுடியாது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் இதுவரை வாக்குமூலம் அளிக்காமல் இருப்பதால் விசாரணைகளை தொடரமுடியாமல் இருக்கின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார். நீர்வழங்கல் மற்றும் வசதிகள் இராஜாங்க அமைச்சராக நியமனம்பெற்ற அமைச்சர் வாசுதேவ நானயக்கார இன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள நீர்வழங்கல் அம…
-
- 0 replies
- 210 views
-
-
வடக்கு ரயில் சேவை வழமைக்கு வடக்கிற்கான ரயில் சேவைகள் இரண்டு நாட்களுக்கு பின்னர் இன்று அதிகாலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத மேலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 27ம் திகதி வடக்கு ரயில் பாதையின் அம்பன்பொல கல்கமுவ இடைப்பட்ட பகுதியில் ரயில் தடம் புரண்டமையினால் இரண்டு நாட்களாக வடக்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது http://www.dailyceylon.com/193106/
-
- 0 replies
- 247 views
-
-
புதிய ஜனாதிபதியிடம் 21 கோரிக்கைகளை முன்வைத்த மீனவர்கள் இயக்கம் Published by Daya on 2019-11-29 16:15:43 புதிதாக உருவாகியுள்ள கோத்தாபயவின் அரசாங்கத்திடம் வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும், வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையமும் இணைந்து 21 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். அவர்கள் தமது கோரிக்கையில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய 21 முக்கிய பிரச்சினைகளை குறிப்பிட்டுள்ளனர். தாம் இதனை மிக விரைவில் கடற்தொழில் அமைச்சரைச் சந்தித்து நேரடியாகக் கையளிக்கவுள்ளதாகவும் த…
-
- 0 replies
- 263 views
-
-
மோடியை சந்தித்தார் கோட்டா Nov 29, 20190 இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இதேவேளை இந்திய வெளிவிகார அமைச்சர் உள்ளிட்டோரையும் இன்று முற்பகல் ஜனாதிபதி சந்தித்துள்ளார். -(3) http://www.samakalam.com/செய்திகள்/மோடியை-சந்தித்தார்-கோட்ட/
-
- 0 replies
- 794 views
-
-
மகிந்த தேசப்பிரிய பதவி விலக தீர்மானம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய பதவி விலக தீர்மானித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அரசியலமைப்பு பேரவையின் தலைவர் என்ற ரீதியில் சபாநாயகர் கருஜயசூரிய கருத்து வெளியிட்டுள்ளதாகவும் தற்போதைய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தொடர்ந்தும் பதவியில் இருப்பதே பொறுத்தமானது என அவர் தெரிவித்துள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. http://www.samakalam.com/செய்திகள்/மகிந்த-தேசப்பிரிய-பதவி-வ/
-
- 0 replies
- 279 views
-
-
-செல்வநாயகம் ரவிசாந் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகள், கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்துக்கு முன்பாக, இராச வீதியிலுள்ள காணியொன்றில், நேற்று நடைபெற்றன. இதன்போது வெள்ளைக்காரத் தம்பதிகள் கலந்துகொண்டு, மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளமை அங்கு கூடியிருந்த பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது. மாவீரர் ஈகைச் சுடரேற்றப்பட்ட சமநேரத்தில் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர் பொது நினைவுக் கல்லறைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஆரம்பமானது. மாவீரர்களின் பெற்றோர்கள், குடும்பங்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரிசையில்காத்த…
-
- 3 replies
- 745 views
-
-
சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட விவகாரம் – விசாரணைகள் ஆரம்பம்! சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் இலங்கை அதிகாரி ஒருவர் வானில் கடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இவ்வாறு கடத்தப்பட்ட அவரிடம் பல்வேறு விடயங்கள் குறித்து கடத்தல்காரர்கள் விசாரணை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில தினங்களுக்கு முன்னர் சுவிஸில் தஞ்சம் கோரிய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் குறித்தே தூதரக அதிகாரியிடம் இவ்வாறு விசாரணை செய்யப…
-
- 2 replies
- 680 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் படலையை உடைத்து உள்நுழைந்துள்ளனர். மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே இந்த தடை, பல்கலைக்கழக நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று (27) முற்பகல் 10 மணியளவில் அங்கு கூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் தடைகளை மீறி நுழைந்துள்ளனர். அதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். -எம்.றொசாந்த் http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தடைகளை-மீறி-யாழ்-மாணவர்கள்-அ…
-
- 8 replies
- 1.8k views
- 1 follower
-
-
யாழ்தேவி ரயில் தடம் புரண்டடுள்ளதால் வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். கல்கமுவ – அம்பன்பொல ரயில் நிலையங்களுக்கிடையிலேயே குறித்த யாழ் தேவி ரயில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கிற்கான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. தடம்புரண்டுள்ள ரயில் பெட்டிகளை சீராக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் விரைவில் குறித்த ரயில் தடங்களில் சேவை இடம்பெறும் எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/யாழ்தேவி-ரயில்-தடம்-புரள/
-
- 5 replies
- 1.5k views
-
-
நாட்டில் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது குறிப்பிட்டார்கள். அவ்வாறு கூறி ஆட்சிபீடமேறியவர்களின் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையிலா அமைந்திருக்கின்றன? சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்கள், ஊடகவியலாளர்களின் நிலை என்னவாகும்? இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் வருத்தம் தெரிவிக்கும் அதேவேளை அவற்றைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப…
-
- 5 replies
- 1k views
-
-
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி விடுத்துள்ள விசேட வர்த்மானி அறிவித்தல் நாட்டில் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை பேணும் வகையில் ஆயுதப்படைகளை (இராணுவம், கடற்படை, விமானப்படை) பணிகளில் ஈடுபடுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபயவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் பாதுகாப்புக்காக இராணுவ வீரர்களை சேவையில் நிறுத்தும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் குறித்த நடவடிக்கையை ஜனாதிபதி எடுத்துள்ளார். -(3) …
-
- 17 replies
- 1.6k views
-
-
என்னை கோமாளியென சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால், கடந்தகாலத்தில் நான் செய்த முக்கியமான விடயங்களின்போது, இவர்கள் எல்லாம் எங்கிருந்தனர்? அதெல்லாம் கோமாளித்தனமானதா? இப்படி சூடாக கேள்வியெழுப்பி, முளைத்து மூன்று நாள் ஆவதற்குள் தன்னை விமர்சிக்கும் பேஸ்புக் போராளிகளை ஒரு பிடி பிடித்துள்ளார் எம்.கே.சிவாஜிலிங்கம். இன்று யாழில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், என்னை சிலர் கோமாளியென்கிறார்கள். மர்மமாக நடப்பதாக கூறுகிறார்கள். நான் 15 தடவைகள் ஜெனீவா சென்று கோமாளியாட்டமா ஆடுகிறேன். எங்கள் சொந்த செலவில், கடன்பட்டு சென்று கோமாளியாட்டமா ஆடுகிறேன்? இலங்கைக்கு ஜெனீவாவில் 2 வருடங்கள் காலஅவகாசம் கொடுக்க 2 முறை சுமந்திர…
-
- 2 replies
- 670 views
-
-
ராஜபக்சே ஆட்சிக்கு அஞ்சி தப்பியோட்டம் இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தின் ராஜாங்கம் மீண்டும் ஆட்சிக்குத் திரும்பியதில், அவர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல், ஊழல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளும் செய்தியாளர்களும் நாட்டை விட்டு ஓடுவதாக கூறப்படுகிறது. படம்: ஏஎஃப்பி 28 Nov 2019 இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தின் ராஜாங்கம் மீண்டும் ஆட்சிக்குத் திரும்பியதில், அவர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல், ஊழல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளும் செய்தியாளர்களும் நாட்டை விட்டு ஓடுவதாக கூறப்படுகிறது. கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் ஊழியர் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் கடத்…
-
- 0 replies
- 1.4k views
-
-
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளன. யாழ்.நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக குறித்த கல்வெட்டுக்கள் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும். அத்தருணத்தில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்த வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மாவீரர் வாரத்தின் இறுதிநாளான 27ஆம் திகதி மாலை 06.05 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் தொடக்கம் இறுதி யுத்தத்தில் வீரமரணமடைந்த சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட …
-
- 5 replies
- 899 views
-
-
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோட்டத் தொழிலாளர்களை இழிவாக பேசிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குளிர்ந்த நீரை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர் தொடர்பில் முறை தவறிய வார்த்தைகளை பாவித்தமையினாலேயே அப்படி செய்ததாக மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சம்பவம் குறித்த அவரது பேஸ்புக் பக்கத்தின் பதிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு, பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் போது தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பில் பொது வெளியில் பயன்படுத்த கூடாத வார்த்தையை, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பயன்படுத்தினார். அதை நான் கண்டித்த போது மீண்டும், மீண்டும் சத்தம் போட முனைந்த அதாவுல்லா மீத…
-
- 31 replies
- 4.3k views
- 1 follower
-
-
பிரபாகரனின் புகைப்படம் கொண்ட துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த இருவர் கைது மாவீரர் தினத்தை முன்னிட்டு விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய முகப்படம் கொண்ட மலையகமும் எழுச்சியும், எழுச்சி என்பதுமலையகத்திற்கு எட்டா கனியா போன்ற வாசகங்களை கொண்ட துண்டு பிரசுரங்களை பொகவந்தலாவ பகுதியில் விநியோகம் செய்த இரண்டு சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். மாவீரர் தினத்தை முன்னிட்டு விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய புகைப்படத்தை கொண்ட துண்டுபிரசுரத்தை பொகவந்தலாவ நகரம் மற்றும் சில தோட்டபகுதிகளில் விநியோகம் செய்து கொண்டிருந்த போதே பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும், குறித்த துண்டுபிர…
-
- 0 replies
- 490 views
-
-
ஜெனிவா பிரேரணையை நிராகரிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு! Published by J Anojan on 2019-11-28 16:18:35 (ஆர்.யசி) ஜெனிவா மனித உரிமைகள் பேரவையினால் கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 30/1 பிரேரணையை ராஜபக்ஷ அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும் பிரேரணையை நிராகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த ஆகியோர் மீண்டும் வலியுறுத்தினர். சர்வதேச ஒத்துழைப்புக்கள் இராஜாங்க அமைச்சராக வெளிவிவகார அமைச்சில் இன்று கடமை பொறுப்பேற்ற அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறினார். எமது அரசாங்கத்தின் சர்வதேச கொள…
-
- 0 replies
- 323 views
-
-
சுவிஸ் தூதரக பணியாளர் அச்சுறுத்தல் – அரசாங்கத்துக்கு தெரியாதாம் Nov 28, 2019 | 1:24by கி.தவசீலன் in செய்திகள் சுவிஸ் தூதரக பணியாளர் தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுவிஸ் தூதரக பணியாளர் சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக சுவிஸ் வெளிவிவகார அமைச்சு கூறியிருந்தது. இதுகுறித்து சிறிலங்கா அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தனவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தங்களுக…
-
- 0 replies
- 415 views
-
-
புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் நியமனம் புதிய இடைக்கால அரசாங்கத்தின் இராஜாங்க, பிரதி அமைச்சர்களுக்கான நியமனங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு… ரஞ்சித் சியம்பலாபிடிய – கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுக்கமகே – மின்சக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க – இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன – மின்வலு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண – அரச முகாமைத்தும் கணக்கீட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல – முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ – சுற்றுலா மேம்பாட்ட…
-
- 4 replies
- 1.1k views
-
-
அண்மைய ஆட்சிமாற்றம் நம்பிக்கையீனங்களை கோடிட்டு காட்டுகின்றது -ஜனநாயக போராளிகள் கட்சி தாயகத்திலும் சர்வ தேசமெங்கிலும் வாழ்கின்ற இந்தத் தேசத் துக்காய் தமது வாழ்நாளை அர்ப்பணித்த. போராளிகள், தேசப்பற்றாளர்கள், விடுத லைப் புலிகள் சார்ந்த கட்டமைப்புக்களை இணைத்துக்கொண்டு அவர்களது பாரிய பங்களிப் போடு எமது மக்களுக்கான ஓர் காத்திரமானதும் உண்மையானதுமான அரசி யல் பயணத்தை முன்னெடுக்க இந்தப் புனித நாளில் திடசங்கற்பம் பூணுகின்றோம்.நாம் என்றுமே மாவீரர்களின் தியாகத்துக் கும் மக்களின் உணர்வுகளுக்கும் கட்டுப்பட்டே பயணிப்போம் எனவும் எமது மாவீரர்களின் தியாகங்கள் மீதேறி அரசியற் பகடையாட எவரையும் அனுமதிக்க முடியாதெனவும் இந்த மாவீரர் நாளிலே உறுதி பூணுகின்…
-
- 2 replies
- 712 views
-
-
வதந்திக்கு, முற்றுப்புள்ளி வைத்தது பாதுகாப்பு அமைச்சு நாட்டில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் மற்றும் நடைபாதை கடைகள் ஆகியன பொலிஸாரினால் அகற்றப்படவுள்ளதான செய்தி பொய்யானது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது, இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள், நடைபாதை கடைகள் எனபவற்றை அகற்றுவது தொடர்பாக எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் பொலிஸாரினால் அவ்வாறு எதுவும் அகற்றப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். http://athavannews.com/வதந்திக்கு-முற்…
-
- 2 replies
- 975 views
-
-
மீண்டும் வெள்ளை வேன் கலாச்சாரம் – மகேஷ் சேனநாயக்க பொலிஸ் அதிகாரிகள் சிலரின் பெயர் பட்டியலை வெளிப்படுத்தி அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறாமல் தடுத்திருப்பது அடிப்படை உரிமை மீறும் செயலாகும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மக்களுக்கு வெள்ளை வேனை ஞாபக மூட்டுவதாக உள்ளது என முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார்.அத்துடன் இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது குடும்பம் சகிதம் நாட்டைவிட்டு சென்றுள்ளதை அறிகின்றேன். அதேபோன்று இரகசிய பொலிஸ் பிரிவு அதிகாரிகள் சிலர் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுப்பதற்கு அல்லது அவர்கள் உரிய அனுமதியுடன் செல்லவேண்டும் என்பதற்காக அவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றது என மேலும் தெரிவித்தார். இது எந்த நாட்டிலும் இடம்பெறக்…
-
- 0 replies
- 531 views
-
-
கோத்தபய ராஜபக்ஷ வருகைக்கு எதிர்ப்பு டெல்லியில் வைகோ கைது இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதையடுத்து, கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று 3 நாட்கள் அரசு முறைப்பயணமாக கோத்தபய ராஜபக்சே இன்று இந்தியா வருகை தருகிறார்.தனது இந்திய பயணத்தின் போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கோத்தபய ராஜபக்சே முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதனிடையே கோத்தபய ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில், மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.டெல்…
-
- 0 replies
- 421 views
-
-
புதிய அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு : வரிகள் பல இரத்து – வற் வரி 8 வீதமாக குறைப்பு உடன் அமுலாகும் வகையில் வரிகள் பலவற்றை இரத்துச் செய்வதற்கும் வற் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை குறைப்பதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை இன்று நடைபெற்றதுடன் அதன்போது ஜனாதிபதியினால் இது தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி வீட்டுப் பொருட்களுக்காக அறவிடப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான தேச நிர்மாண வரி, பொருளாதார சேவைகளுக்கான கட்டண வரி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அறவிடப்படும் வரி ஆகியனவும் இரத்து செய்யப்பட்டுள்ளன. பங்குச்சந்தையில் அறவிடப்படும் மூலதன வரி, உழைக்கு…
-
- 1 reply
- 468 views
-